அரஃபா நாள் என்ற சொல்லை வைத்து ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளே அரஃபா நாள்* என்று சிலர் வாதிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல் விளக்கம் இதற்கு மாற்றமாக உள்ளது.
*துல் ஹஜ் மாதம் பிறை ஒன்பதாவது நாளே அரஃபாவுடைய நாள். அவரவர் பகுதியில் பிறை பார்க்கப்பட்டு எப்போது துல்ஹஜ் மாதம் பிறை 9 வருகின்றதோ அந்த நாளே அவருக்கு அரஃபாவுடைய நாள் என்பதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து நடைமுறையாக இருந்தது*.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் பதிமூன்று வருட காலங்கள் வாழ்ந்துள்ளார்கள். *மக்காவில் ஹாஜிகள் எப்போது கூடுகிறார்கள் என்று பார்த்து அன்றைய நாளில் தான் மற்ற பகுதியில் உள்ளவர்களும் நோன்பு நோற்க வேண்டும் என்று இருக்குமேயானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து ஒருவரை மக்காவிற்கு அனுப்பி ஹாஜிகள் எப்போது கூடுகிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு வருமாறு கூறியிருப்பார்கள்*. அவர் வந்த பிறகு அந்த நாளில் நோன்பு நோற்றிருப்பார்கள்.
ஆனால் ஹதீஸ்களில் இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததாக எந்த ஒரு சம்பவமும் இடம் பெறவில்லை. எனவே மதீனாவில் பிறை பார்த்ததின் அடிப்படையில் அவர்களுக்கு பிறை ஒன்பது எப்போது வந்ததோ அந்த நாளில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபா நாள் நோன்பை நோற்றார்கள் என்பது தெளிவாகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு *வஹீ மூலம் ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருப்பான்* என்று சிலர் கூறுவது ஏற்க முடியாததாகும். அல்லாஹ் வஹீ மூலம் அறிவித்துக் கொடுத்தால் அது பற்றி அல்லாஹ்வின் தூதர் சொல்லி இருப்பார்கள்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மதீனாவில் மட்டும் முஸ்லிம்கள் வாழவில்லை. மதீனாவுக்கு வெளியில் ஏராளமான முஸ்லிம்கள் வாழ்ந்தனர். அவர்களுக்கு ஹாஜிகள் அரஃபாவில் கூடும் தினம் தெரிய வழி இல்லை. அந்த ஊர்வாசிகள் தமது ஊர்களில் பிறை பார்த்த அடிப்படையில் தான் அரஃபா தினத்தை முடிவு செய்திருப்பார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த போது ஹாஜிகள் அரஃபாவில் கூடியுள்ளார்கள். அரஃபாவில் ஹாஜிகள் கூடிய செய்தியை அறிந்து, அதன் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கவில்லை. *தங்களுடைய பகுதியில் பார்க்கப்பட்ட பிறையின் அடிப்படையில் தான் அரஃபா நாள் நோன்பைத் தீர்மானித்தார்கள்*.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் மக்காவில் ஹாஜிகள் கூடும் நாளை அறிந்து அந்த நாளிலேயே நோன்பு வைக்க முயற்சி செய்திருக்கலாம். ஏனென்றால் தலைப்பிறை பார்த்த நாளிலிருந்து எட்டு நாட்கள் கழித்துத் தான் அரஃபா நாள் வருகின்றது. இந்த எட்டு நாட்கள் இடைவெளியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையேனும் அனுப்பி அரஃபா நாளை விசாரித்து வரச் சொன்னதாக எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாது.
மக்காவிலும், மதீனாவிலும் ஒரே நாளில் பிறை தென்பட்டிருக்கும் என்று சிலர் கூற முற்படலாம். ஒரே நாளில் தென்படுவதற்கு வாய்ப்பிருந்தது போல் வெவ்வேறு நாட்களில் தெரிவதற்கும் வாய்ப்பு இருந்தது என்பது தான் இதற்கான நமது பதில்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இப்போது இருப்பது போன்று தொலைத்தொடர்பு வசதிகள் இருந்திருந்தால் அவர்கள் அதைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் சிலர் இட்டுக்கட்டிக் கூறுகின்றார்கள்.
நாம் கேட்பது இருக்கின்ற வசதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்களா என்பது தான்.
தொலைபேசி இருந்தால் கேட்டுத் தெரிந்திருப்பார்களாம். முதல் பிறைக்கும், அரஃபவிற்கும் எட்டு நாள் வித்தியாசம் உள்ளது. இந்த எட்டு நாள் அவகாசத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பி விசாரித்தார்களா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்து மக்கள் தங்கள் பகுதியில் பிறை பார்த்த அடிப்படையில் தான் அரஃபா நாளை முடிவு செய்திருப்பார்களே தவிர மக்காவில் கூடுவதை அறிந்து முடிவு செய்திருக்கவே முடியாது.
ஹாஜிகள் அரபாவில் கூடும் நாள் தால் உலகம் முழுமைக்கும் அரஃபா நாள் என்று ஒருவர் கூறினால் இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் தவறிழைத்து விட்டார்கள் என்று பழி சுமத்துகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
*அல்லாஹ்வின் தூதர் எப்படி அரஃபா நாளை முடிவு செய்தார்களோ அப்படி முடிவு செய்வதைத் தவறு என்று சொல்லும் எந்தக் கருத்தும் நச்சுக் கருத்தாகும்* என்பதை விளங்கிக் கொண்டால் இது போன்ற கேள்விகளுக்கு இடமில்லை.
பலவீனமான சர்வதேச பிறைக் கோட்பாடு:
அடுத்து சவுதியில் பிறை தென்படுவதற்கு ஒரு நாளைக்கு முன் வேறு நாடு ஒன்றில் பிறை தென்பட்டு விட்டால் சர்வதேச பிறையை எடுப்பவர்களுக்கு
அரபா தினத்தில் பெருநாள் தினமாக அமைந்துவிடும்
அப்போது இவர்கள் பெருநாளை கொண்டாடுவார்களா அல்லது அரபா நோன்பை நோற்பார்களா. இந்த முரண்பாட்டுக்கு அவர்களிடம் பதில் இல்லை. அத்துடன் சவுதியில் பிறை பார்ப்பதில் குளறுபடி ஏற்பட்டாலும் இதே குழப்ப நிலை ஏற்படுகிறது. இதற்கும் அவர்களிடத்தில் பதில் இல்லை
ஹஜ் கடமையாக முன்னர் நபிகளார் 10 வருடங்களுக்கு மேலாக பிறை ஒன்பதிலே நோன்பு நோற்றார்கள் அப்படியானால் அரஃபா நோன்பு என்பது அரபாவில் கூடும் நாளை வைத்து முடிவு செய்யவில்லை பிறை ஒன்பதை வைத்தே முடிவு செய்துள்ளனர் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
அத்துடன் நபிகளாரின் காலத்திலோ சஹாபாக்களின் காலத்திலோ எல்லா தேசமும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடியதாக ஆதாரங்கள் இல்லை
அதற்கான முயற்சிகள் எடுக்கவும் இல்லை
அது அவர்களுக்கு சாத்தியப்படவும் இல்லை.
எனவே சாபாக்களின் காலத்தில் ஒரு நிலையும்
அதற்கு எதிராக இப்போது வேறு நிலையும் மாறும் என்பது இஸ்லாமாக முடியாது.
எனவே அரபாவில் கூடும் நாளை குறிவைத்து நோன்பு நோக்கப்படவில்லை என்று இருக்க நாம் அதற்காக மெனக்கெடுவது மார்க்கமாகி விடாது
எனவே நபிகளார் கண்ட பிறையை வேறு தேசங்களுக்கு செய்தியை அனுப்ப மெனக்கிடவில்லை வேறு தேசத்தில் பிறையை கண்டார்களா என தகவலை அறிய ஆள் அனுப்பவும் இல்லை. அதேபோன்று நபிகளார் பிறை ஒன்பதில் நோன்பு நோற்பதை வளமையாக்கிக் கொண்டிருந்தார்களோ அதேபோன்று செயல்படுவது தான் குர்ஆன் சுன்னாவுக்கு நெருக்கமானது
அடுத்தது பிறைசாட்சியத்தை ஏற்று மக்களுக்கு அறிவிப்பு செய்ய தனி நபர்களாகவோ குழுக்களாகவோ செயல்பட வழி காட்டப்படவில்லை
அது ஆட்சியாளரின் கீழ் இருக்க வேண்டும்
இஸ்லாமிய ஆட்சி இல்லாத தேசங்களில் ஆட்சியாளரால் அதிகாரம் வழங்கப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்
ஆனால் இதற்கு மாற்றமாக சர்வதேச பிறையாளர்கள் செயல்படுவது குர்ஆன் சுன்னாவுக்கு மாற்றமாகும்.