இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வருகை பற்றி இந்திய வேதங்களில் முன்னறிவிப்பு


உண்மை:

முஹம்மது(ஸல்) அவர்களின் உண்மைக்கு இரண்டு வகையான சாட்சியங்கள்.

நீர் நபியல்ல என்று நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர். உங்களுக்கும் எனக்கும் இடையில்(நான் நபியென்பதற்;கு) அல்லாஹ்வும் (முன்னுள்ள) வேதங்களை அறிந்தோரும் சாட்சியாக உள்ளனர் என்று நபியே அவர்களிடம் நீர் கூறுவீராக. (திரு மறை குர்ஆன் 13:43)

பிரச்னைகளை தீர்ப்பதற்காக ஒரு முறையான அரசாங்கம் தேவை என்ற அளவிற்கு ஒரு சமூகம் வளர்ச்சியடையாத வரை அங்கே சட்டங்களுக்கோ அல்லது நியமங்களுக்கோ எந்தவித முறையான உருவமும் கொடுக்கப்படுவதில்லை. 

அது போலவே நபித்துவ வாதம் செய்பவரின் உண்மையை நிரூபிக்கும் அடையாளங்களும் மக்களின் மனோ வளர்ச்சியை பொறுத்து காலத்திற்குகாலம் மாறுபட்டு வந்திருக்கிறது. 

முற்காலங்களில் மனிதர்கள் தங்களின் உண்மையை நிரூபிப்பதற்காக பலவிதமான வழிகளை கையாண்டனர்: உதாரணமாக, சத்தியம் செய்தல், நெருப்பை கையிலேந்துதல் அல்லது அதனுள் குதித்தல், நீர் சுழற்சியை ஆபத்தின்றி கடத்தல், மலையிலிருந்து குதித்து எந்தவித ஆபத்துமில்லாமல் வருதல், குறி சொல்லுதல், மந்திரவசியம் செய்தல் மற்றும் சித்து வேலைகள் செய்தல் போன்றவைகளாகும். உண்மையைத் தேடுபவரோ, குருட்டாம் போக்கில், சிந்தனையின்றி நம்பும் நிலையிலேயே இருந்தார் எனலாம். நபித்துவ வாதத்தை உண்மைப்படுத்துவதற்கு வேறு ஆழமான சிந்தனை எதுவும் தேவையாயிருந்திருக்கவில்லை. 

இந்து மதத்திலும் அது போன்ற மற்ற புராதான மதங்களிலும் புனிதர்கள் எனும் வாதம் இது போன்ற பரீட்சைகளாலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் திருமறை குர்ஆனோ நபி முஹம்மது(ஸல்) அவர்களின் நபித்துவ வாதத்தை நிரூபிப்பதற்காக இது போன்ற அற்புதங்களை ஆதாரங்களாக முன் வைக்கவில்லை. 

முழுமையான சட்ட திட்டங்களை கொண்டதொரு சமூகம் வளர்ச்சியடைந்த சமூகம் என்றால், நபி(ஸல்) அவர்களின் நபித்துவ உண்மைக்கு(மேற் கண்ட வசனத்தில்) திருமறை குர்ஆன் முன் வைத்துள்ள அடிப்படை மிகவும் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மேலே குறிப்பிடப்பட்ட வசனத்தில் நபி(ஸல்) அவர்களின் நபித்துவ வாதத்தை நிரூபிப்பதற்காக இரண்டு வகையான சாட்சியங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. 

இந்த இரண்டு சாட்சியங்களும் அவரின் உண்மையை நிரூபிப்பதற்கு போதுமானவைகளாக கருதப்பட்டுள்ளன. அவைகள் எல்லாம் வல்ல இறைவனின் சாட்சியமும்   வேதங்களை அறிந்தோரின் சாட்சியமுமேயாகும். வேதங்கள் என்பது முன்னுள்ள வேதங்களையே குறிக்கும்.

தடவியல் சட்டத்தில் இரண்டு காரணிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை: சாட்சி கூறுபவரின் முக்கியத்துவமும் அவர் கூறும் சாட்சியின் பொருத்தமான, உறுதியான தன்மை ஆகியவைகளுமாகும். நபி(ஸல்) அவர்களைப் பொறுத்த வரை எல்லாம் வல்ல இறைவனே அவருக்காக சாட்சி கூறுவதால் சாட்சியின் மகத்துவம் தெளிவாக அறிந்து கொள்ளப்படக் கூடியது.

இறைவனின் சாட்சி:

இறைவனின் சாட்சி என்பதானது, இயற்கை புத்தக(வேத)த்தின் சாட்சி, மனித சக்திக்கு அப்பாற்பட்ட வான்சக்தி  மற்றும் இறை அத்தாட்சிகள் போன்றவைகள் என்றே புரிந்து கொள்ளப்படுகின்றது. இவைகள்தான் அவர்கள் இறைத்தூதர்கள் என்பதற்கான அடையாளத்தை எப்பொழுதும் கொடுத்து வருவதாகும். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் ஆளப்படுகின்றது என்பது நமக்கு தெரியும். மிகச்சிறிய அணு முதல் மிகப் பெரும் நட்சத்திரம் வரையிலான படைப்புக்களில் எதுவும் சட்டத்தின் அடிப்படை எதுவும் இல்லாமல் இயங்குவதாக தோன்றவில்லை. ஒவ்வொன்றையும் படைத்து அவைகளை (அவைகளின் இலக்கை நோக்கி) வழி காட்டியவனே நம்முடைய ரப்பு.  (திருக்குர்ஆன் 20:50)

இறைச் சட்டத்தின் இந்த எல்லாம் தழுவிய தன்மை நபி(ஸல்) அவர்களின் நபித்துவ வாதத்திற்கு மிகவும் வலுவான ஆதாரமாகும்; தெய்வீக செய்தி வெளிப்பாட்டின் உலகளாவிய தன்மையை நிரூபிப்பதற்காக இந்த வாதத்தை முதன் முதலில் முன் வைத்தவர் நபிமார்களில் அவரேயாவார்.

அதாவது இயற்கை புத்தகத்திலுள்ள ஒவ்வொரு இலையும் படைப்பின் ஒவ்வொரு அணுவும் எல்லாம் வல்ல இறைவன் அவற்றிற்களித்திருக்கும் சட்டத்தின் பால் தேவையாயிருக்கிறது என்பதாகும். எல்லா ஞானமும் மிக்க இறைவன், அகில உலகங்களின் ரப்பு, மிகச் சிறிய அணுவிற்குக் கூட ஒரு சட்டஒழுங்கு முறையை அளித்திருந்தான் எனில், தன் முன் ஏராளமான முன்னேற்ற தளங்களை கொண்டிருக்கும் இறைவனின் மிகச் சிறந்த படைப்பான மனிதனுக்கு தன்னை சரியான முறையில் நடத்திக் கொள்வதற்கும் தன்னுடைய முன்னேற்ற வளர்ச்சிக்கும் இறைவனின் வழிகாட்டுதலும் ஒளியும் கட்டாயம் தேவை. எல்லாம் வல்ல இறைவன் திருமறை குர்ஆனில் கூறுவதாவது: படைத்து, முழுமைப்படுத்தி, குறிப்பிட்ட அளவுப்படியாக்கி அவைகளை (அவைகளின் இலட்சியத்தை நோக்கி) வழிகாட்டும் மேன்மையான இறைவனை துதிப்பீராக. திருமறை குர்ஆன் (87:1-3.)

இறைச்செய்தி வெளிப்பாட்டிற்கு மானிட வரையறைகளை இடுவது அல்லது ஏதேனும் ஒரு காலம் அல்லது குறிப்பிட்ட மக்கள் ஆகியோருடன் அது நின்று விடுகின்றது என்று கூறுவதெல்லாம் கருணையாளனான அந்த இறைவனின் பண்புகளான இரக்கம் அன்பு ஆகியவற்றை மறுக்கிறது என்பது மாத்திரமல்லாமல் மதத்தின் தேவையையும் அடிப்படையையும் மிகவும் சிறுமைப்படுத்தி விடுகின்றது.  அது ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கண்டிப்பாக போதிக்கப்பட வேண்டிய தவிர்க்க முடியாத தேவை அல்லது அது காலத்தால் சீர்கெடுக்கப்பட்டால் அது ஒரு புதிய நபியால் புத்துயிரூட்டப்பட்டு மனித வாழ்வின் இயக்க சக்தியாக மீண்டும் மாற்றப்பட வேண்டிய ஒன்று என்ற நிலையை இழக்கிறது.

ஒரே குறிப்பிட்ட சமுதாயத்தை தவிர மற்ற அனைத்து சமுதாயங்களும் மதத்தின் துணையின்றி வாழ்ந்திட முடியுமெனில், இறைச் செய்தி வெளிப்பாடின்றி நற்குணம் மற்றும் இறையச்சம் ஆகியவற்றிற்கு மிகவும் உன்னத மாதிரிகளான ஜொராஸ்டர், புத்தர் அல்லது ஆப்ரஹாம் மூசா, கிருஸ்ணா அல்லது இயேசு கிறிஸ்து ஆகியோரை உண்டாக்க முடியுமெனில், ஒரு குறிப்பிட்ட இனத்திடமிருந்துதான் மற்ற அனைத்து மனித இனங்களும் வழி காட்டுதல் பெற வேண்டுமென்று சொல்வதற்கு எந்த வித நியாயமுமில்லை. இறைவனே அவனுடைய பிரதிபலன் கொள்கையைக் கொண்டு, ஒரு சில தேர்ந்தெடுக்கப்படவர்களுக்கு மாத்திரம் தன் ஒளியை காண்பித்து விட்டு மற்றவர்களெல்லாம் தன்னுடைய படைப்புக்களே இல்லாதது போல், வழி காட்ட மறுத்து அழிவுக்கு உள்ளாக்கினால் அப்படிப்பட்ட கடவுள் எந்த வித மரியாதைக்கு உரியவனுமல்ல. அவன் இருள் ராஜியத்தின் குருட்டு மன்னனைப் போலாவான். அவனை ஏற்றுக் கொள்வதை விட நிராகரிப்பதே சிறந்ததாகும்.

இது மிகவும் பரந்து விரிந்த விசயமாகும். ஒருவர் இது பற்றி மென்மேலும் சிந்திக்கும் போது, இஸ்லாம் சுட்டிக் காட்டியுள்ள சூழ்நிலை (நபிமார்கள் எல்லா சமுதாயத்திற்கும் ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுவது) இருந்தால்தான் மதமென்பதே தேவையாயிருக்கும் என்பது அவருக்கு மிக தெளிவாக புரியும். காலத்திற்கு காலம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நபிமார்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள் என இஸ்லாம் கூறுகிறது. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் தன்னுடைய படைப்புக்களிமிருந்து அவனுடைய ஒளி மற்றும் சத்திய மார்க்கம் ஆகியவற்றை பெற்றிடும் உரிமையை பறித்திடவில்லை. மேலும் மார்க்கம் என்பது, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பிரதேசத்திலும் நிலைநாட்டப்பட்ட உண்மையாக காணப்பட வேண்டும் என்றும் அதைப் பின்பற்றுபவர்கள் அதை பரப்புவதையே தங்கள் வாழ்வின் முழு முதற் இலட்சியமாக கருத்தில் கொண்டு செல்படவேண்டுமெனவும் இஸ்லாம் கூறுகிறது. மார்க்கத்தை பரப்புவதிலிருந்து அவர்களை உலகத்திலுள்ள சக்தி எதுவும், அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் தடுத்து விடக் கூடாது. சமுதாயங்களை நில அதிர்ச்சிகள் ஆட் கொள்ளலாம், பெரும் புயல் காற்று அவர்களின் சொத்துக்களை நாசப்படுத்தலாம், சத்தியம்-அசத்தியம் ஆகியவற்றின் மோதலால் மனித இரத்தம் ஆறாக ஓடலாம் - ஆனால் சத்திய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாத வரை எந்த வித உதவியும் இல்லை என்று மனிதன் உணர்ந்து ஒப்புக்கொள்ளும் வரை இவைகளெல்லாம் ஒன்றும் பெரியவைகளல்ல.  இவ்வாறு இல்லையென்றால், மதத்தை பரப்புவதில் மூடு மந்திரம் இருந்தாலோ அல்லது மற்றவர்கள் கேட்டு விடக்கூடாது என்பதற்காக மந்திரங்களை காதுகளில் சொல்வது போன்றவைகளோ இருந்தாலோ அது மதத்தின் அவசியத்தை கேள்விக்குறியாக்குகிறது.

நபி (ஸல்) அவர்களின் மீது நம்பிக்கை கொள்வதே உலகளாவிய அமைதிக்கு வழியாகும்.

அல்லாஹ்வையே வணங்குங்கள்: வரம்பு மீறுபவர்களை(-தாகூத்களை) விட்டு விலகி விடுங்கள் என்ற செய்தியுடன் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நாம் நம்முடைய தூதர்களை அனுப்பி வைத்துள்ளோம். 16:36

உலகில் தோன்றிய நபிமார்களில் முஹம்மது(ஸல்) அவர்கள் மாத்திரமே இணையற்ற கொள்கையை அளிக்கப்பட்டவராயிருந்தார்கள். தன்னைப் பின்பற்றுபவர்கள் தன்மேல் நம்பிக்கை கொண்டிருப்பது போல் தமக்கு முன் சென்ற எல்லா நபிமார்களின் மேலும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதை கட்டாயக் கடமையாக்கியது அவருடைய தூதின் தனிச்சிறப்பான அம்சமாகும். இஸ்லாத்தின் இந்த கொள்கை சத்திய மார்க்கத்தின் உண்மையான அடிப்படையையும் உலக சமாதானத்தையும் உருவாக்கும் உன்னதம் மிக்கதும் மாட்சிமை பொருந்தியதுமாகும் என்பது மாத்திரமல்ல அதிலிருந்து சிறிதளவு கூட விலகிப்போவது கூட முழு மார்க்கத்தையுமே சிதைத்து விடப் போதுமானதாகும்.  ஏனெனில் மார்க்கம் என்பது, இஸ்லாத்தின் கொள்கையின் பிரகாரம் ஒவ்வொரு சமுதாயத்திலும் காணப்படும் உலகளாவிய உண்மையாகும். தற்காலத்தில் இது போன்ற கண்ணோட்டத்தையுடையவர்கள் பெரும்பாலும் ஒவ்வொரு மதத்திலும் தோன்றி வருவது இந்தக் கொள்கை மிகவும் சரியானது என்பதற்கு தெளிவான அடையாளமாகும்.  ஆனால் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் இந்த உன்னதமான கொள்கையை உலகிற்கு முதன் முதலில் போதித்த இறை வெளிப்பாடு கொண்ட தூதராவார். அவருக்கு முன்னாலுள்ள எந்த நபியும் இந்த உண்மையை வெளிப்படுத்தியதில்லை. எல்லா நபிமாரின் மேலும் நம்பிக்கை கொள்வது கட்டாயம் என்பதை  அவருக்கு முன்னால் எந்த மதமும் தன்னுடைய அடிப்படைக் கொள்கையாக  ஆக்கியதில்லை.

உலகங்களின் ரப்பு என்பது திருக்குர்ஆனிற்கு மாத்திரமே சொந்தமான கொள்கையாகும்.

உலகங்களின் ரப்பான இறைவனுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக (1.1).  அவன் கிழக்குக்கு இறைவனாக இருப்பது போல் மேற்கிற்கும் அவனே இறைவனாக இருக்கிறான். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நபிமார்கள் வருகிறார்கள் என்பதை ஒரு பக்கம் விடுங்கள்,  பெரும்பாலான மதங்கள் தங்களின் இறைவன் எல்லா சமுதாயங்களின் இறைவனாக இருக்கிறான் என்று ஒப்புக் கொள்ளும் அளவிற்குக் கூட சகிப்புத் தன்மையுள்ளவர்களாகவோ தாரளத் தன்மையுடவர்களாகவோ இல்லை.  ஆர்யர்கள் மாத்திரமே இறைவனின் குழந்தைகள் என்று பிராமணியமும் வேத மதங்களும் கருதின (நிர்துகா VI:26).  வேதங்களின் பசுத் தாய் பிராமணர்கள், ஷத்ரியர்கள், வைஷியர்கள் ஆகியோருக்கு மாத்திரமே தன் அமுதை வழங்கி வளர்த்தாள். (அதர்வண வேதம் (XIX : 71,1).  இஸ்ரவேலர்களின் கடவுளான ஜெஹவோ என்பவரும் மற்றவர்கள் யாருக்குமில்லாமல் அவர்களுக்கு மாத்திரமே கடவுளாக இருந்தார். மதங்களின் சுருக்க வரலாறு எனும் நூலில் ஜான் ஹைலந்து எழுதுவதாவது : யூதர்கள் வணங்கும் கடவுள் ஆரம்பத்தில் நாடோடிகளின் குலத் தெய்வமாகத்தான் கருதப்பட்டு வந்தது ...... அவர்களின் கடவுள் மற்ற அனைத்து சமுதாயங்களின் கடவுள் என்ற கொள்கை யூத சமுதாயத்தால் ஒரு போதும் வரவேற்கப்பட்டு ஏற்கப்படவில்லை.

இரண்டாம் சாட்சி:- தெய்வீக வெற்றியின் உருவில் தெய்வத்தின் சாட்சி

உங்களுக்கும் எனக்குமிடையில் அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான். அவன் தன் அடியார்களை மிக்க அறிந்தவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கிறான் என்று நபியே நீர் கூறுவீராக.  (17:96)

சத்தியத்தின் வெற்றியையும் அசத்தியம் அடியோடு உருக்குலைந்து போவதையுமே இறைவனின் சான்று என இவ்வசனத்தில் குறிப்பிடப்படுகின்றது. சத்தியம், அதற்கு வரும் எண்ணற்ற எதிர்ப்புகளால் தடைப்படாமல் ஊடுருவி படர்கிறது. அதே நேரத்தில் அசத்தியமோ அதற்கு ஏராளமான அதிகாரமும் செல்வாக்கும் இருந்த போதிலும் தோற்கடிக்கப்பட்டு விடுகிறது. ஏனெனில் ரப்பு தன்னுடைய சர்வ வல்லமையால் மிக்க அறிந்தவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கிறான். ரப்பின் இந்த இரண்டாம் சாட்சியம் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வியக்கத்தகும் வெற்றியால் நிரூபிக்கப்படுகின்றது.நூஹ், இப்ராஹிம், புத்தர், கிருஸ்ணர், ஜொராஸ்டர், மூஸா மற்றும் உலகில் தோன்றிய நபிமார்களிடம் தோன்றிய தெய்வீக அத்தாட்சிகள் மிகவும் பிரத்யட்சமான முறையில் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு ஆதரவாக வெளிப்படுகின்றது. கடும் எதிர்ப்புகள், குறைந்தஅளவு நண்பர்கள், எதிரிகளின் பெரும் படைகள் ஆகியன இருந்த போதிலும் அவர் பெற்ற பெரும் வெற்றிகள் ஆளுமை ஆகியவைகள் தெய்வத்தின் ஆதரவிற்கு தெளிவான அத்தாட்சிகளாகும். முஹம்மது (ஸல்) அவர்கள் அடைந்த வரலாறு காணாத வெற்றிகளை இஸ்லாத்தின் எதிரிகள் கூட ஒப்புக் கொண்டுள்ளனர். உண்மையில் எதிரிகளால் ஒப்புக்கொள்ளப்படும் அதுவே அவருடைய மகத்துவமுமாகும். குர்ஆன் என்ற கட்டுரையில் என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிகா நபி(ஸல்) அவர்களை நபிமார்கள் மற்றும் மதவாதிகள் ஆகியவர்களில் மிகவும் வெற்றி மிக்கவர் என குறிப்பிடுகின்றது.

வாக்குறுதியளிக்கப்பட்ட நபி:

நான் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் அளிக்கிறேன். பின்பு உங்களிடமுள்ள (வேதஞானத்தை) உண்மைப்படுத்தும் ரஸூல் உங்களிடம் வரும் போது நீங்கள் அனைவரும் அவரில் ஈமான் கொண்டு அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று அல்லாஹ்(நபிமார்களிடம்) உடன்படிக்கை செய்து நீங்கள் என்னுடைய இந்த உடன்படிக்கையை ஏற்று உறுதி செய்கின்றீர்களா? என்று கேட்டான்.அதற்கு அவர்கள் நாங்கள் ஏற்று உறுதி கூறுகிறோம் என்று கூறினார்கள். அவ்வாறாயின் (இதற்கு)சாட்சியாயிருங்கள் நானும்(இதற்கு) உங்களுடன் சாட்சியாயிருக்கிறேன் என்று அல்லாஹ் கூறினான். திருக்குர்ஆன் (3:80)

மேற்கண்ட இரண்டு சாட்சியங்களோடு இறைவனின் மற்றொரு மிகப்பெரும் சாட்சியமும் இந்த வசனத்தில் குறிப்பிடப்படுகின்றது. தங்களிடமுள்ள சத்தியத்தை உறுதி செய்து வேதத்தை உறுதி செய்யும் நபி தோன்றும் போது அவரை மனமார ஏற்று அவருக்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று எல்லா சமுதாயத்தினரிடமும் அவர்களின் நபிமார்களின் மூலமாக உடன்படிக்கை செய்யப்பட்டது.நபிமார்களின் இந்த உடன்படிக்கை அவர்களின் வேதங்களில் (நபி (ஸல்) அவர்களைப் பற்றிய) முன்னறிவிப்புக்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மார்க்கத்தின் அத்தியாவசியத் தன்மையை நிரூபித்து அதை திடமான ஒரு தளத்தில் நிலைநாட்டும் இந்த மேலான உண்மையை நபி(ஸல்) அவர்களே உலகுக்கு அறியச் செய்தனர். உலகில் இன்று காணப்படும் மற்ற மார்க்கங்களுடைய வேதப் புத்தகங்களின் நிலை உண்மையில்  மிகவும் பரிதாபகரமானது. அவைகள் முன்னுள்ள நபிமார்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரும் வேதப்புத்தகங்களின் மிச்சம் மீதிகள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 

நபி(ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது இன்றோ எந்த மதத்தினுடைய வேதப் புத்தகமும் அவைகள் வழங்கப்பட்ட உண்மை வடிவிலோ அல்லது அப்போது இருந்தது போல் தூய்மையானதாகவோ இருக்கவில்லை. 

அத்தகைய வேதங்கள் அந்த மதத்தின் சத்தியத்தை நிரூபிக்க முடியாது என்பது மாத்திரமல்ல அவைகள் வழங்கப்பட்ட நபிமார்களும் உண்மையானவர்கள்தாம் என்று நிரூபிக்கப்பட வேண்டிய சந்தேக நிலையிலுள்ளனர். ஜொராஸ்டர், ஆப்ரஹாம், கிருஸ்ணர்;, கிறிஸ்து ஆகிய தீர்க்கதரிசிகள் அனைவரும் கற்பனை நபர்களேயன்றி உண்மையல்ல என்று எண்ணும் அளவிற்கு அவர்களைப் பற்றி சந்தேகங்களும் தப்பபிப்ராயங்களும் வந்திருக்கிறது. அவர்களின் பெயர், இடம், சரித்திர காலத்திற்கு முன்புள்ள தீர்க்கதரிசிகளின் காலம் ஆகியவற்றைப் பற்றியும், ஏன், அவர்கள் உண்மையில் இவ்வுலகில் வாழ்ந்தார்களா இல்லையா என்று சந்தேகப்படும் அளவு வரை முரண்பாடுகள்  நிறைந்தவைகளாக காணப்படுகின்றன.அவர்கள் அனைவரும் உண்மையானவர்களே என்று ஒட்டு மொத்த சான்று பகர்வதன் மூலம் அந்த நபிமார்கள் அனைவரையும் நபி(ஸல்) அவர்கள் நீங்காக் கடமைப்பட்டவர்களாக்கிவிட்டார்கள். 

உண்மையில், அந்த நபிமார்களின் தற்கால வேதப்புத்தகங்களோ அல்லது அவரைப் பின்பற்றுபவர்களோ செய்ய முடியாத மாபெரும் காரியத்தை நபி(ஸல்) அவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள். இவ்வாறாக,அவர்களைப் பற்றி அவர் அளித்த ஒட்டுமொத்த சான்றின் மூலம் மார்க்கம் சத்தியமான(அவசியமான)து என அவர் நிரூபித்துள்ளார். மார்க்கச் சிந்தனையற்று, இவ்வுலகே மனிதனின் இறுதி என மக்கள் எண்ணிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், மார்க்கத்தின் உண்மையைப் பற்றி எல்லா சமுதாயத்திலுள்ள அறிவும் பரந்த மனப்பான்மையும் கொண்ட மக்களனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறு ஒரு ஆதாரம் அரிதாகவே காணக் கிடைக்கும்.

அனைத்து மதத்தைத் சேர்ந்த பரந்த நீதிமிக்க மனப்பான்மை கொண்ட அனைவரையும் இது போன்ற முக்கியமான வேறொரு சாட்சியின் பக்கம் நாம் அழைக்கிறோம். நபி(ஸல்) அவர்கள் எல்லா தீர்க்கதரிசிகளின் சத்தியத்திற்கு சான்று பகர்ந்து அவர்கள் அனைவரிலும் முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டியதை கடமையாக்கியதைப் போல், உலகின் எல்லா தீர்க்கதரிசிகளும் நபி முஹம்மது(ஸல்) அவர்களின் சத்தியத்திற்கு சாட்சி கூறி அவரின் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டுமென தங்களைப் பின்பற்றியோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இறுதியாகத் தோன்றவிருக்கும் மிகப்பெரும் அந்த நபியைப் பற்றிய மகிழ்வுச் செய்தியை அனைவருக்கும் அளித்திடாமல் எந்த நபியும் சென்றதில்லை.

முஹம்மது(ஸல்) அவர்கள் எல்லா தீர்க்கதரிசிகளும் உண்மையானவர்கள் என்று சான்று பகர்ந்ததே உலக சமாதானத்திற்கும் மனித சகோதரத்துவத்திற்கும் வலுவான அடிப்படையாக இருக்கிறது. அதே நேரத்தில், உலகத்திலுள்ள அனைத்து தீர்க்கதரிசிகளும் முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தின் உண்மையை உறுதிப்படுத்தினார்களென்பது எல்லா மார்க்கங்களின் உண்மையையும் ஒற்றுமையயும் நிரூபிக்கும் மற்றொரு மிகவும் பலமான ஆதாரமாகும்.

ஒவ்வொரு இனம் காலம் ஆகியவற்றைச் சேர்ந்த பிரபலமான தீர்க்கதரிசிகள் அனைவரும் முஹம்மது(ஸல்) அவர்களின் வருகையைப் பற்றி முன்னறிவித்துள்ளார்கள் என்ற விசயத்தை சத்தியத்தை தேடும் ஒவ்வொருவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். முஹம்மது(ஸல்) அவர்கள் உலகின் அனைத்து நபிமார்களையும் உறுதிப்படுத்துபவர்களாவார். இந்த கொள்கையே, நாம் கூறியது போல், உலக சமாதானத்திற்கும் இணக்கத்திற்கும் அடிப்படையாகும். உலகின் நபிமார்கள் முஹம்மது(ஸல்) அவர்களை உறுதிப்படுத்துவர்களகவே இருந்தனர். இந்த ஒன்றுதான் உலக மதத்தின் புனித கொள்கையை உருவாக்குகிறது. இந்த புனித எல்லைகளை விட்டு விலகி இருப்பவன்  விரைவிலேயே இறை மறுப்பு கொள்கையில் வீழ்ந்து  நாத்திகனாக ஆகிடக் கூடும்.

வேதமுடையோரின் சாட்சி:

உங்களுக்கும் எனக்கும் இடையில் (நான் நபியென்பதற்கு) அல்லாஹ்வும் (முன்னுள்ள) வேதங்களை அறிந்தோரும் சாட்சியாக உள்ளனர் என்று நபியே அவர்களிடம் நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் 13:43)

எல்லாம் வல்ல இறைவனின் சாட்சிக்கு அடுத்த படியாக உலகின் பல்வேறு பிரதேசங்களில் வந்த நபிமார்களுக்கு பல்வேறு மொழிகளிலும் அருளப்பட்ட வேதங்களின் சாட்சி இருந்த போதிலும், மற்ற மதங்களின் வேதங்கள்(இஸ்லாத்திற்கு முன்) பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இருந்து வந்த போதிலும் முஸ்லிம்கள் கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக அவைகள் இருக்கும் மொழியை படித்து அந்த வேதங்களை ஆராய்ச்சி செய்தார்களில்லை. இப்பொழுது உள்ள காலமானது இஸ்லாம் மற்ற எல்லா மதங்களையும் விட மேலோங்கி ஆளுமை செய்யும் காலமாகும். இஸ்லாத்தின் சத்தியத்தை நிரூபிக்கும் எண்ணற்ற ஆதாரங்கள் காணக்கிடைக்கும் காலமாகும் என்ற உண்மையை மறுக்க முடியாது. அவன் தன் மார்க்கத்தை மற்ற அனைத்து மார்க்கங்களையும் விட மேலோங்கச் செய்வான்(9:33) என்ற தெய்வ வாக்குறுதி நிறைவேறும் காலமாகும். உலகிலுள்ள பல்வேறு மதங்களையும் சேர்ந்த நபிமார்களின் ஒட்டுமொத்த சாட்சியங்கள் நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு சாதகமாக வெளிப்படும் காலமுமாகும். மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்கள் அவர்களின் வேதங்களை எந்த அளவு ஜாக்கிரதையாக மறைத்து மறைத்து வைத்திருந்தார்கள் என்பதே ஒரு நீண்ட கதை. புகழ் பெற்ற அறிஞர் ஸர். வில்லியம் ஜோன்ஸ் அவர்களின் சம்பவமே நாம் கூறுவதை படம்பிடித்து காண்பிக்கப் போதுமானதாகும். ஸர். வில்லியம் ஜோன்ஸ் அவர்களின் தீவீர விடா முயற்சியானது சமஸ்கிருத மொழியை மேற்கத்திய உலகிற்கு கொண்டு சென்றது. அதனால்தான் மிகவும் அரிதான,இருளில் கிடந்த வேதங்களை இன்று ஐரோப்பா கிழக்கத்திய மக்களுக்காக பிரசுரித்துக் கொண்டிருக்கிறது. ஸர். வில்லியம் ஜோன்ஸ் அவர்கள் உச்ச நீதி மன்றத்தின் நீதிபதியாக கல்கத்தாவிற்கு 1783ம் ஆண்டு வந்தார். அவர் வங்காள ஆஸியாடிக் சொஸைட்டி என்பதை நிரூபி இந்த நாட்டை என்றும் மறக்க முடியாத மிகப்பெரும் நன்றிக் கடனுக்கு ஆளாக்கியவராவார். இந்த சொஸைட்டியின் இடையறாத, தளராத முயற்சியினால்தான் வேதங்களின் பழம் பிரதிகளும் மற்ற சமஸ்கிருத புத்தகங்களும் பகலின் ஒளியை காணத் துவங்கின. ஸர்.வில்லியம் ஜோன்ஸ் அவர்கள் சமஸ்கிருத மொழியை கற்க விரும்பிய போது, அவர் அதற்காக ஏராளமான ஊதியம் தர ஆயத்தமாயிருந்த போதிலும் நாட்டின் எந்த இடத்திலும் அவருக்கு அதை கற்றுக் கொடுப்பதற்கு எந்த பண்டிட்டும் கிடைக்கவில்லை. ஸர். வில்லியம் ஜோன்ஸை சந்தித்து சம்பளம் பற்றி பேசி முடிவெடுப்பதற்காக இரண்டு மூன்று பண்டிட்டுகள் அவரை தனியே ரகசியமாக சந்திக்கச் சென்றது. ஆனால் குருமார்கள் கூட்டம் அதை அறிந்து அவர்கள் அனைவரையும் சமூக நீக்கம் செய்து, கூடி உண்ணுதல், ஒருவருக்கொருவர் திருமண சம்பந்தங்கள் செய்தல் போன்ற அவர்களுடனான எல்லா வித சமூக உறவுகளிலிருந்தும்  அவர்களை ஓதுக்கி வைத்து விட்டது. அந்த சமூகத்தின் அவ்வளவு கடுமையான மனப்பாங்கு சில பண்டிட்டுகளின் ஆசைகளிலும் மண்ணைப் போட்டது. ஆகவே பிரச்னை தீர்க்கப்படாமலே இருந்தது.  கிருஸ்ண நகரின் மகாராஜா சிவசந்த்ரா ஸர் வில்லியம் ஜோன்ஸின் நண்பராவார். அவரும் தீவீர முயற்சி செய்தும் இந்த தீண்டத்தகாத வில்லியம் ஜோன்ஸிற்கு ஒரு பண்டிட்டைப் பெற முடியவில்லை. இறுதியாக ராம் லோச்சானா என்ற குடும்பமற்ற ஒரு பண்டிட் இந்த ஆபத்து நிறைந்த வேலையை செய்ய துணிந்தார். பண்டிட் அவர்கள் திருமண உறவை தவிர்த்து விட்டு தனியாக வாழ்வதையே தேர்ந்தெடுத்திருந்தார். அவருக்கு நண்பர்கள் பலர் இருந்தாலும் மாதம் நூறு ரூபாய் சம்பளம், அவருடைய வீட்டிலிருந்து சவுரன்ஜிக்கு பல்லக்கில் பயணம் ஆகிய கவர்ச்சிகள் அவரை நண்பர்களை ஒரு பொருட்டாக கருதச்செய்யவில்லை. தன் மாணவன் மேல் பண்டிட் விதித்த நிபந்தனைகள் மிகவும் கடுமையானவையாக இருந்தன. ஆனாலும் ஸர். வில்லியம் ஜோன்ஸ் அவர்கள் சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்ற தன்னுடைய தீர்மானத்திலிருந்து எள்ளளவும் தடுமாறிவிடவில்லை. மாளிகையின் கீழ்த்தளத்திலிருந்த ஒரு அறை இதற்காக ஓதுக்கப்பட்டது. பண்டிட்டுடைய உத்தரவுப்படி அதனுடைய தரையில் வெள்ளை சலவைக்கல் இடப்பட்டது. எந்த வகையான இறைச்சியும் மாளிகையின் சுற்றுப்புறத்தில் கூட கொண்டு வரப்பட அனுமதிக்கப்படவில்லை. ஸர்.வில்லியம் வெறும் வயிற்றோடுதான் பாடம் கேட்க வேண்டியதாயிருந்தது.  எப்பொழுதாவது அவர் பண்டிட்டை மிகவும் தாழ்மையோடு வேண்டிக் கொண்டபோது மாத்திரம் ஒரு கோப்பை தேனீர் அருந்த அனுமதிக்கப்பட்டார். பாடம் தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் ஒரு இராணுவ வீரன் பண்டிட்டின் வீட்டிற்குச் சென்று பாடம் தொடங்க நேரமாகிவிட்டது என்று தெரிவித்தார். அதன் பிறகே பண்டிட் இந்த கீழ் ஜாதியினருக்காக வருவார். பண்டிட் அவர்கள் தன்னுடைய புனிதம் நிறைந்த மேலங்கியை கழற்றி வைத்து விட்டு (தீண்டத்தகாத) ஜோன்ஸின் முன்னால் போவதற்காக, தனியான உடை அணிந்து கொள்ளும் பொருட்டு, படிப்பறைக்கு ஒட்டியே ஒரு அறை ஒதுக்கப்பட்டது. கங்கை நீரால் தினமும் அந்த படிப்பறையையும் அதில் உள்ள மரச்சாமான்கள் அனைத்தையும் கழுவி தீட்டு நீக்குவதற்கென ஒரு ஹிந்து நியமிக்கப்பட்டார். பண்டிட் கோபக்காரராக வேறு இருந்தார். இறைச்சி தின்பவர்கள் ஸமஸ்கிருத மொழியை கற்றுக் கொள்ள முடியாது ஏனெனில் அது தீண்டப்படத்தகாதவர்களின் மொழியல்ல, அது தேவ மொழியாகும் என்று சொல்லி அவர் ஸர். வில்லியம் ஜோன்ஸை அடிக்கடி திட்டுவார். ஸர்.வில்லியம் ஜோன்ஸ் இந்த மாதிரியான திட்டுதல்கள் அனைத்தையும்  புன்னகையோடு பொறுத்துக்கொண்டார். இறுதியாக அவர் ஸமஸ்கிருதத்தை கற்றே விட்டார். ஸர். வில்லியம் ஜோன்ஸின் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் அவருடைய ஆர்வம் ஒரு சில நாட்களிலேயே குன்றிப் போயிருக்கும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால், இந்து மற்றும் ஜொராஸ்ட்ரீய மத வேதங்களை அவைகளின் இருள் குகையிலிருந்து வெளிக்கொண்டு வந்து அவைகளுக்கு பகலின் ஒளியை காட்டிய அத்தகையவர்களின் முயற்ச்சிக்கு நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதுதான். ஆரம்பத்தில் இந்த முயற்சிகள் யாவும் வியாபார நோக்கை கொண்டவைகளாக இருந்த போதிலும் பல்வேறு மொழிகளை கற்று பல பழமையான புத்தகங்களை பிரசுரித்த அவர்களின் தளராத முயற்ச்சிக்கும் ஆர்வத்திற்கும் நாம் நன்றிக் கடன் பட்டே இருக்கிறோம். இங்கேயும் முஹம்மது(ஸல்) அவர்களுடைய உண்மைக்கான நாம் ஓர் அத்தாட்சியைக் காணவே செய்கிறோம்.  உண்மையில், உலக வானில் நபித்துவத்தின் உச்சிக் கதிரவன் தோன்றப் போகும் மகிழ்வுச் செய்தியை கொண்டு வந்த விடிவெள்ளியே இயேசு கிறிஸ்து ஆவார். அதைப் போலவே அவரைப் பின்பற்றியவர்களின் இலக்கிய மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகள் எல்லாம் உலகிற்கு நபி(ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை நோக்கி வழிகாட்டி, அவருடைய சத்தியற்கு சான்று பகரவும் செய்துள்ளது. ஆனால் தற்கால முஸ்லிம்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதற்குப் பதிலாக கல்வி கற்பதில் காட்டும் அலட்சியமும், அவர்களின் கலாச்சார பண்பாட்டின் வீழ்ச்சியும்,  ஒருவருக்கொருவர் காபிராக்கிக் கொண்டு தங்களையே அழித்துக் கொள்ளும் அவர்களின் சண்டையும் இஸ்லாத்தையே உருக்குலைத்துள்ளது. ஆனால் நபி முஹம்மது(ஸல்) அவர்கள் முஸ்லிம்களால் மாத்திரம் அருள் செய்யப்பட்டவராயில்லை. இறைவனும் அவனுடைய வானவர்களும் அவருக்கு அருள் (-பிராத்தனை) செய்கிறார்கள். துரதிருஷ்டவசமாக இன்றைய காலத்திலுள்ள முஸ்லிம்கள் தங்களின் தவறான போக்குகளால் நபி(ஸல்) அவர்களின் பெயருக்கே இழிவை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் அருளும் அவன் வானவர்கள் அவனிடம் செய்யும் பிரார்த்தனையும் எல்லா கறைகளையும் நீக்கி அவர்கள் மேல் சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை பரிசுத்தப்படுத்துகிறது. ஐரோப்பாவில் இன்று செய்யப்படும் எல்லா இலக்கிய மற்றும் தத்துவ ஆராய்ச்சிகளும் மற்றும் பழங்காலத்திய மதங்களைப் பற்றி வெளியிடப்படும் பெரும் பெரும் புத்தகங்கள் அனைத்தும் இஸ்லாத்தின் உண்மையை நிரூபிக்கும் ஆதாரங்கள் நிரம்பியவைகளாகவே உள்ளன. நபி(ஸல்) அவர்களின் வருகைக்கு முன்னால் கிறிஸ்துவ சன்னியாசிகள் பரக்லீத்தின் (அஹ்மது) வருகையை மிக ஆவலோடு எதிர்பார்த்து,  தங்களின் இடையறாத வணக்க வழிபாடுகள், மனப்பூர்வமான பிரார்த்தனைகள், மற்றும் ஸலவாத்துக்கள் ஆகியவற்றால் நபி முஹம்மது(ஸல்) அவர்களின் வருகையைப் பற்றிய சந்தோச செய்தியை உலகிற்கு அறிவித்துக் கொண்டிருந்தார்கள் எனில், அது போலவே இன்றும் கூட அவர்கள்(கிறிஸ்தவர்கள்) தங்களின் தீவீர ஆராய்ச்சிகளாலும் இலக்கிய சேவைகளாலும் நபி(ஸல்) அவர்களின் உண்மைக்கு சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றனர். இயேசு கிறிஸ்துவிற்கும் அவருடைய தாயாருக்கும் அவரின் சந்ததிக்கும் நபி(ஸல்) அவர்கள் செய்த உதவி சிறியதல்ல. அவரைப் பின்பற்றியோர்கள் இஸ்லாத்திற்கு சேவை செய்வதற்காக(மறைமுகமாக) இன்று ஏராளமான மில்லியன் கணக்கான பணங்களை செலவிட்டும் பல விதமான கஷ்டங்களை அதே பாசத்துடன் தாங்கி (நபி(ஸல்) அவர்களின் நபித்துவத்தை உண்மையென நிரூபிப்பதற்கு) பாடுபடுவது உண்மையில்  அதற்கான ஒரு பணிவான கைமாறே தவிர வேறொன்றுமில்லை. அவர்களின் கடும் உழைப்பினால் அவர்கள் சத்திய ஒளியைக் கண்டார்களேயனால் அது வியப்பிற்குரியதொன்றுமேயில்லை.

முஸ்லிம்கள் இத்தகையகடமைகளை செய்யத்தவறியது அவர்களுக்கு அதற்காக இறைவன் புறத்திலிருந்துள்ள வெகுமதிகளை கிடைக்காமல் ஆக்கிவிட்டது என்பதில் சந்தேகமில்லை.அதே நேரத்தில், அது இவ்வாறுதான் நடக்கவேண்டுமென ஏற்கனவே விதிக்கப்படாமலும் இருக்கவில்லை. இந்த பழமையான வேதங்களை அவைகளின் இருளிலிருந்து வெளிக் கொண்டு வருவதற்கு முஸ்லிம்கள் காரணதாரிகளாக இருந்தார்களானால், அவைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றிய குற்றம் அவர்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும். ஒரு புறம் முஸ்லிமல்லாதவர்கள் தங்களின் வேதங்களிலுள்ளவற்றை மறைத்து வைப்பதற்கு முயற்ச்சித்திருந்தார்களேயானால்,அவைகளை வெளிக்கொண்டு வருபவர்களும் முஸ்லிம் அல்லாதவர்களே ஆவார்கள். அதுவும் பெரும்பாலும் இஸ்லாத்தின் எதிரிகளேயாவார்கள். இந்த வேதங்களிலுள்ள முன்னறிவிப்புக்கள் அனைத்தும் பிற்காலத்தில் நுழைக்கப்பட்டது என்ற சந்தேகத்தின் நிழல் கூடப்படாதவாறு பத்திரமாக இருக்க வேண்டுமென்பதற்காக அவ்வாறு விதிக்கப்பட்டிருந்தது போலும்.

இஸ்லாத்தின் வளர்ச்சிக் காலத்தில் வேதங்கள், தஸ்தகீர்(-பார்சி வேதம்) மற்ற புராதான வேதங்கள் ஆகியவைகள் அவைகளின் இருள் குகைகளிலேயே இருந்து வந்தன. அவைகளில் மறைந்திருந்த புதையல்கள் முஸ்லிம்கள் வீழ்ச்சியுறும் காலத்தில் அவர்களுக்கு அளிக்கப்படவிருந்தன போலும். இஸ்லாம் தன்னுடைய சத்தியத்தை நிலைநாட்டி அதை உலக மாந்தர் அனைவரும் அறிந்து கொள்ளச் செய்வதற்காக இவ்வுலக சக்திகள் எதனையும் நம்பியிருக்கவில்லை; மாறாக, பல நூற்றாண்டுகளாக மற்ற மதங்களின் பெட்டகங்களில் இருந்த இது போன்ற விலை மதிக்கமுடியாத மாணிக்கங்களையும் அது கொண்டிருக்கிறது என்பதை அது இதன் மூலம் நிரூபித்துள்ளது.

இந்து, கிறிஸ்தவ, புத்த, யூத நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

ஆவணங்களின் சாட்சியம் வாய்வழி சாட்சியத்தைவிட வலுவானது. அவைகள் மற்ற சாட்சிகளாலோ அல்லது சத்திய பிரமாணங்களாலோ தள்ளுபடி செய்யப்படமாட்டாது என்பது நடப்பு தடவியல் சட்டத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும். புனித தீர்க்கதரிசிகளாலும் ரிஷிகளாலும் வக்ஷராக்களாலும் உலகிற்குத் தரப்பட்ட எழுதப்பட்ட சாட்சியங்கள் மற்றும் தெய்வீக வெளிப்பாடுகள் ஆகியவற்றை மேற்சொன்ன சட்ட வரையின் ஒளியில் சிந்தித்துப் பாருங்கள். இந்தப் புனிதர்களில் எவரும் இவ்வுலகத்திய பொருட்களுக்காகவோ அல்லது பேராசையினாலோ எந்த ஒரு பொய்யும் சொன்னதில்லை என்பதை ஒவ்வொருவரும் நம்புகின்றனர். அவர்கள் எல்லா மனிதர்களையும் விட மேலானவர்கள், எந்த அளவிற்கெனில் அவர்களில் பலர் கடவுளாகவோ அல்லது கடவுளின் அவதாரங்களாகவோ அல்லது கடவுளின் குமாரர்களாகவோ வணங்கப்பட்டு விட்டனர். அவர்களைப் பின்பற்றியோர்கள் தங்கைள சுத்தப்படுத்திக் கொள்ளாமல் அவர்களின் பெயர்களைக்கூட மொழிவதில்லை.அந்த அளவிற்கு மற்றவர்களை விட அவர்கள் உயர்ந்தவர்கள். (ஆத்மீக ரீதியில்) மரணமடைந்த லட்சக்கணக்கானோருக்கு அவர்கள் உயிரளித்தனர். 

இந்த மிகப்பெரும் ஆத்மாக்கள் ஒரு புகழ்மிக்க நபியின் தோற்றத்தைப் பற்றி முன்னறிவித்துள்ளனர். ஆகவே இந்த நபியின் மேல் நம்பிக்கை கொள்வது தங்களின் சொந்த தீர்க்கதரிசிகள் ரிஷிகள் ஆகியோருக்கு கீழ்படிவது போலாகும்.உலகின் பல மூலைகளிலும், அரேபியாவை விட்டும் மிகத் தொலைவிலிருந்த ஒவ்வொரு தீர்க்கதரிசியும், அதுவும் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னாலேயே புகழ் மிக்கதொரு நபியின் தோற்றத்தைப்பற்றிய மகிழ்வுச் செய்தியை எவ்வாறு அறிவித்தனர் என்பதை ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் ஏன் மதத்தை நம்பாதவர்களும் கூட ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விசயம். அதுவும் அந்த முன்னறிவிப்புக்கள் இயேசு கிறிஸ்துவின் முன்னறிவிப்புக்களைப் போல் ஒரு துண்டு செய்தியல்ல. மாறாக, அதில் ஆதாரங்களும் தெளிவான சாட்சிகளும் இருந்தன. 

தெய்வத்தின் கையும் அதற்கு ஆதரவாக இயங்கியது காணப்பட்டது மேலும் மனித சக்திக்கு முற்றிலும் அப்பாற்பட்ட அதிசயிக்கத்தக்க வான் வெற்றியும் அதைத் தொடர்ந்தது. உலகின் எல்லா ஞானிகளும் தூர நோக்கு கொண்டவர்களும் இதைப்பற்றிச் சிந்திக்கட்டும். படிப்பறிவோ அல்லது உலக அறிவியல் ஞானமோ அற்ற உலகின் மற்ற மதங்களைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு மனிதர் ஒரு மிகப் பெரும் அறிவிப்பை, அதற்கு முன் எவரும் செய்யாத (உலகின் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களை நேர்வழியில் செலுத்துவதற்காக இறைவன் நபிமார்களை அனுப்பி வைத்துள்ளான் என்ற) ஒரு அறிவிப்பை செய்கிறார். 

இன்றைக்கு மதங்களை ஆராய்ச்சி செய்பவர்கள் அவர் சொன்னதை நம்புகிறார்கள்; அவர் பல நூற்றாண்டுகளுக்கு முன் சொன்னதை உண்மைப்படுத்துகிறார்கள். சங்கிலியில் இருக்கும் வளையங்கள் போல் நபிமார்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தனர் என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் தோன்றிய, பல்வேறு சமூகங்களுக்கு அனுப்பப்பட்ட, பல் வேறு மொழிகள் பேசிய நபிமார்கள் அனைவரும் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் தங்களுக்குப் பின்னால் வரும் வாக்களிக்கப்பட்ட நபியை, அனைத்துச் சமுதாயங்களின் நாயகனைப் பற்றி ஒரு முன்னறிவிப்புச் செய்கின்றனர்; முன்னறிவிக்கப்பட்ட அந்த நபி எல்லாவித அத்தாட்சிகளுடனும் வந்து விட்டார் என்பதை உலகம் அறிந்திருக்கிறது. மனிதர்களின் அனைத்துப் பிரிவினரிடையேயும் சகோதர வாஞ்சையையும் அமைதியையும் நிலைநாட்டக்கூடிய ஒரு தனிச்சிறப்பு மிக்க தூதையும் அவர் கொண்டு வந்தார் அதுதான் இன்றைய உலக பிரச்னைகளுக்கெல்லாம் உள்ள ஒரே பரிகாரம் என்பதும் தவறாமல் சிந்திக்கப்பட வேண்டிய விசயமாகும்.

முஹம்மது(ஸல்) அவர்கள் வருகை பற்றி இந்து மத வேதங்களில் முன்னறிவிப்பு:

முஹம்மது(ஸல்) அவர்களின் தோற்றம் பற்றி இந்து மத புனித மறைகளில் ஏராளமான முன்னறிவிப்புக்கள் காணப்படுகின்றன.  இந்த புனித மறைகள் மூன்று வகைகளாக பகுக்கப்பட்டுள்ளன. அவைகள் வேதங்கள், உபநிஷத்துக்கள் மற்றும் புராணங்கள் ஆகியவைகளாகும். மற்றொரு புனித புத்தகமான பிராஹ்மணாஸ் கிரந்த் என்பது வேதங்களின் விரிவுரை மாத்திரமே. ஆயினும் அதுவும் இறை வேதங்களில்(ஸ்ரூதி) சேர்க்கப்பட்டுள்ளது. 

வேதங்களில் நான்கு முக்கியமான பிரிவுகள் உள்ளன. எண்ணிக்கைகளைப் பொறுத்த வரை அவைகள் 1131[3] என்று கருதப்பட்டாலும் அவைகளில் சுமார் ஒரு டஜன் மாத்திரமே காணக் கிடைக்கின்றன. ரிக் வேதம், யஜூர்; வேதம், சாம வேதம் ஆகியவைகள் மிகவும் புராதாண வேதங்களாக கருதப்படுகின்றன. இவைகளில் ரிக் வேதம்தான் மிகவும் முந்தியதாகும். 

ரிக் வேதம் மூன்று நீண்ட காலங்களில் தொகுக்கப்பட்டதாகும்.[4] மேலே குறிப்பிடப்பட்ட மூன்று வேதங்கள்தான் பழைய வேதங்கள் என மனு கூறுகின்றது.[5] இவ் வேதங்கள் திரை வித்யா அல்லது மூன்று அறிவியல்கள் எனவும் அறியப்படுகின்றன. நான்காவது வேதமான அதர்வண வேதம் பிந்திய காலத்தைச் சார்ந்தது. வேதங்கள் தொகுக்கப்பட்ட அல்லது அருளப்பட்ட காலம் பற்றி கருத்துக்கள் மிகவும் வித்தியாசப்படுகின்றன. ஆயினும், தங்களின் ஆராய்ச்சியில் ஐரோப்பியர்கள் இதுபற்றி ஏறக்குறைய ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் பல்வேறு வித ஹிந்து மதப் பிரிவுகளுக்கும் அறிஞர்களுக்குமிடையே இணைக்க முடியாத பெரும் கருத்து வேற்றுமைகள் நிலவுகின்றன. வேதங்கள் 131 கோடி வருடங்களுக்கு முன் அருளப்பட்டது என[6] ஒரு அறிஞர் கூறும் அதே வேளையில் அவைகளின் வயது நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஒன்றும் ஆகவில்லை என மற்றவர்கள்[7] கூறுகின்றனர். இதைப் போன்றே இந்த வேதம் வழங்கப்பட்ட ரிஷிகள் மற்றும் இடங்கள் ஆகியவை பற்றிய பல்வேறு கருத்துக்களில் மிகவும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த வித்தியாசங்களை ஒதுக்கி விட்டு பார்ப்போமாகில், வேதங்கள்தான் இந்துக்களின் மிகவும் ஆதாரப்பூர்வமான புத்தகங்களும் ஹிந்து தர்மாவின் உண்மையான அடிப்படைகளும் ஆகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உயர்வு மற்றும் ஆதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் வேதங்களுக்கு அடுத்தபடியாக வருவது உபநிஷத்துக்களாகும்.  இருப்பினும், உபநிஷத்துக்கள் வேதங்களை விட உயர்வானவை என சில பண்டிட்டுகள் கருதுகின்றனர்.[8] இந்த தத்துவ கிரந்தக்களை கொண்டு ஹிந்துக்கள் பெருமைப்படுகின்றனர். இவைகள் வேதங்களை விட மேன்மையானவை என்ற வாதத்தை உபநிஷத்துக்களிலும் நாம் காணலாம்.[9]

உபநிஷத்துக்களுக்கு அடுத்தபடியாக ஆதாரப்பூர்வமான புத்தகங்கள் புராணங்களாகும். அனைத்து புனித புத்தகங்களிலேயே புராணங்கள்தான் மிகவும் பரவலாக படிக்கப்படுகின்ற புத்தகங்களாகும். இந்த புத்தகங்கள் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியதாகும் உள்ளன. வேதங்களோ புரிந்து கொள்வதற்கு கடினமானதும் மிகவும் அரிதாகவே கிடைப்பதுமாகும். ஹிந்துக்கள் இந்த புத்தகங்களுக்கு மிகவும் மரியாதை செய்கின்றனர்: அவைகளை மிகவும் விருப்பத்துடனும் பக்தியுடனும் படிக்கின்றனர். இப்பிரபஞ்சப் படைப்பு பற்றிய சரித்திரமும், ஆரம்ப கால ஆரிய குலத்தவரின் சரித்திரமும், புனிதர்கள் மற்றும் தெய்வங்களின் வாழ்க்கைக் சரித்திரமும் புராணங்களில் உள்ளன. மஹரிஷி வியாஷ அவர்கள் இப்புத்தகங்களை பதினெட்டு பெரும் பாகங்களாக பிரித்துள்ளார். புராணங்கள் உண்மையானவை என வேதங்களும் உறுதிப்படுத்துவதாக பெரும்பான்மையான இந்துக்கள் நம்புகின்றனர். புராணங்கள் வேதங்களை விட புராதானமானதும் ஆதாரப்பூர்வமானதும் ஆகும் என்பதையே இந்த நம்பிக்கை காட்டுகின்றது. 

அதர்வண வேதத்தில் நாம் காண்பதாவது :- வசனங்கள், பாட்டுக்கள், மந்திர உச்சாடனங்கள், புராணங்கள், பலி வசனங்கள் எல்லா மேல் உலகத்து கடவுள்கள் ஆகியஅனைத்துமே இறைவனிடமிருந்து வந்;தவைகள்தான்.[10] மேலும் நாம் காண்பதாவது அவன் மிகவும் பெரும் பிரதேசத்திற்கு சென்றான். இதிஹாசமும் புராணமும், கதாக்களும், நரஷன்சிகளும் அவனைப் பின் தொடர்ந்தன.[11] இது போன்று ரிக் வேதத்திலும் புராணத்தைப் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது : ஆகவே யவுஹவா எனும் புராணத்தின் அறிவைக் கொண்டு நம்முடைய முன்னோர்கள் ரிஷிகள் நிலைக்கு உயர்ந்தனர்.[12] புராணங்களை பற்றிய ஒரு குறிப்பு ஷந்தோக்யா உபநிஷத்துவிலும் காணப்படுகின்றது.[13]
வேதங்களும் புராணங்களைப் போன்ற இறைவனிடமிருந்து வந்தவைகள்தான் என்றே இந்த குறிப்புக்கள் காண்பிக்கின்றன.  அவைகள் அருளப்பட்ட காலத்தைப் பொறுத்த வரை ஒரு வேளை அவைகள் வேதங்கள் அருளப்பட்ட அதே காலத்திலோ அல்லது அதற்கு சில காலத்திற்கு முந்தியோ அருளப்பட்டிருக்கலாம். ஒரே வார்த்தையில் சொல்வதனால்,  புராணங்கள் புனிதம் நிறைந்தவை, அவைகள் பக்திக்குரியவை என்பது அனைத்து ஆதாரப்பூர்வமான ஹிந்து மத புனித புத்தகங்களாலும் ஒப்புக் கொள்ளவும் சரி காணவும்பட்டுள்ளது. 

இவ்வளவிருந்தும், அவைகளில் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிய ஏராளமான முன்னறிவிப்புக்களும் அவர்களின் உண்மைக்கான தெளிவான அடையாளங்களும் காணக்கிடைக்கின்றன என்பதால் மாத்திரம் சில பண்டிட்டுகள் இந்த தொகுப்புக்களை நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர். 

நபி(ஸல்) அவர்களை நம்புவதன் மூலம் அவர்களின் மிகப்பெரும் புனித ரிஷிகளுக்கு கீழ்ப்படிந்து அவர்கள் சொன்னவைகளின் உண்மையை உணருவதற்கு பதிலாக புராணங்களில் அடங்கியிருக்கும் சாட்சியங்களை முற்றிலும் மறுப்பதே சாலச்சிறந்ததென இப்பண்டிட்டுகள் நினைத்து விட்டனர் போலும். ஆனால் புராணங்கள் உண்மையென வேதங்களே தெளிவாக சாட்சி கூறுகின்றன மேலும் வேதங்கள் இறைவன் புறத்திலிருந்து அருள் செய்யப்பட்டது போன்றே புராணங்களும் அவனிடமிருந்தே அருளப்பட்டுள்ளன என்றும் வேதங்களில் பதியப்பட்டுள்ளது. இவ்வளவு இருந்தும், தற்போதைய புராணங்கள் வேதங்களில் கூறப்படும் அதே தொகுப்புக்கள் அல்ல: உண்மையான புராணங்கள் தொலைந்து விட்டன என்றும் சிலர் வாதிடுகின்றனர். ஆனால் இந்த வாதாட்டம் சரியல்ல. பெரும்பாலான மக்களால் மிகவும் பரவலாகவும் மிகவும் ஆர்வத்துடனும் மக்களால் படிக்கப்படும் புராணங்கள் அவர்களால் மறக்கப்பட்டு பூலோகத்திலிருந்தே அழித்து மறைக்கப்பட்டு விட்டது என்று சொல்வதும் அதே நேரத்தில் சிலர் மாத்திரம் வாசித்து புரிந்து கொள்ளக்கூடிய வேதங்கள் மாத்திரம் இக்காலம் வரை பாதுகாப்பாக இருக்கிறது என்று சொல்வதும் மிகவும் சாத்தியமற்றதும் நகைப்பிற்கிடமானதுமாகும்.

இந்த முன்னறிவிப்புக்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டன என்று மற்றொரு சமாதானமும் சொல்லப்படுகின்றது. ஆனால் இதுவும் அடிப்படையற்ற வாதமேயாகும்.அது போன்ற மிகவும் நன்கறியப்பட்ட, மிகவும் அதிகமாக புழக்கத்தில் இருந்து வந்த, குறிப்பிட்ட நேரங்களில் இறை வணக்கத்தில் வாசிக்கப்பட்டு வந்த[14] புத்தகத்தில் கை வைப்பதென்பது சாத்தியமானதல்ல. அரேபிய நபியைப் பற்றிய தெளிவான முன்னறிவிப்புக்களை கண்ட பிறகு வேறு ஒன்றும் செய்ய வழி தெரியாமல் புராணங்களே மாற்றப்பட்டுள்ளன என பண்டிட்டுகள் பிதற்றத் தொடங்குகின்றனர்.மேலும், ஹிந்து மதத்தை சேர்ந்த எல்லா பண்டிட்டுகளும், கற்றறிந்த ஞானிகளும் ஒரு இடத்தில் ஒன்று கூடி இந்த முன்னறிவிப்புக்களை புராணங்களில் சேர்த்தனர் என்று நினைப்பது மிகவும் முட்டாள்தனமே அல்லாமல் வேறென்ன? அதே நேரத்தில், பிராமணர்களுக்கிடைய ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொண்டிருந்த பல பிரிவுகள் இருந்தன என்பதை கணக்கிலெடுத்தால், அவர்கள் அனைவரும் ஒன்று கூடி அந்த மாற்றத்தை செய்தார்கள் என்பது சாத்தியமற்றது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஏறக்குறைய ஒவ்வொரு பிராமணரின் வீட்டிலும் புராணத்தின் ஒரு பிரதி இருந்திருக்கும். ஆனால் அதே நேரத்தில் இந்த முன்னறிவிப்புக்கள் இல்லாத புராணத் தொகுப்புக்களை இது வரை உலகம் காணவில்லை என்பது மிகவும் வியப்பிற்குரியது. இந்த இடைச்செருகல் அவர்களின் மதத்திற்கு எதிராகவும் நபி(ஸல்) அவர்களுக்கு ஆதரவாகவும் செய்யப்பட்டிருக்கிறது என்பது அனைத்தையும் விட மிகவும் நகைப்பிற்கிடமான விசயமாகும். இந்த முன்னறிவிப்புக்களுக்கு எதிராக எதையும் சேர்ப்பதோ அல்லது அவைகளை மாற்றுவதோ வேண்டுமானால் செய்ய சாத்தியமாக இருந்திருக்கலாம், அனால் ஹிந்து பண்டிட்டுகள் தங்களின் மதத்திற்கும் நம்பிக்கைக்கும் விரோதமாக இவற்றை சேர்த்தார்கள் என்பது முற்றிலும் அபத்தமானதாகும். ஆகவே, இந்தக் கேள்வியை மிகவும் ஆழ்ந்து சிந்திக்குமாறு நம்முடைய ஹிந்து சகோதரர்களை கேட்டுக் கொள்கிறோம். புராணங்களிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் வேதங்களைப் போன்று அசலானதும் இறைவனால் அருளப்பட்டதுமாகும்.அவற்றை வாசிப்பதனால் இவ்வுலகிலும் மறு உலகிலும் மோட்சமும் அருளும் கிடைக்கின்றன.ஆகவே, அவர்கள் வசமிருக்கும் அருளப்பட்ட வேதங்களில் காணப்படும் நபி முஹம்மது(ஸல்) அவர்கள் பற்றிய மகிமையை   கவனத்துடன் படித்து அவர் மேல் அவர்கள் நம்பிக்கை கொள்ளட்டும்.

நபி அவர்களுக்கு மகரிஷி வியாஸா அவர்களின் மரியாதை:

மகான்களை வணங்குவதில் ஹிந்துக்கள் பெயர் போனவர்கள். உண்மையில், அவர்களின் இத்தகைய ஒரு குண நலன் அவர்களின் மத நம்பிக்கையின் ஒரு பாகமாக உள்ளது. மஹரிஷி வியாஸா அவர்கள் மிகப் பெரும் ரிஷி எனவும் மிகவும் கற்றறிந்த ஞானி எனவும் ஹிந்துக்களால் மிகவும் மதிக்கப்படுபவர். அவர் மிகவும் பக்தி நிறைந்தவராகவும், இறை அச்சம் உள்ளவராகவும் தூய்மையான உள்ளத்திற்கு சொந்தக்காரராகவும் இருந்தார். அவர்தான் வேதங்களை பல தலைப்புக்களில் வரிசைப்படுத்தியவர்.---மதிப்புமிக்க புத்தகங்களை எழுதியவரும் அவரே. கீதையும் மகாபாரதமும் அவரின் ஞானத் தூரிகையிலிருந்து உதித்ததுதான்.ஆனாலும் பதினெட்டு பாகங்களுள்ள புராணங்களே அவரின் மிகப் பெரும் தொகுப்பாகும். அப்புராணங்களில் தலையாயது பவிஷ்ய புராணம் எனப்படுவதாகும். 

அந்தப் புராணத்தில் அவர் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள் பற்றி வியக்கத்தகு வருணணைகளை தருகின்றார். அது எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளை தொகுத்து தருவதால் அது பவிஷ்ய புராணம் என்று அழைக்கப்படுகின்றது. வேதங்களை இறைவனின் வாக்கு என்று ஹிந்துக்கள் நம்புவதைப் போன்று இதையும் இறைவாக்கு என்றே நம்புகின்றனர்.மகரிஷி வியாஸா அவர்கள் அதன் தொகுப்பாளர் மாத்திரமே.அதன் உண்மை ஆசிரியன் இறைவனே. பவிஷ்ய புராண பிரதியிலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முன்னறிவிப்பு பம்பாயிலுள்ள வெங்கடேஷ்வரா அச்சகத்தில் பிரிண்ட் செய்யப்பட்டதாகும்.  கீழ் வரும் முன்னறிவிப்பை நாம் அதில் பிரத்தி ஸர்க் பர்வ் (Prati Sarg Parv) 3: 3, 3, 5-8ல் காண்கிறோம்.

தீர்க்கதரிசன வார்த்தைகளின் தமிழ் மொழி பெயர்ப்பு பின் வருமாறு:

ஒரு மிலேச்ச (-அந்நிய தேசத்தை சேர்ந்த மற்றும் அந்நிய மொழி பேசுகின்ற) ஆத்மீக போதகர் தன்னுடைய தோழர்களுடன் தோன்றுவார். அவருடைய பெயர் முஹம்மது என்பதாகும். வானவர்களின் குணமிக்க இந்த மஹா தேவ அரபிக்கு பஞ்சகவ்யத்திலும் கங்கை நீரிலும் நீராட்டலை அளித்த பிறகு (-அவரிடமிருந்து அனைத்து பாவங்களையும் போக்கி) அவருக்கு தன்னுயை மனப்பூர்வமான பக்தி அன்பளிப்புக்களை அளித்து எல்லா வித மரியாதைகளையும் காண்பித்து |நான் உனக்கு மரியாதை செய்கிறேன்| என ராஜா போஜ் கூறினான். மனித இனத்தின் பெருமையே! அரேபியாவில் வசிப்பவரே! சாத்தானைக் கொல்வதற்கு நீர் மிகப்பெரும் சேனையை திரட்டியுள்ளீர் மலேச்ச எதிரிகளிடத்திலிருந்தும் நீங்கள் காக்கப்பட்டுள்ளீர். மிகப் பெரும் நாயனான பெரும் உன்னத இறைவனின் பிரதியே, நான் உங்களுடைய அடிமை, உங்களின் பாதத்தில் வீழ்ந்து கிடப்பவனாக என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்.புனித நபியைப் பற்றிய இந்தப் புகழ் மாலையில் மகரிஷி வியாஸா அவர்கள் பின்வரும் விபரங்களைத் தருகின்றார்:-

¨             நபியின் பெயர் முஹம்மது என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

¨             அவர் அரேபியாவைச் சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது. முன்னறிவிப்பில் வரும் மருஸ்தல் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு மணற்பாங்கான இடம் அல்லது பாலைவனம் என்பது பொருள்படும்.

¨             அவரின் தோழர்களைப் பற்றி சிறப்பு வருணணை காணப்படுகின்றது. அவரைப் போலவே ஒத்த, மிகப் பெரும் எண்ணிக்கையிலுள்ள தோழர்களைக் கொண்ட எந்த நபியும் மிகவும் அரிதாகவே இவ்வுலகில் இருந்திருக்கின்றார்.

¨             அவர் பாவங்களிலிருந்து பரிசுத்தம் பெற்றவராக வானவர்களின் குணங்களைக் கொண்டிருப்பார்.

¨             இந்திய ராஜா அவருக்கு மனப்பூர்வமான மரியாதையை அளிப்பார்.

¨             நபி அவர்களுக்கு எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கப்படும்.

¨             அவர் சாத்தானை கொன்று, சிலை வணக்கத்தை தவிடு பொடியாக்கி எல்லா வித கெட்ட செயல்களையும் போக்கி விடுவார்.

¨             அவர் எல்லாம் வல்ல இறைவனின் பிரதியாக இருப்பார்.

¨             அவரின் பாதத்ததில் வீழ்ந்து கிடப்பதாக மகரிஷி அவர்கள் கூறுகின்றார்.

¨             அவர் மனித இனத்தின் பெருமை (பர்பாதிஸ் நாத்) என கருதப்படுகின்றார்.

இந்த முன்னறிவிப்பு பகல் வெளிச்சத்தைப் போன்று மிகத் தெளிவாக இருக்கின்றது. இதை நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு பொருத்துவதில் எந்த வித சந்தேகத்தின் நிழல் கூட விழ முடியாது. இருப்பினும், இந்த முன்னறிவிப்பு குறிப்பிடும் அரசர் போஜ் என்பவர் 11ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரென்றும் அவர் அரசர் சாலிவாஹனின் பதினொன்றாவது வாரிசு என்றும் ஆட்சேபணை எழுப்புகின்றனர். இவ்விதமாக, அரசர் போஜ் என்பவர் நபி அவர்களின் தோற்றத்திற்கு பிறகு ஐந்து நூற்றாண்டுகள் கழித்து வந்தவர் என்கின்றனர். ஆனால், நாம் முன்னர் குறிப்பிட்டது போல், முன்னறிவிப்பில் உள்ள பெயர்கள் அத்தனை வித்தியாசத்தை ஏற்படுத்துவதில்லை. பெயர்களும் முன்னறிவுப்புக்களாகவே கொடுக்கப்படுகின்றன. பெரும்பாலும் இந்த பெயர்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியமும் உள்ளது. மேலும், போஜ் என்னும் பெயர் கொண்ட அரசர் ஒரு ஆள் மாத்திரம் இருந்திடவில்லை. எகிப்திய மன்னர்கள் பாரோக்கள் என்று அழைக்கப்பட்டது போல் மேலும் ரோம மன்னர்கள் கைசர்கள் என்று அழைக்கப்பட்டது போல் இந்திய மன்னர்களுக்கு போஜ் என்ற பட்டம் அளிக்கப்பட்டது.  மேற் குறிப்பிடப்பட்ட மன்னர் போஜ்ஜிற்கு முந்தி வாழ்ந்த பல ராஜாக்களுக்கு போஜ் எனும் அதே அரசப் பெயர்கள் அளிக்கப்பட்டுள்ளன. புராதாண சமஸ்கிருத புத்தகமான அய்த்ரேய பிராஹ்மனாவில் அரசர் போஜ் பற்றி ஒரு குறிப்பு வருகின்றது. (Panchka, VII:12 and XIV:17.)  அது போலவே இஸ்லாத்திற்கு வெகு காலத்திற்கு முன் வாழ்ந்த பான்னி என்ற புகழ் பெற்ற சமஸ்கிருத இலக்கண வித்தகரும் போஜ் என்பவரைப் பற்றியும் அவரின் பட்டணங்களைப் பற்றியும் அவரின் சந்ததிகளைப் பற்றியும் குறிப்பிடுகின்றார்.(Adhyâ, I :1,075). இது மாத்திரமல்லாமல், இந்த முன்னறிவிப்பு நபி அவர்களின் பெயரை முஹம்மது என தெளிவாகக் குறிப்பிடுகின்றது.  இது இஸ்லாத்தின் நபிக்கு மாத்திரமே அன்றி வேறு எவருக்கும் பொருந்தாது என்பதை அது சுட்டிக் காட்டுகின்றது.

அது நபி அவர்கள் பஞ்சகவ்யாவிலும் கங்கை நீரிலும் நீராடுவது என்பது சற்று விளக்கப்பட வேண்டிய மற்றொரு அம்சமாகும். இது கனவாக மாத்திரம் இருந்ததால் அது நடக்கவில்லை. ஆகவே நபி அவர்கள் அனைத்து வகையான பாவங்களிலிருந்து நீக்கப்பட்டு பாதுகாப்பு பெறுவார் என நாம் விளங்குகிறோம். ஜோர்டான் நதியின் தண்ணீர் கிறிஸ்தவர்களுக்கு புனிதமானதாகவும், ஜம்ஜம் தண்ணீர் முஸ்லிம்களுக்கு புனிதமானதாகவும் விளங்குவது போன்று இந்த தண்ணீர்களும் மிகவும் புனிதமானதாகவும் மக்களை பாவமற்றவர்களாகவும் ஆக்குவதாக கருதப்படுகின்றது.

இவ்வாறாக, பிரஹ்மன்(இறைவன்) எதை அருளிச் செய்தார் என்பதையும் வியாஸர் எதை உலகிற்கு சொன்னார் என்பதையும் நாம் கண்டோம். மஹரிஷி அவர்கள் புனித நபி அவர்களை மிகவும் உன்னதமானவராகவும் பாவமற்றவராகம் கருதுகிறார்;   தன்னுடைய உண்மையான பக்தியையும் மரியாதையையும் காண்பிக்கிறார். அந்த நபியின் பாதங்களில் வீழ்ந்து கிடக்க விரும்பவும் செய்கிறார். இந்த இறை வேதங்களை நம்பும் அவர்களின் மத தலைவர்களை தெய்வங்களாக கருதும் நம்முடைய ஹிந்து சகோதரர்களை, மேல் கண்ட சத்தியத்தின் அடிப்படையில், நபி அவர்களைப் பற்றி மஹரிஷி வியாஸர் சொன்னதை ஆழ்ந்து சிந்தித்து அந்த நபியின் மேல் விசுவாசம் கொள்ளவும் அதன் மூலம் பிரஹ்மாவின் கட்டளைகளுக்கு அடிபணியவும் மேலும் மஹரிஷி அவர்களின் இதயப் பூர்வ ஆசையை நிறைவேற்றவும் மனப்பூர்வமாக அழைக்கிறோம்.

வியாஸாஜீ அவர்களின் மற்றொரு தெளிவான முன்னறிவிப்பு:

நாம் மேலே கொடுத்துள்ள பவிஷ்ய புராண மேற்கோளின் தொடரிலேயே நாம் மேலும் ஒரு முன்னறிவிப்பை 10-27 சுலோகங்களில் காண்கிறோம். 

மஹரிஷி வியாஸா அவர்கள் நபி(ஸல்) அவர்களை கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:-

அரேபியர்களின் நன்கறியப்பட்ட நாட்டை மிலேச்சர்கள் கெடுத்து விட்டார்கள். அந்நாட்டில் ஆரிய தர்மம் காணப்படவில்லை.  முன்பு அங்கே தோன்றிய கொடிய சாத்தானை நான் கொன்றிருக்கிறேன். அவன் சக்திமிகுந்த எதிரியால் அனுப்பப்பட்டு மீண்டும் தோன்றியுள்ளான். இந்த எதிரிகளுக்கு சரியான பாதையை காட்டவும் நேர்வழியை அளிக்கவும் என்னால் பிரஹ்மாவின் அதிகாரம் கொடுக்கப்பட்ட புகழ் பெற்ற முஹம்மது பிஷசாக்களை நேர் வழியில் கொண்டு வருவதில் முழு மூச்சாயிருக்கிறார். ராஜாவே நீ முட்டாள் பிஷசாக்களின் நாட்டிற்குப் போக வேண்டாம். என்னுடைய அன்பின் மூலமாக நீ இருக்கும் இடத்திலேயே நீ பரிசுத்தப்படுத்தப்படுவாய். இரவில், வானவரைப் போன்ற,போர்த்திக் கொண்டிருந்தவர் பிஷசாவின் தோற்றத்திலே வந்து ராஜா போஜிடம் ராஜனே, உன்னுடைய ஆரிய தர்மம் எல்லா மதங்களையும் விட மேலோங்கச் செய்யப்பட்டது. ஆனால் ஈஷ்வர பிரமாத்மாவின் கட்டளைகளின் பிரகாரம் இறைச்சி உண்பவர்களின் வலுவான போதனையை நான் அமுல்படுத்துவேன். என்னைப் பின்பற்றுவர்களான அவர்களுக்கு தலையில் குடுமி இருக்காது.  அவர்கள் தாடி வைத்திருப்பார்கள். புரட்சியை உண்டு பண்ணுவார்கள். அதான் (தொழுகைக்கான அழைப்பு) செய்வார்கள் மேலும் பன்றியைத் தவிரவுள்ள அனைத்து அனுமதிக்கப்பட்ட உணவுகளையும் உண்பார்கள்.  அவர்கள் புனித செடிகளினால் பரிசுத்தப்படுத்தப்பட மாட்டார்கள் ஆனால் யுத்தங்களின் மூலமே பரிசுத்தப்படுத்தப்படுவார்கள். தெய்வபக்தியற்ற சமுதாயங்களுடன் போராடுவதால, அவர்கள் முஸல்மான் என்று அழைக்கப்படுவார்கள். இந்த இறைச்சி உண்பவர்களின் மார்க்கத்தை தொடங்கி வைப்பனாக நானே இருப்பேன்.

இந்த முன்னறிவிப்பில் வியாஸஜீ அவர்கள் முஹம்மது(ஸல்) அவர்களின் தோற்றம் பற்றி எண்ணற்ற அடையாளங்களை விவரித்துள்ளார். அவைகளில் முக்கியமானவை :-

¨    தீயவர்களால் அரேபிய நாடு கெடுக்கப்பட்டுள்ளது.

¨    அந்நாட்டில் ஆரிய தர்மம் காணப்படவில்லை.

¨    ஆப்ரஹா(-கஃபாவை அழிக்க வந்த யேமன் தேசத்து ஆளுநர்) மேலும் மற்ற முந்தைய எதிரிகள் அழிந்தது போலவே தற்போதைய எதிரிகளும் அழிவார்கள்.

¨    எதிர்ப்பவர்களை நேர்வழிக்கு கொண்டு வரும் பொருட்டு முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனால் பிரஹ்மாவின் அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய அந்த சமுதாயத்தை கட்டமைக்கும் பணியில் மிகவும் மூழ்கியுள்ளார்.

¨    அரேபியர்களின் அந்த நாட்டிற்கு போவதற்கு இந்திய ராஜா அஞ்சுகிறார். ஆயினும்,முஸல்மான்கள் இந்தியா வரும் போது அவர் பரிசுத்தப்படுவார்.

¨    வரும் நபி ஆர்ய மதத்தின் உண்மைக்கு சான்று பகர்வார் மேலும் வழிய தவறிய மக்களை சீர்திருத்துவார்.

¨    நபியை பின்பற்றுபவர்கள் விருத்தசேதனம் செய்தவர்களாகவும்,தாடி வைத்தவர்களாகவும் குடுமி வைக்காதவர்களாகவும் இருப்பர். அவர்களின் தலைவர் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வருவார்.

¨    அவரின் மார்க்கத்தில் எந்த வித ரகசிய போதனைகளும் இருக்காது.தொழுகைக்கான அழைப்பு ஒவ்வொரு பள்ளிவாயிலின் மினராக்களிலிருந்து விடுக்கப்படும்.

¨    பன்றி இறைச்சியைத் தவிரவுள்ள மற்ற அனைத்து உண்ணக்கூடிய உணவு வகைகள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதாயிருக்கும்.

¨    ஹிந்துக்கள் தங்களை புனிதப்படுத்துவதற்கு ஒரு வகையான புல்லை உபயோகிக்கின்றார்கள்.ஆனால் இவர்களோ வாள் கொண்டு போராடுவதன் மூலம் புனிதப்படுத்தப்படுவார்கள்.

¨    இறை பக்தியற்றவர்களை எதிர்த்து போராடுவதால் அவர்கள் முஸல்மான் என்று அறியப்படுவார்கள்.

¨    இந்த இறைச்சி உண்பவர்களின் மார்க்கமே தெய்வ மார்க்கமாக இருக்கும்.

நபி(ஸல்) அவர்கள் ஆரியதர்மத்தின் உண்மைக்கு சான்று பகர்வார்கள் என்றும் ஆர்யதர்மம் மற்ற அனைத்து மதங்களையும் விட மேலோங்கும் என்றும் இந்த முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.இங்கே உருவாகும் ஒரு வினா என்னவெனில், ஆர்ய தர்மம் எல்லா நம்பிக்கைகளையும் விட சிறந்தது எனில் அதுதான் மற்ற நம்பிக்கைகளை விட மேலோங்கும் எனில்,  உலகத்திற்கு இஸ்லாம் எனும் புதிய மார்க்கத்தை அளிக்க வேண்டிய அவசியம் என்ன? என்பதே அந்த வினாவாகும்.  

இதற்கு பதில் என்னவெனில், ஆர்யமதம் அது அருள் செய்யப்பட்டபோது அவர்களுக்கு மிகச் சிறந்த மார்க்கமாக இருந்தது மேலும் அது மற்ற மதங்களை விட மேலோங்கியும் இருந்தது. ஆனால் காலம் செல்லச்செல்ல அது மனிதர்களால் மாற்றப்பட்டு விட்டது ஆகவேதான் இஸ்லாத்தை அருள வேண்டிய தேவையும் ஏற்ப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் தோன்றும் காலத்தில் இந்த மதத்தின் நிலையை மஹரிஷி வியாஸர் அவர்களே விளக்கியுள்ளார். மிலேச்ச தர்மா(இஸ்லாம்) மற்றும் ஆர்ய தர்மாவின் நிலையை தெளிவாக படம் பிடித்துக் காண்பித்துள்ளார்.
காசி போன்ற ஏழு புனித நகரங்களிலும் குழப்பமும் சித்திரவதையுமே தினசரி காட்சிகளாக ஆகி விட்டது.இந்தியா ராக்சஷர்களும், ஷபார்களும், பில்களும் மற்ற முட்டாள்களும் வசிக்குமிடமாகி விட்டது.  மலேச்சர்களின் நாட்டிலே மலேச்ச தர்மத்தை(இஸ்லாம்) பின்பற்றுபவர்கள் அறிவு மிக்கவர்களாகவும் வீர தீரம் மிக்கவர்களாகவும் உள்ளார்கள்.  முஸல்மான்களிடத்தில் எல்லா நற்குணங்களும் காணப்படுகின்றன. ஆனால் அதே நேரத்தில் ஆர்யர்களின் நாட்டில் எல்லா விதமான தீங்குகளும் சேர்ந்துள்ளன. இந்தியாவையும் அதன் தீவுகளையும் இஸ்லாம் ஆளும்.  இந்த உண்மைகளைத் தெரிந்த முனிவரே, உன்னுடைய இறைவனின் பெயரை துதிப்பீராக.[15]

மேற்கண்ட சுலோகத்தில் மலேச்சா என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. சிலரால் இந்த வார்த்தை தவறான அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்படுகின்றது. ஆனால் மகரிஷி வியாஸர் அவர்கள் இதை மிகவும் வித்தியாசமான அர்த்தத்தில் உபயோகப்படுத்தியுள்ளார். இந்த வார்த்தையை அவரே வரையறுத்துக் கொடுக்கிறார்.   நற்செயல்களைச் செய்கிற, புத்தி கூர்மையுள்ள, உயர்ந்த ஆத்மீக குணங்களையுடைய, இறைத்தூதர்களுக்கு மரியாதை அளிக்கிற இவரே ஞானம் மிக்க  மலேச்சா|என்று அறியப்படுகின்றார்.[16]
இவ்வாறாக, ஆர்யதர்மமானது தீமைகளின் குவியல்களாக மாற்றப்படும் பொழுது, முற்றிலும் சீர்குலைந்தும் நிலையற்றும் இருக்கும் நிலையில், பிரஹ்மாக்களில் ஒருவர் அரேபியாவில் தோன்றி அரேபியர்களையும் ஆர்யர்களையும் சீர்திருத்துவது அவசியத்திலும் அவசியமில்லையா? மகரிஷி வியாஸர் முன்னறிவித்த அவ்வாறே நடக்கவும் செய்தது. ஆகவே ஆர்யர்கள் தங்களின் ரிஷிக்கு கீழ்ப்படியட்டும், உலகை தீங்குகளிலிருந்து விடுவிக்கும் நபி முஹம்மது அவர்களின் தோற்றத்தை எண்ணி மகிழந்து தங்களின் இறைவனை துதிக்கட்டும்.

அதர்வண வேதத்தில் உள்ள முன்னறிவிப்புக்கள்-

நபி அவர்களுக்கு அதர்வ வேத ரிஷி அவர்கள் அளிக்கும் மரியாதை:

அதர்வண வேதமானது பிரஹ்ம வேதம் அல்லது தெய்வீக அறிவு என அறியப்பட்டு அது நான்கு வேதங்களில் முக்கிய இடத்தை வகிக்கின்றது.அது அனைத்து மந்திரங்களின் ஒரு தொகுப்பாகும்.  ரிக் வேதங்களில் காணப்படும் ரிஷஸ் (புகழ்; மாலைகள்) அதில் உள்ளன. சாம வேதத்தில் காணப்படும் இலக்கிய நடைகளும்,  யஜூர் வேதத்தில் காணப்படும் இறை வணக்க முறைகளும் இதில் காணப்படுகின்றது. இவ்வாறாக எல்லா வேதங்களிலும் காணப்படும் அனைத்து வித மந்திராக்களும் இதில் அடங்கியுள்ளது. இதுவல்லாமல், ஒருவர் எவ்விதம் கடும் நோய்களை முறியடிப்பது, யுத்தத்தில் எவ்வாறு வெற்றிக் கனியை கொய்வது என்று விளக்கும் மந்திரங்களையும் மேலும் சுவர்க்க நரகத்தை பற்றிய விவரங்களும் இதில் அடங்கியுள்ளன.ஆகவேதான் இது முண்டக் உபநிஷத்தில் பிரஹ்ம வித்யா அல்லது தெய்வீக ஞானம் என்று குறிப்பாக விவரிக்கப்படுகின்றது.

எகிப்திலும் பாபிலோனிலும் செய்யப்பட்ட நவீன கால அகழ்வாராய்ச்சிகள் பைபிளின் உண்மையான மூலம் பாபிலோனிய டேபிள்கள்தான் என்று மாத்திரம் நிரூபிக்கவில்லை, வேதங்களின் உட்புற ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது வேதங்களும் தன்னுடைய கருப் பொருளை பாபிலோனிய இறை புத்தகங்களிலிருந்து மிகவும் கடன் வாங்கியுள்ளது என்றும் நிரூபணமாகியுள்ளது. பெனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் ப்ரான் நாத் என்பவர் பைபிள், வேதம் மற்றும் எகிப்து ஆகியவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகள் பற்றி விலை மதிப்பு மிக்க கட்டுரை ஒன்றை டைம்ஸ் ஆப் இந்திய 1935, ஜூலை ஆகஸ்ட் இதழ்களில் எழுதியுள்ளார். 

ரிக் வேதத்தில் எகிப்திய மற்றும் பாபிலோனிய அரசர்கள் பற்றியும் அவர்களின் யுத்தக் கலைகளைப் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன என்று அவர் தன்னுடைய அந்த கட்டுரையில் தெளிவாக காண்பித்துள்ளார். 

ரிக் வேதத்தில் ஐந்தில் ஒரு பாகம் பாபிலோனிய இறை புத்தகங்களிலிருந்தே பெறப்பட்டுள்ளது என்றும் அவர்; நிரூபித்து காட்டியுள்ளார். மேற்கண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் பார்க்கும் போது, சில பண்டிட்டுகள் நம்புவது போன்று அதர்வண வேதம் நபி ஆப்ரஹாம்(பிரஹ்மா) அவர்களின் அதே வேதம் என்று நம்புவது கடினம் என்பது மாத்திரமல்ல அவ்வாறு நம்புவது தவறு என்றும் தெரிய வருகின்றது.
அதர்வண வேதத்திலுள்ள குந்தப் சக்த்
அதர்வண வேதத்தில் இருபதாம் அத்தியாயத்திலுள்ள சில சுக்தங்கள் குந்தப் சுக்த் என அறியப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் மக்கள் மிகப் பெரும் அளவில் கூடி இறை வணக்கம் செய்து மிருக பலி கொடுக்கப்படும் இடங்களில் இந்த மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. பதினேழு மிகப்பெரும் பண்டிட்டுகள் வருடந்தோறும் கூடி அமர்ந்து மிகப்பெரும் பக்தியுடன் இந்த மந்திரங்களை உச்சரிக்கின்றார்கள்.இந்த மந்திரங்களை மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்ளும்படி மிகவும் வலியுறுத்தப்படுகின்றார்கள் என்பதை இது காட்டுகின்றது.[17] 

முதல் குந்தப் சுக்த் நராஷன்ஷி, ரைபி, பரிக்ஷித், கவுராயா என்று நான்கு தலைப்புக்களாக பிரிக்கப்பட்டுள்ளன என்று விரிவுரையாளர்கள் வியாக்கியனம் அளிக்கின்றனர். ஆயினும், அதில் வரும் சில வார்த்தைகளின் காரணமாகவே இவ்வாறு இவை பிரிக்கப்பட்டுள்ளன. மற்றபடி, இவை அனைத்தும் ஒரே அதே நபர் பற்றிய தன்மைகளும் விளக்கங்களும்தான். இதை நாம் இந்த மந்திரங்களை மொழி பெயர்க்கும் போது தெளிவுபடுத்துவோம்.

குந்தப் என்ற வார்த்தைக்கு துன்பங்களையும் தொல்லைகளையும் தீர்ப்பவர்| என்று அர்த்தமாகும். உலக மக்களின் துன்பங்களை தீர்க்கக்கூடிய ஒருவரைப் பற்றிய குறிப்பு காணக்கூடிய அனைத்து மந்திரங்களின் தொகுப்புத்தான் குந்தப் சக்த் என்று அறியப்படுகின்றது. இஸ்லாத்தின் செய்தியும் நபி முஹம்மது(ஸல்) அவர்;களின் போதனைகளுமே மானிட இனத்திற்கு அருட் கொடையும் அது மாத்திரமே உலகின் போக்கிரித்தனத்திற்கும் தீமைகளுக்கும் பரிகாரமுமாகும். இவ்வாறாக குந்தப்சக்த் என்பது இஸ்லாம் அல்லது அமைதி மற்றும் பாதுகாப்பு அளிக்கும் தூது| என்றே சர்வசாதாரணமாக விளக்கமளித்து விடலாம்.
குந்தப் சக்த் அதர்வண வேதத்தின் மிகவும் நன்கறியப்பட்ட பாகமாகும். குந்தப் என்ற வார்த்தைக்கு வயிற்றில் மறைந்திருக்கும் சுரப்பிகள்|என்ற மற்றொரு அர்த்தமும் உண்டு. இந்த மந்திரங்களின் உண்மையான அர்த்தம் மறைவானதாக இருந்ததாலும் எதிர்காலத்தில் அது வெளிப்படுத்தப்படப் போவதாலும் ஒரு வேளை இதற்கு இவ்வாறு பெயர் கொடுக்கப்பட்டு இருக்கலாம். இந்த மறைவான அர்த்தங்கள் தொப்புளோடு அல்லது பூமியின் மையத்தோடு தொடர்புள்ளது.

மக்கா பட்டணம் உம்முல் குரா(பட்டணங்களின் தாய்) அல்லது பூமியின் மையப்பாகம் என்று பல வேதங்களில் அழைக்கப்படுகின்றது. உலகில் ஒரே ஒரு இறைவனை மாத்திரம் வணங்கப்படுவதற்காக கட்டப்பட்ட முதல் இறை இல்லம் இருக்கும் இடம் மக்காதான் மேலும் அங்கிருந்துதான் உலகிற்கு ஆத்மீக உணவு வழங்கப்பட்டது. திருமறை குர்ஆன் கூறுகிறது:(இறை வணக்கத்திற்காக) மனிதர்களுக்கு நியமிக்கப்பட்ட முதல் ஆலயம் பக்காவிலுள்ள ஆலயம்தான். அது அனைத்து சமுதாயங்களுக்கும் அருளாகவும் நேர்வழி காட்டக்கூடியதாகவும் உள்ளது.(3:95). 

பக்கா என்பதன் அர்த்தம் மார்பு என்பதாகும் மக்கா என்பதன் அர்த்தம் |வயிறு| என்பதாகும். ஒரு மனிதன் தன்னுடைய தாயினால் வயிறு அல்லது தொப்புள் கொடி மற்றும் மார்பு ஆகிய இரு இடங்களிலிருந்து உணவு ஊட்டப்படுகின்றான். கர்ப்ப அறையில் குழந்தைக்கு உணவாகுகின்ற அதே பொருள், குழந்தை பிறந்தவுடன், பாலாக மாறி தாயின் மார்பகத்திற்கு வருகின்றது. ஊட்டச்சத்து வயிற்றுக்குள் இருக்கும்வரை அதுசில மறைந்திருந்த சுரப்பிகளாக இருந்தன மேலும் உலகத்திற்கு அது ஒரு இரகசியமானதாக இருந்தது,ஆனால் அது மார்பிற்கு வந்தவுடன் அது{لبناً خالصاَ سائغا للشاربين} (16:66) ஆக மாறி விட்டது.  இவ்வாறாக குந்தப் என்பது (வயிற்றில் மறைந்துள்ள சுரப்பிகள்) மக்கா அல்லது பக்கா என்பதன் அர்த்தமாக உள்ளது.  அங்கிருந்துதான் மனித இனத்திற்கு முதன் முதலில் ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.  மனித இனம் தேவையான வளர்;ச்சிப் படிகளை கடந்து வரும் போது அதே மறைந்துள்ள சுரப்பிகள் புத்தம் புதிய மார்பகப் பாலாக உருவெடுக்கிறது.  இப்பொழுது மனித இனம் என்றென்றும் அந்த ஊட்டச்சத்திலிருந்து ஊட்டம் பெற முடியும். (மக்காவிலிருந்து).

வெகுகாலமாகவே குந்தப் சக்த் இரகசியமாகவும் புரியாத புதிராகவுமே இருந்து வந்தது.  இருப்பினும் நாம் அதை விளக்க முயல்வோம். லாகூர் டி.ஏ.வி. கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் பண்டிட் ராஜா ராம், போரசிரியர் கிரிபித்இ பேராசிரியர் மேக்ஸ்முல்லர், டாக்டர் ஒயிட்னி, எம். ப்ளும்பீல்டு ஆகியோரும் மற்ற சில அறிஞர்களும் இந்த மந்திரங்களை புரியாத புதிராகவே கருதுகின்றனர். 

ஒரு புதிர், அது தீர்க்கப்படாத வரை புதிராகவே தொடர்ந்து இருக்கும். ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களின் தோற்றத்திற்கு பிறகு அது தற்பொழுது இரகசியமானதாக இல்லை. உலகம் தற்பொழுது அதன் அர்த்தங்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.  இந்த மறைந்திருந்த சுரப்பிகள் தற்பொழுது மனித இனத்தை போஷிப்பதற்காக தூய்மையான குடிப்பதற்கு ஏற்ற பாலாக மாறியுள்ளது.  ஆனால் தன்னுடைய தாயை அறிந்து ஊட்டச் சத்தை பெறுவதற்காக அவளிடத்தில் ஓடிச் செல்பவரே அந்த தூய்மையான பாலின் சுவையை உணர முடியும்.

குந்தப் சக்துடைய மந்திரங்களின் அர்த்தங்கள்

1.             அவர் நரஷன்ஸா அல்லது புகழப்படுபவர் ஆவார் (முஹம்மது).

2.             அவர் சமாதானத்தின் இளவரசர் அல்லது நாடு துறந்து செல்பவர் ஆவார். அவர் எதிரிகளுக்கு இடையேயும் பாதுகாப்புடன் இருப்பவர் ஆவார். (மந்திரம் 1)

3.             அவர் ஒட்டக சவாரி செய்யும் ரிஷி ஆவார். அவருடைய ரதம் வானத்தை தொடுகின்றது. (மந்திரம் 2)

4.             அவர் நூறு தங்க நாணயங்கள், பத்து மாலைகள், முன்னூறு குதிரைகள் மற்றும் பத்தாயிரம் பசுக்களும் அளிக்கப்பட்ட மாமாஹ் ரிஷி ஆவார். (மந்திரம் 3)

5.             அவரும் அவரைப் பின்பற்றுபவர்களும் எப்பொழுதும் இறை வணக்கத்தைப் பற்றி மிகவும் கவனமுள்ளவர்களாக இருப்பார்கள். யுத்த களத்திலும் அவர்களின் இறைவனின் முன்பு சிரம் பணிகின்றார்கள். (மந்திரம் 4)

6.             அவர் உலகிற்கு ஞானத்தை (திருக்குர்ஆனை) அளித்தார்.(5)

7.             அவர் உலகங்களின் அரசரும், மனிதர்களில் மிகச்சிறந்தவரும் முழு மனித இனத்திற்குமே வழி காட்டியும் ஆவார்.(மந்திரம் 6)

8.             மக்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடத்தை அவர் பெற்றுத் தந்துள்ளார்.  ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பை அளித்து உலகில் அமைதியை பரப்பியுள்ளார். (மந்திரங்கள் 7ம் 8ம்)

9.             அவரின் ஆட்சியின் கீழ் மக்கள் சந்தோசமும் செழிப்பும் மிக்கவர்களாக வாழ்கின்றனர். சீரழிவின் ஆழத்திலிருந்து புகழின் உச்சிக்கு அவர்கள் உயர்கின்றனர் (மந்திரம் 9ம் 10ம்)

10.          எழுந்து உலகை எச்சரிக்கும்படி அவர் கேட்டுக்கொள்ளப்படுகின்றார் (மந்திரம் 11)

11.           அவர் எல்லையற்ற கருணை மிக்கவரும் மிகவும் தாரள மனதுள்ளவரும் ஆவார் (மந்திரம் 12)

12.          அவரைப் பின்பற்றுபவர்கள் சைத்தானின் பகமை மற்றும் கொள்ளை ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர். (மந்திரம் 13)

13.          இறுதி மந்திரத்தில், தன்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும்படி ரிஷி அவரை பணிவாகக் வேண்டிக் கொண்டு தீங்கிலிருந்தும் கெடுதியிலிருந்தும் அவரிடம் பாதுகாவல் தேடுகின்றார்.

(மேற்கண்ட அர்த்தங்களைத் தரும் குந்தப் சக்த்துடைய மந்திரங்களை பல்வேறு ப்ளும்பீல்டு, கிரிபித், பண்டிட் ராஜாராம் போன்ற பல்வேறு பண்டிதர்கள் மொழி பெயர்த்துள்ளனர். அவற்றின் நேரடி மொழி பெயர்ப்புக்களையும் அதன் விளக்கங்களையும் வாசகர்கள் தொடர்ந்து படித்து அது பற்றிய தெளிவை அடையலாம்.)

குந்தப் சக்தாவின் முதல் மந்திரம்:

எம். ப்ளும்பீல்டு இந்த மந்திரத்தை கீழ் கண்டவாறு மொழி பெயர்த்துள்ளார் :-

தலைவனைப் புகழ்ந்து பாடப்படும் இந்தப் பாட்டை மக்களே கவனத்துடன் கேளுங்கள்! நம் ருஷமாக்களுக்கிடையே கவுராமாவுடன் இருந்த போது அறுபதாயிரத்து ஒன்பதை (பசுக்களை) நாம் பெற்றோம்.

பேராசிரியர் கிரிபித் மொழி பெயர்ப்பில் நாம் காண்பதாவது:  

புகழுக்குரிய கருணையாளரைப் பற்றிய பாட்டொன்று பாடப்படுவதை மக்களே கவனத்துடன் கேளுங்கள்! கவுரமாவே, ருஷமாக்கிடையேயிருந்து அறுபதாயிரத்து ஒன்பதை நாங்கள் பெற்றோம்.

பண்டிட் ராஜா ராமின் ஆங்கிலப் பிரதி :  

மக்களே இதை கவனத்துடன் கேளுங்கள்! ஒரு புகழுக்குரியவர் புகழப்படுவார். கவுராமாவே, நாங்கள் ருஷமாக்களிடையேயிருந்து அறுபதாயிரத்து ஒன்பதை பெற்றோம்.

அலஹாபாத்தைச் சேர்ந்த பண்டிட் கெம் கரன் மற்றொரு மொழி பெயர்ப்பைத் தருகின்றார் : -

மக்களே மிகவும் மரியாதையுடன் கேட்பீர்களாக! மக்களிலேயே மிகவும் புகழுக்குரியவர் புகழப்படுவார்.  சுகம் விரும்பும் அரசனே, அறுபதாயிரத்து ஒன்பது வீரர்கள் எதிரிகளை தோற்கடிப்பதை நாங்கள் காண்கிறோம்.

மேற்கண்ட நான்கு மொழி பெயர்ப்புக்களிலும் நான்கு விசயங்கள் மிகவும் சந்தேகத்திற்கிடமானதாகவே உள்ளன.  மேற்கண்டவைகளுடன் சில வார்த்தைகளை சேர்த்துப் பார்த்தாலும் அதன் அர்த்தங்கள் தெளிவாகவில்லை.

(அ) முதல் கேள்வி, புகழப்படப் போவது யார்?
(ஆ) இரண்டாவதாக,  அறுபத்து ஆறாயிரத்து ஒன்பது என்பது என்ன?
(இ) ஏன் மக்கள் இதை கவனத்துடன் கேட்க வேண்டும்?
(ஈ) ருஷமாக்கள் மற்றும் கவுராமா என்பவர்கள் யார்?

இந்தியாவின் புராதான சரித்திரம் இந்த மந்திரங்களைப் பற்றி எந்த வித விளக்கத்தையும் அளிக்கவில்லை அவைகள் தொடர்ந்து தெளிவற்றதாகவே இருந்து வருகின்றன்.  ஆனால் ஆரம்ப கால இஸ்லாமிய சரித்திரமும் அரேபியாவில் நடந்த சம்பவங்களும் இந்த தெளிவற்ற மந்திரங்கள் மீது வெளிச்சக் கற்றையை பாய்ச்சி அதை தெளிவாக்குகின்றன.

(அ)அவர் புகழப்படுவார் என்பது முஹம்மது என்ற வார்த்தையின் நேரடி மொழி பெயர்ப்பாகும். (ஆ)மக்காவின் ஜனத்தொகை அறுபது அல்லது எழுபதாயிரமாக இருந்தது. அனைவரும் நபி(ஸல்) அவர்களை எதிர்த்தவர்கள். 
(இ)இந்த மந்திரம் மிகப்பெரும் முன்னறிவிப்பை உள்ளடக்கியிருப்பதால் இதை மிகவும் மரியாதையுடனும் கவனத்துடனும் கேட்க வேண்டும் என மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். (ஈ)ருஷமாக்கள் என்பவர்கள் நபி(ஸல்) அவர்களின் எதிரிகளாவர்.  கவுராமா என்பது நபி(ஸல்) அவர்களின் இயல்புப் பெயராகும். அதன் அர்த்தம் நாடு துறந்து செல்பவர் அல்லது சமாதானத்தை வளர்ப்பவர் என்பதாகும்.

இது உண்மையில் மிகப் பெரும் முன்னறிவிப்பு என்பதை இந்த மந்திரத்தின் வார்த்தைகள் நமக்கு காண்பிக்கின்றன.  நான்கு வேதங்களில் எங்கேயும் மக்கள் இது போன்று குறிப்பாகவும் மிகவும் அழுத்தத்துடனும் அழைத்து சொல்லப்படவில்லை. 

இந்த வார்த்தைகளை கவனத்துடனும் மரியாதையுடனும் கேட்க வேண்டும் என ஹிந்துக்களுக்கு உத்தரவிடப்படுகின்றது. புரியாத புதிர் என்று இந்த வார்த்தைகளை அவ்வளவு எளிதாக அவர்கள் அலட்சியப்படுத்தி விட முடியாது. இந்த மந்திரத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள அஷ்தவிஷ்யதே என்ற சமஸ்கிருத வார்த்தை எதிர் கால அர்த்தத்தை குறிப்பதாகும். அதன் அர்த்தம் அவர் புகழப்படுவார்|என்பதாகும்.  இது முன்னறிவிப்புத்தான் என்பதற்கான முதல் அடையாளம் இதுவாகும்.  

நபி(ஸல்) அவர்கள் வெகுவாகப் புகழப்படும் எதிர்காலத்தில் இந்த சம்பவம் நிகழப் போகின்றது.  உலகில் தோன்றிய தீர்க்கதரிசிகளிலேயே மிகவும் புகழப்பட்ட மரியாதை அளிக்கப்பட்ட தீர்க்கதரிசி முஹம்மது (ஸல்) அவர்களேயாவார்கள்.எல்லா தீர்க்கதரிசிகளும் அவரைப் புகழ்ந்து அவரின் தோற்றத்தைப் பற்றி முன்னறிவிப்புக்களைச் செய்தும் உள்ளனர். என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிகா அவரை எல்லா தீர்க்கதரிசிகளையும் மதவாதிகளையும் விடவும் மிகவும் வெற்றிகரமானவர் என கருதுகின்றது.

நபி (ஸல்) அவர்களின் புனித பெயர்:

யாரைப் பற்றி இந்த முன்னறிவிப்பு குறிப்பிடுகின்றதோ அந்த வாக்களிக்கப்பட்டவரின் பெயர் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது அவசியமாகும். இதனால்தான், வேத ரிஷி அவருடைய பெயரை நரஷன்ஸா அஷ்த்விஷ்யதே என்று குறிப்பிடுகின்றார் - அதாவது  புகழுக்குரிய முஹம்மது புகழப்படுவார்| என்பதே இதன் அர்த்தமாகும்.  ஆம், அவர் புகழப்படுவார்:  இறைவன் அவரை புகழ்ந்துள்ளான், மனிதர்களும் அவரைப் புகழ்வார்கள்.  நரஷன்ஸா என்ற வார்த்தை நரஷஹ அஷன்ஸா யஸ்ய ஸா முனாஷ்டியஷ்உ பரஷன்ஸ்நிஹ் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதாவது மக்களிடையே புகழப்படுபவர் என்பதாகும்.இது முஹம்மது என்ற வார்த்தையின் சரியான மொழி பெயர்ப்பாகும். அவர் புகழப்படுகிறார் மேலும் எப்பொழுதும் புகழப்படுவார். |இறைவன் மற்றும் மனிதன் ஆகியோருக்கிடையே அவர் முஹம்மத்(புகழப்படுபவர்) ஆவார். அவர்களால் புகழப்படுவதற்கு தகுதி மிக்கவரும் ஆவார்.

அவர் சமாதானத்தின் இளவரசர் ஆவார்:
முஹம்மது(ஸல்) அவர்களின் மற்றொரு அத்தாட்சி என்னவெனில் அவர் கவுராமா[18] அவர்களாக அதாவது சமாதானத்தை நிலை நாட்டுவராக இருப்பார் என்பதாகும். உலகில் தோன்றிய அனைத்து தீர்க்கதரிசிகளிலும் முஹம்மது (ஸல்) அவர்கள் மாத்திரமே இந்த சிறப்பான தகுதியை பெற்றவர்களாக இருக்கின்றார்கள். உலகில் தோன்றிய அனைத்து தீர்க்கதரிசிகளும் உண்மையானவர்கள் என சான்று பகர்ந்து மதங்களுக்கிடையேயுள்ள பகைமையுணர்வை வேரறுத்தார். இந்த சிறப்பை வேறு எந்த தீர்க்கதரிசியும் பெற்றிருக்கவில்லை. மேலும்,மனித இனத்தின் சமத்துவத்தையும் மானிட சகோதரத்தையும் போதித்ததனாலும் அவர் சமாதானத்தின் இளவரசர் ஆவார். நபி(ஸல்) அவர்களின் போதனைப் பிரகாரம் எவரும் தன்னுடைய சாதி, நிறம், கொள்கை என்று சொல்லிக்கொண்டு எந்த வித மேன்மைக்கும் உரிமை கொண்டாட முடியாது.

كلكم بنو آدم وآدم من تراب நீங்கள் அனைவரும் ஆதமின் மக்களே, ஆதமோ மண்ணிலிருந்து படைக்கப்பட்டவரே| என்பது நபி மொழியாகும். ஒரே பொருளிலிருந்து படைக்கப்பட்ட நீங்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்களே.  நான் முன் பிறவியில் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன் ஆகவே இப்பிறவியில் நான் உயர்வானவன் என நீங்கள் சொல்ல முடியாது.  ஏனெனில் நீ இதற்கு முன் எந்தப் பிறவியும் எடுத்ததில்லை. உடலும் ஆத்மாவும் பிறவி எடுக்கின்றன என்ற கொள்கையும், சாதி நிற வேற்றுமைகளும் இரத்த குறியீடுகளும் தேச வெறியுமே மனித இன சச்சரவுகளுக்கும் ஒருவருக்கொருவர் பிரிந்திருப்பதற்கும் முக்கிய காரணமாகும். ஆனால் அதே நேரத்தில், இந்த கொள்கைகள் ஹிந்துக்களால் பிரதானமாக பிரச்சாரம் செய்யப்பட்டது மேலும் இவைகள் வேத போதனைகளின் முக்கியமான பாகங்களுமாகும்.  ஆனால் சமாதானத்தின் இளவரசரோ இந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்து உலகம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்தார். 

கவுராமா என்ற வார்த்தை நாடு துறந்து செல்பவர் என்ற அர்த்தத்தையும் குறிக்கின்றது.  இந்த அர்த்தமும் நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு மிகச் சிறப்பாகப் பொருந்துகின்றது.  நபி(ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து மதீனாவிற்கு) நாடு துறந்து சென்ற அந்த சம்பவத்திலிருந்து புதிய ஒரு சகாப்தம் தொடங்குமளவிற்கு அது சரித்திரப் புகழ் பெற்றது.  இந்த இஸ்லாமிய ஹிஜ்ரத்(நாடு துறந்து செல்லுதல்) நபி(ஸல்) அவர்கள் எதிரிகளிடமிருந்த சந்தித்த துன்பங்கள் போராட்டங்கள் ஆகியவற்றிற்கு ஒரு முடிவாகும் மேலும் அது செழுமை மற்றும் வெற்றி ஆகியவற்றின் ஆரம்ப அடையாளமுமாகும்.
தன் எதிரிகளுக்கிடையேயும் அவர் பாதுகாப்பாக இருப்பார் இந்த புகழ்மிக்க, சமாதானத்தின் இளவரசர்,பாதுகாப்பின் கோட்டையானவர் தன்னுடைய அறுபதினாயிரம் கொடும் காண்டுமிராண்டித்தனமான எதிரிகளுக்கிடையே தன்னந்தனியாக நின்று சத்தியப் பிரச்சாரம் செய்வார் ஆனால் அவரை  எதுவும் செய்ய எவரும் சக்தி பெற மாட்டார்கள். அவர் கடும் யுத்தங்களிலும் இரத்த களறி சண்டைகளிலும் பங்கு கொள்வார், எப்பொழுதும் முதல் வரிசையில்  நின்று யுத்தம் செய்வார். எந்த வித ஆபத்தான சூழ்நிலைகளிலும் அவர் ஒளிந்து கொள்ள மாட்டார்:  இருப்பினும் அவர் பாதுகாப்பாகவும் எந்த வித குறைவின்றியும் இருப்பார். அவரை கொல்ல எவரும் சக்தி பெற மாட்டார். திரிகளின் மத்தியிலிருந்து அவரைக் காப்பாற்றி அவரின் எதிரிகளிடமிருந்து அவரை இறைவனே நேரடியாக பாதுகாப்பான் என்று இந்த மந்திரத்தில் வரும் குறிப்புப் பெயர் தெளிவாக காட்டுகிறது. |எதிரிக் கூட்டங்களிலிருந்து அவரை நாமே பாதுகாப்போம். இந்த இறைவனின் பாதுகாப்பானது தன்னுடைய எதிரிகள் அனைவரிடமிருந்தும் அவரின் கையை ஓங்க வைத்தது. வாக்களிக்கப்பட்ட நராஷன்ஸ(முஹம்மது) பற்றி வேதமுடைய மக்களுக்கு கொடுக்கப்பட்ட தெளிவான அத்தாட்சியும் அந்த முன்னறிவிப்பு வார்த்தைக்கு வார்த்தை எவ்வாறு நிறைவேறியது என்பதும் எவ்வளவு அற்புதமானது!

ஒட்டகத்தில் சவாரி செய்யும் ரிஷி:

தொடர்ந்து குந்தப் சக்தின் இரண்டாவது மந்திரம் கூறுவதாவது :-

பேராசிரியர் கிரிபித் அதை கீழ்கண்டவாறு மொழி பெயர்த்துள்ளார்; :-

ரதத்தை இழுக்கும் ஒட்டகங்களை, அருகில் அவைகளுடைய பெண் ஒட்டகங்களுடன், இருபது ஒட்டகங்களை அவர் அளித்தார். ரதத்தின் உச்சி வானத்தை தட்டி விடாமல் இருப்பதற்காக சற்று தணிந்து கொள்கின்றது.

பண்டிட் கெம் கரன் கீழ்கண்டவாறு மொழி பெயர்க்கிறார்:-

 அவருடைய வேகமாக பயணம் செய்யும் வாகனங்கள், தங்களுடைய பெண் ஒட்டகைகளுடன், இருபது ஒட்டகைகளாகும். இவரின் உயர்ந்த அந்தஸ்தை முட்டாள்கள் உணராமல் உள்ளனர்.

பண்டிட் ராஜாராம் இந்த மந்திரத்திற்கு மற்றொரு விளக்கத்தை அளிக்கிறார்:-

அவரின் ரதத்தை இருபது ஒட்டகைகள் இழுத்துச் செல்கின்றன. அவருடைய மனைவிகளும் அவருடன் உள்ளனர். வானத்தை தட்டி விடாமல் இருப்பதற்காக அவருடைய ரதத்தின் உச்சி சற்று தணிகின்றது.
முதல் மந்திரந்தில் குறிப்பிடப்பட்ட அதே மனிதரைத்தான் இந்த இரண்டாவது மந்திரமும் குறிக்கிறது என்பதைத்தான் இந்த மொழி பெயர்ப்புக்கள் அனைத்தும் காட்டுகின்றன. இந்த மனிதர் ஒட்டகச் சவாரி செய்பவர் என்பதை ப்ளம்பீல்டு அவர்களின் மொழி பெயர்ப்பை தவிர உள்ள மற்ற அனைத்து மொழி பெயர்ப்புக்களும் ஏற்கின்றன. ரதத்தின் உச்சி வானத்தை தொட்டுக் கொண்டிருக்கும் என்பதையும் இந்த மொழி பெயர்ப்புக்கள் காட்டுகின்றன.[19]

இவ்வாறாக,வாக்களிக்கப்பட்ட அந்த ரிஷி ஒரு அரபியராக இருப்பார் என்பதை இந்த மந்திரம் தெளிவாக காண்பிக்கின்றது. தர்ம சாஸ்திர சட்டங்களின்படி இந்திய ரிஷிக்கு ஒட்டகத்தின் இறைச்சியும் அதன் பாலும் உண்பதற்கு தடுக்கப்பட்டதாகும்[20] ஆகவே ஒட்டகத்தில் சவாரி செய்வதும் தடுக்கப்பட்டதாகும். பிராமணர்களுக்கும் ஒட்டக சவாரி தடுக்கப்பட்டுள்ளது.  மனு ஸ்மிருதியில் எழுதப்பட்டுள்ளதாவது: ஒரு பிராஹ்மணன் மனப்பூர்வமாக ஒரு கழுதையிலோ அல்லது ஒட்டகத்திலோ பயணம் செய்தாலோ அல்லது நிர்வாணமாக நீராடினாலோ அவன் பரிசுத்தமிழந்து போகிறான். இந்த அசுத்தம் மூச்சை வெகு நேரம் அடக்குவதன் மூலமே நீக்க முடியும்.[21] தர்ம சாஸ்திரத்தின் இந்த தடை எதற்கெனில், இந்த முன்னறிவிப்பிற்கு விளக்கமளிக்கும் போது எந்த விதமான சந்தேகத்திற்கும் இடமிருக்கக்கூடாது  என்பதும் மேலும் வாக்களிக்கப்பட்ட அந்த ரிஷி இந்தியாவைச் சேர்ந்தவரல்ல ஆனால் ஒட்டகத்தில் சவாரி செய்யும் அரேபிய ரிஷி என்பதை தெளிவாகப் புரிந்து கொள்வதற்குமேயாகும். எந்த இந்திய ரிஷியும் ஒட்டக சவாரி செய்ததில்லை ஆனால் அரேபிய நபி(ஸல்) அவர்கள் மாத்திரம்தான் ஒட்டகத்தில் சவாரி செய்பவராகவும் அதனுடைய பாலை அருந்துபவராகவும் இருந்தார். அரேபியர்களின் தேசம் உலகம் முழுவதிலும் ஒட்டகத்திற்கு பெயர் பெற்றதாகும் மேலும் அரேபியர்கள் ஒட்டக சவாரிக்கு பெயர் பெற்றவர்கள்.

நபி(ஸல்) அவர்களின் துணைவியர்கள்:

இந்த மந்திரத்தில் வரும் |வதூ மந்தா தவிர்தர்ஷ்[22]|என்ற சொற்கள் இரண்டு விதமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. முதலாவதாக, ஒட்டகங்கள் அவருடைய ரதத்தை இழுக்கின்றன. அந்த ரதத்தில் அவருடைய மனைவிகளும் உள்ளனர் என்பதாகும்.  இரண்டாவதாக, ஒட்டகங்கள் தங்களுடைய பெண் ஒட்டகங்களுடன் ரதத்தை இழுக்கின்றன என்பதாகும்.  முதல் வியாக்கியானத்தின்படி,வாக்களிக்கப்பட்ட அந்த ரிஷிக்கு ஒன்றுக்கும் அதிகமான துணைவியர்கள் இருப்பார்கள் என்பதாகும். இது நபி(ஸல்) அவர்களைப் பொறுத்தவரை மிகவும் உண்மையாகும். இரண்டாவது விளக்கத்தின்படி, ஒட்டகத்தில் சவாரி செய்வது அவருடைய சிறப்பு குணம் என்பதாகும் இதுவும் நபி(ஸல்) அவர்களைப் பொறுத்தவரையில் உண்மையாகும். இவ்வாறாக, இருவிதமான மொழி பெயர்ப்பும் நபி முஹம்மது(ஸல்) அவர்களைத் தவிர வேறு எவருக்கும்பொ ருந்தவில்லை.

நபி (ஸல்) அவர்களின் விண் பயணம் (அல்லது மிஃராஜ்):

 வானத்தை முட்டி விடாமல் இருப்பதற்காக ரதத்தின் உச்சி சற்று தணிந்து கொள்கின்றது. இது நபி(ஸல்) அவர்கள் விண் பயணத்தின் (மிஃராஜ்) தெளிவான குறிப்பாகும். திருக்குர்ஆன் இதை குறித்து சொல்கின்றது :{وهو بالافق الاعلى}
அவர் அடிவானத்தின் மிக உயர்ந்த பகுதியில் இருந்தார்.[23] நபி(ஸல்) அவர்கள் அடிவானத்தின் உச்சியில் இருப்பது மேலும் அவர் தன்னுடைய தலையை சற்று தாழ்த்துவது அல்லது இறக்குவது என்பது அவர் இறைவனிடமும் மனிதனிடமும் கொண்டுள்ள உறவை முறையே படம் பிடித்துக்காட்டுகின்றது. உண்மையில், மனிதர்கள் மீது அவர் கொண்டுள்ள அன்பின் காரணமாக அவர் தலை தாழ்த்தும் அந்த செயல்தான் அவரை இறைவனின் அன்பிற்குரியவராக ஆக்கியது, அவருக்கு அடிவானத்தின் உயர்ந்த பகுதியில் உன்னத இடத்தைப் பெற்றுத்தந்தது மேலும் இறைவனுக்கு மிக நெருக்கமாகவும் அவரை ஆக்கியது.

அந்த அன்பிற்குரிய ரிஷியின் திருப்பெயரையும் அவருக்கு கொடுக்கப்பட்ட சில கொடைகளையும் தொடர்ந்து குந்தப் சக்தின் மந்திரம் மகிழ்வுடன் அறிவிக்கின்றது:-

எம். ப்ளம்பீல்டு இதை இவ்வாறு மொழி பெயர்க்கிறார்: 

அந்த தீர்க்கதரிசிக்கு இறைவன் நூறு நகைகளையும், பத்து மாலைகளையும், முந்நூறு குதிரைகளையும், பத்தாயிரம் பசுக்களையும் அளித்தான். 

பேராசிரியர் கிரிப்பித்தின் மொழி பெயர்ப்பு பின் வருமாறு: 

அவன் அந்த ரிஷிக்கு நூறு தங்க மாலைகளையும், பத்து மாலைகளையும், முந்நூறு வீரமிக்க குதிரைகளையும் பத்தாயிரம் பசுக்களையும் அளித்தான்.|

பண்டிட் கரன் எழுதுவதாவது: 

அவன் அந்த தீர்க்கதரிசிக்கு நூறு தங்க நாணயங்களையும், பத்து மாலைகளையும், முந்நூறு குதிரைகளையும் பத்தாயிரம் பசுக்களையும் கொடுத்தான்.||  

பண்டிட் ராஜா ராம் இதை இவ்வாறு மொழி பெயர்க்கிறார்: 

அவன் மாமஹ் ரிஷிக்கு நூறு தங்க நாணயங்களையும், பத்து மாலைகளையும், முந்நூறு குதிரைகளையும் பத்தாயிரம் பசுக்களையும் அளித்தான்.|

மாமஹ் என்ற ரிஷி நூறு தங்க நாணயங்களையும், பத்து நெக்லேஸ்கள் அல்லது மாலைகளையும், முந்நூறு குதிரைகளையும் பத்தாயிரம் பசுக்களையும் அளிக்கப்படுவார் என்ற உண்மையை இந்த அனைத்து மொழி பெயர்ப்புக்களும் ஒத்துக் கொள்கின்றன.

அந்த ரிஷியின் பெயர் மாமஹ் என்று இந்த மந்திரம் கூறுகின்றது. அந்தப் பெயருள்ள எந்த ரிஷியும் இந்தியாவில் வந்ததில்லை. இந்த வார்த்தையின் வேர்ச் சொல்லான மாஹ் என்பதற்கு மிகவும் உயர்வாகக் கருதுவது, கண்ணியப்படுத்துவது, பக்தி செலுத்துவது, பெருமைப்படுத்துவது, உயர்வுபடுத்துவது போன்ற அர்த்தங்களாகும்.[24] சில சமஸ்கிருத புத்தகங்கள் நபியின் பெயரை முஹம்மது என்று குறிப்பிடுகின்றன.[25] ஆனால் சமஸ்கிருத இலக்கணப்படி இந்த வார்த்தை மோசமான அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு அரபி வார்த்தைக்கு சமஸ்கிருத இலக்கணத்தை பயன்படுத்துவது தவறென்றாலும், அந்த முன்னறிவிப்பை மிகவும் தெளிவாக்குவதற்காக, ஏறக்குறைய முஹம்மது என்ற அதே உச்சரிப்பையும் அர்த்தங்களையும் உடைய மாமஹ் என்ற வார்த்தை அதர்வண வேதத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறாக, மாமஹ் என்பது முஹம்மது என்பதைப் போன்றதே.  உச்சரிப்பில் சிறிய மாற்றம் வருவது பெரிய விசயம் ஒன்றுமில்லை. பல முஸ்லிம்களின் பெயர்கள் சமஸ்கிருத புத்தகங்களில் சில மாற்றங்களுடன்தான் எழுதப்பட்டுள்ளன.  

உதாரணமான, மஹ்மூது கஸ்னவி என்பது மாமூத் கஜ்னவி என்று எழுதப்பட்டுள்ளது.[26]

ஆகவே, அதர்வண வேத ரிஷி அரபி வார்த்தையான முஹம்மதுவில் சிறிய மாற்றம் செய்து சமஸ்கிருத வார்த்தையான மாமஹ் என்ற வார்த்தையை உபயோகித்துள்ளார். ஆனால் அர்த்தம் மாறாமல் அப்படியே உள்ளது. ஹிந்து பண்டிட்டுகளை நேர் வழியில் நடத்தவும் இந்த முன்னறிவிப்பின் உண்மையான அர்த்தத்தை அவர்கள் உணரச் செய்யும் வகையில் அவர் இதைச் செய்துள்ளார். ஆனால் அவர்கள் கவனம் செலுத்தினால்தான் இதை உணர முடியும்.

தங்க நாணயங்கள்:

இறைவன் மாமஹ் ரிஷிக்கு அல்லது முஹம்மது நபிக்கு நூறு தங்க நாணயங்களை அளித்தான். நபி (ஸல்) அவர்களின் துன்பமிக்க மக்கா வாழ்க்கையில் அவருக்கு அளிக்கப்பட்ட விசுவாசிகளே இந்த நூறு தங்க நாணயங்களாவார்கள்.  அவர்கள் எல்லா விதமான துன்பங்களையும் துயரங்களையும் தாங்கி தங்கத்தைப் போன்று தூய்மையானதாகவும் மதிப்பு மிக்கதாகவும் ஆனார்கள். அவர்கள்தான்{السابقون الاولون}முந்தியவர்களும் முதலாமவர்களும் ஆவார்கள். அவர்கள் மக்காவாசிகளின் நீண்ட சித்திரவதைகளுக்குப் பிறகு தங்களின் வீடு வாசல்கள், சொந்த பந்தங்கள், ஏன் தங்களின் உயிரினும் மேலான நபி அவர்களையும் விட்டு விட்டு நாடு துறந்து அபீசீனியாவிற்கு செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள்.  அவர்கள் தங்களின் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்தனர் ஆனால் இஸ்லாத்தை மாத்திரம் இழக்கவில்லை.  இதனால்தான் அவர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆனார்கள். அவர்களைப் பற்றி திருக்குர்ஆன் {رضي الله عنهم}  அல்லாஹ் அவர்களை நன்கு பொருந்தி-திருப்திப்பட்டுக் கொண்டான் என்று கூறுகின்றது. அவர்கள் கடினமான சோதனைக் கடல்களில் தூக்கி எறியப்பட்ட போதும் ஒவ்வொன்றிலும் வெற்றியாளர்களாக வெளிவந்தனர்.  

திருக்குர்ஆனின் வார்த்தைகளில் சொல்வதானால்
{لنبلونكم بشي من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات}
நிச்சயமாக நாம் உங்களை அச்சத்தாலும், பசியாலும்,பொருளாதார, உயிர் மற்றும் கனிகள் நஷ்டத்தாலும் சோதிப்போம். மேலும் திருக்குர்ஆன் கூறுவதாவது:{ونبلوكم بالشر والخير فتنة}  நாம் உங்களை கெட்டவற்றையும் நல்லவற்றையும் கொண்டு சோதிப்போம். இந்த வசனத்திலுள்ள فتنة எனும் வார்த்தை ادخال الذهب النار لتظهر جودته من ردائته என்று விளக்கப்பட்டுள்ளது. அதாவது |தங்கத்திலுள்ள அழுக்கை நீக்கி சுத்தத் தங்கமாக்குவதற்காக அதை நெருப்பில் போடுவது| என்பதாகும். அதே மாதிரி, ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்களும் நபி(ஸல்) அவர்களின் தோழர்களும் கெட்டவைகளால் சோதிக்கப்பட்டனர், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் துன்பம் துயரம் எனும் நெருப்பில் தூக்கி எறியப்பட்டு சொக்கத் தங்கம் போன்று பரிசுத்தமாகினர்.

யஜூர் வேதத்தின் விரிவுரையாகக் கருதப்படும் சத்பத் பிராஹ்மனாவில், இதுவும் இறைவனால் அருளப்பட்டதாக கருதப்படுகின்றது, தங்கம் மனிதனின் ஆத்மீக சக்தியை உருவகமாக குறிக்கிறது என கூறப்பட்டுள்ளது. எல்லாவிதமான துன்பங்களையும் சோதனைகளையும்; முறியடிக்கின்ற மனிதனின் ஆத்மீக சக்தி தங்கத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது.  இவ்வாறாக, எல்லாவித கஷ்டங்களையும் எதிர்கொண்டு கடும் துன்பங்களை சகித்த நபி(ஸல்) அவர்களின் தோழர்கள்தான் நபியவர்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுத்த தங்க நாணயங்களாவார்கள். அபீஸீனியாவிற்கு நாடு துறந்து சென்ற நபித் தோழர்களின் எண்ணிக்கை நூறாகும். மாமஹ் ரிஷி அவர்கள் நூறு தங்க நாணயங்கள் வழங்கப்படுவார் என்ற முன்னறிவிப்பை இது நிறைவேற்றுகின்றது.

பத்து மாலைகள்:

நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது கொடை பத்து அழகியதும் விலை மதிப்பு மிக்கதுமான நெக்லேஸ்களாகும்.அவர்கள் தான் அஷ்ரத்துல் முபஷ்ஷரா என்று அறியப்படும் நபி(ஸல்) அவர்களின் பத்து மிகச் சிறந்த தோழர்களாவர்.  தங்களுடைய வாழ்க்கை பணியில் மிகவும் வெற்றிகரமான முஸ்லிம்கள் அவர்கள், அவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உயர்வு பெறுவார்கள் என்ற சந்தோச செய்தியை நபி(ஸல்) அவர்கள் மூலமாக நேரடியாக பெற்றவர்கள்.  நபியவர்கள் அவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் கூறி في الجنة சொர்க்கத்தில் இருப்பார்கள் என்று சொன்னார்கள்.  

அவர்கள் அபூபக்கர், உமர், உத்மான், அலி, தல்ஹா, ஜ-பைர், அப்துர்ரஹ்மான் பின் அவ்ப், ஸஅத் இப்னு அபீ வக்காஸ், ஸஅத் இப்னு ஜைத் மற்றும் அபூ உபைதா ஆகியோர் ஆவார்கள். (இறைவன் அவர்கள் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக.)  

அவர்கள் இஸ்லாத்தின் வழியில் செய்த தியாகங்கள் மிகப்பெரியவையும் எண்ணற்றவையுமாகும் அது போல அவர்களுக்கு கிடைக்கும் வெகுமதிகளும் இணையற்றவையாகும். அவர்கள் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவர்களாவார்கள்.   வேதங்கள் அவர்களைப் பற்றி தஷ் அஸ்ரிஜா |பத்து சுவனத்து மாலைகள்|என புகழ்ந்து பேசுகின்றன.

அஸ்ரிஜா என்ற சமஸ்கிருத வார்த்தை மாலை அல்லது பூங்கொத்து அல்லது தலைவன் என்பதைக் குறிக்கும். ரிக் வேதத்தில்[27] நாம் காண்பதாவது குழந்தை வேண்டுபவரே, அஷ்வினி குமாரும் தேவ்தாவும் உனக்கு பிள்ளைகளை அவர்களின் தலையில் பூ மாலைகளுடன் தருவார்களாக.

முன்னூறு நல்ல குதிரைகள்:

இந்த மந்திரத்தில் குறிப்பிடப்படும் மூன்றாவது கொடை முன்னூறு நல்ல குதிரைகளாகும். இந்த குதிரைகள் அரேபிய இனத்தைச் சார்ந்தவை என்றும் விவரிக்கப்படுகின்றது.  அர்வா என்பது விரைந்து செல்லக்கூடிய அரேபியக் குதிரையாகும் குறிப்பாக அசுரர்களால் (ஆர்யர் அல்லாதாரால்)[28] உபயோகிக்கப்படுவதாகும்.  அக்னி மற்றும் இந்திரனின் (கற்றறிந்த மற்றும்; வல்லமை மிக்க) வாகனங்களின் பெயர்களும் அர்வா என்றே குறிப்பிடப்படுகின்றன.[29]

ஆகவே, முஹம்மது(ஸல்) அவர்களின் முன்னூறு போர்க் குதிரைகள் பத்ர் யுத்தத்தில் போரிட்ட நபி அவர்களின் தோழர்களேயாவார்கள் என்பது மேற்கண்ட வேத விளக்கவுரையிலிருந்து தெளிவாகின்றது. எண்ணிக்கையில் முன்னூறு இருந்தது மாத்திரமல்லாமல் அவர்கள் ஞானிகளாகவும் வலிமை மிக்கவர்களாகவும் இருந்தனர். இரவு நேரத்தை இறை வணக்கத்தில் செலவளிப்பவர்களாகவும் பகலில் உன்னதமான வலிமை மிகுந்த போர் வீரர்களாகத் திகழ்ந்தார்கள்.  முஹம்மது(ஸல்) அவர்களைத் தவிர வேறு எந்த தளபதியும் அத்தகைய படையைத் திரட்ட முடிந்ததில்லை. அவர்கள் ஒரே நேரத்தில் ஞானிகளாகவும் யுத்த வீரர்களாகவும் திகழ்ந்தார்கள். ஆயுதங்கள் குறைவு போன்ற பல பலவீனங்கள் அவர்களிடம் இருந்த போதிலும் அவர்களைவிட பன்மடங்கு அதிகமாயிருந்த படையை வெற்றி கொண்டார்கள்.

பத்தாயிரம் பசுக்கள்:

இந்த மந்திரத்தில் குறிப்பிடப்படும் நபி(ஸல்) அவர்களுக்கு அளிக்கப்பட்ட கடைசி கொடை அவர் மக்காவை வெற்றி கொண்ட போது அவருடைய படையிலிருந்த பத்தாயிரம் புனிதர்களை பற்றியே ஆகும். வேத மந்திரத்தில் அவர்கள் பசுக்கள் என்று வருணிக்கப்படுகின்றனர். கோ என்ற சமஸ்கிருத வார்த்தை யுத்தத்திற்கு செல்லுதல் என்று அர்த்தம் தரக்கூடிய காவ் என்ற வார்த்தையிலிருந்து பெறப்படுகின்றது. ஆர்யர்கள் குறிப்பாக தங்களுடைய எதிரிகளின் பசுக்களைக் கைப்பற்றுவதற்காகவே யுத்தம் செய்ததால்தான் பசு கோ என்று அழைக்கப்படுகின்றது. இதனால்தான் எருமை வெற்றியின் அடையாளமாக எடுத்துக் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. மேலும் பெரும்பாலும் பசு எருமை ஆகிய இரண்டிற்குமே கோ என்ற வார்த்தை உபயோகிக்கப்படுகின்றது.

பசு அல்லது எருமை யுத்த அடையாளமாகவும் அமைதி மற்றும் இணக்கம் ஆகியவற்றின் அடையாளமாகவும் வேதங்களில் விவரிக்கப்படுகின்றது. எதிரிகளை பந்தாடுகின்ற வலிமை மிக்க வீரர் காவ் வொ ஷக்தா[30] என்று ரிக் வேதத்தில் சொல்லப்படுவதை நாம் காண்கிறோம்.அதைப் போன்றே, சத்பத் பிராஹ்மனாவிலும்[31] தைத்ரேயாவிலும்[32] பசு கொடூரம் மற்றும் அழிவு ஆகியவற்றின் அடையாளமாக விவரிக்கப்படுகின்றது. ரிக் வேதத்தின் மற்றொரு இடத்தில் காவ் வொ பிம்யோஹ் அதாவது அவன் பசுவைப் போன்று கொடூரமானவனும் மூர்க்கத்தனவனுமாவான் என்று சொல்லப்படுகின்றது.[33] இருப்பினும், அதே ரிக் வேதத்தில்  அமைதி மற்றும் இணக்கம் ஆகியவற்றின் அடையாளமாகவும் பசு குறிப்பிடப்படுகின்றது.

பலவித அறிவியல்களில் ஞானம் பெற்றவர்களும், செல்வத்தை தேடுபவர்களும் பசுக்களைப் போன்று(சேர்ந்து) வாழ்கின்றனர்.[34] 

அதே போல் ரிக் வேதம் 10: 145-6ல்
பசு தன்னுடைய இளங்கன்றின் பக்கம்(அன்போடு) திரும்புவதைப் போன்று உன் இதயம் என்னை நோக்கி திரும்பட்டும்.||  

பசு தன்னுடைய கன்றின் மேல் அன்பைப் பொழிவது போல், கணவனே, நீயும் என் மீது அன்பைப் பொழிய வேண்டும்.  பசுக்கள் மனிதர்களைப் போன்று உள்ளன என்று சத்பத் பிராஹ்மனாவில் கூறப்பட்டுள்ளது. மீண்டும், பசு வணக்கம்,(அதிதி) பொறுமை, அறிவு(சரஸ்வதி) ஆகியவற்றின் அடையாளமாகவும் கூறப்படுகின்றது.[35]

இந்த மேற்கோள்கள் அனைத்தையும் நினைவில் வைத்துக் கொண்டு, முஹம்மது(ஸல்) அவர்களின் பத்தாயிரம் பசுக்கள் என்று மந்திரத்தில் சொல்லப்பட்டதன் அர்த்தத்தை காண்பதற்கு திரும்புவோம். 

மேலுள்ள மேற்கோள்கள் இரண்டு விசயங்களைத் தெளிவுபடுத்துகின்றன: 

முதலில், திருநபியின் தோழர்கள் பசுக்களைப் போன்று புனிதமானவர்கள், பக்தியும் இரக்கமும் நிறைந்தவர்கள், இரண்டாவதாக, அவர்கள் இந்திரனைப் போன்று தீரமிக்கவர்கள். மேலோட்டமாகப் பார்த்தோமாகில், இந்த இரண்டு நற்குணங்களும் ஒன்றுக்கொன்று எதிர்மறையானவை. ஆனால் இதை திருக்குர்ஆன் எளிமையாகத் தீர்த்து வைக்கின்றது. 

திருநபி அவர்களைப் பற்றியும் அவர்களின் தோழர்களைப் பற்றியும் பேசும் போது திருக்குர்ஆன் கூறுவதாவது:-
{حمد رسول الله والذين معه اشدآء على الكفار رحمآء بينهم تراهم ركعا سجددا يبتغون فضلا من الله ورضوانا}
முஹம்மது இறைவனின் தூதர் ஆவார்கள்.  அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பவர்களுடன் கடுமையானவர்களாகவும், தங்களுக்கிடையே இரக்கமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் இறைவனின் கிருபையையும் திருப்பொருத்தத்தையும் நாடியவர்களாக அவனுக்கு ருகூஃ, ஸ-ஜூது செய்பவர்களாக நீர் அவர்களை காண்பீர். திருக்குர்ஆன் 48:29.

மேலும் அது கூறுவதாவது:
{ذلة على المؤمنين اعزة على الكفرين}
விசுவாசிகளிடத்தில் மிகவும் பணிந்தவர்களாகவும் நிராகரிப்பாளர்களிடத்தில் கடுமையானவர்களாகவும் இருப்பார்கள்||  திருக்குர்ஆன் 7:54.

உஹது யுத்தத்தின் போது நபி(ஸல்) அவர்கள் பசுக்கள் கொல்லப்படுவதாக கனவு கண்டார்கள். அந்த யுத்தத்தில் அவருடைய தோழர்களில் பலர் கொல்லப்படுவார்கள் என அதற்கு அவர்கள் விளக்கம் அளித்தனர்.  நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் அவர்களின் இரக்கம் மற்றும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பின் காரணமாகவும் மிகவும் சரியாக பசுக்கள் என்று அழைக்கப்பட்டனர் என்பதை இது காட்டுகின்றது.  இவ்வாறாக, மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது நபி(ஸல்) அவர்களுடன் சென்ற அவர்களின் பத்தாயிரம் புனித தோழர்களைப் பற்றிய விரிவான ஒரு சித்திரத்தை வேத மந்திரம் நமக்கு அளிக்கின்றது.

இந்த தோழர்களைப் பற்றி திருக்குர்ஆன் கூறும்போது :-
{لك مثلهم في التوراة ومثلهم في الانجيل}
இது தவ்ராத்தில் உள்ள அவர்களைப் பற்றிய வருணனைகளும் மேலும் சுவிஷேத்தில் உள்ள அவர்களைப் பற்றிய வருணனைகளுமாகும் என்று கூறுகின்றது. இவ்வாறாக,நபி முஹம்மது(ஸல்) அவர்களின் தோழர்களைப் பற்றிய வருணனைகள் பல்வேறு மத நூல்களிலும் ஏராளமான தீர்க்கதரிசிகளின் முன்னறிவிப்புக்களிலும் காணப்படும் என்று திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகின்றது.

நாம் மேலே கண்டது போல், இந்த மந்திரம் நபி(ஸல்) அவர்களின் பெயரை மாமாஹ் என்றுரைக்கிறது. இது முஹம்மது என்ற அதே அர்த்தத்தை உள்ளடக்கியிருப்பது மாத்திரமல்லாமல் உச்சரிப்பிலும் அதை ஒத்திருக்கின்றது. 

மேலும், தங்கத்தைப் போன்று பரிசுத்தமானதும் விலைமதிப்புமிக்கதும் மேலும் சொர்க்கத்தின் மலர்களுக்கு ஒப்பிடும் அளவிற்கு போற்றப்படுகின்ற முழுமையான குணங்களை கொண்ட தோழர்களை கொடையாக அளிக்கப்பட்ட மிகப் பெரும் ரிஷி முஹம்மது(ஸல்) அவர்கள் என்பதை இந்த மந்திரம் காண்பிக்கின்றது.இறை வணக்கத்தில் புனிதர்களாகவும் யுத்தகளத்தில் தீரத்தோடு போரிடக்கூடிய தோழர்களை அவர் அளிக்கப்பட்டார். 

இந்த அடையாளங்களெல்லாம் முஹம்மது(ஸல்) அவர்களின் வாயிலாகவும் அவரின் தோழர்களின் வாயிலாக மாத்திரம் நிறைவேற்றப்பட்டது மற்றெவரின் வாயிலாகவும் இல்லை என சரித்திரம் நமக்குச் சொல்கின்றது.  மந்திரங்கள் சொல்லும் அதே வரிசையில்தான் நபி(ஸல்) இவைகளைப் பெற்றார்கள். முதலில் அவர்கள் நூறு தங்க நாணயங்களையும், பின்பு அஷ்ரத்துல் முபஷ்ஷரா என்ற பதின்மரையும், பின்பு பத்ரில் யுத்தம் செய்த முன்னூறு தோழர்களையும் கடைசியாக மக்கா வெற்றியின் போது அவருடன் சென்ற பத்தாயிரம் புனிதர்களையும்  பெற்றார்கள். இத்தகைய குணங்களைப் பெற்ற, வேத மந்திரங்களில் சொல்லப்பட்டவற்றை நிறைவேற்றிய, ஆசிர்வதிக்கப்பட்ட அவர் அரேபிய நபியவர்கள்தான். அந்த நபியைத்(ஸல்) தவிர வேறு எவரையும் உலக சரித்திரம் சுட்டிக்காட்ட முடியாது.

ஒருவர் ஒரு தலைப்பட்ச சிந்தனையாலும் பிடிவாதத்தாலும் உண்மையை மறுக்கலாம், ஆனால் இரண்டு எதிரும் புதிருமான கருத்துக்களை உண்மையென எவரும் நிரூபிக்க முடியாது. 

ஏனெனில் உண்மைக்கு இரண்டு முகம் கிடையாதுதானே!

நபி(ஸல்) அவர்கள் இறைவனைத் துதித்தல்
குந்தப் சக்தின் தொடர்ந்து வரும் அடுத்த மந்திரம்
துதிப்பவரே, நீங்கள் களித்திருங்கள் பூ மரத்தின் மேலுள்ள பறவையைப் போன்று நீங்கள் களித்திருங்கள்.பட்டையில் தீட்டப்படும் கத்தியைப் போன்று உம்முடைய நாவு உதட்டின் மேல் வேகமாக அசைகின்றது. (ப்ளும்பீல்டு)

(இறைவனின் புகழை) பாடுபவரே, நன்கு உண்பீராக, பழுத்த பழங்கள் உள்ள மரத்தின் மேல் உள்ள பறவையைப் போன்று உண்பீராக.(கிரிபித்)

ஹிந்து விரிவுரையாளர்கள் தரும் மற்றொரு மொழி பெயர்ப்பு பின்வருமாறு:- 

(இறைவனை)புகழ்பவரே(அஹ்மத்),சத்தியத்தை பரப்புங்கள்,பழுத்த பழங்கள் உள்ள மரத்திலுள்ள பறவை பாடுவது போன்று சத்தியத்தை பரப்புங்கள். கத்தரியின் இரட்டை வெட்டி போல் உமது உதடுகளும் நாவும் அசைகின்றன.

தன்னுடைய மார்க்கத்தை அறிமுகப்படுத்தவும் சத்தியத்தை பரப்பவும் நபி(ஸல்) அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.  மரத்திலுள்ள கனிகள் பழுத்திருப்பதென்பது நபி(ஸல்) அவர்களின் வெற்றிக்கு உறுதி என்பதாகும்.  

நபி(ஸல்) அவர்களை இந்த மந்திரம் புத்தி கூர்மையுள்ளவர் அல்லது புகழ்பவர் அல்லது மேன்மைப்படுத்துவர் என்று அர்த்தம் தரக்கூடிய இரப்ஹ் என்ற வார்த்தையால் அழைக்கிறது. இது அஹ்மத் என்ற பெயரின் மிகச் சரியான மொழி பெயர்ப்பாகும். நபி(ஸல்) அவர்கள் இதே போல் தன்னுடைய மார்க்கத்தை பிரச்சாரம் செய்தார்கள்; அவர் உருவாக்கிய கனிந்த பழத்தை அனுபவிப்பதில் உலகம் பங்கு கொண்டது.  

இந்த மந்திரம் கூறியுள்ளது போலவே திருக்குர்ஆனும் கனிதரும் மரத்தைப் பற்றிய உதாரணத்தைத் தருகின்றது: 

நல்ல சொல் என்பதானது பூமியில் ஆழ வேர் விட்டும் அதனுடைய கிளைகள் உயரமானதாகவும் ஒவ்வொரு காலத்திலும் அதனுடைய இறைவனின் அனுமதி கொண்டு கனி தரும் ஒரு நல்ல மரத்தைப் போன்றது.(16:24) 

நல்ல வார்த்தை அல்லது இஸ்லாம் என்பது ஆழ வேர்விட்டு பழங்களை தந்து கொண்டிருக்கும் மரத்திற்கு ஒப்பிடப்படுகின்றது.

மற்றொரு இடத்தில் திருக்குர்ஆன் கூறுகின்றது :
{نا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر}
 நிச்சயமாக நாம் உமக்கு அளவற்ற நன்மைகளை அளித்துள்ளோம். ஆகவே உம்முடைய இறைவனை தொழுது அவனுக்காகவே பலி கொடுத்து வாரும். நிச்சயமாக உமது எதிரிதான் (நல்லவைகளிலிருந்து) அறுந்து போனவன். (108:1-3). 

மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில், இந்த மந்திரத்தின் அர்த்தங்கள் மிகவும் தெளிவாகின்றது. நபி அஹ்மது அவர்களுக்கு இறைவன் ஏராளமான நன்மைகளை அல்லது பழுத்த  பழங்களை கொடுத்துள்ளான். 

ஆகவே, அவர் தன்னுடைய இறைவனை புகழவும் பெருமைப்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார். அவர் இறைப் புகழ்ச்சியில் தன்னுடைய உதடுகளையும் நாக்கையும் வேகமாக அசைக்கின்றார். இந்த மந்திரம் விளக்குவது மாதிரி அவருடைய நாவும் உதடுகளும் கத்தரியின் கூர்மையான கத்திகள் போன்று எதிரியை நன்மையிலிருந்து வெட்டி விடுகின்றது. இவ்வாறுதான் நடக்கவும் செய்தது. வேத ரிஷி முன்னறிவித்தது போன்று நபி(ஸல்) அவர்களின் உண்மையும் நிலை நாட்டப்பட்டது.

யுத்த களத்தில் இறை வணக்கம்:

குந்தப் சக்த் மந்திரம் தொடர்ந்து கூறுகின்றது:
(இறைவனை) துதிப்பவர்கள் பசுக்களைப் போன்று களிப்புடன் பக்திப் பாட்டை பாடிய வண்ணம் விரைகின்றனர். வீட்டில் அவர்களின் பிள்ளைகள் உள்ளனர். வீட்டில் பசுக்களை கவனித்துக் கொண்டுள்ளனர். ப்ளம்பீல்டு

பசுக்களைப் போன்று வேகமாகவும் மனப்பூர்வமாகவும் (இறைவனை) புகழ்ந்து பாடுபவர்களும் அவர்களின் பாட்டுக்களும் வெளி வருகின்றன. அவர்களின் இளம் துணைவியர்கள் வீட்டில் காத்திருக்கின்றனர். வீட்டில் பசுக்களுக்காக காத்திருக்கின்றனர். கிரிபித்.

சில ஹிந்து விரிவுரையாளர்களால் கொடுக்கப்படும் மொழி பெயர்ப்பின் அர்த்தம் :(இறைவனை) பிரார்த்திப்பவர்கள் தங்களின் பிரார்த்தனையுடன் சக்திமிகுந்த காளைகளைப் போன்று விரைந்து செல்கின்றனர்.அவர்களின் குழந்தைகள் மாத்திரம் வீட்டில் உள்ளனர். வீட்டில் பசுக்களை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர்.

மக்காவை கைப்பற்றுவதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்ட ராணுவம் தீரமிக்க வீரர்களைக் உடையதாக இருந்தது. அவர்கள் இறை வணக்கம் செய்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் யுத்த களத்திற்கும் விரைந்து சென்ற வணக்கசாலிகள் ஆவார்கள். மதீனாவில் அவர்களின் பெண்களும் பிள்ளைகள் மட்டுமே இருந்தனர். இளம் கன்றுக் குட்டிகள் தங்களின் தாய் திரும்பி வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்று இந்த இறைவணக்கம் செய்பவர்கள் பாதுகாப்புடன் திரும்பி வருவதை அவர்களின் முஸ்லிம் குழந்தைகள் வீட்டில் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.

திருக்குர்ஆன் கூறுகின்றது :
{الستعينوا بالصبر والصلوة}
 (யுத்த நேரத்தின் போது) பொறுமையின் மூலமும் இறைவணக்கத்தின் மூலமும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்.|| (2:45). 

வீரத்தை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் மிகவும் பணிவாக தங்களின் இறைவனை வணங்கும் இந்த தனித்தன்மை முஹம்மது(ஸல்) அவர்களின் தோழர்களைத் தவிர உலகிலுள்ள வேறு எந்த மக்களிடமும் காணப்படவில்லை. 

நபியை நோக்கி திருக்குர்ஆன் கூறுகின்றது. (நபியே யுத்த முனையில்) நீரும் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு நீர் தொழவைக்க(இமாமாக முன்) நின்றால், அவர்களில் ஒரு பிரிவினர்(தொழ) நிற்கட்டும்: மேலும், தங்களுடைய ஆயுதங்களை அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். உம்முடன் இவர்கள் ஸஜ்தா செய்து முடித்து விட்டால் அவர்கள்(அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து) நிற்கவும்: (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உம்முடன் (சேர்ந்து) தொழவும்: அவர்கள் தம் எச்சரிக்கையையும் தம் ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளவும்.|(4:102).

இந்த மந்திரத்தில் வரும் முஸ்லிம் வீரர்களைப் பற்றிய வருணணை மிகவும் குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் வீரமிக்க காளைகளைப் போன்று யுத்த களத்திற்கு விரைந்து சென்று தீரத்துடன் போரிடுகின்றனர் மறு புறம் சாந்தமான பசுக்களைப் போன்று தங்களின் மக்களுடன் அமைதியாக வாழ்கின்றனர் மேலும் அவர்கள் எங்கிருந்த போதிலும் யுத்த களத்திலாயினும் அல்லது அதற்கு வெளியிலாயினும் தங்களின் இறைவனை தொழுகின்றனர்.

வேதத்தை பிரச்சாரம் செய்தல்:

அதற்கடுத்து தொடர்ந்து குந்தப் சக்தில் வருவதாவது:
(இறைவனை) துதிப்பவரே,கால்நடைகளையும் நல்ல பொருட்களையும் தேடித்தரும் உன்னுடைய துதியை இங்கே கொண்டு வருவீராக! வீரமிக்க வில்லாளி தன்னுடைய வில்லை சரியான இலக்கை நோக்கி குறி வைப்பது போன்று தெய்வங்களுக்கிடையே உம்முடைய குரலை ஒலிக்கச் செய்யுங்கள்.(ப்ளும்பீல்டு)

துதிப்பவரே, கால்நடைகளையும் செல்வத்தையும் தரும் உம்முடைய துதியை கொண்டு வாருங்கள். வில்லாளி தன்னுடைய வில்லை குறி வைப்பது போன்று இந்த பிரார்த்தனையை தெய்வங்களை நோக்கி செலுத்துவாயாக.|(கிரிபித்)

(இறைவனை)புகழ்பவரே, பசுக்களையும் நல்ல பொருட்களையும் தேடித்தரும்(இறை) ஞானத்தை பற்றிப்பிடிப்பீராக. வில்லாளி தன்னுடைய வில்லை சரியான இலக்கை நோக்கி செலுத்துவது போன்று தெய்வங்களுக்கிடையே இதை பரப்புங்கள்.

இந்த மந்திரத்தில் பேசப்படும் ஞானம் திருக்குர்ஆனேயன்றி வேறில்லை. திருக்குர்ஆனின் மூலமாக ஒருவர் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைப் பெற முடியும். வில்லாளி ஒருவன் தன்னுடைய வில்லை இலக்கை நோக்கி குறி வைப்பது போன்று இந்த வேதத்தின் போதனைகளை புனித மக்களிடையே, அதாவது அவரின் தோழர்களுக்கிடையே பரப்புமாறு நபி(ஸல்) அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். எந்த ஒரு வேதமும் ஒரு நபியை பின்பற்றுபவர்களாலும் அவருடைய தோழர்களாலும் மனப்பாடம் செய்யப்பட்டு அவருடைய வாழ்நாளிலேயே அந்த வேதமும் எழுதப்பட்டதென்றால் அந்த ஒரே நபி இவர் மாத்திரமே. அந்த வேதத்தை தன்னைப் பின்பற்றும் புனிதர்களுக்கு போதித்தார் அவர்களும் அதை மனப்பாடம் செய்தனர். வேறு எந்த வேதமும் அவ்வாறு எழுதி பாதுகாக்கப்படவில்லை.

திருக்குர்ஆனும் இந்த மந்திரத்தை உறுதிப்படுத்துகின்றது :
{ا يها الرسول بلغ ما انزل اليك}
தூதரே, உமக்கு அருளப்பட்டதை பிரச்சாரம் செய்வீராக|மேலும்

{كلا انها تذكرة فمن شآء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بايدي سفرة كرام بررة}
 அவ்வாறில்லை! நிச்சயமாக இது நினைவூட்டக்கூடிய (வேதமாகும்) ஆகவே விரும்புவர் இதைப் பற்றிச் சிந்திக்கட்டும்.  இது மிகவும் கண்ணியமிக்க, உயர்ந்த, பரிசுத்தமான புத்தகங்களில் உள்ளது. மிகவும் உன்னத நல்ல எழுத்தாளர்களால் எழுதப்பட்டதாகும். (80:11-13)

அடுத்த மந்திரத்தில் நபி(ஸல்) அவர்கள் தலை சிறந்த மனிதராகவும் உலகிற்கு வழி காட்டியாகவும் குந்தப் சக்த் உலகிற்கு அறிமுகப்படுகின்றது

எல்லா மக்களையும் ஆளும் அரசனான வைஷ்வானர பரிக்ஷித்தின் உயர்ந்த புகழை நீங்கள் கவனத்துடன் கேளுங்கள். அவர் அழியக்கூடியவர்களுக்கெல்லாம் மேலாக உள்ள கடவுள் ஆவார். (ப்ளும்பீல்டு)

எல்லா மக்களும் நேசிக்கும், அனைவரையும் ஆளும் அரசரான பரிக்ஷித்தின் புகழை கேளுங்கள். அவர் அழியக்கூடியவர்களையெல்லாம் விஞ்சி இறைவனைப் போன்று இருக்கிறார். (கிரிபித்)

ஹிந்து விரிவுரையாளர்கள் இந்த மந்திரத்தை கீழ்க்கண்டவாறு மொழி பெயர்க்கின்றார்கள்:
இறைவனாகவும் மனிதர்களில் மிகச் சிறந்தவருமாயிருக்கின்ற உலக அரசரின் (அல்லது பிரபஞ்சத்தின் பேரொளியின்) உயர் புகழைப் பாடுங்கள். அவர் எல்லா மக்களின் வழிகாட்டியும் அனைவருக்கும் புகலிடம் அளிப்பவரும் ஆவார்.

இந்த மந்திரத்தில் உணர்த்தப்பட்டுள்ள எல்லா குணங்களும் நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு குறிப்பாக பொருந்துகின்றது. உலக சமுதாயங்கள் அனைத்திற்கும் தூதராக அனுப்பப்பட்ட முதலாம் நபியும் அவரே இறுதி நபியும் அவரே. 

அது போன்றே, மனிதர்களில் சிறந்தவராக சொல்லப்பட்ட நபியும் ஆவார். 

இத்தகைய உயர்ந்த அந்தஸ்தை எந்த வேத ரிஷியும் பெற முடியவில்லை என்பது மாத்திரமல்ல அவர்களின் பெயர்கள் கூட உலகிற்கு தெரியவில்லை.  வேதங்களைப் பின்பற்றுபவர்கள் அந்த ரிஷி உயர்ந்தவர் இந்த ரிஷி உயர்ந்தவர் என்று பல்வேறு விதமாக கருத்து வேற்றுமை கொண்டுள்ளனர். 

இந்த மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தையும்; நபி(ஸல்) அவர்களுக்கு பொருந்துகின்றது.  உலகின் அரசர், உலகின் பேரொளி|மனிதர்களில் சிறந்தவர்|முழு மனித இனத்திற்கும் வழி காட்டி| மேலும்| |அனைத்து மக்களுக்கும் புகலிடம் தருபவர். 

நபி(ஸல்) அவர்களைப் பற்றி வேத ரிஷியால் பாடப்பட்ட என்னே உன்னதமான புகழ்மாலை இது.
உலகிற்கு சமாதானத்தை அளிக்கின்றார்

குந்தப் சக்தில் தொடர்ந்து வரும் கீழ்காணும் மந்திரம் அறிவிக்கின்றது:

மிகவும் உன்னதமிக்க பரிக்ஷித்[36] தன்னுடைய(ஆட்சி) கட்டிலில் அமர்ந்தவுடன் நமக்கு ஒரு பாதுகாப்பான தங்குமிடத்தை பெற்றுத் தந்து விட்டார் என்று குரு தேசத்தில் உள்ள ஒரு கணவன், தன்னுடைய வீட்டாரை கண்ட போது மனைவியிடம் உரையாடுகின்றான்.(ப்ளும்பீல்டு)

கவுரவ்யா தன்னுடைய வீட்டை ஒழுங்குபடுத்திக் கொண்டே தன்னுடைய மனைவியிடம் அனைவரிலும் சிறந்தவரான பரீக்ஷித் தன்னுடைய ஆட்சிக்கட்டிலில் ஏறியவுடன் நமக்கு அமைதியையும் ஓய்வையும் கொடுத்துள்ளார் எனக் கூறினான்| (கிரிபித்)

ஒவ்வொருவருக்கும் அபயம் அளிக்கும் அவர், தன்னுடைய ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் உலகிற்கு சமாதானத்தை அளித்தார்.  அவர் சமாதானம் உண்டாக்குவதைப் பற்றி குரு தேசத்தில் உள்ளவர்கள் வீட்டை கட்டுமானம் செய்யும் நேரத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர். (ஹிந்து விரிவுரையாளர்கள்)

கஃபாவை திரும்ப கட்டும் நேரத்தில், அரேபிய குலங்கள் ஒவ்வொன்றும் மற்றவைகளின் குரல் வலையை நெரித்துக் கொல்லும் கட்டத்தில் இருந்தன, இந்த விசயம் நபி(ஸல்) அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போது, எந்த குலமும் ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்தாமலும் திருப்தியோடு ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இந்த பிரச்னையை தீர்த்து வைத்தார். இவ்வாறாக நபி(ஸல்) உலகிற்கு சமாதானத்தை அளித்தார். மனித இரத்தம் சிந்தப்படுவதிலிருந்து இறை இல்லத்தை காத்தார்.  

அது போன்றே, மக்கா வெற்றிக்கு பிறகு நபி (ஸல்) அவர்களின் ஆட்சி நிலை நாட்டப்பட்ட போது, {لا تثريب عليكم اليوم}
இன்றைய தினம் உங்கள் மீது எந்த வித குற்றமும் இல்லை|எனக் கூறி தன்னுடைய கடும் எதிரிக்கும் அபயமும் அமைதியும் அளித்தார்.

இந்த மந்திரத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள கவுரவ்யா என்ற வார்த்தைக்கு விளக்கமளிக்க வேண்டியதுள்ளது.  பாண்டவர்களுக்கும் குருக்களுக்கும் நடந்த யுத்தம் ஹிந்து மத நூல்களில் நன்கறியப்பட்ட ஒன்றாகும். 

அது பற்றி மஹாபாரதத்திலும் ஒரு குறிப்பு காணப்படுகின்றது. இந்த யுத்தம் நடந்த இடம் இன்று வரையும் குருஷேத்ரா என்று பிரபலமாகியுள்ளது.  குரு என்பவர்கள் மிகவும் புராதாண காலத்தைச் சேர்ந்த மக்களாவர். அவர்களை ரிக் வேதம் புரு என அழைக்கின்றது. ஆரம்பத்தில் இந்த மக்கள் பாபிலோனைச் சேர்ந்தவர்களாகயிருந்தனர். 

ஆர்யர்கள் அந்த மண்ணிலிருந்து குடி பெயர்ந்து வந்த சில காலத்திற்கு பிறகு இவர்களும் இந்தியாவிற்கு வந்தனர். பைபிளும் கொரா என்று அறியப்படும் ஒரு சமுதாயத்தைப் பற்றி குறிப்பிடுகின்றது. புனித ஜெருஸல ஆலயத்தில் கொடுக்கும் பலி சம்பந்தமாக ஆரோனின் வாரிசுகளிடம் இவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இவ்வாறாக, இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் கவுரவ்யா என்று அறியப்படுகின்றனர். இந்த வார்த்தை வேலை செய்பவர்|என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  அந்த அர்த்தத்திலேயே இந்த வார்த்தை இந்த மந்திரத்தில் கொத்தனார் அல்லது வீடு கட்டுபவர் என்று உபயோகிக்கப்பட்டுள்ளது. ஹீப்ரு மொழியில் குரு என்னும் வார்த்தைக்கு |வீட்டை பாதுகாப்பவர்| என்று அர்த்தமாகும். ஹீப்ரூவிலும் பஷ்துவிலும் கொர் என்பது வீடு என்பதாகும். இந்த வார்த்தை குரைஷ் என்ற வார்த்தையின் மற்றொரு உருவமாக இருக்கலாம் என்பதுவும் சாத்தியமே.

அமைதிப் பிரதேசம்

வரக்கூடிய இறுதித்தூதரின் ஆட்சியில் நாடு எவ்விதம் மாறும் என குந்தப்சக்த் தொடர்ந்து அறிவிக்கின்றது:-

நான் தங்களுக்கு என்ன கொண்டுவர? தயிர் கொண்டு வரட்டுமா அல்லது கலக்கப்பட்ட பானம் கொண்டு வரட்டுமா அல்லது மதுபானமா? அரசர் பரீக்ஷித்தின் அரசாங்கத்தில் ஒரு மனைவி தன்னுடைய கணவனிடம் இவ்வாறு கேட்கின்றாள். (ப்ளும்பீல்டு)
நான் தங்கள் முன் என்ன சமர்ப்பிக்கட்டும்?  தயிரா, பால் கஞ்சியா அல்லது வால்கோதுமை பானமா? எது வேண்டும் தங்களுக்கு? அரசர் பரிக்ஷித் ஆளும் பிரதேசத்திலுள்ள மனைவி கணவனிடம் இவ்வாறாக கேட்கின்றாள். (கிரிபித்)

எல்லோருக்கும் அமைதியையும் பாதுகாப்பையும் கொடுக்கும் அரசரின் நாட்டிலே  தங்களுக்கு தயிர் அல்லது வேறு ஏதேனும் பானத்தை படைக்கட்டுமா என்று மனைவி தன் கணவனிடம் கேட்கின்றாள்.(ஹிந்து விரிவுரையாளர்கள்)

வாக்களிக்கப்பட்ட பரிக்ஷித் அமைக்கப்போகும் அமைதியான நாட்டைப்பற்றி இந்த மந்திரம் குறிப்பிடுகின்றது. நபி(ஸல்) அவர்களின் ஆரம்பகால ஹதீஸ்களில் முன்னறிவிப்பாக|மக்காவிலிருந்து மதினா வரை ஒரு பெண் தன்னந்தனியே வழியில் எந்தவித பயமுமின்றி பயணம் செய்யும் காலம் வரும்|என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்களின் தோற்றத்திற்குப் பிறகு அரேபியா முழுவதும் எந்தஅளவிற்கு அமைதியும் பாதுகாப்பும் பரவியுள்ளது என்பதை உலகம் கண்டுள்ளது. நபி(ஸல்) அவர்களின் தோற்றத்திற்கு முன்பு பெண்களின் கற்பிற்கோ அல்லது உயிர்உடமைக்கோ எந்த பாதுகாப்பும் இல்லாதிருந்தது. நபி(ஸல்) அவர்களின் அமைதி நிலவும் ஆட்சியிலே ஒரு பெண் தன்னந்தனியாக பயணம் செய்யவும் கடைவீதிகளில் பொருட்களை வாங்கவும் விற்கவும் முடிந்தது.

உண்மையான மார்க்கத்தின் அடையாளம்
ஒளியைப் போன்று வால்கோதுமையானது பாத்திரத்திலிருந்து நிரம்பி வழிகின்றது. அரசர் பரீக்ஷித்தின் ஆட்சியிலே மக்கள் மகிழ்ச்சியாக செழிப்புடன் உள்ளார்கள்.(ப்ளும்பீல்டு)
வானத்து ஒளியை காண்பதற்கு வருவது போன்று பழுத்த தானியம் பிளவிலிருந்து குதித்து வருகின்றது. அரசர் பரிக்ஷித் ஆளும் நாட்டில் மக்கள் செழிப்புடன் மகிழ்ச்சியாக உள்ளனர்.(கிரிபித்)

பழுத்த வால்கோதுமை பிளவிலிருந்து வெளிப்பட்டு வானத்தை நோக்கி உயர்கின்றது. அனைவருக்கும் பாதுகாப்பளிக்கும் அரசரின் ஆட்சியில் மக்கள் செழிப்புடன் உள்ளனர். (ஹிந்து விரிவுரையாளர்கள்)

உண்மையான மார்க்கம், இறைவனின் ஆட்சி ஆகியவற்றின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று என்னவெனில் நல்ல நிலத்தில் தானியமானது வெளிப்பட்டு வளர்வது போன்று அதன் கீழ் மக்கள் சந்தோசமாகவும் செழிப்புடனும் இருக்க வேண்டும் என்பதாகும். நபி(ஸல்) அவர்களின் தோற்றத்திற்கு முன்பு மக்கள் எல்லா விதமாக தீமைகளில் மூழ்கியும் ஆழ்ந்த சீரழிவிலும் வீழ்ந்துமிருந்தனர். ஆனால் நபி(ஸல்) அவர்களின் ஆத்மீக சக்தியினாலும் அவருடைய மார்க்கத்தின் அருட்கொடைகளினாலும் அதே மக்கள் புகழ் மற்றும் உயர்வின் உச்சிக்கு உயர்ந்தனர். தவ்ராத்தும், சுவிஷேசமும், வேதங்களும், மற்ற இறை வெளிப்பாடுகளும் இந்த உண்மைக்கு சான்று பகர்கின்றன. 

திருக்குர்ஆன் இதைப் பற்றி: 
இதுவே தவ்றாத்(என்னும் வேதத்)தில் உள்ள அவர்களின் உதாரணமாகும். இன்னும் இன்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது, ஒரு பயிரைப் போன்றதாகும்:  அது தன் முளையை வெளிப்படுத்தி, பின்னர் அதை பலப்படுத்துகின்றது: பின்னர் அது (தடித்து) கனமாகின்றது. பின்னர் அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது.(48:29)

மேலே மேற்கோள் காண்பிக்கப்பட்ட திருக்குர்ஆன் வசனத்தின் அதே செய்தியைத்தான் அபிவ்ஸ்வஹ் பிரஜிஹிதெ யவாஹ் (வால் கோதுமை வெளிப்பட்டு உயர்கின்றது) என்ற வேத வாக்குகள் வெளிப்படுத்துகின்றது. திருக்குர்ஆன் மற்றொரு இடத்தில் கூறுவதாவது: நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணத்தைக் கூறியுள்ளான் என்பதை (நபியே) நீர் பார்க்கவில்லையா? (அது) நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர்(பூமியில்) ஆழப்பதிந்தும், அதன் கிளை வானளாவியும் இருக்கிறது. அது தன் இரட்சகனின் அனுமதி கொண்டு ஒவ்வொரு நேரத்திலும் கனிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது: மேலும், மனிதர்களுக்கு அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக இவ்வுதாரணங்களை அல்லாஹ் கூறுகின்றான். (14: 24-25)

திருக்குர்ஆனும் வேதமும் இந்த உதாரணத்தை உண்மையான மார்க்கத்தின் அடையாளமாக முன் வைத்துள்ளன. திருக்குர்ஆன் இதை நல்ல மரம் என்றும் வேதம் இதை பத்ரம் அதாவது நன்மை மற்றும் செல்வம் என்றும் அழைக்கின்றது.  இந்த நல்ல மரத்தின் வேர் நிலத்தில் மிக உறுதியாக ஊன்றியுள்ளது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது வேதமோ யாவஹின் (அல்லது வால் கோதுமை மரம்) வேர்கள் அதன் பிளவில் ஆழமாக உள்ளது என்று கூறுகின்றது. 

அதன் கிளைகள் விண்ணைத் தொடுமளவிற்கு உள்ளது என திருக்குர்ஆன் கூறுகின்றது. வேதமும் அது விண்ணை நோக்கி உயரும் என கூறுகின்றது. 

திருக்குர்ஆன் 
{يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحيوة الدنيا وفي الآخرة}
விசுவாசங்கொண்டவர்களை இம்மைவாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் நிலைப்படுத்துகிறான் என்று கூறுகின்றது.(14:27) 

அது போல வேதமும், உண்மையான மார்க்க ஆட்சியின் கீழ் மனிதன் செழுமையாக சந்தோசமாக வாழ்கின்றான் என்று கூறுகின்றது. திருக்குர்ஆன் பழுத்த மரத்தை {توتي اكلها كل حين}
ஒவ்வொரு நேரத்திலும் கனிகளைத் தருகின்றது|என்று கூறுகின்றது வேதமும் அதை பழுத்த கனி தரும் மரம் என்று விவரிக்கின்றது.

நபி முஹம்மது(ஸல்) அவர்களின் உண்மைக்கு ஆதரவாகவே இந்த உவமையை திருக்குர்ஆன் அளித்துள்ளது. வேத மந்திரமும் இதை எந்த அளவிற்கு வார்த்தைக்கு வார்த்தை உண்மைப்படுத்துகின்றது என்பதை நாம் கண்டோம்.  திருக்குர்ஆனின் வார்த்தைகளில் சொல்வதானால்,  மக்கள் சிந்தித்து உணர்வதற்காகவே இறைவன் உவமைகளை கூறுகின்றான். ஆகவே, வேதங்களை பின்பற்றுபவர்கள் இந்த உண்மையை சிந்தித்து உணரட்டும். வேத மந்திரத்தை திருக்குர்ஆன் உண்மைப்படுத்துவது போன்று, இந்த வசனங்களும் வேத மந்திரங்களும் ஆதரித்து கூறும் நபி முஹம்மது (ஸல்) அவர்களை நம்பி அவர்களின் உண்மைக்கு வேதங்களை பின்பற்றும் அவர்கள் சான்று பகர வேண்டும்.

எழுந்து மக்களை எச்சரிக்கும்படி அடுத்த மந்திரத்தில் நபி(ஸல்) கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்
துதிப்பவரை இந்திரன் எழுப்பி   எழு, அங்குமிங்கும் செல், என்னைப்பற்றி பாடுவீராக. வலிமைமிக்க என் புகழை நன்கு பாடுங்கள். ஒவ்வொரு பக்திமானும் உமக்கு (பலி வெகுமதியை) அளிப்பர் என்று கூறினான். (ப்ளும்பீல்டு)

புகழ்பவரை இந்திரன் எழுப்பி, எழு, இங்குமங்கும் என் புகழ்பாடித் திரி.  என்னைப் புகழ்வீராக. வலிமையும் பக்தியும் மிக்கவர்கள் அதற்குப் பதிலாக உமக்கு செல்வங்களைத் தருவார்கள் என்று கூறினான். (கிரிபித்)

இந்திரன், அவனைப் புகழ்பவரை எழுப்பி, ஒவ்வொரு திசையிலும் வசிக்கும் மக்களிடத்தில் செல்லுமாறு பணித்தான். அவர் வலிமைமிக்க இந்திரனை புகழுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். எல்லா பக்திமான்களும் அவருடைய முயற்சியை மெச்சுவார்கள்.  இறைவன் அவருக்கு வெகுமதிகளை அளிப்பான். (ஹிந்து விரிவுரையாளர்கள்)

இந்த மந்திரம் ஏறக்குறைய திருக்குர்ஆனின் 74வது அத்தியாயமான |போர்த்தியிருப்பவர்(அல் முத்தத்திர்) என்ற அத்தியாயத்தின் முதல் வசனமாகிய  போர்த்தியிருப்பவரே, எழுந்து எச்சரிக்கை செய்வீராக மேலும் உமது இறைவனை பெருமைப்படுத்துவீராக. என்பதன் மொழி பெயர்ப்பைத் அப்படியே தருகின்றது. 

மேலும் திருக்குர்ஆன்
{ولا تمنن تستكثر ولربك فصبر}
 அதிகமானதைப் பெறக்கருதி (மற்றவருக்கு) உபகாரம் செய்யாதீர். இன்னும் உமதிரட்சகனுக்காக நீர் பொறுமையுடன் இருப்பீராக. (74:6-7) 

மேலும்
ولسوف يعطيك ربك فترضى
இன்னும் உமதிரட்சகன் அடுத்து(ப் பல உயர் பதவிகளை) அளிப்பான். அப்போது நீர் திருப்தியடைவீர்|என்று கூறுகின்றான்.(93:5). 

மற்றொரு இடத்தில்
{انا اعطينك الكوثر فصل لربك وانحر }
(நபியே) நிச்சயமாக நாம்; கவ்ஸரை(எண்ணற்ற நன்மைகளை) உமக்கு கொடுத்துள்ளோம். ஆகவே, உமதிரட்சகனைத் தொழுது, இன்னும்(குர்பானியும் கொடுத்து அதை) அறுப்பீராக என்று கூறுகின்றான் (108: 1-2).

நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்ட அதே வார்த்தைகளை எவ்வாறு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் வேத ரிஷி உதிர்த்துள்ளார் என்பதை சத்தியத்தை தேடக்கூடிய, பாராபட்சமற்ற  ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதற்காக எந்தவித குறிப்போ அல்லது விளக்கமோ இன்றி வேத மந்திரம் மற்றும் திருக்குர்ஆன் வசனங்களின் மிகச் சரியான மொழி பெயர்ப்பை கொடுத்துள்ளோம். இந்த மந்திரம் ஒன்றே நபி(ஸல்) அவர்களின் உண்மையை நிலை நாட்ட போதுமானதாகும். 

திருக்குர்ஆன் கூறுகின்றது:  போர்த்தியிருப்பவரே எழுவீராக. வேதமோ இந்திரன்,அவனைப் புகழ்பவரை (அதாவது அஹ்மது) எழுப்பினான் எனக் கூறுகின்றது. மக்களை எச்சரிக்கும்படி திருக்குர்ஆன் அவரைப் பணிக்கின்றது, அதே போலவே வேதத்திலும் அவர் மக்கள் இருக்கும் ஒவ்வொரு திசையை நோக்கிச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்;. 

திருக்குர்ஆன்  உம்முடைய இறைவனை பெருமைப்படுத்துவீராக| என்று கூறுகினறது. வேதமும்  வலிமை மிக்க இந்திரனை புகழ்வீராக|என்று கூறுகின்றது. அவருடைய இறைவன் அவருக்கு ஏராளமான நன்மைகளை அளிப்பான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. இறைவன் அவருக்கு அவன் புறத்திலிருந்து வெகுமதிகளை அளிப்பான் என்று வேத மந்திரம் கூறுகின்றது.

இந்த அனைத்து தெளிவான அடையாளங்கள் யாவையுமே நபி முஹம்மது(ஸல்) அவர்களிலேயே நிறைவேறியுள்ளன. வேறு எந்த ரிஷியிலோ அல்லது தூதரிலோ நிறைவேறவில்லை. அவர் எழுந்து மக்களை எச்சரித்தார் மேலும் தன்னுடைய இறைவனை பெருமைப்படுத்தினார். ஓய்வு ஒழிவின்றி இரவும்பகலும் தன்னுடைய மார்க்கத்தை பிரச்சாரம் செய்து சத்தியத்தை பரப்பினார்.வேத மந்திர வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்,பழுத்த மரங்கள் நிறைந்த மரத்தில் உள்ள பறவையைப் போன்று தன்னுடைய இறைவனின் புகழைப்பாடினார். இறைவா! நபி முஹம்மது(ஸல்) அவர்கள் மீது அருள் புரிவாயாக!

நபி(ஸல்) அவர்களின் தாராளகுணம் பற்றி அடுத்த மந்திரம்:

கால்நடைகளே! நீங்கள் பிறப்பீர்கள், குதிரைகளே, வீட்டு பிராணிகளே! ஆயிரம்(பசுக்களை) பலி வெகுமதியாக அளிக்கும் பூஷன் அவர்களும் இங்கே தன்னை நிலைப்படுத்துவார். (ப்ளும்பீல்டு)
 பசுக்களே அதிகரித்து பல்கிப் பெருகுங்கள், குதிரைகளே, மனிதர்களே.  ஆயிரம் உயர்ந்த வெகுமதிகளுடன் பூஷன் அவர்களும் இங்கே அமர்கிறார்.|(கிரிபித்)

ஹிந்து விரிவுரையாளர்கள் கீழ்கண்ட மொழி பெயர்ப்பை தருகின்றனர்: பசுக்களும், குதிரைகளும், மனிதர்களும் இங்கே அதிகரித்து பல்கிப் பெருகுகின்றனர். ஏனெனில் இங்கே ஆள்பவர் ஆயிரக்கணக்கில் கொடையாகவும் பலியாகவும் அளிக்கும் பெரும் கொடையாளியும் மிகவும் தாராளத் தன்மை வாய்ந்தவரும் ஆவார்.

இந்த முன்னறிவிப்பின் உண்மைக்கு இஸ்லாமிய சரித்திரம் சான்று பகர்கின்றது. நபி(ஸல்) அவர்களின் அரசாட்சியில் ஒவ்வொன்றும் எவ்வாறு அதிகரித்து பல்கிப் பெருகியது என்று உலகம் கண்டுள்ளது. உலகிலேயே மிகவும் பின் தங்கிய மக்கள் தலைவர்களாகவும் வெளிச்சத்திற்கும் கல்விக்கும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்கள். செல்வங்கள், மனிதர்கள், கால்நடைகள் ஒவ்வொன்றும் அதிகரித்து பல்கிப் பெருகியது. உலகம் இதுவரை கண்ட மனிதர்களிலேயே முஹம்மது(ஸல்) அவர்கள் மிகவும் தாரளத்தன்மை வாய்ந்தவர்கள் என்பதும் கருணையும் அன்பும் நிறைந்த மனத்துடையவர் என்பதும் நிலைநாட்டப்பட்ட உண்மையாகும்.

{فبما رحمة من الله لنت لهم ولو كمت فظا غليظ القب لا انفضو من حولك}
|| (நபியே) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (இரக்கமுள்ளவராக) நடந்து கொள்கிறீர்:  மேலும், சொல்லில் கடுகடுப்பானவராக, இரக்கமற்ற இதயமுள்ளவராக நீர் இருந்திருப்பீரானால், உம்மிடமிருந்து அவர்கள் பிரிந்து சென்றிருப்பார்கள்.|(3:159) என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. 

இவ்விதமாக, நபி(ஸல்) அவர்களின் அன்பான இதயம், தாராளத்தன்மை, பெருந்தன்மை ஆகியவைகளின் காரணமாகத்தான் மக்கள் எல்லா மூலை முடுக்களிலிருந்தும் கூட்டம் கூட்டமாக விரைந்து அவரிடம் கூடினர். இல்லையெனில், அரேபியர்களைப் போன்ற பிடிவாதக்குணம் படைத்த மக்களை ஒரு போதும் மாற்றியிருக்கவோ அல்லது அடக்கியிருக்கவோ முடியாது.

தொடர்ந்து வரும் குந்தப் சக்தின் மந்திரத்தில் நபி (ஸல்) அவர்களுக்காக வேத ரிஷியின் பிரார்த்தனை
இந்திரனே! இந்த கால்நடைகளுக்கு எந்தவித தீங்கும் நேரிட்டு விடக்கூடாது. மேலும் அவைகளின் உரிமையாளருக்கும் எந்த தீங்கும் சம்பவித்து விடக்கூடாது. எதிரிகளோ அல்லது திருடர்களோ இவர்களை அடைந்திடக்கூடாது.|| (ப்ளும்பீல்டு)

இந்திரனே, இந்த பசுக்கள் பாதுகாப்புடன் இருக்கட்டும் அவைகளின் தலைவர் அனைத்து வித தீங்கிலிருந்தும் விலகி இருக்கச் செய்வாயாக. வஞ்சக இதயம் படைத்தவர்களோ அல்லது கொள்ளையர்களோ அவர்களின் மேல் அதிகாரம் செலுத்தாமல் இருக்கட்டுமாக.(கிரிபித்)

இந்திரனே! இந்த பசுக்களை (நபி (ஸல்) அவர்களின் புனித தோழர்களை) பாதுகாப்புடன் இருக்கச் செய்வாயாக. மேலும் அவர்களின் தலைவர் எந்த வித துன்பத்திற்கும் உள்ளாகாமல் இருக்கட்டுமாக. இந்திரனே! ஏதிரியையோ அல்லது கொள்ளையரையோ அவர்களை ஜெயிக்க வைத்து விடாதிருப்பாயாக.|(ஹிந்து விரிவுரையாளர்கள்)

நபி(ஸல்) அவர்களுக்காகவும் அவர்களின் தோழர்களுக்காகவும் வேத ரிஷி செய்த இந்த பிரார்த்தனை எத்தனை அற்புதமானது. ரிஷி அவர்களின் இந்த பிரார்த்தனை மிகத் தெளிவான முறையில் நிறைவேற்றப்பட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது.  நபி(ஸல்) அவர்களும் அவர்களின் புனித தோழர்களும் தங்களுடைய பணியில் வெற்றி பெற்றனர்: காப்பாற்றப்பட்டனர்: இறைவனின் கரத்தால் உதவப்பட்டனர். அவர்களை எதிர்த்த வஞ்சகர்களும் கடும் பகையாளிகளும் அவர்களை வெற்றி கொள்ளமுடியவில்லை நபி(ஸல்) அவர்கள் தங்களுக்கு அளித்த அருட்கொடைகளை தங்களிடமிருந்து எவரும் பிடுங்கிட இயலவில்லை. எதிரிகள் அழிந்த அதே நேரத்தில் முஸ்லிம்கள் செழிப்பாக வளர்ந்தனர். இவ்வாறாக ரிஷி அவர்களின் பிரார்த்தனை ஏற்றுநிறைவு செய்யப்பட்டது. 

திருக்குர்ஆனின் இறுதி அத்தியாயத்தில் இது போன்ற பிரார்த்தனையொன்று காணப்படுகின்றது: 

(நபியே) நீர் கூறுவீராக: மனிதர்களின் இரட்;சகனிடம் நான்(பாது)காவல் தேடுகிறேன். (அவன்தான்) மனிதர்களின் அரசன். மனிதர்களின்(வணக்கத்திற்குரிய) நாயன். பின்னால் பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களைக் கிளப்பக்கூடியவ(னான ஷைத்தா)னின் தீங்கை விட்டும் (நான் பாதுகாவல் தேடுகிறேன்). அவன் எத்தகையனென்றால், மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களைக் கிளப்பிவிடுகின்றான்.(இத்தகையோர்) ஜின்களில் மற்றும் மனிதர்களில் இருக்கின்றனர். (114)

தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் ஒரு பிரார்த்தனையை கற்பித்து கொடுத்தார்கள். 
அது
{اللهم لا تسلط علينا من لا يرحمنا}
இறைவா எங்கள் மேல் இரக்கம் கொள்ளாதவர்களை எங்கள் மேல் அதிகாரம் கொள்ளச்செய்து விடாதே|என்பதாகும். 

மேலும் இறைவனே திருக்குர்ஆனில் நபி(ஸல்) அவர்களைப் பற்றி
{والله يعصمك من الناس }
மனிதர்களிடமிருந்து அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பான்|என்று கூறுகின்றான். 

நபி(ஸல்) அவர்களின் பாதுகாப்பிற்காக ரிஷி அவர்கள் இறைவனிடம் பிரார்த்தார். இறைவனும் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு நபி(ஸல்) அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் தங்களின் பணியில் வெற்றி பெறுவார்கள் என்றும் அறிவித்தான்.

ரிஷியின் புகழ்மாலையும் பிரார்த்தனையும்:

நாம் தலைவனை நோக்கி துதி செய்கிறோம் அவனை நோக்கி பாடுகிறோம். மகிழ்வூட்டும் பாட்டை நாம் பாடுகிறோம்.  (தலைவனே)எங்களுடைய பாட்டில் மகிழ்வாயாக. (இதனால்) நாங்கள் என்றென்றும் துன்பம் பீடிக்காமல் இருப்போமாக.  (ப்ளும்பீல்டு)

தலைவனை நம்முடைய புகழ்மாலையைக் கொண்டும், பிரார்த்தனையைக் கொண்டும், மங்களகரமான வேண்டுதலைக் கொண்டும் மீண்டும் மீண்டும் புகழ்கிறோம். நாங்கள் பாடும்பாடடில் மகிழ்வாயாக. எந்த தீங்கும் எங்கள் மேல் விழாதிருக்கச் செய்வாயாக. (கிரிபித்)

மிகப்பெரும் தலைவனின் புகழை பாடுகிறோம். மகிழ்வூட்டும் பாட்டால் அவனை மேன்மைப்படுத்துகின்றோம். தலைவனே, அருள்கூர்ந்து இந்த புகழை ஏற்றுக் கொள்வாயாக. அதன் மூலம் எங்களுக்கு எந்த தீங்கும் நேராதிருக்கும்.(ஹிந்து விரிவுரையாளர்கள்)

நாம் முன்னுள்ள பக்கங்களில் மேற்கோள் காட்டியுள்ள மந்திரங்களில் இது கடைசியானதாகும். இதில் தன்னுடைய பிரார்த்தனையையும் புகழ் மாலையையும் ஏற்றுக் கொள்ளும்படி நபி(ஸல்) அவர்களை வேத ரிஷி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றார். வேத ரிஷியின் இந்த பணிவான வேண்டுகோளானது, உண்மையில்,வேதங்களைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் அந்த நபியின் புகழ்பாட வேண்டுமென்பதை கட்டாயமாக்குகின்றது. 

அவரைப் பெருமைப்படுத்துவதன் மூலம் தங்களை இவ்வுலக மற்றும் மறுவுலக தீங்குகளிலிருந்தும் காப்பாற்றிக் கொள்வார்கள். 

சாதிய முறையின் பொய்யான தத்துவங்கள், மறுபிறப்பு போன்ற மற்ற மூடநம்பிக்கைகள் இந்த உலகில் அவர்களை பிணைத்திடும் விலங்குகளாகும்.  இது போலவே, மறுஉலகில் அவர்கள் மோட்சமும் விடுதலையும் அடைவதை அவர்களின் மதவேறுபாடுகள் சந்தேகத்திற்கிடமாக்கியுள்ளது. ஆகவே, முஹம்மது(ஸல்) அவர்கள் எல்லா விதமான தீங்குகளிலிருந்து மக்களை விடுவித்து அவர்களுக்கு நேர்வழியை காண்பிக்கவே இவ்வுலகிற்கு வந்தார்.

இந்த முன்னறிவிப்புக்களைப் பற்றி மேலும் சில உண்மைகள்:

நாம் முன்னர் விவாதித்த அதர்வண வேத முன்னறிவிப்புக்களைப் பற்றி மேலும் சில விளக்க ஒளியைப் பாய்ச்ச வேண்டியதுள்ளது. குந்தப் சக்தில் வரும் இந்த முன்னறிவுப்புக்களைப் பற்றி இரண்டு வித சிந்தனையாளர்கள் கூட்டம் உள்ளனர். இந்த குந்தப் சக்த் அல்லது இந்த முன்னறிவிப்பின் தொகுப்புக்கள் அதர்வண வேதத்தில் உள்ளதல்ல என்றும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்றும் லாகூரிலுள்ள டி.ஏ.வி. கல்லூரியின் ஆராய்ச்சி அறிஞர்பண்டிட் பக்வத்தத், சுவாமி ஹரி பிரஷத், வேத முனி போன்ற சில நவீனகால ஆராய்ச்சியாளர்கள் நினைக்கின்றனர். 

இரண்டாவது சிந்தனையாளர்கள், இந்த மந்திரங்களை புரியாத புதிர் என்றும் அறிவிற்கெட்டாதது ஆகும் எனக் கருதுகின்றனர். நவீனவாதிகளும் கூட, உண்மையில், அவர்கள் இந்த மந்திரங்கள் என்ன சொல்கின்றன என்று கிரகிக்க முடியாததனாலேயே அத்தகைய முடிவிற்கு வந்துள்ளனர்.

குந்தப் சக்த் அதர்வண வேதத்தில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்ற கருத்து பல காரணங்களால் ஆதாரமற்றதாகும்.  

மிக மிக பழமையான புத்தகங்கள் கூட குந்தப் சக்த்; பற்றி குறிப்பிட தவறவில்லை, உதாரணமாக, அய்த்ரேய பிராஹ்மனா (6:32), கவுஷிக்தி பிராஹ்மனா (30:5), ஷங்காயானா ஷ்ரவுத் ஸஜதர் (12:14), அஷ்வலயானா ஷ்ரவுத் ஸஜதர் (8:3,7), வைதன் ஸஜதர் (32:19) மற்றும் கோபத் ப்ராஹ்மான (2:6,12) போன்ற புத்தகங்கள் குந்தப் சக்த் பற்றி குறிப்பிடுகின்றன.  இந்த மந்திரங்கள் பிற்காலத்தில் வேதத்தில் சேர்க்கப்பட்டிருந்தால் இது போன்ற பல்வேறு புராதாண புத்தகங்களில் அது பற்றி குறிப்பு இருக்க முடியாது.  அவைகள் எளிதில் கிரகிக்க முடியாததால், அவைகள் வேதத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்று நினைக்கக்கூடாது.

இரண்டாவதாக, பிராஹ்மனா கிரந்தில் சொல்லப்பட்டிருப்பது போன்று, இந்த மந்திரங்கள் ஒரு பெரும் கூட்டத்தில் ஒவ்வொரு வருடமும் பாடப்பட்டு வந்தது. அதில் தெய்வங்களுக்கு சோம பானம் அளிக்கப்பட்டது. அங்கே பதினேழு பண்டிட்டுகள் நீண்ட நேரத்திற்கு அதை பாராயாணம் செய்யும் வழக்கமுடையவர்களாயிருந்தனர்.  

இவ்வாறாக, ஒவ்வொரு வருடமும் பக்தியுடனும், கட்டுப்பாட்டுடனும் ஓதப்பட்டும் காலம்காலமாக கடைப்பிடிக்கப்பட்டும் வரும் பழக்கம் சந்தேகத்திற்குரியதென்றோ பிற்கால கண்டுபிடிப்பு என்றோ கருதப்பட முடியாது. பக்தருக்கு பயனளிக்கக் கூடியதும் நன்மை பயக்கக்கூடியதும் அவருக்கு இந்த பிரபஞ்சம் பற்றிய ஆழமான அறிவை அளிக்கக்கூடியதும் இறைவன் பற்றிய அதிகமாக அறிவிக்கக் கூடியதும் ஆன விசயங்கள் அடங்கி இருக்கக் கூடிய வேதத்தின் பகுதிகளுக்குத்தான் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கபடுகின்றன. கண்டிப்புடன் மனப்பாடம் செய்யப்படுகின்றன. குந்தப் சக்த் அர்த்தமற்ற புதிர்களின் தொகுப்புமல்ல அல்லது பிற்கால சேர்ப்புமல்ல என்பதை இது காண்பிக்கின்றது.

21ல் வகுக்கப்படும் மந்திரங்கள் வயிறாகும் என சத்பத் பிராஹ்மனாவில் பதியப்பட்டுள்ளது. வயிற்றில் 20 சுரப்பிகள் (குந்தப்) உள்ளன. 21வதாக வயிறு உள்ளது. ஆகவே 21ல் வகுக்கப்படும் மந்திரங்கள் வயிறு என அறியப்படுகின்றன.(12:2,1,126.) சத்பத் பிராஹ்மனா போன்ற மிகவும் புராதணமான புத்தகத்தின் சாட்சி ஒன்றே இந்த மந்திரங்கள் உண்மையானவை என்று நிரூபிக்கப் போதுமானதாகும். இன்றும் இந்த மந்திரங்கள் மொத்த எண்ணிக்கை 147 ஆகும். இது 21ஆல் ஏழு முறை வகுக்கப்படுவதாகும்.

மோரிஸ் ப்ளும்பீல்டு தன்னுடைய அதர்வண வேத விரிவுரையில்: 

குந்தப் சக்த் என அழைக்கப்படும் துதிப்பாடல்கள் இந்த வகையான இலக்கியத்தோடு சேர்க்கப்படுவதை பிராஹ்மன அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றார்கள். அவர்கள் கூறுவது சரியென்பதை 20:127ன் தொடக்க வசனம் எந்தவித சந்தேகத்திற்கும் இடம் வைக்காமல் நிரூபிக்கின்றது. பிராஹ்மனாக்களில் மேற்கோள் காட்டப்படுகின்ற குந்தப் துதிகளின் பலவசனங்கள் அதர்வண வேதத்ததில் உள்ளது போன்ற அதே மூலக் குளறுபடிகளை காண்பிக்கின்றது. ஷங்கயானா ஷ்ரவுத் ஸஜதர் 12:14 அவைகளை முழுமையாக வெளிப்படுத்திக் காண்பிக்கின்றது(பக்கம் 689). பேராசிரியர் மேக்ஸ்முல்லர் இது பற்றி  சமஸ்கிருத இலக்கியங்களின் வரலாறு என்னும் நூலிலும் விவாதிக்கின்றார்.(பக்கம் 493)

இந்த மந்திரங்கள் எந்தவித தெளிவான அர்த்தத்தையும் தரவில்லையென்றும் மிகவும் குழப்படியாக உள்ளதென்றும் பல்வேறு அறிஞர்கள் கருதுகின்றனர். உதாரணத்திற்கு, பண்டிட் ராஜா ராம் எழுதுவதாவது: இந்த பத்து சுக்தங்கள் குந்தப் சுக்த் என அறியப்படுகின்றன். குந்தப் என்பவைகள் வயிற்றிலுள்ள சுரப்பிகளாகும். அவைகளின் எண்ணிக்கை இருபது. இந்த சுக்தங்கள் பல வகையான விசயத்தை பற்றி கூறுகின்றன. அவைகளில் பெரும்பாலானவை புரியாத புதிர்களே. மூலமும் அதன் அர்த்தங்களும் தெளிவான அர்த்தங்களை தராமல் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. சில இடங்களில் மூலம் முற்றிலும் அர்த்தமற்றதாகவே உள்ளது.[37] அதே போன்று எம். ப்ளும்பீல்டு கூறுவதாவது: இரண்டாம் பகுதியில் உள்ள மூலம் மிகவும் சீரழிந்து உள்ளது. அதன் திருந்திய வடிவத்திலிருந்து அர்த்தம் பெறுவது நம்முடைய கணிப்பைப் பொறுத்துத்தான் உள்ளது.(பக்கம் 691) 

இது போன்றே பேராசிரியர் கிரிபித் இந்த மந்திரங்களைப் பற்றி எழுதுவதாவது: 

குந்தப் சுக்த் என்று பெயருள்ள வேதத்தின் இந்த பகுதி துதிகள், பலி சூத்திரங்கள், மந்திர உச்சாடனங்கள், புதிர்கள் மற்றும் மிச்சம் மீதி ஆகியவைகள் கலந்த புதிரான சில்லறை மந்திரங்களின் தொகுப்பாகும்.[38]

இந்த மந்திரங்கள் முன்னறிவிப்புக்களாகும். ஒரு முன்னறிவிப்பு நிலையான அர்த்தம் தராமல் பல்வேறு அர்த்தங்களுக்கு இடமுள்ளதாகவும் இரகசியமானதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறில்லையானால், ஒருதலைப்பட்ச சிந்தனையுள்ள, கெட்ட புத்தியுள்ளவர்களால் அது சீரழிக்கப்பட்டு விடக்கூடும். இந்த முன்னறிவிப்பு உண்மையில் நிறைவேறும்போது அதன் அர்த்தங்கள் மிகவும் தெளிவாகின்றன. இவ்விதமாக, உண்மையில் நடந்தேறும் சம்பவங்கள்தான் ஒரு முன்னறிவிப்பின் விளக்கமாகும். குந்தப் சுக்தின் இந்த மந்திரங்களை மொழி பெயர்த்து வருகையில் அவைகள் நபி(ஸல்) அவர்களுக்கு எவ்வளவு சரியாகப் பொருந்துகின்றன என்பதை நாம் காண்பித்துள்ளோம். அவைகளின் அர்த்தத்தில் இப்பொழுது எந்த சந்தேகமும் வரவில்லை ஒவ்வொன்றும் வெள்ளிடைமலை போல் தெளிவாக தெரிகின்றது. உலகில் தோன்றிய மதத் தலைவர்கள் அனைவரிலும் எவருடைய வாழ்க்கைச் சரித்திரமாவது சின்னங்சிறிய விபரங்கள் உட்பட மிகச்சரியான முறையில் எந்த வித சர்ச்சைக்கும் இடமின்றி பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றதென்றால் அது முஹம்மது(ஸல்) அவர்களின் சரித்திரம் மாத்திரமே. 

நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவத்திற்க்கும் வரலாற்று ஆதாரங்கள் உண்டு. ஆகவே, இந்த முன்னறிவிப்புக்களை வேறு எந்த புனிதர்களுக்கு பொருத்திப் பார்க்க வேண்டுமானாலும், அவருடைய வாழ்க்கையில் இந்த சம்பவங்கள் ஏற்ப்பட்டன என்பதற்கான சரித்திர ஆதாரங்கள் வேண்டும். இது அசாத்தியத்திற்கு அடுத்தது என நவீன கால ஆராய்ச்சிகளிலிருந்து நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த மந்திரங்கள் குந்தப் என அழைக்கப்படுகின்றன என்பது தற்போதைய வினா? குந்தப் என்பது வயிற்று சுரப்பிகளை குறிக்குமென்றால், எந்த முறையில் இந்தப் பெயர் இந்த மந்திரங்களுக்கு பொருந்துகின்றது? வேதங்களின் விரிவுரையாளர்கள் எவரும் இது பற்றி விவாதித்து இந்தப் புதிரை விடுவிக்க முயற்ச்சிக்கவில்லை. 

இந்தப் பெயருக்கான மூன்று காரணங்களை நாம் கீழே தருகின்றோம்:

¨குந்தப் என்பது குஹ் மற்றும் தப் என்ற இரு வார்த்தைகளின் சேர்மானத்திலிருந்து வந்ததாகும். குஹ் என்பது பாவம், துன்பம் என்று அர்த்தமாகும். 

தப் என்பது அழிப்பது என்று அர்த்தமாகும். இவ்வாறாக, குந்தப் என்பது பாவங்களையும் துன்பங்கைளயும் அழிப்பவர் என்று பொருள்படும். 

உலகின் துன்பங்களை போக்கக்கூடியவரைப்பற்றி பேசக்கூடிய அனைத்து மந்திரங்களின் தொகுப்பும் குந்தப் சுக்த் என்று அறியப்படுகின்றது. ஜொராஸ்டர் தீர்க்கதரிசியால் செய்யப்பட்ட இது போன்ற முன்னறிவிப்பு பர்வர்தின் யஷ்த் 28:129ல் காணப்படுகின்றது. திருக்குர்ஆனும்(இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களை(ச் செய்யுமாறு) ஏவி பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்குவார்: நல்லவைகளையே அவர்களுக்கு ஆகுமாக்கிவைப்பார்: கெட்டவற்றை தடுத்து விடுவார்: அவர்களுடைய பளுவையும், அவர்களைப் பிணைத்திருக்கும் விலங்குகளையும் நீக்குவார்.(7:157) எனக் கூறுகின்றது.

¨                          ஆதாரப்பூர்வமான பிராஹ்மனா கிரந்தங்களின்படி குந்தப் என்பது வயிற்றிலுள்ள சுரப்பிகளையோ அல்லது வயிற்றையோ குறிப்பதாகும். இந்த மந்திரங்கள் தொப்புள் அல்லது பூமியின் மையப் பகுதியான மக்காவிலுள்ள முதல் இறைவணக்க ஆலயத்தைப் பற்றி முன்னறிவிப்பை கொண்டிருப்பதால் இந்த பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.  

திருக்குர்ஆன் கூறுகின்றது: மனிதர்களுக்கு வைக்கப்பட்ட முதல் ஆலயம் நிச்சயமாக பக்கா(மக்கா)வில் இருப்பதுதான். அது பரக்கத்துச் செய்யப்பட்டதாகவும், அகிலத்தாருக்கு நேர் வழியாகவும் இருக்கின்றது.|| (3:96). 

மனிதன் வயிற்றிலிருந்து ஊட்டச்சத்தைப் பெறுவதைப் போன்று,உலகிற்குத் தேவையான ஆத்மீக உணவு உலகின் மேல் முதன்முதலில் தெய்வ ஒளியை பாய்ச்சிய மக்காவிலுள்ள இறை இல்லத்திலிருந்து கொடுக்கப்படுகின்றது.

திருக்குர்ஆனின் பக்கா என்பதும் வேதத்தின் குந்தப் என்பதும் ஒரே அர்த்தத்தை உடையது மாத்திரமல்ல, பக்கா என்ற அரபி வார்த்தையின் சற்று மாறிய வடிவம்தான் குந்தப் என்ற வார்த்தையாகும். சமஸ்கிருத மொழி நூற்றுக்கணக்கான அரபி வார்த்தைகளை கடன் வாங்கியுள்ளது. அவ்வார்த்தைகள் ஒரு சிறிய மாற்றத்துடன் அம்மொழியில் உபயோகப்படுத்தப்படுகின்றது.  

உதாரணத்திற்கு சிலவற்றை நாம் மேற் கோள் காட்டுகிறோம் :-

சமஸ்கிருதம்          அரபி          சமஸ்கிருதம்         அரபி
            أثم                                 امهة                       راس             شره         
            داب                                   باد                      قط                تك        
            قنب                                بنك                    اب                    با         
            مسا                                  سائيم                  أم                    ما           
            هدى                                   يدنية                 ود                   دهو         
            عينا                               نينا                رملة                مروستهل      
            سر                                رهسية                نهار                اهن اوراهر     
            لج-لجة                            جل                    شانة                 انس          

மேற்கண்ட ஆதாரத்தின் அடிப்படையில், كنتاب எனும் வார்த்தையும் بكة என்ற வார்த்தையின் மாறிய வடிவம்தான் என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். بكة என்ற வார்த்தையில் ك، ب மற்றும் ت என்ற மூன்று எழுத்துக்கள் உள்ளன.  இதைப் போன்றே இந்த எழுத்துக்கள் كنتاب  என்ற வார்த்தையில் காணப்படுகின்றன. அதில் ك ، ن ، ت  வும் ب வும் உள்ளன.  அரபி ب என்ற எழுத்து சமஸ்கிருத ب வாக மாறியுள்ளது.

எல்லா முன்னறிவிப்புக்களிலும் மக்கா என்பதற்குப் பதிலாக பக்கா என்ற வார்த்தையே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பது மிகவும் விநோதமான உண்மையாகும். பக்காவை இறை வணக்கத்தின் முதல் மற்றும் முவொன ஆலயமாக கருதுகின்றது.  வேதத்தில் மாத்திரமல்லாமல், தாவூது நபி(அலை) அவர்களும் இந்த ஆலயத்தை அதே பெயரில் குறிப்பிடுகின்றார்.

உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்: அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக் கொண்டிருப்பார்கள்.(சேலா.) 
உம்மிலே பெலன் கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள், பக்கா பள்ளத்தாக்கின் உருவவழி நடந்து அதை நீரூற்றுக்களாக கொள்ளுகிறார்கள்: மழையும் குளங்களை நிரப்பும். அவர்கள் பலத்தின் மேல் பலம் அடைந்து, சியோனிலே தேவ சந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.(சங்கீதம் 84:4-6)

இந்த சங்கீதத்திலிருந்து பின்வரும் விளக்கங்கள் பெறப்படுகின்றன :

தாவூது குறிப்பிடும் இறை இல்லம் பக்காவிலுள்ள இறையில்லமேயல்லாமல் வேறல்ல. ஏனெனில் அந்த நேரத்தில் ஜெருஸலத்தில் உள்ள ஆலயம் கட்டப்படவில்லை. அப்பொழுது இறை இல்லம் ஜியோனிலேயே இருந்தது.

பாலஸ்தீனை கைப்பற்றுவதற்கான இறைக்கட்டளைக்காக நபி தாவூது(அலை) அவர்கள் காத்திருந்தார். தந்தை ஆப்ரஹாம் அவர்களால் கட்டப்பட்ட இறை இல்லத்திலிருந்து அருள் பெரும் பொருட்டு அவர் பக்கா பள்ளத்தாக்கிற்கு வந்தார்.
பக்கா என்ற பெயர் ஹீப்ரூவில் பக்காஹ் என்று எழுதவும் உச்சரிக்கவும்படுகின்றது. ஹ் என்ற கடைசி எழுத்து இந்த இடம் மிகவும் பிரபல்யமான இடம் என்பதை காண்பிக்கின்றது.

இந்தப் பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள் எப்பொழுதும் இறைவனைப் புகழ்பவர்கள் ஆவார்கள்.  முஸ்லிம்கள் எந்த அளவிற்கு இறைவனை புகழ்கிறார்கள் பெருமைப்படுத்துகின்றார்கள் என்பதை உலகம் நன்கறிந்திருக்கின்றது.  ஒவ்வொரு முஸ்லிமும் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது இறைவனை சிரம் பணிந்து அவனைப் புகழ்கிறார்.  பக்காவிலுள்ள இறை இல்லம் ஒரு போதும் அழிவிற்குள்ளாகாது,  எப்பொழுதும் இறைவன் அதில் புகழப்படுவார் என்றும் இந்த வார்த்தைகள் பொருள்படலாம். அதே நேரத்தில் ஜெருஸலம் ஒன்றுக்கும் அதிகமான தடவை அழிக்கப்பட்டிருக்கின்றது.

எந்த மனிதரின் சக்தி உன்னில் இருக்கிறதோ அந்த மனிதர் பாக்கியவான்| என்பது நபி(ஸல்) அவர்களை தெளிவாகக் குறிக்கின்றது. அவர் அநாதையாகவும், பலவீனமானவராகவும், நண்பர்கள் இல்லாதவராகவும் இருந்த போதிலும் தன்னுடைய வலிமை மிக்க எதிரிகளை இறைவனின் அருளாளும் அவனிடமிருந்து பெற்ற சக்தியாலும் வென்றார்.

மக்கா பாலைவனத்தில்(ஜம்ஜம்) கிணறு இருப்பது இந்த பூமியை இறைவன் அருள் செய்திருப்பதற்கான மற்றொரு அடையாளமாகும்.

பாக்கியவான் என்பதும் பலத்தின் மேல் பலம் அடைந்து|என்பதும் திருக்குர்ஆனின் வார்த்தைகளான مباركاً وهدى للعالمين என்பதின் மொழி பெயர்ப்பாகும்.
ஜியோனிலுள்ள இறைவனின் முன்பு தோன்றுவது|என்பது மக்காவில் நடக்கும் வருடாந்திர ஹஜ் யாத்திரையை குறிக்கும். ஜியோன் என்பது எதைக் குறிக்கின்றது என்பதை ஏசாயாவின் ஆறாவது முன்னறிவிப்பில் விரிவாக நாம் விவாதித்துள்ளோம்.
உலகின் வழிகாட்டியும் மனித இனத்தின் இரட்சகருமான நபி முஹம்மது(ஸல்) அவர்கள், பக்காவிலிருந்து தோன்றவுள்ளார் என்ற உண்மையை வேதமும் சங்கீதமும் இவ்வாறு உறுதிப்படுத்துகின்றன.

நபி(ஸல்) அவர்களின் புகழை வேதம் பின்வரும் வார்த்தைகளால் பாடுகின்றது:-

அவர் நரஷன்ஸா அல்லது புகழப்படுபவர் ஆவார் (முஹம்மது).

அவர் சமாதானத்தின் இளவரசர் அல்லது நாடு துறந்து செல்பவர் ஆவார். அவர் எதிரிகளுக்கு இடையேயும் பாதுகாப்புடன் இருப்பவர் ஆவார். (மந்திரம் 1)

அவர் ஒட்டக சவாரி செய்யும் ரிஷி ஆவார். அவருடைய ரதம் வானத்தை தொடுகின்றது. (மந்திரம் 2)

அவர் நூறு தங்க நாணயங்கள், பத்து மாலைகள், முன்னூறு குதிரைகள் மற்றும் பத்தாயிரம் பசுக்களும் அளிக்கப்பட்ட மாமாஹ் ரிஷி ஆவார். (மந்திரம் 3)

அவரும் அவரைப் பின்பற்றுபவர்களும் எப்பொழுதும் இறை வணக்கத்தைப் பற்றி மிகவும் கவனமுள்ளவர்களாக இருப்பார்கள். யுத்த களத்திலும் அவர்களின் இறைவனின் முன்பு சிரம் பணிகின்றார்கள். (மந்திரம் 4)

அவர் உலகிற்கு ஞானத்தை (திருக்குர்ஆனை) அளித்தார். (மந்திரம் 5)

அவர் உலகங்களின் அரசரும், மனிதர்களில் மிகச் சிறந்தவரும் முழு மனித இனத்திற்குமே வழி காட்டியும் ஆவார். (மந்திரம் 6)

மக்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடத்தை அவர் பெற்றுத் தந்துள்ளார்.  ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பை அளித்து உலகில் அமைதியை பரப்பியுள்ளார். (மந்திரங்கள் 7ம் 8ம்)

அவரின் ஆட்சியின் கீழ் மக்கள் சந்தோசமும் செழிப்பும் மிக்கவர்களாக வாழ்கின்றனர். சீரழிவின் ஆழத்திலிருந்து புகழின் உச்சிக்கு அவர்கள் உயர்கின்றனர் (மந்திரங்கள் 9ம் 10ம்)

எழுந்து உலகை எச்சரிக்கும்படி அவர் கேட்டுக்கொள்ளப்படுகின்றார் (மந்திரம் 11)

அவர் எல்லையற்ற கருணை மிக்கவரும் மிகவும் தாரள மனதுள்ளவரும் ஆவார் (மந்திரம் 12)

அவரைப் பின்பற்றுபவர்கள் சைத்தானின் பகமை மற்றும் கொள்ளை ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர். (மந்திரம் 13)

இறுதி மந்திரத்தில், தன்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும்படி ரிஷி அவரை பணிவாகக் வேண்டிக் கொண்டு தீங்கிலிருந்தும் கெடுதியிலிருந்தும் அவரிடம் பாதுகாவல் தேடுகின்றார்.

கூட்டணியினரின் யுத்தம் வேதத்தில் விவரிக்கப்படுகின்றது
----(கிரிபித்)

சத்தியப் பிரபுவே இந்த களிப்பூட்டும் பானங்களும், தைரியமிக்க வீரச் செயல்களும், உணர்வூட்டும் பாடல்களும் யுத்தகளத்தில் உன்னை மகிழ்வித்தன. பிரார்த்திப்பவரும் பக்தி செலுத்துபவருமான மனிதரின் பத்தாயிரம் எதிரிகளை நீ சண்டையின்றியே தோல்வியுறச் செய்த போது.

இஸ்லாமிய சரித்திரத்தில் இந்த யுத்தம் அஹ்ஸாப் யுத்தம் அல்லது அணியினரின் யுத்தம் என்று அறியப்படும், நபி(ஸல்) அவர்கள் நடத்திய பிரபல்யமான யுத்தத்தை வேதத்தின் இந்த முன்னறிவிப்பு விளக்குகின்றது. இந்த மந்திரத்திலுள்ள சொற்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில் திருக்குர்ஆனில் கொடுக்கப்பட்டிருக்கும் சரித்திர உண்மைகளை உறுதிப்படுத்துகின்றது.
இந்த மந்திரத்தில் இறைவன் சத்பதி என்று அழைக்கப்படுவது முதலாவது கவனிக்கப்பட வேண்டியதாகும். சத் என்றால் உண்மையை அல்லது உண்மையாளரை நேசிப்பதாகும். பதி என்றால் எஜமானர் அல்லது பிரபு என்பதாகும். இவ்வாறாக, சத்பதி என்றால் உண்மையாளர்களின் பிரபு என்பதாகும்.  நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் அவர்களுடைய உண்மைக்கு பெயர் போனவர்கள். 

அணிகள் யுத்தம் பற்றி குறிப்பிடும் திருக்குர்ஆனின் அத்தியாயத்திலேயே நபி(ஸல்) அவர்களின் தோழர்கள்
 {من المؤمنين رجال صدقوا ما عاهدو الله عليه}
விசுவாசிகளில் சில ஆடவர்கள் இருக்கின்றனர்: எதன் மீது அவர்கள் அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்களோ அதை உண்மையாக்கி வைத்தார்கள். (33:23) என்றும் உண்மையாளர்களுக்கு, அவர்களின் உண்மையின் காரணத்தல் அல்லாஹ் (நற்) வுலியை வழங்குவதற்காகவும்|(33:24) என்றும் அழைக்கப்படுகின்றனர். திருக்குர்ஆன் அவர்களை உண்மையாளர்கள் என்று அழைக்கின்றது வேதமும் அவர்களின் பிரபுவை உண்மையாளர்களின் பிரபு என்று அழைக்கின்றது.

இந்த மந்திரத்தில் வரும் இரண்டாவது விசயம் என்னவெனில் இறைவன் நபி(ஸல்) அவர்களுடைய தோழர்களின் வீரத்தையும் உணர்வூட்டும் பாட்டையும் கண்டு மகிழ்வுற்றான் என்பதாகும். அவர்கள் வெறும் மூவாயிரம் பேர் மிகவும் குறைவான ஆயுதங்களுடன் இருக்கும் அதே வேளையில் அவர்களின் எதிரிகள் அவர்களை விட மூன்று மடங்கு அதிகமானவர்களாகவும் நன்கு ஆயுதபலம் மிக்கவர்களாகவும் இருந்தனர். ஆனபோதிலும், நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் எவ்வித சோர்வின் அடையாளத்தையும் காட்டுவதற்குப் பதிலாக நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு நிறைவேறுவதைக் கண்டு மகிழ்ச்சியே அடைந்தனர். 

திருக்குர்ஆனின் வார்த்தைகளில் கூறுவதானால்: மேலும் விசுவாசிகள்(எதிர்ப்பு) அணியினரைக் கண்டபொழுது, இது அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்ததாகும்: அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்|| என்று கூறினார்கள். இது அவர்களுடைய விசுவாசத்தையும், வழிப்படுதலையும் தவிர(வேறதையும்) அவர்களுக்கு அதிகப்படுத்திவிடவில்லை.(33:22). 

நபி(ஸல்)அவர்களுடைய தோழர்களின் இந்த தைரியமிக்க, உணர்வூட்டும் வார்த்தைகள் அவர்களின் இறைவனை மகிழ்வித்தது அவனும் எவ்வித சண்டையுமின்றி அவர்களுக்கு வெற்றியை அளித்தான்.

நபி அஹ்மத்

மந்திரத்திலுள்ள பிரார்த்திப்பவர்| என்ற வார்த்தை இந்த மந்திரம் நபி(ஸல்) அவர்களையே குறிக்கிறது என்பதை காண்பிக்கின்றது. இந்த மந்திரத்திலுள்ள கரு என்ற சமஸ்கிருத வார்த்தை பேராசிரியர் கிரிபித் அவர்களால் துதிப்பவர்| என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது, லாகூர் டி.ஏ.வி. கல்லூரியைச் சேர்ந்த பண்டிட் ராஜாராம் இந்த வார்த்தையை துதிப்பவர்|அல்லது அஹ்மது என்று அர்த்தம் உள்ள ஷசதோதா|என்று மொழி பெயர்க்கிறார். இது அணியினர் யுத்த களத்தின் நாயகனாக இருந்த முஹம்மது(ஸல்) அவர்களின் இரண்டவாது பெயராகும்.

பத்தாயிரம் எதிரிகள்:

இதில் கவனிக்கத்தக்க விசயம் பத்தாயிரம் எதிரிகள் பற்றியதும் ஆகும். அணியினர் யுத்தத்தில் நபி(ஸல்) அவர்களின் எதிரிகள் பத்தாயிரம் பேரும் முஸ்லிம்களில் மூவாயிரம் பேரும் இருந்தனர். நபி(ஸல்) அவர்களுடைய தோழர்களின் வீரம் பற்றி இந்த மந்திரம் சிறப்பாகப் பேசுகின்றது. வர்கள் எண்ணிக்கையில் குறைவானர்களாகவும் சொற்ப ஆயுத பலம் உடையவர்களாகவும் இருந்த நேரத்திலும், நன்கு ஆயுதபலம் பொருந்திய எதிரிகளைக் கண்டபோது அவர்கள் தைரியத்தை இழக்காமலும் கவலையடையாமலும்
{هذا ما وعدنا الله ورسوله}
இதுதான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது|என்று அவர்கள் கூறினார்கள். 

அவர்களின் தைரியத்தையும் வீரத்தையும் நிரூபிப்பதற்கு இதைவிட பெரிய சான்று வேறுஎதுவும் தேவையில்லை. இந்த யுத்தம் நடப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே அதுபற்றி முன்னறிவிப்பு செய்த நபி(ஸல்) அவர்களின் உண்மைக்கான மற்றொரு அடையாளத்தை கண்ணால் காண்பது அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது.
முஸ்லீம் வீரர்களின் தைரியம் மற்றும் தீரம் பற்றியும் அவர்களின் எதிரிகளின் வலிமையும் அவர்களின் பெரும்படை பற்றியும் இந்த மந்திரத்தில்[39] குறிப்பிடப்படுகின்றது. இவ்வளவிருந்தும் அவர்கள் தோற்று பின்வாங்கியது அஹ்மது(ஸல்) அவர்களின் பிரார்த்தனையாலேயே என்றும் இந்த ந்திரம் குறிப்பிடுகின்றது. மந்திரத்தில் வரும் கடைசி வார்த்தைகளாக வரும் ஷஅபார்த்தி நி பர்ஹாயாஹ்|என்பதற்கு சண்டையின்றியே எதிரி தோல்வி அடைந்தான் என்று அர்த்தமாகும். பண்டிட் கெம் கரனும் பேராசிரியர் ராஜாராமும் இந்த வார்த்தைகளை நீ போராட்டமின்றியே அவர்களை தோல்வியுறச் செய்தாய்|என்று மொழி பெயர்த்துள்ளனர்.

எதிரிகளோடு ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையுடையவர்களாக இருந்தனர் என்பதும் எல்லா வழிகளிலும் முடங்கிப் போயிருந்தனர் என்பதும் நன்கறியப்பட்ட உண்மையாகும். இதனால் தான் மதீனாவிற்குள்ளேயே தங்களை அடைத்துக்கொண்டு எதிர்ப்பதை விரும்பினர். ஆனால் எதிரியோ. மிகப் பெரும் படையை திரட்டி வைத்திருந்தான். ஏன் மதீனாவிலுள்ள முஸ்லிம் அல்லாதவர்களும் எதிரிகளின் பக்கம் போய்விட்டிருந்தனர். இத்தகைய ஏராளமான அனுகூலங்கள் இருந்த போதிலும் எதிரி சண்டை போடாமலேயே புறமுதுகிட்டு ஓடிவிட்டான்; வெற்றி முஸ்லிம்களுடையதாயிற்று. இவை அனைத்தும் இறைவனின் உதவியாலேயே நிறைவேற்றப்பட்டது. அத்தகைய வெற்றியை உண்டாக்குவது மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டது. இந்த யுத்தம் நடப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே வேதம் இதைப் பற்றி முன்னனறிவிப்பு செய்து விட்டது.
இந்த மந்திரத்தில் குறிப்பிடப்படும் தெய்வம் இந்திரனாகும். அதே சுக்தத்தில் வரும் 1 முதல் 8வது மந்திரங்கள் வரை அவனை நோக்கியே பேசப்படுகின்றது. இந்த இந்திரன் ரிக் வேதத்தில் இடியின் அதிபதி என்றும் மின்னல் மற்றும் சூரைக்காற்றின் தேவன் என்றும் குறிப்பிடப்படுகின்றது. எதிரி இந்த யுத்தத்திலிருந்து ஓழயதன் காரணமே இழயும் சூரைக்காற்றுமேயாகும். மந்திரத்தில் வரும் இந்திரனே, பத்தாயிரம் எதிரிகளை நீ சண்டையின்றியே தோற்கடிக்கச் செய்தாய்| என்பது வெள்ளிடை மலை போல் எவ்வளவு தெளிவாக உள்ளது. வேத ரிஷியின் இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் அல் அஹ்ஸாப் யுத்தத்தைப் போன்று அத்தனை பொருத்தமாக வேறு எந்த சந்தர்ப்பத்திற்கும் பொருந்தவில்லை. எதிரி தன்னுடைய வலிமையை எண்ணிப்பார்த்து வெற்றி நமக்குத்தான் என்ற தன்னம்பிக்கையுடன் ஆரவாரத்துடனும் பகட்டுடனும் வந்தான். முஸ்லிம்களும் தங்களின் பலவீனத்தைப் பற்றி நன்கறிந்தே இருந்தனர். அவர்கள் நகரத்திற்குள்ளேயே இருந்து போராட தீர்மானித்தனர். வலிமை மிகுந்த அந்த படை விரைந்து வந்து தாக்கிடாமல் தங்களை காத்திடும் வகையில் (நகரைச் சுற்றி) ஒரு அகழ் தோண்டப்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக தெய்வத்தின் கை இயங்கியது: வலிமை மிக்க இந்திரன் இடியையும் புயல் காற்றையும் உண்டாக்கி எதிரிகளை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பியோடச் செய்தான்.

சுருக்கமாக, வேதத்தின் இந்த முன்னறிவிப்பு பின்வரும் பத்து உண்மைகளை விவரிக்கின்றது:-

1.             அது ஒரு யுத்தத்தை விவரிக்கின்றது
2.             இறைவன் உண்மை விசுவாசிகளுக்கு வெற்றியை அளிப்பான்.
3.             உண்மை விசுவாசிகள் தைரியத்தையும் வீர உணர்வையும் ஊட்டும் வார்த்தைகளை கூறுவார்கள்.
4.             அவர்களின் தைரியம் காரணமாக இறைவன் மகிழ்ச்சி கொள்வான்.
5.             இந்த யுத்தத்தின் தளபதி இறைவனை துதிப்பவராவார்.(அஹ்மத்)
6.             எதிரிகள் எண்ணிக்கையில் பத்தாயிரம் இருப்பர்.
7.             திருக்குர்ஆன் கூறுவது போன்று
{وكفى الله المؤمنين القتال وكان الله عزيزا حكيما}
(அகழ்) யுத்தத்தில் விசுவாசிகளுக்கு (வெற்றியளிக்க) அல்லாஹ் போதுமானவனாகவே இருந்தான். மேலும் அல்லாஹ் (யாவரையும் விட) மிக்க பலமிக்கவானாக,(யாவரையும்) மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.(33:25) உண்மையான சண்டை எதுவும் நிகழாது.
8.             திருக்குர்ஆனின் வார்த்தைகளான قويا عزيزاً பலம் மிக்க, மிகைத்த என்பது இந்திரன் என்பதன் அதே அர்த்தமாகும்.
மிகப்பெரும்புயல்காற்றின் வழியாக தெய்வத்தின் கை வெளிப்பட்டது.திருக்குர்ஆனின் வார்த்தைகளில்: விசுவாசங்கொண்டேரே, உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப்பாருங்கள். உங்கள் மீது (எதிரிகளின்) படைகள் வந்த சமயத்தில்(புயற்) காற்றையும், நீங்கள் பார்க்காத படைகளையும் அவர்கள் மீது நாம் அனுப்பி வைத்தோம். மேலும் நீங்கள் செய்யக்கூடியவைகளை அல்லாஹ் பார்க்கக்கூடியவனாகவே இருக்கின்றான்.(33:9). புயலும் மழையும் எதிரியின் கொட்டாரத்தை இரக்கமற்று தாக்கின. பெருங்காற்று புயலாக மாறியது. தீ அணைந்தது. கூடாரங்கள் சிதரடிக்கப்பட்டன, சமையல் பாத்திரங்களும் மற்ற உபகரணங்களும் தூக்கி அடிக்கப்பட்டன. இவ்வாறாக, எதிரிகள் யுத்தகளத்தை முஸ்லிம்களுக்கு விட்டு விட்டு புறமுதுகிட்டு ஓடி நபி முஹம்மது(ஸல்) அவர்களின் தெய்வீக தூதுத்துவத்தின் உண்மையை நிலை நாட்டினர்.

நபி(ஸல்) அவர்கள் மற்றொரு யுத்தம் செய்கின்றனர்
அதர்வ வேதத்தில் அல் அஹ்ஸாப் யுத்தத்தைப் பற்றி பேசுகின்ற மந்திரத்தை தொடர்ந்து வரும் 7 முதல் 11 வரையிலான மந்திரங்கள் சிந்தனைக்குரியவைகளாகும். இந்த யுத்தத்தின் போது இஸ்லாத்தின் எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்தனர். யூதர்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர். அதன் பிரகாரம் எதிரி மதீனாவை முற்றுகையிட்ட போது அவர்கள் அத்தாக்குதலை எதிர்க்க கடமைப்பட்டிருந்தனர். இதற்கு நேர்மாறாக, அவர்கள் முற்றுகையிடும் படைகளுக்கு ஆதரவாக முஸ்லிம்களை உள்ளுக்குள்ளிருந்தே தாக்க குரைஷிகளுடன் ஒப்பந்தம் செய்தனர். இவ்வாறாக கூட்டாளிகளே எதிரிகளாக மாறினர். ஆகவே, முற்றுகையிட்டிருந்த அணியினரின் படைகள் புறமுதுகிட்டு ஓடிய பிறகு, யூதர்களும் தங்களின் கோட்டைக்கு திரும்பிய பிறகு, யூதர்களின் கோட்டை நபி(ஸல்) அவர்களால் முற்றுகையிடப்பட்டது. இந்த முற்றுகை நாற்பத்தைந்து நாட்களுக்கு தொடர்ந்தது. அணியினர் யுத்தம் பற்றிக் குறிப்பிடும் மந்திரங்களில் கோட்டைகள் பற்றிய குறிப்பு எதுவுமில்லை.  ஆனால் இங்கே.
நீர் துணிவுடன் உம்முடைய வலிமையால் ஒரு யுத்தத்திலிருந்து மறு யுத்தத்திற்கு ஒவ்வொரு கோட்டையாக அழித்துக் கொண்டு செல்கின்றீர்.இந்திரனே, எதிரிகளை தலை வணங்கச்செய்யும் உன்னுடைய நண்பருடன் சேர்ந்து தூரத்திலிருந்தே கபட நமூச்சியை கொன்றாய்.ஜ40ஸ (கிரிபித்).

நீர் வீரத்துடன் ஒரு யுத்தத்திலிருந்து மற்றொரு யுத்தத்திற்கு செல்கின்றீர்.உம்முடைய வலிமையினாலும் வீரத்தினாலும் கோட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக அழிக்கின்றீர்.  இந்திரனே, இறைவனை வணங்கும் உன்னுடைய நண்பருடன் சேர்ந்து வஞ்சக, துரோக நமூச்சியை தூரத்திலிருந்து கொன்றாய்.(ஹிந்து விரிவுரையாளர்கள்) அதர்வ வேதம் 22:21,7.

நபி(ஸல்) அவர்கள் ஒரு யுத்தத்தை முடித்திருந்த அதே நேரத்திலேயே மறுயுத்தம் செய்ய வேண்டப்பட்டார். இது அவருடைய மற்றும் அவருடைய தோழர்களின் வீரத்திற்கு தெளிவான அடையாளமாகும்.முதல் யுத்தத்தில் அவர்கள் எந்த கோட்டையையும் அழிக்க வேண்டியதிருந்ததில்லை. ஆனால் மற்றொன்றிலோ,அவர்கள் கோட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக வீழ்த்தி எதிரிகளின் உள்ளத்தில் அச்சத்தை ஏற்படுத்தினார்கள். திருக்குர்ஆனின் வார்த்தைகளில்: தங்களின் கோட்டையிலிருந்து அவர்களுக்கு ஆதரவளித்த வேதம் கொடுக்கப்பட்ட அவர்களை அவன் துரத்தியடித்து அவர்களின் உள்ளத்தில் திகிலை ஏற்படுத்தினான். அவர்களில் சிலரை நீங்கள் கொன்றீர்கள் மற்றும் சிலரை கைதியாகப் பிடித்தீர்கள்.

இந்த சுக்தத்தின் 6வது மந்திரம் அல் அஹ்ஸாப் யுத்தத்திற்கு சரியாக பொருந்துவது போன்று, தொடர்ந்து வரும் மந்திரத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்களும் அதேபோன்று நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் ஒத்திருக்கின்றது. அது மேற்குறிப்பிட்ட யுத்தத்திற்கு பிறகுள்ள காலத்தோடு தொடர்புள்ளது.அதனால்தான் ஒரு யுத்தத்திலிருந்து மறுயுத்தத்திற்கு செல்பவராக நபி(ஸல்) அவர்கள் வருணிக்கப்படுகின்றார்கள். முஸ்லிம்களின் இந்த விடா முயற்சியானது சந்தேகத்திற்கிடமின்றி அவர்களின் வீரம் மற்றும் அங்சாமை ஆகியவற்றிற்கு அடையாமாக விளங்கியது. நபி(ஸல்) அவர்கள் குரைஸா, கைனூகா, நதீர் ஆகிய கோட்டைகளை வீழ்த்தினார்கள். மந்திரத்தில் வரும், நம்யா யத் இந்திரா சக்யா (இந்திரனே, இறைவனை வணங்கும் உன்னுடைய நண்பருடன்) என்ற சொற்கள் எப்பொழுதும் இறைவனை வணங்கிக் கொண்டிருந்த நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு மிக அழகாக பொருந்துகின்றது.  இந்த மந்திரத்தில் நபி(ஸல்) அவர்களின் எதிரிகள் தூரத்தில் பதுங்கி இருப்பவர்கள் என்றோ அல்லது இறைவனால் ஓதுக்கப்பட்டவர்கள் என்றோ அழைக்கப்படுகின்றனர். இந்த மக்கள் இறைவனால் ஒதுக்கப்பட்டவர்கள் என்று கூறி பைபிளும் இதற்கு சான்று பகர்கின்றது.ஜ41ஸ மேலும் முஸ்லிம்களின் எதிரிகளான யூதர்கள் இந்த மந்திரத்தில் கபடமும் சூதும் நிறைந்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் முஸ்லிம்களின் கூட்டாளிகளாக இருந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த நிபந்தனைகளின்படி மதீனாவைத் தாக்கும் எதிரியுடன் யுத்தம் செய்ய கடமைப்பட்டிருந்தனர்.  ஆனால், கடைசி நேரத்தில் தங்களின் கூட்டாளிகளை துறந்து ஓடி தாங்கள் காட்டிக்கொடுக்கும் சூது மதி படைத்தவர்கள் என்பதை நிரூபித்தனர். மாயினன் என்ற சமஸ்கிருத வார்த்தை மாயா என்ற மூலத்திலிருந்த வந்ததாகும். அதற்கு மேலோட்டமாக அழகான தோன்றும் ஆனால் எந்த வித மதிப்புமற்ற ஒன்றையே குறிக்கும். பைபிளும் இந்த மக்களை ____________________________________ என்று அழைக்கின்றது.

வேதம் இவர்களை நமூச்சி என்று அழைக்கிறது. இந்த வார்த்தைக்கு பானினியின் இலக்கணத்தில் கொடுக்கப்பட்டுள்ள அர்த்தம்|மழையைத் தடுத்து நிறுத்துபவன்|என்பதாகும். இந்த வார்த்தையின் மற்றொரு அர்த்தம் தண்டிக்கப்பட வேண்டியவன்| என்பதாகும். அவர்களுக்கு மாத்திரமே இறைவனின் வேதம் வருகின்றது என்றும் மழை அல்லது வேத வெளிப்பாடு வேறு எந்த மக்களின் மீதும் பொழியவில்லை என்றும் யூதர்கள் வாதித்தனர். வலிமையின் தேவனாகிய இந்திரன் இந்த மக்களை கொன்று இறைவேத வெளிப்பாட்டை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை காண்பித்தான். இது யூதர்களுக்கோ அல்லது ஆர்யர்களுக்கோ மாத்திரம் உள்ளதல்ல ஆனால் அது இறைவனின் அருட்கொடையாகும். தான் விரும்பிய எவருக்கும் அதை அவன் அளிக்கிறான்.

நாம் சொன்னது போல் இந்த வார்த்தை |தண்டிக்கப்பட வேண்டியவன்|என்றும் பொருள்படுகின்றது. தாங்கள் செய்த தீமைகளுக்காக மாத்திரம் ய{தர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களல்ல மனித இனத்தின் நலன் விரும்பியான நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அவர்கள் செய்த ஏமாற்று மற்றும் துரோகம் காரணமாகவும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர். அதற்கிணங்க, அவர்கள் தங்களின் துரோகம் காரணமாக தண்டிக்கப்பட்டனர், மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த தண்டனை அவர்களின் சொந்த தலைவர்களில் ஒருவராலேயே தீர்ப்பு வுறப்பட்டது. ஆகவே நமூச்சி என்ற வார்த்தை யூதர்களுக்கு மிகவும் சரியாகப் பொருந்துகின்றது.

ரிக் வேதத்திலும் மற்ற வேதங்களிலும் நமூச்சி என்ற வார்த்தை மழையை வருஷிக்கும் மேகங்களை தடுக்கும் தீயஆவி என்றும் பொருள்படுகின்றது. அப்பொழுது இந்திரன், இந்த தீய ஆவியை கொன்று மேகங்களை விடுவிக்கின்றான். இறை வேத வெளிப்பாடு தங்களுக்கு மாத்திரம் வந்ததாகவே ஏறக்குறைய உலகிலுள்ள அனைத்து சமுதாயங்களும் வாதித்து சுவர்க்க மழை மேகங்களை தங்களுக்குள் அடக்கிக்கொண்டன. ஆனால் ஆத்மீக மழை எல்லா சமுதாயத்தின் மேலும் பொழிந்து கொண்டிருந்தது: அது ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ அல்லது இனத்திற்கோ உட்பட்டதல்ல என்பதை நமூச்சியை கொன்றொழித்ததன் மூலம் அறிவித்த இஸ்லாத்தின் நபி(ஸல்) அவர்களுக்கு இந்த உலகம் என்றும் தீர்க்க முடியாத நன்றிக் கடன்பட்டுள்ளது. 

திருக்குர்ஆன் கூறுவதாவது:
{والله أنزل من السمآء مآء فاحيا به الارض بعد موتها  إن في ذلك لآية لقوم يسمعون}
அல்லாஹ் வானத்திலிருந்து மழையைப் இறக்கி வைத்து அதன் மூலம் இறந்த பூமியை உயிர்ப்பிக்கின்றான்.நிச்சயமாக கேட்டு உணரும் மக்களுக்கு இதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன.(16:65). வானத்திலிருந்து மழையை இறக்கி வைத்து|| என்பது வேத வெளிப்பாட்டையே தெளிவாக உணர்த்துகின்றது. மழை பூமிக்கு பௌதீக உயிரை அளிப்பது போன்று, மக்கள் தங்களின் தீமைகளால்(ஆத்மீக) இறப்பிற்குள்ளாகி விட்ட பிறகு இறைவேத வெளிப்பாடு ஆத்மீக உயிரை அளிக்கின்றது. இவ்வாறாக, நபி(ஸல்) அவர்கள், தீயஆவியாகிய நமூச்சியை ஒழித்து கட்டி விட்டதால், அவர்களின் உலகளாவிய தூது உலகின் அனைத்து சமுதாயங்களுக்கும் உயிரை கொடுக்கிறது.[42]
மக்கா வெற்றியின் போது எதிரிகளின் தோல்வி
நபி(ஸல்) அவர்களின் யுத்தங்கள் பற்றிய முன்னறிவிப்புக்கள் மக்கா வெற்றியினை முன்னறிவிப்பு செய்வதோடு முடிந்து விடுகின்றன. 

அதர்வண வேதத்தின் அதே சுக்தாவில் நாம் காண்பதாவது :-

மிகவும் பிரபல்யமான இந்திரனே! தங்களின் அறுபதாயிரத்து ஒன்பது ஆட்களுடன் ஆயுதம் தரித்தவர்களாக நண்பர்களற்ற சுஷ்ரவர்களுடன் யுத்தம் செய்ய வந்த இருபது அரசர்களை நீ மற்றவைகளை புறந்தள்ளும் ரத சக்கரங்களைக் கொண்டு வெற்றி கொண்டாய். (கிரிபித்)

புகழப்பெற்ற அல்லது எங்கெங்கும் பிரபல்யமாய(முஹம்மது) அநாதையிடம் யுத்தம் செய்ய வந்த இருபது அரசர்களையும் அறுபதாயிரத்து ஒன்பது ஆட்களையும், மற்றவைகளை புறந்தள்ளும் ரத சக்கரங்களைக் கொண்டு இந்திரனே, நீ தோற்கடித்து விட்டாய். (ஹிந்து விரிவுரையாளர்கள்)

நபி(ஸல்) அவர்கள் தோன்றிய காலத்தில் மக்காவின் ஜனத்தொகை சுமார் அறுபதாயிரமாக இருந்தது என்பதை முன்னுள்ள பக்கங்களில் நாம் ஏற்கனவே கூறியுள்ளோம். அந்தநேரத்தில் மக்கா ஒரு வகையான ஜனநாயக ஆட்சியைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு தலைவர் இருந்தார். சுமார் இருபது தலைவர்கள் மக்களை ஆண்டு வந்தனர். அதில் குரைஷிகள் உயர்ந்த தலைவர்களாகவும் கஃபாவின் காவலர்களாகவும் இருந்தனர். இவ்வாறாக, ஒருபுறம் இருபது தலைவர்களின்[43] கீழ் அறுபதாயிரம் மக்களும் மறுபுறம் ஒரு அபந்து|அதாவது ஆதரவற்ற மனிதரும் இருந்தனர். இந்த ஒரு மனிதர்(முஹம்மது) பிரபல்யமானவரும் மக்களால் புகழப்பட்டவரும் ஆவார். அது இரு அரசர்களுக்கிடையே நடந்த யுத்தமல்ல ஆனால் ஒரே ஒரு ஆளுக்கும் எதிரிகளின் படைக்கும் நடந்த யுத்தமாகும்.  அந்த ஆதரவற்ற மனிதர் எவ்வாறு எதிரிகளை வெற்றி கொண்டார் என்பதையும் எவ்விதம் இறைவனின் கரம் மற்றவர்களை புறந்தள்ளும் ரதம் போன்று அவரின் எதிரிகளை தோற்கடித்தது என்பதையும் உலகம் கண்டு விட்டது. இந்த ஒரே ஒரு உண்மையே முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் உண்மையான நபி ஆவார்கள் என்பதையும் இறைவனின் கரம் எப்பொழுதும் அவர்களுக்கு பக்கபலமாக இருந்தது என்பதையும் அந்த இறைவனின் கரம் மிகக் குறுகிய காலத்திலேயே அவரை அநாதரவான நிலையிலிருந்து அதிகாரம் மகிமை ஆகிய உச்சிக்கு உயர்த்தியது என்பதையும் நிரூபிக்க போதுமானதாகும்.
அதே முன்னறிவிப்பு சாவ்ய ரிஷியின் மகனாகிய அங்ரிஸ் ரிஷியின் முன்னறிவிப்பாக ரிக் வேதத்திலும் காணப்படுகின்றது. (1:53,9). ஸஷ்ரவா என்ற சொல்லிற்கு புகழுக்குரிய அல்லது நன்கு புகழப்பட்ட என்று அர்த்தமாகும். இது நபி(ஸல்) அவர்களின் பெயரான முஹம்மது என்ற பெயருக்கு சரி சமமான அர்த்தமுள்ளதாகும்.

முஹம்மதுவும் அவருடைய பத்தாயிரம் தோழர்களும்
வண்டியையுடையவர், உண்மையாளர், உண்மையை நேசிப்பவர், மிகவும் ஞானம் மிக்கவர், சக்தி மிகுந்தவர், தாரளமிக்கவருமான மாமஹ் ரிஷி அவருடைய வார்த்தைகளைக் கொண்டு எனக்கு அருள் புரிந்துள்ளார். எல்லாம் வல்ல இறைவனின் புதல்வன்[44] எல்லா நற் குணங்களையும் கொண்ட, உலகிற்கு அருட் கொடையாய் உதித்த அவர் பத்தாயிரம் (தோழர்களுடன்) புகழ் மிக்கவராய் விட்டார்.

இந்த முன்னறிவிப்பின் ஒவ்வொரு வார்த்தையும் நபி முஹம்மது(ஸல்) அவர்களின் உண்மையைப் பற்றிப் பேசுகின்றது.  அவர் உண்மையாளராகவும் உண்மையை நேசிப்பவராகவும் இருந்தார். அவரின் குழந்தைப்பருவத்திலிருந்தே அவர் தன்னுடைய நேர்மைக்கும் உண்மைக்கும் பெயர் போனவராக இருந்தார். மக்கள் அவரை அல்-அமீன் நம்பிக்கைக்குரிய அல்லது உண்மையாளர் என்று அழைத்தனர். முஹம்மது அவர்கள் தன்னை நபி என கூறுகின்றார் என்று அபூபக்கர்(ரலி) கேட்டவுடனேயே அவர் அதன் மீது நம்பிக்கை கொண்டார். ஏனெனில் முஹம்மது(ஸல்) அவர்கள் எக்காலத்திலும் பொய்யுரைத்ததில்லை என்பதை அவர் நன்கறிவார். அதைப் போன்றே, நபி(ஸல்) அவர்களின் உன்னத ஞானத்தை பறை சாற்றும் பல சம்பவங்கள் சரித்திர புத்தகங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருந்தார் எந்த அளவிற்கெனில் அல் அஹ்ஸாப் யுத்தத்தின் போது எவரும் உடைக்க முடியாத பாறையை தன்னுடைய சுத்தியலால் ஒரே அடியில் நொறுக்கினார். தனக்கென்று எதையும் வைக்காமல் தன்னிடமுள்ள அனைத்தையும் பிறருக்கு அளிக்குமளவிற்கு அவர் தாராளத்தன்மை வாய்ந்தவர். எந்த செல்வமும், யுத்தப் பொருட்களும் வந்தாலும், நபியவர்கள் தனக்கென்று எதையும் வைக்காமல், சமுதாயத்திற்கு பகிர்ந்தளித்தார். மேலும் உலகின் அருட்கொடை என்பது நபி(ஸல்) அவர்களுக்கேயுரிய சிறப்பான குணமாகும். அது போன்றே, தன்னுடைய பத்தாயிரம் தோழர்களுடன் புகழ் பெற்ற ஒரே நபியும் அவரேயாவார்.

இந்த குணங்கஇளல்லாம் நபி(ஸல்) அவர்களுக்கு மிகச் சரியாகப் பொருந்துகின்றன. ஆனால் முதல் குணமான வண்டியையுடையவர் என்பது பற்றி சிறிது விளக்கமளிக்க வேண்டியதுள்ளது.  உண்மையில் நபி(ஸல்) அவர்களுக்கு இந்த குணம் இருந்ததில்லை. ஆனால் இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை நாம் உணர்ந்தோமாகில், இதுவும் நபி(ஸல்) அவர்களுக்கு பொருந்துகின்றது என்பதை நாம் கண்டு கொள்ளலாம். அனஸ்வந்தா|வண்டியையுடையவர் என்ற வார்த்தை ஹிந்து மத வேதங்களில் பல சந்தர்ப்பங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.உதாரணமாக,இந்திரன் வண்டியில் சவாரி செய்கிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் அவன், அடிவான வண்டியை உடைப்பதாக சொல்லப்படுகின்றது.  அது போலவே சூரியன் குதிரைகளால் இழுக்கப்படும் வண்டியை ஓட்டுவதாகவும் சொல்லப்படுகின்றது. அதனுடைய பெண்கள் வண்டியில் பிறந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இந்த வார்த்தை ஒரு உருவமாகவே வுறப்பட்டுள்ளது என்பதை மேற்கண்ட மேற்கோள்கள் தெளிவுபடுத்துகின்றன். சுவாமி தயானந்த கூறியிருப்பது போன்று அது வண்டிகள் என்ற நேர் அர்த்தத்தை குறிக்கவில்லை, ஆனால் அது உயர்ந்த, மேன்மை தங்கிய, கண்ணியமிக்க என்பதையே குறிக்கின்றது.இவ்வாறாக, வண்டியை உடையவர் என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை நாம் விளங்கிக் கொண்டால் இதுவும் நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு தெளிவாகப் பொருந்துகின்றதை நாம் காணலாம்.

முஸ்லிம்களின் கஃபா

கஃபாவைப் புகழும் நீண்ட சுக்தம் அதர்வண வேதத்தில் உள்ளது. இந்த முன்னறிவிப்பை தெளிவாக புரிந்து கொள்வதற்கு கீழ்வரும் மூன்று விசயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த மந்திரத்திற்கு புருஷ் மேதா என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் மனித பலி| என்பதாகும். முற்காலத்தில் மிகப் பெரும்மனிதர்  ஒருவர் பலி கொடுக்கப்பட்டார். அதை நினைவு கூறும் பொருட்டே பலி கொடுக்கும் வைபவங்களில் இந்த மந்திரங்கள் ஓதப்படுகின்றன.

இந்த மந்திரங்களில் கூறப்படும் அதர்வ ரிஷி என்பவர் நபி இஸ்மாயில்(அலை) அவர்கள் ஆவார்கள்.  ஆப்ரஹாம் அவர்கள் பற்றிய முன்னறிவிப்பில் இதை நாம் விளக்கியுள்ளோம். நம்முடைய ஆராய்ச்சியின் பிரகாரம், ஆப்ரஹாம், ப்ரஹ்மாஜி ஆகியவைகள் ஒரே ஆளுடைய இரண்டு பெயர்கள் என்பதாகும்.[45] அவருடைய மூத்த மகன் அதர்வ அல்லது இஸ்மாயில் என்று அறியப்பட்டார்; இளைய மகன் அங்கீரா அல்லது இஸ்ஹாக் என்று பெயரிடப்பட்டார்.
இஸ்மாயிலுடைய பலியை இந்த மந்திரம் குறிக்கின்றது. இது உண்மையில் தந்தை மகன் ஆகிய இருவருமே தங்களை பலி கொடுப்பது போன்றதேயாகும். தன்னுடைய வயதான காலத்தில் கிடைத்த இந்த மகன்தான் ஆப்ரஹாம்(அலை) அவர்களின் ஒரே நம்பிக்கையாகும். இரண்டாம் மகன் அதுவரை பிறந்திடவில்லை. இவ்வாறு இருந்த போதிலும், தன் மகனை பலி கொடுப்பதாக கனவு கண்டதால் அதை நிறைவேற்ற முடிவு செய்கின்றார்.  ஆகவே, இது அவருடைய மகனுடைய தியாகத்தைப் போன்றே, அவருடைய பெரும் தியாகமுமாகும். 
இந்த விபரங்களை மனதில் கொண்டு சிந்தித்தால் மந்திரத்தின் அர்த்தங்கள் தெளிவாக தெரிய வரும்.
இஸ்மாயில் பலியிடப்படுதல்
{فلمآ اسلما وتله للجبين ونادينه أن يا ابراهيم قد صدقت الرويا انا كذلك نجزي المحسنين}
ஆகவே அவ்விருவரும் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) முற்றிலும் கீழ்படிந்து (இப்ராஹீமாகிய) அவர் (இஸ்மாயீலாகிய) அவரை (அறுத்துப் பலியிட) முகங்குப்புற கிடத்தியபோதுஇ (அச்சமயம்) நாம் அவரை  இப்ராஹீமே|| என அழைத்தோம்.  நிச்சயமாக நீர் (உம்முடைய) கனவை உண்மையாக்கி வைத்து விட்டீர். நிச்சயமாக, நன்மை செய்கிறவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம். (37: 103-105)

அதர்வண வேதத்தில் நாம் காண்பதாவது:-
அதர்வா அவருடைய இதயத்தையும் தலையையும் தைத்தான். அவருடைய நெற்றியில் பக்தி ஓடிக்கொண்டிருந்தது.
தன்னுடைய மகனை பலி கொடுப்பதாக நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் கனவில் கண்டார்கள். இது பற்றி கருத்து மகனுடைய கருத்தைக் கேட்டபோது மகன்: என் தந்தையே உமக்கு நீர் கட்டளையிடப்பட்டதை நிறைவேற்றுவீராக.  இறைவன் நாடினால் என்னை பொறுமையாளர்களில் உள்ளவனாக காண்பீர் என்று கூறினார். இவ்வாறாக, தன்னுடைய தந்தையின் வேண்டுகோளுக்கு இஸ்மாயில் மகிழ்வுடன் பணிந்தார். இதைத்தான் வேதமும், அதர்வா அல்லது இஸ்மாயில் தன்னுடைய தலையையும்  இதயத்தையும் தைத்தான் என்று கூறுகின்றது வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் தன்னுடைய தலையை கீழே வைப்பதற்கு சம்மதித்தார்.

தொடர்ந்து வரும் மந்திரத்தில் கூறப்படுவதாவது: அதர்வாவின் தலை இருக்குமிடம் தெய்வங்கள் வாழுமிடமாகும். அது எல்லா பக்கங்களிலிருந்தும் மூடப்பட்டுள்ளது.  ஆவிகள், தலை, இதயம் மற்றும் பொருட்கள் அதனைக் காக்கின்றன.||  இப்ராஹீம் தன்னுடைய மகனை பலி கொடுத்த இடம் வானவர்களும் புனித ஆவிகளும் உள்ள இடமாகும். அது நன்கு சூழப்பட்டதும் காக்கப்பட்டதுமாகும், எந்த எதிரியும் அதை வெற்றி கொண்டிட இயலாது.இந்த மந்திரத்தில் வரும் புரணாஹ் என்ற வார்த்தை வானவர்களையும், தலை என்பது இஸ்மாயிலையும், இதயம் என்பது இப்ராஹீமையும் குறிக்கும். இந்த தனித்தன்மை வாய்ந்த தன்மைகள் முஸ்லிம்களின் கஃபாவில் மாத்திரம்தான் காணப்படுகிறதேயல்லாமல் வேறு எந்த மத புனித ஸ்தலங்களிலும் காணப்படவில்லை. கஃபா வானவர்கள் வாழும் இடமாகும் அது எதிரிகளிடமிருந்து காக்கப்பட்ட இடமாகும். வானவர்களும் இறைவனும் அதனைக் காப்பவர்களாக இருப்பதால் எந்த எதிரிப்படையும் அதை வெல்ல முடியவில்லை.

கஃபா பற்றிய மேலும் சில வருணனைகள்

உயரமாக கட்டப்பட்டிருக்கின்றதோ இல்லையோ, அதனுடைய சுவர்கள் நேர் கோட்டில் இருக்கின்றனவோ இல்லையோ ஆனால் அதனுடைய ஒவ்வொரு மூலையிலும் இறைவன் காணப்படுகின்றார். இறைவனுடைய இல்லத்தை அறிபவர் அங்கே இறைவன் நினைவு கூறப்படுவதால் அதை அறிந்து கொள்கின்றார்.

கஃபா அழகானதோ அல்லது அலங்காரம் செய்யப்பட்ட கட்டிடமோ அல்ல. ஏன் அது முறைப்படியோ அல்லது சரியாகவோ கட்டப்பட்டது கூட இல்லை. அதனுடைய சுவர்கள் ஒன்றுக்கொன்று இணையானது இல்லை. ஒரு சுவரினுடைய நீளம் 26 அடி இருக்குமானால் மற்றொரு சுவரின் நீளம் 25 அடி இருக்கும். அது போன்றே ஒரு பக்கத்திலுள்ள அகலம் 22 அடி இருக்குமானால் மறு பக்கத்திலுள்ள அகலம் 20 அடி இருக்கும். அது தங்கத்தாலோ அல்லது வெள்ளியாலோ கட்டப்பட்ட கோயில் அல்ல ஆனால் செங்கல்களால் கட்டப்பட்ட மிகச் சாதாரணமான கட்டிடமாகும். இருந்தபோதிலும் பல மில்லியன் கணக்கான மக்கள் அதை புனிதமானதாக கருதுகின்றார்கள்:  அந்த ஆலயத்தின் ஒவ்வொரு நுனியிலும் இறைவனுடைய வெளிப்பாட்டையும் அவனுடைய அளவற்ற அருளையும் காண்கின்றனர். இறைவன் எப்பொழுதும் இங்கே நினைவு கூறப்பட்டுக் கொண்டிருக்கிறான். கஃபாவிற்கு செல்லும் ஒருவர் இறைவனுக்கு எவ்வளவு நெருக்கமாகிவிட்டோம் என்பதை உணர்கின்றார். அந்த ஆலயத்தை வேதம் நேரான சுவர்களற்ற கட்டிடம் என்றும் ஆனால் இறைவன் காணப்படும் புகழப்படும் ஒரு இடம் என்றும் மிகவும் சரியாக வருணிக்கின்றது.

அடுத்த மந்திரத்தில் நாம் காண்பதாவது:

உயிர்நிரம்பிய இந்த இறைவனுடைய புனித இல்லத்தை அறிபவர் எவரோ அவருக்கு இறைவனும் பிரஹ்மனும் (இறைத்தூதர்) ஞானத்தையும், வாழ்வையும், குழந்தை செல்வங்களையும் அளிக்கின்றனர்.

முஸ்லிம்களின் கஃபா ஆத்மீக வாழ்வு நிரம்பியதாகவுள்ளது. அது ஆத்மீகத்தின் ஊற்றாகும். இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு மிகவும் உன்னதமான சந்ததி குறித்தும் எண்ணற்ற சந்ததிகள் குறித்தும் நற்செய்தி அளிக்கப்பட்டதாக மோஸேயின் தோராவில் எழுதப்பட்டுள்ளது. இன்றும் கூட இப்ராஹீம்(அலை) அவர்களைப் பின்பற்றுபவர்கள் மற்ற எந்த சமுதாயத்தையும் விட அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதைத்தான் வேத மந்திரமும் இவ்வாறு சொல்கின்றது: எவர் இறை இல்லமான முஸ்லிம்களின் கஃபாவுடன் தன்னை இணைத்துக் கொள்கின்றாரோ, அவருக்கும் ஞானமும்,வாழ்வும் மிகப் பெரும் சந்ததியும் வழங்கப்படும்.

பின்வரும் மந்திரமும் அதே கருத்தைக் கூறுகின்றது:-
எவர் இந்த புனித இல்லத்தை அறிகின்றாரோ அவரை விட்டு ஆத்மிகமும் ஞானமும் வயதாகும் முன்பு வரை போவதில்லை. ஏனெனில் இறைவன் இந்த இல்லத்தில் நினைவு  கூறப்படுகின்றான்.|ஒருமுறை ஒருவருக்கு ஆழ்ந்தஞானம் கொடுக்கப்பட்டு புனித நபிமார்களின் அடிச்சுவடுகளில் அவன் நடக்கத் தொடங்கியவுடனேயே அவனுடைய ஆத்மீக ஞானம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. உள்ளுணர்வும் இறைவனின் வழிகாட்டுதலும் அவனை விட்டு எடுக்கப்படுவதில்லை.

கஃபா பற்றிய வருணனை

வானவர்கள் தங்குமிடமான அந்த ஆலயம் எட்டு சுற்றுக்களையும் ஒன்பது வாயில்களையும் கொண்டதாகும்.அது வெல்லப்பட முடியாததாகும், அதில் நிலையான வாழ்வு உள்ளது. அது தெய்வ ஒளியால் ஜொலிக்கின்றது. இவ்வாறாக, கஃபாவின் உண்மையான அமைப்பை வேதம் கொடுத்துள்ளது.
இறை இல்லம், உண்மையில், ஒன்பது வாயில்களை உடையது.  அவைகள் : (1) باب ابراهيم (2) باب الوداع (3) باب الصفا (4) باب علي (5) باب عباص (6) باب النبي (7) باب السلام (8) باب الزيارة (9) باب حرة சுற்றியுள்ள மலைகளுக்கிடைய உள்ள இடங்களை சூழ்ந்திருக்கும் இயற்கையான கோடுகளே எட்டு சுற்றுக்களாகும், அவைகள் : (1) جبل خليج (2) جبل قيقعان (3) جبل هندي  (4) جبل لعلع (5) جبل كدا (6) جبل ابو حديدة (7) جبل ابي قبيس (8) جبل عمر  மேலும் கஃபா வானவர்கள் வசிக்கும் இடமாகும். எப்பொழுதும் எவராலும் வெல்லப்பட முடியாமால் தொடர்ந்திருந்திக்கும் இடமாகும்.

மூன்று தூண்களாலும், மூன்று மர உத்தரத்தாலும் கட்டப்பட்ட(இறை) இல்லத்தில் வணக்கத்திற்குரிய உயர்ந்த ஆவி உள்ளது. அது நிலையான பெரு வாழ்வின் மையமாகும். இறை பக்தியுள்ளவர்கள் இதை நன்கு அறிவர்.

கஃபாவில் எந்தவிதமான சிலையோ அல்லது வணங்கப்படும் எந்த சடப்பொருளுமோ கிடையாது.  மூன்று தூண்களாலும் அதற்கு மேலுள்ள மர உத்திரத்தாலும் நிலை நிற்கும் அது ஒரு சாதாரண இல்லமாகும்.  இருந்த போதிலும், அதுதான் நிலையான பெரு வாழ்வின் மையமும் ஆத்மீக சுரங்கமும் ஆகும். ஆழ்ந்த ஞானம் கொண்ட இறை பக்தியாளர்கள் மிகவும் உன்னதமான ஆவியை காணவும் உணரவும் செய்கின்றனர்.

வானத்து பேரொளியால் ஜொலிக்க வைக்கப்படுகின்ற, இறைவனின் அருட்கொடை சூழ்ந்த இந்த வீட்டில் பிரஹ்மா அல்லது ஆப்ரஹாம் தங்கினார். அதுதான் மக்களுக்கு (ஆத்மீக) வாழ்வை அளிக்கக்கூடியதும் வெல்லப்படமுடியாததுமாகும்.

அதர்வண வேதத்திலுள்ள இந்த மந்திரங்கள் கஃபாவைப் பற்றி விளக்கி இந்த புனித ஸ்தலத்தை புகழ்கின்றன. அதனுடைய ஒவ்வொரு மந்திரமும் புதிய பண்புகளை கொடுக்கின்றன. அவைகள் இந்த இறை இல்லத்தின் தனித்தன்மை வாய்ந்த உண்மையான குணங்களாகும். அனைத்தையும் சுருக்கிச் சொல்வதனால், மிகப் பெரும் தியாகத்தை நினைவு கூறும் ஞாபகச்சின்னமே கஃபாவாகும்.  எப்பொழுதும் யாருடைய ஆளுகையின் கீழ் இல்லாததும், அதில் வசிப்பவர்கள் அபரிதமான உணவைப் பெறுபவர்களாகவும், அதனுடைய சுவர்கள் நேராக கட்டப்படாததும், ஆத்மீக வாழ்வு நிரம்பியுள்ள இடமாகவும், ஒன்பது வாயில்களும் எட்டு சுற்றுக்கள் உள்ளதாகவும், அதில் மூன்று தூண்களும் மூன்று உத்திரங்கள் உள்ளதாகவும், அதை நோக்கி ஆப்ரஹாம் வேறு தேசத்திலிருந்து வந்து சில காலத்திற்கு அதை தன்னுடைய தங்குமிடமாக ஆக்கி அங்கே இறை இல்லத்தை கட்டியதும் ஆகும்.
இவ்வாறாக, திருக்குர்ஆன் கஃபாவை எவ்வாறு விவரிக்கின்றதோ அதற்கு முற்றிலும் பொருத்தமாக இந்த மந்திரம் உள்ளது. (இவ்வுலகில் அல்லாஹ்வை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு வைக்கப்பட்ட முதல் வீடு நிச்சயமாக பக்கா(மக்கா)வில் இருப்பதுதான்: அருள் செய்யப்பட்டதாக(அதில் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்டதாக)வும், அகிலத்தாருக்கு நேர் வழிகாட்டியாகவும் இருக்கின்றது. அதில் தெளிவான அத்தாட்சிகளும், இப்ராஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கின்றது: மேலும் எவர் அதில் நுழைகின்றாரோ அவர் அச்சமற்றவற்றவராகி விடுகின்றார். (3:95-96)

சாம வேதத்தில் நபி (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு

நான்கு வேதங்களில் சாம வேதமும் ஒன்றாகும். அது சில விதங்களில் மற்ற வேதங்களை விட உயர்ந்தது என சாம வேத பிராஹ்மனர்கள் கூறுகின்றனர். மத நூலில் சாமா என்ற வார்த்தை அமைதி, சாந்தம், தேனீக்கள் ரீங்காரிப்பதைப் போன்று பேசுதல் மற்றும் பாடல் என்றெல்லாம் பொருள்படும்.

ஷகிதிஸஷ ஸாம் ஆக்யா|ஷபாட்டுக்கள் சாமா என்று அழைக்கப்படுகின்றன. இந்த வேதத்தின் மற்றொரு குணாதிசயம் என்னவெனில் அதனுடைய மந்திரங்கள் இனிமையானதாகவும் நல்ல ராகத்துடனும் பாடுவதற்கு உகந்த முறையில் அமைந்தவைகளும் ஆகும். ஹிந்து மத கிரந்தங்களில் சாம வேதம் வகிக்கும் உன்னத நிலையை பின்வரும் மேற்கோள்களிலிருந்து அறியலாம்.
¨              யஜூர் வேதம் பிரஹ்மாவின் தலையும், ரிக் வேதம் வலது பாகமும், சாம வேதம் இடது பாகமும், உபநிஷத்துகள் ஆத்மாவும், அதர்வண வேதம் அவருடைய வாலும் ஆகும்.|| - (தைத்திரிய ஆரண்யகா)
¨              யஜூர் வேதம் அவருடைய வயிறும் சாம வேதம் அவருடைய தலையும் ஆகும்.|| (கவுஷித்கி ப்ராஹ்மனா)
¨              ரிக் வேதம் ஒளியும், யஜூர் வேதம் சக்தியும், சாம வேதம் புகழும் ஆகும்.||  (ஸத்பத் ப்ராஹ்மனா).
¨              ரிக் வேதம் பூமியும், சாம வேதம் விண்வெளியும், யஜூர் வேதம் வானமும் ஆகும்.|| (தைத்திரிய உபநிஷத்)
¨              சாம வேதம் துவாரங்களும் அதர்வண வேதம் வாயும் ஆகும்||  (அதர்வண வேதம்)
¨              நிச்சயமாக சாம வேதம் ரிக் வேதத்தின் கணவன் ஆகும்.|| (சத்பத்).
¨              சாம வேதம் எல்லா வேதங்களின் சாரமாகும்.|| (சத்பத்).
¨              இந்த உலகம் பிரஹ்மனிலிருந்து படைக்கப்பட்டதாகும், வைஷ்யர்கள் ரிக் வேத மந்திரங்களினால் படைக்கப்பட்டனர், ஷத்ரியர்கள் யஜூர் வேதத்திலிருந்து படைக்கப்பட்டனர் பிராஹ்மனர்கள் சாம வேதத்திலிருந்து படைக்கப்பட்டனர். (தைத்திரிய்ய பிராஹ்மனா).
¨              சாம வேதம் ஓம் என்ற மந்திரத்தால் பாடப்படுவதில்லை ஆனால் ஹின் என்னும் மந்திரத்தால் (பாடப்படுவதாகும்) (சத்பத்).
¨              ரிக் வேதம் எழும்பும், சாம வேதம் தோலும், யஜூர் வேதம் இதயமும் ஆகும்.|| (அதர்வண வேதம்).
நம் பெருமானார் நபி முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றி சாம வேதமும் எண்ணற்ற முன்னறிவிப்புக்களைச் செய்கின்றது.  அவைகளில் ஒன்றை மட்டும் நாம் பார்ப்போம். இந்த முன்னறிவிப்பு சாம வேதம் 2:6,8ல் வருகின்றது.
¨              அஹ்மது ஷரீயத்தை (-மார்க்கச் சட்ட திட்டங்கள்) தன்னுடைய இறைவனிடமிருந்து பெற்றார். இந்த ஷரீயத் ஞானம் நிரம்பியதாக உள்ளது.  சூரியனிலிருந்து ஒளியைப் பெறுவது போன்று அவரிடமிருந்து நான் ஒளியை பெறுகின்றேன்.
¨             நபி (ஸல்) அவர்களின் பெயர் அஹ்மது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
¨             நபி (ஸல்) அவர்கள் இறைவனால் ஷரீயத் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளார்.
¨             அதனுடன் ஞானமும் கொடுக்கப்பட்டுள்ளாத கூறப்பட்டுள்ளார்.
¨             பல்வேறு பொருட்கள் சூரிய ஒளியினால் மின்னுவது போன்று இந்த ரிஷியும் நபி (ஸல்) அவர்களின் ஷரீயத்தினால் ஞானம் பெறுகின்றார்.

வேதங்களின் முன்னாள் விரிவுரையாளரான ஸயான ஆச்சாரியரும் மற்ற ஆர்ய மொழி பெயர்ப்பாளர்களும் இந்த மந்திரத்தை மொழி பெயர்ப்பதில் ஒரு தவறு செய்திருக்கின்றனர். அரேபியப் பெயரான அஹ்மத் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் அதை அஹ்ம் அத் ஹி என்று விளங்கி இந்த மந்திரத்தை நான் மாத்திரமே என்னுடைய தந்தையின் உண்மையான ஞானத்தை பெற்றுள்ளேன். ஆகவே நான் சூரியன் போன்றவன்.|என்று மொழி பெயர்த்துள்ளனர். இந்த மொழி பெயர்ப்பு இரண்டு ஆட்சேபணைகளை ஏற்ப்படுத்துகின்றது.  முதலில், இந்த மந்திரத்தின் ரிஷியானவர் கன்வா குலத்தைச் சேர்ந்த வத்ஸ கன்வா என்பவராவார்.தான் மாத்திரம் தந்தையின் ஞானத்தை பெற்றுள்ளேன் என்று அவர் பாத்தியதை கொண்டாடுவது வேத தர்ம கொள்கைகளுக்கு எதிரானதாகும். வேதங்கள் வத்ஸாவைப் போன்று நூற்று ஒரு ரிஷிகளைக் குறிப்பிடுகின்றன. வத்ஸா மாத்திரம் தந்தையின் ஞானத்தை பெற்றார் என்ற கூற்றை ஆதரிக்கும் எந்த வித ஆதாரமும் இல்லை. இரண்டாவதாக, இந்த மந்திரத்தின் தெய்வம் இந்திரனாகும். வத்ஸா மாத்திரம் அவனுடைய மகனும் வாரிசும் அல்ல.  வத்ஸா மாத்திரம்தான் இந்திரனின் மகனும் வாரிசுமாவார் என்பதற்கான சரித்திர ஆதாரம் எதுவுமில்லை. ரிஷியும் பொய்யான வாக்குமூலம் அளித்திருக்க முடியாது.(ஆகவே மேற்கண்ட மொழி பெயர்ப்பு தவறானதாகும் என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்).

இருப்பினும், திருக்குர்ஆன் இந்தப் புதிரை விடுவிக்கின்றது:
{يايها النبي انا ارسلنك شاهداً ومبشرا نذيراً وداعيا الى الله باذنه وسراجاً ومنيراً}
நபியே, நிச்சயமாக உம்மை(மனிதர்களுக்குச்) சாட்சியாளராகவும் நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம். இன்னும் அல்லாஹ்வின் பால், அவனின் அனுமதி கொண்டு, (ஜனங்களை) நீர் அழைப்பவராகவும், பிரகாசிக்கும் விளக்காகவும்,(உம்மை நாம் அனுப்பியுள்ளோம்). (33:45-46) 

மற்றொரு இடத்தில் திருக்குர்ஆன் கூறுகின்றது:-
  {تبارك الذي جعل في السمآء بروجا وجعل فيها سراجاً وقمرا ومنيرا }
வானத்தில் நட்சத்திரங்களை உண்டாக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். அவன் அதில் சூரியனையும் பிரகாசிக்கும் சந்திரனையும் ஏற்படுத்தினான்.
இந்த ஆகாயத்தில் இரண்டு வகையான நட்சத்திரங்களும் கிரகங்களும் இருக்கின்றன. தங்களுடைய சொந்த ஒளியைக் கொண்டுள்ள நட்சத்திரங்களும் உள்ளன மற்ற கிரகங்களிலிருந்து ஒளியைப் பெறுபவைகளும் உள்ளன. சந்திரனும் நட்சத்திரங்களும் இரவில் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று அது இருப்பதற்கு சாட்சி அளிக்கின்றன. அது போன்றே நபி முஹம்மது(ஸல்) அவர்கள் சூரியனைப் போன்றவர்களாவார்கள்; மற்ற நபிமார்கள் அனைவரும் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களைப் போன்று அவர்களிடமிருந்து ஒளியைப் பெற்று காலத்திற்கு காலம் உலகை வெளிச்சம் பெறச் செய்தனர்.  எந்த நபியின் தோற்றத்தை பற்றி ரிஷி வாஸ்தா முன்னறிவித்தாரோ அந்த நபி சூரியனைப் போன்றவர் என்று அவர் சொல்வது இஸ்லாமியத் தூதராகிய அஹ்மதுவிடமிருந்து அவர் ஒளியைப் பெற்றார் என்பதையே வேறு விதமாக சொல்வதாகும். நபி முஹம்மது(ஸல்) அவர்கள் தங்களுடைய சொந்த ஒளியைக் கொண்டிருந்தார்கள்; மற்றவர்கள் அவரிடமிருந்து ஒளியைப் பெற்றுக் கொண்டார்கள்.
ஜ1ஸ இங்கே குறிப்பிடப்படும் வான் வெற்றி அல்லது இறைவனின் கரம் நபிக்கு ஆதரவாகச் செயல்படுவது என்பதைப் பற்றி சில விளக்கங்களை அளிப்பது பொருத்தமாக இருக்கும். நபி(ஸல்) அவர்கள் எடுத்து வைத்த ஓரிரைக் கொள்கையானது மக்களின் பேராதரவை ஆரம்பத்தில் பெற்றிருக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. லாயிலாஹ இல்லல்லாஹூஎன்ற திருக்கலிமாவை அவர்கள் தனி மனிதராகவே முதன் முதலில் ஓங்கி ஒலித்தார்கள்.  ஆரம்பத்தில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே அவரின் இந்த சத்திய அழைப்பை ஏற்றுக் கொண்டனர். அந்த ஒரு சிலரையும் மக்காவின் நிராகரிப்பாளர் வார்த்தகைளால் விவரிக்க முடியாத அளவிற்கு துன்பத்திற்கு உள்ளாக்கியுள்ளனர்.  அது போன்ற ஒரு கால கட்டத்தில் நபி(ஸல்) அவர்கள் கஃபாவின் சுவரில் சாய்ந்து அமர்ந்திருக்கும் போது,  அவரின் தோழர்கள் சிலர் வந்து அவரிடம் அல்லாஹ்வின் தூதரவர்களே நாங்கள் இவ்வளவு தூரம் கொடுமைப்படுத்தப் படுகின்றோமே,  இதை நீக்கும்படி இறைவனிடம் தாங்கள் பிரார்த்தனை புரியக்கூடாதா?என்று வேண்டிக் கொண்டனர்.  அப்போது நபியவர்கள்,உங்களுக்கு முன்னுள்ள சமுதாயத்தினர் எந்த அளவிற்கு கொடுமைப்படுத்தப்பட்டனென்றால், அவர்களின் உடல்கள் இரும்புச் சீப்பினால் சீவப்பட்டன, இரு துண்டுகளாக அறுத்து வெட்டப்பட்டனர். நீங்கள் பொறுமையாயிருங்கள். ஓரு காலம் வரும்,  அக்காலத்திலே மக்காவிலிருந்து மதீனா வரை ஒரு பெண் தன்னந்தனியாக எந்தவித பயமுமின்றி பயணம் செய்து வருவாள்.  அல்லாஹ்வின் பயம் மற்றும் மிருகங்களின் பயம் ஆகியவற்றைத் தவிர வேறு எந்தப் பயமும் அவளுக்கு இருக்காது என்று அவர்கள் பதில் உரைத்தனர்.  இறைத் தூதரின் அந்த வார்த்தை உண்மையானது.  ஏனெனில் அவர்களின் கூற்று இறைவன் வெளிப்படுத்திய ஞானத்திலிருந்து வந்ததாகும்.  சரித்திரம் அவர்கள் கூறியதை உண்மைப்படுத்தியது.பத்ர் யுத்தத்தை எண்ணிப்பாருங்கள்.  இறைவனின் கரம் வெளிப்படையாகவே இயங்கியது.  எந்த விதப் யுத்தப் பயிற்சியும் முறையான ஆயதங்களும் இல்லாத முன்னூறு விவசாயிகளடங்கிய விசுவாசிகளின் படை நபி (ஸல்) அவர்களின் தலைமையில் ஒரு புறம்: மறு புறம் பயிற்சி பெற்ற ஆயிரத்திற்கும் அதிகமான இராணுவ வீரர்கள் முறையான ஆயதங்களுடன் ஒரு புறம்.  இந்த யுத்தத்தில் விசுவாசிகளின் படை தோற்று விட்டால் அத்துடன் இஸ்லாத்தின் கதையும் முடிந்து விடும்.  இதை நபி (ஸல்) அவர்களே அவர்கள் இறைவனிடம் பிராத்தனை செய்யும் போது எடுத்துக் காட்டுகின்றார்கள்.  ஆனால் நிகழ்ந்தது அற்புதம்.  ஆம்.  இறைவனின் கரம் வெளிப்படையாக இயங்கியது.  விசுவாசிகளின் படை வென்றது.  எதிராளிகளின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.  மற்றவர்கள் சிறை பிடிக்கப்ட்டனர்.  இறைவனின் வெளிப்படையான உதவியைப் பற்றியும் திருக்குர்ஆனும் பேசுகின்றது.  பத்ரில் (நடந்த யுத்தத்தில்) நீங்கள் (எண்ணிக்கையிலும் ஆயதபலத்திலும் மிகக்) குறைந்தவர்களாகயிருந்த சமயத்தில், நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தான்:  ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள்.  (நபியே) விசுவாசங்கொண்டோரிடம்,  (வானத்திலிருந்து) இறக்கி வைக்கப்பட்ட மூவாயிரம் மலக்குகளைக் கொண்டு, உங்கள் இரட்சகள் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?|என்று நீர் கூறியதை(யும் நினைவு கூர்வீராக).  திருக்குர்ஆன் 3: 123-124) 

அது போல் உஹத் யுத்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.  இஸ்லாத்தின் எதிரிகள் ஓராண்டுகளாக யுத்தத் தயாரிப்பில் ஈடுபட்டு மூவாயிரம் பேர்களடங்கிய வலிமை மிக்க படையுடன் முஸ்லிம்களை துடைத்தெறிய வேண்டும் என்று கங்கணம் கட்;டிக்கொண்டு வருகின்றனர்.  எழுநூறு முஸ்லிம்கள் அவர்;களை எதிர் கொள்கின்றனர்.  வழக்கம் போல் இறைவனின் கரம் முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றது.  முஸ்லிம்கள் வெற்றியின் விளிம்பை எட்டுகின்றனர்.  ஆனால்,  நபி (ஸல்) அவர்களின் உத்தரவை மீறினால் என்ன நடக்கும் என்பதை காட்டுவதற்காக இறைவன் அவர்களுக்கு ஒரு படிப்பை இறுதியில் ஊட்டுகின்றான்.  அது போல் அகழ் யுத்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.  மதீனாவிற்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் எதிரிகள்.  யுத்தமின்றி எதிரிகளை விரட்டியடித்தது அந்த இறைவனின் கரம்.  ஆம்.  இறைவனின் கரம் எப்பொழுதும் நபி (ஸல்) அவர்களுக்கு ஆதரவாக இயங்கியது. அவர்களை உண்மை நபியென நிரூபித்தது. உஹத் யுத்தத்தில் நிராகரிப்போரின் அணியிலிருந்த காலித் பின் வலீதைப் பற்றி சிந்திந்துப் பாருங்கள்.  அவர் விசுவாசிகளுக்கு எதிராக போரிட வந்த மூவாயிரம் வலிமை மிக்க படையின் மிகப் பெரும் தளபதிகளில் ஒருவராயிருந்தார்.  ஆனால் நபி (ஸல்) அவர்களின் தலமையில் வந்த எழுநூறு பேர் கொண்ட படையை அவரால் வெற்றி கொள்ள முடியவில்லை.  ஆனால் இதே காலித் பின் வலீத் முஸ்லிம் ஆகினார். மூவாயிரம் பேர் கொண்ட விசுவாசிகளின் முஅத்தா போரின் போது தலமை ஏற்றார். நடந்தது என்ன? ஒரு லட்சம் பேர் கொண்ட ரோமானியப் படையை பின் வாங்கச் செய்தார்.  இது காலிதின் வீரமா? அல்ல.  அல்ல. அன்பர்களே.  நபி (ஸல்) அவர்களின் விசுவாசிகளின் படைக்கு இறைவன் புறமிருந்து வந்த உதவி.  இறைவனின் கரம் அது போலவே நபி (ஸல்) அவர்களை கொல்ல எத்தனையோ திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன, சதிகள் நடத்தப்பட்டன ஆனால் அவைகள் அனைத்தையும் நிச்சயமாக இறைவனின் கரம்தான் தடுத்து நிறுத்தியது.  அவர்கள் மக்காவிலிருந்து, எதிரிகளின் இராணுவ கட்டுப்பாட்டையும் மீறி, தப்பி மதீனாவிற்கு இறைவனின் உதவியால் சென்றார்கள்.  இன்னும் இது போன்ற ஏராளமான வான் சக்தி நபி (ஸல்) அவர்களின் பக்கம் உதவியாக இருந்ததை அவர்களின் ஆதாரப்பூர்வமான சரித்திரத்தைப் படித்தவர்கள் நன்கறிவர்.  அவன் தன் மார்க்கத்தை மற்ற அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வான் என்ற அவனுடைய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.  நபி (ஸல்) அவர்கள் இறைவனை சென்றடைந்த பிறகு இஸ்லாமிய வரலாற்றில் நடந்த நிகழ்ச்சிகளை படித்தவர்கள் இதனை தெளிவாக உணர்வர்.  ஜ2ஸ 

சுவிஷேசங்களைத் தொகுத்தவர்கள் இயேசு கிறிஸ்துவிற்கு பொய்யான பரம்பரைப்பட்டியலை உண்டாக்கியதன் மூலம், கிறிஸ்துவின் தந்தை வழி மற்றும் தாய் வழி பாட்டிகளின் கற்பையே கடுமையான முறையில் கேள்விக்குள்ளாக்கி விட்டனர்: ஆனால் திருமறைகுர்ஆனோ மர்யம் அவர்களை :
{ياَ أُخْتَ هارُونَ مَا كَانَ أَبُوكَ أَمْرَا سُوْء وَمَا كَانَتْ أُمُّكِ بِغِيَّا}
 ஆரோனின் சகோதரியே:  உன்னுடைய தந்தை கெட்டவராகவோ உன் தாயார் தவறான நடத்தையுடைய பெண்ணாகவோ இருந்திருக்கவில்லையோ||. என்று கூறுகின்றது.  மர்யம் (அலை) அவர்கள், பயபக்திக்கும் அர்ப்பணிப்பிற்கும் பெயர்போன ஆரோனின் குடும்பத்திலிந்து வந்தவர்கள் என திருமறைகுர்ஆன் கூறுகிறது.

[3]  Maha Nhasahya Patanjali. 
[4]  Rigvedic India by Abinash Chandra Datta.
[5]  Traim Nrahm Sanatanam.
[6]  Swami Daya Nand, founder of the Arya Samaj.
[7]  Arctic oome in the Vedas by Mahatama Tilak.
[8]  Lectures of Raja Mohan Roy;
[9]  Mandak Upanishad Mandak, I:1,4-6.  Chhandogya, VII: 1-2- Shatpath, X:3,5-12.
[10] Atharva Veda XI: 7, 24.
[11]  Ibid, IV : 6.12.
[12]  Rig Veda, X: 130 ,6
[13]  VII : 1-2..
[14]  யக்காவாவின் ஒன்பதாவது நாளில் புராணங்கள், குறிப்பாக வாயு புராணம், வாசிக்கப்பட வேண்டுமென்று சத்பத் பிராமணாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சத்பத் பிராமணா மிகவும் பழமையானதும் ஆதாரப்பூர்வமானதுமான யஜூர் வேதத்தின் விரிவுரையாகும்.
15]  Nhavishya Purân Parv, III : 1, 4, 21-23
[16]  Ibid., pp. 256, 257.
[17]  Ait. Nr., VI : 32.
[18]  மேலுள்ள மூன்று மொழி பெயர்ப்புக்களிலுமே இந்த வார்த்தை அரசரின் அல்லது ஆள்பவரின் குறிப்புப் பெயராகவே கருதப்பட்டுள்ளது.  இதைப் பற்றி பேராசிரியர் கிரிபித் எழுதுவதாவது : ||பக்கத்தில் வசிக்கும் மக்களான ருஷமாக்கள் என்பவர்களின் அரசரான கவுராமாவின் நல்ல சுதந்திர அரசாங்கத்தைப் பற்றிப் புகழும் பாடல்||.  ஆகவே கவுராமா என்பது ஆர்யர்களல்லாத மக்களின் அரசனாவார்.  ருஷமாக்கள் என்பவர்கள் பாபிலோனியர்களுடன் சேர்ந்து ஜெருஸலத்தை தாக்கிய வட அரேபிய மக்களாவார்கள்.  (என்சைக்ளோபீடியா ஆப் பைப்ளிகா).  ஒரு நாடு அந்த நாட்டில் வசிக்கும் சமுதாயத்தைக் கொண்டே ஒரு குறிப்பிட்ட பெயரைப் பெறுகின்றது என்பது பொதுவாக சரித்திரப் புத்தகங்களில் காணப்படும் உண்மையாகும்.
[19] இந்த மந்திரத்தில் வரும் ரதம் என்ற சமஸ்கிருத வார்த்தை அனைத்து வகையான வண்டிகளையும் பயணம் செய்ய உதவும் மற்றவைகளையும் குறிக்க உபயோகிக்கப்படுகின்றது.  சூரியன் தங்க ரதத்தில் பயணம் செய்கிறான் என்று ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  1:35, 2
[20] மனு 5 : 8, 18
[21] மனு 11 : 201.
[22] அதர்வண வேதத்தின் சில பிரதிகளில் இரண்டு அழகிய பெண் ஒட்டகங்கள் என்று பொருள்படும் தவிர்தர்ஷ் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.  மற்ற பிரதிகளில் தவிர்தஷ் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதற்கு ஒட்டகங்கள், பெண் ஒட்டகங்களுடன் இருபது என்று அர்த்தமாகும். பூனாவிலுள்ள டெக்கான் கல்லூரியில் இரண்டு பிரதிகளையும் நாங்கள் ஆராய்ந்து பார்த்தோம்.  அதில் இரண்டு அழகிய பெண் ஒட்டகங்கள் என்று அர்த்தமுள்ள தவிர்தர்ஷ் என்ற வார்த்தை வரும் பிரதியை (மிகவும் சரியானதென) நாங்கள் தேர்ந்தெடுத்தோம். நபி (ஸல்) அவர்கள் மதினாவிற்கு தப்பிச் சென்ற போது அவரிடம் இரண்டு பெண் ஒட்டகங்கள் இருந்தன.  ஒன்று அவருடனும் மற்றொன்று அவரின் தோழர் அபூபக்கரிடமும் இருந்தன.  நபி (ஸல்) அவர்களிடம் கஸ்வா என்றொரு பெண் ஒட்டகமும் அஸ்பா என்றொரு பெண் ஒட்டகமும் இருந்ததை அனைவரும் அறிவர்.
[23]  Holy Qur’an 53:7.
[24]  Sanskrit-English Lexicon by Monier Williams.
[25]  Allo-Upanishad and Nhavishya Purana.
[26]  Kahitiz (Vanshâvli Charit).
[27]  Rig Veda, X: 84.2. – Atharva Veda, I : 14.1.
[28]  Rig Veda,  V: 54:14
[29]  Rig Veda, VIII : 40: 2., VII : 62.3.
[30]  Rig Veda, X : 30.6.
[31]  V : 2.4, 13
[32]  II : 2.5, 2.
[33]  V: 56.3.
[34]  X: 112.3.
[35]  Shatpath, XII: 9.1.7.
[36] கெம் கரனின் |சமஸ்கிருத பாஷை| பரிக்ஷித் என்ற வார்த்தைக்கு |சர்வத் அய்ஷ்வரி யுக்தஸ்ய| (எல்லா நற் பண்புகளையும் வலிமைiயும் உடைய) என்றும் |மக்களுக்கு முழு அமைதியையும் அபயத்தையும் அளிப்பவன் என்றும் அர்த்தத்தை கொடுக்கின்றது.  திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களை واخفض جناحك للمؤمنين ||விசுவாசம் கொண்டவர்களிடம் பணிவெனும் இறக்கையை விரிப்பீராக|| என்று கூறுகின்றது. (15:88)
[37]  Raja Ram Nhâshya, p. 991.
[38]Hymns of the Atharva Veda, p. 433 and foot-note.
[39] Atharva Veda, XX : 21,6, Rig Veda, I:53,6.
[40] Rig Veda : I. 53,7.
[41] Jeremiah. 4:30.
[42] இறைத்தூதர்கள் அனுப்பப்படாத மனித சமுதாயமே இல்லை என்ற உண்மையை உலகிற்கு முதன் முதலில் அறிவித்து இறைத்தூது உலகளாவியது என்பதை உலகிற்கு உணர்த்தியது இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களே. இது பற்றிய விரிவான விளக்கத்தை முன்னுரையில் காண்க.
[43] அக்காலங்களில் சில கிராமங்கள் சேர்ந்தது ஒரு அரசாகவும் அதன் தலைவன் அரசனாகவும் அழைக்கப்பட்டான்.  உதாரணமாக, நமது தமிழ்நாடு மாத்திரமே வெள்ளையர்களின் காலம் வரை பல நூற்றுக்கணக்கான நாடுகளாக பிரிந்து கிடந்தது என்பதை சரித்திரத்தை மேம் போக்காக படித்த அனைவரும் அறிவர்.  இந்த உண்மையை மனதில் கொண்டால் இருபது அரசர்கள் என்பதை நன்கு விளங்க முடியும். 
[44] எல்லாம் வல்ல இறைவனின் புதல்வன் என்ற இந்த பட்டமானது முன் வேதங்களில் புனிதர்கள் அனைவருக்கும் உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது.  மக்களை வழி கெடுக்க வேண்டுமென்று திட்டம் தீட்டும் சில சக்திகள் அதை நேரடி அர்த்தத்தில் உபயோகிக்க ஆரம்பித்தன.  இது பற்றிய விளக்கங்களை நமது பிற வெளியீடுகளில் காண்க. திருக்குர்ஆனில் இந்த உபயோகம் இல்லை.
[45]ஸப்ரஹ்மா, ஆப்ரஹாம் ஆகிய பெயர்கள் ஒரே அர்த்தங்களை உடையவைகளாகும்.  சமஸ்கிருத்தில் ப்ரஹ்மா என்ற வார்த்தை ப்ரிஹ் என்ற மூலத்திலிருந்து பெறப்பட்டதாகும்.  அதற்கு பரவு, செழி, வலிமை பெறு என்று அர்த்தமாகும்.  இவ்வாறாக, பரவி வலிமை பெறும் ஒருவரை பிரஹ்மா என்பது குறிக்கின்றது. உலகம் பிரஹ்மாவிலிருந்து படைக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது.  அதாவது, அவர் பரவிப் படர்ந்து படைப்புக்களை தனக்குள்ளேயிருந்து வெளிக் கொண்டு வந்தார் அல்லது அவர் கொழுப்பாக ஆகி தன் உடலிலிருந்து மிருகங்களை இழுத்தார் என்பதாகும்.  பிரஹ்மாவைப் பற்றிய இந்த விளக்கம் அவரை படைப்புக்களின் தந்தையாக ஆக்குகின்றது.  ஹீப்ருவில் ஆப்ரஹாம் என்பது இரண்டு வார்த்தைகளைக் கொண்டது.  ஒன்று أب என்பதும் மற்றொன்று راهام என்பதும் ஆகும்.  தவ்ராத்தை மொழி பெயர்த்த தலைமை ரபி ஆப்ரஹாம் என்ற வார்த்தையை எழுதும் போது, அப் என்பதற்கு தந்தை என்றும் ரஹாம் என்பதற்கு கூட்டம் என்பது வரை ஒப்புக்கொள்கின்றார்.  இந்த இரண்டாம் வார்த்தையான ரஹாம் என்பது கூட்டம் என்று பொருள்தரும் அரபி வார்த்தையாகும்.
2.             ஆப்ரஹாம் மற்றும் ப்ரஹ்மா என்பது குறிப்புப் பெயர்களல்ல.  அவைகள் அடைமொழிப் பெயர்களாகும்.  அவைகள் அடைமொழிப் பெயர்கஇளன்பது இந்து மத கிரந்தங்களில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன.
3.             ஹிந்துக்களிடம் ப்ரஹ்மாவிற்கு ப்ரஜாபதி (-சமுதாயங்களின் தந்தை) என்ற மற்றொரு பெயர் உள்ளது. யூதர்கள் ஆப்ரஹாமை, சமுதாயத்தின் தந்தை என்று அழைக்கின்றனர்.
4.             ப்ரஹ்மா, ஆப்ரஹாம் ஆகிய இருவருக்குமே வயதான காலத்தில்தான் குழந்தை பிறந்தது. (ஆதியாகம் 15:24, மற்றும் கோபத் பிரஹ்மணா 1:1 காண்க)
5.             இருவரும் குழந்தைகள் வேண்டி பிரார்த்தித்தனர்.
6.             இருவருக்குமே அதே பெயருள்ள இரண்டு மனைவிகள் இருந்ததாக கூறப்படுகின்றது.  சாராவோடு சரஸ்வதியையும் ஹாஜராவோடு பார்வதியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.  கடைசியிலுள்ள பெயர் அர்த்தத்தில் ஒன்றாக உள்ளது.  அது ஒரு பாறையையோ அல்லது குன்றையோ குறிக்கின்றது.
7.             இரண்டு சம்பவங்களிலுமே, ஒவ்வொரு மனைவியும் ஒவ்வொரு மகனைப் பெற்றனர்.  மகன்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய தாயின் குணத்தைக் கொண்டிருந்தனர்.
8.             இருவரும் தீர்க்கதரிசிகளாக மதிக்கப்பட்டனர்.
9.             இருவரில் எவரும் கடவுளாக்கப்படவில்லை.  அவர்கள் இருவரும் ஏகத்துவக்கொள்கையை உடையவர்கள் என்பதை இது காண்பிக்கின்றது.
10.          இருவரும் ஒழுக்கக்கேட்டில் வீழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.  ஒருவர் தன்னுடைய மகளையே காம இச்சையோடு விரட்டியதாகவும் (புராணம்) மற்றொருவர் தன் மனைவியை தங்கை என்று அறிவித்தாகவும் கூறப்படுகின்றது. (பைபிள்)

Previous Post Next Post