பீ.ஜே. கடந்து வந்த பாதை

இஸ்லாமா? தடுமாற்றமா? நாஸ்தீகமா?

பீ.ஜே.(P.ஜைனுல்ஆபிதீன்) என்பவர் கூத்தாநல்லூர் மதரஸாவில் பாடம் பயின்று “உலவி” என்ற மவ்லவி பட்டம் பெற்றவர். அங்கு அவர் இமாம் ஷாஃபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பெயரில் எழுதப்பட்ட பல முரண்பாடுகள் உள்ள மத்ஹபு சட்டங்களையும் அத்தோடு சேர்த்து அன்று மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்து “கத்தம் ஃபாத்திஹா”
 “மவ்லிதுகளையும்” சேர்த்தே படித்து வெளியேறினார்.

பீ.ஜே.யும் P.அலாவுதீனின் அவர்களும்:
பீ.ஜே.-யின் உடன் பிறந்த சகோதரர் (அண்ணன்) P. அலாவுதீனின் அன்னாரின் அறிவுத்தாக்கம் இவர் மீது தாக்கம் செலுத்தியது என்றால் மிகையல்ல. பீ.ஜே உடைய அண்ணன் அலாவுதீன் அவர்கள் சிறந்த பேச்சாளராகவும், அரபு மொழியில் சிறந்த தேர்வைப் பெற்றவராகவும் விளங்கி உள்ளார். கன்பது செய்யிது குதுபின் “ஜுஸ்வு அம்ம” கான அவரது மொழிமாற்றம் சொல்கின்றது

மளிகை கடை வியாபாரி:
பீ.ஜே. பள்ளித் தொழிலை விட்டும் ஓய்வாகி மளிகைக்கடை வியாபாரியாக சொற்ப காலம் இருந்ததோடு கறுப்புச் சட்டைப் பகுத்தறிவு இயக்கத்தோடும் (கடவுள் மறுப்பு கொள்கையை கொண்ட திமுக) தொடர்பு வைத்திருந்தார்
என்பது அவரது உரைகள் மூலம் விளங்கக் கிடைத்தது.

திருச்சி அபூ அப்தில்லாஹ் என்பவரோடு இணைந்து அந்நஜாத் பத்திரிக்கை வெளியிட்டு பணியில் இருந்து பின்னர் அவரோடு ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக விலகி ஜாக்கில் இணைந்து தஃவா செய்தார். அத்தோடு அல்-ஜன்னத் என்ற மாத இதழின் ஆசிரியர் பணியும் செய்த வந்தார். (அப்போது அல்ஜன்னத்தில் எழுதியவைகளும், அவர் கொண்டியிருந்த கொள்கைகளுக்கும் நேர் எதிரான சிந்தனையில் தான் தற்போது உள்ளார் என்பது கூடுதல் செய்தி)

இவரோடு இருந்த காலப்பகுதியில் மத்ஹபு நூல்களில் காணப்படும் முரண்பாடுகளை விமர்சனம் செய்த அபூ அப்தில்லாஹ் அவர்களிடம், தான் (பீ.ஜே.) படித்த மத்ஹபுக்காக வாதாடினார் என என்னிடம் அபூ அப்தில்லாஹ் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் மதுரையில் வைத்து கூறினார்கள். ( الله شاهد ) இவர் மிகவும் சிரமப்பட்டுத்தான் ஃபஜ்ர் தொழுகைக்கு எழுந்து செல்வாராம்.

பகுத்தறிவு சிந்தனை எப்படி இவரிடம் வருகின்றது?
இவர் ஜாக் என்ற அமைப்பில் அல்-ஜன்னத் பத்திரிக்கைக்கு பொறுப்பாக இருந்தார். 
அந்த அமைப்பில் இக்பால் மதனி, 
அப்துல் ஜலீல் மதனி, 
செய்யித் முஹம்மத் மதனி, 
கமாலுத்தீன் மதனி போன்ற நல்ல ஆலிம்கள் இருந்தனர். 

இவர்களிடம் இருந்து தனது அரபு மொழிப்புலமையை வளர்ப்பதில் கவனம் செலுத்திய அளவு ஹதீஸ் கலையைப்படிப்பதிலோ அல்லது இமாம்களின் சேவைகள் பற்றி படிப்பதிலோ தனது கவனத்தை செலுத்தாது அல்-ஜன்னத் பத்திரிக்கை மற்றும் பேச்சில் மட்டும் கவனம் செலுத்தியதோடு ஷேக் நாஸிருத்தீன் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஹதீஸ் ஆய்வில் காணப்பட்ட முடிவில் அதிகம் தங்கி நின்றதோடு இமாம் இப்னு தைமிய்யாவின் ஃபதாவாவிலும் தங்கி நின்று காரியமாற்றினார் என்பது புலப்படுகின்றது.

ரஷீத் ரிழாவின் பக்கம் சிந்தனை மாறியது:
ரஷீத் ரிழாவின் தஃப்ஸீர் மனாரில் தங்கி சறுக்கலைத் தொடக்குகின்றார். இவர் இமாம் இப்னு ஹஸ்ம் மற்றும் ரஷீத் ரிழா போன்ற அறிஞர்களின் கிரந்தங்களில் இருந்து தனது ஆக்கங்களை அதிகம் முன்வைத்திருக்கின்றார் என்பது அவரது எழுத்துக்கள் மூலம் சான்று பகர்கின்றன.

ஏனெனில் இவர் لحم الخنزير பன்றியின் மாமிசம் தொடர்பான சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்டு பன்றியின் மாமிசம் என்றே குர்ஆன் குறிப்பிடுகின்றது. 
எனவே! அதன் ஏனைய பாகங்கள் தொடர்பாக அது எதையும் பேசாது விட்டுள்ளது. அதைப் பேணுதலுக்காகவே தவிர்ந்து கொள்ள வேண்டும். 
ஏனெனில் சில போது பன்றியின் இதயம் மட்டும் மனிதனுக்குப் பொருத்தமாக இருப்பதற்காக அல்லாஹ் இப்படி சொல்லி இருக்கலாமே என்று தனது வாதத்தை நிறுவி பலரை வாத நோயில் போட்டார்.

இவர் இதில் இருந்து முழுமைமாக வாபஸாகினார் என்று கூற முடியாத அளவுக்கு பிற்பட்ட காலங்களில் இன்னும் பல அம்சங்களில் கைவைத்தார்.

உதாரணமாக “பன்றித்தோல்” வியாபாரம் ஆகுமானது என ஆன்லைன் பீ.ஜே.-வில் எழுதி இருக்கிறார்.
அபாபீல் பறவைகள் என்பன அணுகுண்டைத்தான் சொண்டுகளில் சுமந்து வந்து வீசின என்று இவர் ரஷீத் ரிழாவை அல்லது முஹம்மத் அப்துஹு-வை காப்பி செய்து வெளியிட்டதைப் புதுமையாக பேசிக் கொண்ட அக்கால தவ்ஹீத் தக்லீத் வாதிகள் பலர் இந்த தவறான விளக்கம் அல்லாஹ்வின் அபரிமிதமான அற்புதமான ஆற்றலை மறைமுகமாக மறுப்பது பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் இது பீ.ஜே.-யின் பெரிய ஆய்வு போல கிழித்துக் கொண்டிருந்தனர்.

காதியானிகளோடு விவாதம் : 
காதியானிகள் விவாதத்தில் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பூமிக்கு வருவார்கள் என்ற ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று பீ.ஜே யின் 2004 புதிய கோட்பாட்டை அன்று 1990 களில் முன்வைத்த போது, பீ.ஜே. தற்போது ஸலஃபிகள் சொல்கின்ற விளக்கத்தை கூறி அவர்களுக்கு எதிராக வாதம் செய்தவர் என்று எத்தனை பேருக்கு தெரியும். 
அன்று காதியானிகளிடம் காணப்பட்ட முரண்பாட்டு நோய் பின்னர் பீ.ஜே.யிடம் தொத்திக் கொண்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றதாகும்.
 அன்றைய காதியானிகள் ஹதீஸ் மறுப்புக்கு வைத்த பெயர்தான் குர்ஆனுக்கு முரண்படாத ஹதீஸ்கள், 
அதனை அப்படியே உள்வாங்கியுள்ளார் என்பது அன்று முதல் இன்று வரை பீ.ஜே.-யின் நடவடிக்கைகளை அவதானிப்பவர்களால் அறிய முடியும்.

ரஷீத் ரிழாவைக் காப்பி பேஸ்ட் (copy-paste) செய்தல் : 
இவர் சூனியத்தை மறுப்பதற்காக ஹாரூத் மாரூத் ஆகிய இருரையும் மனித ஷைத்தான்கள் என்றார்.
 குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி இவர் சூனியம் தொடர்பான புகாரியில் இடம் பெற்றுள்ள ஸஹீஹான ஹதீஸை மறுப்பதற்கு என்ன ஆதாரங்களை முன்வைக்கின்றாரோ அந்த அனைத்து வாதங்களையும் ரஷீத் ரிழா அதற்கு முன்னர் “அல்-ஜஸ்ஸாஸ்” போன்றோர் முன்வைத்துள்ளனர். 
அதற்கு தெளிவாக மறுப்பும் எழுதப்பட்டுள்ளது என்பதைக் கூடப்படிக்காமல் மக்களை இன்னும் வழிகெடுத்துக் கொண்டே இருப்பது இவரைப்பற்றி விளங்கப் போதுமான சான்றாகும். 

நபித்தோழர்களை பின்பற்றுதுதல்:
நபித்தோழர்களின் விளக்கங்களை, நடைமுறைகளை தேவையின் போது துணைக்காக ஆதாரமாக எடுப்பதையும் நக்கலும் நையாண்டியும் செய்யும் இவர் அடித்த காப்பிகள் எழுத்தால் எழுத முடியாதவை.

ஒரு உதாரணம்.
இலங்கையில் உமர் அவர்கள் தனக்கு பைஅத் செய்யாதவர்களைக் காபிர்கள் என்று பேசினார். 
அவரோடு விவாதத்தில் கலந்து கொண்ட P.J தனது வாதத்தை நிறுவ ஃபாத்திமா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அபூபக்கர் சித்தீக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு பைஅத் செய்தார்களா? 
பைஅத் ஹதீஸ் அறிவிப்பாளாவது பைஅத் செய்தார்களா? என்றெல்லாம் கேள்வி கேட்டு ஆதாரம் காட்டியவர் இப்போது காதியானிகள் போன்று பிரச்சாரம் செய்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் முஃஜிஸாவை விஞ்ஞானமாக மாற்றிய பீ.ஜே.

இவர் நபிமார்கள் வரலாறு தொடரில் நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் குளோனிங் முறையில் பிறந்த குழந்தை என்று பேசிய விஞ்ஞானப் பொய்யை கொள்கைச் சகோதரர்கள் வாசித்தார்களா என்பதை அல்லாஹ்வே அறிவான்...

தஃவாப் பாதையில் பொய் உரைப்பதை ஹலாலாக்கிய அஞ்சாநெஞ்சன்:
இந்த பீ.ஜே. ஹதீஸ் துறையில் போதிய அறிவற்றவர்,
ஹதீஸ்கலை அறிஞர்கள் ஒரு ஹதீஸ் ஸஹீஹானதுதான் என்பதை நிரூபிக்க இட்டுள்ள நிபந்தனைகளில் இவர் புதிய சில நிபந்தனைகளை இணைத்து ஸஹீஹான பல ஹதீஸ்களை தனது மனோ இச்சைக்கு – இஷ்டத்திற்கு மறுக்கின்றார்.

உண்மை என்னவெனில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை இனம் காண நடைமுறைச் சாத்தியம், 
குர்ஆனுக்கு முரண்படுதல் என்ற கோட்பாடு கொண்டு வரப்பட்டு பொய்யான செய்திகள் ஆதாரபூர்வமான செய்திகள் என இனம் காணப்பட்டன. இந்த விதிகளை கொண்டு வந்தவர்களே புகாரியில் முஸ்லிம்கள் இடம் பெறும் செய்திகளில் முஆல்லகாத் தவிர்த்து மற்ற ஹதீஸ்களை ஆதாரபூர்வமான செய்திகள் என தீர்ப்பளித்தனர்.

இவர் இந்த நூற்றாண்டில் மறுக்கப்படும் ஹதீஸ்கள் உண்மையில் மறுக்கப்படும் நிலையில் இருப்பின் இவரை விட அறிவில் தேடலில் அதிதிறமைசாலிகளான முன் சென்ற இமாம்கள் இது பற்றி பேசி இருப்பார்கள் அல்லது அதுபற்றிய செய்திகளாவது கிடைத்திருக்கும்.

இவர் கடந்து வந்த பாதை என்பது பல படி நிலைகளைக் கொண்டது

1) மத்ஹபு ஆதரவு

2) குர்ஆன் ஹதீஸ் இஜ்மா, கியாஸ்

3) குர்ஆன் ஹதீஸ் ஸஹபாக்களின் கூற்றுக்கள் நடைமுறைகள்

4) குர்ஆன் ஹதீஸ் மட்டும்

5) குர்ஆன் மற்றும் அதற்கு முரண்படாத ஹதீஸ்.


தென்னிந்தியாவில் ஒரு மார்க்க குழப்பவாதி

இந்த குழப்பவாதி இரண்டு ஆங்கில எழுத்தில் மாத்திரமே பிரபலமாக அழைக்கப்படுவார் . 

இவர் குர்ஆன், சுன்னா வழி நடக்கும்  பல ஜமாத்துக்களில் இருந்து துரத்தப்பட்டு வாழ்ந்து வந்த நிலையில்; இறுதியில் தான் உருவாக்கிய ஜமாத்தில் இருந்து  ஒரு பாலியல் குற்றச்சாட்டில் பெயரில் என்னை விடுங்க, இனி பேசமாட்டேன்,  எனக் கூறி,  தானே முன் நின்று உருவாக்கிய ஜமாத்தை விட்டும்  ஒதுங்கி பல ஆண்டுகள் தலைமறைவாகி, அது பழசு பட்ட கையோடு, அதன் பின் மற்றொரு புது ஜமாத் உருவாக்கி மீண்டும் தனது வழிகேடுகளையும் கற்பனைகளையும் கணகச்சிதமாக பரப்ப கடுமையான பிரயத்தனம் மேற்கொண்டு, அவற்றைப் பரப்பி வருகின்றார்.

இவர் ஆரம்ப காலங்களில் மார்க்கம் படித்த, இறையச்சமுள்ள ஆலிம்களோடு சகவாசம் வைத்திருந்த போது  குர்ஆன், சுன்னா, அதன் ஒழியிலான நபித்தோழர் விளக்கங்கள் என்பவற்றோடு கடிவாளம் போட்டு நோன்பு ஷைத்தானைப் போல கட்டி வைக்கப்பட்டதனால் அவரின் ஃபித்னாக்கள் மிகக் குறைவாகவே காணப்பட்டன.

அல்ஜன்னத் மாத இதழின் ஆசிரியராக கடமையாற்றிய போது لحم الخنزير பன்றியின் மாமிசத்திற்கு பன்றியின் மாமிசம் மட்டும் என நேரடியான பொருள் தந்து, அதுவே ஹராம், மற்ற பக்கங்களை  பேணுதலுக்காகவே விடுதல் என தலைகீழாக  விளக்கம் கொடுக்கும் போதே இது ஒரு காலத்தில் சறுகும் என இலங்கை அறிஞரான டாக்டர் நுஃபார் ஃபாரூக் (ரஹி) கணித்தது உண்மையாகி விட்டது போலும்!!!

இவர் தனது சூனியம் என்ற நூலில் சூனியம் உண்டு, அல்லாஹ் நாடினால் அதற்கு தாக்கமும் உண்டு என எழுதி,  பின்னால் அதை நம்புவது குஃப்ர் எனக் கூறி புதியதொரு ஆட்டு மந்தைக் கூட்டம் உருவாக்கி அதில் வெற்றி கண்டார்.

அவ்வாறே, ஷைத்தான் மனிதனைத் தீண்டுதல் தொடர்பான விஷயத்திலும் முன்னுக்குப் பின் முரண்பட்டு கருத்துக் கூறினார்.

வழமையான ரமளான் கால வகுப்புக்களால் பல வழிகேடுகளை அறிமுகம் செய்வது வழமை.

அந்த வகையில் நபிமார்கள் தொடர் வரலாற்று பாடத்தில் தனது மூளைக்கு பொருந்தாத ஸஹீஹான பல ஹதீஸ்களை தள்ளுபடி செய்தார். 

அவ்வாறே, அதன் தொடர் உரை ஒன்றில் ஈஸா நபியை குளோனிங் முறையில் பிறந்த குழந்தை எனக் கூறி இறையாற்றலை நிராகரிக்காமல் நிராகரித்தார்.  

வழிகெட்ட பிரிவுகள் தொடரில் கலீஃபாக்கள் பற்றிய பல பொய்ச் செய்திகளை அப்பவே உழரி , வழிகெட்ட ஷீஆ மதத்தவரைப் போல வஹியோடு வாழ்ந்த அந்த உத்தமர்களை மார்க்கம் தெரியாத மடையர்கள் போல   நோக்கியும் தரம் தாழ்த்தியும் தனது தரம் கெட்ட  பணியை ஆரம்பித்ததை   இந்த குழப்பவாதியின் ரசிகர்கள் மன்றமான ஆடு மந்தைகளுக்கு விளங்கவே கிடையாது. 

அதில்  சொர்க்கவாதியான துன்னூரைன், மூன்றாம் கலீஃபா உஸ்மான் (ரழி) தொடர்பாக தனது பல அறியாமையை வெளிப்படுத்தி  இஸ்லாமிய வரலாற்றியல் அறிவிலும் தன்னை ஒரு ஜாஹில் 
முஜ்தஹிதாக நிரூபித்தார்.

சபாஷ்! சபாஷ்! ஷைத்தானை மிஞ்சிய அறிவொளி.

அந்த உரையின் தொடர் ஒன்றில்:
உஸ்மானை ஏன் கொல்ல மாட்டாங்க? அவர்தான் மாமனுக்கும் மச்சானுக்கும், தன்னுடைய உறவுக்காரங்களுக்கும் பதவி கொடுத்தவராச்சே என்றும் அதன் காரணமாகவை அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்களை அடக்க சப்போட்டுக்கு யாரும் வரல்ல என உழரித் தள்ளிய இவரை என்ன 
தரத்தில் நோக்குவது?

இவரின் கற்பனைகளுக்கு இஸ்லாமிய வரலாற்றில் பதிலளிக்கப்பட்டுள்ளது என்பது தனி விஷயம்.

இந்த குழப்பவாதியே இறைத் தூதரின் பிரிவுக்காக அழுத அவரின் அன்புமிகு தோழர்கள் பற்றி ஒரு கட்டத்தில் போனாப் போகுதுண்டு சோத்த கொடுத்தோம், தண்ணிய கொடுத்தோம். எங்களை ஆட்சி செய்ய வந்துட்டாய்ங்களே என்றும்,

அண்ணன் எப்ப சாவான் திண்ண எப்ப காலியாகும் என்றும்  நபியின் தோழர்கள் காத்திருந்தாங்க என தனது கீழ்த்தரமான புத்தியை ஸஹாபாக்கள் மீது போட்டு அமுலாக்கினார்..

2023 ஃபித்னா
---
பொதுவாக இவர் ஏதோ ஒரு ஃபித்னாவை இடைக்கிடையே கிளரிக் கொண்டே இருப்பது இயல்பே.

இறுதியாக பிள்ளையின் பிறந்த தின மீலாத்
கொண்டாட்டம் வீட்டுக்குள்ளே கூடும், நாட்டுக்குள்ளே கூடாது  போன்ற பொருளில் புதிய கருத்தொன்றை கிளப்பி ஓய்வதற்குள்
மீ்ண்டும்; நபித்தோழர்கள் பற்றி கற்பனை மார்க்கம் பேச ஆரம்பித்து விட்டார். .

இந்த உம்மத்தில் இறை உதிப்புக்குரிய ஒருவர் இருப்பாராக இருந்தால் அது உமரே (புகாரி) என்ற சிறப்பும் புகழும் பெற்ற  இரண்டாம் கலீஃபாவின் செயற்பாடுகள், ஆட்சி தொடர்பான நகர்வுகள்,  முடிவுகள்  என்பன 1400 ஆண்டுகளாக சரிகாணப்பட்டு வந்த நிலையில், அவரது போர் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் காழ்ப்புணர்ச்சி கலந்ததாக இருந்தது என்ற புதியதொரு புரளியை கிழரி விடப்பட்டுள்ளார் இந்த ஜாஹில் முஜ்தஹித்.

அதாவது அல்லாஹ்வின் வாள் என்ற பெயருக்குரிய மாவீரர் காலித் பின் வலீதின் பதவி நீக்கம், ஸஃத் பின் அபீவக்காஸ் (ரழி) போன்றோருடனான கலீஃபாவின் நடவடிக்கைகள் என்பன  உள்நோக்கம், பழி தீர்ப்பையும் கொண்டதாக இருந்ததாம்.

நல்லா கண்டு பிடிச்சாண்டாய்யா.
கண்டு பிடிச்சாண்டாய்யா..

அதனால் அதனை ஏற்க முடியாதாம். 

இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பு தேர்ச்சி பெற்ற இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்ற இவரது கற்பனைக் காரணங்களை விடத் தெளிவான, மாற்றமான ஒரு கூற்றை விளக்கமாக எடுப்பதா ? 

அல்லது ஆதாரமற்ற புதிய இவரது வியூகங்கள் கற்பனைகள் மூலம் கதை சொல்லி மக்களை வழிகெடுக்கின்ற உன்போன்ற இஸ்லாத்தின் ஸின்தீக்- உள் எதிரிகளை கருத்தை எடுப்பதா? என நமக்குத் தெரிய வேண்டும்.

பண்பாடற்ற ஹதீஸ் மறுப்பாளர்கள்.

தென்னிந்திய மண்ணில் இஸ்லாத்தை தூய வடிவில் சொல்வதாகக் கிளம்பிய பீ.ஜே. & உடைந்த கம்பெனிகள் வடிகட்டிய முஃதஸிலா மற்றும் கவாரிஜிய சிந்தனையின் மறுபடிவம் என்பது அவர்களின் எழுத்துக்கள் பேச்சுக்கள், கருத்துரைகள் மூலம் நமக்கு உறுதியாகின்றது.

 தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தின் முன்மாதிரிகளாக இருக்க வேண்டிய இவர்கள் அதன் சாபமாக இருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல.

ஏனெனில் இஸ்லாமிய உம்மத்தில் இருந்து இயக்க வடிவில் முதலில் தோன்றிய கவாரிஜ்கள்,
 நான்காம் கலீஃபா அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களையும் 
அவர்களோடிருந்த நபித்தோழர்களையும் 
அடுத்த அணியான முஆவியா ரழியல்லாஹு அன்ஹு  அவர்களையும் 
அவர்களோடிருந்த நபித்தோழர்களையும்
விமர்சித்தும்
குர்ஆனிய வசனங்களை தலைகீழாக விளங்கியும்  நேர்முரணான தமது விளக்கத்தை முன்வைத்துமே 
ஒரு பெரும் அறிஞர்கள் சமூகத்தைக் குறை கண்டனர்.

மட்டுமின்றி, அவர்கள் காஃபிர்கள், நரகவாதிகள் எனத் தீர்ப்பும் வழங்கி அவர்களை விட்டும் வெளியேறினர்.
அந்த அணிக்கு எதிராக போராடி தோல்வி கண்டனர், 
அதே தவறை முன்நிறுத்தியே  முஸ்லிம் சமூத்தை கூறுபோட்டனர்.

கலீஃபாவைக் கொலையும் செய்தனர்.
கலீஃபாவைக் கொடூரமாகக் கொலை செய்த இப்னுல் முல்ஜிம் என்ற காரிஜிய வழிகேடன்   
ضربة أريد بها وجه الله 
அல்லாஹ்வின் திருமுகத்தை இலக்காகக் கொண்ட கொலை என பெருமையாகக் கூறினான் என்பது தனிவரலாறு.

இவன் யாருமல்ல. நபித்தோழர்களில் சிறந்த மார்க்க மேதை எனப் புகழ்பெற்ற முஆத் பின் ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பாடம் படித்த திறமையான ஒரு மாணவன்.

ஒருவன் திறமைசாலி, வாதங்களை சரியாக முன்வைக்கின்றான் என்பதை அளவுகோலாகக் கொண்டு அவன் குர்ஆனை சரியாக விளங்கியவன் என மார்க்க அறிவில்லாத பொதுமக்கள் தீர்ப்பாளிகளாக இல்லாது; மார்க்கத்தை கற்றறிந்த அறிஞர்கள் எது சரி எது பிழை என்பதை சொல்ல வேண்டும் என்பதே இதன் மறு அர்த்தமாகும்.

அரபி அறிவில் சிறப்பு தேர்ச்சி பெற்ற கவாரிஜ்களே வழிதவறினர் என்றால், அரபி அறிவில் அரைகுறைவுள்ள ஒருவன் வழிதவறிப் போக  போகமாட்டான் என்பதற்கு உத்தரவாதமில்லை.
என்பதற்கு இந்த நாசகாரியின் கூற்று நல்லதொரு பாடமாகும்.

குர்ஆனிய வசனங்களை சகட்டுமேனிக்கு ஆதாரமாகக் காட்டுவோரே கவாரிஜ்கள்.

இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் இந்த வழிகேடர்கள் பற்றி அறிவித்த போது

يَخرُجُ قَومٌ يَقرَؤون القُرآنَ، لا يُجاوِزُ حَناجِرَهم، يَمرُقون من الدِّينِ، كما يَمرُقُ السَّهْمُ مِنَ الرَّميَّةِ.

குர்ஆனை நன்கு படித்த ஒரு சமூகம் வெளிப்படும்.
(அது) அவர்களின் தொண்டைக் குழியைக் கூட கடக்காது. 
வில்லில் இருந்து அம்பு வெளியேறுவது போன்று மார்க்கத்தில் இருந்து அவர்கள் ( விரைவாக) வெளியேறுவார்கள் எனக் கூறினார்கள்.
 (புகாரி, முஸ்லிம், அஹ்மத் மற்றும் பல...)

இது குர்ஆனைப் படித்த கவாரிஜிகளின் நிலையாகும்.

கவாரிஜ்கள், முஃதஸிலாக்களின் மற்றொரு கொள்கை ஹதீஸ்கள் குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுகின்றன எனக் கூறி அவற்றை ஒதுக்கித் தள்ளுவதாகும்.

நரகில் சென்றவர்கள் அங்கிருந்து வெளியேறமாட்டார்கள் என்ற பொருள் உடைய திருமறை வசனம் 

يَخْرُجُ مِنَ النّارِ مِن قالَ: لا إلَهَ إلّا اللَّهُ وكانَ في قَلْبِهِ مِنَ الخَيْرِ ما يَزِنُ شَعِيرَةً...

ஒரு தொலிக் கோதுமை அளவு தனது உள்ளத்தில் ஈமான் உள்ளவனும் நரகில் இருந்து வெளியேறுவான் 
(புகாரி, முஸ்லிம்). 

என்ற ஹதீஸ், பாவம் செய்த நிலையில் நரகம் செல்வோர் இறைத் தூதர், நபிமார்கள், முஃமின்கள் நல்லடியார்கள் என்போரின் சிபாரிசு மூலமாக நரகில் இருந்து வெளியேறுவர் என்ற ஆதாரப்பூராவமான ஹதீஸ்  குர்ஆன் வசனத்திற்கு முரண்படுகின்றன என்பதை முன்வைத்தே ஷஃபாஅத் பற்றிய ஹதீஸை  நிராகரித்தனர்.

இதை வைத்து பார்க்கும் போது கவாரிஜிய சிந்தனைக்கும் ஹதீஸைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டு ஆதாரத்தின் அடிப்படையில் பல நூறு வருடங்களாக பின்பற்றப்படும் ஆதாரப்பூராவமான ஹதீஸ்களை மறுக்கும் பீ.ஜே & உடைந்த கம்பெனிகளின் நடைமுறைக்கும் இடையில் மிகப்பெரிய கருத்தியல் ஒற்றுமை காணப்படுவதை மறுக்க முடியாது.

நபித்தோழர்களை நரகவாதிகள் என விமர்சிப்போரின் சிந்தனையில் செல்வோர், பிற முஸ்லிம்களை விமர்சிக்க இஸ்லாம் தீய வார்த்தைகளாக அடையாளப்படுத்தியவைகளைக் கொண்டு வர்ணிப்பதே அவர்கள் அந்த வழி நடப்போர் என்பதை உறுதி செய்யும் ஆதாரங்களாகும்.

ஹதீஸ் கலை இமாம்கள் ஒருவரை விமர்சிக்க 
سيء الحفظ
ஹதீஸ் மனனத்தில் சான்று கொடுக்க முடியாதவர்,

منكر الحديث 
ஹதீஸ் நிராகரிக்கப்பட்டவர்,

سكتوا عنه
அவரது அறிவிப்பை
யாரும் கண்டு கொள்வதில்லை,

ضعيف
பலவீனமானவர்,

ثقة  لكنه خالف الثقات
நம்பகமானவராயினும் நம்பகமான அறிவிப்பாளர்கள் பலருக்கு மாற்றமாக அறிவித்தவர்.

فيه لين 
அவரில் சிறிய பலவீனம் உள்ளது.

مستور 
அறிமுகமற்றவர் / தகவல் போதாதவர்

போன்ற அழகிய சொற்பிரயோகங்களைக் கையாள்வர்கள்.
 
இவர்களோ கூமுட்டை, கள்ள ஸலஃபிகள், முனாஃபிக்கள் சவூதி பணத்திற்கு  மார்க்கம் பேசுவோர் போன்ற கீழ்த்தரமான வார்த்தைகள்  மூலம் தமது எதிரணியினரை விமர்சனம் செய்வர்.

தேவைப்பட்டால் அண்ணன் அளவின்றி பொய் சொல்வார். கேட்டால் இப்ராஹீம் நபி தஃவா நோக்கில் பொய் சொன்னதாக விளக்கம் வேறு தருவார்.
அவரது குர்ஆன் விளக்க குறிப்பிலும் அதை நியாயப்படுத்தி விளக்கம் தந்துள்ளார்.

தென்னிந்திய முஸ்லிம் பொதுமக்களே! 
----
உங்கள் ஆலிம் உலமாக்கள் செல்லும் வழி 
இறைத் தூதர், 
ஸஹாபாக்கள், 
அவர்கள் வழிநடந்த இமாம்கள் சென்ற வழியா? என அடிக்கடி உங்கள் மனதோடு உரையாடிக் கொள்வதனால், நீங்கள் கப்ரு வணக்கத்தை ஆதரிக்கும் தேவை வராது. 

வழிதவறிய இயக்கங்களை பின்பற்ற வேண்டிய அவசியமும் ஏற்படாது .

பிற முஸ்லிம்களை நரகவாதியாகக் கருதும் தீவிரவாத சிந்தனையும் பிறக்காது என்பது எனது கருத்தாகும்.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்க அவைகளை ஆபாசமாக சித்தரித்த பீ.ஜே.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்க அவைகளில் இல்லாத வார்த்தைகளை ஆபாசமாக சித்தரிக்க இடைச்செருகல் செய்கிறார்கள் ...

ரசூலுல்லாஹ் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் தாயார் உம்மு சுலைம் மற்றும் அவர்களின் சகோதரி உம்மு ஹராம் வீட்டுக்கு சென்று வருவதையும் அங்கே உறங்குவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்கள்
 (புஹாரி, முஸ்லிம்)

அவர்கள் இருவரும் ரசூலுல்லாஹ்விற்கு மஹரமானவர்கள் தான் என்பதில் அறிஞர்கள் ஒன்றுபட்டுகிறார்கள்... 
அது பால்குடி அடிப்படையில் தாயின் சகோதரியா?
அல்லது தன் தந்தைக்கு சகோதரியா? 
என்பதில் தான் அறிஞர்கள் முரண்படுவதாக வரலாற்று ஆசிரியர் இமாம் நவவீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்
قال النووي رحمه الله :

قال رحمه الله : ( اتفق العلماء على أن أم حرام كانت محرما له صلى الله عليه وسلم. واختلفوا في كيفية ذلك، فقال ابن عبد البر وغيره : كانت إحدى خالاته من الرضاعة. وقال آخرون : بل كانت خالة لأبيه أو لجده لأن عبد المطلب كانت أمه من بنى النجار ) اهـ .

இந்த ஹதீஸை  மறுக்க எவ்வித ஆதாரமும் இல்லாமல் ரசூலுல்லாஹ் அன்னிய பெண்களின் வீட்டிற்கு தான் சென்று வந்தார்கள், என இட்டுக்கட்டி சொல்கிறார் பீ.ஜே... 
இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?

அதே போல ரசூலுல்லாஹ் அவர்களின் மடியில் படுத்தாக எந்த வார்த்தையும் ஹதீஸில் இல்லை...
அவர்களிடத்தில் தூங்கினார்கள் (يقيل عندها) அவர்கள் வீட்டில் தூங்கினார்கள் (في بيتها) என்று தான் ஹதீஸில் வார்த்தை வருகிறது... ஆனால் அதை மடியில் தான் படுத்தார்கள் என ஆபாசமாக சித்தரிக்க முயல்கிறார் பீ.ஜே... இதைப்பற்றி என்ன சொல்ல?

இத்தகைய பித்தலாட்டம் செய்து ஆபாசமாக காட்டித்தான் ஹதீஸ்களை மறுத்து வருகிறார்கள்...

இந்த ஹதீஸ்களை பதிவு செய்த இமாம் புஹாரி, முஸ்லிம், இமாம் அஹ்மத், இமாம் நஸாயீ போன்றவர்கள் அனைவரும் ரசூலுல்லாஹ்வின் மீது தவறாக சித்தரித்த ஹதீஸை பதிவு செய்து ரசூலுல்லாஹ்வை இழிவுபடுத்துகின்றனர் என்பதை தான் சூசகமாக கூறுகிறார் பீ.ஜே.

தன் அறிவு சொன்னதை சரி என நிலைநாட்ட ரசூலுல்லாஹ்வின் மீதும் அந்த ஹதீஸை அறிவித்த நம்பகமான அறிவிப்பாளர்கள் அனைவரின் மீதும் 
அதை பதிவு செய்த இமாம்கள் மீதும் அவதூறை அள்ளி வீசுவதை என்றைக்கு விளங்க போகிறார்களோ? தெரியவில்லை...

பீ.ஜே. உயிரோடு வணங்கப்படும் தெய்வாமானால், அவரது அமைப்பு சுவர்க்கமாகுமா?

தமிழ் பேசும் முஸ்லிம் தஃவா களத்தில் பேசு பொருளாவும், விவாத அரங்காகவும் மாறிவிட்ட சமாச்சாரமாக இருந்த பீ.ஜே.யின் ஹதீஸ் மறுப்புக் கொள்கை மற்றும் அவரை கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் தக்லீத் எற்ற வழிகேடு திசை மாறி, தற்போது வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சகோதரர் பீ.ஜே. உயிரோடு வணங்கப்படும் தெய்வத்தின் நிலைக்கு மாற்றப்பட்டு விட்டார். இந்த சந்தர்ப்பத்தில் பீ.ஜே. வின் தக்லீத் கடந்து வந்த பாதை தொடர்பாக இங்கு நாம் சுருக்கமாக பேசுகின்றோம்.

1990 காலப் பகுதி…

1990-2000 காலப் பகுதி தமிழ் பேசும் முஸ்லிம் தஃவா களம் பீ.ஜே. யின் கவர்ச்சிகரமான பேச்சால் பாரிய எழுச்சியை நோக்கிப் பயணித்தாலும் அவ்வப்போது அவரது முரண்பான கருத்துக்களும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன என்பதை அறிஞர்கள் சுட்டிக் காட்டியே வந்தனர்.

அவற்றை இனம் காண முடியாத அளவு அவர் மீதுள்ள மோகம் ஏழு வருடம் மார்க்க கல்வி படித்த மௌலவிகளின் கண்களையே மறைத்தது என்றால் சாதாரண பொது மக்கள் பற்றி கேட்கவா வேண்டும்?

பீ. ஜே. கிளறி விட்ட புதுமைகள்…

மனிதனை ஷைத்தான் தீண்டலாமா? ஒரு காலத்தில் முடியும். பின்னர் முடியாது.

நபித்தோழர்கள் பதவிக்கா தமக்குள் சண்டை இட்டுக் கொள்ள வில்லையா?

உஸ்மான் (ரழி) அவர்கள் அரசியல் ரீதியாக தனது உறவினர்களை முற்படுத்தியதால் அழிவை சந்தித்தார்கள்.

நபித்தோழர்கள் பதவி மோகம் கொண்டவர்கள். அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்ப காலியாகும் என்ற நிலையில் நபி (ஸல்) அவர்களின் மரணத்தை எதிர்பார்த்திருந்தனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதை நம்ப முடியாது. ( பிந்திய நிலைப்பாடு)

கொடுத்த பொருளுக்கு ஆயுளில் ஒரு தடவைதான் ஸகாத்.

அல்லாஹ் அடிவாரத்திற்கு வருவதில்லை, அவனது அருளே வருகின்றது.

பன்றியின் மாமிசம்தான் குர்ஆன் கூறும் நேரடி வார்த்தை.

ஈஸா நபி (அலை) அவர்கள் குளோனிங் முறையில் பிறந்ததன் காரணமாகவே அவரால் பேச முடிந்தது.

ஆமீன் சப்தமில்லாமலும் கூறலாம்.

ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படாது. (199 கோவை காதியானிகள் விவாதத்தில்).

ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படும். அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருந்தாலும் சரி. (1998- 2000 ற்குப்).

சர்வதேசப் பிறையே சரி, 1999.

உள்நாட்டுப் பிறையே சரி. சர்வதேசப் பிறை பிழை 2000-முதல்)

சூனியம் உண்டு நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. அவர்கள் அதில் இருந்து பாதுகாக்கப்பட்டார்கள். ( 1984- 1998 வரை )

TNTJ சூனியத்தை நம்பாத முஸ்லிம்கள். மற்ற தவ்ஹீத் ஜமாத்துக்கள் சூனியம் இருப்பதாக நம்புவதால் அவர்கள் முஷ்ரிக்கள்.
எனவே அவர்களுக்குப் பின்னால் தொழ முடியாது.

முஸ்லிமைக் காபிர், நரகவாதி எனக் கூற யாருக்கும் உரிமை இல்லை. (2003வரை)

TNTJ தவிர்ந்த ஏனைய அனைத்து பள்ளிகளும் தொழக் கூடாத மஸ்ஜித் ளிரார்களாகும். مسجد الضرار எனவே அங்கு தொழ முடியாது.

மாற்றுக் கருத்துடைய தவ்ஹீத் மேடைகளில் ஏறக் கூடாது.

நபித்தோழர்களின் வழி முறை ஆதாரமாகும். (1992 உமர் அலி விவாதத்தில்)

TNTJ மட்டுமே சுவனத்து ஜமாத். 2018 ஜூலை வரை.

நமது ஜமாத் மட்டுமே குர்ஆன் ஹதீஸை மாத்திரம் பின்பற்றும் தூய ஜமாத்.

மற்ற சகல தவ்ஹீத் ஜமாத்துக்களும் குர்ஆன் ஹதீஸ், ஸஹாபாக்கள் என மூன்று அடிப்படைகளைப் பின்பற்றுவோர் போன்ற பல மார்க்க அதிசயங்களைக் கூறி தனது கொள்கைக்கும் அமைப்புக்கும் ஆள் சேர்த்தார். பீ.ஜே.

பீ.ஜே க்குரிய அறிஞர்கள் மறுப்பு பாமரர்கள் எதிர்ப்பாகியது…

பீ.ஜே. சொல்கின்ற பல மார்க்க விளக்கங்களை முறையாகக் கற்ற அறிஞர்கள் ஆதாரத்துடன் தெளிவாக மறுக்கின்ற போதும் பீ.ஜே சொல்வது பிழையாகுமா? பீ.ஜே தவறாகச் சொல்வாரா? போன்ற வாதங்கள் மூலம் தம்மை சமாதானப்படுத்திக் கொள்ளும் மனோ நிலை மூலமும் பாமர மௌலவிகள், மற்றும் பொது மக்கள் என்போர் இருண்ட கட்டத்தில் இருந்தததன் காரணமாக பீ.ஜே வின் கருத்தக்களை அவர்களால் புறம் தள்ள முடியாத நிலையில் குர்ஆன் ஹதீஸ் அங்கீகாரத்தோடு தக்லீத் வளரத் தொடங்கியது.

அத்துடன், தாயிக்கள் பலர் பீ.ஜே. யின் பயான்களைக் கேட்டு வாந்தி எடுத்தனர். பாமர மௌலவிகள் பலர் இந்த தக்லீத் நோய்க்குள் அகப்பட்டுக் கொண்டனர்.

பீ.ஜே. மோகம் கொண்ட, அவரது சீடிக்களைக் கேட்கும் அப்பாவி பொது மக்கள் பீ.ஜே. யின் கருத்துக்கள் மார்க்கத்திற்கு நேர் முரணானவையாக இருப்பதாகக் கூறப்பட்டாலும் அவற்றை தெளிவாக மறுக்கும் கற்றறிந்த பிரசித்த பெற்ற ஆலிம் உலமாக்களின் மறுப்புக்கள் சரியானவையாக இருந்துனாலும் அவற்றை அங்கீகரிக்கும் மனோபாவத்தில் இருந்து சாதாரண மவ்லவிகளே விடுபட மறுத்தோடு பொதுமக்களையும் ஆலிம் உலமாக்ஙளிடம் இருந்து தூர விலகி இருக்குமாறு பீ.ஜே .என்ற நாமப் போதயோடு போதனை செய்தனர் .

பீ.ஜே. சொல்வது பிழையாகுமா ? எனக் கேட்ட பொதுமக்கள் சில போது சூறத்துல் ஃபாத்திஹாவைக் கூட சரிவர ஓதத் தெரியாதவர்களாக இருந்தனர். இவர்கள் தான் அறிஞர்களை விமர்சனம் செய்தனர்.

இந்த மக்களின் பலவீனங்களை சரியாக அடையாளம் கண்டு கொண்ட பீ.ஜே. தனது அடுத்த கட்ட நகர்வாக பல காரியங்களைச் செய்தார்.

நாமே பரிசுத்தமானவர்கள். மற்றவர்கள் அரபு நாட்டு பணக்கொள்ளையர்கள் என்ற பொய்ப் பிரச்சாரம்.

அவர்கள் சவூதிப் பணத்திற்காக சோரம் போனவர்கள். நாம் சொந்தக் காலில் நிற்பவர்கள். மக்கள் பணத்தில் நாம் ஜமாத் நடத்துகின்றோம்.

எம்மைத் தவிர மற்ற தவ்ஹீத் அமைப்புக்கள் அனைத்தும் ஸலஃபுக்களை பின்பற்றுபவர்கள். நாம் மாத்திரமே குர்ஆன் சுன்னாவை மட்டும் பின்பற்றும் உத்தமர்கள். எனவே அவர்களின் சீடிக்களைக் கேட்பதோ, பயான்களில் அமர்வதோ கூடாது.

அவர்கள் சூனியக் கும்பல், சூனியத்தை நம்பும் முஷ்ரிகுகள் போன்ற விஷமப் பிரச்சாரத்தின் மூலம் தன்னை நல்லவனாக்கி, தனது ஜமாத்தை பரிசுத்தப்படுத்திப் பேசி பல மக்களை தன்பக்கம் ஈர்த்து பயணம் செய்த பீ.ஜே என்ற தனிமனதனப் படகு 2018 ல் கவிழ்ந்தது.

தனது பரிசுத்த ஜமாத்தை ஆட்டு மந்தைகளாக்கிய பீ.ஜே.

இதுவரை காலமும் தான் பயணித்த கடல் நன்னீர் கடல் என்ற பீ.ஜே. சென்ற 31/08/2018 நேரடி live நிகழ்ச்சியில் அந்தப் பழம் புளிக்கும் என்று கூறி தனது ஜமாத்தை தாறுமாறாக விமர்சனம் செய்தார்.

பீ.ஜே. யின் உறுதி செய்யப்பட்ட அந்நிய பெண் ஒருவருடனான தகாத உறவு, மற்றும் பாலியல் குற்றம் போன்ற உறுதி மிக்க குற்றங்கள் சுமத்தப்பட்டு அவற்றை அவர் ஒப்புக் கொண்ட நிலையில் ஜமாத்தின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த நேரத்தில் அவர் மீண்டும் களத்தில் இறங்கி,

தான் சுத்தவாளி,

எனக்கு ஜமாத் அநீதி இழைத்து விட்டது,

என்னைப் பழிவாங்கி விட்டது,

ஜமாத் தடம் புரண்டு விட்டது,

நிருவாகிகள் ஆட்டு மந்தைகள்,

கோடிக் கணக்கில் கொள்ளையடித்து விட்டனர்

போன்ற அடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுக்களை தனது வளர்ப்பு பிள்ளைக்கு எதிராக பீ.ஜே. வெளியிட்டதோடு தான் புதிய ஜமாத் ஆரம்பிக்கப் போவதில்லை, ஆனால் மக்கள் இது பற்றி தலைமையைத் தட்டிக் கேட்க வேண்டும் போன்ற சாணக்கிய வார்த்தைகளோடு மறைந்தார் பீ.ஜே.

வடிகட்டிய தக்லீத் வணக்கம் ஆரம்பாகியது…

பீ.ஜே. பாலியல் குற்றச்சாட்டில் இருந்து தன்னை பாதூகாத்துக் கொள்ள பல பொய்களை ஜமாஅத் மீது அபாண்டமாகக் கூறி இருப்பதன் காரணமாக TNTJ வினர் “தவ்ஹீத் ஜமாத்” என்ற தமது முக நூலில் பீ.ஜே.யின் அனைத்து குற்றச் சாட்டுகளுக்கும் வரிக்கு வரி பதில் அளித்துள்ள நிலையில் இலங்கை போன்ற நாட்டில் பீ.ஜே. யை இவ்வளவு காலமும் உத்தமராக ஏற்று, பிரச்சாரம் செய்து வந்த SLTJ தம்பிகள் பீ.ஜே. ஒரு பொய்யர், பொய் சொல்கின்றார், TNTJ மாநில நிருவாகத்தின் கீழ் நாம் இயங்குவதா? இல்லையா என்பதை முடிவு செய்ய இருபக்க நியாயங்களையும் நாம் கேட்டு விட்டு முடிவு செய்வோம்? என்று SLTJ அமைப்பினர் அறிவித்த நிலையில் முத்திய பீ.ஜே பக்தர்களில் இருவர் அந்த அமைப்பில் இருந்து திடீரென தற்காலிமாக நின்று கொள்வதாக அறிவித்ததோடு இன்னும் சில பக்தர்களையும் தம்பக்கம் வளைத்துக் கொண்டது பற்றி SLTJ அமைப்பின் செயலாளர் தனது விசனத்தை வெளியிட்டு பீ.ஜே. மீதுள்ள இதற்கான முழுக் காரணம் பக்திதான், இல்லையானால் இவ்வளவு காலமும் மௌனிகளாக இருந்து கொண்டு பீ.ஜே.பேசிய பின்னால் ஏன் பேச வேண்டும் என்றும் கடுமையகச் சாடியுள்ளார். உண்மையும் அதுதான்.

எல்லை கடந்த அறிஞர்கள், பெரியவர்கள் மோகத்தின் இறுதி நிலை…

ஒரு அறிஞர், அல்லது நல்லமனிதன் பேரில் ஏற்படும் அளவு கடந்த மரியாதை, அர்கள் மீதுள்ள மோகம் அவர்களைப் பற்றி துதிபாடவும், தவறுக்கு அப்பாற்பட்டவர்களாக அவர்களை எண்ணவும், சித்தரிக்கவும் அவருக்காக வாதாடவும், கூட்டம் சேர்க்கவும் மனிதர்களைத் தூண்டுவதை நாம் மறுக்க முடியாது.

ஷீஆக்கள் தமது இமாம்கள் தவறுகள் செய்யாதவர்கள், அவர்களுக்கு தெய்வீகத் தன்மை இருக்கின்றது எனப் பிரச்சாரம் செய்வதற்கு முன்னால் தமது இமாம்கள் பேரில் பல பொய்யான சிறப்புக்களை இட்டுக் கட்டி அவரின் நேசத்தை பாமர மக்கள் மனங்களில் பதிவு செய்வர்.
பின்னர், அவர் பேரில் பல பொய்களைச் சொல்லி பாமர மக்களை வழிகெடுப்பர்.

வழிகேடர்கள் அனைவரும் இவ்வாறான வழிமுறைகளைத்தான் கையாழுவர். பீ.ஜே. என்பவரின் நகர்வும் இப்படித்தான்.

உலகில் ஒரு மனிதன் தெய்வ நிலைக்கு மாற்றப்பட அந்த மனிதன் மீது கொண்ட குருட்டு பக்தியும் ஒன்றாகும். 

வேதம் கொடுக்கப்பட்ட மக்கள் தமது மதகுருக்கள், மற்றும் அறிஞர்கள் போதிப்பதை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றியதால் பின்வரும் இறை வசனம் இறங்கியது.

اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا إِلَٰهًا وَاحِدًا ۖ لَّا إِلَٰهَ إِلَّا هُوَ ۚ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ (التوبة – ٣١ )
﴿٣١ التوبة﴾

அவர்கள் தமது அல்லாஹ்வை விடுத்து தமது மத குருமார்கள் மற்றும் துறவிகளை மற்றும் ஈஸா மஸீஹ் அவர்களையும் கடவுளர்களாக எடுத்துக் கொண்டனர். தனித்த வணங்கி வழிபடத்தகுதியான ஒரே அல்லாஹ்வை மட்டுமே அன்றி, வேறு யாரையும் வணங்க அவர்கள் கட்டளையிடப்படவுமில்ல. அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.
( அத்தவ்பா: 31)

மேற்படி வசனம் அவ்லியா வழிபாடு, கப்ரு வணக்கம் செய்வோர், மற்றும் பீ.ஜே போன்ற வழிகேட்டு சிந்தனைகளை விதைப் போரை தக்லீத் செய்தல், அவர் சொன்னதோடு தாம் கண்டு பிடித்தது போன்று சொல்லும் அவரது பக்தர்கள் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மேற்படி வசனத்தை நபி அதீ பின் ஹாதிம் (ரழி) அவர்கள் முன்னிலையில் (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டிய போது,

قال عدي بن حاتم قلت يا رسول الله إنهم لم يكونوا يعبدونهم قال أجل ولكن يحلون لهم ما حرم الله فيستحلونه ويحرمون عليهم ما أحل الله فيحرمونه فتلك عبادتهم لهم . (سنن الترمذي/ سنن البيهقي الكبرى.

அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் அந்த மதகுருமார்களை வணங்கவில்லையே எனக் கூறியதும் , ஆமாம். இருந்தாலும் அவர்கள் (தமது மனோ இச்சைப்படி) எதை ஹலாலாக்கினார்களோ அதனை அம்மக்கள் ஹலால் என்றும், அவர்கள் எதனைத் தடை செய்தார்களோ அதனை அம்மக்களும் தடுத்தும் வாழ்ந்தார்கள் தானே! எனக் கேட்க. அதீ (ரழி) அவர்கள் உண்மைதான் எனப் பதில் அளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவர்களை வணங்குவது என விளக்கினார்கள். (நூல்: சுனன் திர்மிதி, அல்பைஹகி)

இதைத்தான் இன்று பீ.ஜே. பக்தர்கள் களத்தில் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு காலத்தில் பீ.ஜே. மத்ஹபு, மற்றும் அவ்லியா, தர்கா வழிபாடு செய்த மக்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த போது எந்த வசனங்களையும் ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டி பிரச்சாரம் செய்தாரோ அதே ஆதாரங்களை முன் வைத்து பீ.ஜே யின் பக்தர்களை திருத்த வேண்டியதொரு துர்பாக்கிய நிலையில் அவரைப் பின்பற்றும் தாயிக்கள் காணப்படுகின்றனர்.

பீ.ஜே.வின் நிலையோ அதைவிடப் பரிதாபகரமானதாகும். 

ஆரம்பம் காலங்களில் தோன்றிய ஜஹ்மிய்யா, கவாரிஜ், முஃதஸிலா, ஷீஆ போன்ற வழிகெட்ட பிரிவுகளுக்கு எதிராக ஆரம்ப கால ஸலஃப் அறிஞர்களால் முன்வைக்கப்பட்ட மறுப்புக்களைக் கொண்டு பீ.ஜே.வின் கருத்துக்கள் மற்றும் போக்குகள் மறுப்புக்கப்படும் பரிதாபகரமான நிலையில் பீ.ஜே உள்ளார்.

அதனால் தமது புத்திகளை பீ.ஜே. விடம் அடகு வைத்த அவரது ஆதரவாளர்கள் தடுமாற்றம், அறியாமை, வழிகேடு போன்ற குழப்பங்களில் இருந்து மீள முடியாத சூழ்நிலையில் தாமும் குழம்பி, மக்களையும் குழப்பி வாழ்ந்து வருகின்றனர். இதுதான் இப்போதும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.

சமூக சேவை, தொண்டுகள் மூலம் வழிகேடுகளைச் சரி காணலாமா?

பீ.ஜே. தனது வழிகேட்டை மக்கள் முன் கொண்டு செல்வதாக அறிஞர்கள் முன்வைக்கும் குற்றச் சாட்டுகளை அவரது ஆதரவாளர்கள் மக்களுக்கு தாம் செய்கின்ற சமூக சேவைகளைக் காரணமாக முன்மொழிந்து பீ.ஜே யின் வழிகேடுகளுக்கு அங்கீகாரம் பெற்றுக் கொடுக்க முயற்சி செய்கின்றனர்.

இரத்த தானத்தில் முதலிடம்,

வெள்ள நிவாரணத்தில் முதலிடம்,

அதில் முதலிடம், இதில் முதலிடம் போன்ற சவடால்கள் மூலம் தம்மை நேர்வழி நடப்போராக இவர்கள் சித்தரிக்க முயல்வது “பித்அத்” வாதிகள் தமது அமல்களுக்கு அல்லாஹ் கூலி தருவான் என நம்புவது போன்றதாகும்.

பீ.ஜே.யின் தொண்டு சேவைகளை விட கிறித்தவ மக்கள் பன்மடங்கு பாரிய சேவைச் செய்கின்றனர். அவர்களும் மற்ற மக்கள் மீது அன்பு , பாசம், இரக்கம் கொண்டவர்கள்.

அவர்கள்பற்றி அல்குர்ஆனில் பின்வருமாறு கூறப்படுகின்றது.

وَجَعَلْنَا فِي قُلُوبِ الَّذِينَ اتَّبَعُوهُ رَأْفَةً وَرَحْمَةً وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانِ اللَّهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا ( سورة الحديد الآية : 27

அவரை (ஈஸாவை) பின்பற்றியவர்களின் இதயங்களில் அன்பு, பாசம் கருணை என்பதை நாம் ஆக்கினோம். இருந்தும் , அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை வேண்டியவர்களாகவே அன்றி அவர்களாகவே உருவாக்கிக் கொண்ட துறவறத்தை நாம் அவர்கள் மீது விதியாக்கவுமில்லை. இருந்தாலும்அதையும் அவர்கள் சரிவரப் பேணி நடக்கவில்லை. ( அல்ஹதீத்- 27)

கிரித்தவ மதகுருமார்கள் சமூகத்தில் காணப்பட்ட நற்பண்புகளோடு சேர்த்து அவர்கள் வேத வழிகாட்டல் இன்றி உருவாக்கிக் கொண்ட பித்அத் பற்றியும் எடுத்துரைக்கும் இந்த வசனம் பீ.ஜே. வின் தொண்டுகளையும் ஆதாரமின்றி அவர்
உருவாக்கிய ஜமாத் பைலாவையும் உள்ளெழுந்தவாரியாக மறுப்பதை நாம் உணர முடியும்.

பீ.ஜே.வைப் பின் பற்றினால் சொர்க்கமும்? இமாம்களைப் பின்பற்றினால் நரகமுமா?

இதுதான் இன்றைய கள நிலவரமாகும். பீ.ஜே.விடம் காணப்படும் வழிகைடுகளில் துளியும் இல்லாத நபித்தோழர்களை தவ்ஹீத் அறிஞர்கள் துணைக்கு ஆதாரமாக எடுத்துக் கூறுவது, ஹதீஸ்கலை அறிஞர்கள், ஃபிக்ஹ் துறை சார்ந்த இமாம்கள் போன்ற இந்த உம்மத்தின் அறிவுப் பொக்கிஷங்களை மேற்கோள் காட்டிப் பேசுவது வழிகேடாகப் பார்க்கும் பீ.ஜே. பக்தர்கள்,

உலக முஸ்லிம் அறிஞர்கள் சபை அங்கீகரித்த ஆதாரபூர்வமான பல நூறு ஹதீஸ்களை மறுத்து, இஸ்லாத்தின் பெயரில் சுத்த வழிகேடுகளை விதைத்த பீ.ஜே. வின் போதனைகளை சுவனத்துப் போதனைகளாக பார்க்கும் நிலை தமிழ் முஸ்லிம் தஃவாக் களத்தில் பிரச்சாரம் செய்வோரிடம் காணப்படுவதாலேயே பீ.ஜே. தனது வழிகேடுகளை இன்னும் இன்னும் விதைத்துக் கொண்டிருக்கின்றார்.

பீ.ஜே. பக்திமான்கள் தமது கிளைகளுக்கு பயான் செய்யப் போகும் போதும் கூட அண்ணன் பேசிய அனைத்து கருத்துக்களையும் ஒரு முறைக்கு பல முறை செவிமடுத்த இன்புற்ற பின்னரே தமது உரைகளை நிகழ்த்தும் வடிகட்டிய பச்சை தக்லீத் கும்பல்களாக இருந்து கொண்டு மற்ற ஜமாத்துக்களை விமர்சனம் செய்வது மக்கா காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களை மதம் மாறியவர் எனப் பிரச்சாரம் செயதது போன்றதாகும்.

பின் வரும் குர்ஆன் வசனத்தைப் படியுங்கள்

يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا (66) وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا(67 )
(الأحزاب/ 67) رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا (68)

அவர்களின் (இறை மறுப்பாளர்கள், இணைவைப்பாளர்கள்) போன்றோரின் முகங்கள் நரகில் போட்டுப் புரட்டப்படும் (மறுமை) நாளில் அவர்கள் எமக்கு ஏற்பட்ட கைசேதமே! நாம் அல்லாஹ்வுக்கும் அவனது இந்த தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்திருக்க வேண்டி இருந்துதே! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாம் எமது பெரியவர்கள்( மௌலவிகள்) தலைவர்களை நாம் வழிப்பட்டு விட்டோம். எமது இரட்ஙனே! அதனால் அவர்கள் எம்மை வழிகெடுத்து விட்டனர். எனவே அவர்களுக்கு இரு மடங்கு வைதனையை அவர்களுக்கு நீ வழங்கி, அவர்களை பெரிய அளவில் சபிப்பாயாக! என்றும் கூறுவார்கள். ( அல்அஹ்ஸாப்- 66-68)

அன்பான பொது மக்களே..

இதுதான் பீ.ஜே. உருவாக்கிய தவ்ஹீத் ஜமாத்தின் தற்போதைய கள நிலைவரம்.

அவரது வழகேடுகள் குர்ஆன், ஹதீஸ் பெயரில் அரங்கேற்றப்பட்டு மார்க்கத்தில் பற்றுள்ள இளைஞர்கள் பலர் வழிகெடுக்கப்படுகின்றனர்
அவர்கள் அறிவியல் பண்பாடு, நாகரீகம் என்ற உயர் விழுமியங்களில் இருந்து முற்றாகத் தூரமாக்கப்பட்டு பிற முஸ்லிம் மக்களின் மானங்களோடு விளையாடும் ரவ்டிகள் போன்று உலாவருகின்றனர்.

பீ.ஜே யின் வழிகேடுகளை நியாயப்படுத்தி நபித்தோழர்கள், இமாம்கள், முஸ்லிம் அறிஞர்கள் எனப் பலரை தாறுமாறாக விமர்சனம் செய்கின்றனர்.  பீ.ஜே. என்பவர் நமது முன்னோர்களின் சிறப்பு, அறிவு, பக்குவம் எதிலும் சேர்க்க முடியாத ஒருவர் என்பதை இவர்கள் மறந்தே செயல்படுகின்றனர்.

இவர்கள் பற்றி நாம் எச்சிரிக்கை செய்தாலோ, மறுப்புக்கள் எழுதினாலோ ஸலஃபிக்கள், மதனிக்கள் மக்களை வழிகெடுப்போர், சவூதிப் பணத்திற்காக வேண்டியதைப் பேசுவோர் என திசை திருப்பி உங்களை தொடர்ந்தும் வழிகெடுப்பது பற்றி நீங்கள் அவதானமாக இருக்க வில்லையானால் நிச்சயமாக நீங்களும் உங்கள் ஈமானைக் கெடுத்துக் கொள்ள நேரிடும் என்பதை அன்பான எச்சரிக்கை செய்கின்றோம்.

பீ.ஜே. உண்ட நபித்தோழர்களின் மாமிசம்

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அவர்களின் மரணித்தின் பின்னால் இரு கலீஃபாக்களின் கொலைகள் இந்த சமூகத்தின் முதுகில் பாய்ச்சப்பட்ட இரு கூரான அம்புகளாகும் .

அவ்விருவரில், முதலாவது நபித்தோழர் கலீஃபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள்,

இரண்டாவது நபித்தோழர் நபி ஸல் அவர்களின் மருமகன் கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள்.

இவ்விருவரும் நபி (ஸல்) அவர்களால் الشهيدان இரு ஷஹீத்கள் என நன்மாராயம் கூறப்பட்ட சுவனத்து வாரிசுகள்.

பீ.ஜே. உண்ட மாமிசம்?

கலீஃபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்களுக்கு உம்ராவின் சட்டம் தெரியாது எனப் பொய் சொன்னதோடு அவர் தொடர்பாக வந்த செய்தியை இருட்டிப்புச் செய்தார். (பார்க்க அல்ஹாதாயா.காம் – அப்பாஸ் அலி மிஸ்க்)

உமர் பின் கத்தாப் அவர்களுக்கு தயம்மத்தின் சட்டம் தெரியாது.

கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) அவர்களின் வரலாறு பற்றி விமர்சனம் செய்யும் பீ.ஜே. உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சியில் அவரது குடும்பத்தினர் ஆட்சி, நிருவாகத்துறைகளில் முன்னுரிமைப்படுத்தப்படதாகவும் அதனால் மதீனாவில் நபித்தோழர்கள் கூட அவருக்கு சப்போர்ட் பண்ண வரவில்லை என்றும் உளறி இந்த இரு ஷஹீத்களின் மாமிசத்தை உண்டார். (பார்க்க பீ.ஜே பேசிய வரலாறு)

அதில் அவர் ஏன் உஸ்மான் கொல்லப்பட மாட்டார்? எனக் கேட்டு மாமனுக்கும் மச்சானுக்கும் பதவி கொடுத்தாரே அதற்காகவே கொல்லப்பட்டார் என மிகக் கேவலமாகப் பேசியுள்ளார். 

மதீனத்து அன்ஸாரிகள் நபித்தோழர்கள் பற்றி:

பதவி வெறி பிடித்தவர்கள், வந்தா வா? போனாப் போகுதுண்டு சாப்பாடு கொடுத்தோம், உண்ணக் கொடுத்தோம். புகலிடம் கொடுத்தோம். இப்ப ஆட்சியப் பிடிக்க வந்திட்டாய்ங்க என்ற பொருளில்…

மேலும்… அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்ப காலியாகும்? என்ற நிலையில் நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின் ஆட்சிக்காக நபித்தோழர்கள் காத்துக் கிடந்தார்களாம்.

அம்று பின் ஆஸ் ஒரு கிரிமினல்

அலி ரழி அவர்களின் ஆட்சியில் முஆவியா (ரழி) தரப்பில் இருந்து சமரசம் பேச வந்த அம்று பின் ஆஸ் ஒரு கிரிமினல்…

கருத்தரிப்பு உறை பற்றி பற்றி அபூஹுரைரா அவர்களுக்கு தெரியுமா? பெரிய அதிசயக் கேள்வி!!!

நபித்தோழர்களை விட நாம் விளக்கசாலிகள்

இதைச் சொன்ன அண்ணன் அவர்கள் நபித்தோழர்களின் மாமிசத்தை உண்ணாதவராம், அதைச் சுட்டிக் காட்டுவோர் வழிகெட்ட அண்ணன் மாமிசத்தை உண்ணுவோராம் என சிலர் வாதிடுவது எதைச் சொல்கின்றது?

அல்லாஹ் நம் அனைவரையும் நமது தூதர் வழியில், நபித்தோழர்களைப் பொருந்திக் கொண்ட வழியில் நாமும் சென்று மார்க்கத்தில் நிலைத்திருக்க அருள் செய்வானாக!



Previous Post Next Post