அல்லாஹ் கூறுகிறான்:
"(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் எப்பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்தாலும், அதற்குப் பகரமாக அவன் உங்களுக்கு (மறுமையில்) ஈடு கொடுத்துவிடுவான்." (குர்ஆன் 34:39)
நபிமொழியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
"இறைவா! தர்மம் செய்பவருக்கு அதற்குப் பகரமாக (நல்லதைக்) கொடுப்பாயாக!"
ஹாஃபிழ் இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அல்லாஹ் வழங்கும் இந்த 'பகரம்' (கலஃப் - الخَلَف) என்பது பொதுவானது. இதில் செல்வம், நற்கூலி மற்றும், பிற நன்மைகள் அனைத்தும் அடங்கும். செல்வம் கிடைப்பதற்கு முன்பே தர்மம் செய்தவர் இறந்துவிடலாம்; அவ்வாறான நிலையில், அவருக்கு மறுமையில் கிடைக்கக்கூடிய நற்கூலியே அதற்குப் பகரமாக அமையும், அல்லது, அவருக்கு வரவிருந்த தீங்குகளை அந்த தர்மம் தடுத்துவிடலாம்."
(ஃபத்ஹுல்_பாரீ)
ஆகவே, இந்த 'பகரம்' என்பது வெறும் பொருளை மட்டும் குறிப்பதல்ல; அது அதைவிடப் பரந்த பொருளைக் கொண்டது.
ஒன்று: இவ்வுலகிலேயே செல்வமாகத் திரும்பக் கிடைப்பது.
இரண்டு: மனநிறைவையும் (கனாஆ), உள்ளத்தின் செல்வாக்கையும் பெறுவது; ஏனெனில் "மனநிறைவு என்பது தீராத பொக்கிஷமாகும்".
மூன்று: மறுமையில் கிடைக்கக்கூடிய மாபெரும் நற்கூலி; அதுவே அனைத்தையும் விடச் சிறந்த பகரம் ஆகும். (அன்று ஒவ்வொரு ஆன்மாவும் தான் செய்த நன்மைகளைத் திரட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காணும்.)