அத்தியாயம் 83 சத்தியங்களும் நேர்த்திக்கடன்களும்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 83

சத்தியங்களும் நேர்த்திக்கடன்களும்

அளவற்ற அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...


பகுதி 1

அல்லாஹ் கூறினான்:

நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை. ஆயினும், நீங்கள் உறுதிப்பாட்டுடன் செய்த சத்தியங்களுக்காக (அவற்றை நீங்கள் முறித்துவிட்டால்) உங்களை அவன் நிச்சயம் கண்டிப்பான். (முறித்துவிட்ட) சத்தியத்திற்கான குற்றப் பரிகாரம் (இதுதான்): நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்கு அளிக்கிற உணவுகளில் நடுத்தரமான வகையிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆடைகள் வழங்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஆனால், (இவற்றில் எதற்கும்) சக்தி பெறாதோர் மூன்று நாள்கள் நோன்பு நோற்கவேண்டும். நீங்கள் செய்த சத்தியங்களை முறித்துவிட்டால் இதுதான் அவற்றுக்குரிய குற்றப் பரிகாரமாகும். எனவே, உங்கள் சத்தியங்களை (முறித்துவிடாமல்) பேணுங்கள். இவ்வாறு தன்னுடைய சட்டத் திட்டங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவாக்குகிறான்; நீங்கள் நன்றி செலுத்துவோராய் திகழக்கூடும் என்பதற்காக! (திருக்குர்ஆன் 05:89)

6621 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்கள் சத்தியத்தை முறித்ததற்காக பரிகார(ம் தொடர்பான வசன)த்தை அல்லாஹ் அருளும் வரை (தாம் செய்த) எந்தச் சத்தியத்தையும் முறிக்காமலிருந்து வந்தார்கள். மேலும் அவர்கள், 'நான் ஒரு சத்தியத்தைச் செய்து, அதன்பின்னர் (அதைக் கைவிட்டு) மற்ற (ஒன்றைத் தேர்ந்தெடுப்ப)தே அதைவிடச் சிறந்தது என்று நான் கருதினால் நன்மை எதுவோ அதையே செய்வேன். சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரத்தையும் செய்துவிடுவேன்'' என்றார்கள்.2

6622 அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே! ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும். நீ ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீ கருதினால் உன்னுடைய சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடு. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்து'' என்றார்கள். 3

6623 அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நான் (என்) அஷ்அரீ குலத்தாரில் ஒரு குழுவினருடன் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, (எங்களையும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை'' என்றார்கள். பிறகு அல்லாஹ் நாடிய நேரம் வரை நாங்கள் (அங்கேயே) இருந்தோம். பின்பு நபியவர்களிடம் வெள்ளைத் திமில்கள் கொண்ட மூன்று ஒட்டக மந்தைகள் கொண்டுவரப்பட்டன. எனவே, அவற்றின் மீது எங்களை ஏற்றி அனுப்பினார்கள். நாங்கள் (அங்கிருந்து விடைபெற்றுச்) சென்றுகொண்டிருந்தபோது நாங்கள் எங்களுக்குள்' அல்லது 'எங்களில் சிலர்', 'அல்லாஹ்வின் மீதாணையாக! (நபி(ஸல்) அவர்கள் தரமாட்டேனென்று சத்தியம் செய்த பிறகு இவற்றை நாம் வாங்கிச் சென்றால் இவற்றில்) நமக்கு வளம் (பரக்கத்) ஏற்படாது. நபி(ஸல்) அவர்களிடம் நம்மைச் சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டோம். அவ்வாறு நம்மை ஏற்றியனுப்பத் தம்மால் இயலாது என நபியவர்கள் சத்தியம் செய்து கூறினார்கள். பிறகு, நாம் ஏறிச்செல்ல ஒட்டகங்கள் வழங்கினார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் நாம் மீண்டும் சென்று அவர்கள் செய்த சத்தியத்தை) அவர்களுக்கு நினைவுபடுத்துவோம்'' என்று சொல்லிக் கொண்டோம். அவ்வாறே நபி அவர்களிடம் சென்றோம். (அவர்கள் செய்த சத்தியத்தை நினைவுபடுத்தினோம்.) அப்போது அவர்கள், 'நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை, மாறாக, அல்லாஹ்தான் உங்களை (அதில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், இனிமேல் நான் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, பிறகு அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும் பட்சத்தில் 'சத்திய முறிவுக்காகப் பரிகாரம் செய்துவிட்டு, அந்தச் சிறந்ததையே செய்வேன்' அல்லது 'சிறந்ததையே செய்துவிட்டு, சத்திய முறிவுக்காகப் பரிகாரம் செய்துவிடுவேன்'' என்றார்கள்.4

6624 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நாம்தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.5

6625 மேலும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சயத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது, (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவரின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வதைவிடப் பெரும் பாவமாகும்.6

6626. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது, அவர் செய்யும் பெரும் பாவமாகும். (எனவே,) அவர் (சத்தியத்தை முறித்து) நன்மை செய்யட்டும்! - அதாவது பரிகாரம் செய்யட்டும்!

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 2

(சத்தியம் செய்யும் போது) 'வ அய்முல்லாஹி' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.7

6627 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், உசாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படைப்பிரிவை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உசாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து, (இப்போது) இவரின் தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால் (இது ஒன்றும் புதிதல்ல!) இதற்கு முன்பு (மூத்தா போரின் போது) இவருடைய தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் தான் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். வஅய்முல்லாஹி (அல்லாஹ்வின் மீதாணையாக!) அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராகவும் இருந்தார். மக்களிலேயே (அவரின் புதல்வரான) இவர் (உசாமா) என் அன்புக்குரியவராவார்'' என்றார்கள்.8

பகுதி 3

நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9

ஸஅத் இப்னு அவர்கள் (சத்தியம் செய்யும் போது), 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக!'' என்று கூறினார்கள்.10

அபூ கத்தாதா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அபூ பக்ர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின்போது) 'லா ஹல்லாஹி இதன்' (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றார்கள்.11

(பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) 'வல்லாஹி', 'பில்லாஹி' 'தல்லாஹி' என்று சொல்லப்படுவதுண்டு.12

6628 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''இல்லை. உள்ளங்களைப் புரட்டுபவன் மீதாணையாக!'' என்பது நபி(ஸல்) அவர்கள் சத்தி(யம் செய்யும்போது அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கி)யமாக இருந்தது.13

6629 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(தற்போதுள்ள பைஸாந்திய மன்னர்) சீசர் மாண்டுவிட்டால் அவருக்குப் பின் வேறொரு சீசர் வரமாட்டார். (தற்போதுள்ள பாரசீக மன்னர்) கிஸ்ரா (குஸ்ரு) மாண்டுவிட்டால் அவருக்குப் பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டார். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (சீசர் மற்றும் கிஸ்ரா) இருவருடைய கருவூலங்களும் நிச்சயம் இறைவழியில் செலவழிக்கப்படும்.

என ஜாபிர் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.14

6630 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(தற்போதுள்ள பைஸாந்திய மன்னர்) சீசர் மாண்டுவிட்டால் அவருக்குப் பின் வேறொரு சீசர் வரமாட்டார். (தற்போதுள்ள பாரசீக மன்னர்) கிஸ்ரா (குஸ்ரு) மாண்டுவிட்டால் அவருக்குப் பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டார். இந்த முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (சீசர் மற்றும் கிஸ்ரா) இருவருடைய கருவூலங்களும் நிச்சயமாக இறைவழியில் செலவழிக்கப்படும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.15

6631 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

முஹம்மதின் சமுதாயமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிவதையெல்லாம் நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் அதிகமாக அழுவீர்கள்; குறைவாகவே சிரிப்பீர்கள்.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

6632 அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார்.

இரண்டு பேர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர், 'எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்'' என்று கூறினார். அவர்கள் இருவரில் விவரம் தெரிந்தவரான மற்றொருவர் 'ஆம். இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படி எங்களுக்கிடையே தீர்ப்பளியுங்கள்! என்னைப் பேச அனுமதியுங்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'பேசுங்கள்'' என்றார்கள். அந்த மனிதர், 'என் மகன் இவரிடம் 'அஸீஃப்' ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். 'அஸீஃப் என்பதற்குக் 'கூலியாள்' என்று பொருள் என மாலிக்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். (அப்போது) இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். எனவே, மக்கள் என்னிடம், 'உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு'' என்று கூறினர். ஆனால், நான் அவனுக்காக நூறு ஒட்டகங்களையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அவர்கள், '(திருமணமாகாத நிலையில் விபசாரம் புரிந்துவிட்ட) என் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றும், ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும், கல்லெறி தண்டனை (விபசாரம் புரிந்த) அவரின் மனைவிக்குத்தான் என்றும் தெரிவித்தார்கள்'' என்றார்.

அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: 'உங்கள் ஆடுகளும் அடிமைப் பெண்ணும் உங்களிடமே திருப்பித் தரப்படும்'' என்று கூறிவிட்டு, அவரின் மகனுக்கு நூறு கசையடிகள் வழங்கச் செய்து ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தவும் செய்தார்கள். மேலும், உனைஸ் அல்அஸ்லமீ(ரலி) அவர்கள் அந்த நபரின் மனைவியிடம் சென்று, அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லடி தண்டனை வழங்கிடுமாறு உத்தரவிடப்பட்டார்கள். அவ்வாறே, (உனைஸ் அப்பெண்ணிடம் சென்றார்.) அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டார். எனவே, அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினார். 18

6635 அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) 'பனூ தமீம், பனூ ஆமிர் இப்னு ஸஅஸமு, பனூ ஃகதஃபான், பனூ அசத் ஆகிய (பிரபல அரபுக்) குலத்தாரைவிட (முதலில் இஸ்லாத்தைத் தழுவிய) அஸ்லம், ஃகிஃபார், முஸைனா, ஜுஹைனா ஆகிய குலத்தார் சிறந்தோரென்றால், (முதலில் கூறிய பிரபலமான) அந்தக் குலத்தார் நஷ்டமும் இழப்பும் அடைந்தவர்கள்தாமே!'' என்று கேட்டார்கள். தோழர்கள் 'ஆம்' என்றனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (அஸ்லம் முதலான) இவர்கள் (பனூ தமீம் முதலான) அவர்களைவிட(ப் பல மடங்கு) சிறந்தவர்கள்'' என்று கூறினார்கள்.19

6636 அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ அவர்கள் அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ('அஸ்த்' எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை ('ஸகாத்' வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தம் பணியை முடித்துக்கொண்டு நபியவர்களிடம் திரும்பி வந்து, 'இறைத்தூதர் அவர்களே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம், 'உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பாரும்!'' என்று கூறினார்கள்.

பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மாலை தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுக்குரிய பண்புகளைக் கூறி போற்றிப் புகழ்ந்த பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: பின்னர், அந்த அதிகாரிக்கு என்ன ஆயிற்று? அவரை நாம் (ஸகாத் வசூலிக்க) அதிகாரியாக நியமித்தோம். அவரோ நம்மிடம் வந்து 'இது உங்கள் அதிகாரத்திற்குட்பட்டது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறுகிறார். அவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த(ப் பொதுச்) சொத்திலிருந்து முறை கேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தம் பிடரியில் சுமந்து கொண்டு நிச்சயம் வருவார். அது ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது பசுவாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது ஆடாக இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்'' என்று கூறிவிட்டு '(இறைவா! உன்னுடைய செய்தியை மக்களிடம்) நான் சேர்த்துவிட்டேன்'' என்று கூறினார்கள்.

அபூ ஹுமைத்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் அக்குள்களின் வெண்மையை நாங்கள் நன்கு பார்க்கும் அளவிற்குத் தம் கையை உயர்த்தினார்கள்.

இந்த ஹதீஸை என்னுடன் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றார்கள். (வேண்டுமானால்,) அவரிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள்.20

6637 அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் அறிவதையெல்லாம் நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் அதிகமாக அழுவீர்கள்; குறைவாகவே சிரிப்பீர்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.21

6638 அபூ தர்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் இருந்தவாறு, 'கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள்'' என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், 'என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகிறதா? (அப்படியானால்) என் நிலை என்னாவது?' என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது நபியவர்கள் 'என்னால் பேசாமலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது'' என்று கூறினார்கள். உடனே நான் 'என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார், இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செல்வத்தைச் செலவிட்ட) சிலரைத் தவிர'' என்று கூறியவாறு இவ்வாறு இவ்வாறு இவ்வாறு (என்று தம் பக்கம் வலப் பக்கம் இடப் பக்கம்) கைகளால் சைகை செய்தார்கள்.

6639 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(இறைத்தூதர்) சுலைமான்(அலை) அவர்கள் (ஒரு முறை), 'நான் இன்றிரவு (என்னுடைய) தொண்ணூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது அன்னாருடைய தோழர்களில் ஒருவர் 'இன்ஷாஅல்லாஹ்'' (அல்லாஹ் நாடினால்) என்று (சேர்த்துச்) சொல்லுங்கள்'' என்று கூறினார். (ஆனால்,) சுலைமான்(அலை) அவர்கள் 'இன்ஷா அல்லாஹ்' என்று கூறவில்லை. (மறந்துவிட்டார்கள்.) மேலும், தம் துணைவியர் அனைவரிடமும் சென்றார்கள். அவர்களில் ஒரேயொரு மனைவியைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அந்த ஒருவரும் ஒரு புஜமுடைய அரை மனிதரைத் தாம் பெற்றெடுத்தார். (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர், 'இன்ஷா அல்லாஹ்' என்று கூறியிருந்தால், (அந்த தொண்ணூறு துணைவியரும் கர்ப்பதியாகி பிள்ளைகள் பெற்று, அப்பிள்ளைகள் அனைவரும் இறைவழியில் அறப்போர் புரிகிற (குதிரை) வீரர்களாய் ஆகியிருப்பார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 22

6640. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பட்டுத் துணி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பெற்றது. மக்கள் அதன் அழகையும் மிருதுவையும் கண்டு வியந்து ஒருவரிடமிருந்து ஒருவர் வாங்கிப் பார்க்கலாயினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்களைப் பார்த்து) 'இதைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம் இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஸஅத்(பின் முஆத்) அவர்களுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிடச் சிறந்தவை'' என்று கூறினார்கள்.

அபூ இஸ்ஹாக்(ரஹ்) அவர்களிடமிருந்து ஷுஅபா(ரஹ்) மற்றும் இஸ்ராயீல்(ரஹ்) ஆகியோர் அறிவித்துள்ள ஹதீஸில் 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக' என்பது இடம் பெறவில்லை.23

6641 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(அபூ சுப்யான்(ரலி) அவர்களின் துணைவியார்) 'ஹிந்த் பின்த் உத்பா இப்னு ரபீஆ'(ரலி) அவர்கள் 'இறைத்தூதர் அவர்களே! இந்தப் பூமியின் மேலுள்ள (அரபு) வீட்டார்களிலேயே உங்களுடைய வீட்டார் இழிவடைவதே (இதற்கு முன்பு) எனக்கு விருப்பமானதாய் இருந்தது. பிறகு எல்லா வீட்டார்களிலும் உங்களுடைய வீட்டார் கண்ணியடைவதே இன்று எனக்கு விருப்பமானதாய் மாறிவிட்டது'' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (உன்னுடைய இந்த விருப்பம்) இன்னும் (அதிகமாகும்)'' என்று கூறினார்கள்.

அவர் 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான மனிதராவார். அவருக்குரிய (செல்வத்)திலிருந்து (எங்கள் பிள்ளைகளுக்கு) நான் உணவளிப்பது என் மீது குற்றமாகுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'நியாயமான அளவிற்கு எடுத்தால் குற்றமாகாது'' என்று பதிலளித்தார்கள்.24

'வீட்டார்கள் என்பதைக் குறிக்கப் பன்மையை (அக்பாஉ) பயன்படுத்தினார்களா? ஒருமையை (கிபாஉ) பயன்படுத்தினார்களா? என்பதில் அறிவிப்பாளர் யஹ்யா இப்னு புகைர்(ரஹ்) அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.

6642 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

ஒரு முறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் முதுகை யமன் நாட்டுத்தோல் கூடாரமொன்றில் சாய்த்தபடி இருந்தபோது தம் தோழர்களிடம், 'சொர்க்க வாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா?' என்று கேட்டார்கள். தோழர்கள் 'ஆம்' என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், 'சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்பமாட்டீர்களா?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'ஆம்' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், '(இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக நீங்கள் இருப்பீர்கள் என்றே நான் எதிர்பார்க்கிறேன்'' என்றார்கள்.25

6643. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

ஒருவர் 'குல் ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது குர்ஆன்) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருப்பதை மற்றொரு மனிதர் செவியுற்றார். அந்த மனிதர் விடிந்ததும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பச் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போன்றிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு நிகரானதாகும்'' என்றார்கள்.26

6644 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(தொழுகையில்) ருகூவையும் (குனிதலையும்) சஜ்தாவையும் (சிரவணக்கத்தையும்) பாரிபூரணமாகச் செய்யுங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் ருகூஉ செய்யும்போது சஜ்தா செய்யும் போதும் என் முதுகுக்குப் பின்னால் உங்களை நான் பார்க்கிறேன்.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

6645 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் தம் குழந்தைகளுடன் அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'என்னுயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே என் பேரன்பிற்குரியவர்கள்'' என்று மூன்று முறை கூறினார்கள். 27

பகுதி 4

உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாம். 28

6646 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(என் தந்தை) உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் தங்களின் வாகனத்தில் பயணம் செய்த படி தம் தந்தை பெயரால் சத்தியம் செய்து கொண்டிருந்தபோது அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றடைந்தார்கள். மேலும், 'அறிந்து கொள்ளுங்கள்: உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான். (எனவே) சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்'' என்றார்கள்.

6647 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(என் தந்தை) உமர்(ரலி) கூறினார்: என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களின் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்'' என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டது முதல் நானாகப் பேசும் போதும் சரி; பிறாரின் பேச்சை எடுத்துரைக்கும்போதும் சரி; நான் தந்தை பெயரால் சத்தியம் செய்ததில்லை.

முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ('பிறரின் பேச்சை எடுத்துரைத்தல்; என்பதைக் குறிக்க மூலத்தில் இடம் பெற்றுள்ள 'ஆஸிர்' எனும் சொல்லின் இனத்திலுள்ளதும், 46:4 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ளதுமான) 'அஸாரதின் மின் இல்மின்' எனும் சொற்றொருடருக்கு 'ஞானத்தை அறிவித்தல்' என்று பொருள்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடாரிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

இன்னோர் அறிவிப்பில், உமர்(ரலி) அவர்கள் (இவ்விதம்) சத்தியம் செய்வதை நபி(ஸல்) அவர்களே செவியுற்றார்கள் என்று இடம் பெற்றுள்ளது.

6648 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

6649 ஸஹ்தம் இப்னு முளர்ரிப் அல்ஜர்மீ(ரஹ்) அறிவித்தார்.

(குளாஆ குலத்தைச் சேர்ந்த) இந்த (எங்கள்) ஜர்ம் கோத்திரத்தாருக்கும் (யமன் நாட்டவர்களான) அஷ்அரீ குலத்தாருக்குமிடையே நட்புறவும் சகோதரத்துவமும் இருந்துவந்தது. (ஒரு முறை) நாங்கள் அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அபூ மூஸா(ரலி) அவர்களுக்கு அருகில் உணவு வைக்கப்பட்டது. அதில் கோழி இறைச்சி இருந்தது. அபூ மூஸா(ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் பனூ தைம்' குலத்தைச் சேர்ந்த சிவப்பான மனிதர் ஒருவர் இருந்தார். அவர் அடிமைகளில் ஒருவரைப் போன்று காணப்பட்டார். அபூ மூஸா(ரலி) அவர்கள் அந்த மனிதரையும் உணவு உண்ண அழைத்தார்கள். அதற்கு அந்த மனிதர், 'இந்தக் கோழி (இனம், அசுத்தம்) ஒன்றைத் தின்பதை கண்டேன். அது எனக்கு அருவருப்பை உண்டாக்கவே இதை இனிமேல் உண்ணமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டேன்'' என்றார். (இதைக் கேட்ட) அபூ மூஸா(ரலி) அவர்கள், 'எழுந்து (இங்கே) வாருங்கள்! இதைப் பற்றி உங்களுக்கு நான் (நபிகளாரின் சமூகத்தில் நடந்த ஒரு சம்பவத்தை) அறிவிக்கிறேன்'' என்று சொல்லிவிட்டுக் கூறலானார்கள்.

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல ஒட்டகங்கள் தரும்படி கேட்டுச் சென்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் இல்லாத நிலையில் உங்களை நான் (ஒட்டகத்தில்) ஏற்றி அனுப்பமாட்டேன்'' என்று கூறினார்கள். (எனவே நாங்கள் திரும்பிச் சென்றுவிட்டோம்.)

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த (ஃகனீமத் ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. உடனே, 'அஷ்அரீ குலத்தார் எங்கே?' என எங்களைக் குறித்து கேட்டுவிட்டு, எங்களுக்கு வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளை வழங்குமாறு உத்தரவிட்டார்கள். நாங்கள் (அவர்களிடமிருந்து அதைப் பெற்றுக் கொண்டு) சென்று கொண்டிருந்தபோது (நாங்கள் எங்களுக்குள்) 'நாம் என்ன காரியம் செய்துவிட்டோம்! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு (வாகன) ஒட்டகங்கள் வழங்கப் போவதில்லையென சத்தியம் செய்தார்கள்; அவர்களிடம் (அதற்கான) ஒட்டகங்களும் இருக்கவில்லை. பிறகு (என்ன நடந்தோ!) நமக்கு ஒட்டகங்களை வழங்கினார்கள். (ஒரு வேளை) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சத்தியத்தை நாம் மறக்கும்படி செய்து விட்டோமா! (அப்படிச் செய்தால்) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாம் ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை'' என்று பேசிக் கொண்டோம். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்றோம். அவர்களிடம், 'நாங்கள் தங்களிடம் எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) ஏற்றிச் செல்ல ஒட்டகங்கள் கேட்டு முதலில்) வந்தபோது எங்களுக்கு ஒட்டகங்கள் தரப்போவதில்லையெனத் தாங்கள் சத்தியம் செய்தீர்கள். தங்களிடம் எங்களை ஏற்றியனுப்ப(த் தேவையான) ஒட்டகங்களும் இருக்கவில்லை. (பிறகு எங்களுக்கு ஒட்டகங்கள் தரும்படி மறதியாகச் சொல்லிவிட்டீர்களோ?)'' என்று கேட்டோம்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களை ஏற்றிச் செல்ல ஒட்டகங்கள் வழங்கவில்லை. மாறாக, அல்லாஹ்தான் உங்களை ஏற்றிச் செல்ல ஒட்டகங்கள் வழங்கினான். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (பொதுவாக) நான் எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும் பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரமும் செய்வேன்'' என்று கூறினார்கள்.29

பகுதி 5

லாத், உஸ்ஸா உள்ளிட்ட (பொய்த் தெய்வச்) சிலைகள் பெயரால் சத்தியம் செய்யலாகாது.

6650 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

யார் சத்தியம் செய்யும்போது (அறியாமைக் கால தெய்வச் சிலைகளான) 'லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ அவர் (இந்தப் பாவத்திற்குப் பரிகாரமாக) 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குத் தகுதியானவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், 'வா சூதாடலாம்'' என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.30

பகுதி 6

சத்தியம் செய்யும்படி கோரப்படாத போதும் சத்தியம் செய்தல். 31

6651. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்து கொண்டிருந்தார்கள். அதன் குமிழைத் தம் உள்ளங்கை பக்கமாக அமையும்படி வைத்தார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்ற) மோதிரங்களைத் தயார் செய்தனர். பிறகு நபி(ஸல்) அவர்கள், சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) அமர்ந்து அந்த மோதிரத்தைக் கழறறிவிட்டு, 'நான் இந்த மோதிரத்தை உள்ளங்கைப் பக்கமாக அதன் குமிழ் அமையும்படி அணிந்து கொண்டிருந்தேன்'' என்று கூறி, அதை எறிந்துவிட்டார்கள். பிறகு, 'அல்லாஹ்வின் மீதாணையாக! இதை ஒருபோதும் நான் அணியமாட்டேன்'' என்று கூறினார்கள். உடனே மக்களும் தங்களின் மோதிரங்களை(க் கழற்றி) எறிந்தனர்.32

பகுதி 7

இஸ்லாம் அல்லாத வேறொரு மார்க்கத்தின் பெயரால் சத்தியம் செய்வது.

''யார் 'லாத்' மற்றும் 'உஸ்ஸா' ஆகியவற்றின் பெயரால் சத்தியம் செய்தாரோ, அவர் 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று கூறட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 33 (ஆனால், இவ்வாறு) சத்தியம் செய்தவரை இறைமறுப்பின் பக்கம் நபியவர்கள் சேர்க்கவில்லை.34

6652. 'இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார். எதன் மூலம் ஒருவர் தம்மைத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அதன் மூலம் அவர் நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவார். ஓர் இறைநம்பிக்கையாளரை சபிப்பது அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். இறைநம்பிக்கையாளர் ஒருவரை இறைமறுப்பாளர் என்று ஒருவர் அவதூறு சொல்வதும் அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஸாபித் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அறிவித்தார்.35

பகுதி 8

'அல்லாஹ்வும் நீயும் நாடினால்' என்று கூறலாகாது. 'அல்லாஹ்வால், பிறகு உன்னால்' என்று கூறலாமா? 36

6653 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

பனூ இஸ்ராயீல் மக்களில் (தொழு நோயாளி, வழுக்கைத் தலையர், குருடர் ஆகிய) மூவரைச் சோதிக்க அல்லாஹ் நாடினான். எனவே, அவன் வானவர் ஒருவரை அனுப்பினான். அவர் (அம்மூவரில் ஒருவரான) தொழுநோயாளியிடம் வந்து, 'பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டுவிட்டது (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது) இன்று எனக்கு உதவிக்கான வழிவகை அல்லாஹ்வையும் பிறகு உம்மையும் தவிர வேறெவருமில்லை'' என்று கூறினார்.

இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, இந்த ஹதீஸை முழுமையாகக் கூறினார்கள்.37

பகுதி 9

''தங்களிடம் ஏதேனும் சான்று வருமாயின் அதை நிச்சயமாக நாங்கள் நம்புவோம் என்று அவர்கள் பலமாகச் சத்தியம் செய்தார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 06:109 வது) இறைவசனம்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் 'இறைத்தூதர் அவர்களே! 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இக்கனவுக்குச் (சொன்ன விளக்கத்தில் நான்) செய்த தவறென்ன என்பதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் '(இதற்காகவெல்லாம்) சத்தியம் செய்யாதீர்கள்'' என்றார்கள்.38

6654. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படி நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.39

இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது.

6655 உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் புதல்வியார் ஒருவர் (ஸைனப் (ரலி) தம் மகன் (அல்லது மகள்) இறக்கும் தருவாயில் இருப்பதாகவும், எனவே அங்கு வந்து சேர வேண்டும் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நானும், ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களும், 'என் தந்தை (ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும்' அல்லது 'உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும்' இருந்தோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் புதல்வியாருக்கு) சலாம் கூறி அனுப்பியதோடு 'அல்லாஹ் எடுத்துக்கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியது. ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பார்ப்பீராக!'' என்றும் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்களின் புதல்வியார் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (கண்டிப்பாகத் தம்மிடம் வரவேண்டுமென)க் கூறியனுப்பினார். உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். நாங்களும் அவர்களுடன் எழுந்தோம்.

(புதல்வியின் வீட்டுக்குள் நுழைந்த) நபியவர்கள் (அங்கு) அமர்ந்தார்கள். அப்போது அவர்களிடம் குழந்தை தரப்பட்டது. குழந்தையைத் தம் மடியில் படுக்க வைத்தார்கள். குழந்தை சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. (இதைக் கண்ணுற்ற) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. அப்போது ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! என்ன இது (அழுகிறீர்களே)?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இது அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களின் உள்ளங்களில் அமைத்துள்ள இரக்க உணர்வாகும். திண்ணமாக, அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்'' என்றார்கள்.

6656. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒரு முஸ்லிமுடைய மக்களில் மூவர் (பருவ வயதுக்கு முன்பே) இறந்தால், (தந்தையான) அவரை நரகம் தீண்டாது; ('உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது' என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

6657. ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை பின்வருமாறு) கூறக் கேட்டேன். சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் உண்டு கொழுத்தவர்கள்; இரக்கமற்றவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.

பகுதி 10

நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்' என்றோ, 'நான் அல்லாஹ்வை சாட்சியாக்கினேன்' என்றோ ஒருவர் கூறினால் (அது சத்தியமாகுமா)?

6658. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம், 'மக்களில் சிறந்தவர் யார்?' என்று வினவப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(மக்களில் சிறந்தவர்கள்,) என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் பிறகு ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும் அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அவர்கள் 'சிறுவர்களான எங்களை எங்கள் சான்றோர்கள் (நபித்தோழர்கள்) 'அஷ்ஹது பில்லாஹ்' (அல்லாஹ்வின் பெயரால் நான் சாட்சியம் அளிக்கிறேன்) என்றோ 'அல்லாஹ்வுடன் செய்த ஒப்பந்தப்படி' என்றோ கூறுவதைத் தடுத்து வந்தார்கள்.

பகுதி 11

'அல்லாஹ்விற்கு நான் அளித்த வாக்குறுதியின் பெயரால்' என்று கூறுவது.

6659. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், 'ஒரு முஸ்லிமின் அல்லது 'தம் சகோதரனின் செல்வத்தைப் பறித்துக் கொள்வதற்காக (ஒரு பிரமாண வாக்குமுலத்தின்போது துணிவுடன்) பொய்ச் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவரின் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில்தான் அவனை (மறுமையில்) சந்திப்பார்'' என்று கூறினார்கள். அப்போது அ(ந்தக் கருத்)தை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், 'அல்லாஹ்வின் ('அஹ்து' எனும்) உடன் படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை'' எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) வசனத்தை அருளினான்.

6660. சுலைமான் இப்னு மிஹ்ரான்(ரஹ்) அறிவித்தார்.

(மேற்கண்ட ஹதீஸை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது) அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் அந்த வழியே சென்றார்கள். அப்போது அவர்கள், “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்?” என்று கேட்டார்கள். மக்கள் அன்னாரிடம் (விஷயத்தைக்) கூறினார்கள். அப்போது அஷ்அஸ்(ரலி) அவர்கள், 'எனக்கும் என் தோழர் ஒருவருக்குமிடையே இருந்த ஒரு கிணறு தொடர்பாக எங்களின் விஷயத்தில் அருளப்பெற்றதே இந்த வசனமாகும்'' என்றார்கள்.

பகுதி 12

அல்லாஹ்வின் கண்ணியம், அவனுடைய பண்புகள் மற்றும் அவனுடைய உரைகள் பெயரால் சத்தியம் செய்வது (செல்லும்.)

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி(ஸல்) அவர்கள் 'இறைவா! உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக! பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று கூறுவார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமையில் நரகத்திலிருந்து இறை நம்பிக்கை உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்ட பிறகு) சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே ஒருவர் மட்டும் (நரகத்தை முன்னோக்கியவராக) எஞ்சியிருப்பார். அவர் 'என் இறைவா! நரகத்தைவிட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பிவிடுவாயாக! உன் கண்ணியத்தின் மீதாணையாக! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்'' என்று கூறுவார்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அந்த மனிதரைப் பார்த்து) அல்லாஹ், 'இதுவும் உனக்குக் கிடைக்கும்; இன்னும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்'' என்று கூறுவான்.

என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

(இறைத்தூதர்) அய்யூப் (அலை) அவர்கள், '(இறைவா!) உன் கண்ணியத்தின் மீதாணையாக! உன் அருள் வளத்தைவிட்டு நான் தேவையற்றவன் அல்லன்'' என்றார்கள்.

6661. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(நரகவாசிகள் நரகத்தின் போடப்படுவார்கள். நரகம் வயிறு நிரம்பாத காரணத்தால்) 'இன்னும் அதிகம் இருக்கிறதா?' என்று கேட்டுக் கொண்டேயிருக்கும். இறுதியில் கண்ணியத்தின் அதிபதி(யான இறைவன்) தம் பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது 'போதும்! போதும்! உன் கண்ணியத்தின் மீதாணையாக!'' என்று கூறும். நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும்.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பகுதி 13

'அல்லாஹ்வின் நித்தியத்தின் மீதாணையாக' என்று ஒருவர் சொல்வது.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். (திருக்குர்ஆன் 15:72 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ல அம்ரூக' எனும் சொல்லுக்கு 'உம்முடைய வாழ்நாள் மீதாணையாக! என்று பொருள்.

6662. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறினார்:

உர்வா இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு முஸய்யப், அல்கமா இப்னு வக்காஸ், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் (ரஹ் அலைஹிம்) ஆகியோர், நபி(ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா(ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், (அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து) ஆயிஷா(ரலி) அவர்கள் தூய்மையானவர்களென இறைவன் (தன்னுடைய வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற கேட்டேன். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இந்த சம்பவத்தில் ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். அதில் (பின்வருமாறு உள்ளது:) அப்போது நபி(ஸல்) அவர்கள் எழுந்து, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபைக்கு எதிராக உதவி கோரினார்கள். உசைத் இப்னு ஹுளைர்(ரலி) அவர்கள் எழுந்து ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் 'அல்லாஹ்வின் நித்தியத்தின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம்'' என்று கூறினார்கள்.

பகுதி 14

(யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்கு தண்டனை அளிக்கமாட்டான்; ஆனால், நீங்கள் (நன்கு அறிந்து) உளப்பூர்வமாக செய்தவற்றுக்காகவே உங்களுக்கு தண்டனை அளிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் நிதானமானவனும் ஆவான்.(திருக்குர்ஆன் 02:225)

6663. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

''(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை அளிக்கமாட்டான்'' எனும் (திருக்குர்ஆன் 02:225 வது) இறைவசனம் 'லா வல்லாஹி' (இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும், 'பலா வல்லாஹி) (ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும் (பொருள் கருதாமல் பழக்கத்தின் காரணமாகச் சத்தியம் செய்யும் சொற்களைக்) கூறுபவர் தொடர்பாக அருளப்பெற்றது.

பகுதி 15

மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?

அல்லாஹ் கூறினான்:

நீங்கள் தவறுதலாகச் செய்துவிட்டவற்றில் உங்களின் மீது குற்றமில்லை. மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்தது தான் குற்றமாகும். (திருக்குர்ஆன் 33:05)

மேலும் அல்லாஹ் கூறினான்;

''நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்'' என அவர் (மூஸா) கூறினார். (திருக்குர்ஆன் 18:73)

6664. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன்படி செயல்படாத வரை, அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாத வரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை;) மன்னித்துவிடுகிறான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

6665. அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாளில் (தம் ஒட்டகத்தின் மேல் இருந்தவாறு) உரை நிகழ்த்திக் கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி ஒருவர் எழுந்து, 'நான் (ஹஜ்ஜில்) இன்னின்னதற்கு முன் இன்னின்னது (ஷைத்தானுக்குக் கல் எறிவதற்கு முன் பலியிடல், பலியிடலுக்கு முன் தலைமுடி களைதல்) என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார். பிறகு மற்றொருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! (முடி களைதல், பலியிடல், கல்லெறிதல் ஆகிய இம்மூன்றையும் நான் இன்னின்னவாறு நினைத்துக் கொண்டிருந்தேன்'' என்றார்கள். இவை அனைவருக்குமே நபி(ஸல்) அவர்கள் '(அவ்வாறே) செய்யுங்கள். (முன் பின்னாகச் செய்வதில்) குற்றமில்லை'' என்றே பதிலளித்தார்கள். அன்று கேட்கப்பட்ட (இத்தகைய) கேள்விகள் அனைத்துக்கும் '(அப்படியே செய்யுங்கள்; (அப்படியே செய்யுங்கள். (அதனால்) குற்றமில்லை'' என்றே நபியவர்கள் விடையளித்தார்கள்.

6666. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(துல்ஹஜ் 10ஆம் நாளில் மினாவில் இருந்தபோது) நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர், 'கல்லெறிவதற்கு முன்பே நான் (தவாஃபில் ஸியாரா) சுற்றி வந்துவிட்டேன்'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'குற்றமில்லை'' என்றார்கள். மற்றொருவர், 'பலியிடுவதற்கு முன்பே தலை முடி களைந்துவிட்டேன்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'குற்றமில்லை'' என்றார்கள். இன்னொருவர், 'கல்லெறிந்தற்கு முன்பே பலியிட்டுவிட்டேன்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'குற்றமில்லை'' என்றார்கள்.

6667. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்து தொழுதுவிட்டு, பள்ளிவாசலின் ஒரு மூலையில் (அமர்ந்து) இருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து முகமன் (சலாம்) சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், 'திரும்பச் சென்று தொழுவீராக! ஏனென்றால் நீர் (முறையாகத்) தொழவில்லை'' என்று கூறினார்கள்.

அந்த மனிதர் திரும்பிச் சென்று (முன்பு தொழுததைப் போன்றே) தொழுதுவிட்டு வந்து (நபிகளாருக்கு) சலாம் சொன்னார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், 'வ அலைக்க'' (அவ்வாறே உம்மீதும் சாந்தி உண்டாகுக! என பதில் சலாம் கூறிவிட்டு) 'திரும்பச் சென்று தொழுவீராக! நீர் (முறையாகத்) தொழவில்லை'' என்று கூறினார்கள்.

(இவ்வாறு மூன்று முறை நடந்தது) மூன்றாவது முறையில் அந்த மனிதர், 'அவ்வாறாயின் எனக்கு (தொழுகை முறையை)க் கற்றுத் தாருங்கள்!'' என்று கேட்டார்.

''நீர் தொழ நினைத்தால் (முதலில்) பாரிபூரணமாக அங்கசுத்தி (உளூ) செய்வீராக! பிறகு கிப்லா (இறையில்லம் கஅபாவின் திசையை) முன்னோக்கி (நின்று) 'அல்லாஹு அக்பர்' என்று கூறும்! பிறகு குர்ஆனில் உமக்குத் தெரிந்ததை ஓதும்! பிறகு (குனிந்து) 'ருகூஉ' செய்வீராக! அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பின்னர் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி நேராக நிற்பீராக! பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்து, அதில் (சற்றுநேரம்) நிலைகொள்வீராக! பிறகு தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்வீராக! பின்னர் (மீண்டும்) சிரவணக்கம் செய்து, அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பிறகு எழுந்து நேராக நிற்பீராக! இவ்வாறே உம்முடைய தொழுகை முழுவதிலும் செய்துவருவீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

6668. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

உஹுதுப் போர் நாளில் (ஆரம்பத்தில்) இணைவைப்பாளர்கள் அப்பட்டமாகத் தோற்கடிக்கப்பட்டனர். அது அவர்களில் (வெளிப்படையாகவே) தெரிந்தது. அப்போது இப்லீஸ், 'அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்'' என்று கூச்சலிட்டான். உடனே முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி), பின் அணியினரை நோக்கித் திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் (மோதலேற்பட்டுப்) போரிட்டுக் கொண்டனர். அப்போது ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அவர்கள், தம் தந்தை அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார். உடனே, '(அவர்) என் தந்தை! என் தந்தை!'' என்று (சப்தமிட்டுக்) கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டு) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா(ரலி) அவர்கள், '(என் தந்தையைத் தவறுதலாகக் கொன்றுவிட்ட) உங்களை அல்லாஹ் மன்னிப்பானாக!'' என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா(ரலி) அவர்கள் மன்னித்ததால் (அன்னாருடைய வாழ்க்கையில்) அவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது.60

6669. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் மறதியாகச் சாப்பிட்டுவிட்டால் அவர் தம் நோன்பை நிறைவு செய்யட்டும்! ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணவும் பருகவும் செய்தான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

6670 அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். (அத் தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது (அத்தஹிய்யாத்தில்) அமராமல் (மூன்றாவது ரக்அத்திற்காக மறதியாக) எழுந்து தொழுகையைத் தொடர்ந்தார்கள். தொழுகை முடியும் தருவாயில் நபி(ஸல்) அவர்கள் 'சலாம்' கொடுப்பதை மக்கள் எதிர்ப்பார்த்திருந்தபோது (இருப்பிலேயே) சலாம் கொடுப்பதற்கு முன்பாக தக்பீர் கூறி சஜ்தா செய்தார்கள். பிறகு (முதல் சஜ்தாவிலிருந்து) தலையைத் தூக்கி மீண்டும் தக்பீர் கூறி (இரண்டாவது) சஜ்தா செய்து பின்னர் தலையை உயர்த்தி சலாம் கொடுத்தார்கள். 62

6671 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு லுஹ்ர் தொழுகையை தொழுகை நடத்தினார்கள். அப்போது '(ஐந்து ரக்அத்களாக) அதிகமாக்கி அல்லது '(மூன்று ரக்அத்களாகக்) குறைத்துத்' தொழுகை நடத்தினார்கள். -அறிவிப்பாளர்களில் ஒருவரான மன்சூர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த இடத்தில் சந்தேகத்துடன் அறிவித்தது இப்ராஹீம்(ரஹ்) அவர்களா? அல்லது அல்கமா(ரஹ்) அவர்களா என்று எனக்குத் தெரியாது - (தொழுகை முடிந்த பின்), 'இறைத்தூதர் அவர்களே! தொழுகை(யின் ரக்அத் எண்ணிக்கை) குறைந்துவிட்டதா? அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'என்ன அது?' என்று கேட்டார்கள். மக்கள், 'இப்படி இப்படி நீங்கள் தொழுகை நடத்தினீர்கள்'' என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் சேர்ந்து இரண்டு சஜ்தாச் செய்தார்கள். பிறகு, 'இந்த இரண்டு சஜ்தாக்கள், தம் தொழுகையில் அதிகப்படுத்திவிட்டோமா அல்லது குறைத்துவிட்டோமா என்று (உறுதியாகத்) தெரியாதவர் செய்ய வேண்டியவையாகும்; (முதலில்) யோசித்து முடிவு செய்ய வேண்டும். பிறகு எஞ்சியுள்ள (ரக்அத்)தை பூர்த்தி செய்ய வேண்டும். அதற்குப் பிறகு (மறதிக்காக) இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும்'' என்றார்கள்.63

6672 உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார்.

''நான் மறந்துபோனதற்காக என்னை தண்டிக்காதீர்கள். என் விஷயத்தில் நீங்கள் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்'' என்று (கிள்ரிடம் மூஸா) கூறினார்'' எனும் (திருக்குர்ஆன் 18:73 வது) வசனத்(தின் விளக்கத்)தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'முதல் முறையில் மூஸா(அலை) அவர்கள் பொறுமையிழந்து மறதியினால் ஆகும்'' என்றார்கள்.64

6673 பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

எங்களிடம் விருந்தாளி ஒருவர் வந்திருந்தார். எனவே, நான் என் வீட்டாரிடம் (ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை முடித்துக் கொண்டு) நான் திரும்பி வருவதற்குள் விருந்தாளி சாப்பிடுவதற்காக (குர்பானிப் பிராணியை) அறுத்திடுமாறு கட்டளையிட்டேன். அதன்படி அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பாகவே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டார்கள். பிறகு இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் மறுபடியும் (வேறொரு) குர்பானிப் பிராணியை அறுத்திடுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள். அதற்கு நான், 'இறைத்தூதர் அவர்களே! ஒரு வயதுடைய பால்குடி மறவாத பெட்டை வெள்ளாட்டுக் குட்டி என்னிடம் உள்ளது. அது இரண்டு இறைச்சி ஆடுகளை விடச் சிறந்தது (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)'' என்று கேட்டேன். (நபியவர்கள் எனக்கு) அனுமதியளித்தார்கள்.)65

அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அவ்ன்(ரஹ்) அவர்கள், ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்களின் அறிவிப்பை இத்துடன் நிறுத்திவிட்டு, முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் (அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து) அறிவித்துள்ள இதே போன்ற ஹதீஸை அறிவித்தார்கள். பிறகு இத்துடன் நிறுத்திவிட்டு, 'பராஉ(ரலி) அவர்கள் அல்லாத மற்றவர்களுக்கும் இச்சலுகை பொருந்துமா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

6674 ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.

நான் (ஹஜ்ஜுப்) பெருநாள் தினத்தில் நபி(ஸல்) அவர்களுடன் தொழுகையில் கலந்து கொண்டேன். (தொழுகை முடிந்த) பிறகு அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில் 'யார் தொழுகைக்கு முன் (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டாரோ அவர் அதற்கு மாற்றாக மற்றொன்றை (தொழுகைக்குப் பிறகு) அறுக்கட்டும். யார் அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ்வின் பெயர் கூறி (தொழுகைக்குப் பிறகு) அறுக்கட்டும்'' என்று கூறினார்கள். 66

பகுதி 16

பொய்ச் சத்தியம் 67

நீங்கள் உங்களுடைய சத்தியங்களை உங்களுக்கிடையே துரோகத்திற்குக் கருவியாக்கி விடாதீர்கள். (அவ்வாறு செய்தால்) நிலை பெற்ற பின் (உங்களின்) பாதம் சரிந்துவிடும். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்த காரணத்தால் (இம்மையில்) துன்பத்தைத் அனுபவிப்பீர்கள்; (மறுமையிலும்) உங்களுக்குக் கடுமையான வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 16:94)

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) 'தகல்' (துரோகம்) எனும் சொல்லுக்குச் சூழ்ச்சி, வஞ்சகம் என்று பொருள்.

6675 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

இறைவனுக்கு இணைகற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவதும், கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும்.

என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 17

அல்லாஹ் கூறினான்:

அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. மேலும், மறுமை நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். இன்னும் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 03:77)

மேலும், அல்லாஹ் கூறினான்:

நீங்கள் நன்மைகள் புரிவதற்கும், தீமையிலிருந்து உங்களைக் காத்துக்கொள்வதற்கும், மக்களிடையே சமாதானம் செய்வதற்கும் தடையாக, நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கு அல்லாஹ்வை(க் கருவி) ஆக்கி விட வேண்டாம். அல்லாஹ் மிகச் செவியுறுவோனும். நன்கு அறிவோனுமாவான். (திருக்குர்ஆன் 02:224)

மேலும், அல்லாஹ் கூறினான்:

அல்லாஹ்வின் உடன்படிக்கையை அற்பவிலைக்கு விற்றுவிடாதீர்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின், அல்லாஹ்விடம் எது உள்ளதோ அதுதான் உங்களுக்கு மேலானதாக இருக்கும். (திருக்குர்ஆன் 16:95)

நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வைப் பொறுப்பாளியாக்கி, நீங்கள் செய்யும் சத்தியங்களை உறுதிப்படுத்திய பின்னர், அவற்றை நீங்கள் முறித்துவிடாதீர்கள். (திருக்குர்ஆன் 16:91)

6676 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைப் பறித்துக் கொள்வதற்காக திட்டமிட்டு, (பொய்ச்) சத்தியம் செய்கிறவரின் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையிலேயே அவனை (மறுமையில்) அவர் சந்திப்பார்'' என்று கூறினார்கள். அப்போது அ(ந்தக் கருத்)தை உறுதிப்படுத்தும் விதமாக அல்லாஹ், 'அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை'' எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) வசனத்தை அருளினான். 68

6677 (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் அபூ வாயில்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

பின்னர் அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) அவர்கள் அங்கு வந்து, 'அபூ அப்திர்ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) உங்களுக்கு என்ன அறிவித்தார்?' என்று கேட்டார்கள். 'இப்படி இப்படி'' என மக்கள் கூறினார்கள்.

அப்போது அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) கூறினார்: (அவர் அறிவித்தது உண்மைதான்.) இந்த வசனம் என் தொடர்பாகவே அருளப்பெற்றது. என் தந்தையின் சகோதரர் மகன் ஒருவரின் நிலத்தில் எனக்கொரு கிணறு இருந்தது. (அக்கிணறு தொடர்பாக எனக்கும் ஒரு யூதருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.) எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்(து விஷயத்தைத் தெரிவித்)தேன். அப்போது அவர்கள் '(ஒன்று) உன்னுடைய சாட்சி; அல்லது (பிரதிவாதியான) அவரின் சத்தியம்'' என்று கூறினார்கள். (உடனே) நான் 'அப்படியானால், அந்த யூதர் (தயங்காமல்) அது தொடர்பாக(ப் பொய்)ச் சத்தியம் செய்துவிடுவாரே, இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஒரு முஸ்லிமான மனிதரின் சொத்தை (அநியாயமாக)ப் பறித்துக் கொள்வதற்காக பொய்ச் சத்தியம் செய்கிறவரின் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தான் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்'' என்று கூறினார்கள்.69

பகுதி 18

தமக்கு உடைமையில்லாத ஒன்றில் சத்தியம் செய்வதும், பாவத்துக்காகச் சத்தியம் செய்வதும், கோபமாக இருக்கையில் சத்தியம் செய்வதும்.70

6678 அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

என் (அஷ்அரீ குலத்துத்) தோழர்கள் எங்களை ஏற்றியனுப்ப வாகன ஒட்டகம் கேட்கும்படி நபி(ஸல்) அவர்களிடம் என்னை அனுப்பி வைத்தனர். (நான் சென்று அவர்களிடம் ஒட்டகம் கேட்டேன்) அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை நான் எதன் மீதும் ஏற்றியனுப்ப இயலாது'' என்று கூறினார்கள். அந்த நேரம் அவர்கள் கோபமாய் இருந்தார்கள். பிறகு நான் அவர்களிடம் சென்றபோது, நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சென்று, 'அல்லாஹ்' அல்லது 'இறைத்தூதர்' உங்களை ஏற்றியனுப்ப வாகனம் வழங்குவார்கள் என்று சொல்லுங்கள் என்றார்கள்.71

6679 இப்னு ஷிஹாப் (முஹம்மத் இப்னு முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

உர்வா இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு முஸய்யப், அல்கமா இப்னு வக்காஸ், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் இப்னி உத்பா (ரஹ் - அலைஹிம்) ஆகியோர், நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா(ரலி) அவர்கள் தூய்மையானவர்கள் என இறைவன் (தன்னுடைய வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற கேட்டேன். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொரு வரும் இச்சம்பவம் பற்றி ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். (அதில் பின்வருமாறு உள்ளது:)

அப்போது அல்லாஹ், '(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தாம்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11-20) பத்து வசனங்களை அருளினான். (ஆயிஷா(ரலி) கூறினார்:) என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூ பக்ர் அஸ்ஸித்தீக்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிடமாட்டேன்'' என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். -மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர்(ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். -அப்போது அல்லாஹ், 'உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்'' எனும் (திருக்குர்ஆன் 24:22 வது) வசனத்தை அருளினான்.

அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்'' என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்'' என்றும் கூறினார்கள்.72

6680 ஸஹதம் இப்னு முளர்ரிப்(ரஹ்) அறிவித்தார்.

நாங்கள் அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்:

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் சென்றேன். அப்போது அவர்கள் (ஏதோ) கோபத்தில் இருந்தார்கள். அன்னாரிடம் நாங்கள் (எங்கள் பயணத்திற்குத் தேவையான) வாகனங்களைக் கோரினோம். அப்போது அவர்கள், எங்களுக்கு வாகனங்கள் தரமாட்டேன் என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள். பிறகு (எங்களுக்கு வாகன ஒட்டகங்களைத் தந்துவிட்டு) 'அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில், சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரமும் செய்வேன்'' என்றார்கள். 73

பகுதி 19

ஒருவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று நான் பேசமாட்டேன்' என்று சத்தியம் செய்துவிட்டுப் பிறகு தொழுதார்; அல்லது (குர்ஆன்) ஓதினார்; அல்லது 'சுப்ஹானல்லாஹ்' என்றார்; அல்லது 'அல்லாஹு அக்பர்'' என்றார்; அல்லது அல்ஹம்துலில்லாஹ்' என்றார்; அல்லது லாயிலாஹ இல்லல்லாஹ்' என்றார் என்றால், அவர் எண்ணப்படியே அமையும். 74

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பேச்சில் சிறந்தது நான்காகும்:

1. சுப்ஹனால்லஹ் (அல்லாஹ் தூயவன்.)

2. அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.) 3. லா இல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை.) 4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)

அபூ சுஃப்யான்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி(ஸல்) அவர்கள் (பைஸாந்தியப் பேரரசர்) ஹெராக்ளியஸிற்கு எழுதிய கடிதத்தில், '(வேதக்காரர்களே!) எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள்'' என்று எழுதினார்கள். 75

முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

இறையுணர்வூட்டும் பேச்சு என்பது, 'லாயிலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்பதாகும்.76

6681 முஸய்யப் இப்னு ஹஸ்ன்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பெரிய தந்தை) அபூ தாலிப் அவர்களுக்கு மரண வேளை நெருங்கியபோது அவரிடம் வந்து, 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொல்லுங்கள். இச்சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்'' என்றார்கள்.77

6682 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை ஆகும்; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும்; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும். (அவை:) சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி; சுப்ஹானல்லாஹில் அழீம்.

(பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்; கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்.)

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.78

6683 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராக மரணிக்கிறவர் நரகத்தில் நுழைவிக்கப்படுவார்'' என்றார்கள். நான் மற்றொரு வார்த்தையில், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதவராக மரணிக்கிறவர் சொர்க்கத்தில் புகுத்தப்படுவார்'' என்று சொன்னேன். 79

பகுதி 20

ஒருவர், தம் வீட்டாரிடம் ஒரு மாதம் செல்லமாட்டேன் என்று சத்தியம் செய்து அந்த மாதம் இருபத்தொன்பது நாள்களாய் அமைந்துவிட்டால்...?80

6684 அனஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் துணைவியரை (ஒரு மாத காலம்) நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தார்கள். அவர்களின் காலில் சுளுக்கு ஏற்பட்டிருந்தது. அப்போது அவர்கள் மாடியறை ஒன்றில் இருபத்தொன்பது நாள்கள் தங்கியிருந்தார்கள். பின்னர் அவர்கள் இறங்கி வந்தபோது மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஒரு மாத காலம் (தங்கள் துணைவியரை) நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தீர்களே? (ஆனால், இருபத்தொன்பதாம் நாளில் வந்துவிட்டீர்களே?)'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம்'' என்றார்கள்.81

பகுதி 21

ஊறவைக்கப்பட்ட பழச் சாற்றை (நபீத்) அருந்தமாட்டேன் என்று சத்தியம் செய்த ஒருவர், சுண்டக் காய்ச்சப்பட்ட திராட்சை சாற்றையோ, பேரீச்சச் செங்காய் ஊறலையோ, திராட்சைப் பிழிவையோ அருந்திவிட்டால், சிலரின் கூற்றுப்படி அவர் சத்தியத்தை முறித்தவராகமாட்டார். (ஏனெனில்,) அவர்களின் கருத்துப்படி இவை 'நபீதி'ல் சேரா.82

6685 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

நபித்தோழர் அபூ உசைத் அஸ்ஸாஇதீ(ரலி) அவர்கள் தங்களின் திருமணத்திற்கு நபி(ஸல்) அவர்களை அழைத்தார்கள். அப்போது மணப்பெண்ணே (விருந்துக்கு வந்த) மக்களுக்குப் பணிவிடை செய்பவராக இருந்தார்.

மக்களே! மணப்பெண் நபி(ஸல்) அவர்களுக்கு என்ன புகட்டினார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் கல் (அல்லது மரப்) பாத்திரத்தில் நபி(ஸல்) அவர்களுக்காகப் பேரீச்சம் பழங்களை இரவிலேயே ஊறவைத்திருந்தார். காலையில் நபி அவர்களுக்கு அதை அவர் புகட்டினார்.83

6686 நபி(ஸல்) அவர்களின் துணைவியார் சவ்தா(ரலி) அறிவித்தார்.

எங்களுக்குரிய ஆடு ஒன்று இறந்துவிட்டது. அதன் தோலை நாங்கள் பதனிட்டோம். பிறகு அதில் நாங்கள் பழரசத்தை ஊற்றி வைத்து வந்தோம். இறுதியில் அது (இற்றுப்போன) துருத்தியாக மாறிவிட்டது.

பகுதி 22

தொடுகறியுடன் சாப்பிடமாட்டேன் என்று சத்தியம் செய்த ஒருவர், ரொட்டியுடன் பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டால்...? மேலும் எதுவெல்லாம் தொடுகறியாகும்?84

6687 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை அவர்களின் குடும்பத்தார் மூன்று நாள்கள் தொடர்ச்சியாகக் குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை.

இதன் அறிவிப்பாளரான ஆபிஸ் இப்னு ரபீஆ(ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், தாம் ஆயிஷா(ரலி) அவர்களிடம் இது குறித்துக் கேட்டபோது அவர்கள் இதைத் தெரிவித்ததாக இடம் பெற்றுள்ளது. 85

6688 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

அபூ தல்ஹா(ரலி) அவர்கள் (தம் துணைவியார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களிடம், 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் குரலை பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கிருக்கும்) பசியையைப் புரிந்து கொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதாவது இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம்(ரலி) அவர்கள், 'ஆம் (இருக்கிறது)'' என்று கூறிவிட்டு, வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்தார்கள். பிறகு அவர்கள் தங்களின் முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியில் அந்த ரொட்டியைச் சுருட்டி (என்னிடம் கொடுத்து) என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். நான் (அதையெடுத்துக் கொண்டு) சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அன்னாருடன் மக்களும் இருந்தனர். நான் அவர்களுக்கு முன் நின்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உன்னை அபூ தல்ஹா அனுப்பினாரா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'ஆம்'' என்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடனிருந்தவர்களிடம், 'எழுந்திருங்கள்!'' என்றார்கள். மக்கள் (எழுந்து) நடந்தார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன்.

இறுதியில் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம் வந்து (நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் வந்து கொண்டிருக்கும்) விவரத்தைத் தெரிவித்தேன். உடனே அபூ தல்ஹா(ரலி) அவர்கள் (என் தாயாரிடம்) 'உம்மு சுலைமே! இறைத்தூதர்(ஸல்) அவர்களும் மக்களும் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வேண்டிய உணவு நம்மிடம் இல்லையே!'' என்றார்கள். உம்மு சுலைம்(ரலி) அவர்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்'' என்று கூறினார்கள். உடனே அபூ தல்ஹா(ரலி) அவர்கள் (தாமே நபி(ஸல்) அவர்களை முன் சென்று வரவேற்பதற்காக) நடந்து சென்று இறைத்தூதர்(ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் அபூ தல்ஹா(ரலி) அவர்கள் இருக்க வீட்டுக்குள் நுழைந்தார்கள். பிறகு 'உம்மு சுலைமே! உம்மிடம் இருப்பதைக் கொண்டு வா!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். உடனே உம்மு சுலைம்(ரலி) அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி) உத்தரவிட, அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. உம்மு சுலைம்(ரலி) அவர்கள், தம்மிடமிருந்த தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறைவன் நாடிய (பிஸ்மில்லாஹ் மற்றும் இதர பிரார்த்தனை வரிகள் சில)வற்றைச் சொன்னார்கள்.

பிறகு, 'பத்துப் பேருக்கு (உள்ளேவர) அனுமதியளியுங்கள்'' என்று (அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம்) சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா(ரலி) அவர்கள் அனுமதியளித்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு 'பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதியளியுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அபூ தல்ஹா(ரலி) அவர்கள் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறு நிரம்ப உண்டுவிட்டு வெளியேறினார்கள். பின்னர், இன்னும் பத்துப் பேருக்கு அனுமதியளியுங்கள் என்றார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் அனுமதியளித்தார்கள். (இவ்வாறு வந்திருந்த) மக்கள் அனைவரும் வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். அப்படி உண்ட மக்கள் எழுபது அல்லது எண்பது பேர் ஆவர்.86

பகுதி 23

சத்தியங்களில் எண்ணம் (தான் கருததில் கொள்ளப்படும்.)87

6689 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும்.

என உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவித்தார். 88

பகுதி 24

நேர்த்திக்கடன் மற்றும் பாவமன்னிப்புக்காக ஒருவர் தம் செல்வத்தை அன்பளிப்பாக வழங்கினால் (செல்லுமா?) 89

6690. கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

(தபூக் போருக்குச் செல்லாமல் பின் தங்கிவிட்ட மூவரான எங்களைக் குறித்து) அல்லாஹ் 'போருக்குச் செல்லாமல் பின்தங்கிவிட்ட மூவர்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 09:118 வது) வசனத்தை அருளினான்.

நான் '(இறைத்தூதர் அவர்களே!) என்னுடைய பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வமனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (அவர்கள் விரும்பும் வழியில் செலவிட்டுக் கொள்வதற்காக) தர்மமாகத் தந்துவிடுகிறேன்'' என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் செல்வத்தில் ஒரு பகுதியை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது'' என்று கூறினார்கள்.

இதை, கஅப்(ரலி) அவர்கள் (தம் இறுதிக் காலத்தில்) கண் பார்வை இழந்துவிட்டபோது அன்னாரைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த அன்னாரின் புதல்வர் அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) அறிவித்தார்.90

பகுதி 25

ஒருவர் ஓர் உணவை(த் தமக்குத் தாமே) தடை விதித்துக் கொள்வது.91

அல்லாஹ் கூறினான்:

நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்? அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கிறான். அல்லாஹ் நீங்கள் செய்யும் சத்தியத்தி(ன் கட்டுப்பாட்டி)லிருந்து விடுபடுவதற்கான வழியை உங்களுக்கு நிர்ணயித்துள்ளான். (திருக்குர்ஆன் 66:1,2)

மேலும், அல்லாஹ் கூறினான்:

இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை நீங்களே தடை செய்து கொள்ளாதீர்கள். (திருக்குர்ஆன் 05:87)

6691 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் (நீண்ட நேரம்) தங்கியிருந்து அவர் வீட்டில் தேன் அருந்துவது வழக்கம். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள், நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் வீட்டிற்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் 'தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா?' என்று கூற வேண்டும் எனக் கூடிப் பேசி முடிவு செய்துகொண்டோம்.

எங்கள் இருவரில் ஒருவரிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இல்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் வீட்டில்) தேன் அருந்தினேன். ஆனால், இனி ஒருபோதும் நான் இவ்வாறு செய்ய மாட்டேன்'' என்று கூறிவிட்டார்கள். அப்போது, 'நபியே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 66:1 வது) வசனம் அருளப்பெற்றது. (திருக்குர்ஆன் 66:4 வது வசனத்தில்) 'நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால்...'' என்பது ஆயிஷா(ரலி) அவர்களையும் ஹஃப்ஸா(ரலி) அவர்களையும் குறிக்கிறது. (திருக்குர்ஆன் 66:3 வது வசனத்தில்) 'நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார்'' என்பது, 'இல்லை; நான் தேன்தான் அருந்தினேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதைக் குறிக்கிறது.

ஹிஷாம் இப்னு யூசுஃப்(ரஹ்) அவர்களிடமிருந்து இப்ராஹீம் இப்னு மூஸா(ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில், 'நபி(ஸல்) அவர்கள், இனிமேல் நான் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டேன். இதை யாரிடமும் தெரிவித்துவிடாதே!'' என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. 92

பகுதி 26

நேர்த்திக்கடனை நிறைவேற்றுதல்

அல்லாஹ் கூறினான்:

அவர்கள் (-நல்லவர்கள்) நேர்த்திக் கடனை நிறைவேற்றுவார்கள். (திருக்குர்ஆன் 76:07)

6692 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென அவர்களுக்குத் தடை விதிக்கப்படவில்லையா? நபி(ஸல்) அவர்கள் 'நேர்த்திக்கடன், (விதியில்) எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம் ஏழைக்கு) வெளிக்கொணரப்படுகிறது'' என்று கூறினார்கள். 93

6693 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமெனத் தடை விதித்தார்கள். மேலும், 'நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)'' என்றார்கள். 94

6694 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நேர்த்திக்கடனானது, விதியில் எழுதப்படாத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே நேர்த்திக்கடன் அவனைக் கொண்டு செல்கிறது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து இறைவன் (செல்வத்தை) வெளிக்கொணர்கிறான். இதற்கு முன் எந்தக் காரணத்திற்காக (ஏழைக்கு) அவன் வழங்காமல் இருந்தானோ அதே காரணத்திற்காக (இப்போது) வழங்கத் தொடங்கிவிடுகிறான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.95

பகுதி 27

நேர்த்திக்கடன் நிறைவேற்றாதவர் பாவியாவார்.

6695 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உங்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். -இதன் அறிவிப்பாளரான இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலைமுறையினரைக் குறிப்பிட்ட பின்னர் இரண்டு தலைமுறையினரைக் கூறினார்களா? மூன்று தலைமுறையினரைக் கூறினார்களா? என்று எனக்குத் தெரியாது. என்று கூறினார்கள்.

(தொடர்ந்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:)

பிறகு ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் நேர்ந்து கொள்வார்கள். ஆனால் அதை நிறைவேற்றமாட்டார்கள்; நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கப்படாது. அவர்கள் தாமாகவே சாட்சியமளிக்க முன்வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்கமாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.

என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.96

பகுதி 28

இறைவனுக்கு வழிப்படுவதில் தான் நேர்த்திக்கடன்.

நீங்கள் எந்த வகையில் செலவு செய்தாலும், அல்லது எந்த வகை நேர்த்திக்கடன் செய்தாலும் நிச்சயமாக அதனை அல்லாஹ் அறிவான். அநீதி இழைப்போருக்கு உதவியாளர் எவரும் இலர். (திருக்குர்ஆன் 02:270)

6696 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம்.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பகுதி 29

அறியாமைக் காலத்தில் ஒருவர் 'நான் எந்த மனிதனுடனும் பேசமாட்டேன்' என்று நேர்ந்து கொண்டார்; அல்லது சத்தியம் செய்தார். பிறகு அவர் முஸ்லிமாகிவிட்டால் (அவற்றை நிறைவேற்றுவது அவரின் மீது கடமையா?)

6697 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(என் தந்தை) உமர்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! மஸ்ஜிதுல் ஹராம் (புனிதப்) பள்ளிவாசலில் ஓர் இரவு 'இஃதிகாஃப்' இருப்பதாக அறியாமைக் காலத்தில் நேர்ந்துகொண்டேன். (இப்போது அதை நிறைவேற்ற வேண்டுமா?)'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'உங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றுங்கள்'' என்றார்கள்.97

பகுதி 30

நேர்த்திக்கடன் உள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் (அவருக்காக மற்றவர்கள் அதை நிறைவேற்ற வேண்டுமா?)

(மதீனாவிற்கு அருகிலுள்ள) குபா பள்ளிவாசலில் தொழுவதாக நேர்ந்துகொண்டுவிட்டு, அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துவிட்)ட தாய்க்காகத் தொழுதிடுமாறு அவரின் புதல்விக்கு இப்னு உமர்(ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

இதைப் போன்றே இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்.

6698. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஸஅத் இப்னு உபாதா அல் அன்சாரி(ரலி) அவர்கள், நேர்ந்துகொண்டு அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துவிட்ட தம் தாயின் நேர்த்திக்கடன் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவர் தம் தாயாருக்காக நேர்த்திக்கடனை நிறைவேற்றிடுமாறு தீர்ப்பளித்தார்கள். அதுவே பின்னர் வழிமுறையாக ஆகிவிட்டது.98

6699 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(உக்பா இப்னு ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, '(இறைத்தூதர் அவர்களே!) என் சகோதாரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார்'' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உன் சகோதாரிக்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய்?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (நானே நிறைவேற்றுவேன்)'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்'' என்றார்கள். 99

பகுதி 31

தமக்கு உடைமையில்லாத ஒன்றிலும் பாவச் செயலிலும் ஒருவர் நேர்ந்துகொள்வது (கூடாது.)

6700 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றும் முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம்.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.100

6701 அனஸ்(ரலி) அறிவித்தார்.

''இ(ந்த முதிய)வர் தம்மை (இவ்விதம்) வேதனை செய்து கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அ(ந்த முதிய)வர் தம் இரண்டு புதல்வர்களுக்கிடையே (தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட) நடந்துவந்ததை நபி(ஸல்) அவர்கள் பார்(த்துவிட்டு, விவரம் கேட்க, 'நேர்த்திக்கடன்' என்று மக்கள் கூறியபோது தான் மேற்கண்டவாறு தெரிவித்தார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.101

6702 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் (ஒட்டகத்தின்) 'மூக்கணாங்கயிறை' அல்லது 'வேறொரு பொருளைத்' தம் கையில் கட்டிக்கொண்டு (புனித) கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்ததை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அதைத் துண்டித்துவிட்டார்கள்.102

6703. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

நபி(ஸல்) அவர்கள் (புனித) கஅபாவைச் சுற்றி வந்துகொண்டிருந்தபோது ஒரு மனிதரைக் கடந்துசென்றார்கள். அவர் இன்னொரு மனிதரை மூக்கணாங்கயிறிட்டு இழுத்துச் சென்றுகொண்டிருந்தார். உடனே தம் கரத்தால் அக்கயிற்றைத் துண்டித்துவிட்ட நபி(ஸல்) அவர்கள், இவரைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்க என உத்தரவிட்டார்கள்.103

6704 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது ஒருவர் (வெயிலில்) நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், '(இவர் பெயர்) அபூ இஸ்ராயீல். இவர், நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் என்றும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில் தான் இருப்பேன்) என்றும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் என்றும் நேர்ந்துகொண்டுள்ளார்'' என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும் நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்'' என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பகுதி 32

குறிப்பிட்ட சில தினங்கள் நோன்பு நோற்பதாக ஒருவர் நேர்ந்துகொள்ள, ஏதேச்சையாக அது ஹஜ்ஜுப் பெருநாளாகவோ அல்லது நோன்புப் பெருநாளாகவோ அமைந்துவிட்டால் (என்ன செய்வது?) 104

6705 ஹகீம் இப்னு அபீ ஹுர்ரா அல் அஸ்லமீ(ரஹ்) அறிவித்தார்.

ஒருவர் 'வருகிற எல்லா நாள்களிலும் நோன்பு நோற்பேன்'' என நேர்ந்திருக்க, ஏதேச்சையாக அது ஹஜ்ஜுப் பெரு நாளாகவோ அல்லது நோன்புப் பெருநாளாகவோ அமைந்துவிட்டால் (என்ன செய்வது?) என்று இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி உள்ளது'' என்று கூறிவிட்டு, 'நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளில் நோன்புப் பெருநாளில் நோன்பு நோற்பவர்களாக இருக்கவுமில்லை; இரண்டு பெருநாள்களில் நோன்பு நோற்பதை (அனுமதிக்கப்பட்டதாக) அவர்கள் கருதவுமில்லை'' என்று பதிலளித்தார்கள்.

6706 ஸியாத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

நான் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர், 'நான் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு 'செவ்வாய் கிழமையும்' அல்லது 'புதன் கிழமையும்' நோன்பு நோற்க நேர்ந்து கொண்டுள்ளேன். ஆனால், ஏதேச்சையாக இந்த நாள் ஹஜ்ஜுப் பெருநாளாக அமைந்துவிட்டது (நான் என்ன செய்வது?)'' என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வோ நேர்த்திக்கடனை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டுள்ளான். (அதே நேரத்தில்) ஹஜ்ஜுப் பெருநாளில் நோன்பு நோற்கக் கூடாதென (இறைத்தூதர் மூலம்) நமக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர் திரும்பவும் (அதே கேள்வியைக்) கேட்டதற்கு இப்னு உமர்(ரலி) அவர்கள் முன்பு போன்றே பதிலளித்தார்கள்; கூடுதலாக எதுவும் கூறவில்லை.105

பகுதி 33

(ஒருவர் தம் 'செல்வம்' தொடர்பாகச் செய்த) சத்தியம் மற்றும் நேர்த்திக்கடனில் நிலம், ஆடு, பயிர், உபயோகப் பொருள்கள் ஆகியன அடங்குமா? 106

இப்னு உமர்(ரலி) கூறினார்:

(என் தந்தை) உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் 'நான் ஒரு செல்வத்தை ('ஸம்ஃக்' எனும் பேரீச்சந் தோட்டத்தை) அடைந்துள்ளேன். இதைவிட உயர்ந்ததொரு செல்வத்தை ஒருபோதும் அடைந்ததில்லை. (அதை நான் தர்மம் செய்ய விரும்புகிறேன்)'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக் கொண்டு அதன் விளைச்சலை தர்மம் செய்துவிடுங்கள்'' என்று கூறினார்கள்.107

அபூ தல்ஹா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் 'என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது 'பைருஹா' எனும் தோட்டமே'' என்று (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்த தம் தோட்டம் குறித்துக் கூறினார்கள்.108

6707 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் 'கைபர்' தினத்தன்று (வெற்றி கண்டு) புறப்பட்டோம். நாங்கள் (அந்தப் போரில்) பொன்னையோ வெள்ளியையோ போர்ச் செல்வமாகப் பெறவில்லை. (அவையல்லா கால்நடைச்) செல்வங்கள், ஆடைகள், உபயோகப் பொருள்கள் ஆகியவற்றையே பெற்றோம். 'பனுள்ளுபைப்' எனும் குலத்தாரில் ரிஃபாஆ இப்னு ஸைத் என்ற ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு 'மித்அம்' எனப்படும் ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கினார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'வாதில் குரா' எனும் இடத்தை நோக்கிச் சென்று, அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தபோது 'மித்அம்' என்ற அந்த அடிமை இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறக்கிக்கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று மித்அமை(த் தாக்கி)க் கொன்றுவிட்டது. இதைக் கண்ட மக்கள் 'அவருக்குச் சொர்க்கம் கிடைத்துவிட்டது; வாழ்த்துக்கள்'' என்றனர். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்படிச் சொல்லாதீர்கள். என்னுயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அவற்றிலிருந்து கைபர் அன்று அவர் எடுத்துக்கொண்டுவிட்ட போர்வை அவரின் மீது நரக நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது'' என்று கூறினார்கள். இதை மக்கள் செவியேற்றபோது, ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் 'ஒரு செருப்பு வாரை' அல்லது 'இரண்டு வார்களைக்' கொண்டு வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இது சாதாரண செருப்பு வாராக இருந்திராது. மாறாக,) 'நெருப்பு வாராக' அல்லது 'இரண்டு நெருப்பு வார்களாக' மாறியிருக்கும்'' என்று கூறினார்கள்.109
Previous Post Next Post