ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம்

بسم الله الرحمن الرحيم



- அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ

ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்ற நேரமாகும். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இந்த இரவு நேரத்தை பல அமற்களைக் கொண்டு அலங்கரித்துள்ளார்கள். எனவே இவ்வாக்கத்தில் நபிகளாரின் இரவு நேர அமற்களைப் பற்றிய சிறு தொகுப்பை உங்களுக்கு முன்வைக்க விரும்புகிறேன்.

நபிகளாரின் வாழ்நாளில் இஷா தொழுகையின் பின் சுன்னத்துக்குப் பிறகு அவர்கள் செய்துள்ள காரியம் என்ன என்று நாம் தேடினோம் எனில் இரவுத்தொழுகையை அவர்கள் பேணித் தொழுது வந்தமைக்கான சான்றுகளை பெற்றுக்கொள்ள முடியும். நபி ஸல் அவர்கள் இரவுத்தொழுகையை இரவின் ஆரம்ப நேரம் , இரவின் நடுப்பகுதி , இரவின் இறுதிப்பகுதி போன்ற நேரங்களில் தொழுது வந்துள்ளார்கள். இதுவல்லாத இன்னும் சில அமற்களிலும் கவனம் செலுத்தியுள்ளார்கள்.

இரவு நேர வணக்கங்களின் சிறப்புக்கள்.

1) இரவுத்தொழுகை தொடர்ந்து பேணிவருவதின் சிறப்பு.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்)அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு, அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க. ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாவும்இருந்தேன்.
இரண்டு மலக்குகள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணற்றுக்குச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தன. இதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான் நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகின்றேன் என்று கூறினேன். அப்போது வேறு ஒரு மலக்கு என்னைச் சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார்.
இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா (ரலி) யிடம் கூறினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலேயே மிகவும் நல்லவர்!” என்று கூறினார்கள். அதன் பின்னர் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 1121, 1122


முஃமின்களின் பண்பாக அல்லாஹ் சொல்கிறான்

كَانُوْا قَلِيْلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُوْنَ‏
அவர்கள் இரவு நேரங்களில் குறைவாகவே தூங்குபவர்களாகவும்
(அல்குர்ஆன் : 51:17)

وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْنَ‏ 
பின்னிரவு நேரங்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருந்தார்கள்.
(அல்குர்ஆன் : 51:18)


பொறாமை கொள்ளத்தக்க அமல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.

ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார். இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின்உமர் (ரலி), நூல் : புகாரி 5025


ரமழானில் இரவுத் தொழுகை

“யார் நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமழான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்.” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 37


சுவனமே கூலி

“ஸலாமைப் பரப்புங்கள்! ஏழைகளுக்கு உணவளியுங்கள்! மக்கள் தூங்கும் போது தொழுங்கள்! (இதனால்) சொர்க்கத்தில் நுழையுங்கள்.” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின்ஸலாம் (ரலி)
நூல் : திர்மிதீ 2409


ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்ற நேரமாகும். இந்த நேரத்தை தேவையற்ற பேச்சுக்கள், மற்றும் வீணான விளையாட்டுக்களைக் கொண்டு வீணடிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை.

இஷாத் தொழுகைக்குப் பின் தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபடுவது.

அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதிவரைத் தாமதப்படுத்துவார்கள். இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும், இஷாவுக்குப் பின் பேசிக்கொண்டிருப்பதையும் வெறுப்பார்கள்.
(முஸ்லிம் : 1139.)

பகல் நேரங்களைப் பொருத்தவரை அதை அல்லாஹ் இவ்வாறு சொல்கிறான்.

وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا‏
மேலும், நாம் பகலை வாழ்க்கைத் தேவைகளைத் தேடிடும் நேரமாக்கவில்லையா?
(அல்குர்ஆன் : 78:11)

اِنَّ لَـكَ فِى النَّهَارِ سَبْحًا طَوِيْلًا
பகல் நேரங்களிலோ உமக்கு நிறையப் பணிகள் உள்ளன.
(அல்குர்ஆன் : 73:7)

பகல் நேரம் என்பது நாம் வாழ்வாதாரத்தை தேடுவதில், மற்றும் அழைப்புப் பணிகளில் ஈடுபடுதல் போன்ற பல காரியங்களில் ஈடுபடும் நேரமாகும்.

இரவு நேரம் என்பது எமக்குக் கிடைக்கும் ஒரு ஓய்வு நேரமாகும். எனவே அந்த ஓய்வு நேரத்தை முழுமையாக உறங்குவதற்கு மாத்திரம் பயன்படுத்தி விடாது வணக்கங்களைக் கொண்டு எம்மைப் படைத்த றப்புல் ஆலமீனை நெருங்குவதற்கான நேரமாகவும் நாம் பயன்படுத்த வேண்டும்.

அல்லாஹ் சொல்கிறான்

كَانُوْا قَلِيْلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُوْنَ‏
(முத்தகீன்கன்)இரவு நேரங்களில் குறைவாகவே தூங்குபவர்களாகவும்
(அல்குர்ஆன் : 51:17)

وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْن
பின்னிரவு நேரங்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருந்தார்கள்.
(அல்குர்ஆன் : 51:18)

فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ‏
எனவே, நீர் ஓய்வு பெறும் போது வணக்க வழிபாட்டின் கடும் உழைப்பில் முனைப்புடன் ஈடுபடுவீராக!
(அல்குர்ஆன் : 94:7)

وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ‏
மேலும், உம் இறைவனின் பக்கமே ஆர்வம் கொள்வீராக!
(அல்குர்ஆன் : 94:8)

اَمَّنْ هُوَ قَانِتٌ اٰنَآءَ الَّيْلِ سَاجِدًا وَّقَآٮِٕمًا يَّحْذَرُ الْاٰخِرَةَ وَيَرْجُوْا رَحْمَةَ رَبِّهٖ‌ قُلْ هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‌ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ‏
(இறையச்சமுடையவன்) அவனோ கீழ்ப்படிந்தவனாயிருக்கின்றான்; இரவு நேரங்களில் நின்று வணங்குகின்றான், மேலும், சிரம் பணிகின்றான்; மறுமையையும் அஞ்சுகின்றான்; மேலும், தன் இறைவனின் அருளுக்கு ஆசைப்படுகின்றான். இவர்களிடம் கேளும்:
(இத்தகைய மனிதனின் நடத்தை சிறந்ததா அல்லது அந்த மனிதனின் நடத்தையா?)
“அறிந்தோரும் அறியாதோரும் சமமாக முடியுமா? அறிவுடையவர்கள்தாம் நல்லுரைகளை ஏற்கின்றார்கள்.”
(அல்குர்ஆன் : 39:9)


இரவுத் தொழுகையும் அதன் சிறப்புக்களும்

عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلاَةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلاَةُ اللَّيْلِ

“ரமழான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்”. என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்


இரவில் தொழத் தொடங்கியவர் அதை விட்டுவிடக்கூடாது.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “அப்துல்லாஹ்! இரவில் (அதிகமாக) நின்று வணங்கிவிட்டு, இறுதியில் இரவுத் தொழுகையையே கைவிட வேண்டிய நிலைக்கு ஆளான இன்ன மனிதரைப் போன்று நீரும் ஆகிவிட வேண்டாம்.” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2140.
அத்தியாயம் : 13. நோன்பு


1) இஷாத் தொழுகையின் பின் சுன்னத் முதல் சுபஹ் வரை நபிகளார் தொழுத தொழுகைக்கு பல பெயர்கள் உண்டு.

1 : ஸலாத்துல் லைல்.(இரவுத் தொழுகை)
2: கியாமுல் லைல். (இரவில் நின்று வணங்குதல்)
3: வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை)

தஹஜ்ஜுத் (கண் விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.
தராவீஹ்: என்ற இந்தப் பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை. இமாம் புகாரி (றஹ்) அவர்கள் இரவுத் தொழுகைக்கு இட்ட தலைப்பே தராவீஹ் ஆகும்.

2) இரவுத் தொழுகையை எந்த நேரத்தில் தொழ வேண்டும்.?

இரவுத் தொழுகையை இஷா தொழுகை முடிந்த நேரத்திலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை தொழலாம். நபி (ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பின் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.

நபி தாவூத் அலை அவர்களின் இரவுத் தொழுகை:

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத்(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள்விட்டு விடுவார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத்(அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள். அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்’ என்று கூறினார்கள்.
( புகாரி : 3420.)


இரவுத் தொழுகையை முன் இரவில், அல்லது பின் இரவில் தொழுவது.

“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யார் இரவின் இறுதியில் எழ முடியாது என அஞ்சுகிறாரோ அவர் (முதலில்) வித்ர் தொழுதுவிட்டுப் பிறகு உறங்கட்டும்!. இரவில் தம்மால் எழ முடியும் என உறுதியாக நம்புகின்றவர் அதன் இறுதியில் வித்ர் தொழட்டும்.! ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் குர்ஆன் ஓதும்போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும்.(முஸ்லிம் 1381)


இரவுத் தொழுகையை பிரித்துத் தொழுவது.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
என்னுடைய சிறிய தாயாரும் நபி(ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்து அல் ஹாரிஸ்(ரலி) அவர்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகை நடத்திவிட்டுப் பின்னர் தம் வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுதுவிட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து ‘பையன் தூங்கிவிட்டானோ?’ அல்லது அது போன்ற ஒரு வார்த்தை கூறி விசாரித்துவிட்டு மீண்டும் தொழுகைக்காக நின்றார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களின் இடப் பக்கமாகச் சென்று நின்றேன். உடனே என்னை அவர்களின் வலப் பக்கத்தில் இழுத்து நிறுத்திவிட்டு (முதலில்) ஐந்து ரக்அத்துகளும், பின்னர் இரண்டு ரக்அத்துகளும் தொழுதுவிட்டு அவர்களின் குறட்டையொலியை நான் கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கினார்கள். பிறகு (சுப்ஹுத்) தொழுகைக்குப் புறப்பட்டார்கள்.’
(புஹாரி 117)

3) இரவுத் தொழுகையின் ரக்அத்களின் எண்ணிக்கை.

“ரமழானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது.?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன.; என் உள்ளம் உறங்குவதில்லை” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி)
நூல்கள்: புகாரீ 1147

இரவுத் தொழுகை தொழ வேண்டிய முறை.

صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ صَلَّى رَكْعَةً وَاحِدَةً تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்.” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 990

நபி ஸல் தொழுத முறைகள்.

1) (2+2= 4) (2+2=4) +3 =11 ரக்அத்கள்

2)2+2+2+2+2= 10+1=11 ரக்அத்கள்

3) கடைசி ஐந்து ரக்அத்களை வித்ராகத் தொழுவது அதில் இறுதியில் மட்டுமே அமர வேண்டும்.

4) நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரஹ்)
நூல்: புகாரீ 1139

நபி (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றிக்கிடையே ஸலாமைக் கொண்டோ அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி).
நூல்கள்: நஸயீ 1695, இப்னுமாஜா 1182, அஹ்மத் 25281

நபி (ஸல்) அவர்கள் வயதாகி பலவீனம் அடைந்த போது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். அதில் ஆறாவது ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லை. பின்னர் எழுவார்கள். ஸலாம் கொடுக்க மாட்டார்கள். பின்னர் ஏழாவது ரக்அத்தை தொழுவார்கள். பின்னர் ஸலாம் கூறுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் அமர்ந்து தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ


நபிகளாரின் இரவுத் தொழுகை.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். எனவே நான், ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள், இறைத்தூதர் அவர்களே! தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே?’ என்று கேட்டேன். அவர்கள், ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்ப வேண்டாமா?’ என்று கேட்டார்கள். (தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில்) நபி(ஸல்) அவர்களின் உடல் சதை போட்டபோது அமர்ந்து தொழுதார்கள். ‘ருகூஉ’ செய்ய நினைக்கும் போது, எழுந்து (சிறிதுநேரம்) ஓதுவார்கள். பிறகு, ‘ருகூஉ’ செய்வார்கள்.
( புகாரி : 4837. )

வித்ரு தொழுகைக்குப் பின் ஓத வேண்டிய துஆ



அப்துர்ரஹ்மான் இப்னு அப்ஸா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (வித்ரு) தொழுது விட்டு ஸலாம் கொடுத்தால் "ஸுப்ஹானல் மலிகில் குத்தூஸ் என்று மூன்று முறை கூறுவார்கள். மூன்றாவது முறை சத்தத்தை உயர்த்தி கூறுவார்கள். 
(நஸாஈ:1731)

_____________________________________

اَمَّنْ هُوَ قَانِتٌ اٰنَآءَ الَّيْلِ سَاجِدًا وَّقَآٮِٕمًا يَّحْذَرُ الْاٰخِرَةَ وَيَرْجُوْا رَحْمَةَ رَبِّهٖ‌ قُلْ هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‌ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ‏
எவன் மறுமையைப் பயந்து, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவு காலங்களில் நின்றவனாகவும், சிரம் பணிந்தவனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றானோ, (அவன் நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவானா? நபியே!) நீங்கள் கேளுங்கள்: கல்வி அறிவுடையவனும், கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா? (இந்தக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவர்கள் எல்லாம் (கல்வி) அறிவுடையவர்தாம்.
(அல்குர்ஆன் : 39:9)

வேதம் கொடுக்கப்பட்டவர்களில் சிலரிடமிருந்த நற்பண்பு :

لَـيْسُوْا سَوَآءً ‌ مِنْ اَهْلِ الْكِتٰبِ اُمَّةٌ قَآٮِٕمَةٌ يَّتْلُوْنَ اٰيٰتِ اللّٰهِ اٰنَآءَ الَّيْلِ وَ هُمْ يَسْجُدُوْنَ‏
அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான (தீய)வர்கள் அல்லர். வேதத்தையுடைய இவர்களில் (நல்லோரான) ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர். அவர்கள் இரவு காலங்களில் அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதி நின்று சிரம் பணிந்து வணங்குகின்றனர்.
(அல்குர்ஆன் : 3:113)

இரவு நேரத்தில் இறைவனை வணங்குவது எமக்கு மாத்திரமின்றி முன்னைய சமூகத்தாருக்கும் மார்க்கமாக்கப்பட்டிருந்த காரியம் என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். இதற்கு  நபி தாவூத் (அலை) அவர்களின் இரவுத் தொழுகை பற்றிய ஹதீஸும் எமக்கு சிறந்த சான்றாகும்.

இறுதித் தொடரில் நபிகளாரின் இரவுத் தொழுகை பற்றி நாம் சற்று விரிவாக அறிந்து கொண்டோம்.  அடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவு நேர அமற்களில்  இன்றியமையாத ஒன்றாக இருந்த பிரார்த்தனைகள் பற்றி நாம் அறிந்து கொள்வோம் . பல்வேறுபட்ட சந்தர்ப்ப துஆக்கள் மற்றும் பொதுவான துஆக்களை அண்ணலார் (ஸல்) அவர்கள் இரவு நேரத்திலே ஓதியுள்ளார்கள். அவற்றை நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ரமழான் மாத நோன்பு கடமை பற்றிய தொடர் வசனங்களின் நடு வசனமாக அல்லாஹ் சூரா பகராவில் துஆக் கேட்பதைப்பற்றிப் பேசுகிறான். இதன் மூலம் ஏனைய காலங்களை விட குறிப்பாக ரமழானில் நாம் அதிகம் அதிகம் பிரார்த்தனைகள் புரிய வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.  

அல்லாஹ் சொல்கிறான்:

وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ فَلْيَسْتَجِيْبُوْا لِىْ وَلْيُؤْمِنُوْا بِىْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ‏ 

மேலும் (நபியே!) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால்,

 “நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன்;

 என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன் (என்பதைத் தெரிவித்து விடுங்கள்). 

எனவே அவர்கள் என்னுடைய அழைப்பை விரைந்து ஏற்றுக் கொள்ளட்டும்.

 என்மீது நம்பிக்கை கொள்ளட்டும். 

அதனால் அவர்கள் நேர்வழி அடைந்திட முடியும்.”
(அல்குர்ஆன் : 2:186)

இஷாவுடைய தொழுகைக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் உறங்கத் தயாரானால் அதிலே பல்வேறு ஒழுங்கு முறைகளைப் பேணுவார்கள்.  இன்ஷா அல்லாஹ் அவை பற்றி "உறங்கச் சொல்லும் போது பேண வேண்டிய ஒழுங்கு முறைகளும். கேட்க வேண்டிய பிரார்த்தனைகளும்."  என்ற தலைப்பில் தனியாக விளக்குகிறேன். 

1) இரவு நேரப் பிரார்த்தனையைப் பற்றி
 நபி (ஸல்) அவர்கள் பொதுவாக சொன்ன செய்தி:

سَمِعْتُ النبيَّ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ يقولُ: إنَّ في اللَّيْلِ لَسَاعَةً لا يُوَافِقُهَا رَجُلٌ مُسْلِمٌ، يَسْأَلُ اللَّهَ خَيْرًا مِن أَمْرِ الدُّنْيَا وَالآخِرَةِ، إلَّا أَعْطَاهُ إيَّاهُ، وَذلكَ كُلَّ لَيْلَةٍ.
صحيح مسلم
الصفحة أو الرقم: 757 | خلاصة حكم المحدث : [صحيح]

நிச்சயமாக இரவில் ஒரு நேரமுண்டு! ஒரு முஸ்லிமான மனிதர் சரியாக அந்த நேரத்தில் இம்மை, மறுமை தொடர்பான எந்த நன்மையை வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்காமல் இருப்பதில்லை. இது ஒவ்வொரு இரவிலும் நடக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 

இச்செய்தியுனூடாக இரவு நேரத்தைப் பிரார்த்தனைக்கு தகுந்த நேரமாக, பிரார்த்தனைகள் அங்கிகரிக்கப்படும் நேரமாக  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எமக்கு அடையாளப் படுத்துகின்றார்கள். எனவே இரவு நேரத்தில் அதிகமாக நாம் இறைவனிடம் கையேந்த வேண்டும்.

அல்லாஹ் முஃமின்களின் பண்பாகச் சொல்கிறான்: 

تَتَجَافَىٰ جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا 

(இரவு நேரத்தில்) அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். 

திருக்குர்ஆன்  32:16

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவின் பாதி நேரம் அல்லது மூன்றில் இரு பகுதி நேரம் கழியும்போது உயர்வும் வளமும் மிக்க இறைவன் கீழ் வானிற்கு இறங்கிவந்து, "கேட்பவர் எவரும் உண்டா? அவருக்குக் கொடுக்கப்படும். பிரார்த்திப்பவர் எவரும் உண்டா? அவரது பிரார்த்தனை ஏற்கப்படும். பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவருக்கு மன்னிப்பு அளிக்கப்படும்" என்று அதிகாலை புலரும்வரை கூறுகின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 1388. 

2) இரவில் தூக்கத்திலிருந்நு விழிப்பு வருகின்றவருக்கு கிடைக்கும் வாய்ப்பு: 

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
'யார் இரவில் விழித்து

لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

الْحَمْدُ لِلَّه
 وَسُبْحَانَ اللهِ
وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ
وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله اَللّهُمَّ اغْفِرْ لِيْ

பொருள்:
 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு நிகரானவர் இல்லை; ஆட்சியும் அவனுக்குரியது; புகழும் அவனுக்குரியது; அவன் அனைத்தப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் மிகப்பெரியவன் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது.

 என்று கூறிவிட்டு இறைவா! என்னை மன்னித்துவிடு என்றோ, வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். உளூச் செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக் கொள்ளப்படும். 
என உபதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 1154. 
அத்தியாயம் : 19. தஹஜ்ஜுத்

3) தஹஜ்ஜுத் நேரத்தில் நபி (ஸல்) கேட்ட பிரார்த்தனைகள். 

1: இரவுத் தொழுகையில் நபிகளார் கேட்ட பிரார்த்தனை:

அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும் முதலில் என்ன கூறுவார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும்.

اللهُمَّ! رَبَّ جَبْرَائِيلَ، وَمِيكَائِيلَ، وَإِسْرَافِيلَ، فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ، اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ، إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ "
 "என்று கூறுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.

(பொருள்: இறைவா! (வானவர்களாகிய) ஜிப்ராயீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! நீ உன் அடியார்களிடையே அவர்கள் கொண்டிருந்த கருத்துவேறுபாடுகள் குறித்து (மறுமையில்) தீர்ப்பு வழங்குவாய். (பிற மக்களால்) மாற்றுக் கருத்து கொள்ளப்பட்டாலும் சத்திய (மார்க்க)த்திலேயே உன் தயவால் என்னை நிலைத்திருக்கச் செய்வாயாக! நீ நாடியவர்களை நேரான வழியில் நீயே செலுத்துகிறாய்.(
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 1418. 

2: இரவுத் தொழுகையில் ஸுஜுதில் நபிகளார் கேட்ட பிரார்த்தனை :

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் இரவில் படுக்கை விரிப்பில் (என்னுடனிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆகவே, அவர்களை நான் தேடினேன். அப்போது அவர்கள் பள்ளிவாசலில் (சஜ்தாவில்) இருந்தார்கள். எனது கை, நட்டுவைக்கப்பட்டிருந்த அவர்களது உள்ளங்காலில் பட்டது. அப்போது அவர்கள்.

اللَّهُمَّ  أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ ، وَأَعُوذُ بِكَ مِنْكَ ، لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ

 என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

பொருள்: 
இறைவா, உன் திருப்தியின் மூலம் உனது கோபத்திலிருந்தும், உன் மன்னிப்பின் மூலம் உனது தண்டனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா!
உன் (கருணையி)னைக் கொண்டு உன் (தண்டனையி)னைவிட்டுப் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைப் புகழ என்னால் இயலவில்லை. உன்னை நீ புகழ்ந்துகொண்டதைப் போன்றே நீ இருக்கிறாய்.
ஸஹீஹ் முஸ்லிம் : 839. 

3: இரவில் கண்விழித்ததும் நபிகளார் கேட்ட பிரார்த்தனை :

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தஹ்ஜ்ஜுத் (எனும் இரவுத் தொழுகை) தொழுவதற்காக இரவில் எழுந்ததும் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்வார்கள்: 
 

اَللّهُمَّ لَكَ الْحَمْد
இறைவா உனக்கே புகழனைத்தும் 

أَنْتَ نُور السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيْهِنَّ

 நீயே வானங்கள்
 பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் ஒளி ஆவாய் 

وَلَكَ الْحَمْد
உனக்கே புகழனைத்தும் 

أَنْتَ قَيِّمُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ.

வானங்கள் பூமி ஆகியவற்றில் உள்ளவற்றை நிர்வகிப்பவன் நீயே 

وَلَكَ الْحَمْدُ
உனக்கே புகழனைத்தும் 

أَنْتَ الْحَق
ُّ நீ
 உண்மையானவன்

 وَوَعْدُكَ حَق
ٌّ உன் வாக்கு உண்மையானது 

وَقَوْلُكَ حَق
ٌّ உனது கூற்று உண்மை 

وَلِقَاؤُكَ حَق
 உன் சந்திப்பு  உண்மை 

 وَالْجَنَّةُ حَق
ٌّ சொர்க்கம் உண்மை 

 وَالنَّارُ حَق
ٌّ நரகம் உண்மை 

وَالسَّاعَةُ حَق
ٌّ மறுமை நாள்  உண்மை 

وَالنَّبِيُّوْنَ حَق
ٌّ நபிமார்கள் உண்மையாணவர்கள் 

وَمُحَمَّدٌ حَق
ٌّ முகம்மது நபி ஸல் அவர்கள் உண்மையானவர் 

اَللّهُمَّ لَكَ أَسْلَمْت
ُ இறைவா உனக்கே அடி பணிந்தேன் 

 وَعَلَيْكَ تَوَكَّلْتُ
 உன்னையே சார்ந்துள்ளேன் 

 وَبِكَ آمَنْتُ
 உன் மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன் 

وَإِلَيْكَ أَنَبْتُ
உன்னிடமே திரும்புகிறேன் 

 وَبِكَ خَاصَمْتُ

உன் சான்றுகளைக் கொண்டே வழக்காடுகிறேன் 

 وَإِلَيْكَ حَاكَمْتُ

உன்னிடமே நீதி கேட்பேன்

فَاغْفِرْ لِي
எனவே என்னை மன்னிப்பாயாகْ

 مَا قَدَّمْت
நான் முந்திச்செய்த  ஒன்றையும் 

ُ وَمَا أَخَّرْتُ
நான் பிந்திச் செய்த  ஒன்றையும் 

وَمَا أَسْرَرْت

நான் இரகசியமாக செய்த  ஒன்றையும் 

 وَمَا أَعْلَنْت

நான் பகிரங்கமாக செய்த ஒன்றையும் மன்னிப்பாயாக..

ُ أَنْتَ الْمُقَدّمُ
நீயே என்னை மறுமையில்  முதலில்
 எழுப்புகிறவன் 

وَأَنْتَ الْمُؤَخّر

ُ நீயே என்னை இம்மையில் இறுதியில் அனுப்பியவன் 

لاَ إِلهَ إِلاَّ أَنْت
َ உன்னைத்
 தவிர வணக்கத்துக்குரியவன் 
வேறு யாரும் இல்லை

(ஸஹீஹ் புகாரி:6317 அத்தியாயம் : 80. பிரார்த்தனைகள்)

أَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ جَنَّاتُ الْمَأْوَىٰ نُزُلًا بِمَا كَانُوا يَعْمَلُونَ

. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு அவர்கள் (நன்மை) செய்து கொண்டிருந்ததால் தங்குமிடமாக சொர்க்கச் சோலைகள் பரிசாகவுள்ளன.

திருக்குர்ஆன்  32:19

4: தூங்கி எழுந்ததும் நபிகளார் ஓதிய பிரார்த்தனை :

'நபி(ஸல்) அவர்களின் மனைவியும் என்னுடைய சிறிய தாயாருமான மைமூனாவின் வீட்டில் நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை - கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் - நபி(ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூச் செய்தார்கள். அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் சென்று நின்றேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தை என் தலைமீது வைத்தார்கள். என்னுடைய வலக்காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்துகள், மீண்டும் இரண்டு ரக்அத்துகள், இன்னும் இரண்டு ரக்அத்துகள் மறுபடியும் இரண்டு ரக்அத்துகள் மேலும் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள் பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு சுபுஹுத் தொழுகைக்காக (வீட்டைவிட்டு) வெளியே சென்றார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 183. 

5: சூரா நிஸாவின் இருதி வசனங்களை தொடர்ந்து ஓத வேண்டிய பிரார்த்தனை :

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஓர் இரவில் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் தங்கியிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எப்படித் தொழுகிறார்கள் என்பதைக் கவனிக்கக் காத்திருந்தேன். அவர்கள் எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டுப் பிறகு (திரும்பிவந்து) தமது முகத்தையும் கைகளையும் கழுவிவிட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர்ப் பையை நோக்கிச் சென்று அதன் சுருக்கை அவிழ்த்தார்கள். பிறகு உணவுத் தட்டில் அல்லது பெரிய பாத்திரத்தில் அதை ஊற்றி அதில் தமது கையை நுழைத்து நடுத்தரமாக அழகிய முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள். நான் சென்று அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் நின்றுகொண்டேன். உடனே அவர்கள் என்னைப் பிடித்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுது முடித்தார்கள். பிறகு குறட்டைவிட்டு உறங்கினார்கள். -(பொதுவாக) அவர்களது குறட்டைச் சப்தத்தை வைத்து அவர்கள் உறங்குகிறார்கள் என்பதை நாங்கள் அறிந்துகொள்வோம்.- பின்னர் (சுப்ஹுத்) தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்று தொழுதார்கள். அவர்கள் தமது "தொழுகையில்"அல்லது "சஜ்தாவில்"  பின்வருமாறு கூறலானார்கள்:

اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا

யா அல்லாஹ்..! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக.

وَْ فِي بَصَرِي نُورًا

என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.

وَ فِي سَمْعِي نُورًا
என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.

وَعَنْ يَمِينِي نُورًا وَعَنْ يَسَارِي نُورًا ,

என் வலப்பக்கம் மற்றும் இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக

وَ فَوْقِي نُورًا وَتَحْتِي نُورًا
எனக்கு மேலயும் எனக்கு கீழயும் ஒளியை ஏற்படுத்தி விடு

وَ أَمَامِي نُورًا وْ خَلْفِي نُورًا

எனக்கு முன்னாலும் எனக்கு பின்னாலும் ஒளியை ஏற்படுத்தி விடுவாயாக

واجْعَلْ لِي نُوراً
எனக்கு எல்லா திசையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக

(ஸஹீஹ் முஸ்லிம் : 1405. 
(ஸஹீஹ் புகாரி6313 )

இந்த துஆவை நபிகளார் ஓதிய சந்தர்பத்தில் கருத்து முரண்பாடுகள் உள்ளது.  தொழுகையில் சுஜுதில் அல்லது தூங்கி எழுந்து நாம் இந்த துஆவை ஓதலாம்.

ரமழான் எதிர்பார்க்கும் மாற்றம் இறையச்சம் அந்த இறை அச்சம் உள்ள இடம் எமது உள்ளம் அது சீராகி விட்டால் எல்லாம் சீராக ஆகி விடும் அது சீர் கெட்டு விட்டால் எல்லாம் சீர் கெட்டு விடும். எனவே நாமும் இப்பிரார்த்தனையை மனனமிட்டு ஓத முயற்சிக்க வேண்டும். 

أَفَمَن شَرَحَ اللَّهُ صَدْرَهُ لِلْإِسْلَامِ فَهُوَ عَلَىٰ نُورٍ مِّن رَّبِّهِ ۚ فَوَيْلٌ لِّلْقَاسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكْرِ اللَّهِ ۚ أُولَٰئِكَ فِي ضَلَالٍ مُّبِينٍ

22. யாருடைய உள்ளத்தை இஸ்லாத்திற்காக அல்லாஹ் விரிவடையச் செய்து விட்டானோ அவரா (வழிகெட்டவர்)? அவர் தமது இறைவனிடமிருந்து (கிடைத்த) ஒளியில் இருக்கிறார். இறைவனை நினைப்பதை விட்டு உள்ளங்கள் இறுகிப் போனவர்களுக்குக் கேடு தான். அவர்களே தெளிவான வழிகேட்டில் இருப்பவர்கள்.

திருக்குர்ஆன்  39:22

يَهْدِي اللَّهُ لِنُورِهِ مَن يَشَاءُ
அல்லாஹ் தான் நாடியோருக்கு அவனின் ஒளியை நோக்கி வழிகாட்டுகின்றான்.

நட்புடன்:
இன்திகாப் உமரி
அட்டுலுகம



أحدث أقدم