அல்கவாஇதுல் அர்பஉ


அரபி மூலம் : இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்)

தமிழாக்கம் : அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்



‎بِسْــــــمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيـــــمِ

‎أَسْأَلُ اللهَ الْكَرِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَتَوَلاكَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَأَنْ يَجْعَلَكَ مُبَارَكًا أَيْنَمَا كُنْتَ، وَأَنْ يَجْعَلَكَ مِمَّنْ إِذَا أُعْطِيَ شَكَرَ، وَإِذَا ابْتُلِيَ صَبَرَ، وَإِذَا أذَنبَ اسْتَغْفَرَ. فَإِنَّ هَؤُلاءِ الثَّلاثُ عُنْوَانُ السَّعَادَةِ.
‎اعْلَمْ أَرْشَدَكَ اللهُ لِطَاعَتِهِ: أَنَّ الْحَنِيفِيَّةَ مِلَّةُ إِبْرَاهِيمَ: أَنْ تَعْبُدَ اللهَ، وَحْدَهُ مُخْلِصًا لَهُ الدِّينَ، كَمَا قَالَ تَعَالَى: وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالإِنسَ إِلاَّ لِيَعْبُدُونِ  الذاريات: 56
‎فَإِذَا عَرَفْتَ أَنَّ اللهَ خَلَقَكَ لِعِبَادَتِهِ؛ فَاعْلَمْ أَنَّ الْعِبَادَةَ لا تُسَمَّى عِبَادَةً إِلا مَعَ التَّوْحِيدِ، كَمَا أَنَّ الصَّلاةَ لا تُسَمَّى صَلاةً إِلا مَعَ الطَّهَارَةِ، فَإِذَا دَخَلَ الشِّرْكُ فِي الْعِبَادَةِ فَسَدَتْ، كَالْحَدَثِ إِذَا دَخَلَ فِي الطَّهَاَرِة، فَإِذَا عَرَفْتَ أَنَّ الشِّرْكَ إِذَا خَالَطَ الْعِبَادَةِ أَفْسَدَهَا، وَأَحْبَطَ الْعَمَلَ، وَصَاَر صَاحِبُهُ، مِنَ الْخَالِدِينَ فِي النَّارِ. عَرَفْتَ أَنَّ أَهَمَّ مَا عَلَيْكَ مَعْرِفَةُ ذَلِكَ لَعَلَّ اللهَ أَنْ يُخَلِّصَكَ مِنْ هَذِهِ الشَّبَكَةِ، وَهِيَ الشِّرْكُ بِاللهِ الَّذِي قَالَ الله تَعَالَى فِيهِ: إِنَّ اللّهَ لاَ يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ النساء: 116.  وَذَلِكَ بِمَعْرِفَةِ أَرْبَعِ قَوَاعِدَ ذَكَرَهَا اللهُ تَعَالَى فِي كِتَابِهِ.

மகத்துவம் மிக்க அர்ஷின் இரட்சகனாகிய சங்கையான அல்லாஹ்விடம் உன்னை உலகத்திலும் மறுமையிலும் பொறுப்பேற்குமாறும் நீ எங்கிருந்த போதிலும் பரகத் செய்யப்பட்டவனாக உன்னை ஆக்குமாறும் கொடுக்கப்பட்டால் நன்றி செலுத்தக்கூடியவனாகவும், சோதிக்கப்பட்டால் பொறுமை செய்யக்கூடியவனாகவும், பாவம் செய்தால் பாவமன்னிப்புக் கோரக்கூடியவனாகவும் உன்னை ஆக்குமாறு நான் கேட்கின்றேன். நிச்சயமாக இந்த மூன்று விடயங்களும் சந்தோஷத்தின் விலாசமாகும்.
அறிந்துகொள்! அவனுக்கு வழிப்படுவதற்காக வேண்டி அல்லாஹ் உனக்கு நேர்வழிகாட்டுவானாக! நிச்சயமாக ஹனீபிய்யாவாகிறது இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கமாகும்: அது - பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுவதைப் போன்று - நீ அல்லாஹ் ஒருவனை மாத்திரம் அவனுக்குக் கட்டுப்பட்டு தூய்மையான நிலையில் வணங்குவதாகும்.

நான் ஜின்களையும் மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை.
-     அத்தாரியாத்: 56

நிச்சயமாக அல்லாஹ் உன்னைப் படைத்தது அவனை வணங்குவதற்காகவே என்பதை நீ அறிந்தால் எவ்வாறு சுத்தமின்றி தொழுகை தொழுகை என்று பெயர் கூறப்படமாட்டாதோ அதேபோல் ஒருமைப்படுத்துவதின்றி வணக்கம் வணக்கம் என்று பெயர் கூறப்படமாட்டாது என்று நீ அறிந்துகொள்!

சுத்தத்தின் போது தொடக்கு ஏற்பட்டு அது கெட்டுவிடுவதைப் போன்று வணக்கத்தில் இணைவைப்பு நுழைந்தால் அதுவும் கெட்டுவிடும்.

நிச்சயமாக இணைவைப்பு வணக்கத்துடன் கலந்தால் அதனை அது கெட்டுவிடச் செய்யும், இன்னும் அமல்களை அழித்துவிடும், அதனைச் செய்பவன் நரகத்தில் நிரந்தரமாக இருப்பவனாக மாறிவிடுவான் என்பவற்றை நீ அறிந்தால் உனக்கு கடமையான முக்கியமான விடயம் அது பற்றித் தெரிந்து கொள்வதாகும் என்பதை நீ அறிந்து கொள்வாய்! - அதன் மூலம் - இந்த வலையிலிருந்து அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அதுவே அல்லாஹ் விபரிக்கும் அவனுக்குச் செய்யும் இணைவைப்பாகும்.

நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கமாட்டான். அது அல்லாதவற்றை தான் நாடியவனுக்கு மன்னிப்பான்.
-     அந்நிஸா: 48

மேலும் அதுவே அல்லாஹ் தனது வேதத்தில் குறிப்பிட்டிருக்கும் நான்கு கோட்பாடுகளை அறிவதைக் கொண்டு அமைந்திருக்கும்.

‎الْقَاعِدَةُ الأُولَى

‎أَنْ تَعْلَمَ أَنَّ الْكُفَّارَ الَّذِينَ قَاتَلَهُمْ رَسُولُ اللهِ ـ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ مُقِرُّونَ بِأَنَّ اللهَ ـ تَعَالَى ـ هُوُ الْخَالِقُ، الْمُدَبِّرُ، وَأَنَّ ذَلِكَ لَمْ يُدْخِلَهُمْ فِي الإِسْلامِ؛ وَالدَّلِيلُ قَوْلُهُ تَعَالَى: قُلْ مَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالأَرْضِ أَمَّن يَمْلِكُ السَّمْعَ والأَبْصَارَ وَمَن يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيَّتَ مِنَ الْحَيِّ وَمَن يُدَبِّرُ الأَمْرَ فَسَيَقُولُونَ اللّهُ فَقُلْ أَفَلاَ تَتَّقُون  يونس: 31.

முதலாவது கோட்பாடு

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர் செய்த நிராகரிப்பாளர்கள் நிச்சயமாக அல்லாஹ் தான் படைப்பாளன், நிர்வாகிக்கக்கூடியவன் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்பதை நீ அறிந்து கொள்வதாகும். நிச்சயமாக அது அவர்களை இஸ்லாத்தில் நுழைவிக்கவில்லை.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: வானம் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும் பார்வைகளையும் உரிமையாக்கிக் கொள்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துபவனும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துபவனும் யார்? மேலும், - அகிலத்தின் - காரியத்தை நிர்வகிப்பவர்கள் யாவர்? என்று - நபியே! - நீர் கேட்பீராக! அதற்கவர்கள் அல்லாஹ்தான் என்று கூறுவார்கள். எனவே நீங்கள் அவனை அஞ்சி நடக்க வேண்டாமா? என்று நீர் கேட்பீராக.
-     யூனுஸ்: 31


‎الْقَاعِدَةُ الثَّانِيَةُ

‎أُنَّهُمْ يَقُولُونَ: مَا دَعَوْنَاهُمْ وَتَوَجَّهْنَا إِلَيْهِمْ إِلا لِطَلَبِ الْقُرْبَةِ وَالشَّفَاعَةِ، فَدَلِيلُ الْقُرْبَةِ؛ قَوْلُهُ تَعَالَى: وَالَّذِينَ اتَّخَذُوا مِن دُونِهِ أَوْلِيَآء مَا نَعْبُدُهُمْ إِلاَّ لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى إِنَّ اللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِي مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ إِنَّ اللَّهَ لاَ يَهْدِي مَنْ هُوَ كَاذِبٌ كَفَّارٌ. الزمر: 3. وَدَلِيلُ الشَّفَاعَةِ، قَوْلُهُ تَعَالَى: وَيَعْبُدُونَ مِن دُونِ اللّهِ مَا لاَ يَضُرُّهُمْ وَلاَ يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَـؤُلاء شُفَعَاؤُنَا عِندَ اللّهِ . يونس: 18
‎وَالشَّفَاعَةُ شَفَاعَتَانِ: شَفَاعَةٌ مَنْفِيَّةٌ، وَشَفَاعَةٌ مُثْبَتَةٌ.
‎فَالشَّفَاعَةُ الْمَنْفِيَّةُ: مَا كَانَتْ تُطْلَبُ مِنْ غَيْرِ اللهِ فِيمَا لا يَقْدِرُ عَلَيْهِ إِلا اللهُ؛ وَالدَّلِيلُ قَوْلُهُ تَعَالَى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ أَنفِقُواْ مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ يَوْمٌ لاَّ بَيْعٌ فِيهِ وَلاَ خُلَّةٌ وَلاَ شَفَاعَةٌ وَالْكَافِرُونَ هُمُ الظَّالِمُونَ .  البقرة: 254
‎وَالشَّفَاعَةُ الْمُثْبَتَةُ: هِيَ الَّتِي تُطْلَبُ مِنَ اللهِ ، وَالشَّافِعُ مُكَرَّمٌ بِالشَّفَاعَةِ، وَالْمَشْفُوعُ لَهُ مَنْ رَضِيَ اللهُ قَوْلَهُ وَعَمَلَهُ بَعْدَ الإِذْنِ ؛ كَمَا قَالَ تَعَالَى: مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ . البقرة: 255

இரண்டாவது கோட்பாடு

அவர்கள் - காபிர்கள் - நாம் அவைகளை அழைத்ததும் அவைகளின்பால் முன்னோக்கிச் சென்றதும் நெருக்கத்தையும் பரிந்துரையையும் தேடுவதற்காகவே அன்றி வேறில்லை என்று கூறுகின்றார்கள்.
அவர்கள் நெருக்கத்தை தேடுவதற்குரிய ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: எவர்கள் அவனையன்றி வேறு பாதுகாவலர்களை எடுத்திக்கொண்டார்களோ அவர்கள், இவர்கள் அல்லாஹ்விடம் எமக்கு மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்திவைப்பதற்காகவே நாம் இவர்களை வணங்குகின்றோம் - எனக்கூறுகின்றனர். - அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ, அதில் அவர்களுக்கிடையே நிச்சயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் பொய்யனையும் நிராகரிப்பவனையும் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
-     அஸ்ஸுமர்: 3

அவர்கள் பரிந்தரை செய்வதற்குரிய ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவர்கள் அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு தீங்களிக்காத இன்னும் பயனளிக்காதவற்றை வணங்குகின்றார்கள். இன்னும், இவைகள்தாம் அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு பரிந்துரை செய்பவர்கள் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.
-     யூனுஸ்: 18

பரிந்துரை இரண்டு வகையான பரிந்துரையாகும்.

முதலாவது: இல்லாமலாக்கப்பட்ட பரிந்துரை

இரண்டாவது: உறுதியாக்கப்பட்ட பரிந்துரை

இல்லாமாலாக்கப்பட்ட பரிந்துரை என்றால் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் சக்திபெறாத விடயங்களில் அல்லாஹ் அல்லாதவர்களிடம் வேண்டப்படக்கூடிய பரிந்துரையாகும்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: விசுவாசிகளே! எவ்விதப் பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத ஒரு நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவு செய்யுங்கள். நிராகரிப்பாளர்களே அநியாயக்காரர்கள்.
-     அல்பகறா: 254

உறுதியான பரிந்துரை என்றால் அதுவே அல்லாஹ்விடம் வேண்டப்படக்கூடியதாகும். பரிந்துரை செய்பவர் அப்பரிந்துரையைக்கொண்டு கண்ணியப்படுத்தப்பட்டவராவார். பரிந்துரை செய்யப்பட்டவர் யாரென்றால் அனுமதிக்குப் பின் அல்லாஹ் யாருடைய வார்த்தையையும் செயலையும் பொருத்திக் கொள்கின்றானோ அப்படிப்பட்டவராவார்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் யார்தான் பரிந்துரை செய்ய முடியும்?
-     அல்பகறா: 255


‎الْقَاعِدَةُ الثَّالِثَةُ

‎أَنَّ النَّبِيَّ ـ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ ظَهَرَ عَلَى أُنَاسٍ مُتَفَرِّقِينَ فِي عِبَادَاتِهِمْ، مِنْهُمْ مَنْ يَعْبُدُ الْمَلائِكَةَ، وَمِنْهُمْ مَنْ يَعْبُدُ الأَنْبِيَاءَ وَالصَّالِحِينَ، وَمِنْهُمْ مَنْ يَعْبُدُ الأَشْجَارَ وَالأَحْجَارَ، وَمِنْهُمْ مَنْ يَعْبُدُ الشَّمْسَ وَالْقَمَرَ، وَقَاتَلَهُمْ رَسُولُ اللهِ ـ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ وَلَمْ يُفَرِّقْ بَيْنَهُمْ؛ وَالدَّلِيلُ قَوْلُهُ تَعَالَى: وَقَاتِلُوهُمْ حَتَّى لاَ تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلّه -   الأنفال: 39.
‎ وَدَلِيلُ الشَّمْسِ وَالْقَمَرِ؛ قَوْلُهُ تَعَالَى: وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لاَ تَسْجُدُوا لِلشَّمْسِ وَلاَ لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ -  فصلت: 37.
‎وَدَلِيلُ الْمَلائِكَةِ؛ قَوْلُهُ تَعَالَى: وَلاَ يَأْمُرَكُمْ أَن تَتَّخِذُواْ الْمَلاَئِكَةَ وَالنِّبِيِّيْنَ أَرْبَاباً... الآية -  آل عمران: 80. وَدَلِيلُ الأَنْبِيَاءِ؛ قَوْلُهُ تَعَالَى: وَإِذْ قَالَ اللّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ ءَأَنتَ قُلتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَـهَيْنِ مِن دُونِ اللّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ -  الآية المائدة: 116
‎وَدَلِيلُ الصَّالِحِينَ؛ قَوْلُهُ تَعَالَى: أُولَـئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ...  -الآية الإسراء: 57.
‎وَدَلِيلُ الأَشْجَارِ وَالأَحْجَارِ؛ قَوْلُهُ تَعَالَى: أَفَرَأَيْتُمُ اللاَّتَ وَالْعُزَّى ، وَمَنَاةَ الثَّالِثَةَ الأُخْرَى -  النجم: 91 ، 20
‎وَحَدِيُث أَبِي وَاقِد اللَّيْثِيِّ ـ رَضِيَ اللهُ عَنْهُ ـ قَالَ: خَرَجْنَا مَعَ النَّبِيِّ ـ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ إِلَى حُنَيْنٍ وَنَحْنُ حُدَثَاءُ عَهْدٍ بِكُفْرٍ، وَلِلِمُشْرِكِينَ سِدْرَةٌ، يَعْكُفُونَ عِنْدَهَا وَيُنَوِّطُونَ بِهَا أَسْلِحَتَهُمْ، يُقَالَ لَهَا ذَاتُ أَنْوَاطٍ، فَمَرَرْنَا بِسِدْرَةٍ فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ كَمَا لَهُمْ ذَاتُ أَنْوَاطٍ. الحَدِيثَ.

மூன்றாவது கோட்பாடு

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வணக்க வழிபாடுகளில் வேறுபட்டிருக்கும் மக்களிடமே வெளிப்பட்டார்கள். அவர்களில் சிலர் மலாஇகாமார்களை வணங்குபவர்களாக இருந்தனர். இன்னும் சிலர் நபிமார்களையும் நல்லடியார்களையும் வணங்குபவர்களாக இருந்தனர். இன்னும் சிலர் கற்களையும் மரங்களையும் வணங்குபவர்களாக இருந்தனர். இன்னும் சிலர் சூரியனையும் சந்திரனையும் வணங்குபவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவருடனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போரிட்டார்கள். அவர்களுக்கு மத்தியில் அவர் பிரித்துப் பார்க்கவில்லை.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: குழப்பம் நீங்கி மார்க்கம் அல்லாஹ்வுக்கு உரித்தாகும் வரை அவர்களுடன் போரிடுங்கள்.
-     அல்பகறா: 193

சூரியனையும் சந்திரனையும் வணங்குபவர்களாக இருந்தார்கள் என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையே இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியனவாகும். சூரியனுக்கோ சந்திரனுக்கோ நீங்கள் சிரம்பணிய வேண்டாம்.
-     புஸ்ஸிலத்: 37

மலாஇகாமார்களை வணங்குபவர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: வானவர்களையும் நபிமார்களையும் கடவுள்களாக எடுத்துக் கொள்ளுமாறு உங்களை ஏவுவதற்கும் - அவருக்கு அனுமதியில்லை -
-     ஆல இம்ரான்: 80

நபிமார்களை வணங்குபவர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும் எனது தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களுக்கு நீர் கூறினீரா? என அல்லாஹ் கேட்கும்போது  அதற்கவர்: நீ மிகத்தூய்மையானவன், எனக்கு உரிமையில்லாதவற்றை நான் சொல்வதற்கு எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் இருப்பதை நீ அறிவாய். ஆனால் உன் உள்ளத்தில் இருப்பதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன் என்று கூறுவார்.
-     அல்மாஇதா: 116

நல்லவர்களை வணங்குபவர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: யாரை இவர்கள் அழைக்கின்றார்களோ அவர்களில் - அல்லாஹ்வுக்கு - மிக நெருக்கமானவர்களும் தமது இரட்சகனின் பால் நெருங்கும் வழியைத் தேடுகின்றனர். இன்னும் அவனது அருளை ஆதரவு வைக்கின்றனர். இன்னும் அவனது தண்டனையை அஞ்சுகின்றனர்.
-     அல்இஸ்ரா: 57

கற்களையும் மரங்களையும் வணங்குபவர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: லாத்தையும் உஸ்ஸாவையும் மூன்றாவதான மற்றொரு மனாத்தையும் நீங்கள் பார்த்தீர்களா?
 - அந்நஜ்ம்: 19,20

அபூவாகித் அல்லைஸீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஹதீஸும் இதற்கு ஆதாரமாகும். அவர்கள் கூறுகின்றார்: நாங்கள் புதிதாக இஸ்லாத்தை ஏற்று இருக்கின்ற நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹுனைனுக்குப் புறப்பட்டோம். இணைவைப்பாளர்களுக்கு அவர்கள் தங்கியிருக்கக்கூடிய ஒரு பெரிய மரம் காணப்பட்டது. அதிலே அவர்கள் அவர்களுடைய ஆயுதங்களை கொழுவி வைப்பார்கள். அதற்கு தாது அன்வாத் என்று கூறப்படும். நாங்களும் ஒரு பெரிய மரத்தை கடந்து சென்றோம். அப்போது நாம்: அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு தாது அன்வாத் என்ற மரம் இருக்கின்றதைப் போன்று எங்களுக்கும் தாது அன்வாத் என்ற மரமொன்றை ஏற்படுத்தித் தாருங்கள் என்று நாம் கூறினோம்.

‎الْقَاعِدَةُ الرَّابِعَةُ

‎أَنَّ مُشْرِكِي زَمَانِنَا أَغْلَظُ شِرْكًا مِنَ الأَوَّلِينَ، لأَنَّ الأَوَّلِينَ يُشْرِكُونَ فِي الرَّخَاءِ، وَيُخْلِصُونَ فِي الشِّدَّةِ، وَمُشْرِكُو زَمَانِنَا شِرْكُهُمْ دَائِمٌ فِي الرَّخَاءِ وَالشِّدَّة؛ وَالدَّلِيلُ قَوْلُهُ تَعَالَى: فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ  العنكبوت: 65
‎تَمَّتْ وَصَلَّى اللهُ عَلَى مُحَمَّدٍ وعلى َآلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ

நான்காவது கோட்பாடு

எமது காலத்தில் உள்ள இணைவைப்பாளர்கள் ஆரம்பத்தில் இருந்தவர்களைவிட இணைவைக்கின்ற விடயத்தில் மிகக்கடுமையானவர்கள். ஏனென்றால் ஆரம்பத்தில் இருந்தவர்கள் வசதியான காலத்தில் இணைவைப்பார்கள், கடுமையான நேரங்களில் உளத்தூய்மையுடன் இருப்பார்கள். எங்களுடைய காலத்தில் இருக்கின்ற இணைவைப்பாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுடைய இணைவைப்பு வசதியான காலத்திலும் கடுமையான நேரங்களிலும் தொடர்ந்து இருக்கின்றது.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவர்கள் கப்பலில் ஏறிப் பயணித்தால் கலப்பற்றவர்களாக அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனை அழைப்பார்கள். அவன் அவர்களைக் கரையின்பால் காப்பாற்றும் பொழுது அவர்கள் அவனுக்கு இணைவைக்கின்றனர்.
-     அல்அன்கபூத்: 65

இத்துடன் நிறைவுறுகின்றது.  நபியவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர்கள் மற்றும் தோழர்கள் அனைவர்கள் மீதும் ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக!

Previous Post Next Post