அரஃபா தினத்தன்று உம்ரா செய்பவர்கள்

ஒவ்வொரு வருடமும் உலகின் பல பாகங்களில் இருந்தும் 20 லட்சத்துக்கு மேற்பட்ட ஹாஜிகள் மக்காவில் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற ஒன்று கூடுகின்றனர். பிறை எட்டில் ஹஜ்ஜின் அமல்கள் ஆரம்பமாவதால் பெரும்பாலான ஹாஜிகள் அன்று மினாவுக்கு சென்று விடுவர்.

இருப்பினும் அன்று மினாவில் தங்குவது சுன்னத்தானது ஆகையால் சிலர் அங்கு செல்லாமல் மக்கா ஹாரத்திலும் இருப்பர். ஆனால் பிறை ஒன்பதாம் அன்று அரஃபா தினமாகும். அரபாவில் தங்காவிட்டால் ஹஜ்ஜே கூடாது என்பதால் அனைத்து ஹாஜிகளும் அன்று அரபாவுக்கு சென்று விடுவார்கள். அன்றைய தினம் புனித காஃபா தவாப் செய்பவர்கள் எவரும் இன்றி வெறுமையாக இருந்து விடக் கூடாதல்லவா?, ஆகையால் தொண்டு தொட்டு மக்கா வாசிகளிடத்தில் ஒரு பழக்கம் இருக்கின்றது. அதாவது அரபா தினத்தன்று மக்கா வாசிகளில் ஆண்கள் அனைவரும் ஹாஜிகளுக்கு உதவி செய்வதற்காக அரபாவுக்கு சென்று விடுவதும் மக்கா பெண்கள் அனைவரும் அன்றைய தினம் காஃபாவுக்கு வந்து உம்ரா தவாப் அமல்களை முடித்துக் கொண்டு ஹஜ் பெருநாள் மாலை வரை முறை வண்ணமாக ஹரத்தில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவர் .

அதனால் இப்பெண்களுக்கு மூனிசாத்தில் ஹரம் அதாவது ஹரத்துக்கு ஆறுதல் அளிப்பவர்கள் என்று செல்லமாக பெயர் கூறி அழைக்கப்படுவர். அரபா தினமான இன்று மக்கா ஹரத்தில் பெண்கள் மட்டும் அமல் செய்யும் காட்சியே இது.



Previous Post Next Post