குஜராத் 2002

குஜராத் 2002
முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு இனச் சுத்திகரிப்பு
- ரியாஸ் அஹ்மத்

அன்புச்சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்

எல்லா புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே. அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தினர்கள் மீதும், உத்தம சகாபாக்கள் மற்றும் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக.

இஸ்லாத்திற்கெதிரான போரில் மேலை நாடுகளும், கீழை நாடுகளும் இன்று வரிந்துகட்டி கொண்டு, முஸ்லிம்களை கருவறுப்பதில் முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம், இனிவரும் காலத்தில் இந்த உலகை கட்டிக் காப்பதற்கு தகுதியும், கொள்கை பலமும் கொண்ட ஒரு மார்க்கம் இஸ்லாம் தான் என்பதை முஸ்லிம்கள் நம்புகிறார்களோ இல்லையோ இவர்கள் அழுத்தமாக நம்புகிறார்கள். மேலும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு அச்சாணியாக இருக்கப்போவது முஸ்லிம் இளைஞர்கள் தான் என்பதையும் நன்றாக அறிவார்கள்.

ஆகவே, முஸ்லிம் இளைஞர்களையும், குழந்தைகளையும் குறிவைத்து கொல்லும் சதிவேலைகள் இன்று உலகம் முழுவதும் அறங்கேற்றப்பட்டு வருகின்றது.

இந்த மேலை நாட்டவர்களுக்கும், கீழை நாட்டவர்களுக்கும் சற்றும் சளைக்காதவர்கள் தான்  பாசிஸ்ட்டுகள். இவர்கள் இந்தியாவை முஸ்லிம்களின் இரத்தத்தால் தோய்த்தெடுக்க விரும்புகிறவர்கள். அதற்கு ஒத்திகை பார்க்கத்தான் குஜராத்தில் களமிறங்கியிருக்கிறார்கள்.

பாசிஸ வெறியர்களால் நடத்தப்படும் அட்டூழியங்களில் பல இந்த உலகிற்கே தெரியாமல் மறைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. பத்திரிக்கைகளில் வரும் செய்திகளும் சில காலங்களில் மறக்கடிக்கப்பட்டு விடுகின்றன. எதிர்கால தலைமுறையினரும் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அடக்குமுறைகளை அறிந்து கொள்ளமுடியாமல் ஆகின்றனர்.

பாசிஸ்ட்டுகளின் இஸ்லாத்திற்கெதிரான இந்த போர் எதிர்கால தலைமுறையினரையும் சென்று சேரவேண்டும், சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாமரர்களுக்கும் சென்று சேரவேண்டும் என்ற எண்ணத்தினால் உருவானதே இந்நூல்.

என் சிறிய இந்த முயற்சியின் மூலம், வரும் அபாயத்ததை உணராது உறங்கிகொண்டிருக்கும் முஸ்லிம் சமுதாயத்தை தட்டி எழுப்புவதே என் நோக்கம். நோக்கம் நிறைவேறுதற்கு வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக

இந்த நூலை எழுதி முடிப்பதற்கு உதவி செய்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

இப்படிக்கு

அன்பு சகோதரன் ரியாஸ் அஹ்மத்



சங்பரிவார் ஒரு வரலாற்று பார்வை

சங்பரிவார், இதன் பொருள் கூட்டு குடும்பம். இந்த குடும்பத்தில் பல அங்கத்தினர்கள் அதாவது பல அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகளில் தாய் அமைப்பு தான் ஆர்எஸ்எஸ் என்று அழைக்க கூடிய ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்.

இந்த சங்பரிவாரத்தினர் இந்தியாவில் எப்பொழுது தோன்றினார்கள்? அவர்களின் நோக்கம் தான் என்ன? அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இது வரை அவர்கள் என்ன சாதித்தார்கள் என்பது இன்னும் பலருக்கு தெரியாதது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

ஏனென்றால், அவர்கள் தான் யார்? தன்னுடைய கொள்கை என்ன? தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை எல்லாம் வெளியில் சொல்லி திரிபவர்கள் அல்லர். மாறாக அனைத்தையும் ஒரு மறைமுக செயல் திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்துபவர்கள்.

ஆர்எஸ்எஸ்ன் தோற்றம்

ஆர்எஸ்எஸ் என்ற இந்த அமைப்பு 1925ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விஜயதசமி நாளன்று மஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூர் நகரில் வைத்து தொடங்கபடுகிறது.

ஒரு அமைப்பு உருவாக வேண்டும் என்றால், அதனை சிறந்த முறையில் நடத்தி செல்ல வேண்டும் என்றால், அந்த அமைப்பு உருவாவதற்கு பல ஆயிரம் ரூபாய் பணம் தேவைபடும், ஆயிரக்கணக்கில் உறுப்பினர்கள் தேவைபடுவார்கள், நீண்ட நாள் நிலைத்திருக்க அந்த அமைப்பிற்கு சிறந்ததொரு கொள்கை பலம் வேண்டும்.

ஆனால் ஆர்எஸ்எஸ் என்ற இந்த அமைப்பு எந்த வித படாடோபமோ, பகட்டோ இல்லாமல் அமைதியாக ஆரம்பிக்கப்படுகிறது. அதுவும் வெறும் ஐந்து பேரை கொண்டு. அவர்கள்

1. டாக்டர். சவர்க்கார்

2. டாக்டர். தோல்கார்

3. டாக்டர். ஹெட்கேவர்

4. டாக்டர். மூங்சே

5. டாக்டர். பராங்சிபே

இவர்கள் அனைவரும் பிராண வகுப்பை சேர்ந்த சித்பவன் மராட்டி பார்ப்பணர்கள்.

அமைப்பின் நோக்கம்

இந்த ஐந்து பேரும் இதற்காக இந்த அமைப்பை ஏற்படுத்தினார்கள்? இந்திய நாட்டிற்கு சுதந்திரம் பெற்று கொடுக்கவா? இல்லை இந்தியாவை வல்லரசாக்கவா?

இல்லை இந்தியாவில் ராமர் ஆட்சியமைப்பதற்காக இவர்கள் அன்று போட்ட வித்து, இன்று செடியாகி, மரமாகி, நன்கு வேர்பிடித்து அசைக்கவே முடியாது இன்ற அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. இவர்கள் வேதகால ஆட்சியை, வர்ணாசிரம ஆட்சியை கொண்டு வர அல்லும் பகலும் அயராது உழைத்து கொண்டிருக்கிறார்கள் இந்தவித ஆரவாரமும் இல்லாமல்.


அவர்கள் உண்டாக்க துடிக்கும் அந்த வேதகால ஆட்சிக்கு தடையாக உள்ள அனைத்தையும் அவர்கள் துடைத்து எறிய நாடுகிறார்கள்.

அவர்கள் முன் பெரும் தடையாக இருப்பது இந்த முஸ்லிம்கள். இவர்கள் - இந்த முஸ்லிம்கள் - இந்துவாக இருந்தவர்கள். இவர்களை மொகலாய மன்னர்கள் கத்தியை காட்டி மிரட்டி முஸ்லிம்களாக மாற்றிவிட்டார்கள்.  எனவே இவர்களை – இந்த முஸ்லிம்களை – தாய் மதமான இந்து மதத்திற்கு மாற்ற வேண்டும். இல்லையேல் இவர்களை கொன்றொழிக்க வேண்டும்.

முஸ்லிம்கள் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள் என்ற அடிச்சுவடே இல்லாமல் ஆக்கிடவேண்டும். மஸ்ஜித்கள், தர்காக்கள், மதராஸாக்கள் மற்றும் நினைவிடங்கள் அதுபோல முஸ்லிம்களால் கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களும் அவமான சின்னங்கள். இது அனைத்தையும் அழித்து இந்தியாவை சுத்தபடுத்தி, ஒரு தூய்மையான – சைவ – ஆட்சியை இந்திய மண்ணில் நிலைநாட்ட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.

கோல்வால்கர் என்ற ஆர்எஸ்எஸின் இரண்டாவது தலைவர் 1938ல் தன்னுடைய ‘We or our Nationhood defind’ என்ற நூலில் ஆர்எஸ்எஸின் கொள்கையை இப்படி பிரகடனப்படுத்துகிறார்:

“The non-Hindu people in Hindustan must either adopt the Hindu culture and religion, must learn to respect and revere Hindu religion or may stay in the country wholly subordinated to the Hindu nation claiming nothing not even citizen’s rights.”

“ஹிந்துஸ்தானில் வாழும் ஹிந்து அல்லாத மக்கள் ஹிந்துக் கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.  ஹிந்து மதத்தை மதிப்பதற்கும், அதனைப் போற்றுவதற்கும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.  ஹிந்து இனம் மற்றும் கலாச்சாரத்தை போற்றுவதைத் தவிர வேறு எந்த எண்ணத்தையும் அவர்கள் வளர்த்துக் கொள்ளக் கூடாது. வெளிநாட்டவர் என்ற மனப்பான்மையை அவர்கள் உதறி விட வேண்டும். அல்லது ஹிந்து சமூகத்திற்கு முற்றிலும் அடிபணிந்த நிலையில், எதனையும் கோராமல், எந்த சலுகைக்கும் உரியவர்களாக இல்லாமல், எந்த முன்னுரிமையும் பெறாமல், குடிமக்களுக்குரிய உரிமைகளைக்கூடக் கோராமல் வேண்டுமென்றால் அவர்கள் இங்கு தங்கியிருக்கலாம்.”

இந்த நோக்கத்தை மார்ச் 2002ல் பெங்களூரில் நடந்த ஆர்எஸ்எஸ் தேசிய குழுக் கூட்டத்தில், “பெரும்பான்மையினரின் நல்லெண்ணத்தைப் பெறாமல் முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ முடியாது” என்ற தீர்மானத்தின் மூலம் புதுபித்து கொண்டார்கள்.

இந்த நோக்கத்தை அடைவதற்காக 200 ஆண்டுகள் திட்டம் தீட்டி செயல்படுகிறார்கள்.  இதே நோக்கத்திற்காக ஸ்பெயினில் கிருஸ்தவர்கள் 120 ஆண்டுகள் திட்டம் தீட்டி செயல்பட்டார்கள்.  பாலஸ்தீனத்தில் யூதர்களும் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்களை திட்டமிட்டு படுகொலை செய்துவருகிறார்கள்.

இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் யூதர்களும், கிருஸ்தவர்களும் மற்றும் இந்து பாசிஸ்ட்டுகளும் முஸ்லிம்களை அழிக்க ஒரு நீண்ட அளவிளான திட்டத்தை தீட்டி, அதனை அடைய மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். (யூதர்களும், கிருஸ்தவர்களும் தன் திட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பது நாம் மறுக்கமுடியாத உண்மையாகும்). ஆனால் முஸ்லிம்களிடம் எந்த வித திட்டமுமில்லை தம்மை பாதுகாத்து கொள்ள என்பது மிகவும் வேதனையான ஒன்று.  அப்படி இருந்தாலும், ஒரு குறுகிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, வந்த வேகத்தில் காணமல் போனதை தான் நாம் இதுவரை கண்டிருக்கிறோம்.

ஆர்எஸ்எஸின் செயல்பாடுகள்

இவர்கள் வெறும் 5 பேர்களை கொண்டு ஆரம்பித்த இந்த இயக்கத்தில், தற்போது கிட்டதட்ட 65 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் முன்னாள்ஃஇன்னாள் ராணுவம் மற்றும் போலீஸ் துறை அதிகாரிகளால் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட அதாவது போர் பயிற்சி பெற்ற ஆர்எஸ்எஸ் ஊழியர்கள்.

இவர்களில் சுமார் 5000 பேர்களுக்கு மேல் தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஆர்எஸ்எஸ்க்காக அர்ப்பணித்து கொண்ட முழு நேர ஊழியர்களும் அடங்குவர். முழு நேர ஊழியர்களில் நம் பிரதம மந்திரி அதாவது தவறான கட்சியில் சரியான மனிதர் என போற்றப்படும் வாஜ்பேய், உள்துறை அமைச்சர் அத்வானி, நவீன ஹிட்லர் என அழைக்கப்படும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இல.கணேசன் போன்றோர் சிலர்.

இவர்கள் பல அமைப்புகளை ஏற்படுத்தி கொண்டு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இந்து முண்ணனி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் வழியாகவும் செயல்படுகிறார்கள்.

இளம் நெஞ்சங்களை இந்துத்துவ பாணியில் சிந்திக்க வைப்பதற்காக, இந்துத்துவ வாதிகளாக மாற்றுவதற்காக ஒரு பெரும் செயல் திட்டத்துடன் செயல்படுகிறார்கள். இதை இவர்கள் கத்தியின்றி, ரத்தமின்றி தொடுக்கப்படும் போர் என்றே கருதுகிறார்கள். இன்றைய இளைஞர்கள் நாளை வரலாறு படைப்பவர்கள் என்பதை நாமும் மறந்துவிடக்கூடாது.

இளம் மனங்களை தங்களின் பாணியில் சிந்திக்க வைக்க 50 வருடம் தொடாந்து உழைத்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக ஹரியானாவில் உள்ள குருஷேத்ரா எனும் இடத்தில் ஒரு பள்ளியை 1946ல் நிறுவினார் ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான கோல்வால்கர். மீண்டும் 1978ல் வித்யபாரதி எனும் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது.  இது தான் அனைத்து காவி கல்வி நிறுவனங்களுக்கும் தாய்.

இப்போது இதில் 14000 பள்ளிகள், 60 கல்லுஸரிகள் செயல்படுகின்றன.  மேலும் 18 லட்சம் மாணவர்கள் இதில் கல்வி கற்கிறார்கள். கல்வி கற்கிறார்கள் என்று சொல்வதை காட்டிலும், இந்துத்துவ வாதிகளாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதே பொருத்தமாக இருக்கும். இவர்களை மாற்றுவதற்கு சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்கள் உழைத்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த பாஸிஸ்ட்டுகள் ஒரு இடத்தில் தன்னுடைய இயக்கத்தை வளர்ப்பதற்காக பல உத்திகளை கையாள்கிறார்கள். அதில் ஒரு உத்தி தான் வகுப்பு கலவரங்கள்.

வகுப்பு கலவரங்களை ஏற்படுத்தி முதலில் ஒன்றாய் வாழ்ந்து கொண்டிருந்த மக்களை இந்துக்கள் என்றும் இந்துக்கள் அல்லாதவர்கள் என்று பிளந்து போடுகிறார்கள். ஒரு முறை பிளவுபட்ட இந்த பிளவு கடைசி வரை ஒட்டவிடாமல் கவனமாக கண்காணித்தும் வருகிறார்கள்.

இதற்கு ஒரு உதாரணம் தான் குமரி மாவட்டத்தில் மண்டைகாட்டில் எற்பட்ட வகுப்புக்கலவரம். இந்துக்களுக்கும் கிருஸ்தவர்களுக்கும் இடையிலான பிரச்சனையை முஸ்லிகளுக்கெதிராக திருப்பி விட்டு, அங்கே முஸ்லிம்களின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டது. இந்த மண்டைக்காட்டு கலவரம் மூலம் தமிழகத்தில் காலடி வைத்தார்கள், இன்று பல மடங்கு பெருகி, அமைதி பூங்காவான தமிழகத்தை கலவர பூங்காவாக மாற்ற பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்ததாக இவர்கள் - இந்த பாஸிஸ்ட்டுகள் - முஸ்லிம்களை பாகிஸ்தான் ஆதரவாளர்களாக மக்களின் மனதில் ஒரு பிரம்மையை ஏற்படுத்துகிறார்கள்

ஆரம்பத்தில் இவர்கள் பாகிஸ்தானை, இந்தியாவின் எதிரி நாடு என்று எண்ணத்தை இந்திய மக்களின் மனதில் ஆழப்பதிய வைத்தார்கள்.  பிறகு பாகிஸ்தான் உளவாளிகள் இந்தியாவில் ஊடுறுவி குழப்பம் செய்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்தார்கள் அனைத்து ஊடகங்கள் வழியாகவும்.  இதனை படிக்கும், கேட்டும் மக்கள் பாகிஸ்தானையும், அந்நாட்டு மக்களையும் இவறுக்க இதாடங்கினர்.  எந்த அளவுக்இகன்றால், ஒரு சாதாரண இந்திய குடிமகனும், கார்கில் போர் நடந்த போது, “என்னை எல்லைக்கு அனுப்புங்கள், நான் சென்று பாகிஸ்தானி படையை ஓடஓட விரட்டியடிக்கிறேன்” எனும் அளவுக்கு வெறுப்பை வளர்த்துவிட்டனர்.

அத்துடன் இவர்கள் நிற்கவில்லை.  இன்னும் ஒருபடி மேலே போய், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும், பாகிஸ்தானுக்கு உளவாளியாக இருப்பானோ என்று எண்ணும் அளவுக்கு இந்திய மக்களின் மத்தியில் தவறான தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இதனால் நமக்கு என்ன வந்தது? யார் நம்மை பற்றி என்ன சொன்னால் என்ன? நாம் தான் சரியாக இருக்கிறோமே என்று நாம் நினைக்கலாம்.  ஆனால், இந்த பாஸிஸ்ட்கள் இந்த பொய் பிரச்சாரத்தால் என்ன சாதிக்க நினைக்கிறார்கள் என்பதை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

முதலில் பாகிஸ்தான் மீதும், அதன் உளவு நிறுவனத்தின் மீதும் மக்கள் மத்தியில் வெறுப்பை வளர்த்த இவர்கள், இந்திய முஸ்லிம்களை அத்துடன் தொடர்புப்படுத்தி பேசுவதால், அந்த வெறுப்பை இந்திய முஸ்லிம்கள் மீதும் திருப்பிவிடுகிறார்கள். மேலும் இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாத்துடனும், தீவரவாதத்துடனும் தொடர்புடையவர்கள் என்பதோடு மட்டுமல்லால், ஏப்ரல் 2002ல் நடந்த பிஜேபியின் கோவா மாநாட்டில், பிரதமர் வாஜ்பேய், “முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்கள் அமைதியாக வாழ விரும்புவதில்லை” என்று ஒரு பெரும் பழியை சுமத்திவிட்டார்.

இப்படியாக இந்திய மக்களின் வெறுப்பை தம்மீது சுமந்துகொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கிரமங்களை அரங்கேற்றினால், “இந்த முஸ்லிம்களுக்கு சரியான பாடம் கற்பிக்கப்பட்டது. குழப்பத்திற்கு காரணமான இந்த முஸ்லிம்கள் வாழ்வதை விட அழிவதே மேல்” என்றெல்லாம் இந்திய மக்கள் பேச தலைபட்டுவிடுவார்கள். அக்கிரமக்காரர்களின் செயல்கள் நியாயமானதாக கருதப்பட்டுவிடும்.

இந்த நிலை வருவதற்காக தான் இவர்கள் முஸ்லிம்கள் மீது அநாவசிய பழியை சுமத்தி தனிமைபடுத்த துடிக்கிறார்கள். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து காத்தும் கிடக்கிறார்கள்.

ஒவ்வொரு கலவரத்திற்கு முன்னும் அவர்கள் ஏதோ காரணம் கிடைக்க வேண்டும் என கருதி காத்துகிடக்கிறார்கள் திட்டத்தோடு. அந்த காரணம் கிடைக்கும் போது தங்கள் திட்டத்தை அரங்கேற்றி விடுகின்றனர்.

ஆரம்பத்தில் கூறிய மண்டைகாட்டு கலவரத்திற்கு இந்து-கிருஸ்தவர்கள் பிரச்சனையை காரணம் காட்டி முஸ்லிம்களின் பொருள்கள் வேட்டையாடப்பட்டது.

பாம்பேயில், பாபரி மஸ்ஜித் இழப்புக்கு பின் ஏற்பட்ட பதட்டம் தனிவதற்குள், ‘மகா ஆரத்தி’ என்ற ஒரு விழாவை நடத்தி, அந்த விழாவின் மூலம் கலவரம் தொடங்கப்பட்டது.

கோவையில், செல்வராஜ் என்ற போலீஸ்காரர் கொல்லப்பட்டார்.  அதை செய்தவர்கள் முஸ்லிம்கள் என அறிந்து, கொலை செய்தவர்களை ஜமாத்தார்கள் போலீஸிடம் ஒப்படைத்தார்கள். சம்பவம் அத்துடன் முற்றுபெற்று விட்டது என முஸ்லிம்கள் எண்ணுவதற்குள் ஒரு பெரும் கலவரம் அங்கு வெடித்தது.  19 முஸ்லிம்கள் அங்கு ஷஹீத் ஆனார்கள். கோடிக்கணக்கில் சொத்துக்களை இழந்து, நடுத்தெருவில் நின்றார்கள் பிச்சைக்காரர்களாக.

(அதேபோல், குஜராத், கோத்ரா ரயில் நிலையம் அருகே விஹிப இயக்கத்தை சேர்ந்தவர்கள் எறித்து கொள்ளப்பட்டார்கள். இதை செய்தது ஒரு சில முஸ்லிம்கள்.  ஆனால் குஜராத்தில் முஸ்லிம்கள் பூண்டோடு அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.)

தாங்கள் தீட்டி வைத்திருக்கும் திட்டத்தின் அடிப்படையில், தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சரியான சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார்கள். அந்த சந்தர்ப்பம் கிடைத்தவுடன் திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். நடந்த முடிந்த சம்பவத்திற்கான எதிர்வினை (சுநயஉவழைn) என்று மக்களை நம்பவைப்பதற்காக அவர்கள் காத்து கிடக்கிறார்கள்

கோத்ரா ரயில் எரிப்பு திட்டமிட்ட ஒன்றா?

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் அதை தொடர்ந்து நடந்த இனச்சுத்திகரிப்பு ஆகியவைகளை நாம் சென்ற அத்தியாயத்தில் தெளிவுபடுத்தியவைகளை அடிப்படையாக கொண்டு வாசகர்கள் கவனிக்க வேண்டும்.

ஒரு கலவரத்தை நடத்துவதற்கு இந்து மத வெறியர்கள் முன்பே தீட்டிய திட்டத்தை அமுல்படுத்த சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  அந்த சந்தர்ப்பம் கிடைத்தவுடன் கலவரத்தை தொடங்கி முஸ்லிம்களை குறிவைத்து அழிக்கத்தொடங்குகிறார்கள் என்பதை சென்ற அத்தியாத்தில் தெளிவாக கண்டோம்.

இந்த பிண்ணனியை விளங்கினால் தான் ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட செயலா? அல்லது உணர்ச்சி வசப்படுத்தப்பட்ட சில முஸ்லிம்களின் செயலா? என்பதை நாம் தெரிந்து கொள்ளமுடியும்.

1992, டிசம்பர் 6 அன்று இந்து  பாசிஸ்ட்டுகளால் 450 வருட பாபரி பள்ளி வெறும் 5 மணி நேரத்தில் இருந்த தடம் தெரியாது இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இடித்தத்தோடு மட்டுமல்லாமல் அந்த பள்ளியில் யாரும் தொழாத காரணத்தால் தான் இடிக்கப்பட்டது. இது முஸ்லிம்களின் தவறே அல்லாமல் இந்த  பாசிஸ்ட்டுகளின் தவறல்ல என்ற பிரச்சாரமும் மறைமுகமாக தொடங்கிவிடப்பட்டது.

இந்த பிரச்சாரம் எந்த அளவுக்கென்றால், விவரம் அறியா முஸ்லிம்கள் இன்று இந்த பிரச்சாரத்தை நம்பி தாங்களும் அதற்கு நியாயம் கற்பிக்க தொடங்கிவிட்டனர்.

உண்மை அது அல்ல, 1950 களில், ஒரு நாள் இரவு இஷா தொழுகையை முடித்து விட்டு முஸ்லிம்கள் வீடு திரும்பிய பின், ராம பக்தர்களில் (¡) சிலர், பள்ளியின் பூட்டை உடைத்து, திருட்டு தனமாக பள்ளியின் உள்ளே ராமர் சிலை வைத்துவிட்டு வந்தனர். இதை அறிந்த முஸ்லிம்கள், நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட்ட முஸ்லிம்கள் அரசிடம் முறையிட்டனர். உச்ச நீதிமன்றம், ‘பிரச்சினை முடியும் வரை பள்ளியை மூடி வைக்க’ உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு கட்டுப்பட்டு தான் முஸ்லிம்கள் இன்று வரை பாபரி பள்ளி விவகாரத்தில் அமைதி காக்கின்றனரே அல்லாமல் வேறெந்த காரணமும் இல்லை. இதை நடுநிலையான மக்கள் அனைவரும் அறிவர்.  ஏன், நடுநிலை வகிக்கும் இந்து சமுதாய மக்களும் இதை அறிவர். செய்தி தாள் வழியாக இதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தவும் இவர்கள் தவறுவதில்லை. இதை முஸ்லிம்கள் நன்கு உணர வேண்டும்.

தரைமட்டமான அந்த பாபரி பள்ளியின் இடத்தில் ராமர் கோயிலை மார்ச் 12, 2002 அன்று கட்டியே தீருவோம். இதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தவிடலாது என்று விஹிப சூளுரைத்தது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.

மேலும் நாட்டிலுள்ள அனைத்து கரசேவகர்களுக்கும் அது அழைப்பும் விடுத்தது ராமர் கோயில் கட்டுவதற்கு. இந்த அழைப்பை கேட்டு நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து கரசேவகர்கள் புறப்பட்டு அயோத்தி சென்றனர்.  தமிழ்நாட்டிலிருந்து, கோவையிலிருந்தும், விருதுநகர் மாவட்டத்திலிருந்தும் இன்னும் பல்வேறு இடங்களிலிருந்தும் குடும்ப சகிதம் கரசேவகர்கள் புறப்பட்டு அயோத்தி சென்றனர்.

இப்படி அயோத்தி சென்று, பாபரி பள்ளி என்று அழைக்கப்படும் அல்லாஹ்வின் ஆலயத்தை இடித்து, தரைமட்டமாகி கிடக்கும் முஸ்லிம்களுக்கு சொந்தமான அந்த இடத்தில், அத்துமீறி ராமர் கோயில் கட்டுவதற்கு புறப்பட்டு சென்ற கரசேவக கூட்டத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் எரிந்து போன அந்த கரசேவகர்களும் அடங்குவர்.

இவர்கள் அயோத்திக்கு ராமர் கோயில் கட்டுவதற்காக குடும்ப சகிதம் ஒரு ரயிலில் ஏறி புறப்படுகிறார்கள். எப்படியும் பகவான் ராமனுக்கு ஒரு கோயில் கட்டியே தீருவோம். அதில் எத்துணை கஷ்டங்கள், இன்னல்கள் வந்தாலும் அதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்துபவர்கள் அல்லர் என்ற உறுதியான நெங்சோடு புறப்படுகிறது அவர்களுடைய ரெயில். போகும் வழியில் பகவான் ராமனை புகழ்ந்து பஜனை, பாட்டு என்று ஒரே அமர்க்களமாக இருந்தது அந்த ரெயில் பெட்டி.

போகும் வழியெல்லாம் பஜனை, பாட்டு என்று ஒரே பக்தி மயம். முஸ்லிம்களின் பகுதிகளை எப்பொழுதெல்லாம் அந்த ரெயில் தாண்டி செல்கிறதோ, அப்பொழுதெல்லாம் நெ;த பக்தர்களின் ராமபிரார்த்தனைகளின் ஒலி அதிகரிக்கிறது.

வழிநெடுக ஜெய்ராம், ஜெய்ஹிந்த் என்று முழங்கிகொண்டே வந்தனர்.  அந்த பகுதி முஸ்லிம்களை பார்த்து, ‘முஸ்லிம்களே, இது இந்து நாடு. இங்கு வாழ வேண்டுமானால் ராமரை கடவுளாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்ற கோஷங்களும் வானை பிளக்கிறது.

இப்படியாக இந்த ராம பக்தர்களுடன் ரெயில் நகர்கிறது.  பக்தர்களின் பஜனையும் தொடர்கிறது.

நாம் மட்டும் பஜனை செய்தால் போதுமா? ராமர் கோபித்து கொல்வாரே என்ற எண்ணம் வந்தது இந்த ராம பக்தர்களுக்கு.  உடனே பக்கத்து பெட்டிக்கு சென்றனர். அங்கே உள்ள மக்களைப்பார்த்து, ‘நீங்களும் பஜனை பாடுங்கள்’ என்று குறைத்தது அந்த கும்பல்.  இந்த பக்தர்களின் வெறிகொண்ட முகத்தை பார்க்க சகிக்காத அந்த மக்கள் வேண்டா வெறுப்பாக பாட தொடங்கினர். சுந்தோஷம் தாங்கவில்லை பக்தர்களுக்கு.  இன்னும் சிறிது தூரம் பெட்டிக்குள் சென்றனர். சில முஸ்லிம்கள் அங்கு உட்கார்ந்திருந்தார்கள். பக்தர்களுக்கு குஷியோ குஷி. இந்த முஸ்லிம்கள் விளையாட்டு பொம்மைகள் போல. நாம் எது வேண்டுமானாலும் செய்யலாம். கேட்பதற்கு யாரும் வரபோவதில்லை.  யாருக்கும் தைரியமும் இல்லை என்பது இவர்களுக்கு நன்றாக தெரியும்.

அவர்கள் பக்கத்தில் சென்று அமர்ந்தார்கள். பாவம் அந்த முஸ்லிம் பெண்கள். பயந்து நடுநடுங்கி போயிருந்தனர்.  அவர்களிடம், ‘ராம பஜனை பாடுங்களேன்’ என்று அன்போடு கேட்டுக்கொண்டனர். எப்படி பாடுவார்கள் இந்த முஸ்லிம்கள்? அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை வணங்குவதற்கு தகுதியானவன் என்பதை தங்கள் ஆழ்மனதில் பதித்து வைத்தவர்கள் ஆயிற்றே. மௌனமாக இருந்தார்கள்.

வெறி தலைக்கேறியது பக்தர்களுக்கு, ‘பாட போறீங்களா? இல்லையா?’ என்று வெறிக்கூச்சல் இட்டனர் அந்த பக்தர்கள். பயந்தார்கள் அந்த முஸ்லிம்கள். ஆனால் தங்கள் ஈமானை விட்டுகொடுக்கவில்லை. மீண்டும் தலைதாழ்த்தி உட்கார்ந்திருந்தார்கள்.

உடனே அந்த வெறியர்கள், ‘நீங்கள் இப்படி சொன்னா பாடமாட்ழுங்க, சொல்லவேண்டிய முறைப்படி சொன்னா தான் பாடுவீங்க’ என்று அந்த முஸ்லிம் பெண்களின் முக்காடை பிடித்து இழுத்து, அவர்களிடம் மிகவும் கேவலமான முறையில் நடந்து கொள்ள தொடங்கியது அந்த கும்பல். பாவம் அந்த முஸ்லிம்கள் செய்வதறியாது பரிதவித்து நின்றனர்.

அதில் ஒரு முஸ்லிம். அவரின் பெயர்  பத்தே முஹம்மத்.  இவர் இந்த சபர்பதி ரயிலில் தன்னுடைய மகள் மற்றும் மருமகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.  அவர் கூறுகிறார், ‘ரயில் முழுவதும் அவர்கள் தான் இருந்தார்கள்.  தொடர்ச்சியாக கூச்சல் போட்டுக் கொண்டும், நடனமாடிக் கொண்டும் அவர்கள் வந்தார்கள்.  ரயிலில் பயணம் செய்த முஸ்லிம் பயணிகள் அச்சத்துடன் தான் வந்தனர்’ என்கிறார் அந்த பரிதாபத்திற்குரியவர்.

இந்த போக்கிரிகள் செய்து கொண்டிருந்த அடாவடித்தனங்களை சுற்றியிருந்த மக்களும் தடுக்க முன் வரவில்லை.  தடுத்தால் அதே நிலைதான் நமக்கும் என்று நினைத்து கண்டும் காணாமல் விட்டுவிட்டார்கள்.

அத்தோடு நிற்கவில்லை அந்த பக்தர்கள். முஸ்லிம்களை மிகவும் கேவலப்படுத்தி காதுகளால் கேட்க முடியாத அளவுக்கு மிகவும் கொச்சையான வார்த்தைகளால் திட்டினார்கள். இதை எல்லாம் கேட்பதை விட இங்கிருந்து ஒடினால் போதும் என்று அந்த முஸலிம்கள் அந்த பெட்டியை விட்டுவிட்டு அடுத்த பெட்டியில் போய் தங்சம் புகுந்தனர்.

அதே போல் இன்னொரு முஸ்லிம் குடும்பம். இவர்களிடன் சென்றனர் ராம பக்தர்கள். ராம பஜனை பாடச்சொல்லி கட்டாயபடுத்தினர்.  அந்த முஸ்லிம் குடும்பமும் ராம பஜனை பாட மறுத்தது.  தங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்தனர்.  கொச்சை கொச்சையாக திட்ட ஆரம்பித்தனர். அத்தோடு நிற்கவில்லை. நடு இரவு, இவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக, ராம பஜனை பாட மறுக்கிறார்கள் என்பதற்காக ரெயில் பெட்டியை விட்டு, அந்த முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும் விரட்டியடிக்கப்பட்டனர். அந்த முஸ்லிம்கள் செய்வதறியாது திகைத்து போய் நின்றனர்.

சிறிது தூரம் சென்ற பிறகு, ரெயில் ஒரு ஸ்டேசனில் நின்றது.  பக்தர்கள் அனைவரும் ஸ்டேசனில் இருந்த சிற்றுண்டியில் நன்றாக சாப்பிட்டனர். ழு குடித்தனர். எல்லாம் முடித்துவிட்டு வெளியே வரும் போது, சிற்றுண்டி நடத்துபவர் பக்தர்களிடம் -  பாசிஸ வெறியர்களிடம் சாப்பிட்டதற்கு காசு கேட்டதுதான் தாமதம். அங்கும் தங்கள் கைவரிசையை காட்டியது ராம பக்த அராஜக கும்பல்.

இங்கு மட்டும் அல்ல தாங்கள் சாப்பிட்ட எந்த ஸ்டேசன் கடைகளிலும், சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல், பணம் கொடுக்கும்படி கேட்ட கடைகாரருக்கு தர்ம அடியை கொடுத்துவிட்டு வீரநடை போட்டு வந்தது இந்த ராம பக்த அராஜக கும்பல்.

இதை வாஸிங்டன் போஸ்டில் 6-3-02ல் இடம் பெற்ற ஒரு கட்டுரை இப்படி கூறுகிறது: இவர்கள் சாப்பிட்ட சிற்றுண்டி இவைகளுக்கு எந்த ரயில் நிலையத்திலும் பணம் தரவில்லை.

அராஜகமும், ரவுடிகளின் ராஜாங்கமும், அடாவடித்தனங்களுமாக தொடர்கிறது இவர்களின் பயணம் அயோத்தியை நோக்கி ராமருக்கு ஒரு கோயில் கட்டும் கனாவில்.

அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்குண்டான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருந்த போதும், அரசின் தலையீட்டால் விஹிப (விஷ்வ ஹிந்து பரிஷத்) தனது முடிவை மாற்றிகொள்கிறது. கோயில் கட்ட மறு தேதியும் அங்கு அறிவிக்கப்படுகிறது.

கோயில் கட்டும் தேதியை ஒத்தி வைத்ததால் ஏற்பட்ட வெறுப்போடு இந்த ராமபக்தர்கள் திரும்புகிறார்கள். வரும் போது இவர்கள் சபர்பதி எக்ஸ்பிரஸ் என்ற ரயிலில் எஸ்5, எஸ்6 என்ற பெட்டியில் பிரயாணத்தை தொடங்கினர்.

அயோத்தி செல்லும் போது என்னென்ன அடாவடிதனங்ளையும், அக்கிரமங்களையும் செய்து கொண்டு சென்றார்களோ, அதையே வரும் வழியெல்லாம் செய்தார்கள். அந்த ரயிலில், அந்த ரவுடிகளின் ராஜாங்கமே நடந்தது.

வரும் வழியில் எந்த ரயில் நிறுத்தத்திலும் இவர்கள் ழு, சிற்றுண்டி சாப்பிட்டாலும் பணம் தராமல், ரவுடித்தனம் செய்துகொண்டே வந்தனர்.  இந்த செய்தி அனைத்து ரயில் நிலையங்களிலும் பரவியிருந்தது.

அதேபோல் தான் கோத்ரா ரயில் நிலையத்தில் சிற்றுண்டி வைத்திருந்த முஸ்லிம்களுக்கும் தெரியவந்தது.  ரவுடி புகழ் ராமபக்தர்கள் இங்கே வந்து நிச்சயம் ஆட்டம் போடுவர்கள் என்பதை முன்னமே உணர்ந்த முஸ்லிம்கள் தயாராகவே இருந்தார்கள்.

இந்து வெறியர்கள் செய்துகொண்டு வந்த இந்த போக்கிரி தனங்களால், முஸ்லிம்களுக்கு மட்டும் பிரச்சனை ஏற்படவில்லை. மாறாக அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் தொல்லையாகவே இருந்தது. ஏன், மத்திய அரசுக்கே இவர்களால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. எதை பற்றியும் இவர்களுக்கு கவலையில்லை. இந்த நாட்டின் பொருளாதாரத்தில் நஷ்டம் ஏற்பட்டால் என்ன?, இந்த நாட்டில் இவர்கள் செய்யும் குழப்பத்தால் ரத்த ஆறுகள் ஓட்டப்பட்டால் இவர்களுகென்ன? இந்த போக்கிரிகளுக்கு தேவை இந்த நாட்டை இந்து நாடாக்க வேண்டும் அவ்வளவுதான். இந்த வெறியர்களின் வெறியாட்டாத்தால் ரயிலை பலமுறை அவசரமாக வழியில் நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது.

26-02-2002 நள்ளிரவு வந்து சேரவேண்டிய சபர்பதி எக்ஸ்பிரஸ் 27-02-2002 அன்று காலை சரியாக 7.43 மணிக்கு கோத்ரா ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. பிரயாணிகள் அனைவரும் இறங்கி தங்களின் காலை சிற்றுண்டியை முடித்து கொண்டார்கள். அவர்களுடன் சேர்ந்து இந்த வெறியர்களும் இறங்கினர்.  அருகில் இருந்த சித்திக் பக்கர் என்ற ஒரு முஸ்லிமின் சிற்றுண்டியில் தங்களுக்கு தேவையான அனைத்தையும் சாப்பிட்டனர்.

சாப்பிட்டு போகும் போது, சிற்றுண்டி நடத்திகொண்டிருக்கும் முஸ்லிம் முதியவர் சாப்பிட்டதற்காக பணம் தரும்படி கேட்டார். அந்த மதவெறி கும்பல் பணம் கொடுக்க மறுத்ததோடு, அங்கு ஒரு பெரும் ரகளையே செய்தனர். அந்த முதியவரின் தாடியை பிடித்து இழுத்து, அவரை நைய்ய புடைத்தனர். அவரை காக்க சிலர் முன்வந்தபோது, அங்கு அது ஒரு சிறிய கலவரமாக மாறியது.

இந்த அமளியை கடையின் உள்ளிருந்து கேட்ட அந்த வயதான முஸ்லிமின் மகள், தன் தந்தை தாக்கப்படுவதை பார்த்து பதறிபோய் ஓடி வந்தாள் தந்தையை காக்க.

தாக்கிகொண்டிருந்த அந்த மதவெறி கும்பல், தாக்கியவர்களை விட்டு அந்த 16 வயது சிறுமியை தூக்கி தங்களின் பெட்டிக்குள் போட்டு, கதவையும் முடிவிட்டார்கள்.

இந்த சம்பவத்தை நியூஸ் வீக் என்ற அமெரிக்க வார இதழின் ஏப்ரல் 22, 2002ம் பதிப்பு பின்வருமாறு கூறுகிறது:

‘The Hindu zealots returning from Ayodhya arrived at the station in Godhra.  The ‘kar sevaks’ as the Hindu militants are known, reportedly refused to pay a Muslim tea vendor, forced Muslims to sing praises to Ram and the allegedly brought a Muslim girl into their car.  The enraged response young Muslim men killed 59 Hindus.’

இத்தோடு இவர்கள் தங்கள் காட்டுமிராண்டி தனங்களை நிறுத்திகொள்ளவில்லை. சோபியா ஷேக் என்ற 14 வயது சிறுமியை பலவந்தமாக இழுத்து தங்களின் பெட்டியில் போட்டு கொள்ள முயற்சி செய்தார்கள். ஆனால் இந்த வெறியர்களிடமிருந்து தப்பி ஒடிவிட்டாள் சோபியா. அங்கே அவளின் மானத்தை அல்லாஹ் காத்தான்.

ஆனால் ரயில் தண்டாவளத்திற்கு அருகே துணி துவைத்து கொண்டிருந்தாள் இன்னொரு முஸ்லிம் பெண்மணி.  துணி துவைத்து கொண்டிருந்த அந்த முஸ்லிம்பெண்ணை பலவந்தமாக தங்கள் பெட்டிக்குள் இழுத்து கொண்டார்கள். அந்த அப்பாவி முஸ்லிம் பெண்ணும், இந்த கயவர்களால் துவைக்கப்பட்டாள்.

ரயில் புறப்பட்டது இந்த வெறி பிடித்த இந்து வெறியர்களுடன்.  சிறிது தூரம் கூட சென்றிருக்கவில்லை அந்த ரயில். ஒரு வயது முதிர்ந்த முஸ்லிம் ரயிலை பார்த்து கூச்சலிட்டார். ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் கரசேவகர்கள் இரண்டு முஸ்லிம் பெண் பிள்ளைகளை கடத்தி செல்கிறார்கள் காப்பாற்றுங்கள்’ என்று கூச்சலிட்டார். மறுபடியும் இந்த கரசேவர்கள் இரண்டு முஸ்லிம் பெண்களை இழுத்து ரயில் பெட்டிக்குள் போட்டுக் கொண்டனர்.

இந்த சம்பவங்களை தரமான பத்திரிக்கைகள் என்று அறியப்படும் அவுட்லுக், பிரண்ட்லைன் பத்திரிக்கைகள் பின்வருமாறு கூறுகின்றன.

One witness present in the platform, 14 year old Sophiya Shaik, told investigators that some of the men attempted to pull her into the train.  This claim lies in with accounts that a man was heard shouting that the karsevaks had kidnapped two Muslim women. Frontline, March 29, 2002
Official soures say karsevaks aboard the train pulled a Muslim woman washing clothes near the tracks into the train.  This created an aproar and a passenger pulled the chain.  By the time the train stopped, a mob had already gathered at the spot.  Outlook, March 18, 2002

இந்த கூச்சலைக் கேட்டு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளில் ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். ரயில் நின்றுவிட்டது.

ரயில் நின்றபோது அங்கு ஒரு பெரும் கும்பல் சேர்ந்து விட்டது. கரசேவகர்கள், பிரச்சனைகள் வரும் என்பதை முன்னமே எதிர்ப்பார்த்து இருந்தார்கள். மோதலுக்கு அவர்கள் தயாராகவே காணப்பட்டார்கள். அதனால்தான் தாங்கள் பயணம் செய்த பெட்டியின் கதவிற்கருகே கற்களையும் குவித்து வைத்திருந்தார்கள்.

கடத்தி செல்லப்பட்ட பெண்களை விட்டு விடும்படி முஸ்லிம்கள் முறையாக கேட்டனர். ஆனால் கரசேவகர்கள் தங்களின் சேவையை தொடங்கினர். முஸ்லிம்ளை கற்களைக் கொண்டு தாக்கதொடங்கினர். முஸ்லிம் பெண்களை கற்பழித்தது, கடத்தி சென்றது போதாதென்று இப்போது அவர்களையே தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள் திரும்ப தாக்கினர். முஸ்லிம்கள், இது பெண் விவகாரம் என்பதாலும், பெண்ணின் மானம் காக்கப்பட வேண்டும் என்ற அக்கறையோடும், அதன் விளைவாக ஏற்பட்ட ஆத்திரத்தோடும் காணப்பட்டனர். கரசேவகர்கள் தாக்குதலும் அதிகரித்தது.

இந்நேரத்தில் கரசேவகர்கள் பயணம் செய்த பெட்டியில் இருந்த கேஸ், மண்ணெண்ணெய் அடுப்புகள் தீ பிடித்து எறிய தொடங்கியது.  அதில் பயணம் செய்த கரசேவகர்கள் உட்பட 58 பயணிகள் - பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் உட்பட – எரிந்து சாம்பல் ஆனார்கள். இது ஒரு விபத்தாக கூட இருக்கலாம் என்று அந்த பகுதியை சேர்ந்த டிஎஸ்பி. நானாவதி தெரிவிக்கிறார்;.

(குஜராத் வகுப்பு கலவரங்களுக்கு முன்னதாக நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக கோல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி உமேஷ் சந்திர பானர்ஜி தலைமையிலான கமிஷன் விசாரித்தது. கரசேவகர்கள் ரயிலிலேயே சமையல் செய்ததால்தான் ரயில் பெட்டியில் தீப்பிடித்தது. வெளியிலிருந்து யாரும் தீ வைக்கவில்லை என்று பானர்ஜி இடைக்கால அறிக்கை அளித்தார். (தினமணி ஞாயிறு 22 ஜனவரி 2005)

கோத்ரா ரயில் எரிப்பு ஆதாரங்களை பாதுகாக்க ரயில்வே தவறிவிட்டது பானர்ஜி குழு அறிக்கை: மாநிலங்களவையில் தகவல்

புதுதில்லி. மார்ச் 19: கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பான சில முக்கிய ஆதாரங்களை பாதுகாக்க ரயில்வே நிர்வாகம் தவறிவிட்டதாக இது குறித்து ஆராய்ந்த நீதிபதி யு.சி. பானர்ஜி குழு தெரிவித்தது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் மத்திய ரயில்வே இணையமைச்சர் ஆர். வேலு இதை தெரிவித்தார். பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில்: இச்சம்பவத்தில் முழுவதும் எரிந்த எஸ்-7 பெட்டியில் சில பாகங்கள், தேவையில்லாத பொருள்களாக அறிவிக்கப்பட்டு விற்கப்பட்டுவிட்டன.

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணைக் கமிஷனுக்கு மாநில அரசு உத்திரவிட்டிருந்தது. அதனால் இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை. -தினமணி சனி 19, மார்ச் 2005))

இந்த விபத்தை மத்திய, மாநில அரசுகள் ஒன்றாக சேர்ந்து கொண்டு, “இது ஒரு திட்டமிட்ட எரிப்பு. முஸ்லிம்கள் முன்கூட்டி திட்டமிட்டு கரசேவகர்களை எரித்து கொன்றனர். இது ஒரு பயங்கரவாத செயல். இதில் பாகிஸ்தான் உளவுத்துறைக்கும் சம்பந்தம் உண்டு.” என்றெல்லாம் கட்டுக்கதைகளை திரித்து விட்டனர்.

ஆனால் இது ஒரு திட்டமிட்ட சம்பவம் அல்ல.  கரசேவகர்கள் செய்த போக்கிரி தனத்தில் கோபமடைந்த சிலரின் செயல் ஒரு விபத்தாக முடிந்தது என்று, இன்று உலகம் முழுவதும் ஏற்றுகொண்டது.

அமெரிக்க பத்திரிக்கையான வாஷிங்டன் போஸ்ட் 06-03-2002ல் வெளியிட்ட கட்டுரையில் ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதி அல்ல, இது ஒரு விபத்து என்பதை தெளிவாக கூறியுள்ளது. அதில், “சபர்பதி எக்ஸ்பிரசில் பயணம் செய்தவர்கள், இந்த நிகழ்ச்சிகளைக் கண்ணால் கண்டவர்கள், காவல்துறை, ரயில்வே அதிகாரிகள் இவர்களை பேட்டி கண்டபோது, அவர்கள் ரயில்பெட்டி எரிப்பு முஸ்லிம்கள் முன்கூட்டியே திட்டம் போட்டு நிறைவேற்றிய ஒன்றல்ல என்பதை தெளிவுபடுத்துகிறார்கள்” என்று கூறியுள்ளது.

மேலும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நானாவதி இப்படி கூறியதாகவும் அந்த அமெரிக்க பத்திரிக்கை கூறுகிறது: “நாம் மேற்கொண்ட புலனாய்வுகள் முதலமைச்சர் நரேந்தர் மோடி கூறுவது போல் அது (திட்டமிட்ட) தீவிரவாதத் தாக்குதல் என்ற கூற்றுக்கு ஆதாரமாக எதுவும் கிடைக்கவில்லை.  அது திட்டமிட்ட செயல் அல்ல. திழுரென ஆத்திரமடைந்த ஒரு சிலரின் செயல்கள் தாம்” என்று தெளிவாக கூறியுள்ளது.

இதை உறுதிசெய்யும் விதமாக இன்னொரு ஆதாரமும் நமக்கு கிடைக்கிறது. இதை அராப் நியூஸ் என்ற சவூதி நாளிதழ் 27/04/2002  அன்று இப்படி உலகுக்கு எடுத்துரைக்கிறது:

The Collector of Ghodra District Jayanthi Ravi said repeatedly over Doordarshan and All India Radio that the incident was not pre-planned, it was an accident”

அதாவது, “கோத்ரா மாவட்டத்தின் ஆட்சியர் ஜெயந்தி ரவி என்பவர் தூர்தர்சன் தொலைகாட்சி வழியாகவும், ஆல் இந்தியா ரேடியோ வழியாகவும், ‘கோத்ரா ரயில் சம்பவம் முன்னமே திட்டமிட்டு நடந்த ஒன்றல்ல. அது விபத்து.’ என்பதை தொடந்து நாட்டுக்கு தெரியப்படுத்தி கொண்டிருந்தார்” Arab News April 22, 2002

இத்தோடு இவர்கள் நிற்கவில்லை.  குஜராத் மாநிலம் பாகிஸ்தானை ஒட்டிய ஒரு மாநிலம் என்பதால் மிகவும் எளிதாக எந்த ஒரு சம்பவத்தையும் அல்லது அசம்பாவிதத்தையும் பாகிஸ்தானுடனும், அதன் உளவு அமைப்பான ஐஏஸ்ஐ உடனும் தொடர்பு படுத்தி பேசுவதன் மூலமும், எழுதுவதன் மூலமும் நாட்டு மக்களை நம்ப வைத்திட இயலும்.

இந்த உத்தியை இவர்கள் காலங்காலமாக செய்து வருகிறார்கள்.  இதை நாட்டு மக்கள் நன்றாக அறிவர்.  பாசிஸ்ட்டுகள் குஜராத் முஸ்லிம்களை மட்டுமல்லாது இந்திய முஸ்லிம்களையும் ஐஎஸ்ஐயுடன் எப்படியாவது தொடர்புபடுத்திட வேண்டும் என்று பல முயற்சிகள் செய்கிறார்கள். சிலதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.

இதே உத்தியை இப்போதும் பயன்படுத்தி பார்த்தனர். ஆனால் நாட்டு மக்கள் நம்ப தயாராக இல்லை. எந்த ஆதாரத்தை வைத்து பாகிஸ்தான் உளவுதுறையையும் இந்த சம்பவத்தை தொடர்பு படுத்தி பேசுகிறீர்கள் என்று பத்திரிக்கைகளும், எதிர்கட்சிகளும் இவர்களை கிழி கிழி என்று கிழித்துவிட்டார்கள்.

அதற்கு உள்துறை அமைச்சர் அத்வானி ஒரு உலக மகா உண்மை தெரிவிப்பதாக நினைத்து ஒரு விசயத்தை சொன்னார், “சம்பவம் நடந்த அன்று பல தொலைபேசி அழைப்புகள் கோத்ராவுக்கு வெளிநாட்டிலிருந்து வந்தன” என்று.

இதனை முழுஅளவில் விசாரித்த பிரண்ட்லைன் பத்திரிக்கை மார்ச் 29, 2002ல், “அன்று இரவு வெளிநாட்டுத் தொலைபேசிகள் இரண்டுதான் வந்தன. அதுவும் இரண்டு இந்து நபர்களுக்கு தான் வந்தன.” என்று முகத்தில் அறைந்தாற்போல் செய்தியை வெளியிட்டது.

இதெல்லாம் எதை காட்டுகிறது என்றால், முஸ்லிம்களிடம் இந்த இந்துக்களை, அவர்கள் மதவெறியர்கள் என்றாலும், தங்களையே தீர்த்துகட்ட திட்டம் போட்டு சந்தர்ப்பம் எதிர்பார்த்து காத்துகிடக்கிறவர்கள் என்றாலும், எரித்து கொல்லவேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் இருந்திருக்கவில்லை. அவர்கள் தங்களையும் காத்துகொள்ள, தன்மானத்தை காத்துகொள்ள, தங்களின் பெண், பிள்ளைகளை காத்துகொள்ள இப்படிபட்ட செயலில் பலவந்தமாக திணிக்கபடுகிறார்கள். இந்த முஸ்லிம்கள் செய்தது தீவிரவாத செயலும் அல்ல, அவர்கள் தீவிரவாதிகளும் அல்ல என்பதை வாசகர்கள் நன்றாக உணரவேண்டும்.

இப்படி எதாவது ஒரு சம்பவம் நடக்கும் என்பதை எதிர்பார்த்து, பல மாதங்களாக திட்டங்கள் தீட்டி, குஜராத்தில் ஒரு இனசுத்திகரிப்பு செய்வதற்கான ஆட்பலம், ஆயுதபலம், பணபலம் அத்துணையையும் தயாராக வைத்திருந்து, மத்திய, மாநில அரசுகள் ஒன்றாக சேர்ந்து கொண்டு நடத்தியதே அதுதான் தீவிரவாதம். அவர்கள் தான் தீவிரவாதிகள்.

குஜராத் இனப்படுகொலையை பற்றி ஆய்வு செய்ய Concerned Citizen Tribunal என்ற அமைப்பு 10 நாட்கள் விசாரணை நடத்தி தனது இடைகால அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பில் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் நியமிக்கப்பட்டார்.

இந்த தனது ஆய்வின் மூலம் பல உண்மைகளை உலகு வெளியிட்டுள்ளது. இது இடைகால அறிக்கைதான். துனது முழு அறிக்கையையும் ஆகஸ்ட் 15, 2002ல் வெளியிட உள்ளது.

இவர்கள் குஜராத்தில் பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் முக்கியமாக விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இதர அமைப்புகளிலிருந்து வெளியேறிய தொண்டர்களும் அடங்குவர். இவர்களின் கூற்றுப்படி, “குஜராத் படுகொலைக்கான ஏற்பாடுகள் நரேந்திர மோடி பதவி ஏற்ற அன்றிலிருந்தே தொடங்கிவிட்டது. தாங்கள் ஏற்கனவே செய்து வைத்திருந்த பயங்கர தயாரிப்புகளை பயன்படுத்திட அவர்கள் ஏற்பாடு செய்ததே கோத்ரா ரயில் எரிப்பு.”  (தி ஹிந்து 15.05.2002)

ஆகவே, இந்த ரயில் எரிப்பு சம்பவம் கூட முஸ்லிம்கள் செய்யவில்லை. இதையும் பாசிஸ்ட்டுகளே திட்டமிட்டு நடத்தியிருக்கின்றார்கள் என்பது இப்போது தெரியவந்துள்ளது. முழு ஆய்வறிக்கையும் வெளிவந்தால் பல திடுக்கிடும் தகவல்கள் நமக்கு தெரியவரும்.

கோத்ரா ரயில் எரிப்பை பயன்படுத்தி கொண்டு பாசிஸ வெறியர்கள் முஸ்லிம்களின் மேல் ஏவிவிட்ட அட்டகாசங்கள், அக்கிரமங்கள், கோர தாக்குதல் அனைத்தையும் அடுத்த அத்தியாத்தில் காண்போம், இன்ஷாஅல்லாஹ்.

மதவெறியர்களின் வெறியாட்டம் ஒரு வகுப்பு கலவரமா?

குஜராத் மாவட்டம் கோத்ராவில் நடைபெற்ற ரயில் எரிப்பு சம்பவம், ஏதேச்சயாக உணர்ச்சிவசப்பட்ட சில இளைஞர்களின் செயல் தான். அது ஒரு திட்டமிட்ட சதியல்ல என்பதை சென்ற அத்தியாத்தில் கண்டோம். அதற்கான பல்வேறு ஆதாரங்களையும் கூறியிருந்தோம். மேலும் இந்த ரயில் எரிப்பு சம்பவம் நடைபெறாது இருந்திருந்தாலும் அங்கு ஒரு இனசுத்திகரிப்பு நடந்தே இருந்திருக்கும்.

இந்த ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட இனவெறியாட்டம் ஒரு வகுப்பு கலவரம் அல்ல. அது ஒரு இனசுத்திகரிப்பு. பலகீனமான ஒரு சமுதாயத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகம். நன்கு பயிற்றுவிக்கப்பட்ட இனவெறியர்களை கொண்டு தன்னை காத்துகொள்ளவும் எதிர்த்து போராடவும் மனதால்கூட நினைக்காத பெண்களையும், குழந்தைகளையும், வயோதிகர்களையும், மேலும் பலகீனமான ஆண்களையும் மிகக்கொடூரமான முறையில் கொலை செய்த இந்த செயலை எப்படி ஒரு வகுப்பு கலவரம் என்று கூறமுடியும்? இரண்டு வகுப்பாரும் சரிசமமாக நின்று போராடாத இந்த சம்பவம் நிச்சயமாக ஒரு வகுப்பு கலவரம் அல்ல. இது நன்கு திட்டமிடப்பட்ட (Pre-Planned), ஒருமுகப்படுத்தப்பட்ட (Organized) ஓர் இனசுத்திகரிப்பு என்பதே சரியாகும்.

இந்த இனசுத்திகரிப்பு எப்படி நடைபெற்றது? இதை நடத்தியவர்கள் கையாண்ட விதங்கள் எப்படி? என்பதை எல்லாம் இந்த அத்தியாயத்தில் விரிவாக காண்போம் இன்ஷாஅல்லாஹ்.

கலவரத்திற்கான முன் ஏற்பாடு

“If you hate a society, kill them all“

இது குஜராத் மாநிலத்தில் பிளஸ் 2 பாடத்தில் ஹிட்லரின் ‘இறுதித் தீர்வு‘ என்ற பாடத்தில் வரும் ஒரு வரி. இதன் பொருள்: ‘நீங்கள் ஒரு சாராரை வெறுத்தால், அவர்களை கொலை செய்யுங்கள்’ என்பதாகும்.

பாசிஸ்ட்டுகள், முஸ்லிம்கள் மேல் வீசிய அவதூறுகளாலும், ஐஎஸ்ஐ ஏஜென்டுகள், உஸாமாவின் ஆதரவாளர்கள், அல்-காயிதா தீவிரவாதிகள் என்றெல்லாம் பழித்ததாலும் ஒட்டு மொத்த இந்துக்களாலும், முஸ்லிம்கள் வெறுக்கபட்டார்கள். இந்த வெறுப்பு, வெறும் வெறுப்பாகவே போய்விடகூடாது இந்து மக்களை கொண்டே அவர்களை – முஸ்லிம்களை – அழித்து ஒழிக்கவேண்டும் என்று கங்கனம் கட்டிய இவர்கள், இப்படியும் பாடம் சொல்லி கொடுத்தார்கள் மாணவர்களுக்கு. இதனால் முஸ்லிம்கள் மேல் வெறுப்பை வளர்த்து கொண்ட மிகவும் நாகரிகமாக, அப்பாவியாக, இவனா இப்படி செய்வான் என்று ஆச்சரியப்படும் அளவுக்கு காட்சி தரும் பள்ளி மற்றும் கல்லுஸரி மாணவர்களும் கூட குஜராத் முஸ்லிம்களை கொல்லும் பணியில் தாராளமாக ஈடுபட்டார்கள். அவர்கள் அந்த அளவுக்கு முஸ்லிம்களை வெறுக்க பயிற்றுவிக்கபட்டார்கள்.

பாசிஸ்ட்டுகள் இத்தோடு நிறுத்திகொள்ளவில்லை இவர்களின் வேலையை, மேலும் கற்று கொடுத்தார்கள் இப்படி: “உங்களுக்கு பிடிக்காத மக்களை கொலை செய்யுங்கள். அவர்களை பிரித்து விடுங்கள். அவர்கள் முன் அகம்பாவத்தோடு நடங்கள். நாங்களே எல்லாம் என காட்டுங்கள்.”

இப்படி இவர்கள் மாணவர்களை மட்டும் தயார்படுத்தவில்லை.  பொது மக்களையும் தயார்படுத்தினார்கள். இதற்காக பல பொதுக்கூட்டங்கள் ஏற்பாடுகள் செய்தார்கள். அங்கெல்லாம் முஸ்லிம்களின் மீது வெறுப்பேறும் படி பேசினார்கள். அந்த இடத்தில் ஒரு முஸ்லிம் கிடைத்தால் ஒரு எலும்பு கூட மிங்சாது செய்திருப்பார்கள். அந்த அளவுக்கு வெறுப்பூட்டப்பட்டார்கள் அந்த இந்து மக்கள்.

இதற்கு ஒரு நல்ல உதாரணம் பண்டார்வாடா என்ற குக்கிராமம். அந்த கிராமத்தில் விஹிபயினர் கோத்ரா சம்பவத்திற்கு 3 வாரம் முன்பு ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தார்கள். அந்த கூட்டத்தில் பல தலைவர்கள் பங்கெடுத்து கொண்டார்கள். முஸ்லிம்களை அழிப்பதே இவர்களின் குறிக்கோள். கூட்டத்திற்கு வந்திருந்த மக்களின் இரத்தத்தை சூடேற்றி அவர்களை கொண்டு முஸ்லிம்களை அழிக்கவேண்டும் என்பதே இவர்களின் திட்டம்.

விஹிப தலைவர்கள் ஒவ்வொருவராக பேச இதாடங்கினர். கூடியிருந்த மக்களின் இரத்தம் சூடேற்றப்பட்டது. அதிலே போதுமான அளவுக்கு வெறியூட்டபட்டது. அந்த மக்களுக்கு முன் இப்படி பேசினார்கள்: “எனதருமை இந்து சமுதாயமே! நாம் தெய்வமாக வழிபடும் கோமாதாவை, முஸ்லிம்கள் என்று சொல்லும் இந்த அரக்கர்கள் வெட்டி திண்கிறார்கள். நம் தெய்வத்தையே வெட்ட துணியும் இந்த அரக்கர்கள் நம்மை வெட்டி கொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இவர்கள் மனிதர்கள் அல்ல, அரக்கர்கள். நம் தெய்வத்தை வேட்டையாடும் இந்த அரக்கர்களை உங்கள் கிராமங்களை விட்டும் அப்புறப்படுத்துங்கள். கிராமங்களை தூய்மைபடுத்துங்கள். அவர்களை விரட்டுங்கள். கொல்லுங்கள். நெறுப்பிட்டு கொளுத்துங்கள்.” என்றெல்லாம் பேசி அங்கு கலவரத்தை தூண்டும் அத்துணை வேலைகளையும் செய்தார்கள்.

குஜராத்தை கலவர பூமியாக்க ஒரு பெரும் திட்டம் ஒன்று அரங்கேற இருப்பதை கண்டு பல அரசு அதிகாரிகள் அதிர்ச்சிக்கு உள்ளனார்கள். அதில் ஒருவர் தான் சக்கரவர்த்தி (காவல்துறை உயர் அதிகாரி, குஜராத்).  இவர் விஹிபவினர் ஒரு பெரும் கலவரத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அவர்களை கட்டுபடுத்துங்கள் என்று பிப்ரவரி 27, 2002 அன்று முதல்வர் நரேந்திர மோடியை கேட்டு கொண்டார். அதனால் அவர் இடமாற்றத்திற்கு ஆளானார்.

இப்படியெல்லாம் பேசி ஒன்றுமறியா அப்பாவி மக்களின் உள்ளத்தில் முஸ்லிம்களின் மேல் வெறியை ஊட்டினார்கள். மேலும் கலவரத்தை மிகவும் கச்சிதமாக நடத்தி முடிக்க ஒரு யுத்ததிற்கு எப்படி திட்டமிடப்படுமோ அதை போல கனகச்சிதமான முறையில் திட்டங்கள் தீட்டப்பட்டது.

கலவரத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே, விஹிப, பஜ்ரங்தள் தொண்டர்களுக்கு கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் துப்பாக்கி பயிற்சியும் அடங்கும். பல இடங்களில் இவர்கள் துப்பாக்கியை பயன்படுத்தியே முஸ்லிம்களை கொன்றார்கள் என்பதற்கு இதுவே சான்று. (Outlook March 25, 2002).

மேலும் பெட்ரோலை ஊற்றி எரிப்பதற்கும், கேஸ் அடித்து எரிப்பதற்கும் முறையாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக இவர்கள் லட்சக்கணக்கில் செலவழித்திருக்கிறார்கள். இந்த பயிற்சிகளை எல்லாம் இவர்கள் மிகவும் சிரமங்களை மேற்கொண்டு தான் எடுக்கிறார்கள் என்பதை நாம் பல நேரங்களில் உணர மறுக்கிறோம். அனைத்தையும் நாம் இலகுவாக பெற்றிட முடியும் என்று அவர்கள் நினைக்கவில்லை. மாறாக கஷ்டப்படாமல் எதையும் சாதிக்க முடியாது. உடலை வருத்தாமல் நம் இலக்கை அடைய முடியாது என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்தே இருக்கிறார்கள்.

1993ல் பம்பாய் கலவரத்தில் முஸ்லிம்களை அழிப்பதற்கு இவர்கள் ஹிட்லரின் பாணியை கையாண்டார்கள். வாக்களர் பட்டியலை வைத்துகொண்டு முஸ்லிம்களின் வீடுகளில் முதல் நாள் இரவோடு இரவாக பெயிண்டினால் அடையாளம் இட்டார்கள். அடுத்த நாள் அந்த வீடுகளை எல்லாம் சூறையாடி, தீயிட்டு கொளுத்தினார்கள். தீயுடன் சேர்ந்து முஸ்லிம்களின் உடல் ஜுவாலை விட்டு எரிவதைக் கண்டு ரசித்தார்கள்.

இதே பாணியை சற்று நவீன படுத்தி குஜராத்தை அழித்தார்கள். காலம் மாறுகிறது. விங்ஙானம் வளர்கிறது. பாசிஸ சிந்தனையும் நவீனப்படுகிறது.

இனப்படுகொலை நடத்தப்பட்ட பல மாதங்களுக்கு முன்பே முஸ்லிம்களின் வீடுகள், முஸ்லிம்களின் கடைகள், வியாபார நிறுவனங்கள், முஸ்லிம்களின் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்ட்கள், முஸ்லிம்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்கள் ஆகியவைகளின் பட்டியல் தயார் செய்யபட்டது. ரேசன் கார்டுகளை வைத்து முஸ்லிம்களின் வீட்டு முகவரியை எடுத்தார்கள். இந்த முகவரிகளை மாநகராட்சியனரும், ரேசன் கார்டு வினியோகம் செய்யும் அதிகாரிகளும் கொடுத்து உதவினர். அது மட்டுமல்ல மாநில தேர்தல் ஆணையமே இவர்களுக்கு வாக்களர் பட்டியலை கொடுத்து உதவி செய்தது. இவர்கள் கஷ்டப்படகூடாது என்று அதிகாரிகளுக்கு அவ்வளவு அக்கறை. (FrontLine March 29, 2002)

 மேலும் பள்ளிவாசல் எத்தனை இருக்கின்றன? எங்கெங்கு இருக்கின்றன? தர்காக்கள், முஸ்லிம்கள் முக்கியமாக கருதும் இடங்கள், முஸ்லிம்களால் நடத்தப்படும் அலுவலகங்கள், இப்படி எதையும் விட்டுவைக்காமல் ஒரு முழு அளவிளான பட்டியல் திரட்டப்பட்டது.

கலவரங்களுக்கு பல நாட்கள் முன்பே, “முஸ்லிம் கடைகளில் வாங்காதே! பொருளாதார புறக்கணிப்பு ஒன்றே வழி! இன்று முதல் நாம் சபதம் ஏற்போம். நான் முஸ்லிம் கடைகளில் வாங்கமாட்டேன்! அவர்களின் உணவகங்களில் உண்ண மாட்டேன். ஹிந்து பணிமனைகளிலேயே நமது வாகனங்களைப் பழுது பார்ப்போம். முஸ்லிம் பணிமனைகளில் பழுது பார்க்க மாட்டோம். ஊசியிலிருந்து தங்கம் வரை எதையும் நாம் முஸ்லிம்களிடம் வாங்க மாட்டோம்.

முஸ்லிம்களுக்கு வேலை கொடுக்க மாட்டோம். அவர்களிடம் வேலை செய்ய மாட்டோம். அவர்களுக்கு வாடகைக்கு வீடோ, கடையோ கொடுக்க மாட்டோம். அவர்களிடம் வாடகைக்கு வீடோ, கடையோ எடுக்க மாட்டோம். முஸ்லிம்களுக்கு கல்வி கற்று கொடுக்க மாட்டோம். கல்வியை பெற மாட்டோம்.” என்ற இந்த துண்டு பிரசுரத்தை வெளியிட்டார்கள். மேலும் இதை பத்து பேருக்கு நகல் எடுத்து கொடுக்கும் படி கேட்டு பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது.

அக்டோபர் மாதம் 1989, பாகல்பூர் 1000 முஸ்லிம்களை காவு கொண்ட கலவரம். இதே விஹிப, பஜ்ரங்தள் முன்னின்று நடத்தியது. அந்த கலவரத்திலும், இதே போன்ற துண்டு பிரசுரம் இப்படி கேட்டு கொண்டது: “முஸ்லிம்களை துடைத்தெறிய வேண்டும், மிங்சியவர்களை பிச்சைகாரர்கள் ஆக்கவேண்டும்” என்று. அதேபோல் குஜராத்திலும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

இத்தோடு மட்டுமல்லாது பள்ளிவாசல்களை இடிக்க எங்கிருந்து புல்டோசர்களை கொண்டு வரவேண்டும். எத்தனை புல்டோசர்கள் பயன்படுத்தபட வேண்டும். இடிபாடுகளை அகற்றுவதற்கு எத்தனை கார்ப்பரேஷன் லாரிகள் பயன்படுத்தபட வேண்டும். இடிபாடுகளை எங்கே கொட்ட வேண்டும் என்ற அனைத்தையும் இவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்திருக்கிறார்கள்.

எனவே, இவர்கள் வெகு நாட்களுக்கு முன்னரே கலவரத்தை தொடங்க திட்டம் போட்டு வைத்து விட்டார்கள். கோத்ரா நிகழ்வை இவர்கள் ஒரு சாக்காக எடுத்து கொண்டார்கள் என்பதை வாசகர்கள் மீண்டும் நன்றாக உணரவேண்டும்.

திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கப்படுகிறது

இந்த பாசிஸ வெறியர்களிடமிருந்து தப்பித்து கொள்ளுங்கள், விஹிபயினர் ஆயுதங்களுடன் கூட்டங்கூட்டமாக வருகிறார்கள் என்று சக இந்துக்கள் பதட்டத்துடன் வந்து சொன்னார்கள். கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து முட்டை கட்டி கொண்டு கண்மண் தெரியாமல் ஓடினார்கள் முஸ்லிம்கள் வெறியர்களிடமிருந்து தப்பி பிழைக்க.

தப்பியவர்கள் போக மீதமுள்ள முஸ்லிம்களை இந்த வெறியர்கள் துண்டு துண்டாக வெட்டி போட்டார்கள். ரோடெங்கும் மூட்டை முடிச்சுகள் சிதறி கிடந்தன. இடையிடேயே முஸ்லிம்களின் சதை துண்டுகள்.  பாசிஸ கொடியவர்கள் ஒரு சிறிய சூட்கேஸை கூட விட்டு வைக்கவில்லை. அதையும் பெட்ரோல் விட்டு எரித்துவிட்டார்கள்.

எங்கும் கலக்கம், பதட்டம், பீதி. தப்பி பிழைத்த முஸ்லிம்கள், பயத்தில் உறைந்து போய் நின்றார்கள். வெறித்து பார்த்த கொண்டிருக்கும் அவர்களின் முகத்தில் எப்போதும் மெல்லியதாய் கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது.

கோத்ரா ரயில் நிலையத்திற்கு அருகில் பிப்ரவரி 27, 2002 அன்று சபர்பதி எக்ஸ்பிரஸ் இந்து ராமபக்தர் என்ற போர்வையில் வந்த மதவெறியர்களால், தீவிரவாதிகளால் ஆத்திரமூட்டப்பட்ட சில முஸ்லிம்களால் எரிக்கப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்திற்காக காத்துகொண்டிருந்த விஹிப, மறுநாள் பிப்ரவரி 28, 2002 அன்று சிறிதும் தாமதம் செய்யாமல் பந்திற்கு அழைப்புவிடுத்தது. இதற்கிடையில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் செய்திகளாக பத்திரிக்கை வழி வந்து சேர்ந்தது. இதனையும் கச்சிதமாக செய்தார்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் சங்பரிவாரத்தினர். முஸ்லிம் பயங்கரவாதிகள் ராமபக்தர்களை எரித்து கொன்றார்கள் என்ற செய்தியை கேள்விபட்டவுடன் இந்துக்கள் ஆவேசம் அடைவார்கள் என்று எதிர்ப்பார்த்தார்கள். அப்படியே நடந்தது.

விஹிப அழைப்பு விடுத்த பந்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் நம் கடைகள், தொழில்சாலைகளை எல்லாம் அடித்து நொறுக்கிவிடுவார்கள் என்று பயந்த குஜராத் மக்கள் பந்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். குஜராத் நகரங்கள் எல்லாம் அமைதியில் ஆழ்ந்தது. அந்த அமைதியை கொங்சம் நீடிக்கவிடவில்லை விஹிப, பஜ்ரங்தள, ஆர்எஸ்எஸ் வெறியர்கள். ஏற்கனவே தாம் போட்டு வைத்த திட்டங்களை செயல்படுத்த தலைபட்டார்கள்.

முஸ்லிம்களின் கடைகள் குறிவைத்து அழித்தல்

கையில் தாம் சேகரித்து வைத்திருந்த பட்டியலை எடுத்துகொண்டார்கள். கடைவீதிக்கு வந்தார்கள். வரிசை கிரமாக முஸ்லிம்களின் கடைகள் குறிவைத்து அழிக்கப்பட்டது. எரித்துவிடப்பட்டது. இந்து தீவிரவாதிகள், முதலில் கடைகளுக்குள் புகுந்து தன்னால் இயன்ற வரை அனைத்து சாமான்களை கொள்ளையடித்தார்கள். இவர்கள் அனைவரும் ஏழ்மையால் வாடுபவர்கள் அல்லர். பசி பட்டினி என்று பிச்சையெடுக்கும் பிச்சைகாரர்கள் அல்லர். வருமானத்திற்கு வழியில்லாதவர்களும் அல்லர். இந்த தீவிரவாதிகளில் பெரும்பாலோர் நடுத்தர வயதுடைய, திடகாத்திர உடலுடைய, போதுமான பொருளாதார வளமுடையவர்கள். முஸ்லிம்களின் கடைகளை சூறையாடுவதற்கு போட்டிபோட்டு கொண்டு வந்தனர். இதில் பெரும் பெரும் செல்வந்தர்களும் தன்னுடைய காரை நிறுத்திவிட்டு கடைகளில் கொள்ளையடித்து சென்றனர் என்பதுதான் வேதனையான இருக்கிறது. இவர்கள் திருடிகொண்டிருக்கும் போது, போலீஸ்காரர்கள் வேகமாக வந்தார்கள். போலீஸ் படையை பார்த்தவுடன் தீவிரவாதிகள் நிலைகுலைந்தார்கள். எங்கே போலீஸ் நம்மை கைது செய்துவிடுவார்களோ என்று ஓட்டம் பிடிக்க தொடங்கினர். ஓடியவர்கள் திரும்பி பார்த்த போதுதான் அவர்களுக்கு தெரிந்தது. இந்த போலீஸ்காரர்கள் நம்மை பிடிக்க வரவில்லை. முஸ்லிம்களின் கடைகளில் உள்ள சாமான்களை சூறையாட வந்தவர்கள் என்று. பின்னர் இந்த தீவிரவாதிகள் போலீஸ் பந்தோபஸ்துடன் திருட்டை தொடர்ந்தார்கள். இயன்றதை சுருட்டிகொண்டார்கள். மீதமுள்ளது யாருக்கும் பயன்படகூடாது என்று கடைக்குள் பெட்ரோலை ஊற்றினர். தீ வைத்தனர். அந்த கடை ஜுவாலை விட்டு எரிவதை கண்டு குதூகலித்தனர். இனி கடையில் ஒன்றும் தேராது என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு அடுத்த கடைக்கு சென்றனர். இப்படியாக முஸ்லிம்களின் கடைகள் குறிவைத்து சூறையாடப்பட்டு பின்னர் எரியூட்டப்பட்டது.

முஸ்லிம்கள் தங்களின் கடைகளின் பெயர்களை முஸ்லிம் பெயர்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத பெயர்களை – பொதுபெயர்களைதான் வைத்திருந்தார்கள். இருந்தும் அந்த கடைகள் எல்லாம் சரியாக குறிபார்த்து அழிக்கப்பட்டது. எந்த அளவுக்கென்றால், கடைவிதீயில் எல்லா கடைகளும் இந்துக்களுக்கு சொந்தமானதாக இருக்கும். மூலையில் ஒரு முஸ்லிம் கடைவைத்திருப்பார். அவரை பார்த்தால் முஸ்லிம்களுக்கே உரிய அடையாளஞ்களான தொப்பியோ, தாடியோ எதுவும் இருக்காது. அந்த கடையின் பெயரும் இது ஒரு முஸ்லிமின் கடை என்று பறையடிக்காது. இருந்தும் அந்த கடை – அது ஒரு சின்ன பெட்டியாக இருந்தாலும், அது ஒரு முஸ்லிமிற்கு சொந்தமானது என்பதால் அழிவுக்கு உள்ளானது. தீயிட்டு கொளுத்தப்பட்டது. அந்த சின்ன இபட்டி கடையின் மூலம் வரும் சிறிய வருமானமும் அழிக்கப்பட்டு அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் ஆக்கப்பட்டது. சின்ன பெட்டி கடைகள் மட்டுமல்ல பெரும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் இதே நிலை தான்.

இந்த வகுப்புவாத  பாசிஸ்ட்டுகள் யார் யாருக்கு எந்தெந்த தொழில் நிறுவனங்கள் சொந்தம் என்ற விவரங்களை தெரிவிக்கும் அரசு ஆவண காப்பகங்ளோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததால் மட்டுமே இவர்கள் இப்படி முஸ்லிம்களின் தொழில் நிறுவனங்களை மிகச்சரியாக அடையாளம் கண்டு அழிக்க முடிந்தது என்பதை நாம் இங்கு கவனிக்கவேண்டும்.

இந்துக்களின் கடைகளுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் ஹோட்டல். அதன் பெயர் (Hotel Tasty) ஹோட்டல் டேஸ்டி. இது ஒரு முஸ்லிமிற்கு சொந்தமானது என்று யாருக்கும் தெரியாது. ஹோட்டல் பெயரும் கூட ஒரு பொதுவான பெயர் தான். ஆனால் அந்த ஹோட்டல் வகுப்புவாத விஹிப, பஜ்ரங்தள தீவிரவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்டது.

அடுத்து ஹேன்ஸ் இன் என்றொரு தங்கும் விடுதி. இது முஸ்லிமின் தங்கும் விடுதி என்று யாருக்கு அடையாளம் காணமுடியும்? இந்த வகுப்புவாதிகளுக்கு மட்டும் தான் தெரியும். சக முஸ்லிமுக்கு கூட அடையாளம் தெரியாத ஒரு லாட்ஜ். ஆனால் சரியாக அடையாளம் காணப்பட்டு இடித்து தரைமட்டாக்கப்பட்டது.

இதேபோல் ஒரு ரெடிமேட் ஆடையகம், கார் கம்பெனி என்று எதையும் விட்டு வைக்கவில்லை இந்த வெறியர்கள். எப்படி விட்டுவைப்பார்கள்? முஸ்லிமின் சொத்துக்களை அழித்து அவர்களை பிச்சைக்காரர்கள் ஆக்கவேண்டும் என்பது அவர்களின் வாழ்க்கை இலட்சியம் ஆயிற்றே. பாவம் இந்த பரிதாப முஸ்லிம். இவர்களின் வாழ்வில் என்ன தான் இலட்சியம் இருக்கிறது என்று தலித் சமுதாயத்தவரும், கம்யூனிச வாதிகளும் பரிதாப படக்கூடிய அளவிற்கு, அனுதாப படக்கூடிய அளவிற்கு முஸ்லிமின் நிலை இன்று.

நம்மை பார்த்து அடுத்தவர் பொறாமைபடலாம். ஆனால் அய்யோ பாவம் என்று அனுதாப படக்கூடிய அளவிற்கு ஆகிடகூடாது.

இப்படியாக ஒரு சாரார் கடைவீதிகளில் உள்ள முஸ்லிம்களின் கடைகள், தொழில் நிறுவனங்கள், ஹோட்டல்கள் என்று எதையும் விட்டுவைக்காமல் தான் கொண்டுவந்த பட்டியலை சரிபார்த்து, சரிபார்த்து தங்களுடைய வேலையை கச்சிதமாக செய்து கொண்டிருந்த வேளை, மற்றவர்கள் - இந்து பயங்கரவாதிகள் முஸ்லிம்களின் குடியிருப்புகளுக்கு சென்றார்கள்.

அர்பான் நகர் என்றொரு இடம். இதில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்து வந்தார்கள். அழகான இந்த நகர் நாளை எரிந்து சாம்பல் ஆகும் என்று யாரும் நினைத்துகூட பார்க்கவில்லை. எங்கு நோக்கினாலும் இடிக்கபட்ட வீடுகள். புதிதாக வண்ணம் பூசப்பட்ட வீட்டின் சுவரில் படிந்திருந்த கரும்புகை, நான் பயங்கரவாதிகளால் கேஸ் அடித்து தீயூட்டப்பட்டேன் என்று சொல்லாமல் சொல்லிற்று. எரிந்த வீட்டின் உள்ளிருந்து எரிந்த போன முஸ்லிமின் உடலிருந்து வந்த அழுகிய நாற்றம் அங்கிருந்தவர்களை இங்கே வராதீர்கள். வந்தால் உங்களுக்கும் இந்த கதிதான் என்று கூறி விரட்டியடித்தது. எங்கும் துயரம், கலக்கம்.

இந்த நகரில் உள்ள முஸ்லிம்களை அழிப்பதற்காக, வகுப்புவெறியர்களின் ஒரு பெரும் கூட்டம் ரோட்டோரத்தில் வந்து கூடியது. இந்த கூட்டத்தை கட்டுபடுத்த, வழிநடத்த ஒரு தளபதி தேர்ந்தெடுக்க பட்டிருந்தார். அவர் பெயர் ரவீந்தர் சர்மா. இவர் பஜ்ரங்தளத்தை சேர்ந்தவர்.

முதலில் முஸ்லிம்களின் மீது கற்களை எறிந்தார்கள். அதை தொடர்ந்து அங்கிருந்த காவல் நிலையத்தை சார்ந்த பூபார்டன் காட்வி என்ற காவலர் துப்பாக்கியை கொண்டு முஸ்லிம்களை நோக்கி சுட ஆரம்பித்தார். இதில் அந்த பகுதியில் உள்ள ரெடிமேட் கடையில் வேலை செய்து வந்த, பீகாரை சேர்ந்த ஒரு முஸ்லிம் காயம்பட்டு வீழ்ந்தான். காவலுக்கு கெட்டிகார காவலர்கள் இவரை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் வகுப்புவெறி தலைக்கேறிய காவலர்கள் பாசிஸ்ட்டுகளோடு சேர்ந்துகொண்டு அந்த இளைஞனின் மீது பெட்ரோலை ஊற்றினார்கள். தீயிட்டு கொளுத்தினார்கள். அங்கே அந்த முஸ்லிம் கறிகட்டையாக உருமாற்றம் பெற்றான் இந்த பாசிஸ்ட்டுகளின் கரங்களால்.

இந்த காட்சி கண்ட முஸ்லிம்கள் விழித்து கொண்டார்கள். இனி இவர்கள் நம் வீடுகளுக்கும் தீயிட்டு கொளுத்துவார்கள் என்ற பயந்து அப்போதே தயார் ஆனார்கள் (அப்போது தான் தயார் ஆனார்கள்) பதிலடி கொடுப்பதற்கு. பஜ்ரங்தளத்தினர் முன்னேறினார்கள். முஸ்லிம்களும் அவர்களை தடுத்து நிறுத்திட முயற்சி செய்தார்கள். அங்கே ஒரு தெருச்சண்டை நடந்தது. முஸ்லிம்கள் இயன்றதை செய்தார்கள்.  பாசிஸ காவலர்கள் முஸ்லிம்களை சுட தொடங்கினர். துப்பாக்கி சூட்டிற்கு பலியானர்கள் முஸ்லிம்கள் அனைவரும்.

உடனே எதிரே சுட்டு கொண்டிருந்த பஜ்ரங்தளத்தினர், தாங்கள் தயாராக கொண்டுவந்திருந்த பெட்ரோல் மற்றும் கேஸ் சிலிண்டர்களையும் திறந்துவிட்டார்கள் முஸ்லிம்களின் வீடுகளின் மீதும், கடைகளின் மீதும். முஸ்லிம்கள் தப்பி பிழைக்க வழியில்லாமல் தீயுடன் கருகி சாம்பல் ஆனார்கள்.

இதுபோல கலவரம் குஜராத்திற்கு புதிதல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து பல கலவரங்களை சந்தித்துள்ளது குஜராத். நாட்டின் எதாவது ஒரு பகுதியில் சின்ன பிரச்சனை ஏற்பட்டாலும், உடனே பாதிப்புக்கு உள்ளாவது இந்த குஜராத் தான். இதனால் தான் குஜராத்தை எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கும் பகுதி (Sensitive Area) என்று கூறுவார்கள். காரணம் நாடு பிரிவினையின் போது, பாகிஸ்தானிலிருந்த இந்துக்களை அங்கிருந்த முஸ்லிம்கள் விரட்டியடித்தார்கள். அப்படி விரட்டியடிக்கப்பட்ட இந்துக்கள் குஜராத்தில் தான் தங்சம் அடைந்தார்கள் என்று காலங்காலமாக நம்பி வருகின்றனர். இந்த நம்பிக்கையை விஹிப, பஜ்ரங்தளத்தினர் அடிக்கடி ஊதி பெரிதாக்கி வருகின்றனர். தாங்கள் விரட்டியடிக்கப்பட்டதற்கு இந்த முஸ்லிம்கள் தான் காரணம் என்று தங்கள் ஆத்திரத்தை இந்த அப்பாவி முஸ்லிம்களின் மேல் காட்டுகிறார்கள்.

இவர்கள் முஸ்லிம்களிடம் ஆத்திரத்தை காட்டும் போதெல்லாம், அங்கே ஒரு கலவரம் வெடிக்கும். அப்பாவி முஸ்லிம்கள் அங்கே வெட்டி கூறுபோட படுவார்கள். முஸ்லிம் பெண்கள் கதற கதற நடுதெருவில் நிர்வாணப்படுத்தப்பட்டு கும்பல் கும்பலாக கற்பழிக்கப்படுவார்கள். பின்னர் இந்த ரத்தவெறி பிடித்த மிருகங்கள், ஈவு இரக்கமின்றி எரியும் நெருப்பில் முஸ்லிம்களை வீசியெறிந்து அவர்கள் கதறும் காட்சியை கண்டு ரசிப்பார்கள். எதிர்த்து கேட்க யாரும் இல்லாததால் குஜராத்தில் ஆர்எஸ்எஸ், விஹிப, பஜ்ரங்தளத்தினர் ஒரு ரவுடி ராஜாங்கத்தையே இதுவரை நடத்திவந்துள்ளனர். இப்படி நடந்த கலவரங்களில் முக்கியமானது 1947, 1952, 1959, 1961, 1965, 1967, 1972, 1974, 1980, 1983, 1989, 1990, 1992 கலவரங்கள். இந்த கலவரங்களால் அதிகமாக பாதிப்புக்கு உள்ளானது முஸ்லிம்கள் தான். வீடுகளையும், குருவி போல் சேர்த்து வைத்த சொத்துகளையும் இடிந்த இவர்கள் ரயில் தண்டவாளம் அருகே சிறு குடிசைகள் அமைத்து கொண்டு தங்கள் வாழ்வை தொடர்கின்றார்கள்.

2002க்கு முன் நடந்த கலவரங்களினால் பெரும்பாலான முஸ்லிம்கள் இப்பவும் தலை நிமிர முடியாமல், அடிமைகளை போல வாழ்கின்றனர். மீதமுள்ளவர்களையும் அழித்து அவர்களின் சொத்துகளையும் அழித்து அடிமையின் நிலைக்கு கொண்டு செல்ல மீண்டும் ஒரு கலவரம் வெடித்தது. அது தான் 2002 கலவரம்.

இந்த கலவரத்தில், இதற்கு முன் எப்போதும் நடந்திராத அளவுக்கு கொலைகளும், கொள்ளைகளும், கற்பழிப்புகளும் நடந்தது. மதவெறிபிடித்த இந்துக்கள் வெறிபிடித்த மிருகத்தை விட மிகமோசமாக நடந்து கொண்டனர். “இவர்களெல்லாம் மனிதர்கள் தானா? இவர்களின் நெங்சில் கொங்சமும் ஈரம் இல்லையா? இவர்களின் இதயம் என்ன கருங்கல்லினால் ஆனதா? தான் எந்த ஜாதி என்று தனக்கே தெரியாத பிஞ்சுக்களை கூட விட்டு வைக்கவில்லையே இந்த ரத்த வெறி பிடித்த அரக்கர்கள்” என்று கூறும் அளவுக்கு இவர்களின் அடாவடித்தனம் இருந்ததென்றால், இவர்கள் இதையெல்லாம் ஏன் செய்கிறார்கள்? இதனால் இவர்கள் சாதிக்க நினைப்பதென்ன? என்று முஸ்லிம்களே உங்களை நீங்களே என்றேனும் கேட்டதுண்டா?

கையில் சூலாயுதம் போன்ற கத்தி, வீச்சறிவாள், நீண்ட கத்தி, நெற்றியில் காவி நிற துணி, கண்களில் மதவெறியுடன் ரத்தத்தை தேடி – முஸ்லிமின் ரத்தத்தை தேடி அலைந்தனர் இந்து மத வெறிபிடித்த கயவர்கள். கையில் கிடைத்தவர்களை எல்லாம் துண்டு துண்டாக வெட்டிப்போட்டனர். ரோடெங்கும் முஸ்லிம்களின் உடல் அங்கொன்றும் இங்கொன்றுமாக. தான் கொண்டு வந்த பெட்ரோலை முஸ்லிம்களின் மேல் ஊற்றி நெருப்பிட்டு கொளுத்தினார்கள். முஸ்லிம் சகோதரன் ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ என்று சொன்ன ஒரே காரணத்திற்காக கதறி, கதறி கருகி சாம்பலானான். வீட்டை பூட்டி தண்ணீரை நிரப்பி மின்சாரம் வைத்து கொன்றார்கள். அவர்கள் ஒரு இந்துவாக இருந்திருந்தால் இன்று உல்லாசமாக இருந்திருப்பார்கள். இப்படி நாம் இடிந்த சகோதர, சகோதரிகள் ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டதட்ட 15000த்திற்கும் மேல்.

அவர்கள் பட்ட துன்பங்கள் எழுதினால் ஏடு தாங்காது. அவர்கள் முஸ்லிம் தாய்க்கு பிறந்த காரணத்தினால் எத்தனை துன்பங்களை அனுபவித்தனர்.

பாத்திமா பீவி என்றொரு பெண். இந்து மத வெறி பிடித்த மிருகங்களிடமிருந்து தப்பி பிழைத்து ஓடி வந்தார். ஓடி வந்த இவருக்கு அங்கிருந்த போக்குவரத்து தொழிலாளர்களின் குடியிருப்பு அடைக்கலம் கொடுத்தது. தங்சம் புகுந்தார். இவரை போல பல பெண்களும் தங்களின் உயிரை கையில் பிடித்து கொண்டு ஏற்கனவே அங்கு தங்சம் புகுந்திருந்தனர். அப்பா ஒரு வழியாக பிழைத்தோம் என்று பெரு மூச்சுவிட்ட நேரம், அங்கே காவல் துறையினர் வந்தார்கள். எல்லோரையும் “இது நீங்கள் மரணிக்க வேண்டிய இரவு“ கூறி இழுத்து சென்றார்கள். குடியிருப்பில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு மண்ணெண்ணை, மற்றும் எரிபொருள்களை கொடுத்துதவினார்கள். அந்த எரிபொருள்களால் முஸ்லிம்களை முதலில் குளிக்க வைத்தார்கள். பின்னர் அவர்களை எல்லாம் வேக வைத்தார்கள் காவல் துறையினர். பரிதாப முஸ்லிம்கள் எரிந்து சாம்பலானார்கள். எரித்தவர்கள் பாத்திமா பீவி மறைந்திருந்ததை கண்டு கொள்ளவில்லை. சக முஸ்லிம்கள் தன் கண் முன்னால் எரிந்து, வெந்து சாம்பலாகியதை கண்டு பாத்திமா பீவியின் உள்ளம் துடித்தது. கண்கள் தாரை தாரையாய் கண்ணீர் வடித்து.

முஸ்லிம்களை தீயிட்டு கொளுத்திய கயவர்கள் எந்த வித சலனமும் இல்லாது அமைதியாக திரும்ப சென்றனர், தங்களுடைய வேலை முடிந்த திருப்தியில். எரிந்து கொண்டிருந்த முஸ்லிம்களின் கதறல் இவர்களை இம்மி அளவும் கரைத்திட வில்லை. மாறாக எரிவதை கண்டு ரசித்தார்கள். இவர்களின் கல் மனதுக்கு இன்னொரு சான்றாக அமைந்தது சாலியா பீவி என்ற பெண்ணுக்கு இவர்கள் செய்த கொடுமை.

முஸ்லிம் பெண்களே முக்கிய இலக்கு

சிலுவை போரின் போது, கிருஸ்தவ மதவெறியர்கள் தான் போகும் இடமெல்லாம் முஸ்லிம்களை கொலை செய்து கொண்டே சென்றார்கள். முழங்கால் அளவு ரத்தம் ஓடும் அளவுக்கு அப்பாவி முஸ்லிம்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கொலை செய்தார்கள். அவர்கள் கர்பிணி பெண்ணை கூட விட்டு வைக்கவில்லை. அவளின் வயிற்றில் உள்ளது ஆணா? பெண்ணா? என்று போட்டி வைத்து, அவளின் வயிற்றை கிழித்து, குழந்தையை வெளியே எடுத்து சுவரின் மேல் வீசியடித்து கொலை செய்தார்கள் அந்த கொடியவர்கள்.

காய்கறி சமைத்து கொண்டிருந்த ஒரு முஸ்லிம் தாயிடம், மாமிசம் கொண்டு வருகிறேன் என்று கூறி தெருவில் விளையாடி கொண்டிருந்த அந்த தாயின் பிள்ளைகளில் இளசாக தேர்வு செய்து, அதனை வெட்டி கூறு போட்டு அந்த தாயிடம் கொடுத்து சமைக்க செய்து தானும் உண்டு, அந்த தாயையும் உண்ணவைத்தார்கள் கொசோவோவில் செர்பிய வெறிபிடித்த கயவர்கள். ஈவு இரக்கமற்ற கொடியவர்கள்.

இதேபோன்று தான் பாகல்பூரில் 1979ல் நடந்த கலவரத்தில் ஒரு கர்பிணி பெண்ணை தண்டவாளத்தில் கிடத்தி வயிற்றில் கல்லால் அடித்தே கொன்றார்கள் இந்த பாசிஸ்ட்டுகள்.

இதையெல்லாம் விட கொடுமை குஜராத்தில் அரங்கேற்றப்பட்டது சாலியா பீவிக்கு. இவரும் ஒரு கர்பிணி பெண். தான் ஈன்றெடுக்க போகும் குழந்தையை நினைத்து பூரிப்பில் இருந்தாள். தன் குழந்தையை அப்படி வளர்க்க வேண்டும், இப்படி வளர்க்க வேண்டும் என்று கற்பனை கோட்டைகளை கட்டி கொண்டிருந்த வேளை, பாசிஸ கயவர்கள் இவளை தர தரவென்று இழுத்து சென்றனர். கத்தினாள், கதறினாள் எந்த பிரயோஜனமும் இல்லை. அவளை காப்பாற்றுவதற்கும் யாருமில்லை. ரத்தவெறி பிடித்த மிருகங்கள், தன் பசியை தீர்த்து கொண்டது. கர்பிணியான சாலியா பீவியின் வயிற்றை கிழித்து, குழந்தையை எடுத்து எரிந்த கொண்டிருக்கும் தீயில் வீசியெறிந்தார்கள். உலகத்தையும், அதிலுள்ள மதவெறியர்களின் மிருகச்செயலையும் கண்டிராத, கேட்டிராத அந்த பச்சிளம் குழந்தை எரிந்து சாம்பலானது. கர்பிணியின் வயிற்றை கிழிக்கவும், அதிலிருந்து குழந்தையை எடுக்கவும், அதனை நெருப்பிட்டு கொளுத்தவும் நிச்சயமாக மனிதர்களால் முடியவே முடியாது. வயிறு பிளக்கப்பட்டு அந்த பெண் துடித்து துடித்து செத்த காட்சி இவர்களின் மனதை கொங்சமும் இளகச்செய்யவில்லை.  இவர்களின் இதயம் கருங்கல்லைவிட கடினமானது என்பதை நிருபித்தார்கள்

பம்பாய் கலவரத்தின் போது ஹிட்லரின் பாணியை கையாண்டது போல இங்கும் கையாளப்பட்டுள்ளது. ஹிட்லரின் நாஜி படை யூதர்களை கொலை செய்தது போல, இவர்கள் முஸ்லிம்களை கொலை செய்து குன்றுகளாக குவித்தனர் என்று ஜரோப்பிய யூனியன், தான் தயாரித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அளவுக்கு இவர்கள் தன் கைவரிசையை காட்டியிருக்கிறார்கள். இந்த அறிக்கையில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உட்பட 15 நாடுகள் கையெழுத்திட்டுள்ளது.

இந்த கலவரத்தில் அதிகமான பாதிப்புக்கு உள்ளானது பெண்களே. எங்கு நோக்கினாலும் முஸ்லிம் பெண்களை  பாசிஸ வெறியர்கள் கும்பல் கும்பலாக கற்பழித்துள்ளனர். கற்பழித்ததோடு மட்டும் இல்லாமல், அவர்களின் மர்ம ஸ்தானத்தை சிதைத்து, தீயிட்டு கொளுத்தி வேடிக்கை பார்த்து ரசித்தனர்.

பங்ச்மகால், பரோடா, ஆனந்த் மற்றும் அகமதாபாத் ஆகிய மாவட்டங்கள் இந்த கலவரத்தில் அதிக பாதிப்புக்குள்ளானது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வார்த்தைகளை கொண்டு, பெண்களே அதிக பாதிப்புக்குள்ளானார்கள் என்றும் பெண்களே கலவரத்தின் முக்கிய இலக்கானார்கள் என்றும் நம்மால் முடிவுக்கு வரமுடிகிறது.

முஸ்லிம் பெண்களிடம் இவர்கள் காட்டுமிராண்டிகளை போல நடந்து கொண்டார்கள். போஸ்னியாவிலும், கோசோவோவிலும்  கொலை வெறி பிடித்து அலைந்த செர்பியர்களையே வெட்கப்பட வைக்கும் விதமாக இவர்கள் நடந்து கொண்டார்கள்.

எங்கெல்லாம் இந்த முஸ்லிம் பெண்கள் கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்யப்படுகிறார்களோ, அவர்களின் அங்கங்கள் துண்டாடப்பட்டு, சிதைக்கப்பட்டு கொல்லப்படுகிறார்களோ, தீயில் கருகி, வெந்து சாகடிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் இந்த முஸ்லிம் பெண்கள் கற்புடன் கொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு எந்த முகாந்திரமுமில்லை. கொல்லப்பட்ட அனைத்து பெண்களும் கற்பழிக்கப்பட்ட பிறகே கொலை செய்யப்பட்டார்கள். இதில் இந்த மதவெறிபிடித்த மிருகங்களுக்கு வயது என்பது ஒரு பொருட்டே அல்ல. 9 வயதிலிருந்து 50 வயது வரை உள்ள பெண்களை கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களையும் கற்பழித்தார்கள். கொன்றார்கள். அந்த அளவுக்கு மதம் பிடித்து திரிந்தார்கள் இந்த மதவெறியர்கள். இவையனைத்தை அந்த பெண்களின் தந்தைமார்களையும், சகோதரர்களையும், கணவன்மார்களையும் சாட்சியாக வைத்தே அரங்கேற்றினார்கள். யார் வாழ்விலும் நடக்க கூடாத சம்பவம் தன் வாழ்வில் நடந்ததை எண்ணி உள்ளம் குமுறினார்கள் இந்த பலகீனமான ஆண்கள்.

இதை விட கொடுமை என்னவென்றால், கற்பழிப்பதையும், எரித்து கொல்வதையும் பாவிகள் அல்லாஹ்வின் ஆலயத்தில் வைத்தே செய்தார்கள். அப்பாவி முஸ்லிம்கள் எதுவும் செய்ய வழி தெரியாது, குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல, இந்த காம வெறியர்களின் கையில் தம் பெண்கள் சிக்கி சின்னாபின்னப்படுவதை கண்டு விக்கி விக்கி அழுதார்கள்.

பாத்திமா பீவி முஹம்மத் யாகூப் ஷேக் என்றொரு பெண். இவர் தன் குடும்பத்தை சேர்ந்த 19 பேரை ரத்த வெறிபிடித்த பாசிஸ பேய்களுக்கு இறையாக்கிவிட்டு பரிதவித்து நின்ற பெண்களில் ஒருவர். நம் குடும்பத்தில் ஒருவர் இறந்து போனாலே நம்மால் தாங்கி கொள்ளமுடியவில்லை. பாவம் இந்த  பாத்திமா பீவி 19 பேரை பறிகொடுத்துவிட்டு படும் வேதனை.

இவர் கூறுகிறார் இந்த பாசிஸ வெறியர்களின் எல்லா காட்டுமிராண்டி தனங்களையும் மன்னித்துவிட முடியும். ஆனால் இவர்கள் நம் பெண்களிடம் நடந்து கொண்ட விதம் மன்னிக்கவே முடியாது என்று கூறுகிறார். அந்த அளவுக்கு நம் பெண்களிடம் மிக கொடூரமாக நடந்துகொண்டார்கள் காட்டுமிராண்டிகள்.

நரோடா பாடியா என்பது இவர் வசித்து கொண்டிருந்த இடத்தின் பெயர். இங்கு தான் 90 முஸ்லிம்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டார்கள். அவர்கள் காவல்துறையினரிடம் தங்களை காப்பாற்றும் படி வேண்டினார்கள், கெங்சினார்கள், கதறினார்கள், உயிர்பிச்சை கேட்டார்கள். இவர்களை பாதுகாக்க வேண்டிய அந்த காவல்துறையினர், காப்பாற்றுவதற்கு பதிலாக அறிவுரை கூறினார்கள். உங்களை காப்பாற்ற முடியாது. நீங்கள் அனைவரும் உங்களை கொலைகார கும்பலிடமே ஒப்படைத்துவிடுங்கள் என்று கூறினார்கள். இதை சொல்வதற்காகவா இவர்கள் நம் வரி பணத்தில் உடம்பை வளர்க்கிறார்கள்? தப்பிப்பதற்கு வேறு வழியில்லாத முஸ்லிம்கள் பாசிஸ்ட்டுகளின் கைகளால் உயிருடன் எரிந்தார்கள்.

அந்த கிராமத்திலிருந்து தப்பித்துகொள்ள பாத்திமா ஷேக் குடும்பத்தினருடன் முயற்சி செய்து கொண்டிருந்த போது, பாசிஸ்ட்டுகளின் கைகளில் அகப்பட்டு கொண்டார்கள் அனைவரும்.

இவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தன்னுடன் கொண்டுவந்த ரூ.20000 பணத்தை எடுத்து கொடுத்து, தங்களை விட்டுவிடும்படி கெங்சினார்  பாத்திமா ஷேக்கின் சகோதரி. அந்த வெறிபிடித்த கூட்டம் அவரிடமிருந்து பணத்தையும் பறித்து கொண்டதோடு மட்டுமல்லாமல், ஒருவர் பின் ஒருவராக அந்த சகோதரியை கற்பழித்தனர். பாவம் அந்த சகோதரி தன்னை விட்டுவிடும்படி கத்தியும், கெங்சியும் எந்த பயனும் இல்லை. அவரை கந்தலாக்கிவிட்டு பின்னர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டார். இதையே  பாத்திமா ஷேக்கின் சகோதரி மகளுக்கும் நடந்தது. நடு ரோட்டில் அவர்கள் அசிங்கப் படுத்தப்பட்டார்கள். இவை அனைத்தையும் தன் கண்ணால் கண்ட இந்த பாத்திமா தன்னுடைய அழுகையை அடக்கமுடியாமல் தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தார்.

மேலும் பாத்திமா கூறுகிறார் தன் சகோதரியும், சகோதரியின் மகளும் மட்டும் இந்த கொடுமைக்கு ஆளாகவில்லை. குறைந்தது 25 பேர் இதேபோல் பாதிக்கப்பட்டார்கள். நடு ரோட்டில் அந்த பெண்கள் முழு நிர்வாணமாக்கபட்டு பாசிஸ வெறியர்களால் கற்பழிக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்கள். வயது முதிர்ந்த பெண்களையும் கூட முழு நிர்வாணப்படுத்தி தீயில் வீசியெறிந்தார்கள். இவர்களெல்லாம் மனிதர்களே அல்ல, காக்கி அரைகால் சட்டை அணிந்த பேய்கள் என்று கூறுகிறார் அந்த பெண்மனி.

எரித்து கொல்லப்பட்ட இந்த முஸ்லிம்களின் சடலங்கள் அனைத்தும் ஒரு கபர்ஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. எரிந்து போன அந்த முஸ்லிம்களின் சடங்களை மனதில் தைரியம் இல்லாதவர்கள் நிச்சயமாக பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு கொடூரம். முஸ்லிம்களை எரித்த கயவர்கள் பாதியிலேயே அணைந்துவிடகூடாது என்பதற்காக அவர்களின் மீது முதலில் பெட்ரோலை, கேஸை ஊற்றி எரித்தார்கள். அதனால் எரிந்த முஸ்லிம்களில் பெரும்பான்மையோரின் உடல் முழுதும் வெந்து போன நிலையிலேயே இறந்திருக்கிறார்கள்.

தீயில் வெந்த முஸ்லிம்களின் உடல் கொங்சம் கொங்சமாக பருத்து, வயிறு வெடித்து குடல்கள் அனைத்து வெளியில் தள்ளி மிகவும் கொடூரமாக காட்சியளித்தது. சில சடலங்கள், முகம் வீங்கி கண்கள் வெளியில் பிதிங்கிய நிலையில் விகாரகமாக காட்சியளித்தது. இன்னும் சில உடல்கள் கறிகட்டையை போல் கருப்பாகவும், சில உடல்கள் சதைகள் வெடித்த நிலையிலும், மாம்படி கொட்டையின் மீது ஈக்கள் கூட்டாக உட்கார்ந்தால் எப்படி காட்சியளிக்குமோ அப்படி தான் முஸ்லிம்கள் ஆக்கப்பட்டிருந்தார்கள். நெங்சு வெடித்து விடும் அளவுக்கு கொடூரங்கள் அங்கே நிறைவேற்றப்பட்டன.

கலவரங்கள் நடந்த அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம் பெண்களே குறிவைக்கப்பட்டார்கள் என்பதை நாம் மறந்துவிட கூடாது. இந்த கோரதான்டவம் ஆடுவதற்காக 15, 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கிராமங்களிலிருந்து மதவெறியர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இந்த கலவரத்தின் போதுதான் முதல் முதலாக இப்படி கொலையாளிகளை ஒரேயடியாக வெளிக்கிராமங்களிலிருந்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறார் பான்சமஹால் என்ற மாவட்ட காவல்துறை துணைக்கண்காணிப்பாளர்.

இப்படி திரட்டப்பட்ட கொலையாளிகள் ஒருவர் அல்ல ஒரு நூறு பேர் அல்ல ஓராயிரம் பேர் அல்ல 12 லட்சம் பேர் இந்த கலவரத்தில் கலந்து கொண்டார்கள். வந்தவர்கள் வெறும் கையுடனும் வரவில்லை. அரிவாள், வீச்சு, சூலம், துப்பாக்கி, கேஸ் சிலிண்டர், பெட்ரோல், வெடிபொருட்கள் இப்படி அனைத்து தயாரிப்புடனும் வந்து காரியத்தை கட்சிதமாக முடித்துவிட்டு சென்றார்கள்.

இவர்களுக்கு அனைத்து பாதுகாப்பும் மத்திய மாநில அரசுகள் கொடுத்தது. கலவரக்காரர்களுக்கு ரூ.500 தின கூலி, உணவு மற்றும் மது. இவர்கள் இறந்தால் 2 லட்சம் பணம். கைதானால் அனைத்து செலவும் விஹிப ஏற்கும். இப்படியாக அவர்கள் முஸ்லிம்கள் மீது பிரகடனப்படுத்தாத ஒரு போரையே தொடுத்தார்கள். எவ்வித தயாரிப்பும் இல்லாத அந்த முஸ்லிம்களுக்கு சாவதை தவிர வேறு வழியில்லாமல் போனது.

தன்னை பெற்றடுத்த பெற்றோர், பாசத்துடன் வளர்த்து வந்த பிள்ளைகள், தன் சகோதர, சகோதரிகள், தன் மனைவி, உற்றார், உறவினர், சொத்து, சுகம் அனைத்து விட்டுவிட்டு நாளை நாம் மரணிக்க போகிறோம் என்று இந்த முஸ்லிம்கள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. கயவர்கள் வந்தார்கள். கையில் கிடைத்ததை சுருட்ழனார்கள். முஸ்லிம்களை துண்டாடி குவியலாக்கினார்கள். கேஸ் அடித்து கொன்றார்கள். சென்றார்கள் அடுத்த வீடுகளை நோக்கி.

இப்படியாக பெற்றோர்களையும், உற்றார்களையும் இடிந்து தவிப்பவர்களில் ஜாவிதும் ஒருவன். இவனுக்கு வயது 11. குடும்பத்தில் உள்ள அனைவரையும் இடிந்து தனிமரமாக நின்று கொண்டிருக்கிறான் இன்று. ஜாவிதின் தந்தையையும், தாயையும் மற்றும் சகோதரியையும் உயிருடன் எரித்து கொன்றார்கள். மேலும் ஜாவிதின் ஒன்று விட்ட அண்ணனையும் கொன்றார்கள். அவரின் மனைவியையும், சகோதரியையும் கற்பழித்து கொன்றார்கள். இன்று இவன் அகமதாபாத்தில் உள்ள ஷா ஆலம் தர்கா அகதிகள் முகாமில் இருக்கிறான். மதவெறி பிடித்த மிருகங்களின் செயல்களை கண்ணால் கண்ட ஜாவித், நடந்ததை மறக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறான். ஜாவிதுக்கு ஆறுதல் கூற இன்று யாருமில்லை. பாசம் காட்டி வந்த பெற்றோர்கள் எரிந்து சாம்பலாகிவிட்டனர். உறவினர் என்று சொல்லி கொள்வதற்கும் யாருமில்லை. அவர்களையும் கொன்று விட்டனர். என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் ஜாவிதின் வாழ்க்கை. இப்படி நூற்று கணக்கான ஜாவித்கள் இன்று குஜராத்தில்.  பாசிஸ்ட்டுகளின் கொலை வெறியாட்டத்தால் நாளை நம் பிள்ளைகளும் ஜாவித் ஆக மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை இந்தியாவில். முஸ்லிம்களை வேரறுப்பதே  பாசிஸ்ட்டுகளின் வாழ்க்கை இலட்சியம். மேலும் மேலும் ஜாவித்கள் உருவாக வழி ஏற்படுத்திக் கொடுக்க மாட்டோம் என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக இருக்கவேண்டும்

முஸ்லிம்கள் இந்த இந்தியாவை 800 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். இந்த காலங்களில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்துக்களின் ஊர்களில் புகுந்து இந்து பெண்களை பலவந்தமாக தூக்கி சென்று கற்பழித்தார்கள் எனவும், முஸ்லிம் ஆட்சியாளர்கள் பெண் பித்தர்கள் என்றெல்லாம் கதைகளை கட்டிவிட்டார்கள். ஒரு கையில் வாளையும், மற்றொரு கையில் தொப்பியையும் வைத்து கொண்டு இந்துக்களை மிரட்டி முஸ்லிம்களாக மாற்றினார்கள் என்று புளுகி திரிகிறது இந்த  பாசிஸ கும்பல். சிறுபான்மை சமுதாயத்தை சேர்;ந்த ஆட்சியாளர்கள் பெரும்பான்மை சமுதாயத்தை 800 ஆண்டுகள் இவ்வளவு கொடுமைபடுத்தி கொண்டு தொடர்ந்து எப்படி ஆட்சி செய்ய முடியும்? இதையெல்லாம் கவலைபடாமல் இவர்கள் தங்களின் பொய்யை திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்கள்.  முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்து பெண்களை கற்பழித்தார்கள் என்பதால் தான் இவர்கள் இன்று கற்பழிக்கிறார்களாம். இவர்களின் கொடுங்செயல்களுக்கு இப்படி நியாயம் கற்பிக்கிறார்கள்.

முஸ்லிம் ஆட்சியாளர்கள் இவர்களை போல ஈனர்களாக எப்பொழுதும் நடந்து கொண்டதே இல்லை. ஆனால் மொகலாயர்களின் ஆட்சிக்கு பின் வந்த இந்து ஆட்சியாளர்கள் ரத்த வெறி பிடித்தவர்களாக தான் ஆட்சி செய்தார்கள். முஸ்லிம்களின் கிராமங்களுக்குள் புகுந்து முஸ்லிம் பெண்களை தூக்கி சென்றார்கள். வீடுகளை எரித்தார்கள். பெண்கள் என்றும், குழந்தை என்றும் பாராமல் வெட்டி வீசினார்கள், தீயிட்டு பொசுக்கினார்கள், அந்த ரத்த கரை படிந்த வரலாற்றுக்கு சொந்தக்காரார்கள்.

அந்த மன்னர்களின் சகாக்களான இவர்களும் அவர்களையே பின்பற்றுகிறார்கள் முஸ்லிம்களை அழிப்பதில்.

குஜராத்தில் ஒரு பகுதியான ரந்திக்பூரில் பல்கீஸ் யாகூப் படேல் என்றொரு பெண். மிகவும் மோசமாக பாதிக்கபட்டவர்களில் ஒருவர். இவருக்கு நடந்ததை கேட்டால் கண்களிலிருந்து ரத்தகண்ணீர் வடிக்காதவர் எவரும் இருக்கமாட்டார். ஐந்து மாத கர்பிணியான இவருக்கு 20 வயது. மரணத்தின் வாயிலுக்குள் தலையை விட்டு மீண்டு வந்தவர்.

முஸ்லிம்களை கொலை செய்ய வந்தவர்களுக்கு, ஆணென்ன, பெண்ணென்ன, குழந்தை என்ன, கர்ப்பிணி என்றால் இவர்களுக்கு என்ன? முஸ்லிமாக பிறந்தால் இந்த நாட்டில் வாழ உரிமையில்லை. மண்ணுக்குள்ளோ அல்லது பூமிக்கு மேலோ ஏதோ ஒரு இடத்தில் வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியது தான்.

பல்கீஸை கொல்ல வந்த 3 பேரும் அவள் 5 மாத கர்ப்பிணியா? நிறைமாத கர்ப்பிணி என்றெல்லாம் அலட்டி கொள்ளவில்லை. வந்தார்கள். பல்கீஸை நிர்வாணப்படுத்தினார்கள். தானும் நிர்வாணமானார்கள். அவளை கற்பழித்ததோடு மட்டுமல்லாமல் கடுமையாக அடித்தார்கள். இவர்கள் மூவரும் பல்கீஸின் சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள்.

பல்கீஸை போல அவளின் உறவினரும், இந்தியாவில் பிறந்ததற்காக இதே பரிசை பெற்றனர். அவர்களில் பல்கீஸின் சகோதரி சமீம், ஆமினா ஆதம், ஹலிமா, முன்னிபென் அப்துல் மற்றும் மதீனா ஆகியோரும்  பாசிஸ வெறியர்களால் கற்பழிக்கபட்டு கொல்லப்பட்டனர். இவர்கள் 9 வயதே ஆன முன்னிபென் அப்துலையும் விட்டு வைக்கவில்லை. 45 வயதான ஹலிமாவையும் விட்டுவைக்கவில்லை. அவர்களையும் கற்பழித்தே கொன்றனர். பாசிஸ்ட்டுகளுக்கு வயதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. காட்டு மிருகங்களே பார்த்து வெட்கப்படும் அளவுக்கு இவர்கள் காட்டுமிராண்டிகள் போல நடந்து கொண்டார்கள்.

இதெல்லாவற்றையும் விட வேதனையையும், ஆத்திரத்தையும் தூண்டும் ஒரு சம்பவம் ஒன்று நடந்தது. பல்கீஸின் சகோதரி சமீம் குழந்தை ஈன்றெடுத்து இரண்டு நாள் தான் ஆகிறது. பாசிஸ கும்பலிடமிருந்து தப்பி பிழைக்க அந்த குழந்தையும் தூக்கி கொண்டு ஓடும் போது, நெங்சில் ஈரம் இல்லாதவர்கள் அவளை வழி மறித்து இரண்டு நாளே ஆன அந்த குழந்தையை எரிந்து கொண்டிருந்த தீயில் வீசியெறிந்தனர். தன் பச்சிளம் குழந்தை சூடு தாங்க முடியாமல் கதறியதை கண்டு, பாவம் சமீம் துடியாய் துடித்தாள். கதறி அழுதாள். இரக்கமில்லாத  பாசிஸ வெறியர்கள் இத்துடன் விடவில்லை. குழந்தை பெற்று இரண்டு நாளே ஆன அவளை தொடர்ந்து கற்பழித்ததோடு மட்டுமல்லாமல் கடுமையாக சித்ரவதை செய்து கொன்றேவிட்டார்கள் ஈனர்கள்.

அங்கே ஒவ்வொரு பெண்ணுக்கும் இதுவே நடந்தது. கொலை வெறிபிடித்த கயவர்கள் தன் ரத்தபசியை தீர்த்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள். பல்கீஸ் மயங்கி கிடப்பதை இவர்கள் கவனிக்கவில்லை. அவளும் இறந்து விட்டதாக எண்ணி கிளம்பிவிட்டார்கள். தனக்கு சுய நினைவு வந்தபோது தான் தெரிந்தது நிர்வாணமாக நடு ரோட்டில் நாம் கிடக்கிறோம் என்று. நம் சகோதரிக்கு இதுபோல் நடந்தால், நடு ரோட்டில் ஆடையில்லாமல் கிடந்தால், ‘நம் சமுதாயத்தில் ஒற்றுமையில்லையே’ என்று ஒற்றுமையை பற்றி கவலைபடமாட்டோம். ‘முஸ்லிம்களிடம் ஈமான் இல்லை. இருந்தால் இப்படி நடக்காது’ என்று வியாக்யானம் பேச மாட்டோம். இதை செய்தவனின் குடலை உறுவ கிளம்பியிருப்போம். பல்கீஸ் நம் சகோதரி இல்லையா? சிந்திக்க வேண்டாமா?

கணவனை இழந்து, இரண்டு வயது பிள்ளையை இழந்து, மானத்தை இழந்து, அவமானப்பட்டு கூனி குருகி போய் இருக்கும் பல்கீஸ்க்கு கண்ணீரும், வயிற்றில் வளரும் குழந்தையுமே ஆறுதல்.

பல்கீஸை கற்பழித்து அவமானப்படுத்திய இந்து வெறியர்கள் வேறு யாருமில்லை. அக்கம் பக்கத்து வீட்டு இந்துக்கள். சகோதர வாங்சையுடன் பழகிவந்தவர்கள். அவர்களுகென்று ஒரு நேரம் குறிப்பிடப்படும் போது, தன் புத்தியை காட்டிவிடுகிறார்கள். இப்படி எத்தனையோ சம்பவங்கள் இந்தியா முழுதும் நடந்திருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால்,“முஸ்லிம்களிடம் அன்யோன்யமாக பழகி அவர்களின் கழுத்தை அறுங்கள்” என்ற ஆர்எஸ்எஸின் மறைமுக செயல்திட்டமே விடையாக வந்து நிற்கிறது. பல்கீஸை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களில் 23 வெறியர்களை பெயர் சொல்லி குறிப்பிடுகிறார். இவரிவர்கள் தான் அந்த வெறியர்கள் என்று. அவர்களில் கோவிந்த் நாய், நரேஷ் மோரியா மற்றும் ஜஷ்வந்த நாய் இவர்களுக்கு எதிராக போலீஸில் புகார் செய்திருக்கிறார் பல்கீஸ். கேஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சங்பரிவாரின் இந்த கொடிய செயலை ரீனு கன்னா என்ற சமுதாய ஆர்வலர் இப்படி கூறுகிறார். கலவரத்தில் பங்கெடுத்து கொண்ட சங்பரிவாரத்தினர் குறிப்பாக விஹிபவினர் முஸ்லிம் பெண்களை கொடூரமாக கற்பழிப்பதையே தங்களின் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் மனோரீதியான ஆழமான காயத்தை ஏற்படுத்துகின்றார்கள்.

குஜராத்தை சேர்ந்த ஆறு பெண்களை கொண்ட ஒரு குழு கலவரத்தை பற்றிய ஓர் ஆய்வறிக்கை தயார் செய்தது. அந்த அறிக்கையின் தலைப்பு “குஜராத் இனபடுகொலை எப்படி சிறுபான்மையினரை பாதித்துள்ளது: எங்சியவர்கள் பேசுகிறார்கள்” என்பதாகும்.

இந்த அறிக்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. மதவெறியர்களின் மிருகத்தனமான பாலியல் பலாத்காரத்தில் முஸ்லிம் பெண்கள் அடைந்த வேதனையும், பாதிப்பையும் எடுத்துரைக்கபட்டுள்ளது.

பெரும்பாலான பெண்கள் கற்பழிக்கப்பட்டு பின்னர் உயிருடன் எரித்து கொள்ளப்பட்டார்கள் என்று மாலினி கோஷ் என்ற அறுவர் குழுவின் உறுப்பினர் ஏப்ரல் 18, 2002 அன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியிருக்கிறார். மேலும் சில சம்பவங்களையும் தொகுத்து உலகுக்கு அறிவிக்கிறார்கள்.

சாய்ரா பானு என்ற ஒரு பெண். அஹமதாபாத் அகதிகள் முகாமில் இருக்கிறார். இவர் சம்பவங்களை நேரில் கண்ட சாட்சிகளில் ஒருவர். இவர் இப்படி கூறுவதாக அறிக்கை தெரிவிக்கிறது. மதவெறி கும்பல் ஒன்று சாய்ராவின் உறவு பெண்ணான நிறைமாத கர்பிணி பெண்ணின் வயிற்றை தான் கொண்டு வந்த ஆயுதங்களினால் பிளந்தது. இன்னும் சிறிது காலத்தில் ரத்தகரை படிந்த இந்த உலகை பார்க்க வர இருக்கும் அந்த குழந்தை அமைதியான உறக்கத்தில் இருந்தது. கல் நெங்சம் கொண்ட கயவர்கள் அந்த சிசுவை கூரிய கத்தியால் குத்தி வயிற்றிலிருந்து வெளியே எடுத்தனர். பின்னர் எரிந்து கொண்டிருந்த தீயில் வீசியெறிந்தனர். ஆரவாரம் இல்லாமல் அந்த சிசு எரிந்து மறைந்து போனது.

மதினா முஸ்தபா ஷேக் என்றொரு அகதி பெண், பாசமாக வளர்த்து வந்த தன் மகளை பாசிஸ வெறியர்களுக்கு இறையாக்கிவிட்டு இங்கு தங்சம் புகுந்தார். 500க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து தப்பித்து ஒரு சோளக்காட்டில் குடும்பத்துடன் ஒளிந்து கொண்டிருந்த போது, அந்த அலறல் சப்தம் வானை பிளந்தது. திடுக்கிட்ட மதினா அந்த அலறலுக்கு சொந்தகாரர் தன் மகள் என்றும் பயங்கரவாத மிருகங்கள் தன் மகளை கற்பழித்து கொண்டிருக்கின்றன என்றும் புரிந்து கொண்டார். பாவம் மதினாவின் மகள் அந்த மிருகங்களிடம் சிக்கி சக்கையானாள். வேதனை தாங்க முடியாமல் அலறினால். தன்னை விட்டுவிடும் படி கெங்சினாள் அந்த வெறியர்களிடம். மிருகங்களுக்கு மனித பாஷை புரியாது என்பது அவளுக்கு தெரியவில்லை. சித்ரவரை படுத்தப்படும் தன் மகளை காக்க முடியாமல் தவியாய் தவித்தார் மதினா.  இன்னும் வயதிற்கே வராத பூ போன்ற என் மகளை, இரக்கமற்ற கொடியவர்கள் சின்னாபின்னமாக்கி விட்டனர் என்று கூறி கதறி அழுகிறார் மதினா. மதினாவிற்கு நாம் எப்படி ஆறுதல் சொல்வது? ஆறுதல் கூற மட்டும் தான் நம்மால் முடியுமா? வெட்டு பட்ட காயத்திற்கு மருந்திட மட்டும் தான் சகோதரனா? வருமுன் காப்பது நம் கடமையில்லையா? 

இந்த அறிக்கை மேலும் கூறுகிறது: அஹமதாபாத் அகதிகள் முகாமிற்கு வரும் பெண்களில் பெரும்பாலோர் நிர்வாணப்படுத்தப்பட்டு அதே நிலையிலேயே வந்து சேர்கிறார்கள் என்று முகாமில் வேலை செய்யும் தன்னார்வ தொண்டர்கள் கூறுவதாக தெரிவிக்கிறது.

அகதிகள் முகாமிற்கு ஒரு பெண் மயக்கமுற்றவராக தூக்கி வரப்பட்டார். அவர் உடம்பிலிருந்து அதிகமான ரத்தம் வெளியாகியிருந்தது. உடல் முழுவதும் நக கீரல்களும், காயங்களும் அதிகமாக காணப்பட்டன. மேலும் மர்ம உறுப்பில் செலுத்தப்பட்டிருந்த கட்டையை அகற்றிவிட்டு அவருக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டது.

குஜராத்தில் எத்தனையோ முறை கலவரம் நடந்திருக்கிறது. ஆனால் இந்த கலவரம் வரலாறு காணாத அளவுக்கு மிக கொடூரமானது. இதில் அதிகமாக பெண்களே இலக்காகியுள்ளனர் என்று அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

இந்த சங்பரிவார மிருகங்களால் கற்பழிக்கப்பட்ட பெண்கள் ஒருவரல்ல, இருவரல்ல 2000த்திற்கும் மேல். இதில் பாதிக்கும் மேல் எரித்து கொல்லப்பட்டுவிட்டார்கள். மீதமுள்ள பெண்கள்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கருவுற்று இருக்கிறார்கள். இவர்களெல்லாம் இன்று அகதிகள் முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திரும்பவும் தன் வீட்டிற்கு போக வழியில்லாமல் பயந்து போயிருக்கிறார்கள். தன் கற்பை இழந்து, மானத்தை இழந்து உயிர் இருந்தும் கூடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் எதிர்காலமே இருளாகி போனது. இவர்களின் கனவுகள் தீயிட்டு பொசுக்கப்பட்டு விட்டது. இனி இவர்கள் தலை நிமிர்ந்து வாழ முடியாதவர்களாக இருக்கிறார்கள். இந்திய முஸ்லிம்களை அழிப்பதற்கு சங்பரிவார் குஜராத்தை ஒரு சோதனை களமாகவே ஆக்கியுள்ளது. 25ந்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் முஸ்லிம்களை துடைத்தெறிந்து விட்டார்கள்.

இதையே மற்ற இடங்களிலும் இனி செயல்படுத்த இருக்கிறார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிவார்களா? இல்லை, பாலஸ்தீன முஸ்லிம்களிடம், ‘பாலஸ்தீனை யூதர்கள் ஆக்கிரமிக்க திட்டம் போடுகிறார்கள். விழிப்புடன் இருங்கள்’ என்று சொல்லப்பட்ட போது அவர்கள் அலட்சியமாய் இருந்தார்களே அதேபோல் இருக்க போகிறார்களா? இல்லை, தன்னையும், தன் பெண்களையும், பிள்ளைகளையும் காத்து கொள்ள நடவடிக்கை எடுக்கபோகிறார்களா? அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

குழந்தைகளும், சிறுவர்களும்
முஸ்லிம்களாக பிறந்தார்கள் என்ற ஒரே காரணத்தினால், இந்தியாவில் வாழும் உரிமையை கொங்சம் கொங்சமாக இழந்து வருகிறார்கள் முஸ்லிம்கள்.  பாசிஸ்ட்டுகளின் கைகளால் மிக கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். ஒரு முஸ்லிம் இறந்து போகும் போது கூட ஆறடி நிலத்தை அபகரித்து கொள்கிறான் என்று சொல்லி தீயிட்டு கொளுத்தி கொல்கிறார்கள். இதனையும் நடுரோட்டிலும், நாலு பேர் பார்க்கும் விதத்திலும் செய்கிறார்கள். இதனால் முஸ்லிம்களின் மனதில் பீதியை ஏற்படுத்திகிறார்கள். இந்த கொடூரங்களுக்கு தான் ஆளாகிவிட கூடாது என்று முஸ்லிம்கள் தன்னை இந்துக்களாக மதம் மாற்றி கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறது இந்த மத வெறிபிடித்த, இந்து பிற்போக்குவாத கூட்டம். ஆனால் இவர்களுக்கு தெரிவதில்லை தன் அடாவடி தனங்களால், ரௌடி தனங்களால் ஒரே ஒரு குழந்தையை கூட மதம் மாற்ற முடியவில்லை, பச்சிளம் குழந்தை கூட தான் இந்துவாக மதம் மாற தயாராக இல்லை என்று. இருந்தும் இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான போரை தொடர்ந்து எவ்வித தொய்வுமின்றி நூறு ஆண்டுகளுக்கு மேலாக தொடுத்து கொண்டே இருக்கிறார்கள். முஸ்லிம்களும் கசாபுக்கடைகாரன் கத்திக்கு பலியாகும் ஆட்டை போல செத்து கொண்டே இருக்கிறார்கள்.

குஜராத் இனசுத்திகரிப்பில் முதல் இலக்கு பெண்களே என்பதை இதற்கு முன் கண்டோம். அடுத்து பாசிஸ்ட்டுகளின் இலக்கானது முஸ்லிம் குழந்தைகளும், பள்ளி மாணவர்களும் தான்.

இன்றைய குழந்தைகள் நாளைய இளைஞர்கள். இளைஞர்கள் வருங்காலத்தின் தூண்கள். இந்த தூண்கள் ஆட்டம் கண்டால், அவை சார்ந்த சமுதாயமும் ஆட்டம் கண்டுவிடும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.  இந்த தூண்களை இல்லை என்றாக்கிவிட்டால், அந்த சமுதாயத்தை முட்டு கொடுத்து தூக்கிவிட யார் வருவார்? படுத்துவிட்ட அந்த சமுதாயம் நாளடைவில் இல்லை என்றாகிவிடும்.

இது தான் ஸ்பெயினை 780 ஆண்டுகள் ஆண்டு கொண்டிருந்த முஸ்லிம்களுக்கும் நடந்தது. தற்போதுள்ள முஸ்லிம்களுக்கும் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் சமுதாயம் இளைஞர்களை அதிகமாக கொண்ட சமுதாயமாக இருக்கும். இளைஞர்கள் எதையும் சாதிக்க வல்லமை பெற்றவர்கள். புதுமையை விரும்புகிறவர்கள். வீழ்ந்து விட்ட முஸ்லிம்களின் உலக தலைமையை முட்டு கொடுத்து தூக்கி நிறுத்தி நிலைபடுத்திடும் அபார ஆற்றல் அவர்களிடம் அதிகமாக இருக்கும். மீண்டும் முஸ்லிம்கள் உலகை ஆள்வார்கள். இதற்காக பின்புலமாக இருக்கபோவது அந்த சமுதாயத்தின் இளைஞர்களே என்று மேலைநாட்டவர்கள் தன் ஆராய்ச்சியின் முடிவாக தெரிவித்துள்ளார்கள்.

இதனால் முஸ்லிம் சமுதாயத்தின் பின்புலமாக இருக்கும் இளைஞர்களையும், குழந்தைகளையும் அழித்துவிட்டால் முஸ்லிம்களை தலையெடுக்காமல் செய்திடலாம் என்ற எதிர்பார்ப்போடு, முஸ்லிம் இளைஞர்களையும், சிறுவர்களையும், குழந்தைகளையும் குறிவைத்து கொல்கிறார்கள் உலகம் முழுதும். இதற்கு பாலஸ்தீன், ஈராக், செசன்யா மற்றும் ஆப்கன் போன்ற நாடுகளே சாட்சி.

இதே முறையை பின்பற்றி  பாசிஸ்ட்டுகளும் இந்தியாவில் முஸ்லிம் இளைஞர்களையும், சிறுவர்களையும், குழந்தைகளையும் குறிவைத்து கொல்கிறார்கள்.  மட்டுமல்ல கருவில் வளரும் குழந்தையை கூட விட்டுவைக்கவில்லை. தாயின் வயிற்றை கிழித்து குழந்தையை கத்தியால் குத்தி கொல்கிறார்கள். கருவில் இருக்கும் குழந்தையையும் கொல்கிறீர்களே அது என்ன பாவம் செய்தது என்று கேட்டதற்கு, ‘அது வளர்ந்து பெரிதானாலும் நாங்கள் தானே கொல்லவேண்டும்’ என்று ஆணவத்துடன் கூறுகிறார்கள்.

முஸ்லிம் மாணவர்களை கொல்வதற்காக மாணவர்கள் பற்றிய தகவல்களும் அவர்கள் பயிலும் பள்ளிகளிலிருந்தும், கல்லுஸரிகளிலிருந்தும் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்டன. இந்த அடிப்படையில் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவர்களை சரியாக குறிவைத்துக் கொலை செய்தார்கள்.

முஸ்லிம் சிறுவர்களையும், சிறுமிகளையும் கூட துண்டாடினார்கள். பின்னர் அவர்களை எல்லாம் ஒன்றாக குவித்து தீயிட்டு கொளுத்தி ரசித்தார்கள்.

கலந்தரி பள்ளிவாசலுக்கு கொண்டுவரப்பட்ட 21 முஸ்லிம் சிறுவர்களும், சிறுமிகளும் சங்பரிவார கும்பலால் இரக்கமே இல்லாமல் எரித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் உடல்கள் அடக்கம் செய்வதற்காக அங்கு கொண்டு வரப்பட்டன கரிகட்டைகளாக.

இது ஒரே ஒரு சம்பவம் தான். இதுபோல எண்ணற்ற சம்பவங்கள் நடந்தன. வீடு வீடாக சென்று முஸ்லிம்களை கொளுத்தும் போது அங்கே குழந்தைகளும் சாம்பலானார்கள் பெரியவர்களுடன் சேர்ந்து. நூற்றுக்கணக்கான சிறுவர்களும், சிறுமிகளும் கை கால்களை இழந்து ஊனமானார்கள். குழந்தைகள் எல்லாம் போதிய மருத்துவ சகிச்சை இல்லாமல் அகதிகள் முகாமில் அவதிபட்டு கொண்டிருக்கிறார்கள்.

சிறுவன் ஒருவன் உடல் முழுவதும் எரிந்து போய்விட்ட நிலையில் உயிருடன் சித்ரவதை அனுபவித்து கொண்டிருக்கிறான். உடலின் எந்த பகுதியும் விட்டுவைக்கவில்லை அந்த தீ. கால்கள் துணியால் சுத்தப்பட்டிருக்கிறது. மேனியில் ஏற்பட்ட தீ புண்களால் எரிச்சல் தாங்காமல் அவதிபடுகிறான். பெற்றவர்கள் தன் மகன் படும் வேதனை பொறுக்க முடியாமல் பக்கத்தில் அமர்ந்து கொண்டு விசிறி வீசிக்கொண்டே இருக்கிறார்கள்.

எரியூட்டப்பட்ட அந்த சிறுவனின் உடலில் ஏற்பட்ட தழும்புகள் அவன் இறக்கும் வரை மறைய போவதில்லை. அந்த தழும்புகள்  பாசிஸ வெறியர்களின் இரக்கமற்ற கொடுஙசெயலை நினைவுபடுத்தி கொண்டே இருக்கும்.

நாட்டுக்கு சேவை செய்பவர்கள்

 ஜமால்தீன்கான் இந்திய ராணுத்தில் 9 ஆண்டுகளாக பணிபுரியும் சிப்பாய். தன் தங்கைக்கு திருமண ஏற்பாடு செய்ய ஒன்றரை மாத விடுப்பில் பம்பாய் வந்திருந்தார். ஜன. 12, 1993 அன்று நள்ளிரவு 300க்கும் மேற்பட்ட கும்பலொன்று அவரது வீட்டைத் தாக்கியது. கதவை உடைக்க முடியாமல் மேல் கூரை வழியாக வீட்டிற்குள் நுழைந்து தனியாக இருந்த அவரை நைய்ய புடைத்தது. நான் ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய் என்று கூறியும் எந்த பயனும் இல்லை. ராணுவத்தில் எடுத்து கொண்ட பயிற்சியும் எந்த பலனையும் அளிக்கவில்லை. தங்கைக்காக சேகரித்து வைத்திருந்த நகைகள், டிவி, வீடியோ போன்றவைகளை திருடி கொண்டு வீட்டிற்கு தீவைத்தது அந்த மதவெறி கும்பல். ஜமால் உயிர் தப்பி ஓடினார்.

நாம் மேலே குறிப்பிட்டது பம்பாய் கலவரத்தின் போது ஒரு ராணுவ வீரருக்கு ஏற்பட்ட அவலம். இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் ஏராளம் நடந்துள்ளதை நாம் நன்றாக அறிவோம். கொலை வெறிபிடித்த இந்து தீவிரவாதிகளுக்கு சாதாரண முஸ்லிம் என்றும், அரசியல்வாதி முஸ்லிம் என்றும், அதிகாரி முஸ்லிம் என்றும் தரம் பிரித்து பார்த்து பழக்கமில்லை. அவர்களுக்கு இடப்பட்ட கட்டளையெல்லாம் முஸ்லிம் பெயரை வைத்திருந்திருந்தாலே அவன் கொல்லப்பட வேண்டியவன் என்று. அதனால் தான் இவர்கள் எவ்வித பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு முஸ்லிம்களையும் கொலை செய்கிறார்கள்.

H.M. காதிரி என்ற ஒரு முஸ்லிம் நீதிபதி. குஜராத் நீதிமன்றத்தில் இப்போதும் நீதிபதி என்பது குறிப்பிடதக்கது. இவரது குடும்பத்தில் இவர் மட்டும் தான் ஆண் மகன். இவர் அரசு தந்த பங்களாவில் தான் குடியிருந்தார்.

இவர் வீட்டை நோக்கி மதவெறியர்கள் வந்து கொண்டிருப்பதை பார்த்த காதிரி தொலைபேசியை சுழற்றினார். கொலை செய்ய ஆட்களை அனுப்பி கொண்ழருந்த அரசாங்கத்திடமே உதவி தேடினார். பயனில்லை. தனது வயதான தாயாரை தோளோடு தூக்கிக் கொண்டு ஓடிவிட்டார். உயிர் பிழைத்து கொண்டார்.

இன்னொரு நீதிபதி N.T. வீச்சா. இவர் இப்போது உச்ச நீதிமன்றம் அமைத்த ஒரு விசாரணை கமிஷனின் தலைவர். இவர் வாழ்ந்து கொண்டிருந்த பால்டா பகுதியிலிருந்து தன் உயிரை காத்து கொள்ள ஓடினார். இவரும் அரசாங்கம் அளித்திருந்த பங்களாவில் வாழ்ந்து கொண்டிருந்தவர் தான். திரும்ப வந்து பார்த்த போது அத்தனையும் சாம்பல்.

அதே போல் உயர்நிலை காவல்துறை முஸ்லிம் அதிகாரி ஒருவருக்கும் நடந்தது. அவரது பெயர் அலீ செய்யீத். Inspector General of Police ஆக பணிபுரிந்து வந்தார் விசுவாசமாக. பணிமுடிந்து வீடு திரும்பி கொண்டிருக்கும் போது, ஒரு கும்பல் வழிமறித்து பெயரை கேட்டது. முஸ்லிம் பெயர் என்றதும் தாக்க தொடங்கினர். அதிஷ்டவசமாக உயிர் தப்பினார் அலீ செய்யீத். இது போல் ஷமீயுல்லாஹ் அன்சாரி என்ற Deputy Police Commissioner க்கும் நடந்தது. அவரும் உயிர் தப்பினார்.

நாம் மேலே குறிப்பிட்டவர்கள் எல்லோரையும் விட சிறந்தவர் ஒரு ராணுவவீரர். 17 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு அகமதாபாத்திற்கு 60 கிமீ அருகில் உள்ள அம்பசனா என்ற கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன் தான் குடியமர்ந்தார். இந்த கிராமத்தில் பெரும்பான்மையாக இந்துக்கள் வாழ்கின்றனர். ஓரிரு முஸ்லிம் குடும்பங்களே உள்ளது.

சங்பரிவார வெறியாட்டம் நம் கிராமத்தை தொடாது என்று நிம்மதியாக உறங்கி கொண்டிருந்து போது, பேய் கூச்சல் போட்டு கொண்டு அனைத்து வீடுகளையும் தாண்டி அந்த ராணுவவீரரின் வீட்டை அடைந்தது. வீட்டை பூட்டி கதவை தாழிட்டு மேற்கூறையின் வழியாகவும், ஜன்னலின் வழியாகவும் பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்தது அந்த வெறிகும்பல்.

பற்றி எரிந்த வீட்டிற்குள் மரண ஓலத்தை எழுப்புவதை தவிர வேறு எதையும் அவர்களால் செய்ய முடியவில்லை. 5 நிமிடத்தில் அதுவும் ஓய்ந்தது. அனைவரும் கரிகட்டைகளாகி போனார்கள்.

இந்திய நாட்டை காக்க எல்லையில் போராடி எதிரிகளை விரட்டியடித்த தன்னால் தன் குடும்பத்தினரை காக்க முடியாமல் போனதை நினைத்து நோவதை தவிர வேறு எதுவும் அந்த ராணுவவீரருக்கு தெரியவில்லை. அந்த குடும்பத்தில் 6 பேர் எரித்து கொல்லப்பட்டுவிட்டனர். 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பிரதம மந்திரியானாலும், தேசிய தந்தையானாலும் அவர் முஸ்லிம் என்றால் அவருக்கு இந்தியாவில் கிடைக்கும் ஒரே பரிசு மரணம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிருபிக்கிறது. உணருமா சமூகம்?

பள்ளி ஆசிரியர் ஆனாலும் பரிசு ஒன்று தான் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. நஜீர் என்ற 50 வயது மதிக்கதக்க பள்ளி ஆசிரியர். இவர் அகமதாபாத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜவான் நகரை சேர்ந்தவர்;. இனப்படுகொலை உக்கிரமடைந்து கொண்டிருந்த வேளையில் தன் வீட்டு மேற்கூறையில் உள்ள குளியலறையில் தன்னை மறைத்து கொண்டு பாதுகாத்து கொண்டவர். தற்போது சொந்தநாட்டில், சொந்தபந்தங்கள் இருந்தும் அகதிகளான லட்சத்திற்கு மேற்பட்ட அகதிகளுடன் தன்னையும் இணைத்து கொண்டார்;.

இவர் கூறுகையில், ‘நான் பாடம் படித்து கொடுத்த அக்கம் பக்கத்து வீட்டு இந்து மாணவர்கள் எல்லாம் எங்கள் பெண்களை கற்பழித்து கொலை செய்வதை பார்த்த நான், எப்படி வீட்டிற்கு திரும்பவும் செல்வது? (என்ன பாதுகாப்பு இருக்கிறது எங்களுக்கு?) என்று கேட்கிறார்.

பிரதம மந்திரியானாலும், தேசிய தந்தையானாலும் அவர் முஸ்லிம் என்றால் அவருக்கு இந்தியாவில் கிடைக்கும் ஒரே பரிசு மரணம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிருபிக்கிறது. உணருமா சமூகம்?

இதையெல்லாம் விட கொடூரம் ஒன்று நடந்தது இஹ்ஸான் ஜாப்ரி என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு. இவர் ஒரு கவிஞர். சிறந்த சமுதாய சேவகர். இவருடைய வீடு குல்பர்க் மார்க் என்ற இடத்தில் உள்ளது. சுங்பரிவாரத்தினர் முஸ்லிம் வீடுகளை தேடி தேடி முஸ்லிம்களை கொலை செய்து வந்ததையடுத்து முஸ்லிம்கள் அனைவரும் இந்த முன்னாள் எம்பி வீட்டில் தங்சம் புகுந்தனர். இனி நாம் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர் முஸ்லிம்கள்.

சற்று நேரம் கழித்து மதவெறியர்கள் ஜாப்ரியின் வீட்டை சூழ்ந்து கொண்டனர். ஜாப்ரி தனக்கு தெரிந்த அதிகாரிகளுக்கும், நண்பர்களுக்கும் போன் செய்து உதவிடும்படி கெங்சினார். உயிர் பிச்சை கேட்டார். எந்த பயனும் இல்லை.

தனது கைத்துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி சுட்டார். ரத்ததாகம் எடுத்த கொலைக்கங்சாத கொடியவர்கள் கதவை உடைத்துகொண்டு உள்ளே வந்தனர். ஜா ப்ரியை இழுத்து, அடித்து, அவரது மண்டையை உடைத்து, மூளையை வெளியே எடுத்து வீசினர். பின்னர் தீயிட்டு கொளுத்தினர்.

இதனை பார்த்து பயந்து போயிருந்த ஜா ப்ரியின் மகளையும், மருமகளையும் இழுத்து கற்பழித்தனர். எரித்தனர். மேலும் வீட்டில் இருந்தவர்களை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு சென்றுவிட்டனர். முஸ்லிம்கள் அனைவரும் எரிந்து செத்து மடிந்தனர்.

பிரதம மந்திரியானாலும், தேசிய தந்தையானாலும் அவர் முஸ்லிம் என்றால் அவருக்கு இந்தியாவில் கிடைக்கும் ஒரே பரிசு மரணம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிருபிக்கிறது. உணருமா சமூகம்?

நாம் மேலே குறிபிட்ட அனைவரும் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள். மேல் தட்டு மக்கள். பாசிஸ வெறிக்கு இவர்களும் விதிவிலக்கல்ல. இவர்கள் உதாரணத்திற்காக எடுத்துகாட்டப்பட்டவர்கள். இன்னும் எத்தனையோ எத்தனையோ மேட்டுகுடி மக்களெல்லாம் இன்று நம்முடன் இல்லை. புகையாகி காற்றுடன் கலந்துவிட்டனர்.

பாசிஸத்தின் திட்டத்தை உணராத இதுபோன்ற மேட்டுகுடி மக்கள், எப்பொழுதெல்லாம் முஸ்லீம்கள் இந்தியாவில் பாசிஸ தீயில் கருகுகிறார்களோ அப்பொழுதெல்லாம், முஸ்லீம்கள் தானாக தருவித்து கொண்டவைதான் இதெல்லாம் என்று பாசிஸத்திற்கு சாதகமாக பேசியே தன்னை காத்துகொள்பவர்கள்.

தன் மகன் சரிவர படிக்காமல் ஊதாரியாக திரிகின்றான். அவன் படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று நினைக்கிறார் தந்தை. ஆனால் தந்தை எதிர்பார்ப்புக்கு நேர் மாற்றமாகவே மகன் நடந்து கொள்கிறான் படிப்பு விஷயத்தில். அதனால் தந்தையின் வெறுப்புக்கு ஆளாகின்றான். ஒரு விஷயத்தில் பலகீனமாகிவிட்ட மகனை எதற்கும் உதவாத உதவாகரை என்றே தந்தை முடிவெடுத்து விடுகிறார். அதனால் எந்த நன்மையான காரியங்கள் செய்தாலும், மக்களுக்கு பயனுள்ளவைகளை செய்தாலும் அவனுக்கு எந்த அங்கீகாரமும் கிடைப்பதில்லை தந்தையிடத்தில். மகனை பற்றி எதாவது அவதூறுகள் சொல்லப்பட்டால், அதனை முழுமையாக நம்புகிறார் தந்தை. மகன் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகின்றான். அடுத்தவர் எதை சொன்னாலும் நம்பும் தந்தை, மகன் மீது எள்ளளவும் நம்பிக்கை வைப்பதில்லை.

அதேபோல் தான் இந்த மேல் தட்டு மக்கள். மெத்தபடித்தவர்கள். இவர்கள் தங்களுடைய சமுதாயம் படிப்பறிவு இல்லாத ஒரு சமுதாயம். படிப்பறிவு இல்லாத இந்த சமுதாயத்திடமிருந்து தன்னை தனிமைபடுத்தி கொள்ளவே இவர்கள் விரும்புகிறார்கள். முஸ்லிம் சமுதாயம் எதேனும் பாதிப்புக்குள்ளானால், இவர்கள் முஸ்லிம்களிடமே குறைகான விரும்புகிறார்கள். படிப்பறிவில்லாத இந்த முஸ்லிம்கள் எந்த நன்மையான காரியங்களை செய்தாலும் அதற்காக குற்றம் சாட்டப்படுகிறார்கள் இந்த மேன்மக்களால். இவர்கள் தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம் என்று வாய் கூசாமல் பேச தலைபடுகிறார்கள்.

ஒரு சமுதாயம் நன்றாக படித்து, பட்டம், பதவி ஆகிய அனைத்திலும் உயர்ந்த நிலையில் இருக்கிறது என்ற காரணத்தால், அவர்கள் கூறும் அனைத்தும் உண்மையாகிவிடாது. அனைத்து செயல்களுக்கும் அவர்கள் முன்மாதிரி ஆகிவிடமாட்டார்கள். இந்தியாவில் பிரமாண சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அரசு உத்தியோகத்தில் 70 க்கும் மேல் ஆக்கிரமித்து கொண்டிருக்கிறார்கள். இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பின்புலமாக இருக்கிறார்கள். இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்தி ஊடகங்களின் வழியாக அனைத்து தவறான செய்திகளையும், தகவல்களையும், ஆய்வுகளையும் அவ்வப்போது வெளியிடுவதை இந்த மெத்தபடித்த மேதாவிகள் அப்படியே நம்பிவிடுகிறார்கள். பாசிஸ கருத்தை பிரச்சாரம் செய்ய தலைபடுகிறார்கள்.

உதாரணமாக சமீபகாலமாக முஸ்லிம்கள் பாபரி பள்ளி இடித்து தரைமட்டமாக்கபட்டதை இந்துக்களிடம் விட்டு கொடுத்துவிடுவதால் தங்கள் பெருந்தன்மையை உலகிற்கு காட்டிடலாம் என்று வெளிவரும் செய்திகளை, இந்த முஸ்லிம்கள் ஆமாம் ஏன் நாம் விட்டுகொடுக்க கூடாது என்று கேள்வி கேட்பதோடு மட்டுமல்லாது பாபரி பள்ளி பிரச்சினையை மதவாதிகள் ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் என்று கூறி  பாசிஸத்தை திருப்திபடுத்துகிறார்கள். தாங்கள் மதவாதி அல்ல மிதவாதி என்று பெருமையடித்து கொள்கிறார்கள்.

இதுவே பாபரி பள்ளி இடிக்கப்பட்டபோதும் நடந்தது. முஸ்லிம்கள் அந்த பள்ளியில் ஏன் தொழுகை நடத்தாமல் பூட்டிவைத்திருந்தார்கள்? என்று முஸ்லிம்களை குறைகண்டார்கள். கோவை கலரத்தின் போது, ஏன் காவலரை இவர்கள் கொல்லவேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்கள். குஜராத் கலவரத்தில், ஏன் ரயிலை முஸ்லிம்கள் எரித்தார்கள். அதுவே அவர்களுக்கு எமனானது. என்று தனது கண்டுபிடிப்பை சொன்னார்கள். இப்படி சொல்வதன் மூலம் முஸ்லிம்கள் கொல்லப்படுவது நியாயம் தான் என்று சொல்லிவிடுகிறார்கள்.

ஆய்வு கட்டுரை எழுதுவதாலும், தகவல்கள், புள்ளிவிவரங்கள் கொடுப்பதாலும் அவர்கள் வெளியிடும் செய்திகள் அனைத்தையும் சரி என்றும், அவர்கள் நடவடிக்கைகள், செயல்கள் அனைத்தும் சரியானவை என்றும் முடிவெடுப்பது முட்டாள் தனம். அதேபோல் முஸ்லிம்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதால் அவர்கள் செய்யும் அனைத்தும் தவறானவை, முட்டாள்தனமானவை என்று முடிவு எடுப்பதும் தவறாகும்.

இவர்கள் ஒன்றை உணரவில்லை. அனைத்து கலவரங்களையும் பாசிஸ்ட்டுகள் திட்டம் போட்டு செயல்முறை படுத்துகிறார்கள். அவர்களுடைய திட்டம் முஸ்லிம்களை இந்த நாட்டிலிருந்து துடைத்தெறிவது. ஏழை முஸ்லிம்களை அழித்து கொண்டிருக்கும் இவர்கள் தங்களையும் விட்டுவைக்க போவதில்லை, ஒரு நாள் நமக்கும் இதே நிலைதான் என்று இவர்களுக்கு தெரிவதில்லை.

இதுவரை இந்தியாவில் நடந்த கலவரங்களில் மேல் மட்ட முஸ்லிம்கள் பலர் அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இவர்கள் உணரவேண்டும். இனி ஏழை முஸ்லிம்களை குறைகாண்பதிலிருந்து விலகி முஸ்லிம்களை பாதுகாக்க தன்னால் இயன்றதை எல்லாம் செய்ய முன்வர வேண்டும்.

முஸ்லீம்களின் நாட்டு பற்று

முஸ்லிம்கள் இந்திய நாட்டிற்காக செய்த தியாகங்கள் எண்ணிலடங்காதவை. நாடு அடிமைபட்டிருக்கிறது, அதனை அடிமைதளையிலிருந்து மீட்கவேண்டும் என்று முதல் குரல் கொடுத்தவர்கள் தான் முஸ்லிம்கள். சையத் அஹ்மத் ஷஹீத் ஆங்கிலேயர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தார்கள். அடுத்து வந்த திப்பு சுல்தானின் வீரத்தை கண்டு ஆங்கில ஆதிக்கவாதம் கதிகலங்கி போனது. இவர்களும் இது போன்றவர்களும் இந்தியாவிற்காக செய்த தியாகங்கள் கொங்சநங்சமல்ல. தங்கள் உயிரை கொண்டும், பொருளை கொண்டும் முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் இன்று இந்திய வரலாற்றை அலங்கரித்து கொண்டு இருக்கின்றன.

அன்று முதல் இன்று வரை முஸ்லிம்கள் இந்திய மண்ணின் மீதும், அதன் மக்களின் மீதும் நேசம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். இனக்கலவரங்களின் போதெல்லாம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் எந்த இந்துவும் பாதிப்புக்கு உள்ளானான், கோவில்கள் பாதிக்கப்பட்டன என்ற வரலாறே கிடையாது. முஸ்லிம்கள் இந்துக்களை கொலை செய்தார்கள் என்றும் இந்து கோவில்களை சேதப்படுத்தினார்கள் என்றும் செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த செய்திகள் அனைத்தும் பொய்கள் என நிரூபனமானது பிற்காலத்தில். இவைகள் எல்லாம் இந்துமத தீவிரவாதிகள், ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கைங்கர்யமே அன்றி வேறல்ல என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அந்த அளவுக்கு முஸ்லிம்கள் இந்திய மக்களை நேசிக்கின்றனர். இந்திய நாட்டை நேசிக்கின்றனர். ஆனால் இந்து பாசிசவாதிகள் முஸ்லிம்களின் தேச பற்றை சந்தேக கண் கொண்டே பார்க்கின்றனர். முஸ்லிம்களை அந்நியர்களாக ஆக்கிட முயற்சி செய்கின்றனர்.

காலங்காலமாக இந்தியாவிற்காக தியாகம் செய்து வந்த முஸ்லிம்களுக்கு, இந்தியா ஒரு இந்து நாடு, சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு அவர்களாய் பார்த்து எதாவது சலுகை செய்தால் தான் உண்டு. நமக்கு எதையும் அதிகாரமாக கேட்டு பெற்றிட எந்த உரிமையும் இல்லை என்ற மனநிலையை ஏற்படுத்திட விழைகின்றனர்.

சில முஸ்லிம்களுக்கு இந்த எண்ணம் வந்தே விட்டது. அவர்கள், ‘இது (இந்தியா) ஒரு இந்து நாடு. நாமோ சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் எந்த பிரச்சினையும் செய்யாமல் அட்ஜஸ்ட் (அனுசரித்து) செய்து போகனும்’ என்று கூறுகின்றனர். இதற்கு பெயர் அட்ஜஸ் அல்ல கோழைத்தனம். அடிமையாக வாழ்வதில் இன்பம் காண்பவர்கள் இவர்கள். நாம் அடிமையல்ல இந்த மண்ணின் மைந்தர்கள். அனைத்து உரிமைகளையும் பெற முதல் நிலை தகுதியுடையவர்கள் நாம் தான் என்பதை நன்றாக உணரவேண்டும்.

ஏனெனில், இந்த இந்திய திருநாட்டை, இந்தியா என்ற ஒரு பெரும் நாடாக உருவாக்கிதே முஸ்லிம்கள் தான். கிட்டதட்ட 2000 நாடுகளாக பிரிந்து கிடந்த இந்தியர்களை ஒருங்கிணைத்து ஒரு நாடாக கட்டமைத்தவர்களே நாம் தான். மேலும் இந்திய சுதந்திர போராடத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் எண்ணிக்கையே அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் விட அதிகம். இதை பாசிஸத்தின் தந்தை என கூறப்படும் வீரசவர்காரே ஒத்துக்கொண்ட வரலாற்று உண்மை.

உண்மை இப்படி இருக்க, இது இந்துக்களின் நாடு, நாம் சிறுபான்மையினர் என்ற எண்ணம் ஏன் முஸ்லிம்களுக்கு வரவேண்டும். நம் இந்தியாவில் ஒரே ஒரு முஸ்லிம் இருந்தாலும் கூட, அவனுக்கும் இந்த மண்ணில் உரிமை உண்டு. இந்திய மண்ணில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் அவன். மாறாக கூனி, குறுகி, சிறுபான்மையினர் என்ற தாழ்வு மனப்பான்மையுடன் இந்திய முஸ்லிம்களான நாம் ஒரு போதும் வாழ்ந்திட கூடாது. ஏன்? அந்த எண்ணமே நம்மிடம் வந்திட கூடாது.

இந்தியா நம்முடைய நாடு. நாம் எந்த நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவர்களோ அல்லது சிந்து வழியாக ஆட்டை ஓட்டிகொண்டு வந்து இந்தியாவில் கூடாரம் அமைத்தவர்களோ அல்ல. இன்று  பாசிஸம் கொக்கரிக்கிறது முஸ்லிம்களை பார்த்து, ‘வந்தேறிகளே ஓடுங்கள் பாகிஸ்தானுக்கு’என்று. இந்தியர்களான நாம் ஏன் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானும் ஓடவேண்டும்?

பாசிஸ்ட்டுகள் இப்படி கொக்கரிப்பதோடு மட்டும் அல்லாமல் கலவரங்களின் போது முஸ்லிம்களை படுகொலை செய்யும் போதெல்லாம் இப்படி கூறியே விரட்டியடிக்கிறார்கள். இது பம்பாய், பாகல்பூர், சூரத், பிவாண்டி, கோவை இங்கெல்லாம் நடந்தது. குஜராத்திலும் நடந்தது. அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் கூறுகிறார்கள், ‘எங்களை பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்று கூறி விரட்டியடிக்கிறார்கள். இது எங்கள் நாடு. நாங்கள் ஏன் பாகிஸ்தான் போகவேண்டும்?’ என்று வேதனையுடன் கேட்கிறார்கள்.

எந்த முஸ்லிமும் இந்தியாவை விட்டு போக விரும்பவில்லை. அவர்கள் இருந்தாலும் இந்தியாவில், இறந்தாலும் இந்தியாவில் என்றே வாழ்கின்றனர். முஸ்லிம்கள் தேசபற்றில்லாதவர்கள் என்ற  பாசிஸ கூப்பாட்டிற்கு, நாங்கள் தேசபற்று மிக்கவர்கள் என்று எதாவது ஒரு வழியில் நிருபித்தாக வேண்டியிருக்கிறது. அதனால் இந்திய முஸ்லிம்கள், 10 பைசா தேசிய கொடி அச்சிட்ட ஸ்டிக்கரை தங்கள் வீட்டின் கதவுகளில் ஒட்டி வைத்தாவது தங்கள் தேசபற்றை வெளிகாட்ட தயங்கியதே இல்லை. இதற்கு குஜராத்தில் நடந்த சம்பவம் ஒரு அழகான சான்று.

ஜவான் நகர் என்றொரு கிராமம். அகமதாபாத்திலிருந்து 15 கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ளது. இந்த கிராமத்தையும்  பாசிஸ்ட்டுகள் விட்டுவைக்கவில்லை. முன் எப்போதும் நடந்திராத அளவிற்கு, எங்கேயும் நடந்திராத அளவிற்கு மிக மோசமான இனச்சுத்திகரிப்பு இங்கே நடந்துள்ளது.

சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக இந்த கிராமத்து மக்கள் இந்துக்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் பிரிந்தே வாழ்கின்றனர். இன்று இந்துக்கள் வசிக்கும் பகுதியில், மக்கள் இயல்பானதொரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறுவர்கள் சந்தோசமாக கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கிறார்கள். பெரியவர்கள் சமாதானமாக அமர்ந்து கொண்டு வெற்றிலை மென்று கொண்டிருக்கிறார்கள். குஜராத்தி இந்து பெண்கள் மங்களகரமான மங்சள் புடவையுடன் தங்கள் வீடுகளை கூட்டி சுத்தம் செய்வதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆனால் அங்கிருந்து 20 மீட்டர் கீழிறங்கி முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றால், போர்க்களமாக காட்சியளிக்கிறது. முஸ்லிம்களை பதம் பார்த்த கற்கள் தெருவில் போர்த்தப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே சுற்றி திரியும் பசுக்களையும், அவைகளை தெய்வங்களாக வணங்கி திரியும் இந்து கொள்ளையர்களையும் தவிர வேறு யாரையும் காணப்படவில்லை. தெருவே வெறுச்சோடி கிடக்கிறது.

அங்கே ஒரு வீடு. அடுப்பில் சமைப்பதற்காக வைக்கபட்டிருந்த பாத்திரம், அது வைத்தது வைத்தார் போல் இருக்கிறது. பல் தேய்க்கும் பிரஸ்கள் எல்லாம் ஒரு பிளாஸ்டிக் குடுவையில் நேர்த்தியாக வைக்கப்பட்டிருக்கிறது. சுவரில் தொங்கி கொண்டிருக்கும் நாட்காட்டி, இந்தியாவை உலகத்தின் முன் தலைகுனிய வைத்து அவமானத்தை பெற்று தந்த நாளான பிப்.28ஐ காட்டி ஏளனமாக சிரித்து கொண்டிருந்தது. தரையில் காணப்பட்ட ரத்த வெள்ளம் அந்த வீட்டிற்கு சொந்தகாரர் அல்லது சொந்தகாரி ஆக மொத்தம் ஒரு முஸ்லிம் அங்கே வெட்டி கொல்லப்பட்டிருக்கிறான் என்பதை உணர்த்திற்று. கதவின் நடுவில் ஒட்டப்பட்டிருந்த மூவர்ண இந்திய தேசிய கொடியில் இப்படி பிரகடனப்படுத்தியது: ‘ஐ © ஐனெயை’. 

நாம் மேலே குறிப்பிட்டது ஒரே ஒரு உதாரணம் மட்டும் தான். இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நாடெங்கிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இவைகள் எல்லாம் ஒன்றை தெளிவாக வெளிப்படுத்துகிறது. அது என்னவென்றால், எந்த முஸ்லிமும் இந்தியாவை வேறு எவருக்கும் விட்டு கொடுக்க மாட்டான். இந்தியாவை விட்டு வேறு எங்கும் சென்றுவிட வேண்டும் என்று எண்ணிக்கூட பார்க்கமாட்டான் என்பதைதான்.

அரசாங்கமே நடத்திய இனச்சுத்திகரிப்பு

 சங் பரிவார கும்பல் முஸ்லிம்களை குழந்தைகள் என்றும், பெண்கள் என்றும், முதியவர்கள் என்றும் பாராமல் எரித்து கொன்றார்கள். அதற்காக வெகுநாட்களுக்கு முன்பே நன்றாக திட்டம் தீட்டி வைத்திருந்தார்கள். சந்தர்ப்பம் கிடைத்ததும் முஸ்லிம் சமுதாயத்தை வேறோடு சாய்த்திட முனைந்தார்கள். இதில் பெண்களே முக்கிய இலக்காக ஆனார்கள் என்பதை எல்லாம் சென்ற அத்தியாயத்தில் விரிவாக கண்டோம்.

இப்படியொரு பயங்கரத்தை நடத்திட ஆக்கமும், ஊக்கமும் தந்து உதவியது யார்? யாருடைய துணை கொண்டு அத்துணையையும் செயல்படுத்தினார்கள்? வேறு யாருமல்ல. குஜராத்தை ஆண்டு கொண்டிருக்கும் பிஜேபி அரசும், மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் தான். இந்த கலவரத்திற்கு தேஜகூவில் அங்கம் வகிக்கும் அத்துணை கட்சிகளும் தான் பொறுப்பேற்க வேண்டும். முக்கியமாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம். அதிகமான எம்பிக்களை பெற்றிருக்கும் அவர் நினைத்திருந்தால், இந்த கலவரத்தை ஒரு நொடியில் முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். கலவரத்தை நிறுத்தவில்லை என்று சொன்னால் தேஜகூவிற்கு கொடுத்து கொண்டிருக்கும் ஆதரவை உடனே வாபஸ் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தால் கூட போதும். கலவரத்தை செய்து கொண்டிருந்த வாஜ்பாயும், மோடியும் நிறுத்தி இருப்பார்கள். ஆனால் அவர் அதை செய்ய முன்வரவில்லை. அதே போல் எந்த கூட்டணி கட்சிகளும் செய்ய முன்வரவில்லை. ஒரு சில கட்சிகளை தவிர்த்து. நம் திமுக கூட அமைதி காத்தது நமக்கு எந்த ஆச்சரியத்தையும் வரவழைக்கவில்லை. நமக்கு தெரியும் அவர் அப்படி செய்வார் என்று.

விஹிப, பஜ்ரங்தள் கூட்டத்தினர் அரசு ஆதரவுடன் மனிதர்களை – முஸ்லிம்களை வேட்டையாடினர். இதற்கு அரசும், காவல்துறையும் முழு ஒத்துழைப்பு கொடுத்தது என்பதை கிட்டதட்ட அனைத்து பத்திரிக்கைகளும் ஒத்துகொண்டுள்ளது. அந்த அளவுக்கு வெளிப்படையாக செயல்பட்டார்கள் காவல் துறை காவிகள்.

இஹ்வான் ஜா ப்ரி என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரையும் அவரது குடும்பத்தினரையும் வகுப்புவாதிகள் தீயிட்டு கொளுத்தியதை காவல்துறையினர் கண்ணார கண்டு ரசித்தனர்.

உயர்நீதிமன்ற நீதிபதி காதிரி தன்னை காப்பாற்ற சொல்லி காவல்துறையினருக்கு போன் மேல் போன் அடித்து கெங்சியிருக்கிறார். எந்த பயனும் இல்லை. காவல் துறை கட்டுபாட்டு அறை, கலவரம் நடந்த முதல் இரண்டு நாட்களில் சுகாதாரத்துறை அமைச்சர் அசோக்பாட் என்பவரின் கட்டுபாட்டின் கீழ் இருந்தது. மதவெறிபிடித்த இந்த அசோக்பாட் காவல்துறை கட்டுபாட்டு அறையில் அமர்ந்து கொண்டு, கலவரம் துரிதமாக நடப்பதற்கும், முஸ்லிம் சுத்திகரிப்பின் வேகமும் குறையாமல் இருப்பதற்கும் ஆணை பிறப்பித்து கொண்டிருந்தார்.

இந்த அசோக்பாட் 1985ல் நடந்த கலவரத்தில் ஒரு காவலரை கொன்ற வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல இடங்களில் கொள்ளையடிப்பதை காவல்துறையினரே அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களும் கொள்ளையடிப்பதில் பங்கு கொண்டார்கள். அவர்களே கொள்ளையும் அடித்தார்கள்.

இப்படிக் காவல்துறையினரே கொள்ளை அடித்தற்குக் காரணம், இந்த  பாசிச அமைப்பைச் சார்ந்தவர்கள் தாம் கடந்த 7 ஆண்டு பாஜக ஆட்சியில் காவல்துறையில் காவலர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். காவல்துறை முழுமையாகக் காவித்துறையாக ஆக்கப்பட்டுவிட்டதன் பலனை இங்கே கண்டார்கள்.

காவல்துறையினர், விஹிப, பஜ்ரங்தளத்தினரின் இன்னொரு கையாகவே செயல்பட்டார்கள் என்று பத்திரிக்கைகள் வர்ணிக்கும் அளவுக்கு, யார் நம்மை பாதுகாப்பார்கள் என்று நம்பி கொண்டிருக்கிறோமோ அந்த பாசிச காவல்துறையினர் செயல்பட்டிருக்கிறார்கள்.

இந்த காவல்துறையினரை அனுப்பிவைத்த உயர்மட்ட காவல்துறை அதிகாரி பிசி.பாண்டே, ‘காவல்துறையினரின் உணர்வுகளை நாம் அணை போட முடியாது’ என்று கூறியதும், ‘ஒவ்வொரு விளைவுக்கும் எதிர்விளைவுகள் உண்டு’ என்று குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் நரேந்திர மோடி நடந்து கொண்டிருந்த கலவரத்தை – முஸ்லிம் இனப்படுகொலையை நியாயபடுத்தியதும், கலவரத்தை அரசே முன்னின்று நடத்திய இனப்படுகொலைதான் இது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி எடுத்து காட்டுகிறது.

இதெல்லாமல், அமைச்சர்கள் கூட கலவர இடத்தில் நின்று, நடந்த கலவரங்களுக்கு கைகாட்டி கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் துணை ராணுவ அமைச்சர் ஹரின் பாண்டயா. இவர் ‘பால்டி’ பகுதியில் முஸ்லிம்களின் வீடுகளையும், கடைகளும் எரித்தவர்களுடன் சேர்ந்து நின்று கொண்டிருந்தார் என்று நேரில் கண்ட சாட்சியங்கள் கூறுகின்றார்கள் என்று  பிரண்ட்லைன் ஏடு தெரிவிக்கிறது.

ஒரு துணை ராணுவ அமைச்சர், தான் தினமும் நான்கு முறை பிரமருடன் போனில் பேசுகிறேன் என்று கலவரம் நடந்து கொண்டிருந்த நாட்களிலே கூறுகின்றார் என்றால் இது பிரதமருக்கு தெரியாமல் எப்படி நடந்திருக்க முடியும். நிச்சயமாக இந்த கலவரத்தை நடத்தியது மத்திய அரசும் மாநில அரசும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது.

அதனால் தான் இந்த கலவரத்தை அரசே முன்னின்று நடத்தியது என்று கூறுகிறார்கள். இதை ஆங்கிலத்தில் ளுவயவந ளுpழளெழசநன வுநசசழசளைஅ என்று கூறுகிறார்கள்.

காவிமயக்கப்பட்டுவிட்ட காவல்துறையின் காவிதனங்களை கட்டுரையாளர் மானாஸ்தான் குப்தா தி ஹிந்து என்ற ஆங்கில நாளேட்டில் ‘காவிமயமாக்கபட்ட காவல்துறையினர் தங்கள் நிறத்தை வெளிபடுத்துகின்றனர்;’ ‘Saffronised Police Show Their Color’ ’ என்ற தலைப்பில் பின்வருமாறு கூறுகின்றார்.

குஜராத் கலவரத்தின் போது, அஹமதாபாத் மற்றும் குஜராத்தின் இதர பாகங்களிலும் சீருடை அணிந்தவர்கள் தாங்கள் வகுப்புவாத மயமாக்கப்பட்டுள்ளதை போதிய அளவிற்கு வெளிப்படுத்தினர்.

பல இடங்களில் காவல்துறையினரின் முன்னிலையிலேயே கடைகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. சூறையாடப்பட்ட பொருட்களில் ஒரு பங்கை காவல்துறையினரும் பெற்றுக் கொண்டனர். நகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு சில மீட்டர் தொலைவில் சாலையின் நடுவே அமைந்திருந்த ஒரு சிறிய தர்காவை போக்கிரிகள் உடைத்துக் கொண்டிருந்த போது, காவல்துறை வாகனங்கள் அதனைக் கண்டு கொள்ளாமல் கடந்து சென்று கொண்டிருந்தன. தாக்குதல்களை நிறுத்துவதற்கு அக்கறை காட்டாதது மட்டுமின்றி, போக்கிரிகளின் செயல்களை ஊக்கப்படுத்தும் வகையில் சைகைகளையும் அவர்கள் காட்டினர். சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலம் தாக்கப்பட்டு அழிக்கப்பட்ட சம்பவங்கள் குறைந்தபட்சம் 15 நடைபெற்றுள்ளன. காவல்துறையினர் மௌனமாக வேடிக்கைப்பார்க்கையில் இரவுப் பொபுதில் அவை கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன.

மேலும் நரேந்திர மோடி, கடுமையான நடவடிக்கைகளில் இறங்கவேண்டாம் என்று காவல் துறையினருக்கு அறிவுறுத்தல்கள் அளித்ததாகவும் குப்தா தெரிவிக்கிறார்.

இவைகள் எல்லாம் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது அரசே முஸ்லிம்களை கொலை செய்தது என்று.

காவிமயமாக்கப்பட்ட காவல்துறையின் அராஜகத்திற்கு மற்றும் ஒரு சான்று குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தன் ஜாட்பியாவின் சொந்த தொகுதியில் உள்ள பாழுநகர் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேசன் அருகிலேயே நடந்த ஒரு சம்பவம்.

இங்கு முஸ்லிம்களுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காவல்துறையினருடன் சேர்ந்த பஜ்ரங்தள் குண்டர்களும் முஸ்லிம்களை சுட்டிருக்கிறார்கள். இதில் 40 முஸ்லிம்கள் உயிரிழந்தனர். இவர்களில் 36 பேர் 20 முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள். இவர்கள் அனைவரையும் தலையிலும், மார்பிலும் சுட்டே கொன்றார்கள். உயிருக்கு ஊசலாடி கொண்டிருந்தவர்களை விஎஸ் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் இறந்துவிட்டனர்.

அந்த மருத்துவமனையில் உயர் பதவியில் பணிபுரியும் பெயர் வெளியிட பயந்த ஒருவர், இங்கு அனுமதிக்கப்படுபவர்களில் 70மூ பேர் தலையிலும், மார்பிலும் சுடப்பட்ட நிலையிலேயே வருகிறார்கள் என்கிறார்.

சுடப்பட்டு உயிரிழந்த முஸ்லிம் இளைஞர்களில் சிலர் இவர்கள்:

1.            வாஹித் கப்பார் என்றொரு செக்யூரிடி. பாபுநகரில் வாழ்ந்து வந்தார். இவரை இரண்டு கண்களுக்கு இடையில் சுட்டு கொன்றார்கள். இவருக்கு வயது 25.

2.            குலாம் ரசூல் குலாம் நபி என்ற பாபுநகரை சேர்ந்த இளைஞர். இவரை தலையில் சுட்டு கொன்றனர். இவருக்கு வயது 22.

3.            நிஜாமுத்தின் கான் என்றொரு இளைஞர். இவரையும் தலையில் சுட்டு கொன்றனர். இவருக்கு வயது 24.

4.            பர்வேஸ் குலாம் என்ற பொதுமருத்துவமனை ரோடு, பாபுநகரை சேர்ந்த ஒருவர். இவரை மூக்கில் சுட்டதில் இறந்தார். இவருக்கு வயது 26.

5.            இம்தியாஸ் கான் நிஸாமுத்தீன் பத்தான் என்ற இளைஞரை தலையில் சுட்டு கொன்றனர். இவருக்கு வயது 21. இவருடைய தாய் கூறுகையில், ‘தலையில் சுட்டதால், தலையின் ஒரு பகுதி சிதறியிருந்தது. அதனால் என் சொந்த மகனை கூட என்னால் அடையாளம் கண்டு கொள்ளமுடியவில்லை.’ என்கிறார்.

இப்படி இந்த காவிதுறை முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து கொன்று குவித்துள்ளது. இந்த காவல் துறையினர் தான் தங்களை காப்பார்கள் என்று அவர்களிடம் அடைக்களம் தேடி ஓடியபோதெல்லாம், அவர்கள் முஸ்லிம்களை அப்படியே பிடித்து மதவெறியர்களின் கைகளில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இவர்களை நாம் எப்படி நம்புவது. காவல்துறையினர் நம்மை காப்பார்களா? நம் கழுத்தை அறுப்பார்களா? என்பது யாருக்கு தெரியும்.

இவர்களுக்கு மத்தியில் சில மனிதாபிமான காவலர்கள் இருக்கத்தான் செய்தனர். முஸ்லிம்களை பத்திரமாக அழைத்து வந்து பஸ் ஏற்றி வழியனுப்பி வைத்தனர். மேலும் சிலர் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும், காவிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்ததில் பணிமாற்றம், இடமாற்றத்திற்கு ஆளானார்கள்.

குஜராத் முதலமைச்சரான நரேந்திர மோடியே கலவரத்திற்கு ஏற்பாடு செய்து முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தார் என்ற உண்மையை அவுட்லுக் பத்திரிக்கை நடத்திய புலன் விசாரணைக்கு பிறகு ஜுன் 3, 2002 அன்று அம்பலப்படுத்தியது. அவுட்லுக் பத்திரிக்கை பின்வருமாறு கூறுகின்றது.

பிப். 27, 2002 அன்று இரவு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி காவல்துறை அதிகாரிகளை தன்னுடைய காந்தி நகர் மாளிகைக்கு அழைத்தார். அவர்களிடம், “மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திட அனுமதியுங்கள்” எனக்கூறியிருக்கின்றார்.

இந்தக் கூட்டத்திற்கு பின்வரும் காவல்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டார்கள். மு.சக்கரவர்த்தி டி.ஜி.பி., அஹமதாபாத் காவல்துறை ஆணையர் பி.சி. பாண்டே, முதன்மை செயலாளர் சுப்பாராவ், உள்விவகாரத்துறை செயலாளர் அசோக் நாராயணன், மு.நித்தியானந்த் டி.ஐ.ஜி., உளவுத்துறை அதிகாரி. இவர்களுடன் முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்த பலரும் இதில் கலந்து கொண்டார்கள். அவர்கள் கே.மிஷ்ரா, அனில் முக்கிம்.

முதலமைச்சரே ஒரு இனப்படுகொலையை நடத்தத் திட்டமிட்டிருப்பதும், அதற்குக் காவல்துறையினர் உதவி செய்ய வேண்டும் என உத்தரவிடுவதும் முதன்மை காவல்துறை அதிகாரி சக்கரவர்த்தி அவர்களுக்கு பிடிக்கவில்லை. அவர் அதனை வன்மையாக எதிர்த்தார். “வாயை மூடுங்கள். பாண்டே அவர்களுக்கே கீழ்படியுங்கள்.” (பாண்டே அஹமதாபாத் காவல்துறை ஆணையர்) என எரிந்து விழுந்தாராம் மோடி. (சக்கரவர்த்தி பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்).

இந்த கூட்டத்தில் மோடி ஒரேயடியாக ஆணைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். எந்த கலந்தாலோசனைக்காகவும் அவர் எங்களை அழைக்கவில்லை.

கூட்ட முடிவில் முதலமைச்சர் மோடி காவல்துறையினர் தன்னுடைய சங்பரிவாரத்திற்கு உதவி செய்வார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்த பின்னரே அனுப்பினார். இதனை தன்னுடைய கும்பல்களுக்குச் சொல்லிவிட்டார்.

மோடி இப்படி நல்ல ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும் அவருடைய கும்பல்களுக்கு ஒரு சந்தேகம். உண்மையிலேயே கலவரம் செய்தால் காவல்துறை உதவி செய்யுமா என்பதே அந்த சந்தேகம். ஆகவே பிப். 28ந்தேதி அவர்கள் அஹமதாபாதில் சின்னச் சின்ன கலவரங்களைச் செய்து பார்த்தார்களாம். காவல்துறை கண்டு கொள்ளவில்லை.

ஆகவே காவல்துறை இந்த இனப்படுகொலைக்கு உதவி செய்யும் என்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டார்கள். தங்களுடைய வேலையை இன்றளவும் செய்து கொண்டிருக்கிறார்கள். கோத்ரா ரயில் எரிப்பு நடக்கமால் ஒரு சாதாரண நிகழ்வு நடந்திருந்தாலும் இந்த படுகொலைகள் நடந்தே இருந்திருக்கும்.

தகர்த்தெரியப்பட்ட அல்லாஹ்வின் ஆலயங்கள்

அஹமதாபாத் ஒரு முஸ்லிம் நகரம் போல் தோற்றம் தருவதாகவும், அதன் தேர்றத்தை மாற்றி எடுக்க வேண்டும் என்றும் நரேந்திர மோடியும், அவருடைய அடியாட்களும் நீண்ட நாட்களாகவே திட்டம் போட்டு செயல்பட்டு வருகின்றார்கள்.

இதனை இந்தக் கலவரத்தின் போது வெளிக்காட்டி இருக்கின்றார்கள். இதனால் திட்டம் போட்டு பள்ளிவாசல்களை இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கின்றார்கள். பின்னர் ஆத்திரப்படாமல் அவசரப்படாமல் பள்ளிவாசல்களைக் கோயில்களாக மாற்றி இருக்கின்றார்கள்.

அவ்வாறு கோயில்களாக மாற்ற முடியாதவற்றை இடித்துத் தடந்தெரியாமல் அப்புறப்படுத்தி விட்டார்கள். இடிபாடுகளை அப்புறப்படுத்துவதில் அகமதாபாத் மாநகராட்சி காட்டிய வேகம் அலாதியானது என்கின்றது பிரண்ட்லைன் ஏடு (மார்ச் 29, 2002)

இப்படி சுமார் 270 பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இடங்கள் என அனைத்து இடங்களையும் இடித்தும் சேதப்படுத்தியும் இருக்கின்றனர் (அரப் நியூஸ் ஏப்ரல் 27, 2002).

அங்கே ஒரு பள்ளிவாசல் இருந்தது என்பதற்கு எந்த அத்தாட்சியும் இருக்கக்கூடாது என்பதற்காகவே அத்துணை வேகமாக இடிபாடுகளை அப்புறப்படுத்தினார்கள். முஸ்லிம்கள் பள்ளிவாசல் இருந்த இடத்தில் மீண்டும் பள்ளிவாசல் வேண்டும் எனக் கோரினால், அவர்கள் இன்னும் பல உயிர்களைப் பலி கொடுத்துத்தான் அத்தகைய கோரிக்கைகளை முன்வைக்க வேண்டியதிருக்கும்.

ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் பாஜக அரசு அந்த இடங்களில் கோயில் கட்டும் அல்லது இப்படி பள்ளிவாசல்களின் இடிபாடுகளை முற்றாக மாற்றிடுவது, சாட்சியங்களை அப்புறப்படுத்துவதாகும். இது இந்திய தண்டனைச் சட்டப்படிக் குற்றமாகும். ஆனால் இதை அரசு இயந்திரத்தின் ஒரு பகுதியான மாநகராட்சியே செய்வதால் யாரும் எதுவும் செய்திடவோ, சொல்லிடவோ இயலவில்லை.

இதில் மிகவும் கோரம் என்னவெனில் அஹமதாபாத் காவல்துறை ஆணையரின் தலைமை அலுவலகத்திற்கு பக்கத்திலேயே வாலி குஜராத்தி என்ற உருதுப் புலவரின் நினைவிடம் இடிக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டது. கமிஷனர் அலுவலகத்திற்கு முன்னாலேயே இது நடந்திருக்கின்றது என்று பத்திரிக்கைகள் எழுதவே இந்தக் கோயில் அகற்றப்பட்டது.  ஆனால் மாநகராட்சி இப்போது அதை ஒரு கோயில் போல் மாற்றி சுற்றி தடுப்புச் சுவர் எழுப்பி இருக்கின்றது.

கசோரி சவுல் என்ற காவல் நிலையத்திற்குப் பக்கத்தில் ஒரே ஒரு முஸ்லிம் வீடுதான் இருந்தது. இந்த வீட்டையும் இடித்துக் கோயில் கட்டியிருக்கின்றார்கள். (பிரண்ட்லைன் மார்ச் 29, 2002).

அலஹாபாத் மாநகராட்சி காங்கிரஸ் மேயரால் தான் தலைமை ஏற்று நடத்தப்படுகின்றது. ஆனால் முதல்வர் நரேந்திர மோடியையும், பாஜக மற்றும் விஹிப அமைப்புகளைச் சார்ந்த அமைச்சர்கள் களத்தில் நின்று இதை இடியுங்கள், இதை மாற்றுங்கள் என ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்ததால் அவரால் எதையும் செய்திட இயலவில்லை.

பள்ளிவாசல்களை கோயில்களாக மாற்றிட வேண்டும் என்ற கொள்கையை கொண்ட அமைப்பு விஹிப. பள்ளிவாசல்களை இடிப்பதிலும் அவற்றைக் கோயில்களாக மாற்றுவதிலும் அனைத்து  பாசிச அமைப்புகளை விடவும் முன்னே நிற்பது இந்த அமைப்பு தான். இந்த அமைப்பபைச் சார்ந்த முன்னணி தலைவர்கள் ஆறு பேர் இப்போது முஸ்லிம்களைத் திட்டம் போட்டு கொலை செய்து கொண்டிருக்கும் நரேந்திர மோடி அரசில் அங்கம் வகிப்பவர்கள் என்பதை நாம் மறந்திட இயலாது.

இதில் ஒரு அமைச்சர் 1985 வகுப்புக் கலவரத்தை முன்னின்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அசோக் பாட் என்பது அவர் பெயர் என்பதை முன்னமே பார்த்தோம்.

அனைத்து பலத்தையும் கொண்ட இவர்கள் முஸ்லிம்களை திட்டம் போட்டு அழிப்பதில் வெற்றி கண்டு கொண்டே இருக்கிறார்கள். அல்லாஹ்வை வணங்குவதற்காக கட்டப்பட்ட பள்ளிகளை இடித்து கோயில்களாக மாற்றுகின்றனர். ஏக இறைவனை வணங்கிய இடத்தில் இன்று ராமனும், கிருஷ்ணனும் கடவுள். இத்தனை நடப்பதை கண்டு ஒரு முஸ்லிமால் எப்படி அமைதியாக இருக்கமுடியும்? நிச்சயமாக முடியாது. ஒவ்வொரு இந்திய முஸ்லிமும் இடிக்கப்பட்ட, கோயில்களாக மாற்றப்பட்ட அல்லாஹ்வின் ஆலயங்களை மீட்க தன் மனதுக்குள் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கின்றான் பாசிஸ்ட்டுகளோடு. இழந்துவிட்ட அல்லாஹ்வின் பள்ளிகளை மீட்க தன் இன்னுயிரையும் அவன் வழியில் தியாகம் செய்வதற்கு எந்நேரமும் தயார் நிலையில் இருக்கின்றான்.

எந்த ஒரு முஸ்லிமும் - அவன் எந்த அமைப்பை சேர்ந்தவனாக இருந்தாலும் - நாம் இழந்த பள்ளிவாசலை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் தெளிவாக இருக்கின்றான். இந்த எண்ணத்தால் நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம், பிரிந்து பிளவுபட்டு நிற்கவில்லை என்பதை உணர்கிறான்.

குஜராத் படுகொலைகள் உடந்தையான மத்திய அரசு

குஜராத் நிகழ்வுகள் உலகையே உலுக்கிவிட்டன. இதில் நடுநிலையாளர்கள் பலர் தங்கள் கருத்தையும் ஆழ்ந்த கவலையையும் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.

இந்த வகையில் ஆங்கில நாளேடான தி ஹிந்து ஒரு எழுத்துப் போரையே நடத்தி வருகின்றது.

அதில் முச்குந்த் துபே மார்ச் 20, 2002 அன்று தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையின் தமிழ்ச் சுருக்கத்தை இங்கே தருகின்றோம்.

குஜராத் படுகொலைகளுக்குப் பிறகு இந்திய நாடே கூனிக் குறுகியுள்ளது.  நாம் இந்தியர்கள், மனிதர்கள் என்ற பெருமிதத்திற்கு பெருத்த அடி.  கும்பல்களின் கொலை வெறி ஆவேசத்திலிருந்து தங்களைக் காக்கும்படி மன்றாடிய நமது சக குடிமக்களினதும், சக மனிதர்களுடையதும் அழுகுரலுக்கு நம்மால் உதவ இயலாமல் போனது பெரும் வெட்கக்கேடு.

உயிருக்கு மன்றாடிய அப்பாவி ஆண்கள் பெண்கள், குழந்தைகளின் மேல் நிழலாடிய மரண பயம், இனி வருகின்ற நாட்களிலெல்லாம் நம் நினைவை உறுத்தும்.

Ø      கிராமங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் சிறுபான்மை சமூகத்தவரை ஒட்டுமொத்த இனச் சுத்திகரிப்பு (இனபடுகொலை) செய்வது,

Ø      அவர்களது சொத்துகளையும், வணிக நிறுவனங்களையும் அழித்து, பொருளாதாரத்தை நசுக்குவது,

Ø      திட்டமிட்டு அவர்களது வழிபாட்டுத்தலங்களை அழித்து, அவமானப்படுத்தி அவர்களின் மத உணர்வுகளை அதிகபட்சம் புண்படுத்துவது

என முழு அளவிலானதொரு திட்டத்தை முன்கூட்டியே தயாரித்து வாய்ப்புக்காகக் காத்துக் கிடந்தனர் வன்முறையாளர்கள்.  கோத்ரா சம்பவம் அத்தகையதொரு சாக்குப்போக்கை அவர்களுக்கு வழங்கியது.

பாபரி மஸ்ஜித் இடிப்பு, அதைத் தொடர்ந்த வகுப்புக் கலவரங்கள் இந்திய முஸ்லிம் சமூகத்தின் மேல் உண்டாக்கிய அதிர்ச்சிகளை ஆற்றும் விதமாக அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, இதுவரை எதுவும் செய்யப்படவில்லை.  இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் பள்ளிவாசல் கட்டித் தரப்படும் என்ற அப்போதைய பிரதமர் பிவி. நரசிம்மராவின் வாக்குறுதி, சில வாரங்களிலேயே மறக்கப்பட்டது.

தொடந்தது வகுப்புக் கலவரங்கள், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் என்பதன் வாயிலாக ராமர் கோயில் பிரச்னை தொடர்ந்து எழுப்பப்பட்டே வந்துள்ளது. அயோத்தியா நிகழ்வுகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டபர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாக முடிவில்லாத நீதிமன்ற விசாரணைகளைத்தான் இந்நாடு கண்டு வருகின்றது.

இவைகள் இப்படியிருக்கவே, குஜராத்தில் நடந்த சாவும், அழிவும் இந்திய முஸ்லிம்களை அதிர்ச்சிக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கியிருக்கிறது. தங்களது சொந்த நாட்டின் மீதே அவர்கள் நம்பிக்கையிழந்துவிட்டனர். இந்நாட்டின் குடிமக்களாகிய அவர்களுக்கு இம்மண்ணை விட்டு வெறெங்கும் ஒதுங்குமிடமில்லை. எனவே தங்களாலியன்ற அனைத்து வழிகளிலும் தங்களது வாழ்வுக்கு போராடுவது ஒன்றே அவர்கள் முன் உள்ள ஒரே வழி.

இவையனைத்தும் மென்மேலும் வகுப்புக் கலவரங்களையும் உண்டாக்குவதோடு ஏன், ஒரு உள்நாட்டு யுத்தத்திற்கே கூட வழிவகுக்கலாம்.  ஏற்கனவே புண்பட்டுள்ள சிறுபான்மை முஸ்லிம்களின் காயத்தை, தொடரும் வகுப்புக் கலவரங்கள் ஆழமாக்கவே உதவும், தேசிய நீரோட்டத்திலிருந்து அவர்களை விலக்கவே உதவும் என்பதை நாம் மறக்கலாகாது.

முஸ்லிம்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் ஆர்எஸ்எஸ், விஹிபி, பஜ்ரங்தளத்தின் செயல்திட்டம் சாத்தியமாகாது.  140 மில்லியன் மக்கள் தொகையுடைய சிறுபான்மையினர் அவ்வளவு எளிதாக அடிமை அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  சம உரிமையுள்ள குடிமகனாக தொடர்ந்து வாழ்வதற்கு, அவர்கள் கடுமையாகப் போராடுவார்கள்.  அத்துடன் இந்தியாவை ஹிந்து ராஷ்டடிரமாக்க விடமாட்டார்கள்.

விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தளம், பாஜக, மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக அரசுகள் ஹிந்துத்துவ செயல்திட்டத்தை ஒன்றுபட்டு முன்னெடுத்துச் செல்கின்றன.  குஜராத் வகுப்புக் கலவரங்கள் பாஜக, விஹிபவினால் கூட்டாக நடத்தப்பெற்றது.  நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அத்வானி குஜராத் முதல்வரை உறுதியாக ஆதரித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசின் வழக்கறிஙர் சிலாபூஜன் நடத்த அனுமதிக்கும்படி கேட்டதன் மூலம் ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் இந்திய அரசே முன்னிற்கிறது. நாட்டின் வேறெந்தப் பிரச்சனையுமே இல்லை என்பது போல வகுப்புவாத கிரிமினல் சக்திகளை திருப்திப்படுத்தும் தினசரி நாடகங்களைத்தான் மைய அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.

தேசத்தையே பிணைக்கைதியாக வைத்திருக்கும் இந்தச் சக்திகளின் பலம் அதே நோக்கத்தைக் கொண்டுள்ள மத்தியில் ஆளும் பாஜக அரசிலேயே உள்ளதெனலாம்.

புதைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்

 குஜராத் கலவரத்தில் நடத்த படுகொலைகள் மிகவும் சாதூர்யமாக வெளி உலகுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டு விட்டன. உண்மைகள் எல்லாம் முஸ்லிம்களின் உடல்களோடு குழி தோண்டி புதைக்கப்பட்டுவிட்டன. புதைக்கப்பட்ட உண்மைகளின் ஒரு சில துளிகள் தாம் நாம் மேலே குறிப்பிட்டு காட்ழயது.

முஸ்லிம்களை துடைத்தெறிய வேண்டும் என்று திட்டம் தீட்டி செயல்படுபவர்கள் ஒட்டு மொத்த இந்தியாவிலும் ஒரே நேரத்தில் தன் திட்டத்தை செயல்படுத்துவது கிடையாது. முற்றாக சிறுது சிறிதாக தான் காய்களை நகர்த்துகின்றார்கள். இதை பார்க்கும் மற்ற முஸ்லிம்கள், இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் ஏதோ ஒரு சின்ன கலவரம் என்றெண்ணி அலட்சியமாக இருந்துவிடுகின்றார்கள்.

உண்மைகளை வெளியில் கொண்டு வரும் பத்திரிக்கைகள் கூட முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை இலைமறைவு காய்களாக தான் சொல்லி வருகின்றன. குஜராத்திலும் அதுவே நடந்தது.

சில பத்திரிக்கைகள் பாசிஸ்ட்டுகளின் முகத்திரையை கிழிக்க களத்தில் இறங்கிய போது, மதவெறி பாசிச கும்பலால் துரத்தியடிக்கப்பட்டனர். பல இடங்களில் பத்திரிக்கயாளர்களை நுழையவே விடவில்லை. ANI என்ற செய்தி நிறுவனத்தினரின் கார் தாக்கப்பட்டது. உள்ளே இருந்த பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டார்கள். அவர்கள் உயிர் பிச்சை கேட்டு சிதறி ஓடினார்கள். அதன் பின்னர் அவர்களின் கார் எரிக்கப்பட்டது. (அவுட்லுக் மார்ச் 11, 2002).

அடுத்து இன்னொரு இடத்தில் Zee News என்ற செய்தி நிறுவனத்தினர் அங்கே வந்தார்கள். அவர்களின் புகைப்படக் கருவிகள் நொறுக்கப்பட்டன. அங்கு வந்த பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டார்கள். பல தொலைகாட்சி சானல்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இப்படி அனைத்து கதவுகளையும் மூடிவிட்டு தான் இந்த  பாசிச கும்பல் தன் ரத்தப்பசியை தீர்த்து கொண்டது. முழு செய்தியையும் அறிந்தால் இந்த உலகமே அதிர்ந்து போய்விடும்.

திட்டமிட்ட பொருளாதார சீரழிப்பு

சத்யம் சிவம் சுந்தரம்

ஜெய் ஸ்ரீராம்

விழித்தெழு¡ முன்னேறு ¡ சிந்தி ¡ செயல்படுத்து¡  உன் தேசத்தை காப்பாற்று¡  உன் மதத்தை காப்பாற்று¡

பொருளாதார புறக்கணிப்பு ஒன்றே தீர்வு¡ தேச விரோத சக்திகள் இந்துக்களிடமிருந்து பணம் சம்பாதித்து, இந்துக்களை அழிப்பதற்கே பயன்படுத்துகிறார்கள்¡ அவர்கள் ஆயுதங்கள் வாங்குகிறார்கள்¡ நம் சகோதரிகளுக்கும் பெண்களுக்கும் தொல்லை கொடுக்கிறார்கள்¡ இந்த சக்திகளின் முதுகு தண்டை முறித்து மூலையில் முடக்க இருக்கும் ஒரே வழி “பொருளாதார ஒத்துழையாமையே”

சபதம் எடுப்போம் -

1. இன்றிலிருந்து நான் எந்த ஒரு பொருளையும் முஸ்லிமின் கடையிலிருந்து வாங்கமாட்டேன்!

2. எந்த ஒரு பொருளையும் இந்த தேச விரோத சக்திகளுக்கு விற்க மாட்டேன்!

3. தேச விரோதிகளின் ஹோட்டல்களையோ, வாகனம் பழுது பார்க்கும் கேரேஜ்களையோ பயன்படுத்தமாட்டேன்!

4. என்னுடைய வாகனங்களை இந்துக்களின் கேரேஜிலேயே கொடுப்பேன்¡ ஆனி முதல் தங்கம் வரை முஸ்லிமால் செய்யப்பட்ட எந்த ஒரு பொருளையும் வாங்கமாட்டேன், விற்கவும் மாட்டேன்!

5. முஸ்லிம் கதாநாயகன்-கதாநாயகிகள் நடித்த சினிமாக்களை முழு மனதுடன் புறக்கணிப்பு செய்வேன்¡! தேசவிரோதிகளால் தயாரிக்கப்பட்ட சினிமாக்களை வீசியெறிவேன்!

6. முஸ்லிம்களுடைய அலுவலகத்தில் பணிபுரிய மாட்டேன்¡ வாடகைக்கும் விடமாட்டேன்!

7. நம் வணிகத்தளங்களில் எந்த ஒரு பகுதியையும் முஸ்லிம் வாங்க அனுமதிக்கமாட்டேன். நம் சமுதாயத்தினர் வாழும் பகுதிகளில், காலனிகளில், முஸ்லிம்களுக்கு வீடுகளை விற்கவோ, வாடகைக்கு விடவோ மாட்டேன்!

8. எவர் இந்திய தேசத்திற்கு பாதுகாப்பு தருகிறாரோ, அவருக்கே நிச்சயமாக வாக்களிப்பேன்.

9. பள்ளிகளில், கல்லுஸரிகளில், வேலை செய்யும் இடங்களில், நம் சகோதரிகளும், பெண்களும் முஸ்லிமின் காதல்-வலையில் சிக்கிகொள்ளாமல் விழிப்புடன் பார்த்து கொள்வேன்!

10. முஸ்லிம் ஆசிரியரிடமிருந்து எந்த கல்வியையும், பயிற்சியையும் பெற மாட்டேன்

இவ்வகை கடுமையான பொருளாதார புறக்கணிப்பு இச்சக்திகளை திணரடிக்கும்¡ இது அவர்களின் முதுகு தண்டை முறிக்கும்¡! பிறகு அவர்களுடைய வாழ்வே வெகு சிரமமாகிவிடும். நண்பர்களே, இந்த பொருளாதார புறக்கணிப்பை இன்றே தொடங்குங்கள்¡ நம் முன்னால் எந்த ஒரு முஸ்லிமும் தலை தூக்கமாட்டான்! இந்த துண்டு பிரசுரத்தை படித்தீர்களா? படித்து, பத்து நகல் எடுத்து நண்பர்களுக்கும் பரவிட செய்யுங்கள். இதனை செய்ய தவறுகிறவர்களுக்கு ஹனுமான்ஜி உடைய சாபம் உண்டாகட்டும்¡! ராமசந்திரஜி உடைய சாபமும் உண்டாகட்டும்¡! ஜெய் ஸ்ரிராம்!

- ஓரு உண்மையான ‘இந்து’ பற்றுமிக்கவன்.

இப்படி குஜராத்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு துண்டு பிரசுரம் அஹமதாபாத் வீதிகளில் வினியோகிப்பட்டது விஷ்வ ஹிந்து பரிஷத் குண்டர்களால்.

ஸஹ்மத் (SAHMAT) என்ற உண்மை அறியும் குழு, மார்ச் 11, 12ல் அஹமதாபாத் சென்று சேகரித்த உண்மைகளை “அஹமதாபாத்தில் இன சுத்திகரிப்பு” (Ethnic Cleansing in Ahmedabad) என்ற தலைப்பில் வெளியிட்ட தன் முதல் அறிக்கையில் தெரிவித்தவைகள் தாம் நாம் மேலே எடுத்து காட்டியது.

இம்மாதிரியான துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து மக்களை ஏவி விட்ட இவர்கள் முஸ்லிம் பொருளாதாரத்தை நசுக்கவும் செய்தார்கள். இதில் பெரும்பாலும் கலந்து கொண்டவர்கள் தலித்களும் (Schedule Caste), பழங்குடி இனத்தவர்களும் (Schedule Tribes) தான்.

ஒரு சமுதாயத்தை அடிமைபடுத்த, அவர்களின் பொருளாதாரத்தையும், கல்வியையும் நசுக்கவேண்டும். இந்த இரண்டையுமே சங்பரிவாரத்தினர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கலவரத்தின் போதும் முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடுவதும், அவற்றை தீயிட்டு கொளுத்தி நாசப்படுத்துவதும் தான் அவர்களின் வாடிக்கையாக இருந்து கொண்டிருக்கிறது.

பொருளாதாரத்தை நசுக்குவதன் மூலம் முஸ்லிம்களை தலைதூக்க முடியாமல் செய்திட இயலும் என்பதில் பாசிஸ்ட்டுகள் எந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள்  எடுத்த சபதத்திலிருந்தே நன்றாக விளங்க முடியும். குஜராத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் கூட இவ்வகை பிரச்சாரங்களும், பிரசுரங்களும் உலாவருவதை நாம் அனைவரும் அறிவோம்.

முஸ்லிம்கள் பாசிஸ வெறியர்களின் தாக்குதலுக்குள்ளாகி, தங்கள் பெற்றோர்களை, மனைவிகளை, குழந்தைகளை, உறவினர்களை, உடமைகளை இழந்து இன்று அடுத்த வேளை சாப்பாட்டிற்காக தவித்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உதவிகள் செய்ய கூட அரசு முன்வரவில்லை.

தினம் தினம் சம்பாதித்து தன் குடும்பத்தை காத்துவந்த தினக்கூலி முஸ்லிம்கள் முதல் கோடி கோடியாய் சம்பாதித்து வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருந்த கோடீஸ்வர முஸ்லிம் வரை லட்சோப லட்சம் முஸ்லிம்கள் சொந்த நாட்டிலியே அகதிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தினக்கூலி முஸ்லிம்கள் பல நாட்கள் வேலை இல்லாமல் பட்டினியில், வெளியில் சென்று சம்பாதிக்கவும் முடியாமல் (அகதி முகாமிற்கு வெளியே சென்றால், இந்துக்கள் கொன்று விடுவார்கள் என்ற அச்சம்) ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெளி உலக தொடர்பற்று இருக்கிறார்கள்.

கலவரம் ஏற்பட்ட பிப். 28 முதல் ஒரு பைசா சம்பாதிக்க வழியில்லால் 6 நபர்கள் கொண்ட தன்னுடைய குடும்பத்தினர் பசியால் வாடுகிறார்கள். நாங்கள் எப்படியோ பசியை பொறுத்து கொள்வோம். ஆனால் ஆறுமாத குழந்தையால் எப்படி முடியும்? பாலில்லாமல் பசியால் துடிக்கிறது என்று ஜுஹாபுராவை சேர்ந்த முஹம்மத் முஸ்லிம் என்பவர் தன் வேதனையை கொட்டி தீர்த்தார்.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சொந்த கடைகளையும், வணிக நிறுவனங்களையும் வைத்திருந்தார்கள். அவர்களெல்லாம் ஒரே இரவில் பிச்சைக்காரர்கள் ஆக்கப்பட்டார்கள். அவர்களின் கடைகளும், வணிக நிறுவனங்களும் சுத்தமாக அழிக்கப்பட்டு விட்டது.

அடுக்குமாடி கட்டிடங்களில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் கூட விட்டு வைக்கப்படவில்லை. அவர்களும் இன்று அகதிகள்.

வங்கியில் தனக்கு தேவையான பணம் இருந்தும் சிலர் இதே கொடுமையை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். வங்கியில் போதுமான பணம் இருந்தும், வங்கி சென்று பணம் எடுக்க அவர்களால் முடியவில்லை. அந்த வங்கி இந்துக்கள் வாழும் ஆஷ்ரம் ரோட்டில் உள்ளது.

பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களின் தொழிலை இழந்ததால், மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளகி உள்ளனர். தங்களுக்கு தங்களே உதவி செய்து கொள்ள முடியாதவர்களாக உள்ளனர். வாகன போக்குவரத்து முழுதும் முஸ்லிம்களின் கைகளிலேயே இருந்தது. ஆனால் இன்று அனைத்தையும் இழந்து விட்டனர். கோத்ரா மாநகராட்சியில் மட்டும் முஸ்லிம்களுக்கு சொந்தமான லாரிகள் ஆயிரத்திற்கும் மேல் எரிக்கப்பட்டுவிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடவேண்டும், எரித்து சாம்பலாக்கிட வேண்டும் என்று தான் கற்ற பாடத்தை குஜராத்தில் செயல்படுத்தி பார்த்திருக்கிறது சங்பரிவார கும்பல். இது ஒரு சோதனை களம் தான்!

அகதிகளான மண்ணின் மைந்தர்கள் - முஸ்லிம்கள் - வீடு திரும்ப வேண்டுமென்றால், அவர்கள் இந்துக்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலை செய்ய கூடாது, இந்துக்களின் விழாக்களில் கலந்து கொள்ளகூடாது, அவர்கள், முஸ்லிம்களின் சொத்துக்களை பயன்படுத்துவதை தடுக்கக்கூடாது (உதாரணமாக வாகனங்கள்), தாடிகள் வைக்கக்கூடாது, இந்து மதத்திற்கு மாறவேண்டும், முஸ்லிம் பெண்களை கற்பழித்த கேஸ்களை வாபஸ் வாங்கவேண்டும் என்று இந்துக்கள், முஸ்லிம்களுக்கு அதாவது சொத்துக்களை எல்லாம் பிடிங்கி கொண்டு, அவர்களின் பெண்களை கற்பழித்து கொலை செய்து விரட்டியடிக்கப்பட்ட அந்த முஸ்லிம்களுக்கு நிபந்தனை இடுகிறார்கள். இது தான் ஜனநாயக நாடு. அனைத்து மதத்தினரையும் நீதமாக வாழவைத்து கொண்டிருக்கும் நாடு(!).

இது மட்டுமல்ல, பன்வாட் என்ற கிராமத்தை சேர்ந்த இந்துக்கள் சுவரில் எழுதி வைத்திருக்கும் செய்தி இந்திய முஸ்லிம்களை கதிகலங்க வைத்திடுவதாக உள்ளது. அந்த செய்தியை கண்டு அகதிகளான அந்த அப்பாவி முஸ்லிம்கள் பயந்து நடுங்கிபோய் இருக்கிறார்கள். அந்த செய்தி வேறொன்றுமல்ல இதுதான்: முஸ்லிம்கள் இங்கு திரும்பவும் வந்தால், அவர்களின் மனைவிகளையும், பெண்களையும் கற்பழிப்போம்

இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறதே என்று அந்த மாவட்டத்தின் ஆட்சியரிடம் கேட்டால், அதற்கு அவர், “நடப்பவற்றை எல்லாம் நாங்கள் நன்றாக அறிவோம். இப்படி எல்லாம் செய்யாதீர்கள், பேசி தீர்த்து கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லியிருக்கிறோம். இது தான் எங்களால் முடியும். இரண்டு சமுதாயத்தினரும் இதனை பேசி தீர்த்து கொள்வது தான் சரியாக இருக்கும்” என்று கூறுகிறார்.

முஸ்லிம்கள், இந்துக்களை ஊரை விட்டு அடித்து விரட்டி, வீடு திரும்ப இப்படி நிபந்தனையிட்டால், யாராவது இப்படி பேசி தீர்த்து கொள்ளுங்கள் என்று விட்டுவிடுவார்களா? இல்லை அவர்கள் மீது நாம் கைதான் வைத்திடமுடியுமா? வாசகர்கள் சிந்திக்கவேண்டும்.

நம்மை “தாடி வைக்கக்கூடாது, முஸ்லிமாக இருக்கக்கூடாது, இந்துவாக மாறவேண்டும்” என்றெல்லாம் கட்டளையிட யார் இவர்கள்? அக்கிரமக்காரர்களின் அடக்குமுறைக்கு பணிந்து போக கோழைகள் அல்ல முஸ்லிம்கள். உடல் இரு கூறாக்கப்பட்டபோதும், உடல்கள் இரும்பு சீப்பை கொண்டு கீறி கிழிக்கப்பட்டபோதும், மர்ம ஸ்தானத்தில் அம்பெய்தி கொள்ளப்பட்டபோதும், இரும்பு கவசம் அணிவித்து கடும் வெயிலில் நிற்க வைத்தபோதும், சுட்டெறிக்கும் பாலைவனத்தில் இவரும் உடம்புடன் கிடத்தி, அசையாதிருக்க நெங்சில் பாராங்கல்லை வைத்து கொடுமைபடுத்தியபோதும் எதிரிகளிடம் பணிந்திடாத சமுதாயம் இந்த முஸ்லிம் சமுதாயம். எம்மை பார்த்து கு பிரியத்திற்கு அழைக்கிறது, இல்லை இழுக்கிறது கா பிர் கூட்டம். எம் உயிரே போனாலும் சரி, எம்மை துண்டு துண்டாக வெட்டி வீசினாலும் சரி அல்லாஹ்வின் மீது ஆணையாக எம் நாவுகள் லாயிலாஹா இல்லல்லாஹ்” என்பதை தவிர வேறொன்றும் கூறாது. அதனை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் எமக்கெதிராக திரண்டு வந்தாலும் சரியே!

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

அன்பு சகோதரர்களே! நாம் இதுவரை அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த போதும், அதன் பிறகும் எத்தனை எத்தனையோ கலவரங்களை சந்தித்திருக்கிறோம். அந்த கலவரங்கள் அனைத்திலும் பெரும் இழப்புகள் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. அதிகமான உயிர் சேதம், பொருட்சேதம். இதில் 90மூ இழப்பு முஸ்லிம்களுக்கே. இப்படி நாம் இழந்த உயிர்கள் 4.5 லட்சத்திற்கும் மேல். இழந்த பொருட்கள் கோடான கோடி ரூபாய். 4.5 லட்சம் முஸ்லிம்களை மட்டும் நாம் இழக்கவில்லை. அவர்கள் வழி சந்ததிகளையும் பிறப்பிற்கு முன்பே இழந்திருக்கிறோம். இந்த இழப்புகள் நமக்கு ஏற்பட்டிருக்காவிட்டால் இந்தியாவில் மாபெரும் சக்தியாக நாம் இருந்திருப்போம்.

இந்தியாவில் முஸ்லிம்கள் மாபெரும் சக்தியாக உருவெடுத்துவிட கூடாதென்று பாசிச சக்திகள் இந்தியாவை பாகிஸ்தான் என்றும், இந்தியா என்றும் பிளந்து போட்டார்கள். மேலும் இந்தியாவில் தன் ஆதிக்கத்தின் கீழே முஸ்லிம்களை வைத்திருக்க வேண்டும் எனவும், அவர்களை தலையெடுக்க முடியாமல் தாழ்த்தி வைத்திருக்க வேண்டும் எனவும் திட்டமிட்ட பாசிச சக்திகள் முஸ்லிம்களை அனைத்து துறையிலும் வளரவிடாமலேயே பார்த்து கொள்கிறார்கள்.

அவர்கள் செய்யும் சூழ்ச்சியால் நம்மால் எந்த துறையிலும் ஆதிக்கம் செலுத்தமுடியாமல் இன்று நம் சொந்த நாட்டிலேயே தவித்து கொண்டிருக்கிறோம். வெளிநாடுகளில் நம்மால் சாதித்திட முடிந்ததை உள்நாட்டில், நம் சொந்த நாட்டில் ஏன் நம்மால் சாதிக்க முடியாது? நிச்சயமாக முடியும். ஆனால் நம்மை வளரவிடவில்லை இந்த சக்திகள்.

மேலும் நம்மை வகுப்புகலவரங்கள் ஏற்படுத்தி நம்மை கூட்டங்கூட்டமாக கொலை செய்கிறார்கள். இதையெல்லாம் நாம் சென்ற அத்தியாத்தில் விரிவாகவும், விளக்கமாகவும் கண்டோம்.

இப்படியாக முஸ்லிம்களை அழித்து இந்தியா இந்து ராஜ்யமாக்கிட அனைத்து வேலைகளையும் ஓசையில்லாமல் செய்து வருகிறார்கள். இந்து ராஜ்யத்தில் ஒவ்வொரு குடிமகனும் இந்துவாக இருக்கவேண்டும் அல்லது இந்து கடவுளர்களை ஏற்று அவர்களுக்கு சிரம் தாழ்த்திட வேண்டும் என்பதே இந்துத்துவவாதிகளின் அவா. இதை ஏற்காதவர்களை வெட்டி சாய்ப்பது கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கை என்று நினைக்கிறார்கள்.

எனவே, இவர்கள் எந்த முஸ்லிமையும் இந்திய நாட்டில் முஸ்லிமாக வாழ அனுமதியளிப்பதில்லை. அப்படி வாழ விரும்பினால் அவன் ஒரு முஹம்மதிய இந்துவாக வாழ்ந்து கொள்ளலாம் நம் ஜனாதிபதி ஏபிஜே.அபுல் கலாம் மாதிரி. இல்லை நான் ஒரு முஸ்லிமாகத்தான் வாழ்வேன் ஒரு முஸ்லிமாகவே மரணிப்பேன் என்பது நம் ஆசையாக இருந்தால், மேலே நாம் குறிப்பிட்ட அனைத்தும் நமக்கு நிகழும். அதனை எதிர்கொள்ளவதற்கு அனைத்து ஏற்பாட்டையும் தயார் செய்து கொள்வது இன்றைய இந்திய முஸ்லிமின் கட்டாய கடமை.

இதனை ஒரு முஸ்லிம் எடுத்து கூறி எச்சரிக்கை செய்தால், சக முஸ்லிம்கள் எச்சரிக்கை செய்யும் அந்த நபரை – முஸ்லிமை தீவிரவாதி எனவும், ‘உன் போன்ற ஆட்களால் தான் முஸ்லிம்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது’ எனவும் கூறி அலட்சியம் செய்கின்றனர்.

ஆனால் இன்று முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாயத்தவர்களும், இந்து, இந்தியா டூடே போன்ற பத்திரிக்கைகளும் கூட, ‘இந்த நிலை தொடர்ந்தால், முஸ்லிம்களுக்கு தற்காப்பு நடவடிக்கையை தவிர வேறில்லை’ என்று கூறுகின்றன.

பாலஸ்தீனில் யூதர்கள் ஆக்கிரமித்த போதும் முஸ்லிம்கள் இதையே சொன்னார்கள். எச்சரிக்கை செய்தவர்களை அலட்சியம் செய்தார்கள். இன்று அவர்களின் நிலை மிகவும் கவலைகிடமானதாக உள்ளது.

போர் மேகங்களால் சூழப்பட்ட நிலையில் இருக்கும் முஸ்லிம் சமுதாயம் இன்னும் இதனை உணர்ந்ததாக தெரியவில்லை. உறக்கம் இன்னும் கலையவில்லை.

எங்கேயோ நடக்கும் பிரச்சனை தானே, என்று இன்றும் வாழாவிருக்கிறோம். ஒரு முனையில் பற்றவைத்த நெருப்பு மறுமுனை வரை வரும் என்பதை நாம் அறிவோம்.

நாட்டின் ஒரு பகுதியில் நம் சகோதரன் கொல்லப்படுகிறான். நம் சகோதரிகளும் பெண்பிள்ளைகளும் வயது வித்தியாசமின்றி நடு ரோட்டில் முழு நிர்வாணப்படுத்தி கற்பழிக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்படுகிறார்கள். பச்சிளம் பாலகர்கள், இரண்டே இரண்டு நாள் குழந்தை உட்பட தீயில் வீசியெறியப்பட்டார்கள். கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் அவளின் வயிறை பிளந்து, குழந்தையை சூலாயிதத்தால் குத்தி வெளியே எடுத்து தன் வீரத்தை வெளிபடுத்தினார்கள் கோழைகள். முஸ்லிம்களின் சொத்துக்களை பறித்து கொண்டு ஊரைவிட்டு விரட்டியடித்தார்கள். கோடீஸ்வரர்கள் எல்லாம் பிச்சைக்காரர்களாக ஆனார்கள் ஒரே இரவில்.

அங்கே கொல்லபட்டவன் நம் சகோதரன் இல்லையா? கற்பழிக்கப்பட்டது நம் சகோதரிகள் இல்லையா? எத்தனை பாசத்துடன் வளர்த்த குழந்தைகள் எல்லாம் தீயிட்டு கொளுத்தப்பட்டனவே, அதனை தன் கண்ணால் கண்ட பெற்றோர்கள் எப்படி துடித்திருப்பார்கள். தன் பெற்றோரை, உற்றார் உறவினரை இழந்த குழந்தைகளின் எதிர்காலம் தான் என்ன?

இதே சம்பவம் நாளை நம் வீட்டில் நடந்தால் பேசாமல் இருந்திடுவோமா? ஆனால் நாம் இன்று பேசாமல் இருக்கிறோம் என்பது தான் ஆச்சரியமாக உள்ளது. பாசிச சக்திகளின் திட்டங்கள் என்ன என்பதை இப்போது நாம் நன்றாக உணர்கிறோம். உணர்ந்தும் நாம் உறக்கத்தில் இருக்கின்றோம்.

நடைபாதையில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் கல்லை எடுத்து ஓரமாக போடுவது ஈமானின் கிளைகளில் கடைசியானது என்று ரசூல்(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மனிதர்களுக்கு தீங்கிழைக்க கூடியது ஒரு சிறு கல்லாக இருந்தாலும், அந்த கல்லிடமிருந்து மனித சமுதாயத்தை காப்பது ஒரு முஸ்லிமின் கடமை. ஆனால் இங்கு நடப்பது மனிதர்களை காயப்படுத்துவது அல்ல, நம் சகோதர, சகோதரிகளை உயிருடன் எரிப்பது. இதிலிருந்து முஸ்லிம்களை காப்பது யாருடைய கடமை? அல்லாஹ்வே வந்து அவர்களை காப்பானா? அப்படி அவனே வரவேண்டும் என்றால், கல்லும் முள்ளும் குத்தி கீறும் போது வந்து காத்திருக்க வேண்டுமே. ஏன் வரவில்லை? நிச்சயமாக அல்லாஹ் வந்து அவர்களை காக்கமாட்டான். மாறாக ஒவ்வொரு முஸ்லிமும், பாதிக்கபடும் மக்களை பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றான். அதற்கான பயிற்சிகளில் சிறிய ஒரு பயிற்சி தான் நடைபாதையில் கிடந்து மக்களுக்கு தீங்கிழைக்கும் கல்லையும், முள்ளையும் அகற்றுவது.

குஜராத் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் அவர்களிடன் ஈமான் இல்லை என்று சிரமமில்லாமல் ஒரு பதிலை கூறி நழுவ பார்க்கிறோம். அல்லது முஸ்லிம்களிடம் ஒற்றுமை இல்லை என்று ஓட்டம் எடுக்கிறோம்.

முஸ்லிம்களை ஒற்றுமைபடுத்த நாம் செய்த முயற்சி என்ன என்பதை ஒரு கணம் சிந்தித்து பார்த்தோமா?

அவர்களிடம் இருக்கும் ஒரு சில வேற்றுமையை பெரிதுபடுத்தி அதனை வளர்க்கிறோம்.

நாம் அனைவரும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கக்கூடியவர்கள் என்பது ஒற்றுமையாக தெரியவில்லையா?

நாம் அனைவரும் ரசூல்(ஸல்) அவர்களை மட்டுமே தலைவராக ஏற்று கொண்டுள்ளோம் என்பது ஒற்றுமையாக தெரியவில்லையா?

ஐவேளை தொழுகிறோம் இது ஒற்றுமை இல்லையா?

ரமலானில் மட்டும் நாம் கடமையான நோன்பை நோற்கிறோம் இது ஒற்றுமை இல்லையா?

ஹஜ்ஜின் போது நமக்குள் இருக்கும் ஒற்றுமை பார்த்து உலகமே ஆச்சரியப்பட வில்லையா?

ஏன், மரணத்தின் போது கூட ஒரே மாதிரி அடக்கம் செய்யப்படுவதில் நமக்குள் இருக்கும் ஒற்றுமை புலப்படவில்லையா?

ஆயிரம் விஷயங்களில் நமக்குள் இருக்கும் ஒற்றுமையை விடுத்து, ஒரு சில விஷயங்களில் வேறுபடுவதால், நாம் ஒற்றுமையின்றி பிரிந்து கிடக்கிறோம் என்பதாகிவிடுமா? நிச்சயமாக நம் முஸ்லிம் சமுதாயம் ஒற்றுமையாகவே இருக்கிறது. தனித்தன்மையை இன்றளவும் விட்டு கொடுக்காமல் காத்து வருகிறது.

நாம் ஒற்றுமையாக இல்லை என்ற எண்ணம் தான் நம்மை பிரித்து பிளந்து போட்டுவிட்டது. இந்த எண்ணத்தை வீசியெறிந்தால் நிச்சயமாக நமக்குள் இருக்கும் ஒற்றுமை நமக்கு புலப்படும்.

நமக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தால், ஒற்றுமையை பற்றியோ, ஈமானை பற்றியோ எள்ளளவும் கவலைப்படாமல் தன்னையும், தன் குடும்பத்தையும் காத்துக்கொள்ள தன்னால் ஆன அனைத்து முயற்சியும் செய்வோமா, மாட்டோமா? நிச்சயமாக செய்வோம். இன்று குஜராத் நாளை நம் பகுதி. இல்லை, நமக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்காது என்று யாராலும் கூற முடியாமா? நடந்தால் நம்மை காத்துக்கொள்ள என்ன செய்யபோகிறோம்? என்ன செய்து வைத்திருக்கிறோம்? லட்ச லட்சமாக செலவழித்து கட்டப்பட்ட நம் மாளிகை, பாசிச கரங்களால் தவிடு பொடி ஆவதிலிருந்து தடுத்து நிறுத்த என்ன செய்து வைத்திருக்கிறோம்? நம் பெண்கள் பாசிஸ்ட்டுகளுக்கு தாரை வார்த்து கொடுக்கவா? நம் மாளிகைகள் கரசேவைகாரர்கள் பயிற்சி எடுக்கவா? ‘இது யோசிக்கும் நேரமல்ல, செயல்படுத்தும் நேரம்’ என்ற ஜார்ஜ் புஷ்ஷின் வர்ணனை நமக்குத்தான் பொருந்தும்.

அடுத்ததாக, ஜீவ மரண போரட்டத்தில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், மசாயில் பிரச்சனைகளை கையில் எடுத்து கொண்டு அதனை தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறது இன்றைய இளைய சமுதாயம் என நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.

பெரும் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவிடாமல் இஸ்லாமியர்களுக்கு அப்பாற்பட்ட ஏதோ சக்தி நம்மை தடுத்துவருகிறது. இப்படி கூறுவதால் முஸ்லிம் தலைவர்களை குறை கூறுவதாக எடுத்து கொள்ளவேண்டாம். நம் தலைவர்களையும் சேர்த்தே இந்த விஷயத்தில் திசை திருப்புகிறார்கள். இவர்களிடம் சின்ன பிரச்சனைகளை கிளப்பிவிட்டால் அதிலேயே அவர்கள் கவனம் செலுத்துவார்கள், நம் வேலைகளை இலகுவாக செய்து முடித்திட இது ஏதுவாக இருக்கும் என ஏதோ ஒரு சக்தி செயல்படுகிறது. இதில் பெரும்பாலும் சிக்கி தவிப்பது நம் இளைய சமுதாயம்.

நாம் உலகம் முழுவதும் அழிக்கப்படுவதற்கும், அவமானப்படுத்தப்படுவதற்கும் காரணம், நமக்கென்று ஒரு தலைமையில்லாது போனதே. முஸ்லிம்களுக்கு தலைமை – அமீர் - இல்லாத ஒரு நேரமே கிடையாது என்பதை நாம் ரசூல்(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்தும், சகாபாக்கள் வாழ்விலிருந்தும் படித்த பாடம். இருவர் பிரயாணம் சென்றாலும் அதில் ஒருவரை அமீராக தேர்தெடுத்து கொண்டு பிரயாணம் செய்ய பணிக்கப்பட்டவர்கள் நாம். ஆனால் உலக மக்கள்தொகையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் முஸ்லிம் சமுதாயம் தனக்கென்று ஒரு தலைமையில்லாமல் தவித்து கொண்டிருக்கிறது. பல இன்னல்களுக்கும், அவமானங்களுக்கும் ஆளாகி நிற்கிறது. (இஸ்லாமிய தலைமையை – கிலா பத் பற்றிய அதிக விளக்கம் பெற விடியல் வெள்ளி என்ற மாத இதழின் அக்டோபர் 1999ல் வெளியான கிலா பத் சிறப்பிதழ் மற்றும் இலக்கியச்சோலை வெளியீடான ‘கிலாபத்’ என்ற புத்தகத்தை படிக்கவும்)

நமக்கென்று ஒரு தலைமை – கலீபா – இருந்த நாட்களில் கடைகோடி குடிமகனும் நிம்மதியாக வாழ்ந்தான் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமான வரலாறு.

கலீபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் - இஸ்லாமிய ஆட்சி காலத்தில் - ரோம் வெற்றி கொள்ளப்பட்டது. எங்சியிருந்த ஒரு பகுதியில் ஒரு பெண் அவமானப்படுத்தபடுகிறார் ரோம ஆட்சியாளர்களால். அவள் கலீ பாவுக்கு இந்த சம்பவத்தை கொண்டு செல்வேன் என்று கூறிய போது,“இங்கிருந்து கலீபாவுக்கு முறையிட்டால், உன் கலீபா வந்து உன்னை எப்படி காப்பாற்றுவார்” என்று கூறி நகைத்தனர் அந்த ரோமர்கள். இந்த செய்தி கலீபா உமர் (ரலி) அவர்களுக்கு சிறுது நாட்கள் கழித்து எடுத்து செல்லப்பட்டது. கலீபா அவர்கள் உடனே படை நடத்தி சென்று எங்சியிருந்த பகுதியை வெற்றிகொண்டு அங்கே இஸ்லாத்தை கொண்டு அமைதியை நிலைநாட்டி திரும்பினார்கள். கடைசி குடிமகனும், குடிமகளும் அமைதியுடன் வாழ்ந்தார்கள்.

கடைசி குடிமகனும் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் நிச்சயமாக இஸ்லாம் இந்த மண்ணை ஆளவேண்டும். இது தான் வரலாறு தரும் படிப்பினை. இஸ்லாமிய ஆட்சியை இந்த மண்ணில் நிலைநாட்டிட அதிகமதிகம் பங்காற்றிட வேண்டியவர்கள் இளைஞர்கள்.

•     இளைஞர்களே நன்றாக சிந்தியுங்கள்.

•     இளைய சமுதாயம் எதையும் சாதிக்க வல்லமை பெற்றது.

•     இளைஞர்களே நாளை இஸ்லாம் உங்களை கொண்டு தான் பாராள போகிறது.

•     இளைஞர்களே நீங்கள் தான் இஸ்லாமிய சமுதாயத்தின் முதுகெழும்பு

•     இளைஞர்களே எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்த வரலாற்றின் சொந்தங்களே!

•     வீர சிங்கங்களே நாளைய தலைமுறையின் வரலாற்று புருஷர்களே!

•     பத்ரில் குறைஷிகளை மண்ணை கவ்வ வைத்தோம் அப்போது நாம் வெறும் 313 பேர்தான். ஆனால் குறைஷிகளோ 1000 பேர்.

•     ரோம, பாரசீக வல்லரசை வென்றவர்கள் நாம். முஸ்லிமின் வீரத்தை உலகமே மெச்சியது.

•     இளைஞர்களே புறப்படுங்கள் புதியதோர் சரித்திரம் படைக்க.

•     இளைஞர்களே, இந்த உலகில் அமைதியை நிலைநாட்டிட வேண்டியவர்கள் நீங்கள். இஸ்லாத்தை கொண்டு அமைதியை ஏற்படுத்த விரைந்திடுங்கள். புதியதோர் சமுதாய புணரமைப்புக்கு வித்திடுவோம் புறப்படுங்கள். இது உங்களால் முடியும். உங்களால் மட்டும் தான் முடியும்.

•     முஸ்லிமின் வீர பார்வைக்கு எதிராய் நிற்க திராணியற்றவர்கள், உறங்கும் நேரத்தில் உயிரை மாய்க்கிறார்கள்.

•     பழங்கதைகளை கேட்டு கோழையாக இருந்தது போதும். முஸ்லிமின் வீரம் சங்பரிவார் உணரட்டும் புறப்படுங்கள்.

இளைஞர்களே நன்றாக சிந்தியுங்கள் -

யூதர்களால் 100 வருடங்கள் திட்டம் தீட்டி, முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் ஒரு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்க முடிகிறது,

கிருஸ்தவர்களால் 120 ஆண்டுகள் திட்டம் தீட்டி, ஸ்பெயின் நாட்டில் முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் அழிக்கமுழகிறது,

சங்பரிவார கும்பலால் 200 வருடங்கள் திட்டம் தீட்டி, இந்தியாவை இந்து ராஜ்யமாகிட கடும் முயற்சி எடுக்க முடிகிறது, முயற்சியில் வெற்றியும் பெற முடிகிறது,

ஆனால் முஸ்லிம்களான நம்மால் மட்டும் எதையுமே சாதித்திட இயலாதா?

யூத, கிருஸ்தவ, இந்துக்களால் தங்களுக்காக ஒரு நாட்டை உருவாக்கிட முடிகிறது. ஆனால் நம்மால் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை நடைமுறைபடுத்திட ஒரு சிறு பகுதியை கூட இந்த பூமியில் உருவாக்கிட முடியாதா? அதற்கு திராணியற்றவர்களா நாம்?

இளைஞர்களே நீங்கள் நினைத்தால் ஒரு பகுதியல்ல இந்த உலகம் முழுவதும் தீன் கொடியேற்றி அல்லாஹ் வழங்கிய சட்டத்தினை அமுல்படுத்தி அமைதியை நிலைநாட்டிட முடியும். கொடுமைக்காரர்களின் குரல்வலையை நெரித்திட முடியும். நீங்கள் முன் வந்தால் அனைத்து உதவிகளையும் அல்லாஹ் செய்திட போதுமானவன்.

நீங்கள் அல்லாஹ்வின் பிரதிநிதி. அல்லாஹ்வின் பூமியில் அக்கிரமக்காரர்களால் செய்யப்படும் குழப்பங்களை தடுத்து நிறுத்துவது உங்கள் கடமையில்லையா? அவர்களிடமிருந்து அப்பாவி மக்களை மீட்பது உங்கள் கடமையில்லையா? திப்புவின் மண்ணில் பிறந்த சிங்கங்களே முஸ்லிமின் வயிற்றில் பிறந்த நீங்கள் கோழைகளல்ல என்பதை நிரூபியுங்கள். அங்சுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்தான், ஆர்எஸ்எஸ்காரன் அல்ல என்பதை மனதில் நிறுத்துங்கள். பாசிஸத்தின் கடைசி ஊழியனும் அழிந்தான் என்ற செய்தி வரும் வரை தொடரட்டும் உங்கள் போர். பாரெங்கும் முழங்கட்டும் அல்லாஹ் அக்பர். அல்லாஹ் அக்பர். அல்லாஹ் அக்பர்.

ஆதாரங்களுக்காக எடுத்தகொள்ளப்பட்ட பத்திரிக்கைகள்

1. விடியல் வெள்ளி (ஏப்ரல், மே, ஜுன், ஜுலை, 2002)

2. ஓற்றுமை (மார்ச் 16-31,2002)

3. உணர்வு (மார்ச் - ஏப்ரல்)

4. மில்லி கெஸட்

5. அரப் நியூஸ் (Arab News, Saudi Arabian Daily)

6. ரியாத் டெய்லி (Riyadh Daily, Saudi Arabian Daily)

7. நியூஸ் வீக் (Newsweek, American Weekly)

8. A Preliminary Report of SAHMAT (Fact Finding Team)
Previous Post Next Post