ஒவ்வொரு நூறு ஆண்டுகளின் தொடக்கத்திலும் அல்லாஹ் இந்த உம்மத்திற்கு அதன் மார்க்கத்தைப் புனருத்தாரணம் செய்கின்றவரை அனுப்புவான்

ஹதீஸ்களுக்கு முன்சென்ற அறிஞர்களின் சரியான விளக்கத்தை தெரிந்து கொள்ளாமல், இன்று நேற்று தோன்றிய தனக்கு பிடித்த சில எழுத்தாளர்களின் தவறான புரிதலுக்கு அமைவாக விளக்கம் கொடுக்க முற்படுவது ஹதீஸில் விளையாடுவது போன்ற செயலாகும்.  

إِنَّ اللَّهَ يَبْعَثُ لِهَذِهِ الْأُمَّةِ عَلَى رَأْسِ كُلِّ مِائَةِ سَنَةٍ مَنْ يُجَدِّدُ لَهَا دِينَهَا ) رواه أبو داود (رقم/4291) وصححه السخاوي في "المقاصد الحسنة" (149)، والألباني في "السلسلة الصحيحة" (رقم/599)

ஒவ்வொரு நூறு ஆண்டுகளின் தொடக்கத்திலும் அல்லாஹ் இந்த உம்மத்திற்கு அதன் மார்க்கத்தைப் புனருத்தாரணம் செய்கின்றவரை அனுப்புவான். 
(சுனன் அபு தாவுத் - 4291)

இமாம் தஹபி இந்த ஹதீஸில் வரும் (من) ஒருவரை குறிக்காது ஒரு கூட்டத்தை குறிக்கும் என்கிறார்கள். தாரீஹுல் இஸ்லாம் - 23/180

ஒருவரோ அல்லது ஒரு கூட்டமோ இரண்டையும் உள்ளடக்கி கொள்ளும் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிட்டுள்ளார்கள். பத்ஹுல் பாரி - 13-295

முன்சென்ற இமாம்கள் இந்த ஹதீஸ் குறித்த பல தெளிவான விளக்கங்களை கூறியுள்ளார்கள். அதன் ஆழ அகலத்தை புரிந்து கொண்டவர்கள் இந்த விடயத்தில் மிக கவனத்துடன் செயல்படுவார்கள். 
இமாம் அபூஹனீபா, மாலிக், ஷாபிஈ, அஹ்மத், புஹாரி, முஸ்லிம், நஸாஈ, அபூ தாவுத், திர்மிதி, இப்னு மாஜா, தாரிமி, தாரகுத்னி, தபராணி, பைஹகி, போன்ற அறிஞர்கள். ஹஸனுல் பஸரி, இப்னு ஷிஹாப் ஸுஹ்ரி, உமர் பின் அப்துல் அஸீஸ், இப்னு ஸீரீன், போன்ற மேதைகள். இப்னு ஹஸ்ம், இப்னு தைமிய்யா, இப்னுல் கையிம், தஹபி, இராகி, இப்னு ஹஜர், இப்னு ரஜப், இப்னு கஸீர், நவவி, சூயூதி, ஸஹாவி, ஷௌகானி, ஸன்ஆனி. போன்ற மாபெரும் அறிஞர்களோடு மார்க்க மேதைகளோடு ஒப்பிட்டு ஒரு விடயத்தை  பேசும்போது கொஞ்சமாவது இது பற்றிய வாசிப்பும் அல்லாஹ்வின் அச்சமும் இருக்க வேண்டும். 

அல்லாஹ் அனுப்புவான் என்று அல்லாஹ்வோடு தொடர்புபட்டு வருகின்ற கருத்தாளமிக்க, கனதியான உள்ளடக்கத்தைக் கொண்ட, மாபெரும் அறிஞர்கள் எல்லாம் நான் இதற்கு தகுதியற்றவன் என்று அஞ்சிய “முஜத்தித்” என்ற பதத்தை தனக்கு பிடித்த நான்கு ஐந்து மௌலவிமார்களுக்கு வழங்கி, மட்டரகமான ஒரு மகிழ்ச்சியை உருவமைத்துக் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். 

- முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி
Previous Post Next Post