பித்‌அத்வாதிகள்‌ வழிகேடர்களுக்கு மறுப்பு கொடுப்பதின்‌ அவசியம்

-அஷ்‌ ஷெய்க்‌ அபூ முஆத்‌ ஹுஸைன்‌ இப்னு மஹ்முத்‌ அல்‌ கதீபீ ஹபிழஹுல்லாஹ்‌.

அல்லாஹ்‌ ஸுபஹானஹு வ தஆலா தன்னுடைய சங்கைமிக்க அல்‌- குர்‌ஆனிலே கூறுகிறான்‌:

அன்றியும்‌ வசனங்களை இவ்வாறே நாம்‌ விவரிக்கின்றோம்‌. குற்றவாளிகளின்‌ வழி (இன்னதெனச்‌ சந்தேகமறத்‌ தெளிவாகி விடுவதற்காகவும்‌ (இவ்வாறு விவரிக்கின்றோம்‌) (ஸுரா அல்‌-அன்‌ஆம்‌ 55)

மேற்கண்ட வசனத்தில்‌ அல்லாஹ்‌ தபாரக்‌ வ தஆலா தனது வேதமாகிய அல்‌-குர்‌ஆன்‌ இறக்கப்பட்டதின்‌ ஒரு ஹிக்மத்தை விவரிக்கின்றான்‌. இதன்‌ மூலம்‌ கெட்டவர்கள்‌, பாவிகள்‌, காஃபிர்கள்‌, முஷ்ரிகீன்கள்‌, அசத்தியத்தில்‌ இருப்பவர்கள்‌. முனாஃபிக்குகள்‌ ஆகியோரின்‌ பாதையை அல்லாஹுத்‌ தஆலா தெளிவுபடுத்துவதற்காகவும்‌; மேலும்‌ அவர்களுடைய வழிகேடுகள்‌ என்ன, அவர்களுடைய சிந்தனைகள்‌ என்ன, அவர்களுடைய போக்கு என்ன என்பகையும்‌ தெளிவுபடுத்துவதற்காகவும்‌ இந்த குர்‌ஆனை இறக்கி வைத்துள்ளதாக கூறுகின்றான்‌.

அதேபோன்று சத்தியத்தில்‌ இருப்பவர்களுக்கு உதவி புரியும்‌ முகமாகவும்‌ ஆதரவாகவும்‌ அல்குர்‌ஆனை அல்லாஹ்‌ இறக்கி வைத்துள்ளான்‌. அதனால்‌ தான்‌ அல்லாஹ்‌ ஸுபஹானஹு வதஆலா கூறுகின்றான்‌:

அன்றியும்‌. “சத்தியம்‌ வந்து விட்டது, அசத்தியம்‌ அழிந்துவிட்டது. நிச்சயமாக அசத்தியம்‌ அழிந்தே தீரும்‌” என்றும்‌ நபியே கூறுவீராக!
(ஸுரா அல்‌-இஸ்ரா :90)

மேலும்‌, அல்லாஹ்‌ ஸுபஹானஹு வதஆலா கூறுகின்றான்‌:

அவ்வாறன்று! சத்தியத்தை அசத்தியத்தின்‌ மீது எறிகின்றோம்‌. அந்த சத்தியமானது அசத்தியத்தை அடக்கி விடுகின்றது, உடனே அது அழிந்து விடுகின்றது. (ஸுரா அல்‌-அன்பியா :18)

இந்த வசனங்கள்‌ மூலமாக சத்தியத்தில்‌ இருக்கும்‌ தன்னுடைய அடியார்களுக்கு அல்லாஹ்‌ உதவி செய்யும் விதமாக குர்‌ஆனை இறக்கி உள்ளான்‌. இதுவும்‌ அல்‌-குர்‌ஆன்‌ இறக்கப்பட்டதின்‌ ஹிக்மத்தை தெளிவுபடுத்துகிறது.

உண்மையில்‌ இன்றைய சமகாலத்தில்‌ வழிகேட்டில்‌ உள்ள (அஹ்லுல்‌ பித்‌ஆ) வழிகேடர்கள்‌ அதிகதிகமாக இருக்கின்றார்கள்‌. அவர்களை அல்லாஹ்‌ அதிகப்படுத்தக்‌ கூடாது என நாம்‌ அவனை பிரார்திக்கின்றோம்‌.

யூதர்கள்‌, கிறிஸ்தவர்கள்‌, நெருப்பு வணங்கிகள்‌, சிலை வணங்கிகள்‌, கம்யூனிஸ்டுகள்‌, நாஸ்திகர்கள்‌ என இஸ்லாத்திற்கு எதிராக செயல்படக்கூடிய இந்த காபிர்கள்‌ உலகம்‌ முழுக்க அதிகமாக இருக்கிறார்கள்‌. ஆனால்‌ இஸ்லாத்திற்கு எதிரான இவர்களுடைய விரோதங்கள்‌ மற்றும்‌ பகைமை என்பது வெளிப்படையான ஒன்றாகும்‌.

அல்லாஹ்‌ ஸுபஹானஹு வதஆலா கூறுகிறான்‌:

இவர்கள்‌ தங்கள்‌ வாய்களைக்‌ கொண்டே (ஊதி) அல்லாஹ்வுடைய பிரகாச (இஸ்லாம்‌ மார்க்க) த்தை அணைத்துவிட விரும்புகின்றனர்‌. எனினும்‌, இந்நிராகரிப்பவர்கள்‌ வெறுத்த போதிலும்‌ அல்லாஹ்‌ தனது பிரகாச (இஸ்லாம்‌ மார்க்க) த்தை முழுமைப்பாடுத்தி வைக்காமல்‌ இருக்கப்போவதில்லை. (ஸுரா அத்‌ தவ்பா 9; 32)

என்றாலும்‌ கவலைக்குரிய விஷயம்‌ என்னவென்றால்‌, தன்னை இஸ்லாத்துடன்‌ இணைத்துக்கொள்ளும்‌ (அஹ்லுல்‌ பித்‌ஆ) பித்‌அத்துவாதிகள்‌, இஸ்லாம்‌ என்ற பலத்த கோட்டையின்‌ நடுவில்‌ இருந்து கொண்டு இஸ்லாத்தை அழிக்கக்கூடிய காரியங்களை செய்கிறார்கள்‌. நபியுடைய ஸுன்னாவிலே அவர்கள்‌ கையடித்து விளையாடுகிறார்கள்‌.

இப்படிப்பட்டவர்களை குறித்து எச்சரிக்கை செய்வது: அவர்களை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவது நம்‌ மீதுள்ள கடமையாகும்‌.

உமர்‌ இப்னுல்‌ கத்தாப்‌, இம்ரான்‌ இப்னு ஹுஸைன்‌ ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள்‌ இருவரும்‌ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்‌ அவர்களைக்‌ தொட்டு அறிவிக்கின்றார்கள்‌:

நிச்சயமாக என்னுடைய உம்மத்தில்‌, மக்களை கவரக்கூடிய விதத்தில்‌ பேசக்கூடிய ஒவ்வொரு முனாஃபிக்குகளை குறித்துதான்‌ நான்‌ அதிகமாக பயப்படுகிறேன்‌. (நூல்‌: முஸ்னது அஹ்மத்‌ 143)

இமாம்‌ அல்‌-அல்பானீ ரஹிமஹுல்லாஹ்‌ இதை ஸஹீஹான ஹதீஸ்‌ என்று கூறியுள்ளார்கள்‌.
நூல்‌: ஸஹீஹ்‌ அத்‌-தர்ஹீப்‌: 132.

மேலும்‌ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்‌ அவர்கள்‌ கூறினார்கள்‌:

ஸவ்பான்‌ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்‌ அறிவிப்புச்‌ செய்யக்கூடிய ஹதீஸ்‌:

நிச்சயமாக என்னுடைய உம்மத்தில்‌, மக்களை வழிகெடுக்கக்கூடிய தலைவர்களை குறித்துதான்‌ நான்‌ அதிகமாக பயப்படுகிறேன்‌. (நூல்‌: ஸுனன்‌ அபூ தாவூத்‌, ஸுனன்‌ அத்‌-திர்மிதி)

இமாம்‌ அல்‌-அல்பானீ ரஹிமஹுல்லாஹ்‌ இதை ஸஹீஹான ஹதீஸ்‌ என்று கூறியுள்ளார்கள்‌. நூல்‌: ஸஹீஹ்‌ அத்‌-திர்மிதி 2229

எனவே இப்படிப்பட்டவர்கள்‌ தான்‌ இஸ்லாத்திற்கும்‌ முஸ்லிம்களுக்கும்‌ மிகப்பெரிய துரோகிகளாகவும்‌ இஸ்லாத்தையும்‌ இஸ்லாமிய சின்னங்களையும்‌ குழி தோண்டி புதைக்க கூடியவர்களாகவும்‌ இருக்கின்றார்கள்‌.

அதனால்தான்‌ மற்றொரு ஹதீஸில்‌ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்‌ அவர்கள்‌ கூறினார்கள்‌, அப்துல்லாஹ்‌ இப்னு அம்ர்‌ இப்னுல்‌ ஆஸ் ரழியல்லாகு அன்ஹு அவர்கள்‌ அறிவிப்புச்‌ செய்யக்கூடிய ஹதீஸ்‌

நிச்சயமாக அல்லாஹ்‌ கல்வியைக்‌ தன்னுடைய அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப்‌ பறித்து விடமாட்டான்‌. ஆயினும்‌ அறிஞர்களைக்‌ கைப்பற்றுவதன்‌ மூலமே அவன்‌ கல்வியைக்‌ கைப்பற்றுவான்‌. கடைசியாக ஓர்‌ அறிஞர்‌ கூட, மீதமில்லாமல்‌ ஆக்கிவிட்டதும்‌ மக்கள்‌ அறிவீனர்களைத்‌ தம்‌ தலைவர்களாக்கிக்‌ கொள்வார்கள்‌. அவர்களிடம்‌ கேள்விகள்‌ கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத்‌ தீர்ப்பும்‌ வழங்குவார்கள்‌. (இதன்‌ மூலம்‌) தாமும்‌ வழி கெட்டுப்‌ பிறரையும்‌ வழி கெடுப்பார்கள்‌ (நூல்‌: ஸஹிஹ்‌ அல்‌-புகாரி, மூஸ்லிம்‌.)

இவ்வாறாக பித்‌ அத்வாதிகளை குறித்து நபியவர்கள்‌ நமக்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள்‌.

எனவே பித்‌அத்‌ வாதிகள்‌ குறித்து எச்சரிக்கை செய்வது நம்‌ மீதுள்ள கடமையாகும்‌. இவ்வாறு எச்சரிக்கை செய்வதில்‌ பல்வேறு நன்மைகள்‌ இருக்கின்றன. வழிகேடர்கள்‌ குறித்து எச்சரிக்கை செய்வதனால்‌ மக்கள் பித்‌அத்வாதிகளுடன்‌ கலக்காமல்‌ இருக்கவும்‌, மக்களுடைய பாவங்களை பித்‌ அத்வாதிகள்‌ சுமக்காமல்‌ இருக்கவும்‌ ஒரு வழியாக அமையும்‌. இப்படி மறுப்புக்‌ கொடுப்பது அத்தகையவருக்கு செய்யும்‌ ஒரு நல்லுபகாரமாகும்‌.

அல்லாஹ்‌ ஸுபஹானஹு வதஆலா கூறுகிறான்‌:

மறுமை நாளில்‌ தங்கள்‌ பாவச்சுமைகளை இவர்கள்‌ சுமப்பதுடன்‌, அறிவின்றி இவர்கள்‌ வழிகெடுத்த மற்றவர்களின்‌ பாவச்சுமைகளையும்‌ இவர்களே சுமப்பார்கள்‌. (இவ்வாறு இருவரின்‌ பாவச்‌சுமையை இவர்களே சுமப்பது மிகக்‌ கெட்டதல்லவா? (ஸுரா அந்‌-நஹ்ல்‌ :29)

எனவே மக்களுடைய பாவ மூட்டைகளை சுமக்காமல்‌ இருப்பதற்காக அவர்களை விட்டும்‌. அவர்களுடைய வழிகேடுகளை விட்டும்‌ எச்சரிக்கை செய்வது புகழப்படும்‌ ஒரு காரியமாகும்‌

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்‌ அவர்களுடைய ஸுன்னாவையும்‌, ஸலபுஸ்‌ ஸாலிஹீன்களுடைய வரலாறுகளையும்‌ புத்தகங்களையும்‌ பார்த்தால்‌ அங்கு பெரும்‌ அதிர்ச்சி காணப்படுகின்றது.

பித்அத்வாதிகள்‌ வழிகேடர்களை விட்டும்‌. அவர்களது வழிகேடான காரியங்களை விட்டும்‌ மக்களை தடுப்பதில்‌ அவர்கள்‌ எந்த அளவிற்கு கடுமையாக பாடுபட்டு உள்ளார்கள்‌ என்பதைப்‌ பார்க்க முடியும்‌.

கவாரிஜ்‌ என்ற பித்‌அத்வாத வழிகெட்ட கூட்டத்திற்கு எதிராக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்‌ அவர்கள்‌ கூறினார்கள்‌, அப்துல்லாஹ்‌ இப்னு அபீ அவ்பா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்‌ அறிவிக்கின்றார்கள்‌ :

கவாரிஜ்கள்‌ நரகத்தின்‌ நாய்கள்‌ ஆவார்கள்‌.
(நூல்‌: இப்னு மாஜா 175)

இது ஒரு ஸஹீஹான செய்தி: இமாம்‌ அல்‌ அல்பானி ரஹிமஹுல்லாஹ்‌.
(நூல்‌ : ஸஹீஹ்‌ இப்னு மாஜா 143)

எனவே, கவாரிஜ்களை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்‌ அவர்கள்‌ கூறும்பொழுது அவர்கள்‌ தொழுகையாளிகளாக இருந்தார்கள்‌: அதிகமான அமல்‌ செய்யக்‌ கூடியவர்களாகவும்‌ இஸ்லாத்திற்காக வாதாட கூடியவர்களாகவும்‌ இருந்தார்கள்‌. ஆனால்‌ அவர்கள்‌ நரகத்தின்‌ நாய்கள்‌ என்று மூன்று முறை கூறினார்கள்‌.

மேலும்‌ கவாரிஜ்களை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்‌ அவர்கள்‌ கூறினார்கள்‌, அபூ உமாமா அல்‌ ராஹிலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்‌ அறிவிக்கின்றார்கள்‌ :

அவர்கள்‌ நரகத்து நாய்கள்‌ வானத்திற்கு கீழே இருக்கும்‌ மோசமான கொலை செய்யும்‌ கூட்டம்‌ இவர்கள்‌. எனவே யார்‌ இவர்களை கொலை செய்கிறார்களோ அவர்கள்‌ மிகவும்‌ நல்லவர்கள்‌.
(நூல்‌: திர்மிதி 3000)

இமாம்‌ அல்‌-அல்பானீ ரஹிமஹுல்லாஹ்‌: இது ஹஸனான செய்தி.
(நூல்‌: தக்ரீஜ்‌ மிஷ்காதுல்‌ மஸாபீஹ்‌ 3485.)

மேலும்‌ கதரிய்யா என்ற வழிகெட்ட கூட்டத்தைப்‌ பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்‌ அவர்கள்‌ கூறினார்கள்‌, இப்னு உமர்‌ ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள்‌ அறிவிக்கின்றார்கள்‌ :

கதரிய்யாக்கள்‌ இந்த உம்மத்துடைய நெருப்பு வணங்கிகள்‌ ஆவார்கள்‌. அவர்கள்‌ நோய்வாய்ப்பட்டால்‌ அவர்களை நலம்‌ விசாரிக்கச்‌ செல்ல வேண்டாம்‌. அவர்கள்‌ மரணித்தால்‌ அவர்களை பின்‌ தொடர வேண்டாம்‌.
(நூல்‌: அபூதாவூத்‌ 4691)

இது ஹஸனான ஓரு செய்தி : இமாம்‌ அல்‌-அல்பானீ ரஹிமஹுல்லாஹ்‌.
(நூல்‌ : ஸஹீஹ்‌ அல்‌-ஜாமி 4442)

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்‌ அவர்கள்‌ இந்த இறை வசனத்தை ஓகினார்கள்‌ :

(நபியே) அவனே இவ்வேதத்தையும்‌ உம்‌ மீது இறக்கிவைத்தான்‌. இதில்‌ முற்றிலும்‌ தெளிவான பொருள்‌ கொண்ட வசனங்களும்‌ இருக்கின்றன. இவைதான்‌ இவ்வேதத்தின்‌ அடிப்படையாகும்‌. மேலும்‌, உங்களுக்கு) முழுமையான பொருள்‌ தெரிய முடியாத வசனங்களும்‌ இருக்கின்றன. எவர்களுடைய உள்ளங்களில்‌ மாறுபாடு இருக்கிறதோ அவர்கள்‌ தெளிவற்ற பொருள்களுடைய வசனங்களையே தேடிப்‌
பின்பற்றுவார்கள்‌. குழப்பத்தை உண்டு பண்ணக்‌ கருதியும்‌ அதை தங்களின்‌ தவறான நோக்கத்திற்கேற்ப மாற்றுவதற்காகவும்‌ இவ்வாறு செய்கின்றனர்‌. ஆயினும்‌, இதன்‌ உண்மைக்‌ கருத்தை அல்லாஹ்வைத்‌ தவிர ஒருவரும்‌ அறியமாட்டார்‌. உறுதிமிக்க கல்விமான்‌௧களோ (அதன்‌ கருத்து தங்களுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும்‌) இதையும்‌ நாங்கள்‌ நம்பிக்கை கொண்டோம்‌. (இவ்விருவகை வசனங்கள்‌) அனைத்தும்‌ எங்கள்‌ இறைவனிடமிருந்து வந்தவைதான்‌ என்று கூறுவார்கள்‌. அறிவுடையவர்களைக்‌ தவிர மற்ற எவரும்‌ (இவற்றைக்‌ கொண்டு) நல்லுபதேசம்‌ அடையமாட்பார்கள்‌.  முதஷாபிகான வசனங்களை தேடித்திரிபவர்களை நீங்கள்‌ பார்தால்‌ அவர்கள்‌ தாம்‌ (இந்த வசனத்தில்‌) அல்லாஹ்வால்‌ குறிப்பிடப்பட்டவர்கள்‌ என்பதை புரிந்து கொண்டு அவர்களைக்‌ குறித்து எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்‌, என்றார்கள்‌. (நூல்‌ : ஸஹீஹ்‌ அல்‌ புகாரி, முஸ்லிம்‌.)

இப்னு அப்பாஸ்‌ ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள்‌ கூறுகின்றார்‌ :

மனோ இச்சையை பின்பற்றக்‌ கூடியவர்களுடன்‌ உட்கார வேண்டாம்‌. நிச்சயமாக அவர்களுடன்‌ உட்கார்வது உள்ளத்தில்‌ நோயை ஏற்படுத்தும்‌.
நூல்‌: அல்‌ இபானா /438, அஷ்‌-ஷரீஆ லில்‌-ஆஜுர்ரி 1/453)

அபூ கிலாபா ரஹிமஹுல்லாஹ்‌ அவர்கள்‌ கூறினார்கள்‌:

மனோ இச்சையை பின்பற்றக்‌ கூடியவர்களுடன்‌ உட்கார வேண்டாம்‌. அவர்களுடன்‌ விவாதிக்கவும்‌ வேண்டாம்‌. நிச்சயமாக அவர்கள்‌ உங்களை அவர்களின்‌ வழிகேட்டில்‌ மூழ்கி விட செய்வார்கள்‌ அல்லது நீங்கள்‌ அறிந்து வைத்திருக்கக்‌ கூடிய மார்க்க விஷயங்களில்‌ குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார்கள்‌ என்று நான்‌ அஞ்சுகிறேன்‌. (நூல்‌: ஸியர்‌ அலாம்‌ அந்‌ நுபுலா 4/472, அஷ்‌-ஷரீஆ லில்‌-ஆஜுர்ரீ 67)

எனவே பித்‌அத்‌ வாதிகளுக்கு மறுப்பு கொடுப்பது புகழப்படக்கூடிய ஒரு காரியமாகும்‌. இந்த பித்‌அத்வாதிகள்‌, வழிகேடர்கள்‌ உலகம்‌ முழுவதும்‌ பரவி அதிகமானவர்களாக இருக்கிறார்கள்‌. எனவே, அவர்களைக்‌ குறித்து எச்சரிக்கை செய்வதும்‌ அவர்கள்‌ எப்படிப்பட்டவர்கள்‌ என்பதை மக்களிடத்தில்‌ தெளிவுபடுத்துவதும்‌ நம்‌ மீது கடமையாகும்‌.

இதைத்தான்‌ மேற்கண்ட அல்‌-குர்‌ஆன்‌ வசனம்‌ (ஸுரா அல்‌-அன்‌ஆம்‌ :55) தெளிவுபடுத்துகிறது. “குற்றவாளிகள்‌ செல்லும்‌ வழி (இன்னதென சந்தேகமறத்‌ தெளிவாகி விடுவதற்காக நம்‌) வசனங்களை இவ்வாறு விவரித்திருக்கிறோம்‌..


Previous Post Next Post