நல்லுபதேசத்தை வேண்டி நின்ற உலகறிந்த கலீஃபா உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹி


----
كَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ إِلَى الْحَسَنِ الْبَصْرِيِّ يَقُولُ :
 أَمَّا بَعْدُ ، فَإِذَا وَصَلَكَ كِتَابِي هَذَا فَاكْتُبْ لِي مَوْعِظَةً وَأَوْجِزْ .
فَرَدَّ عَلَيْهِ الْحَسَنُ الْبَصْرِيُّ : أَمَّا بَعْدُ ، " اعْصِ هَوَاكَ ، وَالسَّلَامُ " .
صباح الخير 
கலீஃபா உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹி) அவர்கள் இமாம் #ஹஸனுல் பஸரிக்கு எழுதிய கடிதத்தில் "எனது இந்தக் கடிதம் உன்னை வந்தடைந்ததும் எனக்கு சுருக்கமானதொரு  உபதேசம் எழுதி நீர் அனுப்பி வைப்பீராக! என வேண்டி இருந்தார்கள் . அதற்குப் பதிலளித்த இமாமவர்கள் :  நீர் உமது மனோ இச்சைக்கு மாறுசெய்வீராக!  வஸ்ஸலாம் எனக் கூறி அதனை முடித்திருந்தார்கள் .

தமிழில்: 
எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி 


பாடம் 
---
குத்பா உரைகள்,  மரண வீடுகள், பொதுச் சபைக் கூட்டங்கள் போன்ற 
முக்கிய நிகழ்வுகளில் மூட்டு முறிய மணித்தியாலங்கள் பேசி மக்களை #சலிப்பாக்கும் மௌலவிகள் பேசும் கூட்டங்களில்   இது போன்ற வழிமுறையைப் படித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளனர்.
அது அவர்களின் மதிப்பை , அந்தஸ்தை, கௌரவத்தைக் காக்கும். 
إن شاء الله
Previous Post Next Post