ஒட்டகத்தை விடவும் அறியாமையில் மூழ்கியவர்

அல்லாஹ்வின் பேரருள் என்பது மிகவும் பிரம்மாண்டமானது, எல்லையற்றது. நமது பிரார்த்தனைகளில் சுயநலமின்றி, ஒட்டுமொத்த உம்மத்திற்காகவும் பொதுவான நன்மைகளைக் கேட்பதே மிகச் சிறந்த பண்பாகும். இதனை உணர்த்தும் ஒரு உன்னதமான நபிமொழி .

عَنْ جُنْدَبٍ قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ فَأَنَاخَ رَاحِلَتَهُ، ثُمَّ عَقَلَهَا، فَصَلَّى خَلْفَ رَسُولِ اللهِ ﷺ، فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللهِ ﷺ أَتَى رَاحِلَتَهُ، فَأَطْلَقَ عِقَالَهَا ثُمَّ رَكِبَهَا، ثُمَّ نَادَى:
«اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا وَلَا تُشْرِكْ فِي رَحْمَتِنَا أَحَدًا»

فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: «مَا تَقُولُونَ أَهُوَ أَضَلُّ أَمْ بَعِيرُهُ؟ أَلَمْ تَسْمَعُوا مَا قَالَ؟!» قَالُوا: بَلَى. فَقَالَ: «لَقَدْ حَظَّرَ رَحْمَةً وَاسِعَةً، إِنَّ اللهَ خَلَقَ مِائَةَ رَحْمَةٍ، فَأَنْزَلَ رَحْمَةً تَعَاطَفَ بِهَا الخَلَائِقُ جِنُّهَا وَإِنْسُهَا وَبَهَائِمُهَا، وَعِنْدَهُ تِسْعَةٌ وَتِسْعُونَ، تَقُولُونَ أَهُوَ أَضَلُّ أَمْ بَعِيرُهُ؟».

تخريج الحديث: هَذَا حَدِيثٌ صَحِيحٌ.

ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

கிராமவாசி ஒருவர் வந்தார். அவர் தனது ஒட்டகத்தை அமரச் செய்து அதைக் கட்டிப்போட்டார். பின்னர், அவர் நபி ﷺ அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதார்.

நபி ﷺ அவர்கள் தொழுகையை முடித்து ஸலாம் கொடுத்ததும், அந்த மனிதர் தனது ஒட்டகத்திடம் சென்று, அதன் கட்டை அவிழ்த்து அதன் மீது ஏறி அமர்ந்தார். பின்னர் உரத்த குரலில்:
"இறைவா! என் மீதும் முஹம்மது மீதும் மட்டுமே கருணை காட்டுவாயாக! எங்கள் இருவருக்குமான இந்த அருளில் வேறு எவரையும் கூட்டாக்கி விடாதே!" என்று பிரார்த்தித்தார்.

இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் தன் தோழர்களை நோக்கி:
"நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இவர் தன் ஒட்டகத்தை விடவும் அறியாமையில் மூழ்கியவரா (மதியிழந்தவரா)? இவர் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?!" என்று (வியப்புடன்) கேட்டார்கள்.

அதற்கு தோழர்கள், "ஆம் (கேட்டோம் அல்லாஹ்வின் தூதரே!)" என்றனர்.

அப்போது நபி ﷺ அவர்கள் விளக்கமளித்தார்கள்:

"நிச்சயமாக இவர் எல்லையற்ற இறைவனின் பேரருளை மிகக் குறுகிய வட்டத்திற்குள் சுருக்கித் தடுத்துவிட்டார்! நிச்சயமாக அல்லாஹ் தன் கருணையை நூறு பங்குகளாகப் படைத்தான். 

அதில் ஒரே ஒரு பங்கை (ஒரு சதவீதத்தை) மட்டுமே இவ்வுலகிற்கு இறக்கினான். அந்த ஒரு பங்கு கருணையைக் கொண்டுதான் மனிதர்கள், ஜின்கள் மற்றும் விலங்கினங்கள் எனப் படைப்பினங்கள் அனைத்தும் தங்களுக்குள் பரஸ்பரம் அன்பையும் பாசத்தையும் பரிமாறிக் கொள்கின்றன. 

எஞ்சிய தொண்ணூற்றொன்பது பங்கு கருணையை அல்லாஹ் மறுமைக்காகத் தன்னிடம் வைத்துள்ளான். அப்படியிருக்க, இவர் தன் ஒட்டகத்தை விடவும் அறியாமையில் மூழ்கியவரா?"

நூல் : ஹாகிம் பாகம் 1 பக்கம் 56 

(இது மிக நம்பகமான, ஸஹீஹான (ஆதாரப்பூர்வமான) ஹதீஸ் ஆகும்.)

இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹ்) அவர்களின் விளக்கவுரை : 

«قَوْلُهُ: (أَهُوَ أَضَلُّ أَمْ بَعِيرُهُ)؛ أَيْ: أَيُّهُمَا أَكْثَرُ ذَهَابًا عَنِ الطَّرِيقِ وَجَهْلًا بِالحَقِيقَةِ؟ وَذَلِكَ أَنَّ البَعِيرَ لَا عَقْلَ لَهُ فَيَضِلُّ عَنِ الطَّرِيقِ، وَهَذَا الأَعْرَابِيُّ مَعَ وُجُودِ عَقْلِهِ قَدْ ضَلَّ عَنِ الصَّوَابِ فِي دُعَائِهِ حَيْثُ حَجَّرَ وَسِيعًا مِنْ رَحْمَةِ اللهِ الَّتِي عَمَّتْ خَلْقَهُ، فَشَبَّهَ جَهْلَهُ بِحَالِ البَعِيرِ الَّذِي يَشْرُدُ وَيَضِلُّ.»

நபி ﷺ அவர்கள், "இவர் தன் ஒட்டகத்தை விடவும் அறியாமையில் மூழ்கியவரா (மதியிழந்தவரா)?" என்று கேட்டதன் விளக்கமாவது:

"இவ்விருவரில் யார் உண்மையை உணராமல் மிக அதிகமாகப் பாதை தவறிப்போனவர்?" என்பதாகும்.

ஒட்டகத்திற்குப் பகுத்தறிவு கிடையாது; அதனால் அது பாதையை விட்டும் எளிதாகத் தடம் மாறித் தொலைந்துவிடும். ஆனால், இந்த கிராமவாசியோ பகுத்தறிவு பெற்றிருந்தும், படைப்பினங்கள் அனைவருக்கும் பொதுவான அல்லாஹ்வின் எல்லையற்ற பேரருளைத் தனக்குள்ளே சுருக்கிப் பிரார்த்தித்ததன் மூலம் சரியான நேர்வழியை விட்டும் விலகிவிட்டார்.

எனவேதான், அவருடைய இந்த அறியாமையை, மிரண்டு வழிதவறி ஓடும் ஒட்டகத்தின் நிலைக்கு நபி ﷺ அவர்கள் ஒப்பிட்டுக் காட்டினார்கள்.

ஆதார நூல் : ஃபத்ஹுல் பாரி பாகம் 10 பக்கம் 139-140
Previous Post Next Post