தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள்

 - அன்வர்தீன், பெரம்பலூர்

1980 களின் ஆரம்பத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் புறையோடிப்போயிருந்த அனாச்சாரங்களை ஒழிப்பதில் சகோதரர் பீஜே அவர்கள் முக்கிய பங்காற்றினார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இலட்சக்கணக்கான தமிழக முஸ்லிம்கள், முக்கியமாக இளைஞர்கள் அவர் சொல்லிவிட்டால் அதை வேதவாக்காக எடுத்து பின்பற்றும் அளவுக்கு அவர் பின்னால் அணி வகுக்க ஆரம்பித்தனர். இயக்கங்களுக்கு நிதி கேட்டாலே ஐந்தும் பத்தும் கொடுத்தது போய், லட்சக்கணக்கில் ஏன் கோடிகளில் கொட்டிக் கொடுக்க ஆரம்பித்தனர்.

இவரை இப்படியே விட்டால் ஒரு பெரும் கூட்டம் நேர்வழியில் சென்று விடும் என்று ஷைத்தான் தன் வேலையை காட்டத் துவங்கினான். ஆரம்பத்தில் குர்ஆன் ஹதீஸ் வழியில் சென்று கொண்டிருந்தவர், ஷைத்தானின் ஊசலாட்டத்தால் வழி பிறழ ஆரம்பித்தார். நேர்மறை கருத்துக்களைவிட எதிர்மறை கருத்துக்கள் இளைஞர்களை அதிகமாக தாக்கும் எனபதை நன்கு அறிந்தவராதலால் இளைஞர்களை தன் கட்டுக்குள் வைத்திருந்தார்.

குர்ஆன் ஹதீஸின் ஆதாரங்களை விட்டுவிட்டு, மனோ இச்சைகளை மார்க்கம் என்ற பெயரில் மக்களிடையே விதைக்க ஆரம்பித்தார். தான் எதைச்சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என்ற மக்களின் மனோநிலையை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டார். யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்தானோ அவர்கள், இவரின் இந்த ஷைத்தானிய போக்கை கண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவரிடமிருந்து விலக (நானும் அதில் ஒருவன்) ஆரம்பித்தனர்.

இஸ்லாத்தின் அடிப்படையான அகீதாவை ஆட்டம் காணவைக்கும் இவரின் இந்த நிலையை கண்டு தமிழக, இலங்கை ஆலிம்கள் சுத்தமாக வெளியேறிவிட்டனர். தற்போது நாம் அறிந்த வைத்துள்ள தமிழக, இலங்கை ஆலிம்களில் அதிகமானோர் அவரிடமிருந்து ஆரம்பத்திலேயே பிரிந்து வந்தவர்கள். இவர் தவறான வழியில் பயணிக்கிறார் என்பதற்கு, தற்போது இந்த TNTJ தமிழ்நாடு தில்லுமுல்லு ஜமாஅத்தில் ஒரே ஒரு கற்றறிந்த ஆலிம்கூட இல்லை என்பதே சான்று.

ஒற்றுமையை விதைக்க வந்த பெயர்தாங்கி தவ்ஹீத்வாதிகள், பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளால் தங்களிடையே பிரிவினையை அறுவடை செய்ததுதான் இவர்களின் சாதனை. கூட்டம் குறைய ஆரம்பித்து, தொண்டர்கள் மட்டுமல்ல வருமானமும் லட்சங்களில் இருந்து ஆயிரங்களாக சுருங்க ஆரம்பித்தது. பாவம்! பீஜே போன்று யாருக்கும் இந்த நிலை அவ்வளவு எளிதில் வந்துவிடக்கூடாது. எப்படி இருந்த பீஜே இப்படி ஆகிவிட்டாரே. இறைவன் ஒரு சிலரை ஆடவிட்டு முன் நெற்றியை பிடிப்பான் என்பது இவர் விஷயத்தில் நிதர்சனமாகிவிட்டது.

ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தவர்;
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தவர்;
பிறர் மானத்தில் விளையாடியவர்;
பல இயக்கங்களை கண்டு அதிலிருந்து வெளியேறியவர்/வெளியேற்றப்பட்டவர்;
மார்க்க விவாதங்களில் வெற்றிக்கொடி கட்டியவர்?
மனோ இச்சைகளை மார்க்கத்தில் திணித்தவர்;
அறிவை முற்படுத்தி ஆதாரங்களை பிற்படுத்தியவர்;
குர்ஆனுக்கு சுயமாக விளக்கம் கொடுத்தவர்;
தன் மீதான எதிர்ப்பையே தனக்கு சாதகமாக ஆக்கி ஒரு பெரும் இளைஞர் கூட்டத்தை கட்டி எழுப்பியவர்;
அறிஞர்களை மதிக்காதவர்.
நான் என்ற பிம்பத்தை நிலைநாட்ட கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும், இழவு வீட்டில் பிணமாகவும் வலம் வந்தவர்.
தமிழக முஸ்லிம் சமூகத்தில் தவிர்க்க முடியாத சக்தி(?)யாய்  வலம் வந்தவர்…
கொடுத்த பொருளுக்கு ஜகாத் கொடுக்க தேவையில்லை என்று, இதுவரை யாருமே சொல்லாத நச்சுக்கருத்தை விதைத்தவர். Etc….
என்று பல்வேறு புகழ்களுக்கு சொந்தமான ஒருவர் தன் மீதான பிம்பங்கள் சுக்கு நூறாய் உடைந்து, தான் வாழும் போதே  மறக்கடிக்கப் படுகிறோம் என்ற நிர்கதியற்ற நிலை, தான் நம்பிய, தானே உருவாக்கிய கூட்டத்தால் ஏற்படுகிறதே! தான் வளர்த்த கடா மார்பில் பாய்கிறதே! என்றெண்ணி தன் இருப்பை மீண்டும், மீண்டும் பதிவுசெய்ய பகீரத பிரயத்தனங்கள் செய்வதை பார்த்து பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை.

பிஜே ஒரு தனி நபராக இருந்தாலும், அவர் உருவாக்கிய பிஜே- யிஸம் அவ்வளவு எளிதில் மறந்து போகக்கூடியது அல்ல. JAQHமுதற்கொண்டு TNTJ வரை அவர் தானாக விலகினாலும் , விலக்கப்பட்டாலும் அவர் சென்ற பிறகும், அவ்வியக்கங்களை  சார்ந்தோர்களிடம் அவருடைய சிந்தனையையும், பேச்சின் தொனியையும், பெரும் தாக்கம் ஏற்படும் அளவிற்கு நிரந்தரமாக விட்டுச் செல்லக்கூடியவர்.

குர்ஆன், ஹதீஸ் என்ற இரட்டை வார்த்தைகள் இவருடைய வருகைக்கு பிறகே சர்ச்சைக்குரிய சொல்லாடலாக பார்க்கப்பட்டது. நஜாத், ஜன்னத், முபீன், ஏகத்துவம், உணர்வு என்று பல பத்திரிக்கைகளை களம் கண்டவர். ஆனால் தற்பெருமை காரணமாக ஒன்றைகூட தன்வசம் தொடர்ந்து வைத்திருக்க முடியவில்லை. தன் கருத்தை நிரூபிக்க, யாரும் யாரையும் எல்லை மீறி விமர்சனம் செய்யலாம், அது தவறில்லை என்று சத்தியம் செய்யும் அளவுக்கு, குர்ஆனின் போதனைக்கு மாற்றமாக வரம்பை மீறி விவாத களங்களை எதிர்கொண்டார்.

ஓர் இயக்கம் நிறுவுவதை ஏதோ கிலாபத்தையே நிறுவுவது  போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது என்ற இன்றைய மார்க்கெட்டிங் தந்திர செயல்பாடுகள் அத்தனையும் பிஜே பாணியின் எச்சங்கள். சுருக்கமாகச்  சொல்வதென்றால் ஒரு எதிர்மறை அடையாளமாக்கப்பட்ட பிஜேயிஸம் இன்றைக்கு நம் எல்லோரிடமும் இயக்க வித்தியாசமில்லாமல் நாடி நரம்பெல்லாம் ஊறி திளைத்திருக்கிறது. தூய வடிவில் மார்க்கம் என்ற போர்வையில் தீய வடிவில் மனிதர்கள் என்ற இலக்கை எட்டியது தான் பிஜே யிஸத்தின் ஒரே சாதனை. பிஜே யினால் மாற்றங்களும், பலன்களும் இல்லாமல் இல்லை. ஆனால், ஒட்டு மொத்தமாக பலனைவிட தீங்கு அதிகமானால் அது எதுவானாலும் தூக்கி எறியப்படும் என்ற குர்ஆனின் பார்வைக்கு ஏற்ப இந்த பிஜே யிஸமும் துடைத்து எறியப்பட வேண்டியதே.

இப்படியாக, மக்கள் உண்மையான ஏகத்துவத்தை அறிந்து கொள்ளவும், போலி ஏகத்துவ வாதிகளை தோலுரிக்கவும் பீஜே மற்றும் TNTJ கூட்டத்தினரின் தில்லுமுல்லுகள்ஒவ்வொன்றாக வரும் தொடர்களில் அலசப்படும். உலகத்தில் வேறு எங்கும் காணப்படாத மார்க்கத்தில் விளையாடும் இந்த போக்கு, தமிழகத்தில் மட்டும் (தமிழ் மொழி பேசப்படுவதால் இலங்கையிலும்) இருப்பதால் தமிழ்நாட்டு ஃபித்னாக்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது.

முஸ்லிம்களிடயே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே, இஸ்லாமிய வரலாற்றில் கவாரிஜ்கள், கத்ரியாக்கள் (முஹ்தஸிலாக்கள்), ஷியாக்கள், ஜஹ்மிய்யாக்கள் போன்ற பல வழிகெட்ட கூட்டங்கள் தோன்றி மறைந்துள்ளன. உலகம் முடியும் வரை இதுபோன்று சோதனைகள் வந்து கொண்டே இருக்கும்.

அவர்களில் காரிஜியாக்கள் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுவதாகக் கூறிவந்தாலும் அவர்கள் அதனை விளங்குவதில் கருத்து வேறுபாடு கொண்டனர்.  உதாரணமாக விபச்சாரம், திருட்டு போன்ற ஹதீஸ்கள் அவர்களின் படுத்தறிவுக்கு முரணாக தோன்றியதால் அதை நிராகரித்தார்கள். மேலும் காரிஜியாக்கள் முத்தஸாபிஹாத்தான வசனங்களுக்கு விளக்கங்களை தாம் அறிந்திருப்பதாக அவர்களை பின்பற்றியவர்களை நம்ப வைத்தனர்.. சில நபித் தோழர்களை காஃபிர்கள் என ஃபத்வா கொடுத்தனர். 

இந்த வழிகெட்ட காரிஜியாக்களைப்பற்றி நபி (ஸல்) முன்னறிவிப்பு செய்த அலி (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புஹாரியில் 3611 ல் இடம் பெற்றுள்ளது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது…………

அப்படியே காரிஜியாக்கள் வாழ்ந்த காலத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டு, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ் காலத்துக்கு வாருங்கள். ஹதீஸ்களில் சொல்லப்பட்ட வாசகங்கள் NTF, TNTJ கூட்டத்தினருக்கு பொருந்துகிறதா என பொருத்திப்பாருங்கள்.

பூமியிலேயே சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள்.
பகுத்தறிவை கொண்டு ஹதீஸ்களை மறுப்பார்கள்.
சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள்.
முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள்.
சொல் ஒன்று செயல் வேறாக இருப்பார்கள்.
காஃபிர்கள் என ஃபத்வா கொடுத்து மகிழ்வதில் NUMBER ONE கூட்டத்தினர்…. Etc….
முஸ்லிம்களின் பார்வையில், இந்த நவீன பித்அத்வாதிகள் செய்த மிகப்பெரும் தவறாக ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பதை அபாயகரமான பாரதூரமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இவர்கள் மார்க்கம் என்ற பெயரில் அறங்கேற்றிய தில்லுமுல்லுகளில் ஹதீஸ் நிராகரிப்பு பிரதானமானது.  இப்போது இந்த கூட்டம், நாளை மற்றொரு கூட்டம் என்று ஹதீஸ்களை பகுத்தறிவு / புத்தியை கொண்டு மறுக்க ஆரம்பித்தால், இஸ்லாத்தின் அடிப்படையான அகீதாவே ஆட்டம் காண ஆரம்பித்துவிடும். ஆகையால் இவர்கள் மக்கள் மன்றங்களில் அடையாளம் காட்டப்பட்டு பூமிப்பந்தில் இருந்து துடைத்தெறியப்பட வேண்டியவர்கள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

உலக இஸ்லாமிய வரலாற்றில், இதுவரை தோன்றி மறைந்த அறிஞர்கள் யாரும் செய்யாத, இறை அச்சத்தை காலில் போட்டு மிதித்து, துணிந்து, ஹதீஸ்கலை அறிஞர்களால் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸஹீஹான ஹதீஸ்களை தன் மனம் போன போக்கில் நிராகரித்தவர் ஒருவரை காட்டச்சொன்னால், இயக்கவேறுபாடின்றி அனைவரும் தன் ஆள்காட்டி விரலை பீஜே மற்றும் TNTJ கூட்டத்தினரை நோக்கி நீட்டுவார்கள். பரவாயில்லை விட்டுவிடலாம் என்பதற்கு ஒன்றல்ல இரண்டல்ல, கிட்டத்தட்ட தொன்னூற்றுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களை சர்வ சாதாரணமாக மனோ இச்சையின் அடிப்படையில் நிராகரித்திருக்கிறார்கள்.

சுமார் கடந்த 20 ஆண்டு காலமாக முஸ்லிம் சமுதாயத்தில் தௌஹீதின் பெயரால் தோன்றிய வழிகெட்ட சிந்தனையென்று ஒன்று சொல்வதானால், அது ஸஹீஹான ஹதீஸ் மறுப்புக் கொள்கை தான். இந்தக் கொள்கை இஸ்லாத்தின் அடிப்படைக்கு வேட்டு வைப்பதும், குஃப்ரின் பால் இட்டுச் செல்லக் கூடியதாகவும் இதற்கு முன்னர் இஸ்லாத்தில் தோன்றிய வழிகெட்ட பிரிவினரின் வழிமுறையாகவும் உள்ளது. எனவே இதன் உண்மை நிலையை முஸ்லிம் சமுதாயத்திற்கு உணர்த்தி இவ்வழிகேட்டில் இருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது.

ஆனாலும் இவர்கள் இந்த ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்குச் செல்வதற்கு முன் தவ்ஹீத் கொள்கைப் பற்றி நல்ல முறையில் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதை அதிகமாக வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள். இதுவெல்லாம் இவர்களின் இந்த ஹதீஸ் மறுப்பு வழிகேட்டை மக்கள் சரியாக புரிந்துக் கொள்வதற்கு பெரும் தடையாக உள்ளது.

இவர்கள் ஹதீஸ்களை அனுகும் விதமே அடிப்படையில் தவறானது. முதலில் ஹதீஸில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று ஆராய்ந்து பார்த்து அதற்கு தகுந்தாற்போல் நம் அறிவை பயன்படுத்த வேண்டும். ஆனால் இவர்கள் முதலில் இந்த ஹதீஸை மறுக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டு அதற்கு தகுந்தாற்போல் தம்முடைய அறிவை பயன்படுத்துவார்கள்.

முதலில் பெரிய அண்ணன் மறுப்பார்., பிறகு அவர்களின் அறிஞர் குழு? மறுத்து மக்கள் மன்றத்துக்கு கொண்டு செல்லப்படும். இவர்களுடைய ஆய்வுக்கு மாற்று கருத்து கொண்டவர்கள் ஒன்று வெளியேறுவார்கள் அல்லது வெளியேற்றப்படுவார்கள். இப்படியாக அல்லாஹ் அருள் புரிந்த, அவர்களிடமிருந்து வெளியேறிய பல அறிஞர்கள், இவர்களைப்போல் அல்லாமல் கண்ணியமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் கிருபையால் ஒரு நன்மை நடந்திருக்கிறது. பெரிய அண்ணன் ஒன்றாக இருந்தபோது எல்லோரும் ஒருமித்த குரலில் ஹதீஸை மறுத்தார்கள்.  அவர் வெளியேற்றப்பட்டு NTF என்ற இயக்கம் ஆரம்பித்த பிறகு மறுக்கும் (உவைஸ் அல்கர்னி, இப்னு ஜியாது) போன்ற ஹதீஸை  TNTJ வினர் சரி காண்கிறார்கள். அதாவது முரண்பாட்டின் மொத்த உருவமான இவர்கள் ஒன்றாக இருக்கும்போது ஒரு நிலைபாடு. பிரிந்துபோன பிறகு வேரொரு நிலைபாடு. ஆகையால் இவர்கள் ஹதீஸை நிராகரிப்பதற்கு சூழ்நிலைக்கு ஏற்ப காரணங்களை மாற்றிக்கொண்டு இருப்பார்கள். எப்படியோ இவர்கள் தவறான வழியில் பயணிக்கிறார்கள் என்பதை அவர்கள் மூலமாகவே அல்லாஹ் இந்த உம்மத்துக்கு வெளிக்கொணர்ந்து விட்டான்.

மேலும், இவர்கள் ஹதீஸை மொழிபெயர்க்கும் போது / மேடைகளில் பேசும்போது சரியாக மொழியாக்கம் செய்யாமல், தங்களுடைய விளக்கங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்காக ஒன்று ஹதீஸை இருட்டடிப்பு செய்வார்கள் அல்லது கூடுதல் குறைவு செய்வார்கள்.

ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு:

இறைவனால் அருளப்பட்ட வஹி செய்திகளை மறுப்பது இறை நிராகரிப்பு எனும் குப்ரில் கொண்டு சேர்க்கிறது. அல்குர்ஆன் வஹி என்பதை போல ஸஹீஹான ஹதீஸ்களும் இறைவனால் அனுப்பப்பட்ட வஹிச் செய்திகள் தான்.

உங்கள் தோழர் (முஹம்மது) வழி தவறவில்லை. தவறாகப் பேசவும் இல்லை. மேலும் அவர்(தமது) மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அது வஹீயாக அறிவிக்கப்படும் இறைச் செய்தியே தவிர வேறில்லை. அல்குர்ஆன் (53 : 2, 3, 4)

அல்லாஹ்வும் தூதரும் சொல்வதை அப்படியே ஏற்பதே முஃமினின் பண்பாக இருக்க வேண்டும். அதில் மனோ இச்சையை தினித்து மாற்று விளக்கம் கொடுக்கவோ தனது கொள்கைக்கு அது உடன்படவில்லை என்று மறுத்துவிடவோ எந்த முஸ்லிமுக்கும் அனுமதிக்கப்படவில்லை.

“அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் தமது அக்கரரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவன் தெளிவாக வழிகெட்டு விட்டார்.” அல்குர்ஆன் (33:36)

மனோ இச்சை, பகுத்தறிவை விட இறைத்தூதரின் கட்டளைக்கு முக்கியத்துவம் கொடுத்த உமர் (ரழி) அவர்கள்.

உமர் (ரழி) அவர்கள் (இந்தக்) கருப்புக் கல் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, ”நீ தீங்கோ, நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல் தான் என்பதை நான் நன்கறிவேன், நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்” என்றார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்,etc..)

அலி (ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:

மார்க்கத்தில் பகுத்தறிவைக் கொண்டு முடிவு செய்வதாக இருந்தால் காலுறையின் மேற்புறத்தில் மஸஹ் செய்வதை விட அதன் கீழ்ப்புறத்தில் மஸஹ் செய்வதே பொருத்தமானதாகும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் மேற்புறத்தில் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.

அறிவிப்பவர் : அலீ (ரழி), நூல் : அபூதாவூத் 140

மனோஇச்சை, பகுத்தறிவை பின்னுக்குதள்ளி, இறைத்தூதரின் கட்டளைக்கு முன்னுரிமை கொடுத்த ஸஹாபாக்களின் பண்பை இஸ்லாமிய சமுதாயம் இவர்களிடம் எதிர்பார்க்கிறது.

முஸ்லிம்களிடயே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே, இஸ்லாமிய வரலாற்றில் கவாரிஜ்கள், கத்ரியாக்கள் (முஹ்தஸிலாக்கள்), ஷியாக்கள், ஜஹ்மிய்யாக்கள் போன்ற பல வழிகெட்ட கூட்டங்கள் தோன்றி மறைந்துள்ளன. உலகம் முடியும் வரை இதுபோன்று சோதனைகள் வந்து கொண்டே இருக்கும்.

அவர்களில் காரிஜியாக்கள் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுவதாகக் கூறிவந்தாலும் அவர்கள் அதனை விளங்குவதில் கருத்து வேறுபாடு கொண்டனர்.  உதாரணமாக விபச்சாரம், திருட்டு போன்ற ஹதீஸ்கள் அவர்களின் படுத்தறிவுக்கு முரணாக தோன்றியதால் அதை நிராகரித்தார்கள். மேலும் காரிஜியாக்கள் முத்தஸாபிஹாத்தான வசனங்களுக்கு விளக்கங்களை தாம் அறிந்திருப்பதாக அவர்களை பின்பற்றியவர்களை நம்ப வைத்தனர்.. சில நபித் தோழர்களை காஃபிர்கள் என ஃபத்வா கொடுத்தனர். 

இந்த வழிகெட்ட காரிஜியாக்களைப்பற்றி நபி (ஸல்) முன்னறிவிப்பு செய்த அலி (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புஹாரியில் 3611 ல் இடம் பெற்றுள்ளது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது…………

அப்படியே காரிஜியாக்கள் வாழ்ந்த காலத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டு, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ் காலத்துக்கு வாருங்கள். ஹதீஸ்களில் சொல்லப்பட்ட வாசகங்கள் NTF, TNTJ கூட்டத்தினருக்கு பொருந்துகிறதா என பொருத்திப்பாருங்கள்.

பூமியிலேயே சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள்.
பகுத்தறிவை கொண்டு ஹதீஸ்களை மறுப்பார்கள்.
சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள்.
முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள்.
சொல் ஒன்று செயல் வேறாக இருப்பார்கள்.
காஃபிர்கள் என ஃபத்வா கொடுத்து மகிழ்வதில் NUMBER ONE கூட்டத்தினர்…. Etc….
முஸ்லிம்களின் பார்வையில், இந்த நவீன பித்அத்வாதிகள் செய்த மிகப்பெரும் தவறாக ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பதை அபாயகரமான பாரதூரமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இவர்கள் மார்க்கம் என்ற பெயரில் அறங்கேற்றிய தில்லுமுல்லுகளில் ஹதீஸ் நிராகரிப்பு பிரதானமானது.  இப்போது இந்த கூட்டம், நாளை மற்றொரு கூட்டம் என்று ஹதீஸ்களை பகுத்தறிவு / புத்தியை கொண்டு மறுக்க ஆரம்பித்தால், இஸ்லாத்தின் அடிப்படையான அகீதாவே ஆட்டம் காண ஆரம்பித்துவிடும். ஆகையால் இவர்கள் மக்கள் மன்றங்களில் அடையாளம் காட்டப்பட்டு பூமிப்பந்தில் இருந்து துடைத்தெறியப்பட வேண்டியவர்கள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

உலக இஸ்லாமிய வரலாற்றில், இதுவரை தோன்றி மறைந்த அறிஞர்கள் யாரும் செய்யாத, இறை அச்சத்தை காலில் போட்டு மிதித்து, துணிந்து, ஹதீஸ்கலை அறிஞர்களால் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸஹீஹான ஹதீஸ்களை தன் மனம் போன போக்கில் நிராகரித்தவர் ஒருவரை காட்டச்சொன்னால், இயக்கவேறுபாடின்றி அனைவரும் தன் ஆள்காட்டி விரலை பீஜே மற்றும் TNTJ கூட்டத்தினரை நோக்கி நீட்டுவார்கள். பரவாயில்லை விட்டுவிடலாம் என்பதற்கு ஒன்றல்ல இரண்டல்ல, கிட்டத்தட்ட தொன்னூற்றுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களை சர்வ சாதாரணமாக மனோ இச்சையின் அடிப்படையில் நிராகரித்திருக்கிறார்கள்.

சுமார் கடந்த 20 ஆண்டு காலமாக முஸ்லிம் சமுதாயத்தில் தௌஹீதின் பெயரால் தோன்றிய வழிகெட்ட சிந்தனையென்று ஒன்று சொல்வதானால், அது ஸஹீஹான ஹதீஸ் மறுப்புக் கொள்கை தான். இந்தக் கொள்கை இஸ்லாத்தின் அடிப்படைக்கு வேட்டு வைப்பதும், குஃப்ரின் பால் இட்டுச் செல்லக் கூடியதாகவும் இதற்கு முன்னர் இஸ்லாத்தில் தோன்றிய வழிகெட்ட பிரிவினரின் வழிமுறையாகவும் உள்ளது. எனவே இதன் உண்மை நிலையை முஸ்லிம் சமுதாயத்திற்கு உணர்த்தி இவ்வழிகேட்டில் இருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது.

ஆனாலும் இவர்கள் இந்த ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்குச் செல்வதற்கு முன் தவ்ஹீத் கொள்கைப் பற்றி நல்ல முறையில் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதை அதிகமாக வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள். இதுவெல்லாம் இவர்களின் இந்த ஹதீஸ் மறுப்பு வழிகேட்டை மக்கள் சரியாக புரிந்துக் கொள்வதற்கு பெரும் தடையாக உள்ளது.

இவர்கள் ஹதீஸ்களை அனுகும் விதமே அடிப்படையில் தவறானது. முதலில் ஹதீஸில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று ஆராய்ந்து பார்த்து அதற்கு தகுந்தாற்போல் நம் அறிவை பயன்படுத்த வேண்டும். ஆனால் இவர்கள் முதலில் இந்த ஹதீஸை மறுக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டு அதற்கு தகுந்தாற்போல் தம்முடைய அறிவை பயன்படுத்துவார்கள்.

முதலில் பெரிய அண்ணன் மறுப்பார்., பிறகு அவர்களின் அறிஞர் குழு? மறுத்து மக்கள் மன்றத்துக்கு கொண்டு செல்லப்படும். இவர்களுடைய ஆய்வுக்கு மாற்று கருத்து கொண்டவர்கள் ஒன்று வெளியேறுவார்கள் அல்லது வெளியேற்றப்படுவார்கள். இப்படியாக அல்லாஹ் அருள் புரிந்த, அவர்களிடமிருந்து வெளியேறிய பல அறிஞர்கள், இவர்களைப்போல் அல்லாமல் கண்ணியமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் கிருபையால் ஒரு நன்மை நடந்திருக்கிறது. பெரிய அண்ணன் ஒன்றாக இருந்தபோது எல்லோரும் ஒருமித்த குரலில் ஹதீஸை மறுத்தார்கள்.  அவர் வெளியேற்றப்பட்டு NTF என்ற இயக்கம் ஆரம்பித்த பிறகு மறுக்கும் (உவைஸ் அல்கர்னி, இப்னு ஜியாது) போன்ற ஹதீஸை  TNTJ வினர் சரி காண்கிறார்கள். அதாவது முரண்பாட்டின் மொத்த உருவமான இவர்கள் ஒன்றாக இருக்கும்போது ஒரு நிலைபாடு. பிரிந்துபோன பிறகு வேரொரு நிலைபாடு. ஆகையால் இவர்கள் ஹதீஸை நிராகரிப்பதற்கு சூழ்நிலைக்கு ஏற்ப காரணங்களை மாற்றிக்கொண்டு இருப்பார்கள். எப்படியோ இவர்கள் தவறான வழியில் பயணிக்கிறார்கள் என்பதை அவர்கள் மூலமாகவே அல்லாஹ் இந்த உம்மத்துக்கு வெளிக்கொணர்ந்து விட்டான்.

மேலும், இவர்கள் ஹதீஸை மொழிபெயர்க்கும் போது / மேடைகளில் பேசும்போது சரியாக மொழியாக்கம் செய்யாமல், தங்களுடைய விளக்கங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்காக ஒன்று ஹதீஸை இருட்டடிப்பு செய்வார்கள் அல்லது கூடுதல் குறைவு செய்வார்கள்.

ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு:

இறைவனால் அருளப்பட்ட வஹி செய்திகளை மறுப்பது இறை நிராகரிப்பு எனும் குப்ரில் கொண்டு சேர்க்கிறது. அல்குர்ஆன் வஹி என்பதை போல ஸஹீஹான ஹதீஸ்களும் இறைவனால் அனுப்பப்பட்ட வஹிச் செய்திகள் தான்.

உங்கள் தோழர் (முஹம்மது) வழி தவறவில்லை. தவறாகப் பேசவும் இல்லை. மேலும் அவர்(தமது) மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அது வஹீயாக அறிவிக்கப்படும் இறைச் செய்தியே தவிர வேறில்லை. அல்குர்ஆன் (53 : 2, 3, 4)

அல்லாஹ்வும் தூதரும் சொல்வதை அப்படியே ஏற்பதே முஃமினின் பண்பாக இருக்க வேண்டும். அதில் மனோ இச்சையை தினித்து மாற்று விளக்கம் கொடுக்கவோ தனது கொள்கைக்கு அது உடன்படவில்லை என்று மறுத்துவிடவோ எந்த முஸ்லிமுக்கும் அனுமதிக்கப்படவில்லை.

“அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் தமது அக்கரரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவன் தெளிவாக வழிகெட்டு விட்டார்.” அல்குர்ஆன் (33:36)

மனோ இச்சை, பகுத்தறிவை விட இறைத்தூதரின் கட்டளைக்கு முக்கியத்துவம் கொடுத்த உமர் (ரழி) அவர்கள்.

உமர் (ரழி) அவர்கள் (இந்தக்) கருப்புக் கல் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, ”நீ தீங்கோ, நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல் தான் என்பதை நான் நன்கறிவேன், நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்” என்றார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்,etc..)

அலி (ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:

மார்க்கத்தில் பகுத்தறிவைக் கொண்டு முடிவு செய்வதாக இருந்தால் காலுறையின் மேற்புறத்தில் மஸஹ் செய்வதை விட அதன் கீழ்ப்புறத்தில் மஸஹ் செய்வதே பொருத்தமானதாகும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் மேற்புறத்தில் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.

அறிவிப்பவர் : அலீ (ரழி), நூல் : அபூதாவூத் 140

மனோஇச்சை, பகுத்தறிவை பின்னுக்குதள்ளி, இறைத்தூதரின் கட்டளைக்கு முன்னுரிமை கொடுத்த ஸஹாபாக்களின் பண்பை இஸ்லாமிய சமுதாயம் இவர்களிடம் எதிர்பார்க்கிறது.



ஸஹீஹான ஹதீஸ்தான் எனது மத்ஹப் என்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

“இந்த மண்ணறையில் அடங்கப்பட்டுள்ள இறைத் தூதரின் வார்தையைத் தவிர, அனைவரின் வார்த்தைகளிலும் சரி, பிழை இரண்டும் உண்டு” என இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.

ஹதீஸ்கலை அறிஞர்கள், ஸஹீஹான ஹதீஸ்களை தரம் பிரித்து நினைவாற்றல், நம்பகமானவர், சங்கிலித்தொடர் அறுபடாமல் இருத்தல், ஸாத் மற்றும் மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம் இல்லாமல் இருத்தல் போன்ற முக்கியமான ஐந்து வரைவிலக்கணதை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். ஆனால் இந்த நவீன அறிஞர்கள் குர்ஆனோடு மோதவிட்டு பார்க்க வேண்டும் நம்முடைய அறிவு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று புதிய நிபந்தனைகளை விதித்து ஹதீஸ்களை மறுப்பார்கள்.

ஒரு உண்மையான் முஃமின், வஹீ செய்தியான ஹதீஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதல் நிலையில் வைத்து பார்க்க வேண்டும். ஆனால் இயக்க வெறி பிடித்தவர்கள், இரண்டாம் நிலையில் வைத்து பார்க்க வேண்டிய பீஜேவின் கருத்துக்களை வஹீயாக முதல் நிலையில் வைத்து பார்த்ததன் விளவு தான், இவரின் ஹதீஸ் நிராகரிப்பு கொள்கைக்கு ஒரு முக்கிய காரணியாக பார்க்க முடிகிறது.

இந்த வழிகெட்ட தலைவர்கள், ஹதீஸ்களை எப்படி தங்களின் மனோ இச்சைபடி வளைத்து அதில் திருகுதாளம் செய்தார்கள் என்பதை பல சமகால அறிஞர்கள் விரிவாக விளக்கி உள்ளதை வலைதலைதலங்களில் காணக்கிடைப்பதால், விரிவஞ்சி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள், “நமது இரட்சகன் ஒவ்வொரு இரவும் முதல் வானத்திற்கு இரவில் மூன்றாவது பகுதி இருக்கும்போது இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன், யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன், யாரேனும் பாவமன்னிப்பு தேடினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான்”. (அறிவிப்பாளர்: அபு ஹீரைரா, நூல்: புகாரி – 1145)

இந்த ஹதீஸில் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதற்கு நேரடியான பொருள் கொடுப்பதை தான் சஹாபாக்களும், ஹதீஸ்கலை அறிஞர்களும் அறிந்து வைத்திருந்தனர். ஆனால் பீஜேவும் அவர்களது கூட்டமும் அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் இறங்குகிறது அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மனோ இச்சைக்கு அடிமையாகி மாற்று பொருள் கொடுத்து தங்கள் இருப்பை நிலை நாட்டிக்கொள்ள்ள பகீரதப் பிரயத்தனம் செய்தனர்.

கடைசி காலத்தில் வரக்கூடிய தஜ்ஜாலிடம் இருந்து எப்படி அனுதினமும் பாதுகாப்பு தேடவேண்டும் என்று அறிவுறுத்தினார்களோ, அதைவிட முக்கியமாக என்னுடைய உம்மத்தில் இருந்து நான் அதிக அச்சம் கொள்வது வழிகெடுக்க்கூடிய தலைவர்களை பற்றிதான் என்று நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்.

ஒருவர் மீது நேசம் கொள்வதும், அவரின் கருத்துக்கள் சிந்தனைகள் மீது ஈர்ப்பு உண்டாவதும், அவர் சார்ந்து இருக்கின்ற இயக்கங்கள் மீது பற்று உண்டாவதும் மனிதர்களின் இயற்கை சுபாவங்களே. ஆனால் மார்க்க ஆதாரங்களை புரம் தள்ளிவிட்டு மனோ இச்சைகளை மார்க்கம் என்று விதைக்கும்போது கொதித்து எழவேண்டிய பற்று, ஈர்ப்பு, நேசங்கள் எல்லாம், இயக்க வெறியாக மாறி அவரது ரசிகர்களை தக்லீது வரைக்கும் கொண்டு சென்றுவிட்டதுதான் NTF, TNTJ போன்ற இயக்கங்கள் செய்த சாதனை.

ஹதீஸ்கலை அறிஞர்களும் மனிதர்கள்தானே, எங்கேயாவது தவறு நடந்து இருக்கலாம் என்று தங்களின் பக்தர்களை தக்கவைத்துக்கொள்ள நூதன விளக்கம் கொடுப்பார்கள். இவர்களின் ஹவாரிஜிய சிந்தனைகளுக்கு ஹதீஸ்கலை அறிஞர்களை நோக்கி விரல் நீட்டுவதை இந்த முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது. இதன்மூலம் எங்கள் தலைவர் மட்டும் தவறு செய்யாத மனிதர் என்று சொல்ல வருகிறார்களா? தவறு செய்யாதவர்கள் என்றால் இறைவனால் நேரடியாக கண்காணிக்க படுகிறார்களா? ஆம்….. எங்கள் TNTJ ஜமாஅத் அல்லாஹ்வின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் சொல்லிவிட்டார்கள்.

அஜ்வா பேரீத்தம்பழ ஹதீஸை உங்களால் செயல்படுத்த முடியுமா என்று கிறிஸ்தவ சகோதரர்கள் கேட்க, அதற்கு ஆழகாக பதில் சொல்வதை விட்டுவிட்டு சர்வ சாதாரணமாக,  நாங்கள் அந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஜஹா வாங்குவார்கள். கிறிஸ்தவ சகோதரர்கள் உடனே இன்று ஒரு விக்கெட் விழுந்துவிட்டது  (நிராகரிக்கும் ஹதீஸ்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிட்டது) என்று கிண்டலடிப்பார்கள்.

வழிகெட்ட பித்அத்வாதிகளும், அல்லாஹ்வும் அவனது தூதரின் செய்தியை மறுப்பவர்களும் என்ன காரணங்கள் சொல்லி மறுத்தார்களோ, அதே காரணங்களை சொல்லி நவீன மார்க்க வியாபாரி பீஜேவும் அவர்களது கூட்டமும் மறுக்கும் மற்றொரு ஸஹீஹான ஹதீஸ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மலகுல் மௌத்தும் சம்பந்தமான (புஹாரி : 3407).

இறைவன் மலக்குல் மெளத்துக்கு நீங்கள் மூஸாவிடம் செல்லுங்கள், இதுபோன்று நடக்கும், மறுபடி என்னிடம் வந்து திரும்பிச்சென்று மூஸாவுடைய உயிரை கைப்பற்றுவீர்கள் என்று மலக்குகளுக்கு என்ன கட்டளை இடப்பட்டுள்ளதோ அதை செய்தார்கள் என்பதை சாதாரண அறிவு படைத்த ஒருவன் விளங்கிக்கொள்வான். ஆனால் குதர்க்கம் செய்வதற்கென்றே உருவான கூட்டம் சிந்தனையை அடகு வைத்து விட்டு சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்தது போல், மூஸா நபி மரணத்தை வெறுக்கிறார்களா? மலக்குகள் தோல்வியுடன் திரும்புவார்களா? போன்ற பைசா பிரயோஜனம் இல்லாத கேள்வியை கேட்டு, அவரது பக்த கோடிகளை உசுப்பிவிட்டு வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்கள்.

சரி அவர்களிடம் மூஸா நபி சம்பந்தமான குர்ஆன் வசனத்திலிருந்து சில எதிர் கேள்விகளை கேட்கிறோம்.

மூஸா (அலை) அவர்கள் தவறுதலாக ஒரு கொலை செய்தார்கள். மூஸா(அலை) அவர்களைக் கொலை செய்ய முடிவு செய்ததாகத் தகவல் கிடைக்கின்றது. அவர் தனது உயிரைக்கு பயத்து எவரும் அறியாத வண்ணம் ஊரை விட்டு ஓடி விடுகிறார்கள். (குர்ஆன்:28:15-21)

திரும்பிப் பார்க்காமல் புறமுதுகிட்டு ஓடினார். அதன் பின் அல்லாஹ்வே, “மூஸாவே! முன்னோக்கி வாரும்! பயப்படாதீர்! நிச்சயமாக நீர் அச்சமற்றவர்களில் உள்ளவர்” என்று கூறிய பின்னர்தான் வருகிறார்.

(குர்ஆன்:28:31)

மேற்கண்ட வசனங்களில் இறைவன் மூஸாவைப் பார்த்து நீர் அச்சமற்றவர்களில் உள்ளவர் என்று சொல்லி இருக்க:

கொலை செய்துவிட்டு அதை சட்டப்படி சந்திக்காமல் பயந்து ஓடி இருக்கிறார்கள்.
கைத்தடி பாம்பைபோல் நெளிவதை கண்டு புறமுதுகிட்டு ஓடினார்கள்.
இறைவன் கட்டளை இடுகிறான், நம்மோடு இருக்கிறான் என்று தெரிந்தும் பயந்து ஓடுவது நபிமார்களின் பண்பல்லவே, குர்ஆனின் வசனங்களுக்கும், மூஸா நபியின் செயலுக்கும் முரண்பாடு இருக்கிறதே என்று ஒருவன் சொன்னால் அவனை எப்படி மறை கழண்டவர் என்று கூறுவோமோ, அதே போல்தான் மலக்குல் மெளத் ஹதீஸை நிராகரிக்கும் இவர்களையும் நம்ப வேண்டி இருக்கும்.

தங்களுக்கு தாங்களே முரண்பட்டுக்கொண்டு, ஹதீஸில் முரண்பாடு உள்ளது, குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று கொக்கரிப்பது தான் இந்த வழிகெட்ட தலைவர்களின் விசித்திரமான போக்கு.

காசுக்காக ஹதீஸ்களில் திருகுதாளம் செய்தவர்கள், முன்னால் தலைவரின் ஒப்புதல்

தான் வளர்த்த இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்பு, ஹதீஸ்களில் எப்படி எல்லாம் தில்லு முல்லு செய்தார்கள் என்பதை பீஜே அவர்களே ஒரு வீடியோவில் சாட்சி . பகர்கிறார். TNTJ இயக்கத்தில் இருந்து ஏற்கனவே வெளியேறிய ஒரு சகோதரரை பற்றி குறிப்பிடும்போது, இவர் பணத்துக்காக எதையும் செய்வார். இந்த ஹதீஸை பலஹீனமாக ஆக்கி விடுவோமா என்று கேட்பாராம். இவர்கள் ஒன்றாக இருந்தபோது பணத்துக்காக ஹதீஸ்களில் தில்லு முல்லு செய்ததை அல்லாஹ் இந்த உம்மத்துக்கு அவர்கள் மூலகமாகவே வெளிக் கொணர்ந்து விட்டான்.

இஸ்லாத்தின் அடிப்படையை தகர்த்தெறியும் ஹதீஸ் மறுப்புக்கொள்கையை உடையவர்கள் இந்த உலகத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சுற்றித்திரிகிறார்களா  என்று பார்த்தால், எங்கும் காணக்கிடைக்கவில்லை. (விதிவிலக்குகள் உதாரணங்களாகாது). அஹ்லுல் ஹவா என்று சொல்லக்கூடிய மனோ இச்சையை பின்பற்றக்கூடியவர்கள் தமிழகத்தை மட்டும் எப்படி குத்தகைக்கு எடுத்தார்கள் என்று புரியவில்லை? ஒருவேளை அறிவாளிகள் அதிகமா? அல்லது முட்டாள்கள் அதிகமா? அல்லது அறிவாளிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் முட்டாள்களா? மேலும் ஹதீஸ்களை மறுத்துக்கொண்டே, நாங்கள்தான் ஸஹீஹான ஹதீஸ்களை முழுமையாக பின்பற்றுகிறோம் என்று வாயால் வடை சுடுவது ஆச்சரியமாக உள்ளது.

கல்வி உயர்த்தப்பட்டு அறியாமை தலைவிரித்தாடுவது, தானும் வழிகெட்டுத் தன்னைப் பின்பற்றுவோரையும் வழிகெடுப்பது, மார்க்க அறிவு இல்லாதவர்கள் மக்களிடையே மார்க்கத்தீர்ப்பு வழங்குவது ஆகியவையும் மறுமை நாளின் அடையாளங்களே. ஓவ்வொரு கால கட்டத்திலும் இஸ்லாம் இது போன்ற துன்பங்களச் சந்தித்தது.

நபி (ஸல்) அவர்கள் வாழ்நாளிலேயே தன்னை நபி என சூழுரைத்த  முஸைலிமா விலிருந்து  காதியானிகள் வரை ஏகப்பட்டபொய்யர்களின்சூழ்ச்சி வலை இஸ்லாத்துக்கு எதிராகப் பின்னப்பட்டது. இஸ்லாத்தைக் குறை கூறும் அறைகுறைகளான ஸல்மான் ருஸ்தி, தஸ்லீமா, மற்றும் சங்கிகள் போன்ற புல்லுருவிகளும் புனித இஸ்லாத்தைக் களங்கப்படுத்த எடுக்காத முயற்சிகள் இல்லை. இப்படி எல்லா கால கட்டத்திலும் இஸ்லாம் மீது வீசப்பட்ட அவதூறுகளை அந்தந்த காலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் முறியடித்து சத்தியத்தை நிலைநாட்டியுள்ளனர் என்பதை வரலாறு நமக்குணர்த்துகின்றது.

இந்த வழிகெட்ட இயக்கங்களினால் சாதனைகளைவிட, சோதனைதான் அதிகம் என்று பட்டிமன்றம் வைக்காமலே முடிவு செய்து விடலாம். அந்த அளவுக்கு இவர்களின் மார்க்கத்தின் ஹதீஸ் நிராகரிப்பு கொள்கை போல், உலக வாழ்க்கையிலும் பாலியல், பொருளாதார மோசடி போன்ற சோதனை புயலில் சிக்கித்தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த போலி ஏகத்துவ தலைவர்கள், ஏகத்துவத்தை எடுத்துரைப்பதற்கு பதில், மோக(ம்)த்துவத்தை பரப்பினால் ஏதாவது பலன் கிட்டலாம். அல்லாஹ்வின் மிகப்பெரும் அருளால் நாம் வாழும் காலத்திலேயே அவர்களை அடையாளப்படுத்தி, களங்கப்படுத்தி, அவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள், ஏகத்துவத்தை எடுத்துரைக்க கடுகளவும் தகுதி அற்றவர்கள், அவர்களின் கூற்றுக்கள் பின்பற்றுவதற்கு தகுதி அற்றவைகள் என்பதை நிரூபித்து விட்டான்.

மக்களிடையே ஏகத்துவத்தை போதிக்க வந்த யோக்கிய சிகாமணிகள், நீங்கள் எத்தனை கோடி ஊழல் செய்தீர்கள்? விபச்சாரம் செய்ததை நிரூபிக்க முடியமா? அனாதை சொத்துக்களில் மோசடி போன்ற உலக மகா போலி ஏகத்துவத்தை???? விவாத பொருளாக்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் வேஷம் கலைந்து,  தங்களிடையே தர்ம யுத்தம் நடத்தி கொண்டு இருப்பதால் அவர்களைப்பற்றி நாம் அதிகம் கவலை படத்தேவை இல்லை. அவர்களின் இந்த சந்தி சிரிக்கும் போக்கை கண்டு அவர்களை பின்பற்றியவர்களின் கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து கொண்டு இருக்கிறது. கூடாரம் கலைந்து விட்டால், வழிகெடுக்கும் தலைவர்களின் வேடமும் கலைந்து விடும்.

எதை சொன்னாலும் ஏன் என்று கேட்காமல், வெறி  கொண்டு இயக்கத்தை பின்பற்றி சிந்திக்கத் தவறிவிட்டவர்களை இறைவன் கடுமையாக பிடிக்கும் மறுமை நாளில், “அவர்கள் எங்கள் தலைவர்களை பின்பற்றினோம், எங்களை வழிகெடுத்து விட்டார்கள், ஆகையால் அவர்களுக்கு இரட்டிப்பு தண்டனை வழங்குவாயாக” என்ற அல் குர்ஆன் (33: 67,68) வசனத்தை மேற்கோள் காட்டுவதை தவிர வேறு வழியை காணமாட்டார்கள்.

இந்த வழிகெட்ட ஹவாரிஜிய சிந்தனை கொண்ட தலைவர்கள், மற்றும் இவர்கள் வாக்கு கொடுத்து விட்டால் ஏன் என்று கேட்காமல், அதை குர்ஆன் ஹதீஸூக்கு மேல் எடுத்து வைத்துக்கொண்டு ஜானுக்கு ஜான் முழத்துக்கு முழம் பின்பற்றும் தக்லீது வாதிகளுக்காக இறைவனின் ஒரு எச்சரிக்கை கீழே….

(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது……….” (2:219) 

மேற்கண்ட குர்ஆன் வசனம் இவர்களுக்கும் இவர்களின் இயக்கங்களுக்கும் கன கச்சிதமாக பொருந்தும். எப்படி மதுவினால் ஒருசில நன்மைகள் இருந்தாலும், தீமைகள் அதிகமாக இருப்பதால் அதை தவிர்ந்து கொள்ள அல்லாஹ் கட்டளை இடுகிறானோ, அதேபோல இவர்களின் தீமைகள் (ஹதீஸ்களை மறுத்து அகீதாவில் கோட்டைவிட்டதால்) நன்மைகளை மிகைத்துவிட்டபடியால், இவர்களையும் தவிர்ந்து கொண்டால் மறுமையில் இறைவனின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் இன்ஷாஅல்லாஹ்…

சத்தியத்தை, ஏகத்துவத்தை சரியாக எப்படி ஸஹாபாக்கள் மனோஇச்சை மற்றும் பகுத்தறிவை பின்னுக்குதள்ளி, இறைத்தூதரின் கட்டளைக்கு முன்னுரிமை கொடுத்து ஸஹீஹான ஹதீஸ்களை அனுகினார்களோ அதுபோல நம் அனைவரையும் ஆக்க வேண்டும் என்று துஆ செய்தவனாக…..

அடுத்ததாக, ஜகாத் திருடர்கள் இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான ஜகாத்தில் எப்படி தங்களின் மாயாஜால வித்தைகளை அறங்கேற்றினார்கள் என்று பார்ப்போம். 



ஜகாத்தை வருடா வருடம் கொடுக்காமல் ஆயுளுக்கு ஒருமுறை மட்டும் கொடுத்துவிட்டு, ஏழைகளுக்கு போய்ச்சேரவேண்டிய அமானிதமான ஜகாத் தொகையை அபகரித்து வைத்துள்ளபடியால், NTF, TNTJ கூட்டத்தினரை ஜகாத் திருடர்கள் என்று அழைப்பதில் எந்த தவறோ, தயக்கமோ இல்லை என்பதை மனதில் பதிய வைத்துக்கொண்டு மேலே செல்லுங்கள்.

இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைகளில் ஜகாத் ஒரு பலமான தூணாகும். 1400 வருடங்களுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த ஜகாத் விஷயத்தில் எந்தக் காலத்திலும் எடுத்து வைக்கப்படாத இஸ்லாத்தின் அடிப்படையையே ஆட்டம் காண வைக்கும் சில விஷம பிரசாரத்தை நவீன குழப்பவாதிகள் முன்னிறுத்தினர். வழக்கம்போல், குர் ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் அவர்களின் பொய் வாதங்கள் நிரூபிக்கப்பட்டு புறமுதுகிட்டு ஓடிவிட்டனர்.

ஹதீஸ் நிராகரிப்பாளர்கள் இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான ஜகாத்திலும் தங்களுடைய யூகங்கள், பகுத்தறிவு, மனோ இச்சையை புகுத்தி, தமிழக முஸ்லிம்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர். எல்லாவற்றிலும் தனித்துவத்தை(?!) நிலைநாட்டும் இவர்கள், PJ, TNTJவின் ஜகாத் கொள்கை என்று ஒரு புதிய ஜகாத் கொள்கையை புகுத்துவதற்காக வழக்கம்போல, செல்லரித்துப்போன வாதங்களையும், குர்ஆன் ஹதீஸில் புல்லரித்து போகும் தங்களின் பித்தலாட்டங்களையும் எப்படி அறங்கேற்றினார்கள் என்று பார்ப்போம்.

பகுத்தறிவை முற்படுத்தி குர்ஆன் ஹதீஸை பிற்படுத்தி ஜகாத்தில் செய்த தில்லுமுல்லுகள்:

கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்கத்தேவை இல்லை
ஆயுளுக்கு ஒருமுறை கொடுத்தால் போதும்
ஒவ்வொரு வருடமும் கொடுத்தால் ஓட்டாண்டி ஆகிவிடுவார்
ஒவ்வொரு வருடமும் கொடுத்தால் வறுமை வந்தடையும்
ஒவ்வொரு வருடமும் கொடுப்பதால்தான் செல்வந்தர்கள் கொடுக்க தயங்குகிறார்கள்
பொருள் ஒரு முறை தூய்மை அடைந்து விட்டதால் மீண்டும் கொடுப்பதன் மூலம் தூய்மை அடையாது. ஆகையால் ஒரு தடவை கொடுத்தால் போதும்.
ஜகாத் கொடுக்கும்போது கொடுத்த பொருள் கொடுக்காதபொருள் என்று பிரித்துப்பார்க்கும் வாசகத்தை எந்தகுர்ஆன், ஹதீஸில் இருந்து எடுத்தார்கள் என்பதைஆதாரத்துடன் நிரூபிக்க கடமைபட்டுள்ளார்கள். வாய்க்குவந்தபடி உளருவதற்கு இஸ்லாம் ஒன்றும் இவர்கள் அப்பன்வீட்டு சொத்தில்லை.

ஜகாத் ஒவ்வொரு வருடமும் கொடுத்தால், ஒருவரிடம் உள்ள செல்வம் கரைந்து ஓட்டாண்டி ஆகிவிடுவார் என்பதுதான் இவர்கள் கொடுத்த முதல் உலக மகா ஆதாரம். அட நுனிப்புல் மேயும் அறிவு ஜீவிகளா? ஜகாத் கொடுத்துக்கொண்டு இருந்தால் செல்வம் மென்மேலும் வளரும் என்ற குர் ஆன் வசனத்தை நீங்கள் பார்த்ததே இல்லையா?

ஜகாத் செல்வத்தை மேலும் மேலும் வளரச் செய்யும் வட்டி செல்வத்தை அழித்தொழிக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்குர்ஆன் (30:39)

இந்த அல்குர்ஆன் வசனத்தை இவர்களின் வாதங்களுக்கு எதிராக தூக்கிப்போட்ட உடன், ஜகாத் கொடுப்பதினால் செல்வங்கள் கரைந்து வறுமை உங்களை வந்தடையும் என்று பீலா உட்டுப்பார்த்தார்கள். வறுமையை கொண்டு ஏவுபவர்கள் உங்களைப்போல வழிகெட்ட ஷைத்தான் என்ற வசனத்திற்கு பதில் சொல்ல முடியாமல் ஜகா வாங்கினார்கள்.

தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான். அல்குர்ஆன் (2:268)

ஜகாத் கொடுப்பதால் அவர்களின் (மனிதர்களின்) உள்ளும் புறமும் தூய்மையாகும் என்ற குர்ஆன் வசனத்தை திரித்து, ஜகாத் கொடுக்கும் பொருள் தூய்மை ஆகும் என்று பொய் விளக்கம் கொடுத்தார்கள்.

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக……………   அல்குர்ஆன் (9:103) 

இந்தப் பொய் வாதங்களினால் தங்களின் சுயரூபம் அம்பலமாகி விட்டதால், ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதால்தான் அதிகமான தனவந்தர்கள் ஜகாத் கொடுக்கத் தயங்குகிறார்கள். ஆயுளுக்கு ஒரு முறைதான் ஜகாத் என்றால் எல்லா செல்வந்தர்களும் ஜகாத் கொடுக்க முன் வருவார்கள் என்ற விஷத்தை விதைத்தார்கள்..

எப்படி இருக்கிறது பீ.ஜேயின் உளுத்துப்போன வாதம்? நாளை இந்த ஹதீஸ் மறுப்பாளர் ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகை என்றிருப்பதால்தான் அதிகமான முஸ்லிம்கள் தொழுவதில்லை. ஒரு நாளைக்கு ஒரு வேளைத் தொழுகை மட்டும்தான் என்றால் முஸ்லிம்கள் அனைவரும் தொழுகையாளிகள் ஆகிவிடுவார்கள் என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை. பீ.ஜேயும் அவரது அதிக பக்தகோடிகளும் ஐவேளைத் தொழுகைகளைப் பேணித் தொழுது, தொழுகையை நிலைநாட்டுவதில்லை என்பது ஊரறிந்த உண்மை.

அல்லாஹ் அல்குர்ஆனில் முப்பதுக்கும் மேற்பட்டஇடங்களில் தொழுகையை நிலைநாட்டுங்கள். ஜகாத்தைக்கொடுத்து வாருங்கள் என்று மடக்கி மடக்கிச்சொல்வதிலிருந்தே தொழுகையும், ஜகாத்தும் தொடர்ந்துகடைபிடிக்க வேண்டியவை என்பது உறுதியாகத்தெரிகிறது.

……..இன்னும் யார் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்). அல்குர்ஆன் (9 : 34, 35)

தொடர்ந்து செலவு செய்யப்படாமல் சேமித்து வைத்திருக்கும் பொருளுக்கு அல்லாஹ் கன்ஜ் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறான். இந்த வசனங்களில் இருந்து, பொருள்கள் செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை அல்லாஹ் தெளிவாக விளக்குகிறான். 

வழிகெட்ட தலைவர்கள் தங்களின் மனோஇச்சை வாதங்களிலே மூக்கறுபட்டு விட்டனர். அடிபட்ட பாம்பு சினம் கொண்டு எழுவது போல, தங்களின் இருப்பை நிலை நாட்டிக்கொள்ள ஹதீஸிலே தங்களின் கைவரிசையை காட்ட ஆரம்பித்தனர்.

அல்லாஹ்வின் தூதர், மூன்று காரியங்களைச் செய்பவர்கள் ஈமானின் ருசியைச் சுவைத்துக் கொள்வார்கள் என்று சொன்னார்கள், அவற்றில் ஒன்று: 

தனது செல்வத்தின் ஜகாத்தை பரிசுத்த எண்ணத்துடனும், உளப்பூர்வமாகவும் வருடா வருடம் கொடுப்பவர்.    உமர்(ரழி), அபூதாவூத் : 1349

தங்களுடைய முரட்டு வாதங்களுக்கு முட்டுக்கொடுக்கும் என்றிருந்தால் பலவீனமான ஹதீஸையும், பலமான ஹதீஸாக ஆக்குவதற்கு அனைத்து விதமான தில்லு முல்லுகளையும் அரங்கேற்றுவார்கள். தங்களுடைய வாதங்கள் எடுபடவில்லை என்றால் பலமான ஹதீஸையும், பலஹீனமாக்குவதற்கு எந்த எல்லைக்கும் போய் விடுவார்கள். இந்த வகையில் தான் மேலே சொன்ன ஹதீஸையும் பலவீனமான ஹதீஸ் என்று சொல்லி தங்களை தக்லீது செய்பவர்களை ஆட்டம் போட வைத்தனர்.

ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரத்தை அள்ளிபோட்டு, அவர்களின் முகத்தில் கரியை பூசிவிட்டபடியால், வழக்கம்போல் பலவீனமான ஹதீஸ் என்ற ஆயுத்தைதை எடுத்து கம்பு சுற்ற ஆரம்பித்துவிட்டனர். மேலே உள்ள ஹதீஸின் அறிவிப்பாளர் ஆஸிம் இன் லமூரா (ரலி) அவர்கள் நம்பகமற்றவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் கூறியுள்ளதால் இது பலவீனமானது என்பது இவர்களின் வாதம். பொதுவாக இவர்களுக்கு குர்ஆன், ஹதீஸில் ஞானம் இல்லை என்பதை அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் ஹதீஸ் கலையின் உஸூல்களும் இவர்களுக்கு தெரியவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை.

ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸின் அறிவிப்பாளர் ஆஸிம் இன் லமூரா (ரலி) அவர்களை நம்பகமாவனவர் என ஏற்றுக்கொள்ளும் அறிஞர்களின் பட்டியல்….

இமாம் நாஸிருத்தீன் அல்பானி

இமாம் அஹமது இப்னு ஹம்பல்

இமாம் தஹபி

இமாம் நஸயீ

இமாம் இப்னு ஸஅத்

மேலும் இந்த ஹதீஸ் ஹஸன் தரத்தில் உள்ளது என்று குர்தூபி, இப்னு ஹஜம் போன்றோர் சான்று பகர்ந்துள்ளனர். இமாம் திர்மிதீ அவர்கள் இமாம் புஹாரியிடம் இந்த ஹதீஸ் பற்றி கேட்கும்போது ஸஹீஹ் தரத்தில் உள்ளது என்று கூறியுள்ளார்கள்.

இந்த ஹதீஸ் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இருப்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கும்போது, தங்களுடைய பலவீனத்தை முட்டுக்கொடுப்பதற்காக, பலவீனமான ஹதீஸ் என்ற கீரல் விழுந்த ரெக்கார்டை ஓட விட்டு பார்த்தனர். ஆனால் பலவீனமான TNTJ வின் ஜகாத் கொள்கையை அவர்களின் ஆதரவாளர்கள் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவர்களின் முகத்தில் பளேர் என்று அறைந்தது போல் ஆகிவிட்டது.

ஜகாத் ஒவ்வொரு வருடமும் கொடுத்து விட்டால் கையில் காசில்லாமல் ஓட்டாண்டி ஆகிவிடுவார்கள், கேட்கும்போதெல்லாம் நம்முடைய இயக்கத்துக்கு வாரி கொடுக்க முடியாமல் போய்விடுமே என்ற சுயநலம் கூட இதுபோன்ற அச்சு பிச்சு ஃபத்வாக்களின் பின்னனியில் இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுகிறது. 

மேலும் அபூதாவூதில் வரக்கூடிய 1336, 1338, 1340 ஹதீஸ்களும் கொடுத்த பொருளுக்கே ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுருத்துகின்றன.

ஒவ்வொரு வருடமும் ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவற்றின்ஜகாத்தை வசூலிக்க பொருப்பாளர்களை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கும் போது, ஏற்கனவே கொடுத்தபொருளுக்கு ஜகாத் வாங்காதீர்கள் என்று சொன்னதாகவோ, ஜகாத் கொடுப்பவர்களும் இந்த பொருளுக்கு ஏற்கனவேகொடுத்து விட்டேன் என்று சொன்னதாகவோ எந்தத்தகவலும் ஹதீஸ்களில் காணவில்லை.  எனவே ஒவ்வொருவருடமும் ஏற்கனவே ஜகாத் கொடுத்த பொருள், கொடுக்காத பொருள் எனப் பாகுபாடில்லாமல்எல்லாவற்றுக்கும் ஜகாத் வசூலிக்கப்பட்டுள்ளது என்றே நம்பவேண்டும். இதற்கு மாற்றமாக யாராவது கூறினால்ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த சஹாபாக்களும், கலீபாக்களும், தாபியீன்களும், அவர்களுக்கு பின்னால் கடந்த 1400 வருடங்களுக்கு மேலாக குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இஸ்லாமிய சமூகம் ஜகாத் கொடுத்துக்கொண்டிருக்கும்போது, நேரடியாக வானத்தில் இருந்து குதித்ததுபோல் இந்த கவாரிஜிய கூட்டத்தினர் ஜகாத்தில் குழப்பத்தை விளைவிப்பதில் இருந்து, இவர்கள் ஷைத்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம். மேலும் நாங்கள் தான் நேரான வழியில் இருக்கிறோம், சஹாபாக்கள் முதல் இதுவரை உள்ள இஸ்லாமிய சமுதாயம் ஜகாத் கொள்கையில் தவறான புரிதலில் இருந்துள்ளார்கள் என்பதை கொஞ்சமும் இறைஅச்சம் இல்லாமல் கூவிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஏழைகளும் அவர்களுடைய உரிமையை பெறவேண்டும்என்பதற்காக, செல்வம் ஒருவரிடமே நிலைபெற்றுஇருக்காமல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பதுஜகாத்தின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று. ஆயுளுக்கு ஒருமுறை கொடுத்து விட்டு செல்வத்தை பதுக்கிவைப்பதால் செல்வம் சுழன்று கொண்டு இருக்குமா? ஏழைகள் அவர்களுடைய உரிமையை பெற்று விடுவார்களா? என்பதை இந்த அறிவு ஜீவிகள் சிந்திக்க கடமைபட்டுள்ளார்கள்.

ஒரு வாதத்துக்காக நாம் எடுத்து வைத்த வாதங்கள் தவறாக இருந்தாலும், இறைவன் ஏன் ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுத்தாய் என்று தண்டிக்கப்போவதில்லை. மேலதிகமாக கொடுத்தது நமக்கு நன்மையாக அமைந்துவிடும். அதே சமயத்தில் இவர்களின் மனோஇச்சை ஃபத்வாக்கள் தவறாகி இறைவனின் கட்டளைகளை நிறைவேற்ற தவறி கூனி குறுகி நிற்கும்போது, இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள் என்று நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் நாளை நினைத்துப்பார்க்க வழிகெட்ட தலைவர்களும், அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றிய வர்களும் கடமை பட்டுள்ளார்கள்.

ஆதாரத்தின் அடிப்படையிலும், அறிவு பூர்வமாக சிந்தித்தாலும், ஆக எப்படி பார்த்தாலும் நவீன குழப்பவாதிகள் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை சிந்திப்பவர்கள் விளங்கி கொள்வார்கள். 

இறைவா சத்தியத்தை ஏற்று செயல்படவும், அசத்தியத்தை விட்டு விலகி விடவும் எல்லோருக்கும் அருள் புரிவாயாக.

நவீன ஹதீஸ் நிராகரிப்பாளர்கள், ஹதீஸ்களை மட்டும் நிராகரிக்காமல், தங்களுடைய கைவரிசையை குர் ஆனிலும் காட்டிவிட்டார்கள். வழிகெட்ட TNTJ வின் சூனியக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக, இந்த ஞானசூனியங்கள் எப்படியெல்லாம் குர்ஆன், ஹதீஸை திரித்து விளையாடினார்கள் என்பதை பார்ப்போம்.

ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல் – TNTJவின் ஞானசூனியங்கள்.    

எந்த ஒரு விவாதகளமாகட்டும், அதிலே NTF & TNTJ கூட்டத்தினர் தனித்தன்மையுடன்? இருக்க வேண்டும் என்பதற்காக குர்ஆன், ஹதீஸிலே பித்தலாட்டங்களை செய்து  எதையாவது உளறி கொட்டிக்கொண்டு இருப்பார்கள். அந்த வகையில், சூனியம் சம்பந்தமான குர்ஆனின் வசனங்களுக்கு சுய விளக்கங்கள் கொடுத்து, ஹதீஸ்களை நிராகரித்து, ஹதீஸ் நிராகரிப்பில் உச்சத்தை அடைந்து இதுவரை யாரும் செய்யாத இனிமேல் யாரும் செய்ய துணியாத  அளவுக்கு மார்க்கத்தில் வரம்பை மீறிய ஒரு வழிகெட்ட கூட்டமாக ஆகிவிட்டார்கள்.

பீஜே தன்னுடைய குர்ஆன் தப்ஸிரில் இதுவரை வந்துள்ள 14 எடிசனில்  சூனியம் சம்பந்தமான (2:102) வசனுத்துக்கு 7 தடவை மொழிபெயர்ப்புகளை மாற்றியுள்ளதிலிருந்து, உண்மையான விளக்கத்தை விட்டுவிட்டு மனோஇச்சைகளை குர்ஆனிலே புகுத்தி குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார் என்பதை அறிவுள்ளவர்கள், விளங்கிக்கொள்வார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி), அபூஹூரைரா (ரலி), சஹாபாக்கள், உலக அறிஞர்கள் யாராக இருந்தாலும், உலகத்தின் முப்தியாக இருந்தாலும், மக்கா மதீனாவின் இமாம்களாக இருந்தாலும், எழுதுகிற நானும் படிக்கிற நீங்களாக இருந்தாலும் சரியே, வழிகெட்ட கூட்டத்தினரின் பார்வையில், NTF, TNTJ சூனியக்கொள்கையை ஏற்காத இந்த பிரபஞ்சத்தில் வாழ்ந்து மரணித்த, வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய  முஸ்லிம்கள் அனைவரும் இணை வைப்பவர்களே.

பீஜே & Co. அளித்த ஃபத்வாக்கள், அவர்களை ஹவாரிஜிய முஹ்தஸிலா சிந்தனை கொண்டவர் என்று மக்கள் மன்றத்தில் அடையாளம் காட்ட உதவியதால், பீஜேவின் ஜால்ராக்கள் தவிர்த்து, உண்மையான அறிஞர்கள் கூட்டம் இவரை விட்டு விலகியது.

அடிப்படை ஆதாரங்களை விட்டுவிட்டு மனோஇச்சை, பகுத்தறிவு, யூகங்களை மார்க்கத்தில் நுழைத்தால், இஸ்லாத்தின் நம்பிக்கைகளை அது எவ்வாறு வேறுடன் பிடுங்கி எறிந்துவிடும் என்பதற்கு TNTJ கூட்டத்தினர் வாழும் சாட்சியாக இருக்கிறார்கள்.

ஹதீஸை நம்புவதற்கு இவர்கள் கையாளும் முறையை கேட்டால், நம்மை மிஞ்சிவிட்டார்களே என்று ஷைத்தானே புல்லரித்துபோவான். 

தேள் கொட்டியவருக்கு சஹாபாக்கள் சூரத்துல் ஃபாத்திஹா ஓதினார்கள் நிவாரணம் கிடைத்தது என்ற ஸஹீஹான ஹதீஸை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இப்போது போலி ஏகத்துவவாதி ஒருவருக்கு தேள் கொட்டிவிட்டது, சூரத்துல் ஃபத்திஹா ஓதினார்கள் நிவாரணம் கிடைக்கவில்லை, ஆகையால் இந்த ஹதீஸை நிராகரிக்கிறோம் என்று சொன்னால் அவரை எப்படி ஷைத்தானிய வலையில் சிக்கிகொண்டு இருக்கிறார் என்று சொல்வோமோ, அதேபோல் தான் பீஜேயின், எனக்கு யாராவது சூனியம் வைத்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு என்ற உளுத்துப்போன அறிவிப்பும்.

இந்த ஞானசூனியங்களின் சூனிய உளரல்களின் பட்டியல்: (இதற்கான நமது விளக்கமும் தொடர்ந்து பட்டியலிடப்பட்டுள்ளது).

சூனியம் என்ற ஒன்றே கிடையாது.
குர்ஆனில் இறைவன் குறிப்பிடுவது தந்திரம், மந்திரம், வித்தை போன்றவைகள்.
சூனியத்தால் தீங்கிழைக்க முடியாது.
சூனியத்தால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.
கணவன் மனைவிக்கிடையில்…..பாதிப்பை குர்ஆன் கூறுகிறதேப்பா!!!! அது வேற வாய்!!!.
இறைவன் உலகத்தில் நடக்கின்ற தீமைகளுக்கு உதவமாட்டான்.
இறைவன் சூனியக்காரனுக்கு உதவ மாட்டான்.
சூனிய சவால் விட்ட எங்கள் தலைவர் வெற்றி பெற்று விட்டார். ஆகையால் சூனியம் இல்லை.
சூனியம் சம்பந்தமான ஹதீஸ்களின் சனதுகளில் குறைபாடுகள் இல்லை.
அறிவிப்பாளர்கள் வரிசையில் எந்த பிரச்சனையும் இல்லை.
ஆயிஷா (ரலி) குர்ஆனுக்கு மாற்றமாக அறிவிக்கமாட்டார்கள்.
ஆனால் ஆயிஷா (ரலி) அவர்களைவிட எங்கள் தலைவர் அறிவில் சிறந்தவர்.
ஆகையால் எங்கள் பெரிய அண்ணனின் பகுத்தறிவு ஏற்க மறுக்கிறது.
ஒரு யூதன் நபி அவர்களுக்கு சூனியம் வைப்பதை எப்படி நம்புவது?
சூனியம் சம்பந்தமான ஹதீஸ்களில் வார்த்தை குளருபடிகள் இருக்கின்றன.
ஆகையால் அனைத்து சூனிய ஹதீஸ்களும் இட்டுக் கட்டப்பட்டவைகள் etc….
இதற்கு மாற்றமாக நம்பும் அனைத்து முஸ்லிம்களும் இணைவைப்பவர்கள்.
மேலே கண்ட உளரல்கள் இறை நிராகரிப்பாளர்களின் நிலைபாடு அல்ல. அல்லாஹ்வை ஈமான் கொண்ட ஏகத்துவத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டதாக மனப்பால் குடித்துக் கொண்டு இருப்பவர்களின் நிலைபாடு.

திருகுர்ஆனின் பார்வையில் இவர்களின் தில்லுமுல்லுகளை ஒவ்வொன்றாக தோலுரிப்போம்.

திருகுர்ஆனின் 2:102 வசனம் மற்றும் பல ஸஹீஹான ஹதீஸின் (2766,3175,3268,5763 புஹாரி) அடிப்படையிலும், சூனியம் என்ற ஒரு கலை உண்டு, அதை கற்பது பிறருக்கு கற்றுக்கொடுப்பது சூனியம் செய்வது, சூனியக்காரனிடம் செல்வது இறை நிராகரிப்பு, அல்லாஹ் நாடினால் அதன் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று ஒரு முஃமின் நம்பவேண்டும். இதற்கு மாற்றமாக சுய விளக்கம் கொடுப்பவர்கள், குர்ஆன், ஹதீஸை மறுத்தவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுவார்கள்.

இந்த அடிப்படையில் இவர்கள் முதலில் கையில் எடுத்த ஆயுதம் சூனியமே இல்லை என்பதுதான். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்களே, இதுதான் அவர்கள் விஷயத்தில் நடந்தது.

அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்  குர்ஆன் (2:102)

இல்லாத ஒரு கலையையா கற்றுக்கொடுத்தார்கள், சூனியம் இருப்பதால் தான் அதை கற்றுக்கொடுத்தார்கள் என்ற குர்ஆன் ஆதாரத்தை போட்டவுடன், வழக்கம்போல் ‘சூனியம் இல்லை ஆனால் இருக்கிறது’ என்று உளற ஆரம்பித்தார்கள்.

அடுத்ததாக சூனியத்தால் தீங்கிழைக்க முடியாது என்ற அம்பை விட்டுபார்த்தார்கள்.

தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே கற்றுக் கொண்டார்கள். குர்ஆன் (2:102)

இறைவன் குர்ஆனில் சூனியத்தால் தீங்கிழைக்க முடியும் என்று சொல்கிறானே என்ற ஆதாரம் அவர்களுக்கு சேதாரமாக ஆகிவிட்டபிறகு, என்னப்பா எந்த பந்து போட்டாலும் கோல் போடுகிறார்களே என்ற ஆதங்கத்தில், எல்லாம் சரிதான் ஆனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற பொய்யை அவிழ்த்து விட்டார்கள்.

கணவன் மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள்  குர்ஆன் (2:102)

கணவன் மனைவியிடையே பாதிப்பை ஏற்படுத்தும் என்று இறைவனே சொல்லிவிட்டானே. ஏதாவது பதில் உண்டா என்று கேட்டால், இந்த ஞானசூனியங்கள் தங்களுடைய முஃதஸிலா சிந்தனைக்கு முட்டுக்கொடுக்க, தீமைகளுக்கு அல்லாஹ் உதவமாட்டான் என்று கம்பை சுழற்றி விட்டு பார்த்தார்கள்.

குர்ஆனின் அடிப்படையில், பூலோகத்தில் நடைபெறுகிற வறுமை, பட்டினிச் சாவுகள், சுரண்டல்கள், நோய்கள், கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல் துன்புறுத்தல்கள், போன்ற அனைத்து தீமைகளும் அல்லாஹ்விடமிருந்து, அல்லாஹ் நாடினால்தான் நடைபெறும் என்பதுதான் ஒரு முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்ற ஆதாரம் அவர்களின் மூளையை மழுங்கடித்து விட்டது, சூனியத்திற்கு மட்டும் விதிவிலக்காக அல்லாஹ் உதவ மாட்டான் என்ற பொய்யை விட்டுபார்த்தார்கள்.

அல்லாஹ்வின் அனுமதியின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது  குர்ஆன் (2:102)

எந்த ஒரு தீமையும் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; (64:11) 

அல்லாஹ் நாடினால் சூனியத்தின்மூலம் தீங்கிழைக்க முடியும் என்ற ஆதாரம் அவர்களை கடைசியாக மன்னை கவ்வவைத்தது.  ஏதாவது செய்தாக வேண்டுமே என்று செய்வதறியாது நின்றவர்களுக்கு, தங்களுடைய கூடாரம் காலியாகாமல் இருக்க வேண்டுமானால் வழக்கம்போல் சூனியம் சம்பதமான அனைத்து ஹதீஸ்களையும் நிராகரிக்கிறோம் என்று கொஞ்சம் கூட இறை அச்சம் இல்லாமல் உளர ஆரம்பித்தார்கள்.  நஊதுபில்லாஹ்….

ஹதீஸை செயல்முறை சோதனை (practical) செய்து பார்ப்பார்கள். சரிப்பட்டு வரவில்லை என்றால் அவரின் பக்தகோடிகள் ஆட்டத்தை ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அடிப்படையில் பீஜேவுக்கு சூனியம் செய்ய அஹோரியை நியமித்தார்கள். சூனியம் தோற்றுப்போய் விட்டது, ஆகையால் சூனியம் இல்லை, சூனியம் சம்பந்தமான அனைத்து ஹதீஸ்களையும் நிராகரித்து விட்டார்கள்.

நவீன குழப்பவாதிகளுக்கு சூனியத்தை பொய்யெனஅறிவிக்க வேண்டும். ஆனால் அல்லாஹ்வை ஈமான்கொண்டவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். குர்ஆன்/ஹதீஸை நிராகரிக்க முடியாது. அதனால் சூனியம் என்றால்மேஜிக், தந்திரம், வித்தை, மீடியம் இல்லாமல் செய்வதுஎன்று பொருள் கூறி அல்லாஹ்வை மோடி மஸ்தானாகமாற்றிவிட்டார்கள். குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில்நிரூபிப்பதை தவிர்த்துவிட்டு, பகுத்தறிவின் அடிப்படையில்நிரூபிப்பதாக நினைத்துக் கொண்டு சூனியம், ஃபிரஅவ்ன், ஷிர்க், மூஸா, சூனியக்காரர்கள், ஸாமிரி, தஜ்ஜால், மீடியம் என்று எங்கெங்கோ சுற்றி, எதையெதையோ மறுத்து, ஆஹா முஸ்லிம்களின் காதுகளில் பூந்தோட்டத்தையேசுற்றிவிட முயற்சித்தனர்.

சூனியம் சம்பந்தமான ஹதீஸை ஆயிஷா (ரலி) ஒரே ஒருவர் மட்டும் அறிவிப்பதால் இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உதார் விட்டு பார்த்தார்கள். செயல்கள் அனைத்தும் எண்ணங்கள் அடிப்படையில் என்ற ஹதீஸை உமர் (ரலி) அவர்கள் மட்டுமே அறிவிக்கிறார்களே என்று கேட்டால் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்.

சூனியம் சம்பந்தமான ஹதீஸ், சூனியக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்ற குர்ஆன் வசனத்துக்கு முரணாக உள்ளது என்று அடுத்த பொய்யை அறங்கேற்றினார்கள். இந்த குர்ஆன் வசனத்துக்கும், சூனிய ஹதீஸை மறுப்பதற்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லை. சூனியம் கற்றுக்கொள்வதோ/செய்வதோ இறைவனின் பார்வையில் குஃப்ர். எப்போது ஒருவர் இந்த காரியத்தை செய்ய ஆரம்பித்தாரோ அப்போதே அவர் இறைநிராகரிப்பாளர் ஆகிவிட்டார். இறை நிராகரிப்பாளரான சூனியக்காரன் வெற்றி பெறமாட்டான் என்ற புரிந்து கொண்டால் ஹதீஸை மறுக்கத்தேவை இல்லை. என்ன செய்வது பகுத்தறிவு மறுக்கச்சொல்லி தூண்டுகிறதே.

குர்ஆனையும், ஹதீஸையும் நம்புவதற்கு பதில், ஒருபொய்யை மறைப்பதற்கு பல பொய்களை அறங்கேற்றவேண்டும் என்ற கோயபல்ஸ் தத்துவத்தை நம்பி, தங்களுடைய வரட்டு வாதங்களை நிறுவுவதற்கு, பொய்களுக்கு மேல் பொய்களை அவிழ்த்துவிட்டு சப்தநாடியும் அடங்கி ஒடுங்கி, இறுதியாக இந்த போலிஏகத்துவவாதிகள் தங்களிடையே பல பிரிவுகளாக பிரிந்துஊழல், பாலியல் போன்ற ஷைத்தானின் குட்டையில் மூழ்கி, பேரியக்கம் என்று பீற்றிக்கொண்டு இருந்தவர்கள் இருக்கிறஇடம் தெரியாமல் ஆகிவிட்டார்கள்.

லபீத் பின் அஃஜம் என்ற யூதனா அல்லாஹ்வின் தூதருக்கு சூனியம் வைத்தான்? என்று அல்லக்கைகளை ஆச்சரியப்பட வைத்தார்கள். ஹதீஸை நிராகரிப்பதற்கு வைக்கும் அளவுகோலை பாருங்கள். இவர்கள் வாதப்படி ஒரு ஹதீஸை மறுப்பதற்கு யூதன் என்ற அளவுகோலை வைத்தால், யூதப்பெண் அல்லாஹ்வின் தூதருக்கு இறைச்சியில் விஷத்தை வைத்து கொடுத்த ஹதீஸையும், மற்றும் யூதர்கள் சம்பந்தமான அனைத்து ஹதீஸ்களையும் மறுக்க வேண்டுமே.   

TNTJ, NTF கூட்டத்தினர், ஏனைய முஸ்லிம் சமுதாயத்தினரைவிட குர்ஆன் ஹதீஸில் ஞானம் குறைந்தவர்கள் என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். நல்ல கத்தரிக்காய் வாங்குவதற்கு நாலு கடைகள் ஏறி இறங்குகிறோம், ஒரு விஷயத்தை ஆழமாக புரிந்து கொள்வதற்கு பல அறிஞர்களின் கருத்துக்களை கேட்கிறோம். உங்களுக்கு தெரியவில்லை எனில் அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று இறைவன் திருமறையில் கூறுகிறான்.

குர்ஆனின் அறிவுரைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிவிட்ட அறிவுஜீவிகள்??? குதிரைக்கு லகான் போட்டதுபோல TNTJவினரின்  பயானை தவிர வேறு யாருடைய பயானையும் கேட்க மாட்டார்கள். அப்படி கேட்டுவிட்டால் உண்மையை விளங்கிகொள்வார்கள் என்பதால் கேட்கக்கூடாது என்று தலைமை கட்டளை போட்டு இருக்கிறது. இதுதான் இவர்கள் உண்மையான மார்க்கத்தை விளங்க மறுப்பதற்கு முக்கிய காரணம். கத்தரிக்காய்க்கு கொடுக்கும் மதிப்பைகூட இவர்கள் மார்க்கத்திற்கு கொடுப்பதில்லை என்பதுதான் நிதர்சனம்.


Previous Post Next Post