அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழியல்லாஹு அன்ஹு)

அல்லாஹுவின் பாதையில் அள்ளிக்கொடுக்கும் வள்ளல்

*பிறப்பு:*
ஹிஜ்ரத்திற்கு முன் 43ல் மக்காவில்.

*பரம்பரை:*
குரைஷ் கோத்திரத்தின் பனூ ஸுஹ்ரா கிளையைச் சேர்ந்தவர்.

*மறைவு:* ஹிஜ்ரி 32 ஆம் ஆண்டில் மதீனாவில்.

*சிறப்புகள் & பங்களிப்புகள்:*

 *சுவன நன்மாராயம்: *

 சொர்க்கத்திற்கு நற்செய்தி கூறப்பட்ட பத்து தோழர்களில் ஒருவர்!

 *ஹிஜ்ரத்:*

 மக்காவிலிருந்து அபிசீனியா (2முறை) & பின்னர் மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்த தியாகி!
 
*போர்க்கள நாயகர்:*

- பத்ர், உஹத், அகழ்ப்போர் போன்ற முக்கியப் போர்களில் துணிச்சலுடன் பங்கேற்ற வீரர்! 

- உஹத் போரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பாதுகாக்கப் பெரும் பங்காற்றினார். 

- தபூக் போரில் ஒரு படையணிக்குத் தலைமை தாங்கினார். 
- அப்போரில் 200 ஒக்கியா தங்கம், 500 குதிரைகள், 1500 ஒட்டகங்கள் என வாரி வழங்கினார்! 

- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே ஒரு தொழுகைக்கு இமாமாக நின்று தொழுகை நடத்திய பாக்கியசாலி!

- தூமதுல் ஜந்தல் படைப்பிரிவுக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். 

*வியாபார மேதை & கொடையாளி: *
-  தனது உழைப்பால் பெரும் செல்வம் ஈட்டி, இஸ்லாமிய சமுதாயத்திற்குப் பல கொடைகளை வாரி வழங்கியவர்!

- மரணத்திற்கு முன், பத்ர் போரில் பங்கேற்ற ஒவ்வொரு தோழருக்கும் 400 ஒக்கியா தங்கத்தை தர்மம் செய்தார்! 

 *தலைமைத்துவம்: *

 மூன்றாவது கலீஃபாவைத் தேர்ந்தெடுக்கும் ஆறு பேர் கொண்ட குழுவில் ஒருவராக இருந்தார்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை, வீரம், தியாகம், மற்றும் இஸ்லாமியப் பணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்! 

அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்! ✨
أحدث أقدم